.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday 23 November 2013

தீபங்களால் தரையில் ஏற்படும் எண்ணெய் கறையை அகற்ற சில டிப்ஸ்...


 தீபங்களில் உள்ள எண்ணெய் தரையில் சிந்தாமல் இருக்குமா என்ன? கண்டிப்பாக சிந்தும் வாய்ப்புகள் அதிகம். நாம் எவ்வளவு தான் கவனமாக இருந்தாலும் சரி எண்ணெய் சிந்துவதற்கான வாய்ப்புகள் அதிகமே. தீபங்கள் எரிய எரிய எண்ணெய் மெதுவாக தரையில் படரும். இதுவே தரையில் கறையை ஏற்படுத்திவிடும். ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த கறையை நீக்க பல வழிகள் உள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த கறையை நீக்க பயன்படுத்தப்படும் பொருட்களில் அமிலங்கள் கலக்கப்பட்டுள்ளது. அவைகளை பயன்படுத்தி கரைகளை சுலபமாக நீக்கினாலும் கூட, அது தரையை பாழாக்கி விடுமோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தும்.
ஆகவே பாதுகாப்பான முறையில் தரையில் ஏற்படும் எண்ணெய் கறையை அகற்றுவது எப்படி என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்.

பூனை கூட உங்களுக்கு உதவலாம்

பூனையை போலவே அதன் சிறுநீரும் கூட உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? எண்ணெய் சிந்தி சிறிது நேரம் தான் ஆனது என்றால், உங்கள் பூனையின் சிறுநீரை அதன் மீது தெளியுங்கள். ஒரு இரவு முழுவதும் அதை அப்படியே விட்டு விட்டு, மறுநாள் கழுவி விடுங்கள். கறையை நீக்க இது ஒரு சிறந்த வழிமுறையாகும்.
 
மரத்தூளும் பெயிண்ட் தின்னரும் கூட கை கொடுக்கும்

பெயிண்ட் தின்னர் மற்றும் மரத்தூளை ஒன்றாக கலந்து கறை படிந்த இடத்தில் தடவவும். அதனை எண்ணெய் கறையின் மீது ஒரு 20 நிமிடத்திற்கு ஊற வைக்கவும். பின்பு அந்த இடத்தை சுத்தம் செய்யுங்கள். வேண்டுமானால் மீண்டும் ஒரு முறை இந்த கலவையை தடவலாம். தீபங்களினால் ஏற்படும் கறையை நீக்க இது ஒரு சுலபமான வழியாக தோன்றுகிறதா?

பேக்கிங் சோடாவை பயன்படுத்துங்கள்

பேக்கிங் சோடாவை சமையலுக்கு எப்படி பயன்படுத்துவது என்பது உங்களுக்கு தெரியும். அதை எண்ணெய் கறையை நீக்கவும் பயன்படுத்தலாம் என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த கார்த்திகை தீபத்தன்று தீபங்களால் ஏற்பட்டுள்ள எண்ணெய் கறையை எப்படி நீக்குவது என்ற கவலை ஏற்படுகிறதா? ஒன்றே ஒன்றை செய்யுங்கள். கடைக்கு செல்லும் போது கொஞ்சம் பேக்கிங் சோடாவையும் சேர்த்து வாங்கிக் கொள்ளுங்கள். எண்ணெய் கறையின் மீது கொஞ்சம் பேக்கிங் சோடாவை தெளித்து பின் வெந்நீரில் அந்த இடத்தை கழுவுங்கள்.

பாத்திரம் கழுவும் டிடர்ஜெண்ட்


தீபங்களினால் ஏற்படும் எண்ணெய் கறையை நீக்க மற்றொரு சுலபமான வழியாக விளங்குகிறது பாத்திரம் கழுவும் டிடர்ஜெண்ட். அதனை கறை படிந்த இடத்தில் தூவி கொஞ்ச நேரத்திற்கு அப்படியே விட்டு விடுங்கள். அந்த நேரத்தில் கொஞ்சம் நீரை கொதிக்க வையுங்கள். நன்றாக கொதித்த பின் கறை படிந்த இடத்தில் அதனை ஊற்றி நன்றாக கழுவவும்.

