![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-v9VK_uala16XCvVdyH2m61sJHpodubFYQCqbeGuWuqNo1e2xZzpgRy_Nwp7_45dq8Sd7Uvbe4_BFjTmS9Efnc8K0DrsdZc8SQ6F47RcN8SQCFZVGGcUaVVIVoJfpFQPtUVAbEo9M2QIW/s320/balls+2.bmp)
ஒரு நாள் சில சிறுவர்கள் பந்து விளையாடிக் கொண்டிருந்தனர்.அச்சமயத்தில் ஒரு சிறுவன் உதைத்த பந்து அருகில் இருந்த மரத்தின் பொந்திற்குள் விழுந்தது.
பந்துக்கு சொந்தக்காரச் சிறுவன் அழ ஆரம்பித்தான்.
அந்தப் பந்தை பொந்திலிருந்து எப்படி எடுப்பது என்று யாருக்கும் தெரியவில்லை.
அப்பொழுது ஒரு புத்திசாலிச் சிறுவன் அருகிலிருந்த வீட்டிலிருந்து ஒரு வாளியில் தண்ணீரை எடுத்து வந்து பொந்திற்குள் கொட்ட பந்து எழும்பி தண்ணீரின் மேல் வந்தது. அந்த பந்தை எடுத்து உரிய சிறுவனிடம் ஒப்படைத்தான்.
எந்த ஒரு காரியத்திற்கும் சற்று சிந்தித்தால் அந்த சிக்கலில் இருந்து விடுபடலாம்.
0 comments: