.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday 19 November 2013

பேஸ்புக் & தமிழன்? ஒப்பீடு!

பேஸ்புக் ஓனர் "மார்க் ஜூகர்பெர்க்" தமிழரின் பாரம்பரிய பெருமைகளை காப்பாற்ற பேஸ்புக் கை உருவாக்கி உள்ளார் !!!!

ஆதாரம்:

1. வீட்டு விசேஷங்களில் மாற்றிமாற்றி மொய்
 செய்து கொள்ளும் தமிழர் பாரம்பரிய
 முறையை பின்பற்றி "லைக்" செய்யும்
 முறையை அறிமுக படுத்தியுள்ளார்.

2. மகிழ்ச்சி, தளர்ச்சி, குறைகளை மற்றவர்ககளிடம்
பகிர்ந்து கொள்ள "share" செய்யும் முறை!

3. திண்ணை யில் அமர்ந்து வெட்டி அரட்டை அடிப்போருக்கான "comment" "chat" செய்தல் முறை.

4. சும்மா இருப்பவனைத் தூண்டி விட்டு வம்பளக்க
 வைக்கும் தமிழரின்(திராவிட) சிறப்பை உணர்த்தும்
"poke" (உசுப்பி விடுதல்) பட்டன்.

5. கூட்டமாக சென்று வம்பு செய்ய "group"

 6. சுய தம்பட்டம் அடிக்க "profile"

 7. கோர்த்து விட்டு கூத்து பார்க்க "Add tag"

 8. "நான் செத்தாலும் என்னை பார்க்க வராதே"
என்னும் வீராப்பு பார்ட்டி களுக்காக "Unfriend"
 "Block this person"

 9. புரளிகள் பரப்ப , கிசுகிசு பேச "messages"

 10. திக்குத் தெரியாத முட்டுச் சந்தில்
 வைத்து அடிக்க, துண்டு போர்த்தி அடிக்க "fake id"

இப்படி தமிழரின் பாரம்பரிய பெருமைகளை காப்பாற்ற பேஸ்புக் கை உருவாக்கிய "மார்க்" அவர்களை அமெரிக்க சனாதிபதி ஆக்க பரிந்துரை செய்யுமாறு தமிழர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்..

புத்தகம் வாசிப்பது பற்றி புகழ் பெற்ற மேதைகள் சொன்ன சில சுவாரசியமான தகவல்கள் !!!


► ''என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்று'' என்றார் பெட்ரண்ட் ரஸல்.


► மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் ‘புத்தகம்’ என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.


► 'வேறு எந்தச் சுதந்திரமும் வேண்டாம். சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும்’ என்றாராம் நெல்சன் மண்டேலா.


► பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என நாடு கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம். இன்று மாஸ்கோ லெனின் நூலகம்தான் உலகிலேயே மிகப் பெரியது.


► ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன்பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் சார்லிசாப்லின்.


► 'ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் மிகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான்’ என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்.

'தூம் 4'ல் நடிப்பாரா அஜித்?

  
பாலிவுட்டில் 'தூம்1', 'தூம்2'  படங்கள் மாஸ் ஹிட் ஆனதால், 'தூம்3' படம் உருவானது.

'தூம் 3' படம் ரிலீஸ் செய்யத் தயாராக உள்ளது. அமீர்கான், அபிஷேக்பச்சன், காத்ரீனா கைஃப், உதய் சோப்ரா ஆகியோர் நடித்துள்ளதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், 'தூம் 4' படம் எடுத்தால் அதில் அஜித் நடித்தால் நடிப்பார்  என்று சொல்லப்படுகிறது.

'மங்காத்தா', 'ஆரம்பம்' படங்களில் ஆக்ஷன் காட்சிகளில் அப்ளாஸ் அள்ளியிருக்கிறார் அஜித்.

கார், பைக் ரேஸில் அஜித்தை அடித்துக்கொள்ள ஆளில்லை  என்பதால் 'தூம்4' படத்தில் நடிக்க அஜித் மிகப் பொருத்தமாக இருப்பார் .

மேலும், 'ஆரம்பம்' பாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த சமயத்தில் அஜித் பாலிவுட்டில் நடிப்பது சரியாக இருக்கும் என்கிறார்கள்.

அஜித் பாலிவுட்டில் நடிப்பாரா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஐ என் எஸ் விக்ரமாதித்யா – கொஞ்சம் நதி மூலம் + ரிஷி மூலம்!



 ஐ என் எஸ் விக்ரமாதித்யா - என்னும் மாபெரும் விமான தாங்கி போர்க்கப்பலை இந்தியா பத்தாண்டுகளுக்கு முன் வாங்கியது நினைவிருக்கலாம். ஆனால் அது இன்னும் சில நாட்களில் இந்தியக்கடல் எல்லைக்குள் வந்து சேரும். இது ஒரு 9 வருட சமாச்சாரம். இது முதலில் புதுக்கப்பல் அல்ல இது ஒரு 26 வருட கப்பல். இதை ரஷியா கட்டியது 1987 ஆம் ஆண்டு. பின்பு இதை 9 வருஷத்திலே மூட்டை கட்டி விட்டனர் ரஷிய மிலிட்டிரி. ஏன் இதனை இயக்கும் செலவு அப்போதைய ர்ஷிய பட்ஜெட்டில் பெரிய ஓட்டை போட்டதன் காரணம் தான், பின்பு இது கடலோர குப்பையாய் இருந்த இதை பல ஆண்டு பேசி ஒரு வழியாய் 2004 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி வாங்கப்பட்டது.


அதாவது டீல் எப்படி – கப்பல் இலவசம். அதை 800 மில்லியன் பராமரிப்பு செலவை இந்தியா ரஷியாவுக்கு கொடுக்க வேண்டும். அது போக 1 பில்லியன் – 100 கோடி டாலர்கள் புது விமானமும் ரேடார்கள் மற்றூம் ரன்வே பராமரிப்புக்காக ஒதுக்கபட்டு 3 வருடத்துக்குள் இந்தியாவுக்கு வரும் என எதிர்பார்க்கபட்ட இந்த கப்பல் பல பிரச்சினைகளை சந்தித்தது.2008 ஆம் ஆண்டு ரிட்டையர் ஆக வேண்டிய ஐ என் எஸ் விராட் இந்த டிலே பிரச்சினையால் 2012 வரை உழைக்க கட்டளையிடப்பட்டது.

1960ல் இருந்து இந்தியாவில் விமானம் தாங்கிய கப்பல் கொண்ட இந்திய ரானுவம் 2008 முதல் இன்று வரை விமானம் தாங்கிய கப்பல் இல்லாமல் இருந்த ரிஸ்க் காலம் இது தான். விராட் குற்றூயிரும் கொலையுருமாய் பட்டி பார்த்து அதை 2012 வரை வைத்து கடந்த ஒரு வருட கால இந்திய நேவியின் ரிஸ்க் இன்னும் யாருக்கு எடுத்துரைக்கவே இல்லை. இது இந்தியாவுக்கு பெரிய ரிஸ்க் ஆகும். பிரச்சினை என்ன? பரமாரிப்புக்காக 800 மில்லியன் டாலர் என ஒத்து கொண்ட இந்தியா வருடா வருடம் டிலே என்பதால் பட்ஜெட் எகிறி கொண்டு போனது.

கேபிள் வேலை மட்டும் டபுள் ஆகியது. கடைசியில் இந்தியா 2009 ஆம் ஆண்டு இன்னும் 120 கோடி டாலர் தருகிறேன் என்று கூறி பணிந்த காரணம் ரஷியா 2008 ஆம் ஆண்டு இந்த பிராஜக்ட்டை ஸ்கிராப் செய்வதாய் மிரட்டியது. இதனால் சி ஏ ஜி எனப்படும் இந்தியன் அரசாங்க ஆடிட்டர்ஸ் ஒரு பழைய கப்பலுக்கு ஏன் 235 கோடி டாலர் என கேட்டு இதற்க்கு புதுசு வாங்கியிருக்கலாம் என கூறிய போது இந்திய ரானுவ செகர்ட்டிரியோ நான் வேண்டுமானல் உடனே 200 கோடி செக் தருகிறேன் ஒரு கப்பலை வாங்கி காட்டுங்கள் என கூறி இந்த பிரச்சினைக்கு முற்றூபுள்ளி வைத்தாலும் 2010 ஆம் ஆண்டு தொடங்கிய சோதனை போன வாரம் தான் டெலிவரி கொடுக்கும் கட்டத்துக்கு வந்தது – இல்லை வைக்கப்பட்டது. 340 கோடி டாலர் தான் இதன் கடைசி விலை என 2008ல் மிரட்டிய ரஷியாவை மாற்றீயது 2010 ஆம் ர்ஷிய பிரதமரின் வருகை ஒரு வழியாய் 235 கோடி டாலருக்கு முடிவு செய்தமைக்கு முக்கிய காரணம் பிஜேபியின் சி ஏ ஜியின் அழுத்தம் தான்.

இந்த டிலே ஏன் என்று ஆராய்ந்த போது 2010ல் இதிலும் ஒரு பெரிய ஊழல் இந்தியா செய்கிறது என அலர்ட் செய்த ரஷிய அட்மிரல் கோர்கோஷெவ். இதனால் இதன் பிராஜக்ட் இயக்குனராய் இருந்த சுக்ஜிந்தர் சிங் இதன் பொறூப்புகளில் இருந்து விடுவிக்கபட்டார். அப்படி இப்படின்னு பல டிரையல் முடிச்சு 16 நவம்பர் இதனை கமிஷன் செய்த போது சிறப்பு விருந்திரனாய் இந்திய ராணுவ அமைச்சர் அந்தோனி இந்தியா சார்பில் சென்றார். இந்திய மற்றும் ரஷிய ராணுவ அதிகாரிகள் மூலம் இந்தியாவுக்கு 320 நாட் வேகத்தில் வரும் இந்த கப்பலில் மொத்தம் நீலம் கால் கிலோமீட்டருக்கு மேல் அதாவது 283..5 மீட்டர் அகலம் 59.8 மீட்டர் 1400 முதல் 2000 பேர் இருக்கும் ஒரு மாபெரும் சாம்ராஜ்யம். இதில் 34 விமானங்கள் – மிக் 29 மற்றூம் ஹெலிகாப்டர்களும் அடக்கம். இதில் இந்தியாவின் துருவ்ம கூட அடக்கம்.

இது இந்திய ராணுவத்துக்கு பெரிய மேட்டர் இதன் ரேஞ் 13,000 கிலோமீட்டர்கள். ஒரு வழியாய் இந்தியாவின் எலக்ஷனுக்கு முன்னாடி வரலைனா காங்கிரஸ் டவுசர் அவுந்திரும்னு அவசர கதியில வரும் கப்பலை . இதற்க்கு நடுவே முந்தா நாள் நேட்டோ விமானம் வெகு அருகில் கண்காணிக்க வட்டமடித்து நிறைய புகைப்படங்களை எடுத்தது. அது போக விமானத்தின் அக்வுஸ்டிக் ஒலியை கண்காணிக்க விமானம் அருகே ஒரு டுரோனையும் இறக்கிய புகைப்படத்தை ராணுவம் வெளியே சொல்லுமா இதன் பிரத்யோகப்படங்கள் உங்களுக்கே. நேட்டோவுக்கு போட்டோ ஆதாரத்துடன் அனுப்பிய கேள்விக்கு இன்னும் மவுனம் மட்டுமே பதிலாக தந்துள்ளது. வாஜ்பாய் என்னும் மாமனிதரின் 10 வருட கனவு இன்னும் சில நாட்களில் இந்தியாவில் காணலாம்.

எச்சரிக்கை! கணவன் மனைவி பிரச்சனை!

கணவனுக்கும்
மனைவிக்கும்
குழந்தைக்கு பேர்
வைப்பதில் தகராறு,
அவங்க அவங்க
அப்பா பேரை தான்
வைக்கணும் என்று.

எதிர்த்த வீட்டுக்காரர்
வந்து யோசனை சொன்னார்,

உங்க அப்பா பேர்
சீனுவாசன்
உங்க கணவர்
அப்பா பேரு கிருஷ்ணன்
ரெண்டையும்
சேர்த்து சீனிவாச
கோபால கிருஷ்ணன்
ன்னு வையுங்க என்றார்.

அதிர்ந்த மனைவி கேட்டார்,
அது சீனிவாசகிருஷ்ணன் தானே?
சரி இடையிலே கோபால்
எங்கிருந்து வந்தார் ??

எதிர் வீட்டுக்காரர்
சொன்னார்
ஹி ஹி அது எங்க
அப்பாவோட பெயர்
சும்மா இருக்கட்டுமே என்றார்..

கணவன்
மனைவி பிரச்சனை அடுத்தவருக்கு தெரிந்தால்
இப்படி தான் ஆட்கள்
பூந்துதுடுவாங்க ...

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top