.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday 28 September 2013

சினிமா நூற்றாண்டு விழாவுக்கு அழைப்பிதழை எதிர்பார்த்து அனாதையாக நின்றோம்! பாரதிராஜா வேதனை!


தெலுங்கு– கன்னட நடிகர்களுக்கு தனி சங்கங்கள் இருப்பதுபோல் தமிழ் நடிகர்களுக்கு சங்கம் உருவாக வேண்டும்.நமக்கென்று தனி சங்கங்கள் இருந்திருந்தால் சினிமா நுற்றாண்டு விழா அழைப்பிதழ்கள் நம் வீடு தேடி வந்து இருக்கும்.”என்று டைரக்டர் பாரதி ராஜா வேதனை போங்க குறிப்பிட்டார்.


இளைய தேவன் இயக்கிய ‘ஞான கிறுக்கன்’ படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா வடபழனியில் நடந்தது. இதில் பாரதிராஜாவும், பார்த்திபனும் பங்கேற்றனர்.



sep 28 -cine mini

 


விழாவில் பார்த்திபன் பேசும்போது, “சினிமாவில் ‘ஞான கிறுக்கன்’ போல் இருப்பவர் பாரதிராஜா. அவருக்கு சினிமாவை தவிர எதுவும் தெரியாது. சினிமா மேல் பித்து பிடித்த கலைஞன். என்னைப் போன்ற நூறு இயக்குனர்களையும் பதினைந்தாயிரம் உதவி இயக்குனர்களையும் அவர்தான் உருவாக்கினார். இயக்குனர்களின் மலை.


அப்படிப்பட்ட இவரை சினிமா நூற்றாண்டு விழாவில் கவுரவிக்காமல் விட்டுவிட்டனர். நாம் அவரை கவுரவிப்போம்” என்றார். பின்னர் மேடையிலேயே பாரதிராஜாவுக்கு நினைவு பரிசு வழங்கினார்.



இதைத் தொடர்ந்து பாரதிராஜா பேசும்போது,”சினிமா நூற்றாண்டு விழாவுக்கு அழைப்பிதல் வரவில்லை என ஆர்.கே. செல்வமணி வருத்தப்பட்டார். பார்த்திபன் என்னை கவுரவித்தார். தமிழ் திரையுலகுக்கு முதுகெலும்பு கிடையாது. தென்னிந்திய வர்த்தக சபை என்று இருப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. பல வருடங்களாக இதை எதிர்த்து வருகிறோம்.


சினிமா இங்கு உருவாகியபோது தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்கம் என ஆரம்பிக்கப்பட்டன. எல்லா மொழி கலைஞர்களும் அப்போது சென்னையில் இருந்தார்கள். மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டதும் கர்நாடகத்தில் இருக்கும் நடிகர்கள் கன்னட நடிகர் சங்கம் என உருவாக்கினார்கள். ஆந்திராவில் தெலுங்கு நடிகர் சங்கமும், கேரளாவில் மலையாள நடிகர்கள் சங்கமும் தோன்றின.


கன்னட– தெலுங்கு திரைப்பட வர்த்தக சபைகளும் உருவாயின. ஆனால் தமிழகத்தில் மட்டும் தென்னிந்திய நடிகர் சங்கம், தென் இந்திய வர்த்தக சபை என்றே நீடித்தது. அதனால்தான் சினிமா நூற்றாண்டு விழாவுக்கு அழைப்பிதழை எதிர்பார்த்து அனாதையாக நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.


தமிழ் கலைஞர்களுக்கு தனி சங்கங்கள் இருந்திருந்தால் அழைப்பிதழ்கள் வீடு தேடி வந்து இருக்கும். நமக்கு சுய இடம், சுய அதிகாரம் வேண்டும். அப்போதுதான் உருப்படுவோம். அதற்கு தமிழ் நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட வர்த்தக சபை உருவாக வேண்டும்.”என்று பாரதிராஜா பேசினார்.

என்ன கொடுமை சார்!






என்ன கொடுமை சார்......................



இதெல்லாம் தப்பில்லையா..........................


பாவம் பயபுல்லைய மன்னிச்சு விடுங்க சார்..........


இது உனக்கு தேவையா!





 இது உனக்கு தேவையா................ 



இதுக்குதான் அதிகமா ஆட்டம் போடக்கூடாதன்னு சொல்றாங்க.....




என்ன புரியுதா தம்பி....




போ..... போ...... போயி....... பொழப்ப பாறு......






 

ஆப்பிள் நிறுவனம் புதிய ios7.0.2 மேம்படுத்தல் வெளியீடு!



ஆப்பிள் நிறுவனம் ஐபோன், ஐபேட் மற்றும் ஐ பேட் டச் சாதனத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ios7 அல்லது ios7.0.1 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை மேம்படுத்தப்பட்டு(updates) புதிய ios7.0.2 என்ற புதிய ஆப்ரேட்டிங் சிஸ்டம் அறிமுகப்படுத்தியுள்ளது.


ios7 வெளியீட்டுக்குப் பிறகு லாக் ஸ்கிரீன் சிக்கல்களை மேம்படுத்தப்பட்டு சரி செய்துள்ளது. ஐபோன் 5-ல் 21MB பதிவிறக்கம் செய்யக்கூடியதாக ios7.0.2 மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் போன் லாக் ஸ்கிரீன் சிக்கல்கள் ஏற்படும் போதும் ஐபோன் வாடிக்கையாளர் மற்றொருவர்களுக்கு அழைக்ககூடியதாக மேம்படுத்தப்பட்டுள்ளது.



ஐபோன் சாதனத்தில் போன் லாக் ஸ்கிரீன் சிக்கல்கள் இருக்கும் போது கூட எமர்ஜென்சி கால் (emergency call) அழைப்பினை மட்டும் ஏற்கக்கூடியதாக இல்லாமல் சாதனத்தில் இருக்கும் நம்பர்களை அழைக்கக்கூடியதாக மேம்படுத்தப்பட்டுள்ளது. NULL dereferences என்ற சிக்கல்களை சரி செய்வதற்காக இந்த புதிய 7.0.2 ஆப்ரேட்டிங் சிஸ்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

iphone 5S hack செய்ய முடியுமா! அட கடவுளே!






திருடர்களை விட ஒருபடி மேலேயே யோசிக்கிறாங்களே….



அண்மையில் ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஐபோன் 5-ல் கைரேகை ஸ்கேனிங்க் மூலம் பாதுகாப்பு வசதி அளித்துள்ளது.



ஐபோனை ஆக்சஸ் செய்வதற்கென கைரேகையை வழங்கினால் மாத்திரம் பயன்படுத்த கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. எனினும் ஒருசில நாட்களிலேயே இப்பாதுகாப்பு வசதியை தாம் உடைத்துவிட்டதாக தற்போது அறிவித்துள்ளனர் ஜேர்மனிய ஹேக்கர் குழுவினர்.



கைரேகையை படம்பிடித்து அதியுயர் தரத்தில் கிளாஸ் ஒன்றில் பதிவு செய்துள்ளனர். பின்னர் அதைக்கொண்டே ஐபோனை இயக்குவது போன்ற வீடியோ காட்சிகள் வெளிவந்துள்ளன.


டெல்லி செங்கோட்டை- சுற்றுலாத்தலங்கள்!


      டெல்லி செங்கோட்டை
லகளவில் பாரம்பரியமிக்க இடங்களை பட்டியலிட்டுள்ள  யுனெஸ்கோ அவற்றை உலக பண்பாட்டுச் சின்னங்களாக அறிவித்துள்ளது. அதில் இந்தியாவில் 27இடங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 23இடங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள பண்பாட்டுச் சின்னங்களை டூரிசம் பகுதியில் வாரம்தோறும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இந்தவாரம்....
 
டெல்லி செங்கோட்டை
 
டெல்லி நகரின் இன்னொரு கம்பீரம் 'செங்கோட்டை'. இந்திய சுதந்திரதினத்தன்று பிரதமர் தேசியக்கொடியேற்றி உரையாற்றும் பிரம்மாண்ட இடம். இதை உருவாக்கியவர் மொகலாய மன்னர் ஷாஜஹான்.
 
தனது தலைநகரத்தை ஆக்ராவில் இருந்து ஷாஜஹானா பாத்திற்கு (தற்போதைய பழைய டெல்லி) ஷாஜஹான் மாற்றியபோது செங்கோட்டை உருவானது. இதனைக் கட்டிமுடிக்க 1638-48 வரை பத்தாண்டு ஆனது. செலவிட்ட தொகை அப்போதைய மதிப்புக்கு ஒருகோடி ரூபாயாம்.
 
யமுனை நதிக்கரையில் ஒப்பிலா அழகுடன் எழுந்து நிற்கும் செங்கோட்டை, பாரசீக, ஐரோப்பிய, இந்திய கட்டடக் கலைகளை குழைத்து எழுப்பப்பட்டது. கண்களை மயக்கும் கலைநயம், சவால்விடும் கட்டுமானம், ஆச்சரியப்படுத்தும் தோட்டக்கலை போன்றவை இன்றளவும் போற்றப்படுகிறது. டெல்லிகேட், லாகூர்கேட் என இருபெரும் நுழைவாயில்கள் உள்ளன.
 
