.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday 20 November 2013

‘இரண்டாம் உலகம்’ ரிலீஸாதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 1irandamulagam
செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா – அனுஷ்கா நடித்திருக்கும் படம் ‘இரண்டாம் உலகம்’. நீண்ட நாட்கள் தயாரிப்பில் இருந்து வந்த இப்படம் ஒருவழியாக வரும் 22ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளும் தடபுடலாக நடந்து வருகின்றன. இந்நிலையில் படத்திற்கு புதிய வடிவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

படம் இயக்கித் தருவதாகக்கூறி இயக்குனர் செல்வராகவன் அட்வான்ஸ் வாங்கிவிட்டு ஏமாற்றியதாக பாலிவுட் இயக்குனரும் தயாரிப்பாளருமான ராஜ்குமார் சந்தோஷி உட்பட சிலர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கூறியுள்ளனர். மேலும் இந்தப் பணத்தை திருப்பித் தராவிட்டால் செல்வராகவன் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் ‘இரண்டாம் உலகம்’ திரைப்படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. பல கோடி ரூபாய் செலவு செய்து ஒரு படத்தை எடுத்தாலும் கூட அதை நினைத்த நேரத்தில் எந்தவிதப் பிரச்சனையும் இன்றி ரிலீஸ் செய்வது என்பது, கோலிவுட்டைப் பொறுத்தவரை இப்போதைக்கு குதிரைக் கொம்பாகத்தான் உள்ளது. எப்போ, எந்த உருவத்தில், என்ன பிரச்னை, வரும் என்று யாராலும் சொல்ல முடியாது.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top