.......................................................................... ....................................................................... ......................................................................

Monday 30 December 2013

ஒரு நாளைக்குப் பிச்சை எடுக்கும் தொகை ரூ 10,000/-...!




இங்கல்ல, பிரிட்டனில்  நாட்டிங்ஹாம் நகரில் பிச்சையெடுப்பவர்களுக்கு ஒரு வாரத்துக்கு 700 பிரிட்டிஷ் பவுண்டு ஸ்டெர்லிங் கிடைக்கிறதாம். அது 70,550 ரூபாய்க்குச் சமம். ஒரு நாளைக்கு சுமார் 10 ஆயிரம் ரூபாய் என்றால் ஆண்டுக்கு 36 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்.

அதிக சம்பளம் கிடைப்பதாகச் சொல்லப்பட்டு பலரின் வயிற்றெரிச்சலுக்கு உள்ளாகிக் கிடக்கும் நமது ஐடி துறையினருக்குக் கூட இந்த அளவுக்குச் சம்பளம் இல்லை!

பிச்சையெடுக்கிறார்களே… பாவம்… தெருவோரத்தில் குடியிருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா? தவறு. அங்கே வீடில்லாத பிச்சைக்காரர்கள் மிகக் குறைவு.

அவர்கள் தங்குவது உயர்தர ஹோட்டல்களில். பறப்பது டாக்ஸியில்.

“பிச்சையெடுக்கிறார்களே… பாவம்’ என்று யாராவது இரக்கப்பட்டு உணவு வாங்கிக் கொடுத்தால், நம்நாட்டைப் போல அங்குமிங்கும் பார்த்துக் கொண்டு அரக்கப் பரக்க அவர்கள் சாப்பிடுவதில்லை. தூக்கியெறிந்துவிடுகிறார்கள். அதுபோல எந்த குளிர்பானங்களை யார் வாங்கிக் கொடுத்தாலும் குடிப்பதில்லை. பணம் கொடுத்தால் மட்டுமே வாங்கிக் கொள்கிறார்கள்.

பிரிட்டனில் “பிக் இஸ்யூ’ என்ற இதழ் ஒன்று உள்ளது.

“”நீங்கள் ஏன் பிச்சையெடுக்க வேண்டும்? எங்களுடைய இதழை விற்று நீங்கள் சம்பாதிக்கலாமே?” என்று ஒரு பிச்சைக்காரரிடம் கேட்டதற்கு, “”அதெல்லாம் எனக்குக் கட்டுப்படியாகாது. நான் பிச்சையெடுத்தால் எனக்கு ஒரு மணி நேரத்துக்கு 20 பவுண்ட் ஸ்டெர்லிங் (ரூ.2000) கிடைக்கும். உங்கள் பத்திரிகையை விற்றால் கிடைக்குமா?” என்று திருப்பிக் கேட்டாராம்.

இப்படிப்பட்ட பிச்சைக்காரர்களுக்கு மக்கள் இரக்கப்பட்டு பணம் கொடுக்க வேண்டாம் என்ற குரல் அங்கே எழும்பியிருக்கிறது.

“பிக் இஸ்யூ’  பவுண்டேஷனும், சில தன்னார்வ அமைப்புகளும், காவல்துறையும் சேர்ந்து இந்தப் பணக்காரப் பிச்சைக்காரர்களுக்கு எதிராகக் களம் இறங்கியிருக்கிறார்கள்!

“”உண்மையிலேயே உதவி தேவைப்படுகிறவர்கள் இருக்கிறார்கள். வீடற்றவர்கள் இருக்கிறார்கள். ஆனால் இம்மாதிரியான பணக்காரப் பிச்சைக்காரர்களால் உண்மையிலேயே உதவி தேவைப்படுகிறவர்களுக்கு உதவி கிடைக்காமற் போகிறது” என்கிறார்கள்.

“”பிறருக்கு உதவ வேண்டும் என்ற இரக்க குணம் உங்களுக்கு இருக்கிறதா? உண்மையிலே தொண்டுள்ளத்துடன் செயல்படும் எவ்வளவோ தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன. அவற்றுக்கு உதவுங்கள்” என்கிறார்கள்.

