.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday 23 November 2013

ஆண்கள் மறைக்க விரும்பும் ரகசியங்கள்!

 * ஆண்கள் தங்கள் சம்பளம் எவ்வளவு என்பதை மற்றவர்களிடம் மறைக்க விரும்புகிறார்கள். அதுபோல் தங்கள் செலவையும் ரகசியமாகவே வைத்திருக்க விரும்புகிறார்கள். அவர்களுடைய வரவு – செலவுகளை மற்றவர்கள் கணக்கிடுவதை விரும்பமாட்டார்கள். வருமானம் என்பது அவர்களுடைய பலம். செலவு என்பது பலவீனம். இரண்டுமே மற்றவர்களுக்கு தெரியக் கூடாது என்று நினைக்கிறார்கள். ஆண்கள் எது எதற்கு செலவிடுகிறார்கள் என்பதை அறிந்தாலே, அவர்களுடைய பலவீனம் வெளிப்பட்டுவிடும். அதனால் செலவை மிகமிக ரகசியமாக பாதுகாக்கிறார்கள்.

 * ஆண்கள் தங்கள் வாகனம் ஓட்டும் திறமையை மற்றவர்கள் சந்தேகக் கண்ணோடு பார்ப்பதை வெறுக்கிறார்கள். ஆண் தனக்கு கார் ஓட்டத் தெரியும் என்று கூறும்போது, அவரோடு நெருக்கமாக பழகும் பெண், ‘உங்களை நம்பி நான் காரில் ஏறலாமா?’ என்று கேட்டு விடக்கூடாது. தன்னிடம் அந்தப் பெண் பாதுகாப்பாக இல்லை என்ற உணர்வு ஆணுக்கு ஏற்பட்டு, தனது ஆண்மைக்கே அது ஒரு சவால் என்று நினைத்துவிடுகிறார்கள். அதனால் பெண்கள், தங்களுக்கு பிடித்தமான ஆண் கார் ஓட்டுவதில் சந்தேகம் இருந்தால் அதை அவரிடம் நேரடியாக தெரிவிக்காமல், ‘நாம் வாடகைக்காரில் சென்றால் அதிக மகிழ்ச்சியாக இருக்கும்’ என்று கூறலாம். வேறு டிரைவரை நியமிப்பது தங்களது மகிழ்ச்சியை அதிகரிக்கும் செயல் என்றும் கூறலாம்.

 * எப்போதும் தங்கள் தாய்மீது அதிக பற்று வைத்திருப்பார்கள். அந்த பற்று திருமணத்திற்கு பின்பும் தொடரும். இதை தடுக்க நினைத்தால் குடும்பத்தில் பிரச்சினைகளே மிஞ்சும். அவர்கள் தங்கள் தாய்மீது வைத்திருக்கும் அன்பால் மற்றவர்களுக்கு எந்த தீங்கும் விளையாது என்பதை மனதில் கொண்டு, அவரை போட்டியாளராக நினைக்காமல் வாழ்வதே அமைதிக்கு வழி. அது மட்டுமல்ல ஆண்களை எளிதில் வசப்படுத்த, அவர்களுடைய தாய்மீது அன்பு செலுத்துவதே குறுக்கு வழி. தங்களுடைய தாயை மற்றவர் மிகுந்த மரியாதையோடு நடத்த வேண்டும் என்று ஆண்கள் எதிர்பார்ப்பார்கள். மாறாக தாயின் குறைகளை மற்றவர்களிடம் கூறுவதையோ, மற்றவர்கள் முன்னிலையில் தாயை மோசமாகநடத்துவதையோ அவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

 * நட்புக்கு முன்னுரிமை கொடுப்பார்கள். அதனால் தங்கள் நண்பர்களைப் பற்றிய ரகசியங்களை காப்பார்கள். திருமணமான பின்பு, தனது மனைவியும் மற்றவர்களும் தங்கள் நண்பர்களை தன்னைப்போல் மதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். தன் நண்பன் எவ்வளவு கெட்டவனாக இருந்தாலும், அவனுக்கு நல்லவன் என்ற மேல்பூச்சு பூசுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவார்கள். அவர்கள் நட்பு விஷயத்தில் யாரும் தலையிட்டால்அவர்களுக்குபிடிக்காது.

பாரதரத்னா பட்டம் பெற்றும் பந்தா இல்லாமல் சாதாரண டீக்கடைக்கு சென்ற சச்சின்!

