.......................................................................... ....................................................................... ......................................................................

Friday 1 November 2013

மங்கள்யான் செயற்கைக்கோள் : ஒத்திகை துவங்கியது!

31 - tec Mission-Mars.j 

 
செவ்வாய் கிரகத்தரையின் மேற்பரப்பு குறித்தும், அங்கு மீத்தேன் வாயு உற்பத்தி ஆகும் இடம் குறித்தும் ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் சதிஸ்தவான் ராக்கெட் தளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி– சி25 ராக்கெட் மூலம் மங்கள்யான் விண்கலத்தை வருகிற 5–ந் தேதி பிற்பகல் 2.36 மணிக்கு ஏவுகிறது.அப்போது அனுப்புவதற்கான ஒத்திகைகள் ஸ்ரீஹரிகோட்டாவில் இன்று துவங்கியுள்ளன.



சத்தீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்று வரும் இந்த ஒத்திகையில் ஏராளமான விஞ்ஞானிகள் பங்கேற்றுள்ளனர். அங்குள்ள முதலாவது ஏவுதளத்தில் பிஎஸ்எல்வி சி&25 ராக்கெட் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அதனை விண்வெளியில் செலுத்-துவதற்கான பொத்தானை அமுக்குவதை தவிர மற்ற பணிகள் அனைத்தும் சோதித்து பார்க்கப்பட்டு வருவதாக ஸ்ரீஹரிக்கோட்டா விண்வெளி ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


வரும் 3ம் தேதி காலை 6 மணி 8 நிமிடத்திற்கு ராக்கெட்டை அனுப்புவதற்கான கவுன்டவுன் துவங்க உள்ளன. பின்னர் 5ம் தேதி பிற்பகல் 2 மணி 39 நிமிடத்தில் ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. 300 நாட்கள் பயணத்திற்கு பிறகு 2014ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி மங்கல்யாண் செயற்கைக்கோள் செவ்வாய் கிரகத்தை சென்றடையும். அங்கு மீத்தேன் வாயு உள்ளது தொடர்பான பல்வேறு ஆய்வுகளை மங்கள்யாண் செயற்கைக்கோள் மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top