.......................................................................... ....................................................................... ......................................................................

Monday 23 September 2013

மைக்ரோசாப்ட் Surface 2 டேப்லெட் இன்று வெளியீடு!





மைக்ரோசாப்ட் நிறுவனம் டேப்லெடின் அடுத்த படைப்பான Surface 2 மற்றும் Surface Pro 2 இன்று நியூயார்க் நகரத்தில் வெளியிடப்படுகிறது. Surface 2 பார்க்கவும் மற்றும் பணிபுரிவதும் கிட்டத்தட்ட அதன் முந்தைய படைப்புகளை போலவே இருக்கும், ஆனால் இதில் வேகமான TEGRO 4 செயலி(processor) மற்றும் 1080p திரை அம்சங்களை கொண்டுள்ளது.


மைக்ரோசாப்ட் Surface RT மற்றும் Surface Pro tablets புதுப்பிக்கப்பட்டு Surface 2 மற்றும் Surface Pro 2 வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

இந்த இரண்டு புதிய சாதனங்களையும் அனுசரிக்கக்கூடிய இரண்டு-கட்ட கிக்ஸ்டேன்ட்(two-stage kickstand), மற்றும் மேம்படுத்தப்பட்ட விவரக்கூற்றுகள் (updated specifications) இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே உள்ள Surface சாதனங்கள் பணிபுரிவது போலவே இருக்கும், மேலும் அது கூட புதிய அக்சசரி பாகங்கள்(accessories) உள்ளிட்டவை அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஒரு புதிய பவர் கவர்(Power Cover) கொண்டு பேட்டரி ஆயுளை அதிகரிக்க முடியும், மற்றும் மைக்ரோசாப்ட் இறுதியாக Surface Docking Station வெளியிடும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சமூக நெட்வொர்க்கிங் தளம் 'Worldfloat' புதிய தேடல் என்ஜின் அறிமுகம்!



இந்திய சமூக நெட்வொர்க்கிங் தளம் இன்டர்நெட்டில் பயனர்களுக்கு(users) செய்திகள், தகவல்கள் மற்றும் படங்களை தேட ஒரு புதிய Worldfloat தேடல் என்ஜின் அறிமுகப்படுத்தியுள்ளது. Worldfloat.com நிறுவனரான புஷ்கர் மஹடா இந்த புதிய அம்சமானது நிறுவனத்தின் பயனர் தளத்தை(user base) விரிவுபடுத்த உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் உள்நாட்டு சமூக நெட்வொர்க்கிங் தளத்தின் புதிய வசதி, கூகுள் மற்றும் யாகூ போன்ற உலக தேடல் என்ஜின்கள் போன்று பணிபுரியும் என்றும் புஷ்கர் மஹடா கூறியுள்ளார். மேலும், இது இன்னும் பல கூடுதல் அம்சங்களை கொண்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

இந்த புதிய தேடல் என்ஜின் இந்தியாவில் மட்டுமே இருக்கின்றது. மற்றும், ஆட்டோமேட்டிக் அல்காரிதம் (automatic algorithm) மூலம் உண்மையான நேரத்தின் அடிப்படையில் உலகம் முழுவதிலும் இருந்து செய்திகளை அளிக்கும் சமூக நெட்வொர்க்கிங் வசதி அத்துடன் தேடல் என்ஜின் வேறு எந்த தளத்திலும் இல்லை என்றும் புஷ்கர் மஹடா கூறியுள்ளார்.

Worldfloat செய்திகள் மற்றும் தகவல்களை மற்ற நபர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் மற்றும் பொதுவான விருப்பத்தை மக்களுடன் தொடர்பு கொள்ளவும் 'Sharing' அம்சம் கொண்ட புதிய தேடல் என்ஜின் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து 'தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட நபர் தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட மற்ற நபர்களை சந்திக்க முடியும்; இதேபோல் மருத்துவர்கள் மருத்துவர்களை சந்திக்க முடியும், கட்டிட கலைஞர்கள் கட்டிட கலைஞர்களை சந்திக்க முடியும்,' என்றும் அவர் கூறியுள்ளார்.

நிறுவனத்தின் நீண்ட கால திட்டம் ஒரு தேடல் என்ஜின் உருவாக்குவது மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் இருந்து பொதுவான விருப்பத்தை மக்களுடன் இணைக்க உதவும் ஒரு 'சமூக தேடல் என்ஜின்' உருவாக்கவதே ஆகும் என்று புஷ்கர் மஹடா கூறியுள்ளார்.

Worldfloat பட தேடல் வசதிகளை உருவாக்கியுள்ளது. இது கூகிள் படங்களை போல செயல்படுகிறது, ஆனால்  உலகம் முழுவதிலும் இருந்து உண்மையான நேர வரிசைப்படி புகைப்பட ஆதாரங்கள் கொண்ட செய்திகள் போன்ற பல கூடுதல் அம்சங்களை கொண்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

ஆகஸ்ட் மாத பிரசாதங்கள் : இனிப்பு சீடை (கோகுலாஷ்டமிக்கு)





சிலபேர் வீட்டுச் சமையல் மிகவும் மணமாகவும் பார்க்கும்போதே பசியைத் தூண்டும் வகையிலும் சுவைத்தால், மீண்டும் சுவைக்கும் ஏக்கத்தை வளர்ப்பதாகவும் பலநாட்கள் அந்த மணம், குணம், சுவையை நினைவில் வைத்துக் கொள்ளும் வகையிலும் அமைந்திருக்கும். சில ஓட்டல்களிலும் இதே போன்ற உணர்வினை அங்கே கிடைக்கும் உணவுப் பொருட்கள் தரும். ஆனால், ஓட்டல்களில் அவை வியாபார நோக்கத்தோடு தயாரிக்கப்படுபவை. வீடுகளில் தயாரிக்கப்படுபவை நம் பெண்களின் உள்ளன்போடு உருவானவை. தான் சமைக்கும் இந்தப் பொருட்கள் தம்மைச் சார்ந்தவர்களுக்கும் இதைச் சாப்பிட வரும் விருந்தினருக்கும் எந்தக் கெடுதலையும் உண்டாக்காதபடியும் நல்ல ஆரோக்கியத்தை வழங்கும்படியும் அமையவேண்டுமே என்ற அக்கறை மணம் நிறைந்திருக்கும்.