கோட்டைக்குள் இருக்கும் அரசவை மண்டபங்களில் மட்டுமின்றி அந்தப்புரங்களிலும்கூட கலைநயம் கண்சிமிட்டுகிறது. 'திவான்- இ- ஆம்' எனப்படும் தர்பார் மண்டபம் பொதுமக்களும் பிரதிநிதிகளும் அமரும் வகையில் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கே மன்னருக்காக அமைக்கப்பட்டிருக்கும் உப்பரிகையும் கம்பீரமானது.
 
'ஜெனானா' என்றழைக்கப்படும் அந்தப்புரம், மும்தாஜ் மஹால், ரங் மஹால் போன்றவையும் குறிப்பிடத்தக்கவை. இங்குள்ள சலவைக்கல் பதிக்கப்பட்ட நீருற்று புதுமையின் பதிப்பு.அவுரங்கசீப்பின் வழிபாட்டுக்காக கட்டப்பட்ட மோத்திமஸ்ஜித் எனப்படும் பியர்ல் மஸ்ஜித் (முத்து மசூதி) முழுவதும் சலவைக்கல் மயமே.

 
இவைதவிர அரச குடியிருப்புகள் அமைந்திருந்த 'நஹ்ர்-இ-பேஹிஸ்ட்' என்ற பகுதி அசத்தல் ரகம். வீடுகளுக்கு உள்ளேயே யமுனை ஆற்றின் நீர் ஓடும் வகையில் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்படி, கற்பனைகளுக்கும் கனவுகளுக்கும்கூட கால்வாய்வெட்டி நனவாக்கிய மொகலாய மன்னர்கள். இதை 'சொர்க்கத்தின் நீரோடை' என்றும் அழைத்து வந்தனர். நீரோடையை இன்றும் காணலாம்.
 
செங்கோட்டையைக் கட்டியவர் ஷாஜஹான் என்றாலும் அவருக்குப் பின்னர் அவுரங்கசீப் உள்ளிட்ட மன்னர்களும் சில மாற்றங்களை செய்தனர். ஆங்கிலேயர் ஆட்சியின்போது கண்டோன்மென்ட்டாக (ராணுவமுகாம் மற்றும் குடியிருப்பு பகுதி) செங்கோட்டை பயன்படுத்தப்பட்டது. அப்போது சில கட்டடங்கள் இடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்திய விடுதலைக்குப்பிறகும் ராணுவக்-கட்டுப்பாட்டில் இருந்துவந்த செங்கோட்டை, 2003ம் ஆண்டில் இந்திய சுற்றுலாத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
 
இங்குள்ள மும்தாஜ் மஹாலில் மொகலாய மன்னர்கள் பயன்படுத்திய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அனைத்துமே வரலாற்றுப் பொக்கிஷங்கள். பெருமைக்குரிய டெல்லி செங்கோட்டை, யுனெஸ்கோவால் 2007ம் ஆண்டில் உலக பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.

வேப்பமரமும்...சிறுவனும் (நீதிக்கதை)






வேப்பமரம் ஒன்றின் கீழே அமர்ந்து ராமன் அழுது கொண்டிருந்தான்.அதைக் கண்ட மரம் 'தம்பி ஏன் அழறே' என்றது. அதற்கு ராமன் எனக்கு யாரையுமே பிடிக்கவில்லை

.காலையில் எழுந்ததுமே 'முதலில் பல் தேய்த்துவிட்டு வா' என அம்மா அதட்டுகிறாள். பின் அப்பா 'காலை எழுந்ததும் படிப்பு. உன் பள்ளிப் பாடங்களைப் படி' என்று கண்டிக்கிறார்.பின் குளித்து முடித்து 'பசிக்கலை' என்று சொன்னால் அம்மா திட்டி சாதம் சாப்பிடச் சொல்கிறாள்.

பள்ளிக்கு வந்தாலோ 'பாடம் படிக்கலைன்னும்,பாடம் சொல்லிக்கொடுக்கும் போது வேடிக்கைப் பார்க்கக்கூடாது என்று டீச்சர் திட்டராங்க"

எல்லாருமே நாள் முழுக்க என்னை திட்டிக்கிட்டேயிருக்காங்க. எனக்கு யாரையுமே பிடிக்கலை" என்றான் அழுது கொண்டே.

வேப்பமரம் "என் இலைகளை நீ சாப்பிட்டு இருக்காயா?" என்றது.'ஓ...இலை மட்டுமா உன் இலை,குச்சி எல்லாமே ஒரே கசப்பு.சாப்பிட்டால் வாந்தி வந்துடும் என்றான் ராமன்.

"ஆனால் பல வியாதிகளுக்கு நான் மருந்தாக இருக்கிறேன்.நான் கசந்தாலும் பலர் வாழ்க்கையில் இனிமை உண்டாகக் காரணமாக இருந்திருக்கிறேன்.

அது போல் பெற்றோர்,ஆசிரியர்கள் சொல்வது இப்போது உனக்கு கசப்பாக இருக்கிறது.ஆனால் அந்த கசப்பை ஏற்று அதன் படி நடந்தால் பின் உன்னோட வாழ்க்கை இனிமையாக அமையும் என்றது.

நாமும் நம்முடைய மூத்தவர்கள் சொல்லும் அறிவுரையை ஏற்று அதன்படி நடந்தால் அனைவராலும் விரும்பபப்டுவது அல்லாது மிகவும் சிறந்தவராகவும் ஆவோம்.

Friday 27 September 2013

இதையும் பாருங்க.....





 இதையும் பாருங்க ... 



நாங்கன்னா சுனாமில சும்மிங் போடுவோம்......  



நாங்கன்னா எவ்வளவு தைரியசாலி தெரியுமா?......



அப்ப நீங்கதான் இதைப் பார்க்கனும்............... 




பாருங்களேன்..................... 



கருத்தை கீழே தட்டி விடுங்களேன்.....


பறவைக்கு இவர்தான் GOD!






 இவரைப் போன்ற கருணை உள்ளம் கொண்ட கருணாமூர்த்திகள் 



இருப்பதால்தான் தரணி தழைக்கிறது  நண்பர்களே!.......



தங்கள் கருத்துகளைக் கீழே பகிரவும்........



அபார சிந்தனை! வேலை மிச்சம்!






அபார சிந்தனை! வேலை மிச்சம்! 


என்னமா யோசிக்கறாங்க பாருங்க...... 


பாருங்கள் மக்களே! .... பாருங்கள் மக்களே! ....   


உங்கள் கருத்துகளைக் கீழே கிறுக்கி வையுங்கள்.......



புதிய தலைமுறை கணனியை கண்டுபிடித்து இந்திய விஞ்ஞானி !!



உலகிலேயே முதன்முறையாக உலோகமற்ற கரிம நுண் குழாய் (கார்பன்-நானோடியூப்) மூலம் புதிய தலைமுறை கணனியை உருவாக்கி அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.



அமெரிக்காவில், இந்திய வம்சாவளி விஞ்ஞானி சுபாஸிஷ் மித்ரா தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினரே இந்த சாதனையை படைத்துள்ளர்.



சிலிக்கானைவிட மேம்பட்ட கார்பன் நானோடியூபுகளால் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கணனி, மின்னணுவியல் பயன்பாட்டில் புதிய அத்தியாயமாகும்.



குறைந்த ஆற்றலில், மிக வேகமான செயல்திறனை இந்தக் கணினி பெற்றிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.



இது குறித்து ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக மின்னியல் பொறியாளரும், கணிப்பொறி விஞ்ஞானியுமான சுபாஸிஷ் மித்ரா கூறுகையில்,


“புதிய சாகாப்தத்தைச் சேர்ந்த கார்பன் நானோடியூப், சிலிக்கானைவிட சிறப்பானது என பேசப்பட்டு வந்தது.



அந்த நம்பிக்கையை நிரூபிக்கும் வகையில், அந்த கணினியில் நடத்தப்பட்ட தொழில்நுட்ப பரிசோதனைகள் அமைந்துள்ளன’ என்றார்.


ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - பக்கா திரை விமர்சனம்!




‘பன்னியும் கன்னுக்குட்டியும்’ டைப் படங்களையே பார்த்து பழகிய நம்மை இந்த ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ வாய் பிளக்க வைக்கிறது. படத்தில் மருந்துக்கு கூட பகல் இல்லை. ஆனால்



தமிழ்சினிமாவையே வெளிச்சமாக்கியிருக்கிறார் மிஷ்கின். இந்த கதை ‘சுட்டக்கதை’யாக இல்லாத பட்சத்தில் அரசு தயவில்லாமல் அவரவர் செலவில் நேரு ஸ்டேடியத்தில் கூடி மிஷ்கினுக்கு தங்க ஜரிகையிட்ட பரிவட்டமே கட்டலாம். (உலகப்படங்களை மேய்பவர்களே… அலசி ஆராய்ஞ்சு அஞ்சு நாளுக்குள்ளே உத்தரவாதம் கொடுங்க)
மருத்துவக் கல்லுரி மாணவரான ஸ்ரீ நள்ளிரவில் வீடு திரும்பும்போது துப்பாக்கியால் சுடப்பட்டு கிடக்கும் மிஷ்கினை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்க முயல்கிறார். 


ஆனால் அனைவரும் அந்த உயிர் மீது அலட்சியம் காட்ட, தன் வீட்டிலேயே கொண்டு போய் ஆபரேஷன் செய்கிறார். அடுத்தடுத்த நாட்களுக்குள் அங்கிருந்து தப்பிக்கும் மிஷ்கின் ஒரு பயங்கர கிரிமினல் என்பது அதற்கப்புறம்தான் தெரிகிறது ஸ்ரீக்கு. இவரது குடும்பமே போலீஸ் கையில் சிக்க, ‘நீயே அவனை சுட்டுடு’ என்கிற அசைன்ட்மென்ட் தரப்படுகிறது மாணவருக்கு. தன்னை தேடி வரும் மிஷ்கினை ஸ்ரீ சுட்டாரா? போலீஸ் கையில் மிஷ்கின் சிக்கினாரா? இவ்வளவு பரபரப்பையும் ஆறே காகிதத்தில் வசனங்களாகவும், மிச்ச நுறு காகிதத்தில் சொல்ல வேண்டியதை இசைஞானி இளையராஜாவின் ‘முன்னணி’ இசையாலும், ரத்தமும் ஜீவனும் ஆக்கியிருக்கிறார் மிஷ்கின்.


இந்த படத்தில் காதல் இல்லை, குத்தாட்டம் இல்லை, காமெடிக்கென தனியாக சந்தான சூரி போன்ற தர்ம பாலகர்கள் இல்லை. இத்தனைக்கும் மேல் மிஷ்கின் படங்களுக்கென்றே நேர்ந்துவிடப்பட்ட மஞ்சப்புடவை ஆட்டமும் இல்லை. கம்பிமேல் நடக்கிற வித்தை மிஷ்கினுக்கு ரொம்பவே பிடிக்கும் போலிருக்கிறது. ஆச்சர்யம் என்னவென்றால் இந்த கம்பிமேல் அவரும் ஓடி, நம்மையும் பரபரவென இழுத்துக் கொண்டு ஓடியிருக்கிறார் என்பதுதான்.




தன்னை போலீஸ் சூழ்ந்துவிட்டதை அறிந்ததும் ஸ்ரீயையும் இழுத்துக் கொண்டு எலக்ட்ரிக் ட்ரெய்னில் தப்பிக்கிற அந்த காட்சியில் கொஞ்சம் கூட பூச்சுற்றல் இல்லை. அதற்கப்புறம் ஒரு புறம் கமிஷனர் உள்ளிட்ட போலீஸ் டீம் துரத்திக் கொண்டேயிருக்க, மற்றொரு புறம் இவ்விருவரும் ஓடிக் கொண்டேயிருப்பது கொஞ்சமாவது சலிக்க வேண்டுமே? ஒவ்வொரு முறையும் இவர்கள் செக்போஸ்டில் தப்பிப்பது ‘பலே’ சீன்கள் என்றால், அவ்வளவு நெருக்கடியிலும் நகைச்சுவையை இழையோட விட்டிருக்கும் மிஷ்கினின் ஆளுமையை என்னவென்று பாராட்ட? அந்த போலீஸ்காரர் விதவிதமான டெஸிபலில் உச்சரிக்கும் அந்த ‘ஐயா…’ காட்சியில் இறுக்கம் மறந்து ரிலாக்ஸ் ஆகிறது மொத்த தியேட்டரும். வில்லனின் கையாளாக வரும் அந்த கருப்பு போலீஸ் அதிகாரியை எங்கு பிடித்தாரோ, மனுஷன் செம லைவ்…


ஒரு மருத்துவக் கல்லுரி பேராசிரியர் தனது தாய் இறந்து போன அவ்வளவு துக்கத்திலும், படித்த படிப்புக்கு தரும் மரியாதை மெய்சிலிர்க்க வைக்கிறது. (நடித்திருப்பவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனின் கணவராம். ‘ஆக்ட் ஃபார் ஈச் அதர்…!’)


தன்னிடம் கதை கேட்கும் பார்வையில்லாத குழந்தைக்கு கதை சொல்வது போல நமக்கும் பிளாஷ்பேக் சொல்கிறார் மிஷ்கின். டைட்டாக வைக்கப்பட்ட பிரேமில் மிக நீண்ட நிமிடங்களை விழுங்கிக் கொள்ளும் அந்த காட்சியில் மிஷ்கினின் நடிப்பு கலங்க வைக்கிறது. ஒரே டேக்கில் எடுத்திருக்கிறார்கள் என்பதை அந்த எரியும் மெழுகுவர்த்தியின் நீளம் சொல்கிறது. அதே போல ஆக்ஷன் காட்சிகளிலும் மின்னலென சுழன்று பரம்பரை ஆக்ஷன் ஹீரோக்களுக்கே கூட எனிமா கொடுக்கிறார் மிஷ்கின். டொப்பு டொப்பென போலீஸ் அதிகாரிகளை அவர் சுட்டுக்கொல்லும் காட்சிகள் நகைப்பையும், நடுக்கத்தையும் ஒருசேர ஏற்படுத்துகிறது.


வழக்கு எண் 18/9 பட ஹீரோ ஸ்ரீதான் இப்படத்தின் இன்னொரு ஹீரோ. அவ்வளவு பெரிய மிஷ்கினை முதுகில் சுமந்து கொண்டு அவர் பரிதவிக்கும் அந்த ஆரம்ப காட்சிகளில், நிஜமாகவே பொதிமூட்டை கனத்தை பொறுத்திருக்கிறார். அப்படியே இந்த படத்தின் விறுவிறுப்பையும் சுமக்கிற பொறுப்பும் அவருக்கு. சிறப்பாகவே இருக்கிறது எல்லாமும்.


படத்தில் வரும் வில்லன்தான் ‘எனக்கு அவன் உயிரோட வேணும்’ என்று அலறி, எதார்த்தத்தை கெடுத்து வைக்கிறார். அவரது அல்லக்கைகளும் அப்படியே ‘மைம் ஷோ’ நடிகர்கள் மாதிரி எரிச்சலுட்டுகிறார்கள். ஹ்ம்ம்ம், வில்லன்னா இப்படிதான் இருக்கணும் என்பதை நீங்களாவது மாற்றியிருக்கலாமே மிஷ்கின்.


குடிசை ஜன்னலில் இருந்து கொண்டு கோட்டையை பார்ப்பது போல, வியப்பை மட்டுமே வாரி வழங்குகிறது ஜுனியர் ரங்காவின் ஒளிப்பதிவு. எதிலும் அவசரமில்லாமல் நிறுத்தி நிதானமாக உள்வாங்குகிற அந்த கேமிரா, மிக நுணுக்கமான உணர்ச்சிகளை கூட விட்டு வைக்கவில்லை.


கண்ணுக்கு தெரியாத காற்று மாதிரி, மனம் தடவுகிறது இசைஞானியின் பின்னணி இசை. டைட்டிலில் முன்னணி இசை என்று கவுரவம் சேர்க்கிறார் மிஷ்கின். இது எவ்வளவு பெரிய சத்தியம் என்பதை இப்படத்தை ‘மியூட்’ செய்துவிட்டு பார்த்தால்தான் புரியும்.


யாரு வேணும்னாலும் என்ன வேணும்னாலும் சொல்லிட்டு போகட்டும்… நான் இப்படிதான். என் படம் இப்படிதான் என்கிற மிஷ்கினின் திமிருக்கு தலைவணங்கியே ஆக வேண்டும் ரசிகர்கள்.

ராஜா ராணி சினிமா விமர்சனம்!



ஒவ்வொரு திருமணத்திலும் இணையும் மணமக்கள் திருமணத்திற்கு பின் கிடைத்த வாழ்க்கையை மனமுவந்து வாழ்கிறார்களா இல்லையா என்பது தெரியாது. அப்படி வாழவில்லையென்றால் அதற்கு காரணம் அவர்களது வாழ்க்கையில் இளமை பருவத்தில் மலரும் காதலும் அதனால் ஏற்பட்ட வலியுமாகத்தான் இருக்கும்.

காதலிக்கும் எல்லோருக்கும் நினைத்த வாழ்க்கை கிடைத்துவிடுவதில்லை. காதல் மிகவும் ரம்மியமானதுதான் ஆனால் அது தோல்வியில் முடியும்போது வாழ்க்கை அனைத்தையும் இழந்துவிட்டதுபோல தோற்றும். காதலை இழந்தவரிக்ன் மூளையிலும் ஒரு இருட்டு குடிக்கொண்டு விடுகிறது.  பிறகு வேருஒருவருடன் திருமணம் நடந்தாலும் இந்த இருட்டு விலகாமல் இருந்துவிடுகிறது. திருமணத்தம்பதிகள் தங்களுக்குள் இருக்கும் இருட்டுகளை விலக்கினால்தான் அந்த வாழ்க்கை இனிக்கும். அப்படியில்லையென்றால்...?

இப்போது கதை உங்களுக்கே புரிந்திருக்கும் ஒரு திருமண ஜோடிக்கு விருப்பமில்லாத திருமணம் நடக்கிறது. ஏன் அவர்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்ற வேள்வி எழும்போது இதற்கு முன் இருவரும் ‌வேறு ஒருவருடன் தனித்தனியே அழகிய காதலில் ரசித்து வாழ்கிறார்கள்... 

