.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday 6 October 2013

வீட்டிற்கு வரும் இலவச DVD- Updated!!


 
 
 
 
வீட்டிற்கு வரும் இலவச DVD.. நம்பினால் நம்புங்கள்...
நான் பெற்றவற்றை மட்டும் குறிப்பிடுகிறேன். பதிவு செய்து இரு வாரங்களில் உலகின் எப்பாகத்திற்கும் வீடு தேடி வரும்... இங்கு நான் குறித்த தளங்களின் முகவரியையும் உள்ளடக்கத்தையும் குறிப்பிடுகிறேன்.. நீங்களும் முயன்று பாருங்கள்.. படங்களை பாருங்கள். இவற்றில் சில புதிதாக இணைத்து உள்ளேன்.


  1.  தமிழ் மென்பொருள் கருவி.
இது தமிழ் நாட்டில் இருந்து இலவசமாக அனுப்பபடுகிறது.  9 வகையான தமிழ் மென்பொருட்கள் அடங்கி இருக்கின்றன ( Tamil Fire fox, Thunderbird, open office etc..)



     2. HEART 
இது ஒரு பயிற்சி இறுவட்டாகும். முதலுதவி சம்பந்தமானது.




    3. இலவச பைபிள் பாடம் 


   4.அணு ஆயுத தடுப்பு சம்பந்தமான விவரண படம் 


    5.உள நலம் சம்பந்தமானது ஆவணப்படம்
இலவசமாக பெற உள் நுழைக

   6. 30000 இலவச புத்தகங்கள் PDF
இலவசமாக பெற உள் நுழைக

  7.மனித உரிமை தொடர்பான ஆவண படம் உயர் தரம் (HD Video)
 இலவசமாக பெற உள் நுழைக

  8.குபுண்டு open source os
  இலவசமாக தபாலில் பெற முடியாது. முன்பு வாரி வழங்கினார்கள்.

  9.The Stories of School.
ஆவுஸ்ரேலியா இல் உள்ள கருப்பின மக்களின் வாழ்க்கை, பாடசாலை பற்றிய விவரண காணொளி.

 இலவசமாக பெற உள் நுழைக


இன்னும் இரு வாரங்களில் உங்கள் அஞ்சல் பெட்டி நிறைய போகிறது, இவை அனைத்தும் சட்ட பூர்வமானவை . பயப்பட தேவை இல்லை.

 இவற்றால் என்ன பயன்? ஒன்றும் இல்லை என்று இல்லை .
  1. HD video பார்க்க ஒரு சந்தர்ப்பம்.
  2. ஆங்கிலம் உச்சரிப்பை ஆங்கிலமாகவே  பழகலாம் 


வந்த பின் இங்கு சொல்லுங்கள்............................................
 
 

மின்னலில் இருந்து செல்போனுக்கு சார்ஜ் – பிரிட்டன் விஞ்ஞானிகள் சாதனை!


மின்னலில் உள்ள சக்தியின் மூலமாக செல்போனில் சார்ஜ் ஏற்ற முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.


பிரிட்டனிலுள்ள செüத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.



6 - cell lightning. mini


இக்கண்டுபிடிப்பில் ஈடுபட்ட விஞ்ஞானிகளில் ஒருவரான நீல் பால்மர்விடம் இது குறித்து கேட்ட போது,”நோக்கியா நிறுவனமானது இத்தகைய சவாலை எங்களிடம் ஒப்படைக்கும்போது நாங்கள் உற்சாகமானோம். முதலாவது மின்மாற்றியின் மூலமாக மின்னல் சக்தியை ஒத்த 2,00,000 வோல்ட்ஸ் மின்சாரத்தை 300 மில்லி மீட்டர் இடைவெளியில் செலுத்த வேண்டும்.
அந்த சமிக்ஞைகளை இரண்டாவது மின்மாற்றி மூலமாக செல்போனுக்கு சார்ஜ் ஏற்றும் அளவிலான மின்சாரமாக மாற்றினோம்.இதன் மூலமாக இயற்கை சக்திகளை மனித பயன்பாட்டுக்கு கொண்டுவர இயலும் என்று கண்டறியப்பட்டுள்ளது: என்று பால்மர் தெரிவித்தார்.



இதற்கிடையில் இபபோதெல்லாம் எல்லோரது கைகளிலும் செல்போன் தவழ்கிறது. அழகழகான வடிவங்களில், விதவிதமான வசதிகளுடன் செல்போன்கள் கிடைக்கின்றன. அழைப்புகள், முகம் பார்த்து பேசும் வசதி, எஸ்.எம்.எஸ், எம்.எம்.எஸ்., விளையாட்டுகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் என ஏராளமான வசதிகள் இருப்பதால் அனைவருக்கும் செல்போன்கள் அத்தியாவசியமாகி விட்டன. அவை நீண்ட காலம் பயன்தர வேண்டுமா?


***


பேட்டரியின் ஆயுளில் கவனம் செலுத்தினால் செல்போன்களும் நீண்டகாலம் உழைக்கும். பேட்டரியின் ஆயுளை காக்க எப்போது பேட்டரி சார்ஜ் தீர்கிறதோ அந்த நேரத்தில் சார்ஜ் செய்யத் தொடங்கினால் போதுமானது. ரெட் சிக்னல் காட்டியபின் அதிக நேரம் கழித்து சார்ஜ் செய்வதையும், நீண்ட நேரம் (விடியவிடிய) சார்ஜ் செய்வதும் கூடாது. இடையில் நிறுத்தி விடாமல் முழுவதும் சார்ஜ் ஏறிய பிறகுதான் உபயோகப்படுத்த வேண்டும்.


***
`

புளூடூத்’ மெனு உள்ள செல்போன்களில் `புளூடூத்` உபயோகித்து முடித்ததும் அதை ஆப் செய்து விட வேண்டும். இது கதிர்வீச்சு முறையில் அருகில் உள்ள செல்போன்களை தொடர்பு கொள்ளும் வசதி என்பதால், அதிக சக்தியை பயன்படுத்திக் கொள்ளும். எனவே தேவையான நேரங்களில் பயன்படுத்திவிட்டு இணைப்பை துண்டிப்பது பேட்டரி சார்ஜை சேமிக்கும். புளூடூத் வழியாக வைரஸ்களும் பரவ வாய்ப்பிருப்பதால் அதை ஆப் செய்து வைத்திருப்பது செல்போனுக்கும் நல்லது.


***


தேவையற்ற சத்தங்களையும், வைப்ரேஷன் அதிர்வையும் எப்போதும் `ஆன்’ செய்து வைத்திருக்க வேண்டாம். உதாரணமாக `கிபோர்டு டோன்’, `ஸ்டார்ட் அப் டோன்’ ஆகியவை மிக அவசியமானவை அல்ல. எனவே இவற்றை குறைவாக பயன்படுத்தலாம். அதேபோல வைப்ரேஷன் அதிர்வு மீட்டிங் நேரத்திலும், சத்தம் நிறைந்த தியேட்டர் போன்ற இடங்களில் மட்டும் பயன்படுத்த வேண்டிய வசதி. இதை எப்போதும் `ஆன்’ செய்து வைத்திருப்பது பேட்டரி சார்ஜை வீணாக்கும்.


***


`பவர் சேவர் லைட்’, `பேக் லைட்` ஆகியவற்றை அணைத்து வைத்திருப்பது பேட்டரியின் ஆற்றலை மிச்சப்படுத்தும். `பேக் லைட்’ என்பது கீபோர்டின் பின்புறம் ஒளிரும் லைட் ஆகும். `டோன்’கள் உபயோகத்தில் இருக்கும்போது இதுபோன்ற `லைட்’கள் அவசியமில்லைதான். இரவு நேரத்தில் மட்டும் தேவைப்படுபவர்கள் `ஆன்’ செய்து பயன்படுத்தி பேட்டரியின் ஆயுளை காக்கலாம். `டிஸ்பிளே செட்டிங்ஸ்’-இல் இந்த ஆப்ஷன்கள் இருக்கும்.


***


பயோகப்படுத்தும் ஆப்ஷன்களை மட்டும் எப்போதும் `ஆக்டிவ்’-இல் வைத்திருக்க வேண்டும். எப்போதோ உபயோகிக்கும் ஆப்சன்களையும், தேவையில்லாத ஆப்சன்களையும், `ஆப்’ செய்து வைத்திருப்பது பேட்டரி ஆயுளை நீடிக்கும். இது செல்போனுக்கு மட்டுமல்லாது அனைத்துவிதமான எலக்ட்ரானிக் டிவைஸ்களுக்கும் பொருந்தும்.


***


ம்ப்யூட்டர், செல்போன்களில் உள்ள வேடிக்கை நிறைந்த எலக்ட்ரானிக் விளையாட்டுகள் எல்லோரையும் கவர்ந்த ஒன்று. அதனால்தான் சிறிது நேரம் ஓய்வு கிடைத்தாலும் சிறுவர்களும், இளைஞர்களும் `கேம்ஸ்`களில் மூழ்கி விடுகிறார்கள். நிஜத்தில் விளையாடுவது எப்படி உடலில் அதிகப்படியான கலோரிகளை எரிக்குமோ, அதுபோலவே செல்போனில் விளையாடுவது அதிக அளவில் பேட்டரி சார்ஜை காலியாக்கி விடும். பேட்டரி நலன் கருதினால் குறைவாக விளையாடுங்கள்.


***


தேவையற்ற ஆப்ஷன்களை எப்படி `ஆன்’ செய்து வைக்கக்கூடாதோ, அதுபோலவே பயன்படுத்தாத நேரங்களில் செல்போன்களையும் `ஆன்’ செய்து வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. நிறைய பேர் செல்போன்களை அணைத்து வைப்பதே கிடையாது. அவசர உதவி எண்கள் போல எல்லா நேரத்திலும் ஆனிலேயே இருக்கிறது. இதுவும் பேட்டரி சார்ஜை வீணாக்கும் செயல் தான். குறைந்தபட்சம் தூங்கும் நேரத்திலாவது அணைத்து வைக்கலாமே!


***


வர்ச்சிகரமாக தோன்றுவதற்காக ஸ்கிரீன் சேவர், மூவிங் வால்பேப்பர் ஆகியவற்றை பயன்படுத்துவதை பலரும் விரும்புகிறார்கள். இவை அதிகமாக சார்ஜ் உறிஞ்சுபவை. சாதாரண படங்களை வால்பேப்பருக்கு பயன்படுத்துவதன் மூலம் அதிக சார்ஜை மிச்சப்படுத்தலாம். அதேபோல `டவர்’ குறைவாக உள்ள இடங்களில் போன்களை உபயோகித்தால் நிறைய பேட்டரி ஆற்றல் வீணாகும். அப்போது `ஆப்’ செய்து வைக்கலாம்.


***


நீண்ட நேரம் நிலைத்து நிற்கக்கூடிய பேட்டரிகள் கொண்ட நவீன செல்போன்கள் நிறையவே கிடைக்கின்றன. எளிதாக சார்ஜ் செய்யும் வசதிகளுடைய போன்களும், பயன்படுத்தாத, தேவையற்ற ஆப்ஷன்களை தானாக ஆப் செய்துகொள்ளும் நவீன மொபைல்களும் கூட விற்பனைக்கு கிடைக்கின்றன. எனவே விலை குறைவாக இருக்கிறது என்று எண்ணி தரமற்ற செல்போன், பேட்டரிகளை வாங்கி விட்டு அடிக்கடி மாற்றிக் கொண்டிருக்க வேண்டாம்.


Now, Nokia lays Frankenstein to rest, says charge a cell phone via lightning

************************************* 


Thunder power! In a Frankensteinian breakthrough, powered by beleguered Nokia, scientists have for the first time charged a cell phone using lightning bolt.Famous English author Mary Shelley in her gothic novel ‘Frankenstein’ used lightning to breathe life into the Frankenstein monster, some 200 years ago.

பேஸ்புக் மூலம் தன் பட விநியோகத்தை விரிவுபடுத்தும் சேரன்!


இப்போதெல்லாம் பேஸ்புக் மூலம் எதையும் செய்யலாம் என்றாகி விட்டது. அந்த வகையில் புதிய சினிமா தயாரிபாவ்ர்கள் பலரும் தங்கள் பட டைட்டிலில் ஒரு பேஜ் ஆரம்பித்து பப்ளிசிட்டி பண்ணுவது நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் இயக்குனரும் நடிகருமான சேரன் தன சொந்த படமான் ‘ ஜேகே’திரைப்படத்தை பேஸ்புக் உதவியுடன் உலகின் பல நாடுகளில் விநியோகம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார்

.
6 - JK-Enum-Nanbanin-Vaazhkai.j


இது குறித்து சேரன் தன பேஸ்புக் பக்கத்தில்,


ஜே.கே படத்தின் வெளிநாடுகளில் வெளியிடும் முயற்சியில் இருக்கிறேன்.. தமிழர்களும் தமிழ் உறவுகளும் உலகம் முழுக்க பரவி கிடக்கிறது… எங்கெல்லாம் திரையிட முடியும் என்றும் யார் யார் இதற்கு ஒத்துழைப்பு தருகிறார்கள் என்றும் விவரங்கள் சேகரிக்கிறேன்… 


தாங்கள் வாழும் நாடுகளில் இடங்களில் என்னுடைய படத்தை திரையிட விருப்பமுள்ள நண்பர்கள் எனக்கு தொடர்பு கொள்ளலாம்…

 இது வியாபாரமே… அதற்கான தொகையையும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்… 


சில நாடுகளில் மட்டுமே இப்போது திரையிடப்படுகிறது…. 


இம்முயற்சியில் புதியவர்களையும் எதிர்பார்க்கிறேன்… 


படம் தீபாவளி கழித்து இரண்டு வாரங்களில் திரைக்கு வரும்…


இதை படிக்கும் நண்பர்கள் மற்றவர்களும் உங்கள் நண்பர்களும் படிக்க இந்த செய்தியை பகிரவும்…… நன்றி…”


 என்று தெரிவித்துள்ளார்.

குற்ற கடிகார முட்களை நிறுத்துவது கடினம்!.



பயம் அறியாத காவல்துறையினர் பயத்தோடு படிப்பது அன்றாட நிகழ்வுப் பட்டியல். குற்றம் எங்கு எப்படி நடந்தது என்று ஆராய வேண்டும். சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இருந்தால் இன்னும் பதற்றம். காவல் நிலைய அதிகாரி முதல், டி.ஜி.பி. வரை நிர்வாகத்திற்கும் மக்களுக்கும் பதில் சொல்ல வேண்டும். அதிலும் இப்போது நிகழ்வுப் பட்டியல், ஊடகங்களிலிருந்து “உடையும் செய்தி’யாக வருகிறது; கணினி மூலம் தகவல் பரிமாற்றம் விரிவடைந்துவிட்டது. அதன் பயனாக இந்த வருடம் மத்திய குற்ற ஆவண ஆணையம் நாட்டின் 2012-ஆம் ஆண்டிற்கான குற்ற நிகழ்வுகள் பட்டியலை விரைவிலேயே வெளியிட்டு விட்டது.



5 - edit_crime.


மாநிலங்கள் மற்றும் நகரங்களில் நடைபெற்ற குற்றங்கள், சட்டம் – ஒழுங்குப் பிரச்னைகள் பட்டியல், காவல்துறை அவற்றை எவ்வாறு கையாண்டது என்பனவற்றை இதன் மூலம் நாம் அறியலாம். புள்ளிவிவரங்கள் இரு முனை கத்தி போன்று சாதகம், பாதகம் இரண்டும் பொருந்தியது. புள்ளிவிவரங்களை வைத்து மட்டும் காவல்துறையின் செயல்பாடுகளைக் கணித்துவிட முடியாது என்றாலும், சில புள்ளிவிவரங்கள் உண்மைகளைப் படம் பிடித்துக் காட்டும். அவை கற்பிக்கும் பாடம் வருங்காலத்திற்கு பயனுள்ளதாக அமையும்.