“”பிச்சைக்காரர்களுக்குப் பணம் தருவதன் மூலம் அவர்களுக்கு உதவுவதாக பலர் நினைக்கிறார்கள். ஆனால்  உழைத்து நல்ல மனிதனாக வாழ வேண்டிய ஒருவரை தங்களுடைய இரக்க குணத்தால் கொன்றுவிடுகிறார்கள். சோம்பேறிகளும், தீயவர்களும் உருவாகக் காரணமாகிவிடுகிறார்கள்” என்று பிச்சையிடுபவர்களைச் சாடுகிறார்கள்.

பணக்காரப் பிச்சைக்காரர்களுக்கு எதிராகக் கிளம்பியிருக்கும் இவர்கள், உண்மையிலேயே  தெருவோரத்தில்  வாழ்பவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.

ஆண்கள் பெண்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் ...?




அலுவலகம் செல்லும் ஆண்கள் பெண்களிடம் எப்படி நடந்துகொள்ள
வேண்டும் ...


1. ஆண்கள் போட்ற ட்ரெஸ், பக்கத்துல இருக்குற பெண்களின் கண்ண உறுத்தும்,


2. ஆண்களோட வேல பாக்குற பெண்களிடம் பெர்சனலா பேசாதீங்க


3. கூட வேல பாக்குற பெண்களிடம் ஐடியா கேட்காதீங்க


4. கூட வேல பாக்குற பெண்களிடம் செல் நம்பர் கொடுக்காதீங்க, செல் நம்பர்
வாங்காதீங்க


5. கூட வேல பாக்குற பெண்களிடம் கை கொடுத்து பேசாதீங்க


6. ஒங்க கிட்ட காசு இல்லன்னு கூட வேல பாக்குற பெண்களிடம் சொல்லாதீங்க


7. பெண்கள் காம்ப்ளிமென்ட்ஸ் கொடுக்குற அளவுக்கு ட்ரெஸ் பண்ணாதீங்க


8. ஆபீஸ் நேரத்துல ஆபீஸ் வேலைய பாருங்க, பெண்கள் வந்து பேச்சு
கொடுக்குறாங்கன்னு அவுங்ககிட்டல்லாம் பேசாதீங்க


9. ப்ரெண்ட்லியா கூட பெண்களைப்பார்த்து ஸ்மைல் பண்ணாதீங்க


10. பெண்கள் டீ குடிக்க கூப்டுவாங்க, போகாதீங்க


11. பெண்கள் லிப்ட் கேட்டா கூட்டிகிட்டு போகாதீங்க, அப்பறம் பக்கத்துல
இருக்குறவங்கல்லாம் ஒங்கள தப்பா நெனச்சிப்பாங்க


12. பெண்கள் கிட்ட எப்போதும் குசுகுசுன்னு பேசாதீங்க, எப்போதும் கைல ஒரு
சின்ன ஸ்பீக்கர் வச்சிக்கோங்க


13. குட் லக்


14. சாப்டான பாட்டா, போஸ்டானியன், ஆல்டோ ஷூவெல்லாம் போட்டுகிட்டு ஆபீஸ் போகாதீங்க, பெண்களுக்கு பிடிச்சிடும்


15. பெண்கள் ஒங்க ட்ரெஸ் பாத்து, இந்த ட்ரெஸ் நல்லா இருக்கு அப்படின்னா,
இனிமேல அந்த ட்ரெஸ் போடாதீங்க


16. வீட்ல நடக்குற கல்யாணம், காதுகுத்தி இதுக்கெல்லாம் பெண்களை கூப்டாதீங்க


17.கல்யாணம் ஆன ஆண்கள் ஒங்க மனைவியைப்பற்றி நல்ல விதமாக பேசுங்க (பேசுவீங்க, எனக்கு தெரியும்!), மற்ற பெண்கள் ஒங்ககிட்ட நெறுங்கவே மாட்டாங்க


18.ஆபீஸ்ல இருந்து அவுட்டிங் போம்போது, டூர் போம்போது, ஏன் லன்ஞ் சாப்ட
போம்போது, ஒங்க பைக், கார் இதுல எல்லாம் பெண்களை ஏத்திட்டு போகாதீங்க


19. ஆபீஸுக்கு போம்போது, தலை வாரிட்டு போக கூடாது, ஷேவ் பண்ணிட்டு போக கூடாது ...