 
200வது டெஸ்ட் ஆட்டத்துடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சச்சின் தெண்டுல்கருக்கு சமீபத்து இந்தியாவின் மிக உயர்ந்த 'பாரதரத்னா' பட்டம் வழங்கப்பட்டது.

பல ஆண்டு காலமாக ஓய்வின்றி நாட்டுக்காக விளையாடிய சச்சின், ஓய்வுக்காக குடும்பத்துடன் உத்தரகாண்ட் மாநிலம், டேராடூன் மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலாதலமான முசூரிக்கு சென்றுள்ளார். அங்கு 5 நாட்கள் தங்க திட்டமிட்டுள்ள அவர் லால்டிப்பா பகுதியில் உள்ள தனக்கு பிடித்தமான டீக்கடைக்கு சென்றார்.

சச்சின் முசூரிக்கு வரும் போதெல்லாம் தனது நண்பர் சஞ்சய் நரங் என்பவர் வீட்டில் தங்குவது வழக்கம். அப்போது நண்பருடன் இந்த டீக்கடைக்கு அடிக்கடி வந்த சச்சினுக்கு டீக்கடையின் உரிமையாளர் பிரத்யேகமாக தயாரித்து தரும் மசாலா டீ மிகவும் பிடித்தப் போனது.

இஞ்சி, தேன், எலுமிச்சைப் பழம் சேர்த்து கடையின் உரிமையாளர் விபின் பிரகாஷ் அளிக்கும் டீயை ருசிப்பதற்காக மனைவி அஞ்சலியுடன் சச்சின் இந்த கடைக்கு மீண்டும் விஜயம் செய்தார்.

பன் மற்றும் டீயை ருசித்த அவர் சுமார் 1/2  மணி நேரம் அங்கேயே இருந்து ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

சச்சினின் வருகையை பற்றி மகிழ்ச்சியுடன் கூறும் விபின் பிரகாஷ், 'அவருக்கு இருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்.

எவ்வளவு உயர்ந்த நிலைக்கு போனாலும் அவர் இப்போதும் சராசரி வாடிக்கையாளர் போல் தான் பழகுகிறார்' என்று தெரிவித்தார்.

நெல்லிக்காய் ஜூஸ்...!


1.’காயம் என்ற நம் உடலைக் கற்பகம்போல் அழியாமல் வைத்திருக்கும் ஆற்றல்கொண்டது நெல்லிக்காய்’ என்று சித்தர்களே சொல்லி இருக்கிறார்கள்.நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருப்பதுபோலவே டேனின், ஃப்ளேவனாய்ட்ஸ்,எலாஜிக் ஆசிட் போன்ற துணை சத்துப் பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன.

2.சித்தா, ஆயுர்வேதம் போன்ற இயற்கை மருத்துவங்களில் நெல்லிக்காயைத் தவறாமல் பயன்படுத்துகிறார்கள். வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைக் கட்டுப்படுத்தும் ‘திரிபலா’ சூரணத் தயாரிப்பில் நெல்லிக்காய்க்கு முக்கியப் பங்கு உண்டு.

3.கொதிக்கும் இந்த வெயில் காலத்துக்கு, நெல்லிக்காய் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். உடலுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியைத் தரும் குணமுடையது என்பதால் ஜலதோஷத்தை உண்டாக்கிவிடும் என்று சிலர் தவறாக நினைக்கிறார்கள். உண்மையில் ஜலதோஷம் வராமல் நெல்லிக்காய் தடுக்கும். இது தவிர வைரஸ் மூலம் பரவும் நோய்களையும் கட்டுப்படுத்தும்.

4.திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி இருக்கிறது. ஆனால், வேறு எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு நெல்லிக்காயில் வைட்டமின் சி மிக அதிகம். ஒரு சின்னநெல்லிக்காயில் 600 மில்லி கிராம் வைட்டமின் சி இருக்கிறது. நம் நாட்டில் இரும்புச் சத்துக் குறைபாடு உடையவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.வைட்டமின் சி அதிகமாக நெல்லிக்காயில் இருப்பதால் காய்கறியில் இருக்கும் இரும்புச் சத்தை ஈர்த்து உடலுக்குக் கொடுக்கும்.

5.தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்ற சாதங்கள் சாப்பிடும்போது வெறும் நெல்லிக்காயைத் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். இதன் மூலம் அதில் இருக்கும் துவர்ப்புத் தெரியாது. நெல்லிக்காயைப் பெரும்பாலும் ஊறுகாயாகப் பயன்படுத்துகிறோம். ஆனால், பச்சைக் காயாகச் சாப்பிடும்போதுதான் நெல்லிக்காயின் சத்துகள் முழுமையாகக் கிடைக்கிறது. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று நெல்லிக்காயாவதுசாப்பிடலாம்.

