![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgs1L69gR8vVL28t_YRxk51dfLNzrozxJZmD1SWr9WNxv-LRae8NfAjYiZljFp-1Q6lLdlH6W_Cv53vFFMTy_gUiWmcb7xxUvwKs6XgHvZ0umZA-9F67Ub9geqazbJHcZOEm-RrQT8sHiw/s400/39979016671651344392513.jpg)
தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும் சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும் நாம் நன்கறிகிறோம்.
இங்குதான் உலகின் முதல் மனிதன்
பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம் மூதாதையர்
வாழ்ந்தனர். இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தாய்த் தமிழ் பிறந்தது.
இங்குதான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. ஆம், இதுதான் ” நாவலன்
தீவு ” என்று அழைக்கப்பட்ட “குமரிப் பெருங்கண்டம்”.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXH7rffLxTeCXdUDLCPvEFdPii9ST4HNLc1hnYNO9-l3JyWudBSdtpm38_dk49pEnzpJi-azNQEToufzGiAbL4OT4ngiUhet9SMPIjLIh5Z5crT0hpsXwiL23zL5FbE2P8tOB0nyK88FE/s400/524964_304885752919205_891376480_n.jpg)
குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும் பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ்,
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixHJdFo-Rl8qVWNyKWrYVVEK1IdkGtWJIV4f5pDrA0k7-k-lEdGC62NF2dhBHH6vzSa2hmC1iD3cqOzO8YojgqiH32L2357Le4B9AwQrSLBjG0cMji4RXaHOqljAyjiZv9pwSXK3-Wt4E/s400/548058_444238152259561_100000201410498_1884176_1666333652_n.jpg)
இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு
பனை நாடு, ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு,
ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இந்நிலப்பரப்பில்
நாற்பத்தொன்பது நாடுகள் இருந்துள்ளன! பறுளி, குமரி என்ற இரண்டு மாபெரும் ஆறுகள்
ஓடியுள்ளன. அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட நாகரிகம்தான்
திராவிடநாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது.
இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை
மார்க்கமாகவும்உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப்
பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை.
இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும் கல்வெட்டுக்களும் உதவுகின்றன.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYVvaqa3nBw1cP4pwwOUil8c_B3GSanorSYSQUkq2WMnDPJQyek41bHQGPYk7_XoE3dX7IZKObMpZpw1l0OPlHyqGXky2qpEN2srE83Zj0pPNO5M___DyC5dpS10tbtPV9GTgaEVOG1EA/s400/405606_269196879818534_167444839993739_668083_1717778361_n.jpg)
குமரிக்கொடு,
மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளன! தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என
பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன. உலகின் தொன்மையான நாகரீகம் என்று
அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது
தான்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjE3r4VmSHv9wgPyik3bgTH_VQu1oE9w4ZHDrMJezyztMVb8e8S7S2wSMRR79KeA8po9-kkn822lGT9c5XdOS980-sJbet56R7db8TPQFjIQFVjIacyB3VyAc6UmMISrPAlLtvfbDaRmnE/s400/409357_300511656662697_100001115949574_785550_1611301126_n.jpg)
நக்கீரர் “இறையனார் அகப்பொருள்” என்ற நூலில்
மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார்.
தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள “தென்மதுரையில்” கி.மு 4440இல் 4449
புலவர்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து
நடத்தப்பட்டது. இதில், “பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்”
ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர். இதில் அனைத்துமே கடற்கோளில் அழிந்துவிட்டன. இரண்டாம்
தமிழ்ச் சங்கம் “கபாடபுரம்” நகரத்தில் கி.மு 3700இல் 3700 புலவர்களுடன்
நடத்தப்பட்டது.
இதில், “அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. இதில் “தொல்காப்பியம்” மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய “மதுரையில்” கி.மு 1850 இல் 449 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், “அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள்” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.
வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை, நாமே இந்த உலகிற்குப் பரப்புவோம். இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருடத்திற்கும் பழமைவாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம். வரலாற்றுத் தேடல் தொடரும்!
0 comments: