.......................................................................... ....................................................................... ......................................................................

Monday 4 November 2013

ஸ்மார்ட்போன்கள், டேப்ளட், கேமரா போன்றவற்றின் வசதிகளை ஒப்பீட்டுப் பார்க்க சிறந்த தளங்கள்!


இன்றைய தொழில்நுட்ப உலகத்தில் புதிய வசதிகளோடு ஸ்மார்ட்போன்கள் (Smartphones), டேப்ளட் கணிணிகள்(Tablet PC), கேமரா (Camera), ரீடர்கள் (E-readers) போன்ற பல வகையான கருவிகள் சந்தையில் கிடைக்கின்றன. சாதாரண மொபைல்களை விட தற்போது ஸ்மார்ட்போன்களின் விற்பனை அதிகமாகியுள்ளது. இதற்குக் காரணம் பல வசதிகளுடன் வரும் ஸ்மார்ட்போன்களில் இணையம்,விளையாட்டுகள்,பயன்பாடுகள் போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம். இவைகள் ஒவ்வொன்றும் தனிப்பட்ட வசதிகளைக் கொண்டும் தனிப்பட்ட இயங்குதளத்திலும் (Operating System) வெளிவருகின்றன.


தற்போது Android, Apple iOS, Windows Phone 8, Blackberry போன்ற இயங்குதளங்கள் பிரபலமாக இருக்கின்றன. மேலும் அதிகமான செயல்திறன் கொண்ட Processor, Camera, Network போன்ற பல வகையான சிறப்பம்சங்கள் கொண்ட கருவிகளில் சிறப்பான ஒன்றை வாங்குவது என்பது புதியவர்களுக்கு சிரமமான காரியமே. இதற்காக நமக்கு உதவும் சில இணையதளங்களைப் பார்ப்போம்.

 1.GeekaPhone.com


Compare Smartphone Specifications Online

எளிமையான தோற்றத்தை உடைய இத்தளத்தில் காட்டபடும் போன்களை தேர்வு செய்து ஒப்பிடலாம். இதில் மொபைல்களின் அனைத்து விவரங்களான display, processor, camera, video, battery, music போன்றவற்றை ஒரே பக்கத்தில் ஒப்பிடலாம். ஒரே நேரத்தில் 5 மொபைல்களை ஒப்பீடு செய்ய முடியும். மேலும் Popular Comparison களும் இருக்கின்றன.

2.PhoneRocket.com



Compare Smartphone Specifications Online

இந்த தளத்தில் அனைத்து Specifications களுடன் Difference, Benchmarks, Reviews போன்றவையும் அவற்றிற்கான மதிப்பெண்களும் இடம்பெறுகின்றன. மேலும் ஒவ்வொரு வசதியிலும் சிறப்பான மொபைல்களை வரிசைப்படுத்தி உள்ளனர். உதாரணமாக Most Processing Power, Fastest Web Browser, Fastest 3D and 2D Graphics, Longest Battery Life போன்றவற்றில் சிறப்பான மொபைல்களை தனித்தனியாக பார்க்கலாம்.

இத்தளம் தான் எனக்கு சிறப்பாகத் தோன்றுகிறது. மேலும் அடுத்து வரும் தளங்கள் அனைத்தும் இவர்களின் நெட்வொர்க் தான். கண்டிப்பாக ஒரு முறை பார்த்து விடுங்கள்.

3. TabletRocket.com

Compare Tablet Specifications Online

இந்த தளத்தில் அனைத்து வகையான டேப்ளட்களை ஒப்பீட முடியும். மேற்கண்ட மொபைல் ஒப்பிடும் தளம் போல இடைமுகம், வசதிகள் தான் இதிலும். ஆனால் இதில் இயங்குதளங்கள் வாயிலாகவும் குறிப்பிட்ட விலைக்குள் இருக்கும் டேப்ளட்களை Sort செய்து பார்க்கவும் முடியும். ஒவ்வொரு வசதியிலும் Best Tablet களும் பட்டியலிடப்பட்டுள்ளன. நேரடியாக அமேசானில் வாங்கவும் இணைப்பு உள்ளது.

4. CameraRocket.com


Compare Cameras Specifications Online
இதில் எல்லாவகையான புதிய கேமராக்களையும் ஒப்பீட்டுப் பார்க்கலாம். இத்தளத்தில் Best image quality in low light, Highest resolution, Cheapest full frame cameras, Fastest focusing போன்றவற்றில் சிறந்த கேமராக்களை அறிந்து கொள்ள முடியும்.

 5.ReaderRocket.com 


Compare E-readers Specifications Online

புத்தகங்கள் படிக்க, ஆன்லைன் வசதிக்கு உதவும் Amazon Kindle போன்ற பலவகையான Reader Device களை ஒப்பிட இத்தளம் உதவுகின்றது. மேலும் இதில்  The best E-Ink readers,Fastest web browser,The best 5" e-readers, The best 6" e-readers போன்ற சிறந்த ரீடர்களை தெரிந்து கொள்ள முடியும்.

'ஓட்டுனர் சோர்வாக இருக்காரா’ எச்சரிக்கும் கருவி கண்டுபிடிப்பு!

