.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday 21 November 2013

சீதாப்பழ பர்பி - சமையல்!

                             
என்னென்ன தேவை?

சீதாப்பழம் - 4,

தேங்காய் துருவல் - 1 கப்,

முந்திரி - 50 கிராம்,

சர்க்கரை - 1 கப்,

நெய் - சிறிதளவு.


எப்படிச் செய்வது? 

சீதாப்பழத்தின் சதைப் பகுதியை எடுத்து அதனுடன் முந்திரி, தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வைக்கவும். சர்க்கரையை கம்பிப்  பதத்துக்குக் காய்ச்சி, அதில் கலவையை கொட்டி நெய் விட்டு கிண்டவும். சுருள வந்தவுடன் நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டுகள் போடவும்.

It is part of the flesh citappalat with cashew, coconut and grind put on Mickey.

ஒருமுறை மட்டும் படிக்கக்கூடிய Email அனுப்ப முடியும்!

 

மின்னஞ்சல் என்பது தவிக்க முடியாத ஒன்றாகி விட்டது நாம் ஒவ்வொரு நாளும் நிறைய மின்னஞ்சல் அனுப்புகிறோம்  ஆனால்  அவைகளில் சில முக்கியமான தகவல்களும் அடங்குகின்றது  நம்மை தவிர யாரும் பாத்து விட கூடாது என்கிற தகவல்களையும் அனுப்புகின்றோம் . இணையத்திருடர்களால் நம்முடைய கணக்கு திருடப்பட்டால் கூட  நம்முடைய இரகசியங்களை யாரும் பாத்திடா வண்ணம்  ஒரு முறை பாக்க கூடிய மின்னஞ்சல்களை எப்படி அனுப்பலாம் என்று பார்ப்போம்

 அழகாக மின்னஞ்சல் அனுப்ப மென்பொருள் என்ற பதிவில் எப்படி அழகாக முன்னன்சல் அனுப்புவது என்ற பதிவையும் பாருங்கள்

காதலை சொல்ல கூட இதனை பயன்படுத்தலாம் காரணம் அண்ணாவிடம் போட்டு குடுக்க முடியாது …

சரி இதனை எப்படி செய்வது என்று பார்ப்போம் அதற்கு தீர்வாக தான் ஒரு இணையதளம் உள்ளது. கீழே உள்ள சுட்டியில் சென்றவுடன் தோன்றும் விண்டோவில் சென்று  அனுப்ப வேண்டிய தகவலை தட்டச்சிடவும்.

அதன் பின் தங்களுக்கு ஒரு தொடுப்புக் கிடைக்கும். அதை தகவல் சேர வேண்டியவருக்கு எப்படியாவது அனுப்பிவிடுங்கள்.
அவர் திறந்து வாசிக்கலாம் அதன் பிறகு அவர் மூடி விட்டுத் திறந்தால் மறுபடியும் அங்கே தகவல் இருக்காது.

இணைய முகவரி   https://privnote.com/

காணாமல் போன விளையாட்டுகள்!

village games
அழிந்து போன கிராமத்து விளையாட்டுகளைத் தேடி ‘குங்குமம் தோழி’ மேற்கொண்ட பயணத்தில் கிடைத்த பொக்கிஷத்தை சென்ற இதழில்  பகிர்ந்தோம். அதன் தொடர்ச்சியாக இன்னும் சில அருமையான விளையாட்டுகள் இங்கே... ஆடுவோமே!

