.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday 8 December 2013

உங்கள் அக்கவுண்டில் பணம் குறைகிறதா? உஷார்!


முன்பெல்லாம் ரொக்கமாகப் பணத்தை கையில் வைத்துக் கொள்ள பயப்படுவார்கள். ஆனால் இப்போது டெபிட் கார்டுகளை வைத்திருக்கதான் அதிகம் பயப்பட வேண்டிருக்கிறது. காரணம், சமீப காலமாக பலருடைய பேங்க் அக்கவுன்டில் இருந்து அவர்களுக்குத் தெரியாமல் பணம் சூறையாடப்பட்டு விடுவதுதான்.


ஏ.டி.எம். கார்டில் இருக்கும் தகவல்களை 'ஸ்கிம்மர்’ எனும் கருவி மூலம் அபகரித்து, அதைக் கொண்டு போலி கார்டுகளை உருவாக்கி, பணத்தை எடுத்து விடுகிறார்கள் சில சமூக விரோத சக்திகள்.


குறிப்பாக சென்னை போன்ற நகரங்களில் இத்தகைய நவீன கொள்ளைகள் அதிகமாக நடந்து வந்தாலும், மற்ற இடங்களிலும் நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.


அதனால் பணத்தைப் பறிகொடுப்பதற்கு முன்பாக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டால்
 இழப்பைச் சந்திக்க வேண்டியதிருக்காது.


கவனிக்க வேண்டியவை :


 *வழக்கத்திற்கு மாறாக ஏ.டி.எம். இயந்திரத்தின் முன்பக்கத்திலிருந்து ஏதாவது வயர்கள் வெளியே செல்வதைப் பார்த்தால் அந்த இயந்திரத்தைப் பயன்படுத்தாதீர்கள்.


 *பின் நம்பரை டைப் செய்யும்போது, அதை யாரும் பார்க்காதபடி மறைத்துக் கொள்ளுங்கள்.


 *பரிமாற்ற ரசீதுகளை ஏ.டி.எம். இயந்திர அறையிலோ அல்லது அருகிலோ தூக்கி எறியாமல் கையோடு எடுத்துச் செல்லுங்கள்.


 *ஏ.டி.எம். இயந்திரத்தில் ஏற்படும் சந்தேகங்களுக்கு வங்கியைத் தவிர, அறிமுகம் இல்லாத வெளிநபரிடம் எந்த உதவியையும் கோர வேண்டாம்.


 *ஏ.டி.எம். சென்டரில் ஒன்றுக்கு மேற்பட்ட மெஷின்கள் இருந்து ஏதாவது ஒன்று வேலை செய்யாமல் இருந்தால், மற்றதைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. காரணம், மற்ற மெஷின்களை தற்காலிகமாகச் செயலிழக்கச் செய்து, 'ஸ்கிம்மர்’ கருவி பொருத்தப் பட்ட மெஷினை பயன்படுத்தும் வகையில் சமூக விரோதிகள் நமக்கு வலை விரித்திருக்கலாம்.


 *ஏ.டி.எம். இயந்திரத்தைச் சுற்றி சந்தேகப்படும்படியான விஷயங்கள் அல்லது நடமாட்டங்கள் ஏதேனும் இருந்தாலோ அல்லது உங்களது கணக்கில் நீங்கள் செய்யாத பரிமாற்றங்கள் இருந்தாலோ உங்களது வங்கிக்கும், காவல் துறைக்கும் முதலில் தெரியப்படுத்துங்கள்.


 *ஓட்டல்கள், கடைகள் போன்ற இடங்களில் பில்லை டெபிட் கார்டு மூலம் செலுத்தும் போது ஜாக்கிரதையாக இருப்பது அவசியம். ஏனெனில், நீங்கள் கார்டை கொடுத்து விட்டு உட்கார்ந்துவிட்டால், அதை ஸ்கிம்மர் பொருத்திய மெஷினில் ஸ்வைப் செய்தாலும் தெரியாமல் போய்விடும். அதன் மூலம் நம் ஏ.டி.எம். கார்டு தொடர்பான விஷயங்கள் நமக்கே தெரியாமல் திருடு போக வாய்ப்பிருக்கிறது.

நடிகர் ரஜினிகாந்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட கன்னடப் பாடல்!



நடிகர் ரஜினிகாந்தின் நண்பரான ராஜ் பகதூர் நடிக்கும் புதிய கன்னடப் படத்தில் நடிகர் ரஜினிகாந்தை சிறப்பிக்கும் வகையில் ஒரு பாடல் எழுதப்பட்டுள்ளது.


 'பெல்லிடரே பெல்லியபெகு ரஜினிகாந்தரங்கே' என்று தொடங்கும் இந்தப் பாடலில் மற்றவர்கள் மத்தியில் நடிகர் ரஜினி காட்டும் எளிமை, தன்னடக்கம் போன்ற அவரது நற்பண்புகள் போற்றப்பட்டுள்ளன.


ரஜினிகாந்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்தப் பாடல் இயக்குநர் ருஷியால் எழுதப்பட்டு பிரதீப் ராஜால் இசையமைக்கப்பட்டுள்ளது. விஜயப்பிரகாஷ் இந்தப் பாடலைப் பாடியுள்ளார்.


இதன் சிறப்பம்சமாக இந்தப் பாடலுக்கு ரஜினிகாந்தின் ரசிகர்கள் 1000 பேர் நடனமாடியுள்ளனர் என்று இயக்குநர் ருஷி தெரிவித்துள்ளார்.


 இந்தப் படத்தில் வரும் 12 முக்கிய கதாபாத்திரங்களில் ஒரு வேடத்தில் ரஜினியின் நண்பர் ராஜ் பகதூர் நடிக்கின்றார்.

ஜீவாவின் ‘யான்’ படத்தின் ஆடியோ டிச.15-ல் வெளியீடு!



பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்குனராக அவதாரம் எடுக்கும் புதிய படம் ‘யான்’.


இப்படத்தில் ஜீவா-துளசிநாயர் ஆகியோர் நடித்த வருகின்றனர். நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.


உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் படப்பிடிப்புகளை நடத்தி முடித்துள்ள இந்த படம் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது.


இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் மும்முரமாக களமிறங்கியுள்ளனர்.


இந்நிலையில், இப்படத்தின் ஆடியோவை வருகிற 15-ந் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.


இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

எல்ரெட் குமாரின் ஆர்.எஸ்.இன்போடெய்ன்மென்ட் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறது.

தமிழில் நடிக்க ஆசைப்படும் அமிதாப் பச்சன்..









பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், மலையாளத்தில் கூட, நடித்து விட்டேன்.


ஆனால், தமிழில் இன்னும் நடிக்கவில்லையே என்ற ஏக்கம் உள்ளது.


யாராவது, நல்ல கதை கூறினால், தமிழில் நடிப்பேன் என, கூறியிருந்தார்.


இதோ, இப்போது, அவரின் ஏக்கம் தீரப் போகிறது. ஜீவா, துளசி நடிக்கும், 'யான்' படத்தில், ஒரு முக்கியமான வேடத்தில், அதாவது சிறப்பு தோற்றத்தில், அமிதாப் நடிக்கப் போவதாக, கோடம்பாக்கத்திலிருந்து, செய்திகள் கசிந்துள்ளன.


பாலிவுட்டில், பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ரவி கே சந்திரன் தான், இந்த படத்தின் இயக்குனர் என்பதால், அவரின் நட்புக்காக, இந்த படத்தில் நடிக்க, அமிதாப், சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.

சட்டச்சிக்கலில் சிக்கிய சிவகார்த்திகேயன்!



மூன்றெழுத்துப் படத்தில் ஹீரோவாக அறிமுகமான அந்த சின்னத்திரையில் இருந்து வந்த நடிகரின் மார்க்கெட் எக்குத்தப்பாக எகிறிக்கொண்டிருக்கிறது.


அதிலும் கடைசியாக அவர் நடிப்பில் வெளியான படம் வசூலை வாரி குவித்ததால், இப்போது அவரிடம் கால்சீட் கேட்டு முக்கிய படாதிபதிகளே க்யூவில் நிற்கிற நிலை உருவாகியிருக்கிறது.


அதனால், ஏற்கனவே படத்துக்குப்படம் எகிறிக்கொண்டிருந்த நடிகரின் படக்கூலி தற்போது கேட்போரை தலைசுற்ற வைக்கிற அளவுக்கு உயர்ந்து நிற்கிறதாம்.


இந்த செய்திகளை மேற்படி நடிகரால் டீலில் விடப்படும் படாதிபதிகள் சிலர் லீக்அவுட் செய்து விடுவதும் ஒருபக்கம் நடந்து வருகிறது.


இதனால் நடிகருக்கு தேவையில்லாத சட்டச்சிக்கல் ஏற்படுகிறதாம்.


அதன்காரணமாக, சில நடிகர்கள் வாங்கும் சம்பளத்துக்கு கணக்கு காட்ட வேண்டும் என்பதற்காகவே தயாரிப்பாளராகி வருவதைத் தொடர்ந்து, இப்போது இந்த இளவட்ட நடிகரும் விரைவில் படம் தயாரிக்கும் முடிவில் இருக்கிறாராம்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top