ஓட்டுனர் சோர்வாக இருக்காரா’ எச்சரிக்கும் கருவி கண்டுபிடிப்பு எஸ்ஏ இன்ஜி. கல்லூரி மாணவர்கள் சாதனை


பூந்தமல்லி அருகே வீரராகவபுரத்தில் உள்ள எஸ்ஏ.பொறியியல் கல்லூரி மாணவர்கள் எஸ்.கார்த்திகேயன், சி.செந்தில்குமார், ஆர்.பிரபாகரன் ஆகியோர் விரிவுரையாளர் எச்.அன்வர் பாஷாவின் வழிகாட்டு தலின்படி முக அம்சங்களை கொண்டு ஓட்டுனரின் விழிப்புணர்வை கண்காணிக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளனர்.


இந்த கருவி மூலம் கண் அசைவை கண்காணித்து கார் ஓட்டுனரின் அயர்வை கண்டறியலாம். கண்காணிப்பு கருவி சென்சார் தகவலை பெற்று, ஓட்டுனரின் அப்போதைய ஓட்டும் திறனை குறிக்கிறது. சென்சாரில் உள்ள வீடியோ ஓட்டுனரை படம் பிடிக்கிறது. ஓட்டுனரின் சோர்வு குறிப்பிட்ட எல்லையை தொடும்போது எச்சரிக்கை மணி அடிக்கிறது.


 tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper


இத்தகைய செயல்பாடுகள் மூலம் காரின் சொந்தக்காரரை எஸ்எம்எஸ் மூலம் எச்சரிக்கை செய்து,  ஜிபிஎஸ் மூலம் கார் இருக்கும் இடத்தை கண்டறிய உதவுகிறது. அசதி அளவை கணிக்க வேறு புற காரணிகளான வண்டியின் நிலை, வானிலை, தகவல்களை கணிக்கலாம். எதிர்காலத்தில் நபருக்கு நபர் உடல்நலக்குறைவு மற்றும் சிக்னல் வேறுபாடுகளும் ஆய்வு செய்யப்படும். இந்த கருவியை கண்டுபிடித்த மாணவர்களை கல்லூரி தலைவர் டி.துரைசாமி, செயலாளர் டி.தசரதன், இயக்குனர் பா. வெங்கடேஷ்ராஜா, முதல்வர் சுயம்பழகன் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.

உலக அளவில் பெரிய நிர்வாகச் சீர்கேடுடைய பொது விநியோகத் திட்டம!

தனது மக்களுக்குத் தேவையான அளவு உணவை வழங்காத நாடு எனப் பெயர் பெற்றது இந்தியா. எஃப்.ஏ.ஓ. எனப்படும் உணவு மற்றும் விவசாய இயக்கம் தனது 2006-ஆம் ஆண்டிற்கான அறிக்கையில் இந்தியாவில் 21 கோடியே 20 லட்சம் மக்கள் தரமான உணவை பெறவில்லை என்ற தகவலை வெளியிட்டுள்ளது. நமது நாட்டில் பல வருடங்களாக பொது வினியோகத் திட்டத்தின் மூலம் ஏழை மக்களுக்கு உணவுப் பொருள்களை வழங்கும் நடைமுறை இருந்தபோதிலும், அந்த திட்டம் சரியான முறையில் நிர்வகிக்கப்படாததால், பல முறைகேடுகள் நடந்தேறியதால், வறுமைக் கோட்டிற்குக் கீழே வாடும் மக்கள் தரமான உணவைப் பெற முடியவில்லை.


nov 4 - edit food_security_

கிராமப்புறங்களில் சரிபாதிக்கும் மேலான குழந்தைகளும் சிறுவர்களும் ஊட்டச்சத்தான உணவை உட்கொள்ள முடியாமல் பசி பட்டினியில் வாடுகிறார்கள். ஆனால், இதே காலகட்டத்தில் நமது விவசாய உற்பத்தி அதிக அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது எனும் புள்ளிவிவரமும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதிநிலை அறிக்கையில் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் சகாய விலையில் வழங்கப்படும் உணவுப் பொருள்களுக்கான செலவினம் ஆண்டுக்கு ரூ.30,000 கோடி அளவில் செய்யப்படும் தகவலும் வெளியாகியுள்ளது. ஆக, விநியோகத் திட்டத்தை நிர்வகிப்பதில்தான் குளறுபடி என்பது நிரூபணமாகிறது.


“”மக்கள் பசியில் வாடும் நிலைமைக்குக் காரணம், அவர்களுக்குத் தேவையான உணவு இல்லை என்பதை விடவும், தேவையான உணவு மக்களிடம் போய்ச் சேரும்படி நிர்வாகம் நடக்கவில்லை என்பதே உண்மை” என நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென், “”இந்தியாவின் ஏழ்மையும் பசியும்” என்ற பொருள் பற்றி பேசும்போது குறிப்பிடுகிறார்.
அதுபோலவே இன்றைய நிலையில் மத்திய அரசின் மிகப்பெரிய பசி நீக்கும் திட்டமான தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் ஏழை மக்களின் பசியைப் போக்கும் திட்டமாக வெற்றியடைய முடியுமா என்பது நம் நாட்டில் பொது விநியோகத் திட்டம் சரியான முறையில் நிர்வகிக்கப்படுவதில்தான் இருக்கிறது.


