.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday 28 December 2013

ரக்க்ஷா பந்தன் எனும் சகோதர திருநாள் !




ரக்ஷாபந்தன் எனும் சகோதர திருநாள் நம் இந்திய திருநாட்டில் கொண்டாடி வருவது அனைவரும் அறிந்த ஒன்றே. அதன் அடிப்படையான வரலாற்று செய்தியை நாம் இங்கு காண்போம். நம்  வீடுகளில் சகோதர, சகோதரிகள் இணைந்து பிறக்கிறார்கள். ஆனால், சிலருக்கோ சகோதரரோ, சகோதரியோ இருப்பதில்லை. இது அவர்கள் மனதில் ஒரு ஆதங்கமாகவே இருக்கும். இப்படி ஒரு நிலைமை, விநாயகரின் மகன்களுக்கே இருந்ததாம்.


தமிழகத்தில் நாம் விநாயகரை பிரம்மச்சாரியாகவே காண்கிறோம். வட மாநிலங்களில் சித்தி, புத்தி என்ற தேவியர் அவருக்கு உண்டு. இவர்களுக்கு சுபம், லாபம் என்ற ஆண் குழந்தைகள் பிறந்தனர். ஒருமுறை, இவர்கள் தங்கள் சகோதரர்களின் கையில் ரக்ஷா என்னும் கயிறு கட்டும் சகோதரிகளைக் கண்டனர்.


தங்களுக்கும் சகோதரி வேண்டுமென தந்தையிடம் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையும் நிறைவேறியது. சந்தோஷப்பட்ட சுபமும் லாபமும், தங்கள் தங்கைக்கு "சந்தோஷி' என்று பெயர் சூட்டினர். சந்தோஷிமாதா வழிபாடு வடமாநிலங்களில் பிரசித்தம். இவர்களைக் குடும்பமாக தரிசிக்க வேண்டுமானால், அகமதாபாத்திலுள்ள அம்பாஜி மாதா கோயிலுக்குச் செல்ல வேண்டும். அங்கே தனி சந்நிதியே இருக்கிறது.


இந்த நிகழ்வின் அடிப்படையில், பெண்கள் யாரை சகோதரர்களாக ஏற்கிறார்களோ, அவர்களுக்கு "ராக்கி' என்னும் கயிறு கட்டுவார்கள். "ரக்ஷ' என்றால் "பாதுகாப்பு தரும் கயிறு'. இதை அணிவிக்கும் தினமே ரக்ஷாபந்தன். ஆவணி பவுர்ணமியன்று இது கொண்டாடப்படுவது வழக்கம். இன்றும், நாளையும் பவுர்ணமி திதி இருப்பதால், இரண்டு நாட்கள் சகோதரர்களுக்கு கயிறு கட்டலாம். சொந்த சகோதரர்கள் உள்ளவர்களும், அவர்களின் நலன் கருதி இந்தக் கயிறை அணிவிக்கலாம்.


ரக்ஷா கயிறு கட்டுவதன் மூலம், ஒரு ஆண், குறிப்பிட்ட பெண்ணின் பாதுகாப்பு, எதிர்கால வாழ்வுக்கு துணையாக இருப்பதாக உறுதியளிக்கிறார்.மகாபலி சக்கரவர்த்தியை ஆட்கொள்ள வந்த விஷ்ணு, பூலோகம் வந்த போது, அவரைப் பிரிய விரும்பாத லட்சுமியும் பூலோகம் வந்தாள். சாதாரண பெண்ணாக வேடம் தரித்த அவள், ஆவணி பவுர்ணமியன்று மகாபலியின் அரண்மனைக்கு வந்து சேர்ந்தாள். மகாபலியைத் தன் சகோதரனாக எண்ணி ரக்ஷா கயிறு கட்டினாள். இதனாலும், இந்த விழா நடப்பதாகச் சொல்வதுண்டு.


கி.பி.1303ல் ராஜஸ்தானில் உள்ள சித்தூர்கரை அந்நியப்படைகள் தாக்கும் போது, ராணி பத்மினி அண்டை நாட்டு மன்னர்களுக்கு ராக்கி அனுப்பியதாக வரலாறு கூறுகிறது. அந்த மன்னர்களும் சகோதர உணர்வுடன் ராணியைக் காக்க தங்களின் படையை அனுப்பி உதவி செய்தனர். சகோதரத்துவத்தை பேணும் இந்த திருவிழாவை நாமும் கொண்டாடி மகிழ்வோம்.

கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்..



கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்..


1.எண்ணங்கள் வெவ்வேறாக இருந்தாலும் , ஒருவர் எண்ணத்திற்கு ஒருவர் மதிப்பு தந்து சொல்வதை காதில் வாங்க வேண்டும்.


2.கணவன் மட்டுமே வேலைக்கு செல்லும் வீட்டில் ,தன்னால் தான் குடும்ப பொருளாதாரம் இயங்குகிறது என்பதை எப்போதும் கணவன் வார்த்தைகளில் வெளிப்படுத்தக் கூடாது.


3.மனைவியும் வேலைக்கு செல்லும் வீட்டில், நானும் தான் வேலைக்கு போறேன் என்ற வார்த்தையை மனைவி அடிக்கடி சொல்லக் கூடாது.


4.இவரிடம்/இவளிடம் இதைச் சொன்னால் பெரிய பூகம்பமே வெடிக்குமோ என்ற பயத்தை ஒரு போதும் மனைவிக்கு கணவனும், கணவனுக்கு மனைவியும் தரக்கூடாது.பொய்யின் ஆரம்பமே பயம் தான்.


5.எவ்வளவு பெரிய சண்டை என்றாலும் உங்கள் இருவர் பற்றி மட்டும் தான் பேச வேண்டும்.கணவன் குடும்பத்தாரை பற்றி மனைவியும், மனைவியின் குடும்பத்தாரை பற்றி கணவனும் பேசவே கூடாது.தவறுகளில் மிகப்பெரிய தவறு இது.


6.மனைவியை தன்னில் ஒரு பாதியாக பார்க்காவிட்டாலும் வேலைக்காரியாய் பார்க்காமல் இருப்பது கணவனுக்கு அழகு.


7.மனைவியை ஏற்றது போல் அவள் குடும்பத்தையும் முழுமனதாய் கணவன் ஏற்க வேண்டும்.கணவனை ஏற்றது போல் அவன் குடும்பத்தையும் முழுமனதாய் மனைவி ஏற்க வேண்டும்.( இப்படி வாழ்ந்தால் முதியோர் இல்லங்கள் நிச்சயம் குறையும்)


8.கணவன் நண்பர்களுடன் ஊர் சுற்றி விட்டு நேரம் கழித்து வீடு வருவது. மனைவியை மட்டும் வீட்டுக்குள்ளே ஆயுள் கைதி ஆக்குவது, அவளை வெளியுலகம் அறியவிடாமல் செய்வது தவறு. படிப்பறிவில்லா பெண்களை சில ஆண்கள் இப்படித்தான் நடத்துகின்றனர்.


9.கணவனும் மனைவியும் தனித் தனியே வெளியில் சென்றால் நேரமாய் வீடு திரும்ப வேண்டும் .அப்படி நியாயமான காரணத்திற்காக தாமதம் ஏற்பட்டால் ஒருவர் சொல்லும் காரணத்தை ஒருவர் நம்பி ஏற்றக் கொள்ளவேண்டும்.


10.அம்மாவின் சமையல் பக்குவத்தை எதிர்பார்த்து மனைவியின் சமையலை சாப்பிட்டு, ஏமாற்றம் என்றதும் அவளை திட்டக் கூடாது. அப்படி திட்டுவேன் தான் என்றால் அதற்கு முன் ஒன்றை யோசியுங்கள். திருமணம் ஆன புதிதில் உங்க அம்மாவும் இப்படித் தான் உங்க அப்பாவிடம் திட்டு வாங்கி இருப்பார்கள் சமையலுக்காக.பக்குவம் பார்த்ததும் வந்து விடக்கூடியதல்ல.பல வருட அனுபவத்தில் வருவது.


நரகமாய் இருக்கும் வீடு சொர்க்கம் ஆவதும், சொர்க்கமாய் இருந்த வீடு நரகம் ஆவதும் கணவன் மனைவி நடந்து கொள்ளும் விதத்தில் தான் இருக்கிறது.

அதிகம் கோபம் கொள்ளும் ஆசிரியரை கையாளுவது?



அதிகம் கோபம் கொள்ளும் ஆசிரியரை கையாளுவது எப்படி?


ஒரு மாணவராக உங்களுக்கு அதிகமாக வீட்டுப்பாடம் கொடுக்கும் அனைத்து ஆசிரியர்களுமே கொடுமை படுத்தும் ஆசிரியர்களின் வகையறாக்களின் கீழ் வந்து விடுகின்றனர். ஆனால் அது உண்மை இல்லை. உண்மையிலே கொடுமை படுத்தும் கஷ்டமான வகை ஆசிரியர்களை பற்றி இங்கே பார்க்க போகிறோம். பாடம் கற்பிக்கும் துறையை மிகவும் விரும்பினாலும் கூட சில ஆசிரியர்களால் மாணவர்களை பொறுமையாக கையாள தெரியாது. அவர்களே சகித்து கொள்ள முடியாத ஆசிரியர்கள் பட்டியலில் அடங்குவார்கள்.


அப்படிப்பட்டவர்கள் மாணவர்களுடன் தெளிவான மனநிலையில் நடந்து கொள்ள மாட்டார்கள். நீங்கள் டீனேஜ் பருவத்தில் உள்ளவர்கள் என்பதால் உண்மையான சூழ்நிலையை உணர்ந்து கொள்ள ஒரு முறைக்கு இரண்டு முறை உங்கள் எண்ணங்களை அலசுங்கள். சில நேரம் ஏதாவது ஒரு காரணத்திற்காக உங்களுக்கு ஒரு ஆசிரியரை பிடிக்காமல் போகலாம். ஆனால் அவைகளையெல்லாம் ஓரமாக வைத்து விட்டு ஒரு ஆசிரியர் உண்மையிலேயே கஷ்டப்படுத்துவரா என்பதை நிலைமையை வைத்து புரிந்துக் கொள்ளுங்கள்.


உங்கள் வகுப்பில் இருக்கும் மற்ற மாணவர்களை கேட்டால், சில ஆசிரியரால் தங்கள் பள்ளி வாழ்க்கையையே திகிலாக உள்ளது என்று கூறுவார்கள். ஒரு மாணவராக அவ்வகை ஆசிரியர்களை சமாளிக்க உங்களுக்கு கஷ்டமாக இருக்கும். கஷ்டமான ஆசிரியர்களை டீனேஜ் மாணவரான நீங்கள் கையாள சில டிப்ஸ் உள்ளது. உங்கள் குறைகளை எல்லாம் உன்னிப்பாக கவனியுங்கள். பின் இவ்வகை கஷ்டமான ஆசிரியர்களை கையாளுவது மிகவும் கஷ்டம் என்று நீங்கள் உணர்ந்தால் கீழ் கூறிய எளிய, ஆனால் சிறந்த டிப்ஸ்களை பின்பற்றுங்கள்.


எரிச்சல் ஊட்டாதீர்கள்


எரிச்சலை உண்டாக்கினால் உங்கள் ஆசிரியர் கோபத்தின் உச்சிக்கே போய் விடுவார் என்று தெரிந்தால் நீங்கள் அமைதியாகவும் பொறுமையாகவும் இருப்பது நல்லது. பொறுமையாக இருப்பது என்பது ஒவ்வொரு டீனேஜ் மாணவர்களும் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான டிப்ஸாகும். உங்கள் ஆசிரியர் நிலைமையை மோசமாக மாற்றும் அளவிற்கு ஒரு சூழ்நிலையை நீங்களாகவே உருவாக்கி விடாதீர்கள்.


குறைபாடற்ற மாணவராக நடந்து கொள்ளுங்கள்:


குறை கூறிக் கொண்டிருக்கும் ஆசிரியரை கையாள வேண்டுமானால், அந்த ஆசிரியர் சம்பந்தப்பட்ட அனைத்திலேயும் நீங்கள் ஒரு குறைபாடற்ற மாணவராக மாறி விடுங்கள். வீட்டுப்பாடங்களை தினமும் செய்து, ஒழுக்கமாகவும் பணிவாகவும் நடந்து கொள்ளுங்கள். பல ஆசிரியர்களுக்கு குறைபாடற்ற ஒழுக்கமான மாணவர்களையே பிடிக்கும். அதனால் இந்த டிப்ஸை பின்பற்றி கஷ்டமான ஆசிரியர்களை சுலபமாக கையாளலாம்.

”உதவி சக்கரம்” ...?




ஒரு நாள் சாயங்கால வேளையில் வயதான பெண்மணி ஒருவர் கார் அருகில் வெகு நேரமாக நிற்பதை ஒருவர் கவணித்தார்.வாகணங்கள் செல்லும்போது அந்த பெண்மணி கை காட்டி நிறுத்தப்பார்த்தார் ,ஆனால் எந்த வாகனமும் நிற்கவில்லை.


அந்த நபர் அருகில் சென்று என்ன பிரச்சனை என்று அந்த பெண்மணியிடம் கேட்டார்.கார் டயர் பஞ்சர் ஆகி விட்டது என்று அந்த பெண்மணி கூறினார்.


என் பெயர் தயாளன் நீங்கள் காரில் உட்காருங்கள் நான் டயர் மாத்தி கொடுக்கிறேன் என்று டயரை கழட்ட ஆரம்பித்தார்.சிறிது நேரத்தில் மிகவும் கஷ்டப்பட்டு டயரை மாத்தினார் .


அந்த பெண்மணி உங்களுக்கு நான் எவ்வளவு பணம் தர வேண்டும் என்று கேட்டார்.நான் சிறியதாக ஒரு டீக்கடை நடத்தி வருகிறேன் ,அதில் இருந்து வரும் பணமே எனக்கு போதும்.நீங்கள் பணம் எதுவும் தரவேண்டாம் என்றார்.


நீங்கள் கஷ்டப்படும் நேரத்தில் என்னாலான உதவி செய்தேன் அவ்வளவே.நீங்கள் பண உதவி செய்ய வேண்டும் என்றால் வேறு யாராவது ஒரு நபர் கஷ்டத்தில் இருக்கும்போது என்னை நினைத்து பாருங்கள், அவர்களுக்கு உதவி செய்யுங்கள் என்றார்.


உதவி செய்வது என்பது ஒரு சக்கரம் மாதிரி சுழன்று கொண்டே இருக்க வேண்டும்.நான் உங்களுக்கு உதவி செய்தேன் நீங்கள் வேறு யாருக்காவது கஷ்டத்தில் இருக்கும்போது உதவி செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு தயாளன் நடக்க ஆரம்பித்தார்.


அந்த பெண்மணி தயாளனை ஆச்சரியத்துடன் பார்த்து விட்டு காரை எடுத்து கொண்டு சென்றார்.வழியில் தலைவலி எடுப்பது போல் இருக்கவே அருகில் உள்ள டீக்கடை அருகே காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார்.


டீக்கடை பார்ப்பதற்க்கு ரொம்பவே பரிதாபமாக இருந்தது,உள்ளே இருந்து ஒரு பெண் வந்து என்ன வேண்டும் அம்மா என்று கேட்டார்.வயதான பெண்மணி டீ கடையில் வேலை செய்யும் பெண்ணை பார்த்தார், அந்த பெண் ஒன்பது மாத கர்ப்பிணி என்பதை அவரிடம் பேசி தெரிந்து கொண்டார்.


குடிக்க டீ கொண்டு வாம்மா என்றார்.தயாளன் சொன்னது அவருக்கு நினைவு வந்தது.அந்த அம்மா டீ குடித்துவிட்டு 5000 ரூபாய் பணத்தை டேபிள் மேல் வைத்து விட்டு சென்று விட்டார்.


டீ கடையில் வேலை செய்த பெண் காபி டம்பளரை கழுவி வைத்து விட்டு வந்தார். டேபிளில் கட்டாக பணம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.அதை எடுத்து கொண்டு அந்த வயதான பெண்மணியிடம் கொடுக்க ஓடினார்,அதற்குள் கார் கிளம்பி சென்று விட்டது.


கடையில் இருக்கும் வேலை எல்லாம் முடித்து விட்டு, கையில் அந்த வயதான பெண்மணி விட்டு சென்ற பணத்தையும் எடுத்து கொண்டு வீட்டுக்கு சென்றார்.


பிரசவ செலவுக்கு என்ன செய்ய போகிறோம் என்று புலம்பி கொண்டு இருந்த தன் கணவருக்கு இந்த பணத்தை காட்ட வேண்டும் என்று அருகில் சென்றார்.ஆனால் மிகுந்த அசதியால் தூங்கி கொண்டு இருந்தார் நம்ம தயாளன்.


”எதை நாம் செய்கிறோமோ, அதுவே நமக்கும் நடக்கும்”....

உலகில் உள்ள சிறப்பு நாட்கள் ...!


  • உலக சுங்கத்துறை தினம் -ஜனவரி 26

• உலக தொழுநோய் ஒழிப்பு நாள்-ஜனவரி 30

• உலக சதுப்பு நில நாள் -பெப்ரவரி 2

 • அனைத்துலக தாய்மொழி நாள் -  யுனெஸ்கோ-பெப்ரவரி 21

• ஐக்கிய நாடுகள்: அனைத்துலக மகளிர் நாள்-மார்ச் 8

• உலக சிறுநீரக நோய் விழிப்புணர்வு நாள் -மார்ச் 13

• உலக நுகர்வோர் நாள்-மார்ச் 15

• உலக வன நாள்-மார்ச் 21

• உலக செய்யுள் நாள் - யுனெஸ்கோ-மார்ச் 21

• உலக நீர் நாள்-மார்ச் 22

• அனைத்துலக காச நோய் நாள் -மார்ச் 24-

• ஏப்ரல் முட்டாள்கள் நாள்-ஏப்ரல் 1:

• உலக சிறுவர் நூல் நாள் – ஏப்ரல் 2:

• நிலக்கண்ணிகள் குறித்த அனைத்துலக விழிப்புணர்வு நாள்- ஏப்ரல் 4

• உலக சுகாதார நாள் – ஏப்ரல்-7

• நினைவுச்சின்னங்களுக்கும், களங்களுக்குமான அனைத்துலக நாள்- ஏப்ரல் 18

• பூமி நாள் – ஏப்ரல் 22

• உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் – ஏப்ரல் 23

• அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு நாள்- ஏப்ரல் 26

• மே நாள் - உலகத் தொழிலாளர் நாள் - மே 1

• உலக பத்திரிகை சுதந்திர நாள்- மே 3

• அனைத்து நாடுகள் தீயணைக்கும் படையினர் நாள்- மே 4

• சர்வதேச நாடுகள் மருத்துவச்சிகள் நாள்- மே 5

• உலக செஞ்சிலுவை நாள்- மே 8

• உலக செவிலியர் நாள்- மே 12

• உலகக் குடும்ப நாள்- மே 15

• உலகத் தொலைத்தகவல் தொடர்பு நாள்- மே 17

• அனைத்துலக அருங்காட்சியக நாள் – மே 18

• பயங்கரவாதத்திற்கு எதிரான நாள் – மே-19

•World Biodiversity Day – மே 22

•World Turtle Day – மே 23

• புகையிலை எதிர்ப்பு நாள் – மே 31

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top