பொது அறிவு - தெரிந்துக் கொள்ளுங்கள்!

1. தேசியகீதம் முதன் முதலில் ஜப்பானில்தான் தோன்றியது.

2. ஒரு சிலந்தி ஒரு மணி நேரத்தில் ஏறத்தாழ 450 அடி நீளமுள்ள வலையைப் பின்னுகிறது.

3. பிரான்ஸ் நாட்டில் ஏப்ரல் முதல் தேதியை மீன்கள் தினமாகக் கொண்டாடுகிறார்கள்.

4. முதலையின் ஆயுள் 60 ஆண்டுகள். அதன் முதுகில் இருக்கும் பெரிய புடைப்புகளைக் கொண்டு அதன் வயதைக் கணிக்கிறார்கள்.

5. புல் வகையில் மிக உயரமாக வளரக்கூடியது மூங்கில். 36 மீட்டர் உயரம் வரை இது வளரும். ஒரு நாளைக்கு அரை மீட்டர் அளவு வளரும்.

6. மண்புழுவிற்கு கண்ணும் காதும் கிடையாது. ஆனால், ஒளியையும் அதிர்வையும் உணரக் கூடிய ஆற்றல் உண்டு.

7. "வீனஸ் கிர்டில்' என்பது நாடா போன்ற, இரண்டடி நீளமுடைய ஒரு வகை மீன். இது கடல் நீரில் பல நிறங்களில் தோன்றும். இதை, கிரேக்கர்களின் அழகுத் தேவதை அணியும் ஒட்டியாணம் என்று சொல்வார்கள்.

8. கண்ணாடி கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னால், வெண்கலத் தகடுகள்தான் முகம் பார்க்கப் பயன்பட்டன.

9. நில நடுக்கத்தை அளக்கும் கருவிக்கு "ரிக்டர் ஸ்கேல்' என்று பெயர். சார்லஸ் ரிக்டர் எனும் அமெரிக்கரே இதைக் கண்டுபிடித்தார்.

10. "அறிவியலின் தந்தை' என்று போற்றப்படுபவர் கலிலியோ. இவர் இத்தாலிய வானியல் மேதை. தேவாலய விளக்கு காற்றில் அசைவதைப் பார்த்ததன் மூலம் - ஊசல் தத்துவம் எனும் பெரிய தத்துவத்தைக் கண்டுபிடித்தார்.

11. "மேக்மா' என்பது பூமிக்குள் உருகிய நிலையில் உள்ள பாறைக் குழம்பின் பெயர்.

12. இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் 22.

13. வளர்ச்சியடைந்த மனிதனின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் இருக்கும்.

14. ஒரு மரத்தின் பெயரால் அழைக்கப்படும் நாடு "பிரேசில்.'

15. சவுதிஅரேபியா நாடு, பொதுமக்களிடமிருந்து வருமான வரி வசூலிப்பதில்லை.

சுபாஷ் சந்திரபோசின் மறைக்க பட்ட வரலாறு:


சுருக்கமாக: அகிம்சை முறையில்
 போராடி கொண்டு இருந்த
 காந்தியிடம் சந்திரபோஸ் சொன்னார்.

அகிம்சை முறையில் போராடினால்
 பல ஆண்டுகளாக இந்த போராட்டம்
 இழுத்து கொண்டே போகும்.
கோடிகணக்கான
 இந்தியர்களை வெறும் இருபதாயிரம்
 வெள்ளையனைக் கொண்ட ராணுவம்
 அடிமை படுத்தி வைத்து இருக்கிறாது.