நமது பொது விநியோகத் திட்டம் என்பது ஒரு சல்லடையில் நீரை ஊற்றி பின் நீர் ஒழுகிறதே என நாம் குறை சொல்வது போன்ற கட்டமைப்பில் இருக்கிறது என்பது உணவு வழங்கல் துறை அதிகாரிகளுக்கு தெரியும். “மானிய விலையில் நம் நாட்டில் விநியோகிக்கப்படும் 59 சதவீத கோதுமையும் 39 சதவீத அரிசியும் பயனாளிகளைச் சென்றடைவதில்லை’ என சமீபத்திய புள்ளி விவரம் கூறுகிறது.


2011-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் மிகவும் வெளிப்படையாக “மிக அதிக அளவில் ரேஷன் கடைகளுக்கான உணவுப் பொருள்கள் கடத்தப்பட்டு வெளிமார்க்கெட்களில் விற்பனை செய்யப்படுகிறது’ என ஒப்புக்கொண்டார். அதுமட்டுமின்றி விநியோகத்திற்காக கிடங்குகளில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் உணவுப் பொருள்கள் அதிக அளவில் கெட்டு அழிந்து போகின்றன. 2008-ஆம் ஆண்டில் மட்டும் இந்திய உணவு கார்ப்பரேஷனின் கிடங்குகளில் 36,000 டன் உணவுப் பொருள்கள் சீரழிந்து போய்விட்டன. உணவுப் பொருள்கள் கெட்டுப் போவதும், திருடப்படுவதும், கள்ளக்கணக்கினால் காணாமல் போவதும் இதனுள் அடங்கும்.


உலக சுகாதார இயக்கத்தின் அளவுகோள்படி ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 250 கிராம் உணவு என்ற கணக்கின்படி இந்த அளவு உணவுப் பொருள்களை 14 கோடி மக்களுக்கு வழங்கியிருக்க முடியும்.


உணவுப் பொருள்கள் மட்டுமின்றி நீல நிறமாக்கப்பட்ட மண்ணெண்ணெயும் மானிய விலையில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் விநியோகிக்கப்படுகிறது. 2004-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி 39 சதவீத மண்ணெண்ணெய் கள்ளத்தனமாக வெளிமார்க்கெட்டில் விற்கப்படுகிறது.


ஆக இதுபோன்ற ஓட்டை ஒழுகலுடன் நடக்கும் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் இந்தியாவின் ஏழை, எளிய, கிராமப்புற மக்களின் பசிப்பிணியை நிவர்த்தி செய்து விடுவோம் என இன்றைய மத்திய அரசு கூறுவது ஏற்புடையதல்ல.


பொது விநியோகத் திட்டம் இந்தியாவில் முதன்முறையாக 1939-ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசால் அன்றைய பம்பாய் நகரில் உணவுப் பொருள்களைச் சரியான விலைக்கு குறிப்பிட்ட மளிகைக் கடைகள் மூலமாக விற்பனை செய்தபோது தொடங்கப்பட்ட ஒரு நடவடிக்கை.


அன்றைய நிலைமையில் உணவுப் பொருள்கள் மார்க்கெட்டில் விலையேற்றத்தைச் சந்தித்தபோது, அரசின் கட்டுப்பாட்டில் விலைவாசி ஏற்றத்தைத் தடுக்க உருவாக்கப்பட்டது இந்தத் திட்டம். பின் 1943-ஆம் ஆண்டில் வங்காளத்தில் பஞ்சம் ஏற்பட்டபோது கொல்கத்தா நகரில் முதன்முறையாக ரேஷன் கடைகள் உருவாக்கப்பட்டு உணவுப் பொருள்களை அரசாங்கம் விநியோகம் செய்தது.


பிற்காலங்களில் இந்த ரேஷன் கடைகள் பல வகையிலும் சீர்செய்யப்பட்டு, சுதந்திர இந்தியாவின் மாநிலங்களில் ஏழை மக்களுக்கு மானிய விலையில் உணவுப் பொருள்களை வழங்கும் இடமாக 1992-ஆம் ஆண்டு உருவாகின. இன்றைய நிலைமையில் நாடெங்கிலும் சுமார் 4 லட்சத்து 62 ஆயிரம் ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றின் மூலம் சுமார் 18 கோடி ஏழைக்குடும்பங்கள் தரமான உணவுப் பொருள்களை மானிய விலையில் பெறுகின்றன. இதுபோன்ற பெரிய அளவிலான உணவு விநியோகம் உலகின் வேறெந்த நாட்டிலும் இல்லை எனக் கூறப்படுகிறது.


