.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday 27 November 2013

அப்பா-என் ஒவ்வொரு வயதிலும்!

ஒவ்வொரு மகன், மகளுக்கு தகப்பன் வெவ்வேறு காலகட்டங்களில் எப்படி தெரிவார்?

என் 4 வயதில் : எங்கப்பா ரொம்பப் பெரிய ஆள்!

 என் 5 வயதில் : என் அப்பா எல்லாம் அறிந்தவர்!

என் 10 வயதில் : நல்லவர்தான், ஆனால் சிடுமூஞ்சிக்காரர்!

என் 12 வயதில் : நான் சின்னப்பிள்ளையாக இருந்தபோது அப்பா ரொம்ப நல்லவர்!

என் 14 வயதில் : எப்பவும் எதிலும் குறை கண்டுபிடிக்கும் ஆசாமி!

என் 15 வயதில் : கால நடப்பிலும் புரிந்துகொள்ளாதவர்!

என் 18 வயதில் : சரியான எடக்கு மடக்கு பேர்வழி

என் 20 வயதில் : எங்கப்பா தொல்லையைத் தாங்கவே முடியல; எப்படித்தான் அம்மா இந்த ஆளோட குப்பை கொட்றாங்களோ?

என் 25 வயதில் : எதைச் சொன்னாலும் மறுக்கிறவர்!

என் 30 வயதில் : என் பையனை கட்டுப்படுத்தறதே கஷ்டமா இருக்கு. அவன் வயசுல இருந்தப்ப எங்க அப்பான்னாலே எனக்கு எவ்வளவு பயம்!

என் 40 வயதில் : என்னை என் அப்பா எவ்வளவு கட்டுப்பாடா வளர்த்தார்! நானும் அப்படித்தான் பையனை வளர்க்கப்போறேன்

என் 45 வயதில் : அப்பா எங்களையெல்லாம் எப்படி வளர்த்தார் என்பதை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது

என் 50 வயதில் : அப்பா எங்களை வளர்க்க எத்தனை கஷ்டங்களைச் சந்தித்தார். எனக்கோ ஒரேயொரு பிள்ளையைக்கூட கட்டுப்படுத்த முடியல

 என் 55 வயதில் : எங்கப்பா எவ்வளவு தீர்க்கதரிசனத்தோடு எங்களுக்காக எதையும் திட்டமிட்டுச் செய்தார். அவரைப்போல வேற ஒருத்தர் இருக்க முடியாது

என் 60 வயதில் : எங்கப்பா ரொம்பப் பெரிய ஆள்!

- எந்தப் பிள்ளையும் தன் தந்தையை தன் வாழ்க்கையின் முதல் கட்டத்தில் பார்த்தது போலவே மீண்டும் பார்ப்பதற்கு இப்படி 56 ஆண்டுகள் ஆகிவிடுகிறது! எனவே காலத்தை வீணாக்காதீர்கள், உங்கள் பெற்றோரை மறந்து-விடாதீர்கள்

படித்தது / பிடித்தது ....


நண்பனுடன்
 அவனது
 வீட்டிற்குச்சென்றிருந்தேன்..

வாசலில்
 அவனது பாட்டி
கயிற்றுக்கட்டிலில்
 கிடந்தார்..

நண்பன் உள்ளே
 போய்விட்டான்..

நான் : என்ன பாட்டி
 நல்லா
 இருக்கிங்களா..?

பாட்டி : நல்லாருக்கேன் ராசா.. நீ ராசா..?

நான் : நல்லாருக்கேன் பாட்டி..

இடையே எனது Android
தொலைபேசி அழைத்தது..
பேசி முடித்தேன்..

பாட்டி : என்னாய்யா அது
 டிவி பொட்டி கணக்கா..?

நான் : இதுவா பாட்டி..
இது புதுசா வந்துருக்குற ஃபோனு..
சட்டென்று ஞாபகம் வந்தவனாய்
 அதிலிருந்த Talking Tom-ஐ
 எடுத்துக்காட்டினேன்..
பாட்டி இதுகிட்ட பேசினா
 அத அப்புடியே திரும்ப பேசும்..


பாட்டி : என்ன ராசா சொல்றே..?
Talking Tom :என்ன ராசா சொல்றே..?

நானும், பாட்டியும், Talking Tomமும் சிரித்தோம்..

பிறகு வீட்டினுள்
 சென்றேன்..

எல்லோருடன்
 பேசிவிட்டு வெளியில் வந்தேன்...

வாசலில் பாட்டி..

நான் : போயிட்டு வாரேன் பாட்டி..

பாட்டி : ராசா...

நான் : என்னா பாட்டி..?

பாட்டி : ஏய்யா.. அந்தபூனகுட்டிய
 இங்க உட்டுட்டு போயா..

நான் : என்ன பாட்டி சொல்றிங்க..?

பாட்டி : ஆமாய்யா..
இந்த வயசான காலத்துல இங்க
 எங்கிட்ட யாருமே பேச மாட்றாங்கயா..
நா செத்துபோறப்ப
 அந்த
 பூனகுட்டிகிட்டயாச்சும்
 பேசிட்டே சாவுறேன்யா..

 (வீட்டில் உள்ள முதியோர்களிடம்மூம் பேச நேரம் ஒதுக்குங்கள், அவர்கள் உணர்வுகளுக்கும் மதிப்பளியுங்கள்...)

உழைத்தால் சாதிக்கலாம்!

 

 * நியாயத்தை எடுத்துச் சொல்வதில் கோழையாக இராதீர்கள். உலக நன்மைக்காக சண்டை செய்வதில் வீரராக இருங்கள்.

* உங்களை ஏழை என்று நினைக்காதீர்கள். பணம் ஒரு சக்தியல்ல. நன்மையும் தெய்வபக்தியுமே சக்தி.

* இந்த உலகில் தோன்றிய நீங்கள் அதற்கு அடையாளமாக ஏதேனும் விட்டுச் செல்லுங்கள். இல்லையேல் உங்களுக்கும் கற்களுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும்.

* தனியாக இருந்து கொண்டு பலருடைய பகையை தேடிக் கொள்பவன் அறிவற்ற மூடனைப் போன்றவன்.

* செல்வம் பெருகிய காலத்தில் ஒருவனுக்கு பணிவு வேண்டும். அதே சமயம், செல்வம் குறைந்து வறுமை வரும் காலத்தில் பணியாத துணிவு வேண்டும்.

* கடின உழைப்பு இல்லாமல், பெரிய காரியங்களைச் சாதிக்க முடியாது.

- விவேகானந்தர்

கீழா நெல்லி சூப் - சமையல்!



 என்னென்ன தேவை?

கீழாநெல்லி - 1 கட்டு (தண்டோடு),

தக்காளி - 2,

சின்ன வெங்காயம் - 5,

பூண்டு - 6 பல்,

மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்,

உப்பு - தேவைக்கேற்ப,

சீரகத் தூள் - அரை டீஸ்பூன்,

இஞ்சி - ஒரு துண்டு,

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை.

எப்படிச் செய்வது?


கீழாநெல்லிக் கீரையை தண்டோடு நன்கு அலசி, நன்கு இடித்து, அதோடு பூண்டு, இஞ்சி சேர்த்து நன்கு இடிக்கவும். அதோடு சின்ன வெங்காயத்தை நசுக்கிச் சேர்த்து, மிளகுத் தூள், சீரகத் தூள், உப்புப் போட்டு இரு மடங்கு தண்ணீர் ஊற்றி, நான்கு, ஐந்து விசில் வரும் வரை குக்கரில் வைக்கவும்.