விதிவசத்தால் அந்த காதல் கைகூடாமல் போய்விடுகிறது. இப்படியிருக்க... காதலை பறிகொடுத்த இருஜோடியும் இணையும்போது பழைய பாதிப்பில் இருந்து விலகி இவர்களின் தற்போதை திருமண வாழ்க்கையை எப்படி வாழ ஆரம்பிக்கிறார்கள் என்பதுதான் கதை.

ராஜா ராணி... டைட்டில் பேர்டும் போது ஆர்யா-நயன் திருமணம் நடக்கிறது (ஜான்-ரெஜினா). திருமணம் முடிந்த இருவரும் இல்லறவாழ்க்கையில் விருப்பமில்லாமல் எதையோ பறிகொடுத்ததுபோல் வாழ்கிறார்கள். ஒரு வீட்டுக்குள் தனித்தனியே யார் என்பது தெரியாததுபோல் ஒரு வாழ்க்கையை நடத்துகிறார்கள்..

ஆர்யாவுடன் ஏன் சேர்ந்து வாழ மறுக்கிறார் நயன்தாரா என்று நினைக்கும் போது பிளாஸ்பேக்....

நயன்தாரா தன்னுடைய செல்போன் வேலை செய்யவில்லை என்பதற்காக கஸ்டமர்கேர்-க்கு போன் செய்கிறார். அங்கு இருப்பது சூர்யாவாக ஜெய்...  சண்டை திட்டில் ஆரம்பிக்கும் இவர்களது பழக்கம் கடைசியில் காதலில் முடிகிறது. அதன்பிறகு விழுந்து விழுந்து காதலிக்கும் இவர்கள் பதிவு திருமணம் செய்ய காத்திருக்கிறார் நயன்.. 


கடைசி வரை ஜெய் வராததால் ஏமாந்து திரும்பும் ‌நயன்.. ஜெய் ‌‌அமெரிக்கா சென்றதும் அதன்பிறகு அங்கு தற்கொலை செய்துக்கொண்டதும் தெரியவருகிறது... பிறகு அப்படியே நெடிந்துப்போகிறார்... வாழ்க்கையை வெறுக்கிறார்....

தைரியமற்ற கொஞ்சம் வெகுளி கதாபாத்திரத்தில் அடிக்கடி பயத்தில் அழுதாலும் படம்பார்ப்பவர்களை சிரிக்கவைத்து கைத்தட்டல் வாங்குகிறார் ஜெய்...


இடைவேளைக்கு பிறகு... குடும்ப வாழ்க்கையை ஏன் ஆர்யா வெருக்கிறார் என்பதற்கு அதற்கு ஒரு பிளாஸ்பேக்....

ஆர்யாவும் சந்தானமும் செக் வாங்க செல்லும் ஒரு வீட்டில் ஆர்யா.. நஸ்ரியாவை பார்க்க இருவருக்கும் பற்றிக்கொள்கிறது காதல்... பிரதர் என்று வெறுக்கும் நஸ்ரியாவை விரட்டி விரட்டி காதலிக்க வைக்கிறார் ஆர்யா...

ஒரு கோயிலில் யாருக்கும் தெரியாமல் தனியாகவே திருமணம் செய்துக்கொண்டு... வெளியில் செல்லும்போது ஒரு விபத்தில் நஸ்ரியா இறந்துவிடுகிறார். இதைநேரில் பார்க்கும் ஆர்யா வாழக்கைவெறுத்து வாழ்கிறார்.

இப்படி தனித்தனியாக காதலை பறிக்கொடுத்த இருவரும் திருமணத்தில் இணையும்போது இருவரும் ஒட்ட மனவரவில்லை. அதன்பிறகு இவருவருக்கும் இவர்கள் வாழ்வில் நடக்கும் பழைய சம்பவங்களை தெரியவரும்போது ஏன் நாம் அதையெல்லாம் மறந்து புதிய வாழ்க்கையை துவங்கக்கூடாது என்று இல்லறத்தில் இணைகிறார்கள். (அம்புட்டுதாங்க... இன்னும் கதை ஞாபகம் வரலின்னா நம்ம மௌன ராகம் படத்தை மனசுல ஓடவிட்டுக்கங்க)

ஆர்யா பிளேபாய் கேரட்டர் நன்றாக வந்திருக்கிறது. திருமணம் செய்தபிறகும் தன்னை மதிக்காத நயன்தாராவை வெறுப்பேத்தும் காட்சியிலும், நஸ்ரியாவை காதலிக்கும் போதும் சந்தானத்துடன் இணைந்து கலக்கும்போதும் கலக்கியிருக்கிறார்.


நயன்தாரா படத்தில் அழுதுவடியும் காட்சிகள் இருந்தாலும் படம் முழுக்க அழகாக காட்டிருக்கிறார் இயக்குனர். ஜெய்யுடனான காட்சிகள் இன்னும் ரசிப்பதற்குறியது... தந்தை சத்தியாராஜ்க்கு பீர் வாங்கி கொடுத்து நனக்கு தேவையா‌னதை பெரும் போது அப்பா-மகள் இப்படி நண்பர்களாக இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்...

படத்தில நகைச்சுவைக்கு யாருன்னு எந்தபோஸ்டரிலும் போடவில்லைன்னு பார்த்தா படத்தில சந்தானம் இருக்காரு... நகைச்சுவைக்கு என்று ஆர்யாவுடன் சந்தானம், ஜெய்யுடன் சத்யன்...  செல்லும்படியான நகைச்சுவை இல்லையென்றாலும் அழகிய நகைச்சுவைதனம் படத்தில் இழையோடியிருக்கிறது...

இன்னும் சத்தியராஜ் அவர்களைப்பத்தி சொல்லியே ஆகனும்... படத்தில் அம்புட்டு இளமையாக வந்திருக்கிறார். நயன்தாராவின் அப்பாவாக மகளுக்கு ஒரு நல்ல நண்பராகவும் நடித்திருக்கிறார்...

பாடல்கள் பராவாயில்லை... இசையைபொருத்த வரை எந்தகுறையும் சொல்லமுடியாது. ஜி.வி.பிரகாஸின் கைவண்ணம் இதில்தெளிவாகத்தெரிகிறது. பிண்ணனி இசை அசத்தியிருக்கறார்.

நம்முடைய முந்தைய வாழ்க்கையை மனதில் வைத்துக்கொண்டு தற்போது கிடைக்கும் வாழ்க்கையை பாழடிக்ககூடாது. காதலித்த  பழைய வாழ்க்கையை  மறந்துவிட்டு கிடைத்த வாழ்க்கையை காதலிக்க பழகிக்கொள்ளுங்கள் என்று ஒரு எதார்த்தமான காதையை கையிலெடுத்துக்கொன்டு திரையில் அதை அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் அட்லி.


அட்லி ஷங்கரிடம் உதவிஇயக்குனராக இருந்தவர் என்பது படத்தில் தெரிகிறது... காட்சிகளை அழகாகவும் தெளிவாகவும் படமாக்கியிருக்கிறார். திரைக்கதையில் நன்றாக கையாண்ட அல்லி கிளைமாக்ஸ் பொருத்த வரை கொஞ்சம் இழுத்திருக்கிறார். மற்றபடி பரவாயில்லை.

எப்படியும் இருவரும் இணைந்துவிடுவார்கள் என்று நினைக்கும்போது  அது இது என்று இழுத்துவிடுகிறார்.... என்று படத்தின் இறுதி காட்சிகளை இழுக்காமல் இன்னும் கொஞ்சம் சுருக்கமாக முடித்திருந்தால் படம் நன்றாகவே இருந்திருக்கும்.

கிடைக்கும் வாழ்க்கையில் பழைய நினைவுகளை போட்டு குழப்பிக்கொள்ளாமல் கிடைத்த வாழ்க்கையை விரும்பி காதலித்து வாழுங்கள் என்கிறது...  இந்த ராஜா ராணி...
 

7 வருடத்துக்கு பின் மோதும் அஜீத் - விஜய் படங்கள்!





ஏழு வருடங்களுக்கு பிறகு, அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் விஜய், அஜீத் நடித்த படங்கள் நேருக்கு நேர் மோத உள்ளன. விஜய் நடிக்கும் ‘ஜில்லா‘ படத்தை நேசன் இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்து வந்தது. இப்படத்தை பொங்கலுக்கு முன் ரிலீஸ் செய்ய எண்ணி இருந்தனர். 



திடீரென்று விஜய் தந்தையாக நடிக்கும் மோகன்லாலுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே ஷூட்டிங் பாதிக்கப்பட்டது. இதனால், ஏற்கனவே அவர் கால்ஷீட் கொடுத்த படங்களில் நடிப்பதிலும் குழப்பம் ஏற்பட்டது. தற்போது அவர் நடிக்கும் படங்களில் எந்த படம் முதலில் ரீலீஸ் ஆகுமோ, அந்த படங்களுக்கு மட்டும் கால்ஷீட் கொடுத்து வருகிறார். அந்த வரிசையில்தான் ‘ஜில்லா‘ படத்துக்கும் கால்ஷீட்டை ஒதுக்கி தருகிறார் மோகன்லால். இதில் ஹீரோயினாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இதனால் ‘ஜில்லா’ அடுத்த பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.


இதற்கிடையில் அஜீத் நடித்துள்ள ‘ஆரம்பம்’ படம், தீபாவளிக்கு ரிலீஸ் ஆனபிறகு அவர் நடித்து வரும் ‘வீரம்‘ படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 7 வருடங்களுக்கு பிறகு விஜய்அஜீத் படம் பொங்க லுக்கு நேருக்கு நேர் மோத உள்ளன. இதனால் ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடைசியாக, கடந்த 2007ம் ஆண்டு விஜய் நடித்த போக்கிரி, அஜீத் நடித்த ஆழ்வார் படங்கள் நேருக்கு நேர் மோதின.

கொனார்க் சூரியக்கோவில் - சுற்றுலாத்தலங்கள்!



      கொனார்க் சூரியக்கோவில்
லகளவில் பாரம்பரியமிக்க இடங்களை பட்டியலிட்டுள்ள  யுனெஸ்கோ அவற்றை உலக பண்பாட்டுச் சின்னங்களாக அறிவித்துள்ளது. அதில் இந்தியாவில் 27இடங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 23இடங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள பண்பாட்டுச் சின்னங்களை டூரிசம் பகுதியில் வாரம்தோறும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இந்தவாரம்....
 
கொனார்க் சூரியக்கோவில்
 
"இங்கே, கல்லின்மொழி மனிதனின் மொழியை தாண்டிச்செல்கிறது" என்று வியந்து கூறியிருக்கிறார், மகாகவி ரவீந்திரநாத் தாகூர். இப்படி அவரை வியக்க வைத்தவை, கொனார்க் சூரியபகவான் கோவில் சிற்பங்கள்.
 
"இருபத்து நான்கு பெரிய சக்கரங்கள் கொண்ட பிரம்மாண்டத் தேர்,  முன்கால்களைத் தூக்கியவாறு ஆக்ரோஷமாக அதை இழுத்துச் செல்லும் ஏழு குதிரைகள்..." எனச் சொல்லிப்பாருங்கள். மிரட்டலாக இருக்கும். அதுவே நிஜமாக இருந்தால்...? இருக்கிறது. கொனார்க் சூரியகோவிலாக!. ஆம். கல்லில் செதுக்கப்பட்ட பிரம்மாண்ட தேர்வடிவம்தான் சூரியபகவான் கோவில்.
 
 
ஒரிசா மாநிலத்தில் வங்கக்கடலோரம் கொனார்க் என்னுமிடத்தில் சூரியபகவானுக்காக கட்டப்பட்ட கோவில் இது. சிவப்பு மண்பாறை, கறுப்புக் கிரானைட் கற்களால் உருவாக்கப்பட்ட இந்த கலைப்பொக்கிஷத்துக்கு ஐரோப்பிய மாலுமிகள் சூட்டிய பெயர் 'பிளாக் பகோடா' (கறுப்பு கோவில்). பதின்மூன்றாம் நூற்றாண்டில் (கி.பி1236- 1264) கங்கப் பேரரசன் நரசிம்மதேவரால் கட்டப்பட்டது. இதைக்கட்டுவதற்கு பேரரசின் 12ஆண்டு வருமானம் செலவிடப்பட்டதாம்.
 இந்து சமய மரபுகளில் ஒன்றான சௌரவ மதத்தில் சூரிய பகவான்தான் முக்கியக் கடவுள். அதன்பேரிலேயே சூரியபகவானுக்காக இந்த கோவில் எழுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. இங்குள்ள சிலைகள் மிகவும் பிரசித்தம். அத்தனையும் நுண்ணிய வேலைப்பாடு கொண்டவை. கடவுள்கள், நடனமாடும் மங்கையர், குதிரைகள், யானைகள், சிங்கங்கள் சிற்பங்களாய் சிலிர்த்துக் கொண்டிருக்கின்றன.

 பாலியல் விளையாட்டுக்களை பளிச்செனக் காட்டும் சிற்பங்களும் உண்டு. சௌரவ மதத்தில் சூரியபகவான் சிருஷ்டிதேவனாகப் பார்க்கப்படுகிறார். அந்த அடிப்படையே பாலியல் சிற்பங்கள் உருவாகக்காரணம். கோவிலின் முன்பகுதியில் உள்ள நாதமந்திர் மண்டபம் சிற்பங்கள் நிறைந்தது. இப்படி நூற்றுக்கணக்கான சிற்பங்கள், கல்லில் நடப்பட்ட கலைநாற்றுக்களாக காட்சி அளித்துக்கொண்டிருக்கின்றன.
 
 நரசிம்ம தேவரால் கட்டப்பட்ட முழுக்கோவிலும் இப்போது இல்லை. கோவிலின் சில பகுதிகள் இடிந்து விட்டாலும் மிடுக்குக் குறையவில்லை. சூரியக்கோவிலில் உடைந்து விழுந்த சிற்பங்கள் உள்ளிட்ட முக்கியப்பொருட்களை கொனார்க் அருங்காட்சியத்தில் காணலாம்.
 
 இந்தியாவில் சூரியபகவானுக்காக அமைக்கப்பட்டு எஞ்சி நிற்கும் கோவில் கொனார்க் சூரியக்கோவில் மட்டுமே. சிறப்புக்குரிய இந்தக் கோவிலை யுனெஸ்கோ அமைப்பு 'உலகப் பண்பாட்டுச் சின்னமாக' 1984ம் ஆண்டில் அறிவித்தது. கோவிலை சீரமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.
 
விழாக்கள்:

கொனார்க்கில் பிப்ரவரி மாதம் நடைபெறும் 'மஹாசப்தமி விழா' பிரசித்தம்.  சூரியபகவானை தரிசிக்க லட்சக்கணக்கானோர் கூடுகின்றனர். டிசம்பர் மாதத்தில் சூரியக்கோவில் முன் நடனத்திருவிழா ஒன்றும் நடத்தப்படுகிறது. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் நிறைந்த வண்ணத் திருவிழா இது.
 
எப்படிப் போகலாம்?

புவனேஸ்வரில் இருந்து 65 கி.மீ தொலைவிலும் பூரியில் இருந்து 35 கி.மீ தொலைவிலும் கொனார்க் அமைந்துள்ளது. முக்கிய நகரங்களில் இருந்து சாலைமார்க்கமாக சென்று விடலாம். பூரி, புவனேஸ்வரில் ரயில்நிலையங்கள் உள்ளன. புவனேஸ்வரில் விமான நிலையம் இருக்கிறது. கொனார்க் அருகில் அழகு சிந்தும் சந்திபாகா கடற்கரை உள்ளது. இதுவும் அருமையான ஒரு சுற்றுலாத்தலமாகும்.

உண்மை எது...பொய் எது...(நீதிக்கதை)




 
ஒரு சமயம் முகலாய பேரரசராய்த் திகழ்ந்த அக்பருக்கு..உண்மை எது பொய் எது என எப்படிக் கண்டு பிடிப்பது,..அதற்கான தூரம் எவ்வளவு என்ற சந்தேகம் வந்தது.


தன் அரசரவை மந்திரிகளை எல்லாம் கூப்பிட்டு..தனது சந்தேகத்தைச் சொல்லி அதை தீர்த்துவைக்குமாறு கோரினார்.


எந்த அமைச்சருக்கும் அதற்கான விடை தெரியவில்லை.அக்பர் அரசவையில் அமைச்சராக இருந்த பீர்பால் என்பவர் மிகவும் புத்திசாலி...


அவர் அரசரைப் பார்த்து 'மன்னா..உண்மைக்கும் பொய்க்குமான இடைவெளி நான்கு விரற்கடை தூரம்' என்றார்...


அக்பர்...'அது எப்படி..தங்களால் நிரூபிக்கமுடியுமா' எனக் கேட்டார்.


உடன் பீர்பால்...தன்  இடது கையை எடுத்து இடது கண்ணிலிருந்து  இடது காதுக்கு தன் நான்கு விரல்களை வைத்துக் காட்டினார்.பின் 'அரசே...இது தான் உண்மைக்கும் பொய்க்கும் ஆன தூரம்.எந்த ஒரு விஷயத்தையும் காதால் கேட்பது பொய்யாக முடியலாம்.ஆனால் கண்ணால் பார்ப்பது பொய்யாக ஆக வாய்ப்பில்லை.கண்ணால் கண்டதை சற்று தீர விசாரித்தால் அதுவே மெய்யாக முடியும்' என்றார்.
 

நாமும் எந்த ஒரு விஷயத்தையும் கேட்பது மூலம் அதை நம்பிவிடாது அதை பார்த்து தீர விசாரித்து உண்மையை உணரவேண்டும்.
 
 

ஐபோன் விலை இந்தியாவில் குறைக்கப்பட வேண்டும்!



ஸ்மார்ட் போன் பயன்பாட்டிலும், விற்பனைச் சந்தையிலும், இந்தியா, வேகமாக வளர்ந்து வரும் நாடாக உள்ளது. புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் நுட்ப வசதிகளுக்கு நம் நாட்டவர் எப்போதும் தீராப் பசியோடுதான் இருப்பார்கள் என்பதனை, வெளிநாட்டு மொபைல் போன் தயாரிப்பாளர்கள் அறிந்து வைத்துள்ளனர். அதனாலேயே, மொபைல் போன் உற்பத்தி மற்றும் விற்பனை குறித்து முடிவெடுக்கையில், இந்தியர்களின் எண்ணங்களுக்கு அதிக மதிப்பு கொடுத்து வருகின்றனர். 