ஆனால், சரியாக நிர்வகிக்கப்படாததால், ஊழலும், பொருள்கள் சேதமும் பெரிய அளவில் நடைபெற்று, உலக அளவில் பெரிய நிர்வாகச் சீர்கேடும் இதுதான் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். 2005-ஆம் ஆண்டில் மத்திய திட்டக் கமிஷன் நம் நாட்டின் பொது விநியோக முறையின் நிலைமையை ஆராய ஒரு கமிட்டியை நிறுவியது. அந்தக் கமிட்டியின் அறிக்கை அகில இந்தியாவிலும் மானிய விலையில் மக்களுக்குப் போய்ச் சேர வேண்டிய உணவு தானியங்களில் 58 சதவீதம் வறுமைக்கோட்டுக்குக் கீழேயுள்ள மக்களைச் சென்றடையவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியது.
இதற்கான காரணம், ஏழைக் குடும்பங்களைக் கணக்கிடுவதில் ஏற்படும் தவறு, ஊழல் மற்றும் திட்டமிட்ட திருட்டு என கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ஏழை மக்களுக்கு ஒரு ரூபாய் உணவு தானியம் கிடைக்க அரசு 3.65 ரூபாய் செலவிட்டது என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. அதன்படி அரசின் பணம் ஒரு ரூபாயில் 27 பைசாதான் ஏழை மக்களைச் சென்றடைந்தது எனலாம்.


பிகார், பஞ்சாப் ஆகிய இரு மாநிலங்களிலும் மிக அதிக அளவில் (75 சதவீதம் வரை) உணவு தானியங்கள் திருடப்பட்டன. ஹரியாணா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 50 சதவீத பொருள்கள் கொள்ளை போயின. அசாம், குஜராத், ஹிமாசல பிரதேசம், கர்நாடகம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 25 சதவீதம் உணவு தானியங்கள் ஏழை மக்களைச் சென்றடையவில்லை எனவும் கமிட்டி சுட்டிக் காட்டியது. ஆந்திரம், கேரளம், ஒடிசா, மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய ஐந்து மாநிலங்களில்தான் 25 சதவீதத்திற்கும் கீழ் உணவுப் பொருள்கள் களவாடப்பட்டு வெளிச்சந்தையில் விற்கப்பட்டனவாம்.


இதுபோன்று வேறு சில கமிட்டிகளும் 2007 மற்றும் 2011-ஆம் ஆண்டு பொது விநியோகத் திட்டத்தை ஆராய்ந்து அறிக்கைகள் அளித்தன. அவ்வறிக்கைகளின்படி இத்திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளுக்கு மூன்று அடிப்படைக் காரணங்கள் கூறப்பட்டன. ஒன்று, ஏழைக் குடும்பங்களைப் பட்டியலிடுவதில் உள்ள குளறுபடி. வசதி படைத்தவர்கள் பட்டியலில் சேர்ந்து விடுவதும், ஏழைகள் விடுபடுவதும்தான் இந்தக் குளறுபடிக்குக் காரணம். இரண்டாவதாக, சரியான கணக்கீடு இல்லாமையால் ஒரே நபர் பல ஊர்களின் பட்டியல்களில் இடம்பெறுவதும், சிலர் எந்தப் பட்டியலிலுமே சேர்க்கப்படாமல் இருப்பதும் தெரிய வந்தது. மூன்றாவதாக, பொய்யான நபர்களின் பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு உரிய தானியங்களை ரேஷன் கடைகளில் வேலை செய்பவர்களும் கீழ்நிலை அரசு ஊழியர்களும் கடத்தி வெளிச்சந்தையில் விற்பது கண்டுபிடிக்கப்பட்டது.


“மிகவும் தவறான பொது விநியோகத் திட்டத்தின் மூலம் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது பகல் கனவே’ எனக் கூறுவோரும், “அரசு ஊழியர்களை உபயோகிக்காமல் கணினிமயமாக்கிய நடைமுறையில் உணவு விநியோகத்தைச் சரிசெய்யலாம்’ எனக் கூறுவோரும் உள்ளனர்.


“கணினியை இயக்குபவர்களும் தவறு செய்யலாமே’ என சந்தேகிப்பவர்களும் உண்டு.


“சரி நமது நாட்டில் எல்லா நடவடிக்கைகளிலும் ஊழல் பெருக்கெடுத்து ஓடுவதால் அரசு பணம் 1 ரூபாயை செலவு செய்து, அதில் 27 பைசாக்களாவது ஏழைகளைச் சென்றடைகிறதே’ என்று திருப்தியடைபவர்களும் உண்டு.


ஆனால் மிகுந்த சிரத்தையுடன் நமது தலைவர்களும் உயர் அதிகாரிகளும் பொது விநியோகத் திட்டநிர்வாகத்தின் ஊழல்களையும் சீர்கேடுகளையும் களைந்து ஏழை மக்களுக்குத் தரமான உணவு கிடைக்க வழிசெய்தால் சாமுவேல் ஜான்சன் கூறியது நிறைவடைந்து நமது நாகரிகம் அவர்களைப் பாராட்டும்.

 “”ஏழைகளுக்குச் செய்யப்படும் தரமான ஒரு சேவைதான் ஒரு நாகரிகத்திற்கான உண்மையான சோதனை” என்றார் அந்த மாமேதை!

வீட்டிலிருந்த படியே சிறுநீரக கல்லை குணமாக்கும் வீட்டு வைத்தியம்!


தலைவலி, பல்வலி போல பலரையும் பரவலாக தாக்கக்கூடிய ஒரு பிரச்சினையாக இன்றைக்கு உருவெடுத்துக் கொண்டிருக்கிறது சிறுநீரகக்கல். இந்த நோய் வருவதற்கான அறிகுறிகள், பின்னணி, சிகிச்சைகள்,... தவிர்க்கும் முறைகள் பற்றி பிரபல சிறுநீரகவியல் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.


சிறுநீரகத்தில், சிறுநீரில் உள்ள கிரிஸ்டல் எனப்படுகிற உப்புகள் (கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம் ஆகியவை) ஒன்றுதிரண்டு, சிறுநீர்ப் பாதையில் பல்வேறு அளவுள்ள கற்களை உருவாக்கலாம். சிறுநீரானது சிறுநீரகத்தில் உற்பத்தியாகி, சிறுநீர்க் குழாய் வழியே சிறுநீர்ப் பைகளுக்கு வந்து பிறகு வெளியேறுகிறது. சிறுநீரகத்தில்தான் கல்லும் உற்பத்தியாகிறது. அது அங்கேயே தங்கிப் பெரிதாகலாம். குழாய் மூலம் சிறுநீர் பைக்கு வெளியேறலாம். அல்லது அடைப்பு ஏற்படுத்தலாம்.

அறிகுறிகள் என்ன ?

முதுகில் வலி ஆரம்பித்து, அது முன்பக்கம் வயிற்றுப்பகுதிக்குத் தாவினாலோ, அடிவயிற்றில் வலித்தாலோ, அது தொடைகள், அந்தரங்க உறுப்புகளுக்குப் பரவினாலோ, காய்ச்சல், சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை இருந்தாலோ சிறுநீரக்கல்லாக இருக்கலாம்.

தைராய்டு பிரச்சினை

பரம்பரையாக சிறுநீரகக்கல் பிரச்சினை ஒருவரைத் தாக்கலாம். சிறுநீர் போகிற பாதையில் அடைப்பிருந்தாலோ, பாரா தைராய்டு எனப்படுகிற சுரப்பியின் அதீத இயக்கம் காரணமாகவோ, இன்ஃபெக்ஷன் காரணமாகவோ கூட சிறுநீரகத்தில் கல் வரலாம். அலட்சியப்படுத்தினால் கல் கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி, மான் கொம்பு அளவுக்கு வளர்ந்து நிற்கும்.

5 மில்லிமீட்டரை விட சிறிய கல் எனில் சிறுநீரிலேயே வெளியேறி விடும். 8 மி.மீ. என்றால் 80 சதவிகித வாய்ப்புண்டு. 1 செ.மீ. அளவுக்கு வளர்ந்துவிட்டால் சிரமம். சரியான நேரத்தில் சிகிச்சை எடுக்காவிட்டால் சிறுநீரகம், சிறுநீரைப் பிரிக்க இயலாது, செயலிழக்கும்.

ரத்தப்பரிசோதனை மூலம் கல் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். பிறகு ஸ்கேன் உதவியுடன், கல் இருக்கும் இடம், அதன் அளவைத் தெரிந்து கொள்ளலாம். அய்.வி.பி. எக்ஸ்ரே மூலம் சிறுநீரகம் எப்படி இயங்குகிறது என்பதையும், அதில் அடைப்புள்ளதா, வேலை செய்யும் திறனை இழக்குமா என்பனவற்றைக் கண்டுபிடிக்கலாம். மருந்துகளால் முடியாத பட்சத்தில், அதிர்வலை சிகிச்சை மூலம் கல்லை மட்டும் உடைத்தெடுக்கலாம்.

பெரிய கல் என்றால் முதுகுவழியே துளையிட்டு, டெலஸ்கோப் வழியே பார்த்து உடைக்கலாம். சிறுநீர் பாதை வழியே டெலஸ்கோப்பை செலுத்தி உடைக்கிற யூரெத்ரோஸ்கோப்பியும் பலனளிக்கும். ஒருமுறை கல்லை அகற்றினால் மறுபடி வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.
வீட்டு வைத்தியம்

சிறுநீரக் கல்லை வெளியேற்ற வீட்டிலேயே மருந்து உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். தினசரி மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். கோடை காலத்தில் தினமும் ஒரு இளநீரும், மற்ற காலங்களில் வாரத்திற்கு 2 முறையாவது குடிப்பது நலம்.

பார்லியை நன்கு வேக வைத்து நிறைய தண்ணீரோடு குடித்து வந்தால் அதிக சிறுநீர் வெளியேறி சிறுநீரகத்தில் உப்பு சேர்வது தடுக்கப்படும். வாரத்தில் ஒருமுறை இதை செய்யலாம். அகத்தி கீரையுடன் உப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து, அந்த நீரை அருந்தலாம்.

வாழைத்தண்டு

முள்ளங்கி சாறு 30 மிலி அளவு குடித்து வந்தால் சிறுநீரக கோளாறு நீங்கும். சிறுநீர் நன்றாக பிரியும். வெள்ளரி, வாழைப்பூ, வாழைத்தண்டு, ஆகியவைகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
வெள்ளரிப்பிஞ்சு, நீராகாரம் சிறுநீரக பிரச்னைகளுக்கு அருமருந்து. பரங்கிக்காய் சிறுநீர் பெருக்கி. அதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். புதினாக் கீரையை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்கள் பலப்படும்.

எதை சாப்பிடக்கூடாது?

சிறுநீரக கல் பிரச்சினை உள்ளவர்கள் சில உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உப்பு பிஸ்கட், சிப்ஸ், கடலை, பாப்கான், அப்பளம், வடகம், வற்றல், ஊறுகாய், கருவாடு, உப்புக்கண்டம், முந்திரிபருப்பு, பாதாம், பிஸ்தா, கேசரி பருப்பு, கொள்ளு, துவரம் பருப்பு, ஸ்ட்ராங் காபி, டீ, சமையல் சோடா, சோடியம் பை&கார்பனேட் உப்பு, சீஸ், சாஸ், க்யூப்ஸ் ஆகியவைகளை தவிர்க்க வேண்டும். கோக்கோ, சாக்லேட், குளிர்பானங்கள், மது மற்றும் புகையிலை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

பண்டைத் தமிழனின் அரும் சாதனை காலக் கணிதம்!


Photo: பண்டைத் தமிழனின் அரும் சாதனை காலக் கணிதம்

செயற்கைகோள் உதவியில்லை தொலைக்காட்சிகளின் துணையுமில்லை ஆனாலும் பன்னிரு மாதங்களின் காலநீட்டிப்பினை அறுதியிட்டுகூறியுள்ளனர் நம் பண்டைய தமிழர் .

பண்டைய வானவியலில் ஒருநாளினை 60 நாழிகையாக பிரித்துள்ளனர் . ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்களை குறிப்பதாகும் ஆக 60 நாளிகை என்பது 1440 நிமிடங்களை குறிப்பதாகும் . நாம் ஒரு நாளினை 24 மணி நேரமாக பிரித்து இருக்கிறோம் அப்படியெனில் ஒரு நாளுக்கு கிடைக்கும் நிமிடங்கள்24*60=1440 ஆகும்.

வருடத்தின் சில நாட்களில் பகல்நீண்டு இருக்கும் சில நாட்களில்இரவு நீண்டு இருக்கும் என நாம் பள்ளியில் அறிவியல் பாடத்தில் படித்து இருப்போம் ஆனால் நம்முடைய முன்னோர்கள் செயற்கைகோள் உதவியில்லாமலும் தொலைக்காட்சிகளின் துணையுமில்லாமலும் 12 மாதங்களையும் பிரித்து எவற்றில் பகல் நீடிக்கும் எவற்றில் இரவு நீடிக்கும் என அறிதியிட்டுகூறியுள்ளனர் ஆகவே தமிழன்தான் பகல் – இரவு நீட்டிப்பு அறிவியலைமுதன் முதலில் உலகிற்கு கூறினான்.

சரி நமது முன்னோர்கள் பன்னிரு மாதங்களின் பகல் – இரவு நாழிகையை எவ்வாறு பிரித்துள்ளனர் என்பதை அறிவோம்

“ சித்திரையும் ஐப்பசியும் சீரொக்கும் சித்திரைவிட்டு
ஐப்பசிமுன் னைந்தும் அருக்கேறும் – ஐப்பசிக்குப்
பின்னைந்து மாதம் பிசகாமல் இரவேறும்
மின்னே விடுபூ முடி “

சித்திரை மாதமும் ஐப்பசி மாதமும் சீரொக்கும் அதாவது பகல் – இரவு நாழிகைகள் சமமாக( பகல்=30, இரவு =30 ) இருக்கும்

ஐப்பசிக்கு முன் ஐந்தும் அருகேறும் அதாவது ஐப்பசிக்கு முன் உள்ள வைகாசி,ஆனி,ஆடி,ஆவணி,புரட்டாசி ஆகிய ஐந்து மாதங்களில் பகல்நீடிக்கும்
ஐப்பசிக்கு பின் ஐந்து மாதம் பிசகாமல் இரா ஏறும் அதாவது ஐப்பசிக்கு பின் உள்ள கார்த்திகை , மார்கழி, தை, மாசி , பங்குனி ஆகிய மாதங்களில் இரவு நீடிக்கும்
பாடலின் கடைசி வரி ” விடுபூ முடி ” மிக மிக முக்கியமான வரியாகும் இந்த வரியினை அடிப்படையாக கொண்டு வாக்கிய கணித முறை என்னும் புதிய முறை தோன்றியது.