6.நெல்லிக்காயில் கால்சியம் சத்து நிறைய இருப்பதால், எலும்புகள் உறுதியாகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவைக்கும். ரத்த சோகைக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்து. நெல்லிக்காய் தலைமுடியைக் கருமையாக செழிப்பாக வளரவைக்கும் என்பதால்தான் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய் வகைகளிலும் தலைச் சாயத் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.

7.தினமும் ஒரு நெல்லிக்காய் உண்டுவந்தால், சர்க்கரைக் குறைபாட்டைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம். அதிக உடல் பருமனால் கஷ்டப்படுகிறவர்கள் காலையில் வெறும் வயிற்றில்நெல்லிக்காய்ச் சாறுடன் இஞ்சிச் சாறு அருந்திவந்தால் தேவையற்ற எடை குறைந்து சிக்கென்ற தோற்றத்தைப் பெறலாம்.

8.நெல்லிக்காயுடன் புதினா, இஞ்சி, எலுமிச்சை சேர்த்து பழரசமாக்கி அருந்தினால் வயிற்றுக் கோளாறுகள் நீங்கும். காயங்களைக் குணப்படுத்தவும்புற்றுநோய் எதிர்ப்பு வல்லமையும் நெல்லிக்காய்க்கு உண்டு.

9.நெல்லிக்காயைத் துவையல் செய்தும் சாப்பிடலாம். சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் போன்றவற்றைச் சேர்த்து நெல்லிக்காய் உடன் துவையல் செய்து சாப்பிட்டால், ரத்தத்தில் கொழுப்பின் அளவு சீராகும். கொழுப்பைக் கட்டுப்படுத்துவதால் இதய சம்பந்தமான நோய்கள் வராமல் தடுப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. கண்களுக்கு மிகவும் நல்லது.

10கீழாநெல்லி, கரிசலாங்கண்ணியுடன் நெல்லிக்காய் சேர்த்து செய்யும் மருந்து மஞ்சள் காமாலையைக் குணப்படுத்தும் வல்லமை கொண்டது.

குளிர்காலத்திற்கு ஏற்றவாறு வீட்டை தயார் செய்ய சில டிப்ஸ்...

நரம்புகளை நாட்டிய மாடச் செய்யும் குளிர்காலம் வந்துவிட்டது. குளிரைத் தாங்கும் உடைகள், சூடான உணவுகள் மற்றும் குளிரிலிருந்து தோலை பராமரிப்பதற்கான கிரீம்கள், மருந்துகளை வாங்கி வைத்தல் என ஏகப்பட்ட வழிமுறைகளில் நீங்கள் தயாராக இருந்தால் மட்டுமே குளிர்காலத்தை எதிர்கொள்ள முடியும். ஆனால், இவையெல்லாவற்றையும் விட முக்கியமான ஒரு விஷயத்தை நாம் மறந்து விடக்கூடாது.

குளிர்காலத்திற்காக நம்மை தயார்படுத்திக் கொள்வதைப் போலவே, நாம் வசிக்கும் வீட்டையும் தயார் செய்வது அவசியம். குளிர்காலத்திற்கு ஏற்ற வகையில் வீட்டை நாம் தயார் செய்ய வேண்டும். வழக்கமாகவே வீட்டை வெப்பமாக வைத்திருக்கவும், குளிருக்கு இதமாக வைத்திருக்கவும் இந்த வேலைகளை நாம் செய்வோம். அதற்காக நீங்கள் பெரிய அளவில் மாற்றங்கள் செய்ய வேண்டியதில்லை, சில டிப்ஸ்களை பின்பற்றினாலே போதும்.

குளிர்காலத்திற்கு ஏற்றவாறு வீட்டை தயார் செய்ய சில டிப்ஸ்...
குளிர்காலத்திற்கு உங்களுடைய வீட்டை தயார் செய்வதற்கான சில குறிப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.

சூடுபடுத்துங்கள் - மிகவும் கடுமையான குளிர் நிலவும் காலங்களில் உங்கள் வீட்டை வெப்பமாகவும் மற்றும் கதகதப்பாகவும் வைத்திருக்கும் வகையில், ஹீட்டர் அல்லது நெருப்பு மூட்டும் இடத்தை தயார் செய்து வைக்கவும். ஹீட்டர்களுக்கு போதுமான அளவு கேஸ் வைத்திருக்கவும் அல்லது மின்சாரத்தில் இயங்கும் ஹீட்டர்களை பயன்படுத்தவும். உங்கள் வீட்டு சீலிங் ஃபேனை எதிர் திசையில் சுழலுமாறு இணைப்புகளை மாற்றிக் கொடுத்தால் போதும், வீட்டுக்குள் கதகதப்புக்கு நிறைய வழி கிடைத்து விடும்.

திரைகள் - உங்கள் வீட்டின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளுக்கு மொத்தமான திரைகளை பொருத்தவும். இதன் மூலம் வீட்டுக்குள் குளிரான ஊதைக்காற்று வருவதை பெருமளவு தவிர்த்திட முடியும். எனவே, குளிர்காலத்தை வரவேற்கும் வகையில் மொத்தமான மற்றும் ஃபேன்ஸியான திரைகளை ஜன்னல் மற்றும் கதவுகளில் பொருத்தி அலங்கரித்து வைக்கவும். மேலும், மொத்தமான பாய்கள் மற்றும் சோபா குஷன்களை பயன்படுத்தலாம். குளிர்காலத்தில் டல்லாக இருக்கும் பருவநிலையை, பளிச் நிற திரைகளால் உற்சாகமான பொழுதுகளாக மாற்றுங்கள.

பர்னிச்சர்கள் - வீட்டின் முக்கிய அங்கமாக இருப்பது அங்கிருக்கும் பர்னிச்சர்கள் தான். குளிர்காலத்திற்கு உங்கள் வீட்டை தயார் செய்யும்போது, பர்னிச்சர்களை முறையாக வைத்து, பராமரிப்பதும் முக்கிய பங்கு வகிக்கும். உட்காரும் இருக்கைகளை காலியான இடங்களில் வைக்காமல், ஹீட்டருக்கு சற்றே அருகில் இருக்குமாறு அமையுங்கள. மேலும், ஜன்னல்களை இறுக்கமாக மூடும் போது, காற்று உள்ளே வராமல் இருப்பதை உறுதி செய்யவும். இதன் மூலம் வீடு கதகதப்பாக இருக்கும். பெரிய பர்னிச்சர்களையும் மற்றும் மித வெப்பமாக இருக்கும் பொருட்களையும் பயன்படுத்தினால் வீடு வெப்பமாக பராமரிக்கப்படும்.

ஒழுகல்களை அடைத்தல் - குளிர்காலம் வருவதற்கு முன்னர் ஓழுகும் குழாய்கள் மற்றும் குளியலறை சாமன்களை பழுதுபார்த்து தயார் செய்து விடவும். ஏனெனில், குளிரான நீர் உங்கள் வீட்டு குழாய் வழியாக வெளியேறும் போது, வீட்டின் வெப்பநிலை குறைந்து விடும். குளிர்காலத்தில் வீட்டை வெப்பமாக வைத்திருக்க வேண்டியிருப்பதால், இது போன்ற ஒழுகும் குழாய்களை தவிர்ப்பது நல்லது.

காப்பு வேலைகள் (இன்சுலேசன்) - உங்களுடைய பகுதியில் கடுங்குளிர் நிலவினால், பரண் மீதும், பிற இடங்களிலும் குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக இன்சுலேசன் செய்யுங்கள். இதன் மூலம் வீட்டுக்குள் வெப்பம் நிலைநிறுத்தப்படும். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மற்றும் முறையான டி-ஹைட் ப்ரீ இன்சுலேட்டர்களை பயன்படுத்தினால் நல்ல பலன் உண்டு. மேலும், குழாய்களை பாதுகாத்து வைத்திருந்து, அவை உறைந்து போவதையும் தவிர்த்திடவும். நாளுக்கு ஒருமுறை சூடான தண்ணீரை நிரம்பி ஓடச் செய்வதன் மூலமாக உங்களுடைய குழாய் உறைந்து போவதை தவிர்க்க முடியும்.

குளிர்காலத்தில் உங்கள் வீட்டை வெப்பமாகவும், வசதியாகவும் வைத்திருக்க இந்த குறிப்புகள் உங்களுக்கு உதவும். இவை மட்டுமல்லாமல் வெப்பமான குஷன்களையும் மற்றும் பாய்களையும் பயன்படுடுத்தியும், எல்லா மின்சாதனங்களையும் சோதித்து பார்த்தும், கூரைகளில் தண்ணீர் ஓடும் இடங்களை சுத்தம் செய்தும் இதமான குளிரை அனுபவித்திட முடியும்.

நீங்கள் முன்கூட்டியே தயாராகி இருந்தால் குளிர்காலம் உங்களுக்கு இதமானதாக இருக்கும். உங்களுக்கு எதிரில் நெருப்பை மூட்டி விட்டு, போர்வையை போhத்திக் கொண்டு, ஈஸி சேரில் அமர்ந்தபடி காபியை குடித்து அனுபவிக்கும் குளிர்காலத்தை எண்ணிக் கனவு காணத் தொடங்குங்கள். எனவே, குளிரை தொந்தரவாக கருதுவதை விட்டு விட்டு, வீட்டை தயார் செய்யும் பணியை விரைந்து செய்யுங்கள்.
 

போலீஸ் ஸ்டேஷனில் ஏடிஎம்(ATM) வைக்கலாம்!

 

பெங்களூர் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க சென்ற பெண் அதிகாரியை வெட்டி பணத்தை பறித்து சென்ற கொடூர சம்பவம் கடந்த செவ்வாய் அரங்கேறியது. ஒவ்வொரு முறையும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போது, ஏடிஎம்களின் பாதுகாப்பு பற்றி பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால், சம்பவம் நடந்த 10 நாட்களில் அந்த விஷயம் கிணற்றில் விழுந்த கல்லாக மாறிவிடுகிறது. ஏடிஎம்களுக்கு செக்யூரிட்டிகளை நியமிப்பது, கேமராக்களை பொருத்துவது ஆகிய நடவடிக்கைகளால் பெருமளவில் செலவு ஏற்படுகிறது; அதனால் எங்களால் அதை செய்ய முடியவில்லை என்று வங்கிகள் தரப்பில் கூறப்படுகிறது.
 
 இதற்கு மாற்று நடவடிக்கையாக, ஏடிஎம்களை போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் அமைக்கலாம் என்று கடந்த ஆண்டில் டெல்லி போலீஸ் அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர். இந்த கருத்து ஏற்கத்தக்கதாக உள்ளது. பாதுகாப்புக்கு தனியாக செக்யூரிட்டிகளை நியமிக்க வேண்டியதில்லை; பொதுமக்கள் எந்த நேரத்திலும் பணம் எடுக்க செல்லலாம்; வெளியூர்களில் இருந்து வருபவர்கள் ஏடிஎம்களை தேடி அலைய வேண்டிய நிலை ஏற்படாது.

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இதற்கு கைமாறாக குறிப்பிட்ட தொகையை போலீஸ் ஸ்டேஷன்களுக்கு வங்கிகள் செலுத்தினால் போதும். இரு தரப்புக்கும் லாபமாக அமையும் என்று அவர்கள் தெரிவித்திருந்தனர். இதற்கு யூனியன் பிரதேசங்களில் மத்திய உள்துறையும், மாநிலங்களில் அரசும் அனுமதி அளிக்க வேண்டும். சிறந்த திட்டமாக தெரிந்த போதும், இது என்ன ஆனது என்று இதுவரை யாருக்குமே தெரியவில்லை. இப்போது மீண்டும் ஒரு விரும்பத்தகாத சம்பவம் நடந்துவிட்ட நிலையில், நாடு முழுவதும் ஏடிஎம்களில் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று எல்லா மாநிலங்களில் இருந்தும் போலீஸ் அதிகாரிகளால் அறிக்கை, பேட்டி வெளியாகிறது.

இதுவும் 10 நாட்களுக்கு பின்னர் மறக்கடிக்கப்பட்டுவிடும் என்பதில் சந்தேகமே இல்லை. மற்ற மாநில பிரச்னைகளை விட்டு தமிழக ஏடிஎம்களை மட்டும் ஆராய்ந்தால், இங்குள்ள 60 சதவீதம் மையங்களில் கேமராக்கள் பொருத்தப்படவில்லை என்றே இணையதளங்கள் கூறுகின்றன.

கேமராக்களையே இன்னமும் வங்கிகளால் அமைக்க முடியாத நிலையில், 3 ஷிப்ட்களுக்கு செக்யூரிட்டிகளை போட்டு, அவர்கள் எப்படி ஏடிஎம்களுக்கு, பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க போகிறார்கள் என்பதை எண்ணி பார்க்கவே முடியவில்லை. வங்கிகளில் பணம் எடுத்து வரும் நிலை இருந்த போது, பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை குறைவு. ஏடிஎம்களில் பணம் எடுத்து செல்லும் நிலையில், குற்ற சம்பவங்களால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. காரணம், பாதுகாப்பு. வங்கிகள், அரசுகள் கவனிக்க வேண்டிய விஷயம்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top