.......................................................................... ....................................................................... ......................................................................

Friday 1 November 2013

‘தெண்டுல்கரின் சாதனையை கோலி முறியடிப்பார்’–கவாஸ்கர்














இந்திய கிரிக்கெட் அணியில் ரன் குவிக்கும் எந்திரமாக ஜொலித்து வரும் துணை கேப்டன் விராட் கோலி, நாக்பூரில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 6–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 66 பந்துகளில் 115 ரன்கள் விளாசி, பிரமாதப்படுத்தினார். ஒரு நாள் போட்டியில் அவரது 17–வது சதம் இதுவாகும். இதன் மூலம் அதிவேகமாக 17 சதங்களை (112 இன்னிங்ஸ்) எடுத்தவர் என்ற சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன்பு முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி (170–வது இன்னிங்சில் 17–வது சதம்) இந்த பெருமையை தக்க வைத்திருந்தார். மேலும் இலக்கை துரத்திப்பிடிப்பதற்கான (சேசிங்) ஆட்டத்தில் (2–வது பேட்டிங்) கோலியின் 11–வது சதமாக அமைந்தது. இவை அனைத்தும் வெற்றியிலேயே முடிந்திருக்கிறது. இந்த வகையில் சச்சின் தெண்டுல்கர் (14 சதம்) மட்டுமே அவரை விட முன்னிலையில் இருக்கிறார்.


இந்த நிலையில் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் சாதனையை 24 வயதான விராட் கோலியால் முறியடிக்க முடியும் என்று இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ஆரூடம் கூறியுள்ளார். இதுவரை 118 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள கோலி அதில் 112 இன்னிங்சில் களம் இறங்கி 17 சதங்களுடன் 4919 ரன்கள் எடுத்துள்ளார். இதே எண்ணிக்கையிலான ஆட்டத்தில் தெண்டுல்கர் 8 சதத்துடன் 4001 ரன்களே எடுத்திருந்தார்.


இது பற்றி கவாஸ்கர் கூறுகையில், ‘சாதனைகள் என்பதே முறியடிக்கப்படக்கூடியது தான். ஆனால் தெண்டுல்கரின் சில சாதனைகளை அதாவது 200 டெஸ்டில் பங்கேற்றவர், 51 டெஸ்ட் சதம் ஆகியவற்றை யாராலும் முறியடிக்க முடியாது என்பதை நாம் அறிவோம். ஆனால் விராட் கோலி விளையாடி வரும் விதத்தை பார்க்கும் போது, ஒரு நாள் போட்டியில் தெண்டுல்கரின் அதிக சதங்கள் (49 சதம்) சாதனையை முறியடிக்க ‘வாய்ப்புள்ளது. அதற்கு இன்னும் 32 சதங்கள் தான் கோலிக்கு தேவைப்படுகிறது. நிறைய ஒரு நாள் போட்டிகளில் இந்தியா விளையாடும் போது, கோலியால் இந்த சாதனையை செய்ய முடியும். இந்த கிரிக்கெட் சீசனில் கோலி 20 அல்லது 22 சதங்களை எட்டி விடுவார்’ என்றார்.

கமல்! பட வசூலை நேர்மையாக யாரும் சொல்வதில்லை!

சூப்பர் ஹிட் படங்களின் வசூலை சொல்வதில் நேர்மை வேண்டும் என்றார் கமல்ஹாசன்.பெங்களூரில் பேட்டி அளித்தபோது கமல் கூறியது:சினிமாவை பொறுத்தவரை அதன் வசூல் விவரத்தை சொல்வதில் வெளிப்படையான நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். அப்படி இல்லாவிட்டால்  எவ்வளவு பெரிய தொழில் நுட்பமோ அல்லது வெற்றியோ சினிமாவின் வளர்ச்சிக்கு உதவாது. ஒரு நடிகரும் சரி அல்லது தயாரிப்பாளரும் சரி படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் வசூல் என்ன என்பதை வெளிப்படையாகவே சொல்ல வேண்டும்.