வாக்கிய கணித முறை என்பது வாக்கியத்தின் முதல் வார்த்தையிலிருந்து கடைசி வார்த்தை வரை கணக்கிட வேண்டும் ஒவ்வொரு எழுத்துக்கும் 1/4 கால அளவு கொடுக்க வேண்டும்

பகல் நீட்டிப்பை காண
வி – டு – பூ – மு – டி எனும் ஐந்து வார்தைகளைஎடுத்துக்கொள்வோம் வி என்பது வைகாசி
டு என்பது ஆனி
பூ என்பது ஆடி
மு என்பது ஆவணி
டி என்பது புரட்டாசி
இது போலவே வி – டு – பூ – மு – டி எனும் அதே ஐந்து வார்தைகளைகொண்டு இரவு நீட்டிப்பு மாதங்களுக்கு கொடுத்து இரவு நீட்டிப்பும் அறியலாம்

மாதிரிக்காக வைகாசி மாதத்தின் பகல் நீட்டிப்பை காணும் முறை

வி என்ற எழுத்தின் தொடக்கம் வ ஆகும் எனவே
வ = 1/4 நாழிகை
வா= 1/4 நாழிகை
வி=1/4 நாழிகை ஆக மொத்தம் கிடைப்பது ¾ நாழிகை பகல் நீடிக்கும் 3/4 நாழிகை என்பது 18 நிமிடத்திற்கு சமம்
இது போல வி – டு – பூ – மு – டி ஆகிய வாக்கியங்களின் முதல்எழுத்து முதல் கடைசி எழுத்து வரை கணக்கிட்டால் கிடைப்பது

~பகல் நீட்டிப்பு~

வைகாசி 3/4 நாழிகை = 18 நிமிடம்
ஆனி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
ஆடி 1 1/2 நாழிகை = 36 நிமிடம்
ஆவணி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
புரட்டாசி 3/4 நாழிகை = 18 நிமிடம்

~இரவு நீடிப்பு~

கார்திகை 3/4 நாழிகை = 18 நிமிடம்
மார்கழி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
தை 1 1/2 நாழிகை = 36 நிமிடம்
மாசி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
பங்குனி 3/4 நாழிகை = 18 நிமிடம்

நம் முன்னோர்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, மாதம், ஆண்டு, ஊழி என்று வானியல் முறைப்படி வரையறை செய்துள்ளனர். 60- நாழிகையை ஒரு நாளாகவும் ஒரு நாளை வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம் என்று ஆறு சிறுபொழுதுகளாகவும் ஓர் ஆண்டை இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என்று ஆறுபெரும் பொழுதுகளாகவும் பிரித்துள்ளார்கள்.

தமிழ் திங்கள் (மாதம்)
“““““““““““““““`
பன்னிரண்டு ஓரை[ராசி]களின் பெயர்களே பனனிரண்டு திங்களின் பெயர்களாக
வழங்கி வந்தன.

அவை:–

மேழம் (சித்திரை)
விடை (வைகாசி)
ஆடவை (ஆனி)
கடகம் (ஆடி)
மடங்கல் (ஆவணி)
கன்னி (புரட்டாசி)
துலாம் (ஐப்பசி)
நளி (கார்த்திகை)
சிலை (மார்கழி)
சுறவம் (தை)
கும்பம் (மாசி)
மீனம் (பங்குனி)

இப்படியாக நாம் பின்பற்றிய தமிழ் திங்கள் காலபோக்கில் ஆட்சி மாற்றத்தால் வடமொழிக்கு மாற்றம் செய்யப்பட்டுவிட்டன.

தகவல் - இணையம்

 பண்டைத் தமிழனின் அரும் சாதனை காலக் கணிதம்


செயற்கைகோள் உதவியில்லை தொலைக்காட்சிகளின் துணையுமில்லை ஆனாலும் பன்னிரு மாதங்களின் காலநீட்டிப்பினை அறுதியிட்டுகூறியுள்ளனர் நம் பண்டைய தமிழர் .


பண்டைய வானவியலில் ஒருநாளினை 60 நாழிகையாக பிரித்துள்ளனர்... . ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்களை குறிப்பதாகும் ஆக 60 நாளிகை என்பது 1440 நிமிடங்களை குறிப்பதாகும் . நாம் ஒரு நாளினை 24 மணி நேரமாக பிரித்து இருக்கிறோம் அப்படியெனில் ஒரு நாளுக்கு கிடைக்கும் நிமிடங்கள்24*60=1440 ஆகும்.


வருடத்தின் சில நாட்களில் பகல்நீண்டு இருக்கும் சில நாட்களில்இரவு நீண்டு இருக்கும் என நாம் பள்ளியில் அறிவியல் பாடத்தில் படித்து இருப்போம் ஆனால் நம்முடைய முன்னோர்கள் செயற்கைகோள் உதவியில்லாமலும் தொலைக்காட்சிகளின் துணையுமில்லாமலும் 12 மாதங்களையும் பிரித்து எவற்றில் பகல் நீடிக்கும் எவற்றில் இரவு நீடிக்கும் என அறிதியிட்டுகூறியுள்ளனர் ஆகவே தமிழன்தான் பகல் – இரவு நீட்டிப்பு அறிவியலைமுதன் முதலில் உலகிற்கு கூறினான்.



சரி நமது முன்னோர்கள் பன்னிரு மாதங்களின் பகல் – இரவு நாழிகையை எவ்வாறு பிரித்துள்ளனர் என்பதை அறிவோம்



“ சித்திரையும் ஐப்பசியும் சீரொக்கும் சித்திரைவிட்டு
ஐப்பசிமுன் னைந்தும் அருக்கேறும் – ஐப்பசிக்குப்
பின்னைந்து மாதம் பிசகாமல் இரவேறும்
மின்னே விடுபூ முடி “


 
சித்திரை மாதமும் ஐப்பசி மாதமும் சீரொக்கும் அதாவது பகல் – இரவு நாழிகைகள் சமமாக( பகல்=30, இரவு =30 ) இருக்கும்

ஐப்பசிக்கு முன் ஐந்தும் அருகேறும் அதாவது ஐப்பசிக்கு முன் உள்ள வைகாசி,ஆனி,ஆடி,ஆவணி,புரட்டாசி ஆகிய ஐந்து மாதங்களில் பகல்நீடிக்கும்
ஐப்பசிக்கு பின் ஐந்து மாதம் பிசகாமல் இரா ஏறும் அதாவது ஐப்பசிக்கு பின் உள்ள கார்த்திகை , மார்கழி, தை, மாசி , பங்குனி ஆகிய மாதங்களில் இரவு நீடிக்கும்.


பாடலின் கடைசி வரி ” விடுபூ முடி ” மிக மிக முக்கியமான வரியாகும் இந்த வரியினை அடிப்படையாக கொண்டு வாக்கிய கணித முறை என்னும் புதிய முறை தோன்றியது.



வாக்கிய கணித முறை என்பது வாக்கியத்தின் முதல் வார்த்தையிலிருந்து கடைசி வார்த்தை வரை கணக்கிட வேண்டும் ஒவ்வொரு எழுத்துக்கும் 1/4 கால அளவு கொடுக்க வேண்டும்

பகல் நீட்டிப்பை காண


வி – டு – பூ – மு – டி எனும் ஐந்து வார்தைகளைஎடுத்துக்கொள்வோம் 


வி என்பது வைகாசி
 

டு என்பது ஆனி
 

பூ என்பது ஆடி
 

மு என்பது ஆவணி
 

டி என்பது புரட்டாசி
 

இது போலவே வி – டு – பூ – மு – டி எனும் அதே ஐந்து வார்தைகளைகொண்டு இரவு நீட்டிப்பு மாதங்களுக்கு கொடுத்து இரவு நீட்டிப்பும் அறியலாம்
 
மாதிரிக்காக வைகாசி மாதத்தின் பகல் நீட்டிப்பை காணும் முறை

வி என்ற எழுத்தின் தொடக்கம் வ ஆகும் எனவே
 

வ = 1/4 நாழிகை
 

வா= 1/4 நாழிகை
 

வி=1/4 நாழிகை ஆக மொத்தம் கிடைப்பது ¾ நாழிகை பகல் நீடிக்கும் 3/4 
நாழிகை என்பது 18 நிமிடத்திற்கு சமம்
 

இது போல வி – டு – பூ – மு – டி ஆகிய வாக்கியங்களின் முதல்எழுத்து முதல் கடைசி எழுத்து வரை கணக்கிட்டால் கிடைப்பது
 

~பகல் நீட்டிப்பு~

வைகாசி 3/4 நாழிகை = 18 நிமிடம்
 

ஆனி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
 

ஆடி 1 1/2 நாழிகை = 36 நிமிடம்
 

ஆவணி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
 

புரட்டாசி 3/4 நாழிகை = 18 நிமிடம்
 

~இரவு நீடிப்பு~

கார்திகை 3/4 நாழிகை = 18 நிமிடம்


மார்கழி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
 

தை 1 1/2 நாழிகை = 36 நிமிடம்
 

மாசி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
 

பங்குனி 3/4 நாழிகை = 18 நிமிடம்

 

நம் முன்னோர்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, மாதம், ஆண்டு, ஊழி என்று வானியல் முறைப்படி வரையறை செய்துள்ளனர். 60- நாழிகையை ஒரு நாளாகவும் ஒரு நாளை வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம் என்று ஆறு சிறுபொழுதுகளாகவும் ஓர் ஆண்டை இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என்று ஆறுபெரும் பொழுதுகளாகவும் பிரித்துள்ளார்கள்.

தமிழ் திங்கள் (மாதம்)


“““““““““““““““`
 

பன்னிரண்டு ஓரை[ராசி]களின் பெயர்களே பனனிரண்டு திங்களின் பெயர்களாக
வழங்கி வந்தன.

அவை:–

மேழம் (சித்திரை)


விடை (வைகாசி)


ஆடவை (ஆனி)


கடகம் (ஆடி)


மடங்கல் (ஆவணி)
 

கன்னி (புரட்டாசி)
 

துலாம் (ஐப்பசி)
 

நளி (கார்த்திகை)
 

சிலை (மார்கழி)
 

சுறவம் (தை)
 

கும்பம் (மாசி)
 

மீனம் (பங்குனி)
 

இப்படியாக நாம் பின்பற்றிய தமிழ் திங்கள் காலபோக்கில் ஆட்சி மாற்றத்தால் வடமொழிக்கு மாற்றம் செய்யப்பட்டுவிட்டன.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top