உப்புக்கோடு


உத்தி பிரித்தல் மூலம் 2 அணிகள் பிரிக்கப்படும். செவ்வக வடிவில் நீளமாக கோடு கிழிக்கப்படும். நடுவில் ஒரு கோடும், இடையில் ஓரு ஆள் நின்று  கைநீட்டி தொடமுடியாத அளவுக்கு இடைக்கோடுகளும் போட்டுக்கொள்வார்கள். தொடங்கும் அணியின் தலைவர் முதல் கோட்டில் நிற்பார்.  மற்றவர்கள் அடுத்தடுத்த கோட்டில் நிற்பார்கள். எதிரணியினர் இவர்கள் அனைவரையும் ஏமாற்றி கோட்டைக்கடந்து வெளியில் செல்ல வேண்டும்.  முதல்கோட்டில் இருப்பவருக்கு நடுக்கோட்டில் ஓடி எதிராளியை அவுட் செய்யவும் அதிகாரம் உண்டு. இவரது கவனத்தைத் திருப்ப, மற்றொரு  கட்டத்தில் நிற்பவர், நடுக்கோட்டில் கால்வைத்து தண்ணி தண்ணி என்று அழைப்பார். இவர் அவரைத் தொட ஓடவேண்டும். யாராவது ஒருவரைத்  தொட்டாலும் ஆட்டம் முடிந்துவிடும். முதலில் கோடுகளைக் கடந்து வெளியேறும் ஒருவர் கைப்பிடி மண்ணை அள்ளிக்கொண்டு, உப்பு என்று  சத்தமிட்டபடி ஒவ்வொரு கட்டத்திலும் நிற்கும் தம் அணியினரைத் தொட்டு திரும்பவும் கோட்டைக் கடந்து முகப்புக்கு வரவேண்டும். பரபரப்பான  விளையாட்டு!

மெல்ல வந்து கிள்ளிப்போ!

2 அணியினர் எதிரெதிரே அமர்ந்திருப்பார்கள். இரு அணித் தலைவர்களும் தங்கள் அணியினருக்கு ஒவ்வொரு பெயர் வைப்பார்கள். பழத்தின் பெயர்,  பூவின் பெயர், சினிமாவின் பெயர் என எதுவாக இருந்தாலும் ஒரே மாதிரி இருக்க வேண்டும். பின்னர் எதிர் அணியில் உள்ள ஒருவரின் கண்களை  இறுக மூடிக்கொண்டு தம் அணிக்கு வைத்த ஒரு பெயரைச் சொல்லி அழைப்பார் (உதாரணத்துக்கு... ‘ரோஜாப்பூவே ரோஜாப்பூவே மெல்ல வந்து
கிள்ளிப்போ...’). ரோஜாப்பூ சத்தமில்லாமல் வந்து கிள்ளிவிட்டு சாதாரணமாக அமர்ந்துவிடும். பின், எல்லோரும் தலையை வெட்டி நாய்க்குப் போடுங்க  என்று ஆணையிடுவார். எல்லோரும் கீழே குனிந்து கொள்வார்கள். அதன்பிறகு கண்களை திறந்து
விடுவார். இப்போது கிள்ளு வாங்கியவர் ரோஜாப்பூ யாரென கண்டுபிடிக்க வேண்டும்!

கள்ளன் வாரான்...  களவாணி வாரான்!

மொத்த பிள்ளைகளில் பெரியவர்களாக இருவர் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்கள்தான் விளையாடப்போகும் வீரர்கள். மற்ற அனைவரும் ஒரே  வரிசையில் கீழே சம்மண மிட்டு அமர்ந்து கொள்வார்கள். எல்லோரும் கைகளை பின்னால் வைத்திருப்பார்கள். வீரர்களில் ஒருவர் முன்னால் நிற்பார்.  மற்றவர், கையில் ஒரு கல்லை எடுத்துக்கொண்டு,

‘காயே கடுப்பங்கா
கஞ்சி ஊத்தி நெல்லிக்கா
உப்பே புளியங்கா
ஊறவச்ச நெல்லிக்கா
கல்லன் வாரான் காரைக்குடி
கல்லை நீயும் கண்டுபிடி’

என்று பாடியபடி ஒவ்வொருவருடைய கையிலும் கல்லை வைப்பது போல பாவ்லா காட்டி யாராவது ஒருவரின் கையில் வைத்து விடுவார்.  வைத்தபின் எல்லாரும் தலையை வெட்டி நாய்க்குப் போடுங்க என்பார். எல்லோரும் குனிந்து கொள்ள, யாருடைய கையில் கல் இருக்கிறது என்பதை  எதிரில் நிற்பவர் கண்டுபிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் கல்லை வைத்தவருக்கு ஒரு மதிப்பெண்!

பூப்பறிக்க வருகிறோம்!


2 குழுவினர் எதிரெதிர் திசையில் நிற்பார்கள். ஒருவரோடு ஒருவர் கைகோர்த்தபடி எதிர் அணியினரை நோக்கி குதித்தபடி பாட்டு பாடி வருவார்கள்.  இரு அணியிலும் சமமான பிள்ளைகள் இருக்க வேண்டும். ‘பூப்பறிக்க வருகிறோம் வருகிறோம் எந்த மாதம் வருகிறீர் வருகிறீர் டிசம்பர் மாதம்  வருகிறோம் வருகிறோம் யாரைத் தேடி வருகிறீர் பூவைத் தேடி வருகிறோம் எந்தப் பூவை தேடுவீர் மல்லிகையை தேடுவோம்’ இப்படி பாடியதும்  ‘மல்லிகை’ என்று பெயர் வைத்த பெண்ணைப் பிடித்து இழுப்பார்கள். அந்த பெண் அந்தப் பக்கம் சென்றுவிடாமல் இந்த அணி இழுக்க, ஒரே  களேபரம்தான்!

கழங்கு

பெண்கள் வட்டமாக அமர்ந்து ஆடும் விளையாட்டு. வட்ட வடிவிலான 7 கூழாங்கற்கள். மேலே தூக்கிப்போட்டு கீழே இருப்பவற்றையும் சேர்த்து அள்ள  வேண்டும். ஒன்றான், இரண்டான், மூன்றான் என அள்ள வேண்டிய கற்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். எல்லாவற்றையும் சரியாக  விளையாடியவர்கள் இறுதியில் பழம் வைப்பார்கள். ஒவ்வொரு காய் ஆடும்போதும் ஒவ்வொரு பாட்டு உண்டு!

ஒன்றான்: அலசல் அலசல் பாட்டிமா
தொட்டுட்டேன் தொடங்கிட்டேன்
தொட்டில் மஞ்சள் அரச்சிட்டேன்
அரச்ச மஞ்சளைப் பூசிட்டேன்
அம்மியிடுக்குல படுத்திட்டேன்
படுத்த பாயில சுருட்டிட்டேன்
ரெண்டான்: ஈரெண்டு எடுக்கவும்
இளந்தம் பழுக்கவும்
பழுத்து தின்னவும்
மூன்றான்: முக்குட்டு சிக்குட்டு
மூன்றாம் படிக்கட்டு
நான்காம்: நாக்கொத்தி செங்கொத்தி
நாகம் பழங்கொத்தி
அஞ்சான்: ஐப்பால் அரங்கு
பம்பாய் சிலுக்கு
ஆறாம்: ஆக்கூர் முறுக்கு
அள்ளிப்போட்டு நொறுக்கு
ஏழாம்: ஏழதாள எங்க நீ போற
எட்டாம் நம்பர் சேல

இப்படி, கொண்டாட்டமும் நட்புணர்வும் நம்பிக்கையும் தவழும் நூற்றுக்கணக்கான விளையாட்டுகள் நம் கிராமங்களில் உண்டு. பல்லாங்குழி, தாயம்,  நாடு பிடித்தல், ஆடுபுலியாட்டம், கொல கொலயா முந்திரிக்கா, டிக் டிக், கண்ணாமூச்சி, நாலுமூலை, ஊதுகாய், கிட்டிப்புள், பளிங்கி, நொண்டியாட்டம்,
ஐஸ்பால், பச்சகுதிரை, குளம்கரை, சின்னப்பானை-பெரியபானை, பரமபதம், கரகரவண்டி, கவன், ராஜா ராணி, பம்பரம் விடுதல், செதுக்கு சில்லு, கல்லா  மண்ணா, நூத்துக்குச்சி, பூப்பந்து எறிதல் என மூளைக்கும் உடலுக்கும் வேலை கொடுக்கும் விளையாட்டுகள் நிறைந்திருந்தன. இன்றுள்ள  பிள்ளைகளுக்கு இந்த விளையாட்டு அனுபவங்கள்
கிட்டுவதேயில்லை!

பிளாக்பெர்ரி பார்ஸ்ச் டிசைன் P'9982 ஸ்மார்ட்ஃபோன் அறிமுகம்!


கனடியன் கைப்பேசிகளின் தயாரிப்பு நிறுவனமான பிளாக்பெர்ரி உடன் பார்ஸ்ச்  டிசைன் இணைந்து ஒரு புதிய அனைத்து டச் பார்ஸ்ச் டிசைன் P'9982 லக்சரி  ஸ்மார்ட்ஃபோனை அறிமுகப்படுத்தியுள்ளது. பிளாக்பெர்ரி பார்ஸ்ச் டிசைன் P'9982  ஸ்மார்ட்ஃபோனை நவம்பர் 21-ம் தேதியில் இருந்து பார்ஸ்ச் டிசைன் கடைகளில்  கிடைக்கும்.

வரம்பிடப்பட்ட 500 போர்ஸ் டிசைன் P'9982 ஸ்மார்ட்ஃபோன் சாதனங்கள் மட்டுமே  டிசம்பர் மாத தொடக்கத்தில் உலகளவில் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது.  பிளாக்பெர்ரி பார்ஸ்ச் டிசைன் P'9982 ஸ்மார்ட்ஃபோன் விலை விவரங்கள் இதுவரை  அறிவிக்கப்படவில்லை. P'9982 ஸ்மார்ட்ஃபோன் பிளாக்பெர்ரி 10.2 ஓஎஸ்  பதிப்புகளில் இயங்கும் என்று பிளாக்பெர்ரி குறிப்பிட்டுள்ளது.

P'9982, 1.5GHz டூயல் கோர் குவால்காம் MSM8960 சிப்செட் மூலம்  இயக்கப்படுகிறது. 2GB ரேம், 4.2-இன்ச் டிஸ்ப்ளே உடன் 768x1280 பிக்சல்கள்  தீர்மானம் கொண்டுள்ளது. பிரீமியம் பிளாக்பெர்ரி ஸ்மார்ட்ஃபோனில் 16GB  inbuilt சேமிப்பு வருகிறது மற்றும் 64GB வரை விரிவாக்க கூடிய மைக்ரோ  SD கார்டு உடன் கொண்டுள்ளது.

பிளாக்பெர்ரி பார்ஸ்ச் டிசைன் P'9982 முக்கிய குறிப்புகள்

1.5GHz டூயல் கோர் குவால்காம் MSM8960 சிப்செட்,

4.2-இன்ச் டிஸ்ப்ளே உடன் 768x1280 பிக்சல்கள் தீர்மானம்,

2GB ரேம்,

பிளாக்பெர்ரி 10.2 ஓஎஸ் பதிப்பு

64GB வரை விரிவாக்க கூடிய மைக்ரோ SD கார்டு

ஏ.வி.எம்மின் புது முடிவு!


தமிழ் சினிமாவின் முக்கியத் தயாரிப்பு நிறுவனங்களில்ஏவிஎம் ஸ்டூடியோவைத் தவிர்க்க முடியாதது. தற்போது அந்த நிறுவனம் ஒரு புதிய முயற்சியில் இறங்கத் திட்டமிட்டுள்ளது.

குறும்படங்களின் ஏகோபித்த வரவேற்பால் சின்னச் சின்ன படங்களைத் தயாரிக்க முன்வந்துள்ளது.

ஒரு மணி நேரம் மட்டும் ஓடும் படங்களைத் தயாரித்து இணையதளங்களில் வெளியிடலாம் என்று ஏ.வி.எம் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.

தங்களின் முதல் இணையத் தயாரிப்புக்கு ஏவிஎம் நிறுவனம் வைத்துள்ள பெயர் “இதுவும் கடந்து போகும்” .

55 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படத்தில் சிவாஜியின் பேரனான சிவாஜி தேவ், ஷில்பா பட், ரவி ராகவேந்தர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை ஸ்ரீஹரி பிரபாகர் எழுத, அவருடன் இணைந்து இந்த படத்தை அனில் கிருஷ்ணன் இயக்கியுள்ளார்.

'இதுவும் கடந்து போகும்' படம் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது.

''திரைப்படம், சின்னத்திரைக்கு இணையான ஊடகமாக இணையமும் வளர்ந்து வருகிறது. அதனை உணர்ந்து, அந்த வளர்ச்சியில் பங்கு பெற ஏ.வி.எம்அதற்கான படங்களைத் தயாரிக்க முடிவு செய்துள்ளது.

அதற்கான முதற்படி தான், இதுவும் கடந்து போகும் என்ற ஒரு மணி நேரப் படம்'' என்று ஏ.வி.எம் தெரிவித்துள்ளது.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top