.......................................................................... ....................................................................... ......................................................................

Monday 16 December 2013

ஓஷோ சொல்கிறார் ...




மிகவும் பக்திமானான தகப்பன் ஒருவன் தன் மகனை மிக ஒழுக்கமாக வளர்த்து வந்தார்.


ஒரு நாள் அவர்கள் தேவாலயத்திற்கு போகும் பொது அவர் தன் குழந்தையிடம் இரண்டு நாணயங்களை கொடுத்தார். ஒன்று ஒரு ரூபாய், மற்றொன்று ஒரு பைசா நாணயம். தேவாலய நன்கொடைப் பெட்டியில் மகனுக்கு எது விருப்பமோ அந்த நாணயத்தைப் போடலாம் என்று அனுமதியும் கொடுத்தார்.


மகன் ஒரு ரூபாய் நாணயத்தைதான் பெட்டியில் போடுவான் என்று தந்தை எதிர் பார்த்தார் . அவனிடம் அதை எதிர்பார்க்கலாம் நம்பலாம்.


அப்படித்தான் அவன் வளர்க்கப் பட்டிருந்தான். தகப்பன் காத்திருந்தார் . கூட்டம் கலைந்ததும் என்ன நடந்தது என்று அறிந்து கொள்ள மிகவும் ஆவலாக இருந்தார் .


பையனைக் கேட்டார் நீ என்ன செய்தாய் என்று.


பையன் சொன்னான் ஒரு ரூபாயை வைத்துகொண்டு ஒரு பைசாவையே தான் பெட்டியில் போட்டதாக சொன்னான் .


தந்தையால் நம்ப முடியவில்லை .ஏன் நீ இப்படிச் செய்தாய் நான் உனக்கு எப்பொழுதும் உயர்ந்த கோட்பாடுகளைத்த்தானே கற்று கொடுத்தேன்  என்று அதற்க்கு பையன் சொன்னான் பாதிரியார் தன்னுடைய பேச்சில் கடவுள் மகிழ்ச்சியுடன் கொடுக்கும் மனிதனை நேசிக்கிறார் என்று கூறினார் என்னால் ஒரு பைசாவை மட்டுமே மகிழ்ச்சியாக கொடுக்க முடிந்தது. ஒரு ரூபாயை அல்ல !


ஓஷோ சொல்கிறார்  கடவுள் மகிழ்ச்சியுடன் கொடுக்கும் மனிதனைதான் நேசிக்கிறார் நீ மகிழ்ச்சியோடு செய்தால் மததன்மையோடு செய்கிறாய் என்று அர்த்தம் அது பைசாவாக இருக்கலாம் அது ஒரு பொருட்டே அல்ல,....

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top