ஏன் அந்த
 ராணுவத்தை அடித்து விரட்ட
 கூடாது. அவர்களை நான் ஆயுத
 ரீதியாக எதிர்கொள்ள திட்ட
 மிட்டு இருக்கிறேன். உங்களின்
 கருத்து என்ன என்று காந்தியிடம்
 கேட்ட
 போது அகிம்சையை போதிக்கும் நான்
 இதை ஒருநாளும் ஏற்று கொள்ள
 மாட்டேன் என்று சொன்னார்.
இருவருக்கும் நிறைய கருத்து மோதல்
 வந்த பின்னர் சந்திரபோஸ் அவர்கள்
 தனித்து போராட தயாராகினார்.
முதல் கட்டமாக
 தமிழ்நாடுக்கு வந்தார்.

வந்து துடிப்பான
 இளைஞ்சர்களை சந்தித்து.
வெள்ளையனை நாம் ஆயுத ரீதியாக
 தான் எதிர்கொள்ள வேண்டும்
 அதற்காக நாம் ராணுவ
 கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.
என்று இளைஞர்களிடம் பிரச்சாரம்
 செய்தார்.
பிறகு இதே பிரச்சாரத்தை இந்தியாவில்
 மற்ற மாநிலங்களுக்கும்
 சென்று இளைஞ்சர்களின்
 ஆதரவை திரட்டினார்.

ஆனால்
 அது அவருக்கு தோல்வியிலே முடிந்தது யாரும்
 ஆயுதம் எடுத்து போராட முன்
 வரவில்லை மீண்டும் தமிழகம் வந்த
 போது தமிழகத்தில் உள்ள ஆயிர
 கணக்கான இளைஞர்கள் சுபாஷ் சந்திர
 போஸ் அவர்களின்
 போராட்டதிற்கு ஆதரவளித்தார்கள்.

அந்த இளைஞர்களுக் கெல்லாம்
 மறைமுகமாக
 பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் காந்தியின்
 ஆதரவாளர்கள்
 எண்ணிக்கை நாளுக்குநாள்
 குறைந்து கொண்டே போனது.
தமிழர்கள் சுபாஷ் சந்திரபோசின்
 போராட்டத்தில்
 நம்பிக்கை கொண்டு ராணுவத்தில்
 இணைய ஆரம்பித்தார்கள்.
அப்போது சுபாஷ் சந்திரபோஸ்
 தலைமையில் ஆயுத
 புரட்சி ஒன்று ஆரம்பித்து உள்ளார்கள்
 என்று வெள்ளையர்களுக்கு தெரியவர,
இவர்களை எல்லாம் வெள்ளையர்கள்
 வேட்டையாட ஆரம்பித்துள்ளார்கள்.


சந்திரபோஸின் இயக்கத்தில் பெரும்
 தமிழ் இளைஞர்கள்
 இணைந்து கொண்டதை அறிந்த
 காந்தியின் ஆதரவாளர்கள். சுபாஷ்
 சந்திரபோசை காட்டி கொடுக்கவும்
 ஆரம்பித்தார்கள். அதனால் அவரால்
 இந்தியாவில்
 இருந்துகொண்டு செயல்பட
 முடியாமல் போனது.
வெள்ளையர்களிடம்
 இருந்து தப்பித்து சுபாஷ்சந்திரபோஸ்
 வெளிநாடுக்கு சென்றார்.
சில
 வெளிநாட்டு தலைவர்களை சந்தித்து தனது போராட்டத்தின்
 ஆதரவை திரட்டினார்.

ஒவ்வொரு நாடாக சென்று போருக்கான
 ஆயுத தளவாடங்களை ஹிட்லர்
 மூலம் சேகரித்தார். எல்லாம் தாயாரான
 பின்பு இந்தியாவில் இருக்கும்
 வெள்ளையர்களின் ராணுவ
 முகாம்களின்
 எண்ணிக்கை எங்கே இருக்கிறது எத்தனை பேர்
 இருக்கிறார்கள்
 என்று உளவு பார்த்து தகவல்
 அறிந்து கொண்ட பின்னர்.

தமிழ் நாட்டில் இருக்கும் அவரின்
 ஆதரவாளர்களுக்கு தகவல்
 அனுப்பினார். நான் வெளிநாட்டில்
 மிகப்பெரிய ராணுவ
 கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறேன்.
இந்த ராணுவத்தில்
 இணைந்து நமது நாட்டு விடுதலைக்காக
 ஆயுதம் எடுத்து போராட
 விரும்புபவர்கள். என்னுடன்
 இணைந்து கொள்ளலாம் என்று தகவல்
 அனுப்பி இருந்தார்.


இந்தியா முழுவதும் இந்த தகவல்
 பரவியது. இதை அறிந்த தமிழக தேச
 பற்றாளர்கள் ஆயிரக்கணக்கான
 இளைஞர்கள் படகு மூலம்
 வெளிநாட்டுக்கு செல்ல
 ஆரம்பிதார்கள்.
அங்கே எல்லோருக்கும் போர்ப்
 பயற்சி அளிக்கப்பட்டது.
அப்போது போராளிகளிடம்
 சுபாஷ்சந்திரபோஸ் பேசினார் .
எமது தேசத்தில் வெறும்
 இருபது ஆயிரம் வெள்ளையனின்
 ராணுவம் இருக்கிறது. நாம்
 இங்கு மிகப்பெரிய ராணுவ
 கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறோம்.


அவர்களை நாம் கப்பல் மூலம்
 சென்று டெல்லி வரை தாக்க
 போகிறோம் டெல்லியில் தான்
 வெள்ளையனின் முழு பலமும்
 இருக்கிறது எனவே டெல்லி வரை நாம்
 சென்று தாக்க போகிறோம்
 என்று சொன்னார். ஆனால் இந்த
 ராணுவத்தில் பெரும்பாலானோர்
 தமிழர்கள் என்பது குறிப்பிட
 தக்கது .


ஒரு பக்கம் காந்தியின்
 அகிம்சை போராட்டம்
 நடந்து கொண்டிருந்தது.
சுபாஷ்சந்திரபோஸ்
 திட்டமிட்டபடி யுத்த ஆயுத
 கப்பல்கள் மூலம்
 சென்று டெல்லி வரை வெள்ளையர்களின்
 ராணுவத்தை அடித்தார்கள்.
அப்போது வெள்ளையர்கள் பாரிய
 உயிரிழப்புக்களை சந்தித்தார்கள்.
வெள்ளையர்களுக்கு வெளிநாட்டில்
 இருந்து வரும் ஆயுத
 உதவிகளை தடுத்தார்கள்
 முக்கியமான கடல்வழி பாதை சுபாஷ்
 சந்திர போஸின் கட்டுபாட்டுக்குள்
 வந்தது. அதனால்
 தொடர்ந்து வெள்ளையர்களால் யுத்தம்
 செய்யஇயலாமல் ஆயுத
 பற்றாகுறை வந்தது.

பொருளாதார
 பிரச்சனையும் அவர்களுக்கு வந்தது.
தொடர்ந்து அவர்கள் இந்தியாவில்
 இருப்பது பற்றி கேள்விகுறியானது.
சுபாஷ்சந்திரபோஸ்
 ராணுவத்தோடு நடந்து கொண்டிருக்கும்
 சண்டையில் வெள்ளையர்கள்
 தோல்வி அடைந்து கொண்டே வந்தார்கள்.
இந்த தோல்வியை அவர்களால்
 ஒப்பு கொள்ள முடியவில்லை.
அதனால் வெள்ளையர்கள்
 இந்தியாவை விட்டு வெளியேற
 முடிவு செய்தார்கள்.

ஆனால்
 இந்தியா முழுவதும்
 சுபாஷ்சந்திரபோஸ் அவர்களின்
 ராணுவ போராட்டம் தெரியவந்தது .
அதனால் காந்தி வழியில்
 போராடி கொண்டிருந்தவர்களுள்
 பெரும்பாலானோர் சந்திரபோஸ்
 அவர்களின் பின்னால் செல்ல
 ஆரம்பித்தார்கள். இதனால்
 வெள்ளையர்களுக்கு தொடர்ந்து இந்தியாவில் இருக்க
 முடியாத நிலைமை ஏற்ப்பட்டது.
ஆயுத போராட்டத்தை காந்தி அவர்கள்
 கடுமையாக எதிர்த்து வந்தார் சுபாஷ்
 சந்திர போஸ் மக்களை தவறான
 வழியில் கொண்டு செல்கிறார்
 என்றும் கூறி வந்தார்.


காந்தியின் ஆதரவாளர்களால்
 சுபாஷ்சந்திரபோஸ் காட்டி கொடுக்க
 பட்டார்.
அவரை கைது செய்து சிறையில்
 அடைத்தார்கள் வெள்ளையர்கள்.
ஆனால் சிறையில்
 வேலை செய்தவர்களின் உதவியுடன்
 சுபாஷ் சந்திர போஸ்
 தப்பித்து வந்தார். அதன்
 பிறகு ஆயுத போராட்டம் கடும்
 தீவிரம்
 அடைந்து வந்தது வெள்ளையர்கள்
 வெளியேறும் நிலைமையும் வந்தது.
ஆனால் நாங்கள் ராணுவ ரீதியாக
 தோற்கடித்து இந்தியாவில்
 விரட்டியடிக்க பட்டோம்
 என்று வந்து விடக்
 கூடாது என்பதற்காக.

அப்படி ஒரு அவமானம் வந்து விட
 கூடாது என்பதற்காக
 காந்தியை நாடினார்கள்
 வெள்ளையர்கள்.
வெள்ளையர்கள் அகிம்சை ரீதியாக
 போராடும்
 காந்தியை சந்தித்து நாங்கள் உங்கள்
 அகிம்சை போராட்டத்தால்
 உங்களுக்கு சுதந்திரம் கொடுக்க
 போகிறோம் நாங்கள்
 இந்தியாவை விட்டு போக
 போகிறோம் என்று சொன்னார்கள்.
காந்தியின்
 அகிம்சை பெயரை சொல்லி வெள்ளையன்
 இந்தியாவிற்கு சுதந்திரம்
 கொடுத்து விட்டு வெளியேறினான்.
ஆனால் தற்போது இந்திய
 அரசாங்கமும் இந்திய மக்களும்
 சுபாஷ்சந்திரபோஸை மறந்து விட்டார்கள்.

அவரின்
 மகத்தான போராட்ட வரலாற்றை திட்ட
 மிட்டு மறைத்து விட்டார்கள். காரணம்
 காந்தியின் அகிம்சை போராட்டம்
 பாதித்து விடும் இந்த
 வரலாறு மறைந்து விடும்
 என்பதற்காக.

டீசல் காரில் அதிக மைலேஜ் பெறுவதற்கான சில வழிமுறைகள்!

அட வேற ஏதாவது நினைத்துக் கொள்ளாதீர்கள். உச்சம் என்று குறிப்பிட்டுள்ளது மைலேஜைதான். பெட்ரோல் விலை விரட்டி அடித்து அரட்டி வரும் வேளையில் டீசல் கார்கள்தான் சிறந்த தீர்வாக இருக்கின்றன. அதிக மைலேஜ்தான் இதற்கு முக்கிய காரணம். குறைவான சப்தம், நவீன தொழில்நுட்பம் கொண்டதாக டீசல் எஞ்சின்கள் மேம்பட்டிருக்கின்றன.

இருந்தாலும், பெட்ரோல் கார் போன்று டீசல் கார்கள் உடனடி பிக்கப் கொடுப்பதில்லை. பெட்ரோல் காரை போன்று ஓட்டினால் நிச்சயம் அது மைலேஜில் அதிக பாதிப்பு ஏற்படுத்தும். எனவே, டீசல் கார் ஓட்டும்போது டிரைவிங் பழக்கத்தை சிறிதளவு மாற்றிக் கொண்டால் சிறப்பான மைலேஜ் பெறுவதோடு, ஒவ்வொரு பயணமும் இனிதாக அமையும். டீசல் கார் ஓட்டும்போது கடைபிடிக்க வேண்டிய சில எளிய வழிகளை காணலாம்.