பிறகு அதை எடுத்து நன்கு மசித்து, வடிகட்டி அதன் சாற்றைக் குடிக்கவும். தொட்டாலே கையோடு வரும் முடி உதிர்வுப் பிரச்னைக்கு இது மருந்து. உடலும் குளிர்ச்சி அடையும்.

தெரிந்துகொள்ளுங்கள் - 2

மொழி வரலாற்றில் ஒரு சில அறிஞர்கள் உருவாக்கும் சொற்களே நிலை பெற்றுவிடுகின்றன. இமகபமதஉ என்ற ஆங்கிலச்சொல் "கலாசாரம்' என்று மொழி பெயர்க்கப்பட்டது. ஆனால் ரசிகமணி டி.கே.சி. அவர்கள் அது வடமொழி சாயலாக உள்ளதென்று அதைப் "பண்பாடு' என்று மொழி பெயர்த்தார். அதேபோல் "பார்லிமெண்ட்' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையாகப் "பாராளுமன்றம்' என்ற சொல்லை பரிதிமாற் கலைஞர் மொழி பெயர்த்தார்.

நீருக்கடியில் சுரங்கப்பாதை அமைப்பது இயலாத காரியம். இன்றைய அறிவியல் உலகம் இதை சாதித்துக் காட்டியுள்ளது. ஆனால் கி.மு. 2 ஆயிரத்திலேயே பாபிலோனில் உள்ள யூப்ரட்டீஸ் நதியின் கீழ் 3,000 அடிக்கு சுரங்கப் பாதை அமைக்கப்பட்டிருந்தது வியப்பூட்டும் செய்தியாகும்.

மிளகாய் என்பது மேலை நாட்டுத் தாவரம். இது வருவதற்கு முன்னால் மிளகைத்தான் பயன்படுத்தி வந்தார்கள். மிளகைப் போன்றே காரம் இருந்ததால் தமிழர்கள், அதனை "மிளகுக்காய்' என்றழைத்தார்கள். இதுவே, பின்னாளில் மிளகாய் என்று மாறியது.

பாம்புகளில் நாகப்பாம்புகள் கொடிய விஷம் கொண்டவை. வடக்கே கோதுமை நிறமுடைய ஒரு வகை நாகங்கள் உண்டு. இவற்றை யாராவது பிடிக்கவோ, கொல்லவோ நினைத்தால் முடிந்தவரை சீறிப்பார்க்கும். தன்னைப் பாதுகாத்துக் கொள்ளப் போராடும். முடியாத பட்சத்தில் கற்களிலோ, பாறைகளிலோ மோதிக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளும்.

*  பிஜித் தீவில் உள்ள மக்கள் யாருக்காவது மரியாதை செய்ய விரும்பினாலோ, பாராட்ட நினைத்தாலோ அவர்களுக்கு திமிங்கலத்தின் பல்லை அன்பளிப்பாக அளிப்பார்கள்.

*  முகத்திற்கு வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொள்வது என்பது தொன்று தொட்டு வந்த நாகரீகமாகும். 3,000 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர்கள் முகத்திற்கு "ஸ்நோ' வைத்திருக்கின்றனர். துட்டகாமன் என்ற எகிப்திய மன்னனின் கல்லறையில் (பிரமிட்) இம்மாதிரியான முகப்பூச்சு உள்ள பாத்திரங்கள் காணப்படுகின்றன. இன்றும் அவை அபரிமிதமான மணத்துடன் இருப்பதுதான் வியப்பு. 

*  மேற்கு ஐரோப்பாவின் மிகப்பெரிய சிகரம் மான்ட் பிளாங்க். பிரான்ஸ், இத்தாலி நாட்டில் அமைந்துள்ள இந்த சிகரத்தின் உயரம் 4,810 மீட்டர் ஆகும்.

*  புகழ்பெற்ற செயின்ட் ஜார்ஜ் கோட்டையை ஆங்கிலேயர்கள் கி.பி.1640-ல் கட்டத் தொடங்கி 1653-ல் கட்டி முடித்தனர். 

*  சென்னையில் 1,687-ம் ஆண்டில் நகராண்மைக்கழகம் தோன்றியது. இந்தியாவின் முதல் நகராண்மைக்கழகமும் இதுவே.

*   1786-ல் முதல் தபால்நிலையம் சென்னையில் தொடங்கப்பட்டது.

*  சென்னை பல்கலைக்கழகம் 1857-ல் தொடங்கப்பட்டது. 

*   முதன்முதலில் சென்னைக்கு மின்சார விளக்குகள் 1914-ம் ஆண்டு போடப்பட்டது. 

*   1924ம் ஆண்டிலேயே 8,300 மின்சார விளக்குகள் சென்னை நகரெங்கும் ஒளிவீசியது.

*  புகழ்பெற்ற செயின்ட் ஜார்ஜ் கோட்டையை ஆங்கிலேயர்கள் கி.பி.1640-ல் கட்டத் தொடங்கி 1653-ல் கட்டி முடித்தனர். 

*  சென்னையில் 1,687-ம் ஆண்டில் நகராண்மைக்கழகம் தோன்றியது. இந்தியாவின் முதல் நகராண்மைக்கழகமும் இதுவே.

*   1786-ல் முதல் தபால்நிலையம் சென்னையில் தொடங்கப்பட்டது.

*  சென்னை பல்கலைக்கழகம் 1857-ல் தொடங்கப்பட்டது. 

*   முதன்முதலில் சென்னைக்கு மின்சார விளக்குகள் 1914-ம் ஆண்டு போடப்பட்டது. 

*   1924ம் ஆண்டிலேயே 8,300 மின்சார விளக்குகள் சென்னை நகரெங்கும் ஒளிவீசியது.

<> உலகிலேயே சந்தடி நிறைந்த நகரம் எகிப்தின் தலைநகரான கெய்ரோதான்.<> கொரியாவில் அமைந்துள்ள கலங்கரை விளக்கம் கப்பல் வடிவத்தில் அமைந்துள்ளது.

<> ஆசியா என்ற சொல்லின் சரியான பொருள் சூரியோதய பூமி என்பதாகும்.

<> அமெரிக்கர்கள் மாதத்தை முதலாகவும் தேதியை இரண்டாவதாகவும் எழுதுவது வழக்கம்.

<> விண்வெளியில் ஒரு மனிதன் பறக்க 15 லட்சம் ரூபாய் செலவிடப்படுகிறது என்று கணக்கிட்டுள்ளனர்.

<> சிங்கப்பூரின் பழைய பெயர் டெமாசத் என்பது. டெமாசத் என்றால் கடல் நகரம் என்று பொருள்.

<> கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளிலும் உப்பை "உப்பு' என்றே அழைக்கின்றனர்.

<> வைரத்தைக் குறிப்பிடும் "டயமண்ட்' என்ற ஆங்கிலச்சொல் கிரேக்க மொழியிலிருந்து வந்தது. அதற்கு வெல்லப்பட முடியாத பொருள் என்று பெயர்.

<> அமெரிக்காவில் ரோம் என்ற பெயரில் 8 நகரங்கள் உள்ளன.

<> உலகத்தில் அதிக குற்றங்கள் நடைபெறும் நாடு பிரிட்டன்தான். அதற்கு அடுத்த இடத்தில் பிரேசில், தென்அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன.

* நமது குடலை நேரடியாக எக்ஸ்-ரே எடுக்க முடியாது.

* அமெரிக்க அதிபரை யாரும் கைது செய்ய முடியாது. அவர், "வீட்டோ பவர்' என்னும் அதிகாரம் பெற்றவர்.

* ஆர்டிக் பெருங்கடலில் கப்பல்கள் செல்ல முடியாது.