அந்தவகையில் பார்த்தால் ஹாலிவுட் பட வசூலைவிட நமது படங்களின் வசூல்தான் அதிகமாக இருக்கும். நம் நாட்டில் 100 கோடி சினிமா ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களில் 10 சதவீதம்பேர் சூப்பர் ஹிட் படம் பார்த்தால்கூட இன்றைய விலை நிலவரத்தில் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் இருக்கும். ஆனாலும் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் வசூலை யாருமே சொல்வதில்லை.இவ்வாறு கமல் கூறி உள்ளார்.

வோல்க்ஸ்வேகன் ரூ.13.7 லட்சம் விலையில் புதிய ஜெட்டா அறிமுகம்

                                        



ஜெர்மன் கார் தயாரிப்பாளரான வோக்ஸ்வேகன் இன்று இந்தியாவில் பிரீமியம் சேடன் ஜெட்டாவின் மேம்படுத்தப்பட்ட பதிப்பை ரூ.13.70-19.43 லட்சம் விலை வரம்பில் தொடங்கப்பட்டது.

ஜெட்டாவின் மேம்படுத்தப்பட்ட பதிப்பில் ஹேட்லேம்ப் வாஷர்ஸ் கொண்ட செனான் ஹேட்லேம்ப், எல்ஈடி பகல்நேர ஓடும் விளக்குகள் மற்றும் புதிய 16 இன்ச் அலாய் சக்கரங்கள் உள்ளிட்ட பல்வேறு புதிய அம்சங்களுடன் வருகின்றது.

வாகனத்தின் மற்ற அம்சங்கள் டூயல் ஜோன் கிளிமேட்ரானிக் ஏர் கண்டிஷனிங், 12 வழி மின் அனுசரிப்பு ஓட்டுநர் இருக்கை மற்றும் 60:40 மடிப்பு பின் இடங்கள் உள்ளிட்டவை அடங்கும்.

பண்டிகை காலத்தில் இந்திய சந்தையில் வோல்க்ஸ்வேகன் வரிசையில் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட கார்களான போலோ, கிராஸ் போலோ, போலோ ஜிடி TSI மற்றும் போலோ ஜிடி TDI, வெண்டோ TSI மற்றும் புதிய ஜெட்டா உள்ளன என்று திரு.சக்சேனா தெரிவித்துள்ளார். 

சன் டைரக்ட் தீபாவளி சிறப்பு சலுகை!


டிடீஹெச் சேவை பிரிவில் முதன்மை நிறுவனமாக திகழும் சன் டைரக்ட், பண்டிகை காலத்துக்காக சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. புதிய இணைப்புகளை பெறுபவர்களுக்கும் கவர்ச்சிகரமான சலுகைகளின் தொகுப்பையும் சன் டைரக்ட் வழங்குகிறது.
சிறப்பு சலுகைகள்:

* சினிமா ப்ளஸ் ஸ்போர்ட் பேக் , கட்டணம் ரூ.1890 செலுத்தும்போது 2 மாத சந்தா இலவசம், ரூ.2,290 செலுத்தும் போது 5 மாத சந்தா இலவசம்.
* வேர்ல்டு பேக் , கட்டணம் ரூ.2,090க்கு 2 மாத சந்தா இலவசம், ரூ.3,190க்கு 7 மாத சந்தா இலவசம்.
* மெகா பேக் , கட்டணம் ரூ.2,090க்கு 2 மாத சந்தா இலவசம், ரூ.3,490க்கு 7 மாத சந்தா இலவசம்.
ரூ.155ல் தொடங்கி ரூ.300 வரையிலான திட்டங்களை கொண்டிருப்பதால் ஒவ்வொருவருக்கும் ஏற்ற திட்டத்தை சன் டைரக்ட் தருகிறது.

இதன்படி, சன் டைரக்டில் சவுத் வேல்யு பேக் ரூ.155க்கும் (போட்டியாளர்களின் கட்டணம் ரூ.170), சவுத் சினிமா ப்ளஸ் ஸ்போர்ட்ஸ் ரூ.185க்கும் (போட்டியாளர் கட்டணம் ரூ.190,ரூ.200), வேர்ல்டு பேக் ரூ.220க்கும் (போட்டியாளர் கட்டணம் ரூ.300,ரூ.340), மெகா பேக் ரூ.300க்கும் (போட்டியாளர் கட்டணம் ரூ.400 முதல் ரூ.430) கிடைக்கிறது.
சினிமா ப்ளஸ் ஸ்போர்ட்ஸ் தொகுப்பில், ஸ்டார் கிரிக்கெட், ஈஎஸ்பிஎன், ஸ்டார் ஸ்போர் ட்ஸ் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 என 4 புதிய பிரபல ஸ்போர்ட்ஸ் சேனல்களையும், விளம்பரங்கள் இல்லாத 8 திரைப்பட சேனல்களையும் வழங்குகிறது.

ஆங்கில திரைப் படங்கள், தகவல், பொழுதுபோக்கு மற்றும் செய்திகள் ஆகியவற்றின் மிக நேர்த்தியான கலவையை வேர்ல்டு பேக் வழங்குகிறது. சன் டைரக்ட் தளத்தின் கீழ் அனைத்து பிரிவுகளிலும் கிடைக்கக்கூடிய 190க்கும் மேற்பட்ட சேனல்கள்  மெகா பேக் வழங்குகிறது.

சலுகை திட்டங்களை அறிவித்து சன் டைரக்ட் நிறுவனத் தின் மேலாண்மை இயக்குநர் மகேஷ்குமார் பேசுகையில், ‘‘இந்த பண்டிகை காலத்தில் இத்தகைய மதிப்புமிக்க சலுகை திட்டங்களின் மூலம், வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சியில் பங்குகொள்ள எங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது’’ என்றார்.

மங்கள்யான் செயற்கைக்கோள் : ஒத்திகை துவங்கியது!

31 - tec Mission-Mars.j 

 
செவ்வாய் கிரகத்தரையின் மேற்பரப்பு குறித்தும், அங்கு மீத்தேன் வாயு உற்பத்தி ஆகும் இடம் குறித்தும் ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் சதிஸ்தவான் ராக்கெட் தளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி– சி25 ராக்கெட் மூலம் மங்கள்யான் விண்கலத்தை வருகிற 5–ந் தேதி பிற்பகல் 2.36 மணிக்கு ஏவுகிறது.அப்போது அனுப்புவதற்கான ஒத்திகைகள் ஸ்ரீஹரிகோட்டாவில் இன்று துவங்கியுள்ளன.



சத்தீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்று வரும் இந்த ஒத்திகையில் ஏராளமான விஞ்ஞானிகள் பங்கேற்றுள்ளனர். அங்குள்ள முதலாவது ஏவுதளத்தில் பிஎஸ்எல்வி சி&25 ராக்கெட் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அதனை விண்வெளியில் செலுத்-துவதற்கான பொத்தானை அமுக்குவதை தவிர மற்ற பணிகள் அனைத்தும் சோதித்து பார்க்கப்பட்டு வருவதாக ஸ்ரீஹரிக்கோட்டா விண்வெளி ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


வரும் 3ம் தேதி காலை 6 மணி 8 நிமிடத்திற்கு ராக்கெட்டை அனுப்புவதற்கான கவுன்டவுன் துவங்க உள்ளன. பின்னர் 5ம் தேதி பிற்பகல் 2 மணி 39 நிமிடத்தில் ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. 300 நாட்கள் பயணத்திற்கு பிறகு 2014ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி மங்கல்யாண் செயற்கைக்கோள் செவ்வாய் கிரகத்தை சென்றடையும். அங்கு மீத்தேன் வாயு உள்ளது தொடர்பான பல்வேறு ஆய்வுகளை மங்கள்யாண் செயற்கைக்கோள் மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top