.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday 14 September 2013

3 நாளில் உச்சக்கட்ட காட்சி - அஜீத் நடித்த ‘ஆரம்பம்’ தீபாவளி விருந்தாக வருகிறது!



 


அஜீத்–நயன்தாரா, ஆர்யா–டாப்சி நடித்த ‘ஆரம்பம்’ படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வர இருக்கிறது என்று பட அதிபர் ஏ.எம்.ரத்னம் கூறினார்.


‘ஆரம்பம்’

ஏ.எம்.ரத்னம் மேற்பார்வையில், ரகுராம் தயாரித்துள்ள படம், ‘ஆரம்பம்.’ இந்த படத்தில் அஜீத்–நயன்தாரா ஒரு ஜோடியாகவும், ஆர்யா–டாப்சி இன்னொரு ஜோடியாகவும் நடித்து இருக்கிறார்கள். பல கோடி ரூபாய் செலவில் தயாராகியுள்ள இந்த படத்தை விஷ்ணுவர்தன் டைரக்டு செய்து இருக்கிறார்.
படத்தின் உச்சக்கட்ட காட்சி துபாயில் படமாக்கப்பட்டு இருக்கிறது. இதுபற்றி பட அதிபர் ஏ.எம்.ரத்னம் கூறியதாவது:–


3 நாளில் உச்சக்கட்ட காட்சி


‘‘வில்லன் கும்பலை அஜீத் ஒரு படகில் துரத்தி செல்வது போன்ற காட்சியை நடுக்கடலில் படமாக்கினோம். இதற்காக அஜீத்துக்கு படகோட்டும் பயிற்சி அளிப்பதற்காக, அமெரிக்காவில் இருந்து 2 பயிற்சியாளர்களை வரவழைத்தோம்.


அஜீத் மற்றும் ஸ்டண்ட் நடிகர்களுடன் பயிற்சியாளர்கள் நடுக்கடலுக்குள் சென்றார்கள். அடுத்த 20 நிமிடங்களில் பயிற்சியாளர்கள் மட்டும் திரும்பி வந்து விட்டார்கள். ‘‘அஜீத் ஏற்கனவே பயிற்சி பெற்றவர் போல் மிக நன்றாக படகு ஓட்டுகிறார். எங்கள் உதவி தேவையில்லை’’ என்று கூறினார்கள்.
இதனால், 6 நாட்கள் எடுக்க வேண்டிய உச்சக்கட்ட காட்சியை மூன்றே நாட்களில் முடித்துவிட்டு திரும்பி விட்டோம்.’’
இவ்வாறு ஏ.எம்.ரத்னம் கூறினார்.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top