* பூஜ்ஜியத்தை ரோமன் மொழியில் எழுதமுடியாது. அதற்கு நிகரான பதம் கிடையாது.   
 
* மைசூர் 'தீப நகரம்' என்று அழைக்கப்படுகிறது.

* "இளஞ்சிவப்பு நகரம்' என அழைக்கப்படுவது ஜெய்ப்பூர்.

* "காற்று நகரம்' என்று சிகாகோ அழைக்கப்படுகிறது.

* "வெள்ளை நகரம்' என அழைக்கப்படுவது பெல்கிரேடு.

* "பூங்கா நகரம்' என்று அழைக்கப்படுவது பெங்களூரு.

* குதிக்க முடியாத ஒரே விலங்கு யானை.

* நாம் பிறந்தது முதல் கண்கள் மட்டும்தான் வளராமல் அப்படியே இருக்கும்.

* ஆண்களை விட இரண்டு மடங்கு அதிகமாக பெண்கள் கண்களை இமைக்கின்றனர்.

* மனிதர்களை விட வேகமாக ஓட கூடியது நீர்யானை.

* ஒரு எறும்பு தன் உடலின் எடையை போல 50 மடங்கு எடையை தூக்கி செல்லும். 30 மடங்கு எடையை இழுத்து செல்லும். மயங்கி விழும்போது எப்போதும் வலது பக்கமாகவே சாய்ந்து விழும்.

•பூனைக்குத் தண்ணீரைக் கண்டால் ஆகாது. அதன் மீது சிறிதளவு தண்ணீர் தெளித்தாலும் அது தலைதெறிக்க ஓடிவிடும்.

•கோலாக் கரடிகள் தங்களுக்குத் தேவையான தண்ணீரை யூகலிப்டஸ் இலைகளைச் சாப்பிடும் பொழுதே பெறுகின்றன. அதனால் இவை தண்ணீர் என்று தனியாக எதையும் குடிப்பதில்லை.

•மயில் இறகுகளைச் சுவர்களில் ஒட்டி வைத்தால் பல்லிகளின் தொல்லை இராது.

•மாமிசம் உண்ணும் விலங்குகள் அவை உண்ணும் பிராணிகளின் இறைச்சியிலிருந்தும் ரத்தத்திலிருந்தும் உப்புச் சத்தைப் பெறுகின்றன.

•ஒட்டகத்துக்குப் பார்க்கும் சக்தி அதிகம். ஒரு மைலுக்கு அப்பால் தண்ணீர் தேங்கியிருந்தாலும்கூட ஒட்டகம் எளிதில் கண்டுபிடித்து விடும்.

•வானில் குறிப்பிட்ட உயரத்துக்கும் மேல் ஜெட் போன்ற விமானங்கள் விட்டுச் செல்லும் புகை போன்ற வெள்ளைக் கோடுகள் அதன் புகையல்ல, நீர்த்திவலைகள்.

•முதல் உலகப் போரில் ராணுவ வீரர்கள் மின்மினிப் பூச்சிகளைப் பிடித்து பாட்டிலில் போட்டு அதன் வெளிச்சத்தைப் படிக்க, எழுத பயன்படுத்தினர்.

•முதன்முதலாக பூமியின் சுற்றளவைக் கண்டறிந்தவர் ராத்தோஸ்தனிஸ் என்பவர்.

•ஆசியாவின் முதல் விளையாட்டுக்கான பல்கலைக்கழகம் புனே நகரில் உருவாக்கப்பட்டது.

•இந்தியாவின் தேசிய விலங்காக புலியை 1972-ஆம் ஆண்டு அறிவித்தார்கள்.

•இந்தியாவில் (ஆங்கிலேயர்களின்) கிழக்கு இந்தியக் கம்பெனி துவங்கிய ஆண்டு 1600 ஆகும்.

•ஐ.நா.பல்கலைக்கழகம் டோக்கியோ நகரில் உள்ளது.  

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top