மன்னிப்பு கேட்பது கருமத்தைக் கரைக்கும்!



கோபப்பட்டவரிடமே மன்னிப்பு கேட்பது கருமத்தைக் கரைக்கும்!


               பரம எதிரியின் வாயாலும் பாராட்டு பெற வேண்டும். அதுதான் நாம் மாறியதற்கான அடையாளம்.

துரோகியையும் அன்னை யாகக் காண்பதுதான் ஆத்ம ஞானமாகும்.

நமது ஆழ்மனதில் மறைந்துள்ள ஆன்மாவை வெளிக்கொண்டு வரவே நமக்கு துரோகம் செய்கிறார் கள். இதைப் புரிந்து கொள்வது பூரண ஞானம்.

எதிரி நம் வாழ்வைச் சிறப்பாக்கும் சிற்பி என்று உணர்ந்தால், அவர் நமக்கு எதிரியில்லை; ஆன்மிகத் தோழன்.

தன்னுடைய குறைகளை மட்டும் திருத்திக் கொள்பவருக்கு யாராலும் தொந்தரவு வராது. லட்சியத்தோடு வாழ்பவர்கள் இறைவனை சுலபமாக நெருங்கிவிட முடியும். சராசரி மனிதனாக இருக்கும் வரைதான் பிரச்சினை வரும். சமூகப் பழக்கங்களை விட்டு விலகி இறைப்பண்புகளை ஏற்றுக் கொண்டால் இன்பம் மட்டுமே உண்டு.

இழந்தது எவ்வளவு பெரியதானாலும்- எவ்வளவு நாள் கடந்ததானாலும் பிரார்த்தனை அதனைப் பெற்றுத் தரும்.

வீட்டில் சுத்தம் இருந்தால்- நல்ல பழக்கங்கள் இருந்தால் தீய சக்திகள் வரவே முடியாது.

எவரின் மனம் அவருக்கு அடங்குகிறதோ அவர் தெய்வத்தைவிட உயர்ந்தவர்.

நாள்தோறும் தண்ணீர், மின்சாரம், நேரம் விரயமாவதைத் தவிர்க்க வேண்டும். அருள் விரயமாவதன் ரகசியம் இதுவே. பேசும்போது 100 வார்த்தைகளில் 90 வார்த்தைகளைத் தவிர்க்கலாம். அளவோடும் கனிவாகவும் பேசினால் முன்னேற்றத் திற்கு வேண்டிய சக்தியைச் சேமித்து உயரலாம்.

குறைந்த பட்ச கடனாக இருந்தாலும் மறக்காமல் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். இல்லையேல் வரவேண்டிய பணம் வராது. எதிர்பார்த்த வாய்ப்புகளும் தடைப்படும்.

தேவையற்ற பொருட்களை வீட்டிலோ அலுவலகத்திலோ முடக்கி வைக்கக் கூடாது. இது வாழ்வின் வளர்ச்சியைத் தடுத்துவிடும். கடும் நோய்களுக்கும் கடன் தொல்லைகளுக்கும் இதுவே காரணம். அடுத்தவர் கண்ணோட்டத் தையும் சரி என ஏற்கும் மனப்பான்மை வரவேண்டும். மனம் உயர இதுவே சிறந்த வழி.

குறித்த நேரத்தில் செயல்படும் பழக்கம் உள்ளவராக இருக்க வேண்டும். முறையாகத் திட்டமிட்டு, எந்தச் செயலையும் இறைவனுக்குச் சமர்ப்பணம் செய்துவிட்டுச் செய்யும் பழக்கம் வெற்றியை மட்டும் கொடுக்கும்.

பொறுத்துக்கொள்ள முடியாத இடத்தில் எல்லாம் பூரண மௌனத்தைக் கடைப்பிடித்து வெற்றி காண வேண்டும். வேண்டிய வரம் உடனே பெற இது சிறந்த முறை.

உங்கள் குரலைத் தாழ்த்தி, எதிரில் உள்ளவருக்கு மட்டும் கேட்கும் அளவுக்குப் பேசுவது உயர்ந்த குணம். தற்செயலாகக் காதில் விழுவதும், கண் முன்னால் நடப்பதும் தற்செயலானவை அல்ல. அது நம் வாழ்வில் நடக்கப் போகும் அறிகுறிகளாகும். நாம் விழிப்பாக இருந்தால் அவை நற்பலன்களாக முடியும்.

தினமும் தன்னைத்தானே சுய விமர்சனம் செய்து மனதைத் தூய்மைப்படுத்த வேண்டும். அதற்குத் தியானம் உதவியாக இருக்கும். வளர்ச்சி வேண்டு மெனில் பேசும் பேச்சுக்களின் தரத்தை நாளுக்கு நாள் உயர்த்த வேண்டும். நமது நடவடிக்கைகள் யாவும் மற்றவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்க வேண்டும்.

தவறு என்று தெரிந்ததும் அதைச் செய்ய மறுப்பவருக்கு வருமானத் தட்டுப்பாடு வராது. அதிர்ஷ்டம் வேண்டும் என்ற ஆர்வம் தீவிரமானால் அதிர்ஷ்டம் அரை நிமிடம்கூட காத்திருக்காது.

யார்மீது கோபம் வந்தாலும் உடனே மன்னிப்பு கேட்டுவிடுங்கள். கோபப்பட்டவரிடமே மன்னிப்பு கேட்டுவிடுவது கருமத்தைக் கரைக்க உதவும்.

AUTORUN.INF வைரசை அகற்ற எளிய வழி!





AUTORUN.INF வைரசை அகற்ற எளிய வழி!



கணினியை பயன்படுத்துவோர் பலருக்கும் AUTORUN வைரசை பற்றி கண்டிப்பாக தெரிந்திருக்கும். இது பெரும்பாலும் FLASHDRIVE கள் மூலமாக பரவக்கூடியது. இது பல்வேறு வைரஸ் தாக்குதல் நமது கணினியில் நிகழ அடிப்படையானது. இதை சாதாரண முறையில் நமது கணினியில் இருந்து அழிக்க முயன்றால் முடியாது.இதை நீக்க சில PROGRAM களும் உள்ளன. இருந்தாலும் SOFTWARE எதுவும் இல்லாமல் இதை கணினியில் இருந்து நீக்கலாம்.

முதலில் உங்கள் கணினியில் NOTEPAD ஐ திறந்து கொள்ளுங்கள். அதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த CODE ஐ அப்படியே TYPE செய்து NOTEPAD ல் PASTE செய்யுங்கள். (c,d,e,f,g,h,i,k mentioned are Driver Letters. If you have more than k: you can add it)

 cd\
 c:
 attrib -r -s -h autorun.inf
 del autorun.inf
 d:
 attrib -r -s -h autorun.inf
 del autorun.inf
 e:
 attrib -r -s -h autorun.inf
 del autorun.inf
 f:
 attrib -r -s -h autorun.inf
 del autorun.inf
 g:
 attrib -r -s -h autorun.inf
 del autorun.inf
 h:
 attrib -r -s -h autorun.inf
 del autorun.inf
 i:
 attrib -r -s -h autorun.inf
 del autorun.inf
 j:
 attrib -r -s -h autorun.inf
 del autorun.inf
 k:
 attrib -r -s -h autorun.inf
 del autorun.inf


இந்த DOCUMENT ஐ ஏதாவது ஒரு பெயரில் .bat என்று முடியும் வகையில் சேமியுங்கள் .(உதாரணம் filename.bat) இப்போது நீங்கள் சேமித்த அந்த கோப்பை RUN செய்யுங்கள். இப்போது உங்கள் கணினியில் இருந்து autorun.inf வைரஸ் நீக்கப்பட்டிருக்கும்.

ஐம்பது வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான சில ஊட்டச்சத்து குறிப்புகள்..!



வைட்டமின் பி12 அடங்கிய உணவுகள் வைட்டமின் பி12 அடங்கிய உணவுகள், இரத்த அணுக்களின் ஆரோக்கியத்திற்கும், நரம்புகளின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியமானது. மேலும் டி.என்.ஏ உருவாக்கத்திற்கும் இது மிகவும் அவசியமானதாக விளங்குகிறது. நமது உணவில் உள்ள புரதத்தை எல்லைக்குள் வைத்து கொள்ளவும், செரிமானத்தின் போது புரதத்தை பெப்சினாக வெளியேற்றவும் பி12 உதவுகிறது. வயதான பிறகு நமது வயிற்றில் உள்ள அமிலம் குறைந்து விடும். இதனால் ஊட்டச்சத்துகளை உட்கொள்ளும் தன்மை குறைந்து விடும். அதில் பி12-ம் அடங்கும். இதனால் ஆரம்பகட்டத்திலிருந்தே பி12 அதிகம் அடங்கியுள்ள மீன், இறைச்சி போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் சைவமாக இருந்தால், இவற்றிற்கு நிகரான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.


கால்சியம் மற்றும் வைட்டமின் டி நம் உடலில் காஸ்ட்ரிக் அமிலம் மற்றும் ஹார்மோன் மாற்றங்களால், வைட்டமின் டி மற்றும் கால்சியம் உட்கிரகிக்கும் அளவு போன்றவை முப்பது வயதிற்கு முன்பிருந்ததை விட, நாற்பது வயதில் சரிவர இருப்பதில்லை. அதனால் 30 வயதிற்குள்ளயே கால்ஷியம் அடங்கிய உணவுகளை போதிய அளவில் உட்கொள்ளுங்கள். அப்படி இல்லையென்றாலும் கூட காலம் தாழ்த்திவிடாமல் கீரை வகைகள், பச்சைப் பூக்கோசு, அக்ரூட், சூடை மீன், நகர மீன், பரட்டை கீரை மற்றும் கொழுப்பு குறைந்த அல்லது கொழுப்பு இல்லாத பால் போன்ற கால்சியம் அதிகமுள்ள உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


மீன் வகைகள் நமது உணவில் மீன் வகைகளை நன்றாக சேர்க்க வேண்டும். மீனில் உள்ள ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலம் நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். இந்த அமிலம் நமது உடலில் சுரப்பதில்லை. நகர, கிழங்கான், சூடை போன்ற கடல் மீன்கள் மற்றும் கடல் உணவுகளான நீர்ப்பாசி, இறால் போன்றவற்றை உணவில் அதிக அளவில் சேர்த்து கொள்ள வேண்டும்.



பழங்கள் பழங்களில் உள்ள அதிகளவிலான சத்துக்கள் உடலுக்கு தேவையான அனைத்தையும் தருவதால் அவைகளை உணவில் அதிகளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு காலநிலையிலும் பல பழங்கள் எளிதில் நமக்கு கிடைக்கின்றன. பழங்கள் எளிய செரிமானத்திற்கு வழிவகுக்கிறது. ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பழங்கள் மிகவும் அவசியம். அவர்கள் இனிப்பு அதிகம் சேர்க்க கூடாது. ஆனால் பழங்களில் உள்ள இனிப்பு அவர்களின் சர்க்கரை அளவை பாதிப்பதில்லை.


பழச்சாறுகள் ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் மிக அவசியம். அவர்களால் கடின உணவை எடுத்துக்கொள்ள முடியாது. அதற்கு பதிலாக பழச்சாறுகளை எடுத்து கொள்ளவது மிகவும் நல்லது. நமது உடலில் உணவுகளின் எளிதான செரிமானத்திற்கும், சிறந்த நீறேற்றியாகவும் பழச்சாறு பயன்படுகிறது. மேலும் நமது உடலால் எளிதாக உட்கிரகிக்கப்படுகிறது பழச்சாறு.


முழு தானிய வகைகள் முழு தானிய உணவுகளான கோதுமையால் செய்யப்பட்ட உணவுகள் மற்றும் கைகுத்தல் அரிசி போன்றவை நமது உடலில் பசியை தூண்டி, சர்க்கரை அளவில் நிலைப்பாட்டை ஏற்படுத்துகிறது. நாம் அனைவரும் பாலிஷ் செய்யப்பட்ட தானியங்களை விடுத்து, முழு தானிய வகைகளை உட்கொள்ள ஆரம்பிக்க வேண்டும். இவை உங்கள் பசியை சீராகி சர்க்கரையை மெதுவாக உங்கள் உடலில் சேர்க்கும். இதனால் அளவுக்கு அதிகமாக உண்ணுவதை கட்டுப்படுத்தி, சர்க்கரை அளவில் அபரிமிதமான மாற்றத்தை ஏற்படுத்தும்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top