ஆனால், தற்போது ஒரு சின்ன பிரச்னை இதில் எழுந்துள்ளது. இந்தியாவில் மொபைல் போன் தயாரிப்பில் ஈடுபடும் இந்திய நிறுவனங்கள், பட்ஜெட் விலையில், மிகவும் குறைவான விலையில், போன்களைத் தயாரித்து வழங்கத் தொடங்கி உள்ளனர். இதனால், பல பன்னாட்டு நிறுவனங்களும், தங்கள் போன்களை குறைந்த விலையிட்டு விற்பனை செய்யத் தொடங்கி உள்ளனர். குறைந்த விலையிட்டு விற்பனை செய்வதற்காகவே, போன்களின் வடிவமப்பையும், இந்தியாவில் விற்பனை செய்வதற்கென மாற்றி வருகின்றனர்.



உயர்ரக போன்களின் கதி? 



இத்தகைய சூழ்நிலையில், ஆப்பிள் போன்ற உயர் ரக போன்களைத் தயாரித்து, உயர்ந்த விலையிட்டு விற்பனை செய்திடும் ஆப்பிள் போன்ற நிறுவனங்களின் நிலை என்ன? இதன் போனின் சராசரி குறைந்த விலை ரூ.40,000 ஆக உள்ளது. இது உயர்நிலையில், ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவரின், ஒரு மாத கால ஊதியமாக உள்ளது. இதனாலேயே, ஆப்பிள் நிறுவனம் அண்மையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கும் ஐபோன் 5 எஸ் மற்றும் ஐபோன் 5 சி ஆகியவை உயர் மத்திய வகுப்பினர் மட்டும் செல்வந்தருக்குக் கூட கிடைக்காத நிலையை உருவாக்கியுள்ளன. 



சாம்சங் மற்றும் எல்.ஜி. போன்ற நிறுவனங்கள், இந்த வகையில் அதே வசதிகள் கொண்ட போன்களை வடிவமைத்து விற்பனை செய்தாலும், அவை அனைவரும் வாங்கும் நிலையிலேயே விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. ஆனால், ஆப்பிள் நிறுவனம் இந்த மத்திய தர வகுப்பினர் வாங்கும் நிலையில் எந்த போனும் கொண்டிருக்கவில்லை. முன்பு வெளியான பழைய போன்களைத்தான் விலை குறைத்து விற்பனை செய்கிறது.



ஐபோன் 5 சி - இந்தியாவிற்கு இல்லை?



ஆப்பிள் அண்மையில் அறிமுகப்படுத்திய இரண்டு போன்களில், ஐபோன் 5 சி, பட்ஜெட் விலை போன் எனத் தெரிவிக்கப்பட்டது. ஐபோன் 5 எஸ் போனுடன் ஒப்பிடுகையில், இதன் விலை குறைவாக இருக்கலாம். ஆனால், ஐபோன் 5 சி இந்தியாவிற்கான பட்ஜெட் விலை போனாக இருக்க வாய்ப்பில்லை. 



ஏனென்றால், வெளிநாடுகளில், மொபைல் சேவை நிறுவன ஒப்பந்தத்தில் இல்லாத ஐபோன் 5 சி போன் ஒன்றின் விலை 549 டாலர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நியச் செலவாணி மாற்றத்தின் படி பார்த்தால், இதன் இந்திய விலை ரூ. 35 ஆயிரமாக இருக்க வாய்ப்புண்டு. மேலும், ஐபோன் 5 மற்றும் ஐபோன் 5 எஸ் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில், ஐபோன் 5 சியின் பிளாஸ்டிக் கவர் சற்றாக இதன் தரத்தினைக் குறைக்கிறது. எனவே, மக்கள் இதே வசதிகளைத் தரும், பிற நிறுவனங்களின் குறைந்த விலை போன்களை நாடிச் செல்லும் வாய்ப்புண்டு.


எனவே, ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 5 சி, இந்தியாவில் அதிகம் விற்பனை ஆக வேண்டும் எனில், அதன் விலை ரூ.15,000 முதல் ரூ.25,000க்குள் இருக்க வேண்டும். பழைய மாடல் ஐபோன்4, 8 ஜிபி திறன் கொண்டதாக இருந்தால், ரூ.22,000 எனத் தற்போது விற்பனை செய்யப்படுகிறது. எனவே, புதிய போனின் விலை இந்த அளவைக் காட்டிலும் சற்று அதிகமாக இருப்பதே நல்லது.

காதல் சின்னம் தாஜ்மஹால் - சுற்றுலாத்தலங்கள்!



     காதல் சின்னம் தாஜ்மஹால்
 லகளவில் பாரம்பரியமிக்க இடங்களை பட்டியலிட்டுள்ள யுனெஸ்கோ,அவற்றை உலக பண்பாட்டுச் சின்னங்களாக அறிவித்துள்ளது. அதில் இந்தியாவின் 27 இடங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 23 இடங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள பண்பாட்டுச் சின்னங்களை டூரிசம் பகுதியில் வாரம்தோறும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த வாரம்...

காதல் சின்னம் தாஜ்மஹால்
 
 உலக அதிசயம், காதல் சின்னம், பரவசப்படுத்தும் பளிங்கு மாளிகை என தாஜ்மஹாலின் பெருமைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆக்ராவில் யமுனை ஆற்றங்கரையில் அழகுப் பெட்டகமாக ஜொலித்துக் கொண்டிருக்கும் தாஜ்மஹால், இந்தியாவின் முக்கிய அடையாளச் சின்னங்களில் ஒன்று.

 மொகலாய மன்னர் ஷாஜஹான் தனது காதல் மனைவி மும்தாஜ் நினைவாக இதைக் கட்டி முடித்தார். ஷாஜஹானின் மூன்றாவது மனைவி மும்தாஜ். இவர் மீது ஷாஜஹானுக்கு தனிக்காதல் உண்டு. தனது பதினான்காவது பிள்ளைப்பேற்றின் போது மும்தாஜ் இறந்து விட்டார். மும்தாஜின் பிரிவைத் தாங்க முடியாத ஷாஜஹான் அவரது நினைவாக எழுப்பியதே தாஜ்மஹால். இங்கு மும்தாஜின் சமாதி உள்ளது. பின்னாளில் ஷாஜகான் இறந்த பிறகு அவரது உடலும் இங்கு அடக்கம் செய்யப்பட்டது.

 வரலாற்றுச் சிறப்புக்குரிய தாஜ்மஹால் கட்டப்பட்ட காலம் கி.பி. 1631-1654ம் ஆண்டு. சுமார் 22ஆயிரம் பேர் கட்டடப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முழுவதும் பளிங்குக் கற்களைப் பயன்படுத்தி பாரசீக பாணி மற்றும் மொகலாயருக்கே உரித்தான ஸ்டைலும் கலந்து உருவாக்கப்பட்டது. இங்குள்ள ஒவ்வொரு பகுதியும் மீண்டும் மீண்டும் ரசிக்கத் தூண்டுபவை.
 
 தாஜ்மஹால்- மிக நேர்த்தியான வடிவமைப்பு கொண்டது. சதுரவடிவ நிலப்பரப்பில் சமச்சீராக கட்டடங்கள் எழுப்பப்பட்டுள்ளன. மூலைக்கு ஒன்றாக நான்கு உயரமான மினார்களும், கட்டடத்தின் உச்சியில் வெங்காய வடிவில் அமைக்கப்பட்டிருக்கும் குவிமாடமும் தாஜ்மஹாலின் தனி அடையாளங்கள். குவிமாடம் மட்டும் 35மீட்டர் உயரம் கொண்டது. சுவர்கள் அனைத்திலும் பளிங்கு கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. 'துலுத்' என்ற வகையிலான அரபி வனப்பெழுத்துக்கள் எழுதப்பட்டுள்ளன. பாரசீக வனப்பெழுத்துக் கலைஞர்களின் கைவண்ணத்தில் இவை உருவானவை. மேலும் செடி, கொடி வடிவங்களும் அழகுற வரையப்பட்டுள்ளன. தாஜ்மஹாலின் உட்புறக்கூடம் இன்னும் அழகானது. எண்கோண வடிவில் அமைந்துள்ள உட்புறக்கூடத்தில் விலை உயர்ந்த பளிங்கு கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.தாஜ்மஹாலைப் போலவே அதன் முன்புறம் அமைந்துள்ள பூங்காவும் ரசனைக்குரியது. பாரசீக பூங்காக்களின் வடிவமைப்பை பின்பற்றி இது அமைக்கப்பட்டுள்ளது.
 
எப்படிப் போகலாம்?
 
ஆக்ராவில் விமான நிலையம் உள்ளது. டெல்லியில் இருந்து ஆக்ராவுக்கு உள்நாட்டு விமானங்கள் இயக்கப்படுகின்றன ஆக்ராவும் ரயில் நிலையமும் உள்ளது. டெல்லியில் இருந்து சுமார் 3மணி நேர ரயில் பயணத்தில் ஆக்ராவை அடைந்து விடலாம். நல்ல சாலை வசதிகளும் உள்ளன.
 
"கலையும், காதல் வரலாறும் கலந்த ஒரு அழகு ஓவியம்தான் தாஜ்மஹால். நேரில் பார்க்கும்போதே இதை உணர முடியும்''

முதன்முறையாக ராணுவத்தினருக்‌கு தனி சம்பள கமிஷன் : மத்திய அரசு முடிவு!




இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கு பின்னர் ராணுவத்தினருக்கு என தனியாக சம்பள கமிஷனை மத்திய அரசு அமைத்து உள்ளது. இதன் மூலம் ராணுவத்தினரிடையே நிலவும் ஊதிய வேறுபாடு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



ராணுவத்தினரின் நீண்ட நாள் கோரிக்கை:


நாட்டின் எல்லைப்பகுதிகளை கண்காணிக்கும் பணியி்ல் தரைப்படை , விமானப்படை, கப்பல் படை ஆகிய படை பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும் இந்த மூன்று பிரிவுகளிலும் பணிபுரிந்து வரும் வீரர்களிடையே சம்பள முரண்பாடு என்பது இருந்து வருகிறது. இதனைதீர்க்கும் வகையில் முப்படைகளின் அதிகாரிகள் ராணுவத்தினருக்கு என தனியாக சம்பள கமிஷனை நியமிக்க வேண்டு மென வலியுறுத்தி வந்தனர். 




இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது சம்பள கமிஷன் அமைப்பதற்கு பிரதமர் ஒப்புதல்அளித்துள்ளார். இதற்காக அமைக்கப்பட்ட குழு சமர்பிக்கும் அறிக்கை அடிப்படையில் சுமார் 80 லட்சம் பேர் பயன் அடைய உள்ளனர். இந்த சம்பள கமிஷன் அறிக்‌கையி்ன் அடிப்படையில் வரும் 2016 ஜனவரி ஒன்றாம் தேதி முதல் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.


மத்திய அரசு அறிவிப்பு:


மூன்று படை பிரிவுகளின் அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க மத்திய பாதுகாப்பு்ததுறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி ராணுவத்தினருக்கு என தனியான ஊதிய கமிஷனை நியமிக்க பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு பரிந்துரைந்தார். 



இதனையடுத்து கடந்த ஜூலை மாதம் பிரதமர் நியமித்த ஊதிய குழுவில் நான்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் அமைச்சரவை செயலாளர்கள் ராணுவத்தினர் தரப்பில் ஒருவரும் இல்லாதது ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராணுவ அதிகாரிகள் நம்பிக்கை:


தற்போது தனியான ‌ ஊதிய கமிஷனை நியமிக்க அரசு உத்தரவு பிறப்பித்திருப்பதன் மூலம் ஒரே பதவிக்கு ‌ஒரே ஊதியம் என்ற நீண்ட நாள் கோரிக்கைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என நம்பிக்கை கொண்டுள்ளனர்.

பேராசை பெரு நஷ்டம் (நீதிக்கதை)



ஒரு ஊரில் அரிசி வியாபாரி ஒருவன் இருந்தான்.அவன் அவனது தானியக்கிடங்கில் பெரிய பிரும்மாண்டமான உலோகத்தால் ஆன டிரம்களில் அரிசியை சேகரித்து வைத்திருந்தான்.அப்படிப்பட்ட டிரம்களில் ஒன்றில் கீழே சிறு ஒட்டை இருந்தது.அதில் இருந்து வந்த அரிசி வெளியே சிதறிக் கிடந்தது.

அந்த வீட்டில் இருந்த இரண்டு எலிகள் இதைப் பார்த்து சிதறிக் கிடந்த அரிசியை உண்டு பிழைத்து வந்தன.

இந்நிலையில் இரு எலிகளில் பேராசை பிடித்த ஒரு எலி மற்றொரு எலியுடன் ..நாம் இந்த ஒட்டை வழியே உள்ளே சென்று விட்டால்,நிறைய அரிசி இருக்கும்.

வேண்டும் வரை உண்ணலாம் வா என்றது.

ஆனால் மற்ற எலியோ "பேராசை வேண்டாம்.இப்போது நமக்கு கிடைக்கும் அரிசியே போதும் " என்று கூறிவிட்டது.

அந்த எலியின் பேச்சை கேட்காத முதல் எலி,அந்த ஒட்டையின் மூலம் உள்ளே சென்று...அரிசியை சாப்பிட ஆரம்பித்தது.இதனால் அது உள்ளே நுழையும் போது

இருந்ததை விட பருத்து விட்டது.அதனால் இப்போது அந்த சின்ன ஒட்டையின் மூலம் வெளியே வர இயலவில்லை.

ஒரு நாள் டிரம்மிலிருந்த அரிசியை விற்பனைக்கு எடுத்தான் வியாபாரி.அப்போது அதில் பதுங்கியிருந்த குண்டு எலியைக் கண்டு அதை அடித்துக் கொன்றான்.

பேராசை இல்லாத எலி பிழைத்தது.

பேராசை கொண்ட எலி இறந்த்து.

பேராசை பெரு நஷ்டமாகும்.

Thursday 26 September 2013

விண்டோஸ் எக்ஸ்பி - விட்டுவிட வேண்டுமா?




விண்டோஸ் எக்ஸ்பி, மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் பொறுத்தவரை, ஏப்ரல் 8, 2014க்குப் பின்னர் இருக்காது. இந்த செய்தி, பல எக்ஸ்பி விசுவாசிகளுக்கு எரிச்சலைத் தந்துளது. பலர் மாற விரும்பினாலும், உடனே செயல்படாமல், நாட்களைக் கடத்திக் கொண்டுள்ளனர். பலர், மைக்ரோசாப்ட் புதிய கம்ப்யூட்டர்களையும் சாப்ட்வேர் அப்ளிகேஷன்களையும் நம்மை வாங்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தி, பணம் சம்பாதிக்கத் திட்ட மிடுகிறது என்ற குற்றச்சாட்டினையும் வைக்கின்றனர்.இது உண்மை அல்ல என்பது இதுவரை விண்டோஸ் சிஸ்டத்தின் பல பதிப்புகளுக்கு நேர்ந்ததைக் கவனித்தால் தெரியவரும்.



மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் பொறுத்தவரை, இது எக்ஸ்பி சிஸ்டத்திற்கு மட்டுமல்ல. அனைத்து சிஸ்டங்களும், இது போல்தான் முடக்கப்பட்டன என்று கூறுகிறது. விண்டோஸ் 95, விண்டோஸ் 98 மற்றும் விண்டோஸ் மி ஆகியவற்றின் வாழ்நாளும் இதே போல முடிவுக்கு வந்தன. தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் விஸ்டாவின் இயக்க வாழ்வு, வரும் ஏப்ரல் 11,2017ல் முடிவடையும். விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கான பாதுகாப்பு முறை ஜனவரி 14,2020 ஆம் ஆண்டில் முடிந்துவிடும்.


விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தைப் பொறுத்தவரை, அதன் வாழ்நாள் சப்போர்ட் பலமுறை நீட்டிக்கப்பட்டது. மற்ற சிஸ்டங்களை நடத்தியது போல, எக்ஸ்பியையும் நடத்த முற்பட்டிருந்தால், சில ஆண்டுகளுக்கு முன்பே, இதற்கான சப்போர்ட் வாபஸ் பெற்றிருக்கப்பட வேண்டும். உற்றுக் கவனித்தால், ஓர் ஆச்சரியமான உண்மை வெளிப்படும். விண்டோஸ் எக்ஸ்பி 2001 ஆம் ஆண்டு வெளியானது. 2010ல் எக்ஸ்பி பதிந்து இயக்கப்பட்டகம்ப்யூட்டர்கள் மிகப் பழமையாக இயங்கின. ஆனால், எக்ஸ்பி வெளியாகி ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த, விண்டோஸ் விஸ்டா, 2011 வரையே பாதுகாப்பில் இருந்தது.



விண்டோஸ் எக்ஸ்பி வெளியாகி 13 வயதாகி விட்டது. இளஞ்சிறுவர்கள் மாதிரி, இன்றைய (டிஜிட்டல்) உலகை, எக்ஸ்பியால் தாக்குப் பிடிக்க இயலவில்லை. மிகப் பெரிய அளவில், பல மாற்றங்களுடன் சர்வீஸ் பேக் 3 வந்தாலும், எக்ஸ்பியால், புதிய டிஜிட்டல் மாற்றத்திற்கு ஈடு கொடுக்க இயலவில்லை என்பதே உண்மை. விண்டோஸ் விஸ்டாவில் அறிமுகப்படுத்தப்பட்ட சில பாதுகாப்பு வழிகளைக் கூட எக்ஸ்பியால், பின்பற்ற இயலவில்லை. தற்போது ஹார்ட்வேர் பிரிவில் ஏற்பட்டுள்ள நவீன முன்னேற்றங்களுடன் இணைந்து செயல்பட எக்ஸ்பி சிஸ்டத்தால் இயலவில்லை.




மைக்ரோசாப்ட் மட்டுமின்றி, இதற்கென புரோகிராம்களை உருவாக்கியுள்ள சில தர்ட் பார்ட்டி நிறுவனங்களும், தொடர்ந்து எக்ஸ்பியில் அவை இயங்குகையில் பாதுகாப்பு அளிக்க இயலவில்லை. ஒவ்வொரு விண்டோஸ் சிஸ்டம் புதிய பதிப்பு வெளியாகும் போதும், இந்த நிறுவனங்கள், அதிக நேரம் மற்றும் பணம் செலவழித்து தங்கள் புரோகிராம்களை அப்டேட் செய்கின்றனர். அந்நிலையில், எக்ஸ்பிக்கு வெளியான புரோகிராம்களையும் தொடர்ந்து பராமரிப்பது வீணான செயல் என்று எண்ணுகின்றனர்.



எக்ஸ்பி தொடர்வது இன்டர்நெட்டையும் பாதிக்கிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6, 7 மற்றும் 8 பதிப்புகள் மட்டுமே, எக்ஸ்பியுடன் இணைந்து செயல்படுகின்றன. இந்த பிரவுசர்கள் எல்லாம், மற்றவற்றைக் காட்டிலும் மிகப் பின் தங்கியவை ஆகும். இதனால், தற்போதைய பிரவுசர்களுக்காக எனத் தனியே கூடுதலாக, வெப்சைட்கள் தயார் செய்திட வேண்டியுள்ளது.




ஆனால்,எக்ஸ்பி சிஸ்டத்தை விடுத்து, விண்டோஸ் 2007 அல்லது விண்டோஸ் 8 க்கு மாற இருப்பவர்களுக்குக் கூடுதல் செலவு ஆகலாம். கம்ப்யூட்டர் மட்டுமின்றி, துணை சாதனங்களையும் மாற்ற வேண்டியதிருக்கும். ஆனால், வேறு வழியில்லை.



இன்னொரு சிக்கலும் உள்ளது. விண்டோஸ் 7 ஓரளவிற்கு, விண்டோஸ் எக்ஸ்பியின் தன்மையைக் கொண்டு இயங்குகிறது. இதனால், விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறியவர்கள், மிக அதிக அளவில் புதுமையைச் சந்திக்கவில்லை. மாற்றத்திற்குத் தங்களை எளிதில் பழகிக் கொண்டனர்.




ஆனால், விண்டோஸ் 8க்கு மாறுபவர்களுக்கு எல்லாமே மிகப் புதியதொரு அனுபவத்தினைத் தருவதாக அமைந்துள்ளது. இவர்கள், சற்று நேரம் ஒதுக்கிச் சிலவற்றைப் புதியதாகக் கற்றே ஆக வேண்டும். புதியதாகக் கம்ப்யூட்டர் வாங்குபவர்களுக்கு விண்டோஸ் 8 சிஸ்டம் பதிந்து கொடுக்கப்படுகிறது. அவர்கள் இதனை இயக்கிப் பார்க்கும் போது, புதிய மாற்றங்களையும், அவை நம்மிடம் எதிர்பார்க்கும் திறனையும் உணரலாம். அடுத்து விண்டோஸ் 8.1 வருகையில், அதில் சில பழைய விண்டோஸ் அம்சங்களைப் பார்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் மைக்ரோசாப்ட், விண்டோஸ் 8.1 பயன்படுத்துவது பற்றிய குறிப்பு களையும் சேர்க்கலாம்.


எனவே, விண்டோஸ் எக்ஸ்பி வைத்திருப்பவர்கள், அடுத்து எப்போது அதனை முடித்து வேறு விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறலாம் என்பதனைத் திட்டமிட வேண்டும்.

தலை முடி பிரச்னைகளுக்கு 60 நிமிடத்தில் தீர்வு!

Solution to the problem of hair in 60 minutes


முகம் எவ்வளவுதான் அழகாக இருந்தாலும் தலை முடி தான் ஒருவரின் அழகை முழுமை ஆக்குகிறது. தலைமுடி உதிர்தல், இளநரை, பேன், பொடுகு, புழு வெட்டு, என பலவிதமான பிரச்னைகள் தலை முடியில் வரும். வயது வித்தியாசம் இல்லாமல் , ஆண் பெண் வேறுபாடு இல்லாமல் இதுபோன்ற தலை முடி பிரச்னைகள் வரும். உணவு பழக்கவழக்கம், சுற்றுப்புற சூழ்நிலைகள், பராமரிப்பு இல்லாதது தான் இதற்கு காரணம். தினமும் தலைக்கு எண்ணெய் தேய்கிறேன், ஆனாலும் எனக்கு முடி உதிர்கிறது, பேன், பொடுகு இருக்கிறது என்பதும், இருபது வயது தான் ஆகிறது முடி நரைத்து விட்டது என்பதும் பலரின் தினசரி புலம்பல்களில் ஒன்று.

இது எங்களை பொறுத்தவரை ஒரு மணி நேரத்தில் சரி செய்யகூடியது தான் என்கிறார் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள விக்டோரியா சீக்ரெட் பெண்கள் அழகு நிலையத்தின் நிர்வாக இயக்குனர் ஷர்மி.

இது குறித்து ஷர்மி கூறியதாவது: முன்பு பயப்பட வேண்டிய நிலையில் இருந்த தலை முடி பிரச்னைகள் தற்போது சாதரண விஷயமாகி விட்டது. கடந்த 22 வருடங்களாக அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை மூலம் பலன் அடைந்தவர்கள் பல ஆயிரம் பேர். இந்த சிகிச்சையின் ரகசியம் எங்களது எண்ணெய் தான். ஆயுர்வேத முறைப்படி தகுந்த மூலிகைகள் மூலம் மிக சரியான பக்குவத்தில் தயாரிக்கப்பட்டு உள்ள எண்ணெய் மற்றும் ஹேர் பேக் மூலம் தலை முடி பிரச்னைகளுக்கு நிரந்தரமாக தீர்வு ஏற்படுகிறது.

நரையை மறைப்பதற்காக கெமிக்கல் கலந்த ஹேர் டை பயன்படுத்துவதால் சிலருக்கு முகத்தில் கருப்பு திட்டுக்கள், அலர்ஜி ஏற்படும். எனவே தலை முடி பிரச்னைகளை ஆரம்பத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். எந்த நிலையில் தலை முடி சார்ந்த பிரச்னைகள் இருந்தாலும் கவலைப்பட தேவை இல்லை. ஒரு முறை அதுவும் ஒரு மணி நேர ஹேர் பேக்கேஜ் மூலம் எத்தனை ஆண்டுகள் ஆன தலைமுடி பிரச்னைகளையும் சரி செய்யலாம்.

சிகிச்சைக்கு வருபவர்களிடம், முதலில் என்ன காரணத்தினால் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டு பின்னர் அதற்கேற்ற ஹேர் மசாஜ் செய்யப்படும். பேன், பொடுகு உள்ளவர்களுக்கு அதற்கேற்ற மூலிகை பேக் போடப்பட்டு சிறிது நேரம் ஊற வைக்கப்பட்டு பின்னர் கழுவி விடப்படும். இதை தொடர்ந்து வீட்டில் தினமும் பயன்படுத்த ஹேர் ஆயில், வாரம் ஒரு முறை பயன்படுத்த மூலிகை பவுடர் பேக், ஷாம்பு வழங்கப்படும்.

சொட்டவாளக்குட்டி’ @ நையாண்டி ஸ்பெஷல் ஆல்பம்!


தனுஷ் நடித்து வரும் நகைச்சுவை திரைப்படம் ‘நையாண்டி’. ‘களவாணி’ சற்குணம் இயக்கி வரும் இப்படத்தின் நாயகியாக நாஷ்ரியா நஷிம் நடித்து வருகிறார்.’சொட்டவாளக்குட்டி’ என்று தான் முதலில் இப்படத்திற்கு பெயரிடப்பட்டது. 


பின்பு ‘நையாண்டி’ என்று தலைப்பினை மாற்றி இருக்கிறார்கள்.இந்நிலையில் ஏற்கனவே தெரிவித்த தேதிக்கு முன்னதாகவே தனது நையாண்டி படத்தை வெளியிடும் ஐடியாவில் இருக்கிறாராம் தனுஷ். 


இதனை மறை முகமாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அக்டோபர் 11-ம் தேதி நய்யாண்டி படம் வெளி வருவதாக திட்டமிடப்பட்ட நிலையில் சில தினங்களுக்கு முன் படத்தின் ஆடியோ வெளியிடப்பட்டது. இந்நிலையில் ரசிகர்களே நீங்கள் எதிர்பார்க்கும் தினத்திற்க்கு முன்னதாகவே படம் வெளியாகலாம் என தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார் தனுஷ்.





Samsung Galaxy Note 3 Flexible Screen Model!




 Samsung unveiled the Galaxy Note 3 at an event earlier in the month. The handset saw plenty of rumors in the lead up to that announcement, and as Samsung and the carriers were pretty forthcoming in terms of specs and release details — those rumors had come to an end. But it looks like they have kicked-off once again. The rumors are touching back on a Galaxy Note 3 with flexible display.


This was an item that had been rumored in the lead up to the official announcement, but as we learned, that was not something that was announced. Well, it now looks like rumors are suggesting that Samsung will be releasing another variant of the Galaxy Note 3 in October and this time around it will have the flexible display technology.

Anyway, as we often find with rumors, the details are on the light side at this time. Basically, what we are seeing is coming out of Korea and suggesting that Samsung will be releasing a Galaxy Note 3 with a flexible OLED as early as October. Further details suggest the handset will only be produced in limited quantities though. 








There was no mention of other specs with talk of the flexible display model, however with a handset that is expected to debut next month — the rumors should be ending soon enough. Similar to the limited quantities, we would expect this variant of the Note 3 to also be available in limited markets. With that, we still have a few weeks before this handset is rumored to be announced, which really just means that more rumors are likely.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top