.......................................................................... ....................................................................... ......................................................................

Monday 25 November 2013

நீரில் மூழ்கினால் பறந்து போய் காப்பாற்றும் ரோபோ! வீடியோ!




 முன்னெல்லாம் நாளுக்கு நாள் என்பது இப்போது மணிக்கு மணி மனிதனின் செய்யும் வேலைகள் அனைத்திலும் ரோபோட்டின் பங்கு இன்றியமையாததாக இருக்கிறது அந்த வகையில் : நீரில் மூழ்கி, உயிருக்கு போராடும் நபர்களை பறந்து சென்று காப்பாற்றுவதற்காக, ஜி.பி.எஸ்., தொழில்நுட்பத்துடன் இயங்கும் ஒரு ரோபோவை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர். பார்ஸ் என அழைக்கப்படும் இந்த புரோட்டோ டைப் ரோபோ, தண்ணீரிலும் செயல்படும் திறன் கொண்டது.

 ஈரான் நாட்டு ஆய்வு நிறுவனமான ஆர்.டி.எஸ்., என்ற ஆய்வகத்தில் இது உருவாக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நீரில் மூழ்கி அதிகமானோர் இறக்கும் காஸ்பியன் கடல் பகுதியில் இந்த ரோபோ வெள்ளோட்டம் விடப்பட்டது. இதில் 75 மீட்டருக்கு அப்பால் உள்ள இலக்கில் இருந்து பாதிக்கப்பட்டவரை தூக்கிக் கொண்டு 22 வினாடிகளில் இந்த ரோபோ கரையை அடைந்தது. அதே நேரத்தில், லைப்கார்டு மூலம் அங்கிருந்து கரைக்கு பாதிக்கப்பட்ட நபர் வர 91 வினாடிகள் வரை நீந்த வேண்டியிருந்தது. இந்த ரோபோவை மேலும் மேம்படுத்தி நீரில் மூழ்குபவர்களை மீட்பதற்கு மட்டுமல்லாமல் உளவு பார்க்கவும் இதை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

nov 25 - tec robot.mini

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top