பிக்கப்:

டீசல் கார்கள் குறைந்த எஞ்சின் சுழல் வேகத்தில்(ஆர்பிஎம்) அதிக டார்க்கை வெளிப்படுத்தும். எனவே, காரை கிளப்பும்போது மிதமான வேகத்தில் ஆக்சிலேட்டரை கொடுக்க வேண்டும். வேகமாக கிளப்பினால் என்ன என்கிறீர்களா?, ஒவ்வொரு 100 கிலோமீட்டர் தூரத்துக்கும் 2 லிட்டர் டீசலை கூடுதலாக ஊற்ற வேண்டியிருக்கும்.

இதனை ஒப்பிடும்போது கிட்டதட்ட பெட்ரோலுக்கு இணையான தொகையை டீசலுக்கும் அழ வேண்டியிருக்கும். எனவே, காரை கிளப்பும்போது ஆக்சிலேட்டரை மிதமாக கொடுத்து வேகமெடுக்க பழகிக்கொள்ளுங்கள். சிலர் டீசல் கார் மைலேஜ் கொடுக்கவில்லை என்று புலம்புவதும் அவர்களின் டிரைவிங் பழக்கத்தால் கூட இருக்கலாம். எனவே, டீசல் காரை பூப்போல கையாள பழகிக் கொள்ளுங்கள். மைலேஜில் உச்சத்தை நிச்சயம் தரும்.

குரூஸ் கன்ட்ரோல்:

நெடுஞ்சாலைகளில் செல்லும்போது குரூஸ் கன்ட்ரோல் இருந்தால் அவசியம் பயன்படுத்துங்கள். காலால் ஆக்சிலேட்டரை கொடுத்து ஓட்டும்போது சீரான வேகத்தில் செல்ல முடியாது. எனவே, குரூஸ் கன்ட்ரோல் பயன்படுத்தி ஓட்டினால் அதிக மைலேஜ் பெறுவதோடு, காரின் எஞ்சினும் சிறப்பாக இயங்கும். நெடுஞ்சாலைகளில் 100 கிமீ வேகத்துக்கு மேல் செல்வதை தவிர்த்தாலும் அதிக மைலேஜ் பெறலாம்.

கியர் மாற்றும் கலை:

சரியான எஞ்சின் சுழல் வேகத்தில் கியரை மாற்றினால் அதிக மைலேஜ் கிடைக்கும். மேலும், போக்குவரத்து நெரிசல் மற்றும் குறைந்த வேகத்தில் செல்லும்போது அதிக கியர்களில் (4 அல்லது 5 வது கியர்) செல்வதை தவிர்க்கவும். வேகத்துக்கு தக்கவாறு கியர் என்பது கூடுதல் மைலேஜுக்கு உத்தரவாதம். சிக்னல் உள்ளிட்ட இடங்களில் கியரில் வைத்தும் காரை எஞ்சினை நிறுத்த வேண்டாம். நியூட்ரலில் வைத்து மட்டுமே நிறுத்தவும்.

ஏசி மற்றும் எலக்ட்ரிக்கல் சாதனங்களை தேவையில்லாதபோது பயன்படுத்துவதை தவிருங்கள். சீட் வார்மர், டிஃப்ராஸ்ட் ஆகியவற்றை முடிந்தவரை தவிர்ப்பது கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை பெறலாம்.

கர்ப்பிணிகளின் சோர்வை போக்கும் உணவுகள்!

 

கருவுற்றிருக்கும் காலத்தில், ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டியது மிக முக்கியமான ஒன்று. ஏனெனில் தாயின் உணவைப் பொறுத்தே குழந்தையின் ஆரோக்கியம் உள்ளது. இந்த ஒன்பது மாத காலமும் ஒரு தாய் தன் குழந்தையை கருவில் சுமப்பது என்பது எளிதான காரியம் அல்ல.