இதைத்தான் ‘கை மணம்’ என்கிறார்கள். சில வீடுகளில் சில சமயங்களில் பாராட்டும்படியாகவும் சில சமயங்களில் முகம் சுளிக்கவைக்கும்படியாகவும் உணவுப் பொருட்கள் அமைவது அவற்றைத் தயாரிக்கும் பெண்களின் உள் உணர்வுகளைப் பொறுத்திருக்கிறது என்றே சொல்லலாம். சமைக்கும்போது நம் நினைவுகள் பலவாறாக அலைமோதும். அப்படி விடாமல், ஆன்மிக நெறியோடு தயாரிப்போமானால், என்றென்றுமே அவை மணம், நிறம், குணம், சுவை ஆகியவற்றை நிறைவாகக் கொண்டிருக்கும். ஏதேனும் ஸ்லோகத்தை உச்சரித்துக்கொண்டே அல்லது மனதில் பாடிக்கொண்டே சில பெண்கள் இப்படித் தயாரிக்கும் உணவுப் பொருட்களில் இந்த உயர்வான வித்தியாசத்தைக் காணலாம்.

சந்திரலேகா ராமமூர்த்தி

இனிப்பு சீடை (கோகுலாஷ்டமிக்கு)

என்னென்ன தேவை?

பச்சரிசி மாவு - 2 கப், ரவை - அரை கப்,  உளுந்து மாவு - அரை கப், வெல்லத்தூள் - 1 ஒரு கப், ஏலக்காய் தூள் - சிறிது, எண்ணெய் - தேவைக்கேற்ப, கெட்டியான தேங்காய்ப்பால் - தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?  

உளுந்தை சிவக்க வறுத்து பொடித்து நன்கு சலித்துக் கொள்ளவும். ஏலக்காய் தூள் சேர்த்து வெல்லத்தை உருக்கி வடித்து, தேங்காய்ப்பால் சேர்த்து வைத்துக் கொள்ளவும். இப்போது வெல்லத்துடன் வறுத்த ரவை, அரிசிமாவு, உளுத்தம் மாவு சேர்த்து கெட்டியாகப் பிசைந்து வைத்துக் கொண்டு, ஒரு துணி கொண்டு சிறிது நேரம் மூடி வைத்துக் கொள்ளவும். பின் ஒரு தட்டில் எண்ணெய் தடவி பிசைந்த மாவிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

அமாவாசையில் குழந்தை பிறக்கக்கூடாது என கூறுவது ஏன்?




திங்கட்கிழமையன்று வரும் அமாவாசை நாளில் புத்திர பாக்யம் வேண்டுபவர்கள் காலை 6 லிருந்து 11 மணிக்குள் அரச மரத்தை சுற்றி வந்து வழிபட  வேண்டும். தெய்வங்களை வழிபட உகந்தது என அமாவாசையை சாஸ்திரம் கூறுகிறது. 


நல்லடக்கம் செய்யப்பட்டவர்களுக்கும் பித்ருக்களுக்கும் தர்ப்பணம், திதி கொடுப்பதை இந்த நாளில்தான் செய்ய வேண்டும். அமாவாசையில் பிறந்த குழந்தைக்கு சாந்தி செய்ய வேண்டும். 



இல்லையெனில் வாழ்வினில் தவறான வழியை அந்தக் குழந்தை பின்பற்றக்கூடும் என ‘சாந்தி குஸுமாகரம்’ என்ற நூல் கூறுகின்றது. 


பிறப்பதை நாம் தடுக்க முடியாதே! ஆனால், பரிகாரம் செய்து நல்வாழ்வு வாழ முடியுமே! நாம் அனுபவிக்கும் சுகத்தில் சாஸ்திர விரோதமான காரியங்களை விலக்க வேண்டும் என ஆதிசங்கரர் கூறியுள்ளார்.

இறைவனை வழிபட என்ன வழிகள்?



ஒருவனால் நாள் முழுவதும் பிரார்த்தனையில் ஈடுபட முடியாது. பணிபுரியும் நேரத்திலும் பக்தி உணர்வுடன் செயல்பட்டால் மனம் தூய்மை பெறும். 


உயிர்களில் ஏதாவது ஒன்றுக்காவது மகிழ்ச்சியைக் கொடுக்க முடியுமானால், வாழ்க்கையின் லட்சியம் நிறைவேறிவிட்டது என்று பொருள். குணத்தையோ, குற்றத்தையோ எங்கு விவாதித்தாலும் அங்கே இருக்கும் ஒவ்வொருவருக்கும் அதில் சிறிதளவாவது பங்கு வந்து சேர்ந்துவிடும். 


எதையாவது அறிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டால், தனியான இடத்தில் தங்கிக் கண்ணீர் மல்க, இறைவனை வேண்டுங்கள், அவன் உங்கள் மனத்திலுள்ள அழுக்கையும், துயரத்தையும் போக்குவான். 


இறைவனை நேசிப்பதில் துன்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை, இறைவனை மட்டும் நேசிப்பவன் புண்ணியவனாகிறான். உலகம் முழுவதும் பரந்து நிற்கும் இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள், அவன் தனது கருணையை உங்கள் மீது பொழிவான். 

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top