ஒவ்வொரு பெண்ணும் தான் கருவுற்றிக்கும் காலத்தை பெரிதும் விரும்புவார்கள். குழந்தையின் ஒவ்வொரு அசைவுகளும், தாய்க்கு மிகுந்த இன்பத்தை அளிக்கும். ஆனால் கர்ப்ப காலத்தில் அதிக சோர்வு இருக்கும். அதிலும் முதல் மூன்று மாத காலத்தில் சோர்வு என்பது மிகவும் இயல்பான ஒன்றாகும்.

சிலர் கருவுற்றிக்கும் காலம் முழுவதுமே சோர்வாக உணர்வார்கள். எனினும் சிலர் அந்த சோர்வு நாளடைவில் குறைவதை உணர்வார்கள். நிறைய பெண்கள் கருவுற்றிக்கும் காலத்தின் தொடக்கத்திலேயே, அவர்களின் உடல் எடை அதிகரிக்கும் முன்பே, சோர்வுடன் இருப்பதை உணர்வார்கள்.

இத்தகைய சோர்வை சமாளிக்க கர்ப்பிணிகள் ஒருசில உணவுகளை டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அத்தகைய உணவுகள் என்னவென்று பார்க்கலாம்.

• குடைமிளகாய் உடலில் உள்ள இரும்புச்சத்தை செயல்படுத்த உதவுவதுடன் மட்டுமல்லாது, இயற்கையான வலிமையூட்டியாக செயல்பட்டு வரும். மேலும் உடல் சூட்டையும், ஆக்சிஜன் உட்கொள்வதை அதிகரிக்கவும் உதவும். அதிலும் ஒரு நாளில் உட்கொள்ள வேண்டிய வைட்டமின் சி சத்தானது, குடைமிளகாயில் 300% நிறைந்துள்ளது.

• ப்ளூபெர்ரி பார்க்க சிறிதாக இருந்தாலும், அவை நமது ஊக்கத்தின் அளவுகளை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றது. அதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் இயற்கையான சர்க்கரை அதிகம் நிறைந்துள்ளது. சில வகை பழங்களைப் போல, இது உடலில் உள்ள சர்க்கரை அளவுகளை அதிகரிப்பது இல்லை. அதனால் நம்மை இது அதிக நேரம் சக்தியுடன் இருக்கச் செய்யும்.

• வெண்ணெய் பழங்கள் வலிமையை மெதுவாக வெளிக்கொண்டு வருவதற்கு மூலதனமாக இருக்கும். அதில் மற்ற பழங்களை விட ஊட்டச்சத்து நிறைந்த கொழுப்பு மற்றும் அதிக நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. ஒரு முழு வெண்ணெய் பழத்தில் உள்ள 14 கிராம் நார்ச்சத்து, நாம் சாப்பிடும் பிரட் மற்றும் தவிடு உணவு தானியங்களுக்கு போட்டியாக இருந்து, நமது ஜீரணசக்திக்கு உதவும்.

• வாழைப்பழங்களில் உள்ள தனித்தன்மையான வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் மதியம் ஏற்படும் சோர்வில் இருந்து விடுபடச் செய்து, உடலுக்கு சக்தி அளிக்க உதவும். பொட்டாசியத்தை மூலதனமாக கொண்டுள்ள இவை தளர்ச்சி, தசைப்பிடிப்பு மற்றும் நீர் நீக்குதல் போன்றவற்றை எதிர்த்து செயல்படும்.

• வைட்டமின் சி நிறைந்துள்ள எலுமிச்சை பழம் கர்ப்பிணிகளுக்கு மிகவும் சிறந்தது. ஆகவே சோர்வைப் போக்க எளிதான வழி சுடுநீரிலோ அல்லது குளிர்ந்த நீரிலோ எலுமிச்சையை பிழிந்து குடிப்பதாகும். இதனால் அது நீர் சேர்தல் மற்றும் ஆக்ஸிஜனேட் செய்து, உடலை புத்துணர்ச்சியுடனும் வலிமையுடனும் இருக்கச் செய்யும்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top