வழக்குப்பதிவு செய்து விசாரிக்கக்கூடிய வழக்குகள், விசாரிக்க முடியாத வழக்குகள் என்று குற்ற நிகழ்வுகள் பிரிக்கப்படுகிறது. 2012-ஆம் வருடம் நாட்டில் விசாரிக்கக்கூடிய வழக்குகள் 60,41,559 என்று காவல் துறை பதிவு செய்தது. இதில் இந்திய தண்டனைச் சட்ட வழக்குகள் 23,87,188. இந்திய தண்டனைச் சட்ட வழக்குகள் முக்கியமாக கருதப்படுகிறது, ஏனெனில் அவை உடல் மற்றும் சொத்து மீது இழைக்கப்படும் குற்றங்கள் சம்பந்தப்பட்டது. சிறப்பு சட்டங்கள், மற்ற பிரிவுகளில் போடப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 36,54,371, ஆக, மொத்த வழக்குகள் 60.41 லட்சம்.


இந்திய தண்டனைச் சட்டத்தில் முக்கியமாகக் கருதப்படுவது கொலை, ஆதாயக் கொலை, கொடிய காயம் விளைவித்தல், பொது இடங்களில் சண்டை சச்சரவு போன்றவை.


கொலை, காயம் சம்பந்தப்பட்ட வழக்குகள் 5.6 லட்சம் நிகழ்ந்தன. இதில் நாட்டில் கொலை வழக்குகள் மட்டும் 34,434. தமிழ்நாட்டில் 1,949, உத்தரப் பிரதேசத்தில் 4,966, பிகாரில் 3,516, ஆந்திரத்தில் 2,717, கர்நாடகத்தில் 1,860 கொலைகள் பதிவு செய்யப்பட்டன.


இந்தியாவில் உள்ள முக்கியமான நகரங்களில் 2012-இல் நடந்த கொலைகள், தில்லியில் 408, மும்பையில் 215, பாட்னாவில் 224, பெங்களூரில் 266, சென்னையில் 180, மதுரையில் 39, கோவையில் 29. மற்ற நகரங்களை ஒப்பிடுகையில் நமது நகரங்களில் குறைவு என்றாலும் எந்த ஒரு கொலையும் பீதியை கிளப்புகிறது.


பாலியல் பலாத்கார வழக்குகள், வன்புணர்ச்சி வழக்குகளின் விவரம் 1971 முதல்தான் சேகரிக்கப்பட்டது. சுதந்திரம் அடைந்து 24 வருடங்கள் பாலியல் வழக்குகளைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது விழிப்புணர்வு குறைவா, மெத்தனமா? நமது சமுதாய உணர்வுகளை எடுத்துக் கொண்டால் இத்தகைய நிகழ்வுகளைப் பற்றி சொல்வதற்கே அஞ்சுவார்கள். பாதிக்கப்பட்ட பெண்களையே குறை கூறுவார்கள். புகார் செய்யப்படும் வழக்குகளைவிட நடந்த நிகழ்வுகள் அதிகமாக இருக்கும் என்ற வகையில்தான் புள்ளிவிவரங்களை ஆராய வேண்டும்.


தில்லியில்தான் அதிகமாக 585 வன்புணர்ச்சி வழக்குகள் 2012-இல் பதியப்பட்டன. மும்பையில் 232, சென்னையில் 94, பெங்களூரில் 90 வழக்குகள். 1971-ஆம் ஆண்டு புள்ளி விவரப்படி நாட்டில் 2,487 ஆக இருந்த வன்புணர்ச்சி வழக்குகள் 2012-ஆம் ஆண்டு 24,923 வழக்குகளாக (90.2 சதவிகிதம்) உயர்ந்துள்ளது. இதர பாலியல் பலாத்கார வழக்குகளை எடுத்துக் கொண்டால் 2011-இல் 2.28 லட்சமாக இருந்த வழக்குகள் 2012-ஆம் ஆண்டில் 2.44 லட்சமாக உயர்ந்துள்ளது.


மத்தியப் பிரதேசத்தில்தான் அதிகமாக 3,425 வன்புணர்ச்சி வழக்குகள் பதியப்பட்டன. தமிழ்நாட்டில் 737 வழக்குகள், சென்னையில் 94, சேலம் 51, திருநெல்வேலி 47, மதுரை 41, கோவை 29.


பாலியல் குற்ற ஒழிப்பு சட்டம், வரதட்சணை ஒழிப்பு சட்டம் போன்ற சமுதாய நலன் கருதி இயற்றப்பட்டுள்ள சிறப்பு சட்டங்கள் அமலாக்கம் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் எப்போதும் சிறப்பாக இருக்கும். அதற்கு முக்கிய காரணம் அதிக விழிப்புணர்வு. பாலியல் தடுப்பு சட்டத்தின் கீழ் இந்தியாவில் 2,563 வழக்குள் பதியப்பட்டன தமிழகத்தில் 500 வழக்குகளும் ஆந்திரத்தில் 472 வழக்குகளும் பதியப்பட்டன. பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் பெண்களை குற்றவாளிகளாகக் கருதாமல் பாதிக்கப்பட்டவர்களாகவே கருதி அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.


குழந்தைகள்தான் நாட்டின் எதிர்காலம். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் களையப்பட வேண்டும். 2012-ஆம் வருடம் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகள் 38,172. 2011-இல் 33,098. 15.3 சதவீதம் உயர்ந்துள்ளது.


குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகள் கடந்த பத்து ஆண்டுகளில் அதிகரித்து வருகிறது. மொத்த இந்திய தண்டனை சட்ட வழக்குளில் 8.89 சதவிகிதம் 2012-இல் பதிவாகியுள்ளது. குழந்தைக் கடத்தல், வன்புணர்ச்சி, கொலை, பாலியலில் ஈடுபடுத்துவதற்காக குழந்தைகளைக் கடத்துதல் போன்ற, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பரவலாக நாட்டில் நிகழ்கிறது. உத்தரப் பிரதேசம் 6,033, மத்தியப் பிரதேசம் 5,168, தில்லி 4,462, மகாராஷ்டிரம் 3,456, பிகார் 2,894, ஆந்திரம் 2,274. தமிழ்நாட்டில் 1,036 வழக்குகள். மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் குறைவு.


ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு எதிரான வழக்குகளும் சமுதாய சீர்திருத்த சட்டங்களில் முக்கியமாகக் கருதப்படுகிறது. குடிமை உரிமைகள் பாதுகாப்பு சட்டம், அரசியல் சாசனம் 17-இல் உள்ள தீண்டாமை ஒழிப்பு பிரகடனப்படி 1955}இல் இயற்றப்பட்டது.


இச்சட்டத்தின்கீழ் 2012-ஆம் வருடம் 33,655 வழக்குகள் நாட்டில் பதியப்பட்டன. உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பிகார் முறையே 6,303, 5,559, 4,821 அதிகமான வழக்குகள் கொண்ட மாநிலங்கள். தமிழ்நாட்டில் 1,647 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அண்டை மாநிலங்களான ஆந்திரம், கர்நாடகம், கேரளத்தில் முறையே 3,057, 2,685, 810 வழக்குகள். வழக்காடுதல் மட்டும் சீர்திருத்தத்தை வளர்க்காது என்பதை, அதிகரிக்கும் வழக்குகள் வெளிச்சமிடும்.
சட்டம் – ஒழுங்கைப் பராமரிப்பது காவல்துறையின் முக்கிய பணி. தெருக்களில் நடைபெறும் சண்டை சச்சரவுகள், பூசல்கள், வன்முறைகள் சட்டம் ஒழுங்கு நிலையை பிரதிபலிக்கும். 2.75 லட்சம் வன்முறை சம்பவங்கள் நாட்டில் நிகழ்ந்துள்ளன. 2011-ஆம் வருடம் நிகழ்ந்த 2.56 லட்சம் வழக்குகளை ஒப்பிடுகையில் இது சற்று அதிகம்.


இது மொத்த இந்திய தண்டனைச் சட்ட வழக்குகளில் 11.5 சதவீதம். மக்கள்தொகை அதிகம் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் 33,824, பிகாரில் 29,842, மூன்றாவதாக மகாராஷ்டிரத்தில் 26,972 நிகழ்வுகள்.


மேற்படி வன்முறைப் பதிவுகளில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் 86,469 சம்பவங்கள் நிகழ்ந்தன என்பது சங்கடப்படுத்தும் விவரம். இவற்றில் பெண்கள் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட நிகழ்வுகளின் எண்ணிக்கை மட்டும் 24,923 என்பது இந்தியாவிற்கு தலைகுனிவு. இதில் அதிகமாக பிகாரில் 11,670 வழக்குகள் பதிவாயின உத்தரப்பிரதேசத்தில் 6,003 வழக்குகள், மகாராஷ்டிரத்தில் 10,106, சிறிய மாநிலமான கேரளத்தில் மிக அதிகமாக 11,506 வழக்குகள் பதிவாயின. அவற்றில் சட்ட விரோதமாக தெருக்களில் ரகளை நிகழ்வுகள் 10,938.


படித்தவர்கள் அதிகமான கேரளத்தில் இந்த நிலை. படித்தவர்கள் ஏன் தெருக்களுக்கு வந்து சண்டையிடுகிறார்கள்? அறிவு புரிதல் அளிப்பதால் அநியாயங்களை கண்டு தட்டிக் கேட்க தெருக்களுக்கு வருகிறார்கள் என கொள்ள வேண்டும் ; நல்லவேளை தமிழ்நாட்டில் இத்தகைய பொது இட வன்முறைகள் 3,862 மட்டுமே.


திருட்டு வழக்குகள் கன்னக்களவு வழக்குகள் 4.3 லட்சம் பதிவாகியுள்ளது. இதில் கன்னக்களவு 92,892. தமிழ்நாட்டில் திருட்டு வழக்குகள் 18,467. இதில் கன்னக்களவு 4457. மராட்டிய மாநிலத்தில் அதிகமாக 71,188 வழக்குகள், ஆந்திரத்தில் 36,717 கர்நாடகத்தில் 27,164, கேரளத்தில் 7874. இந்தியாவில் திருட்டு வழக்குகளில் மொத்த இழப்பு ரூபாய் 21,071 கோடி. அதில் தமிழ்நாட்டில் ரூபாய் 137.44 கோடி. மீட்கப்பட்ட பொருட்களின் மதிப்பு 82.58 கோடி அதாவது 60 சதவிகிதம். மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் இது சிறப்பான நடவடிக்கை.


காவல்துறையின் செயல்பாடு திறமையான புலனாய்வில் இருக்கிறது. எல்லா மாநிலங்களிலும் 2012-ஆம் ஆண்டு 32.43 லட்சம் வழக்குகள் நிலுவையில் இருந்தன. அவற்றில் 23.95 லட்சம் வழக்குகளில் விசாரணை முடிக்கப்பட்டன. 8.45 லட்சம் வழக்குகள் ஆறுமாதத்திற்கு மேல் விசாரணையில் உள்ளன.
கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகள் 78.8 லட்சம். தமிழ்நாட்டில் 3,08,578 வழக்குகள். வெற்றிகரமாக முடிக்கப்பட்ட வழக்குகள் தமிழ்நாட்டில் 56.5 சதவிகிதம், அகில இந்திய அளவு 38.1 சதவீதத்தைக் காட்டிலும் அதிகம் என்பதில் பெருமை கொள்ளலாம்.


காவல்துறைகளில் பணியாளர்கள் பற்றாக்குறை எல்லா மாநிலங்களிலும் உள்ளது. மொத்த ஒப்பளிக்கப்பட்ட எண்ணிக்கை 21.64 லட்சம். பணியில் இருப்பவர்கள் 16.74 லட்சம். மொத்த பெண் போலீசாரின் எண்ணிக்கை 85,462. மராட்டிய மாநிலத்தில் 17,134 பெண் போலீஸ் அதற்கு அடுத்தாக தமிழ்நாட்டில் 12,085.


இந்தியாவில் மொத்த காவல் நிலையங்கள் 14,155. தமிழ்நாட்டில் 1,492 காவல் நிலையங்கள். சராசரி 1 லட்சம் பொதுமக்களுக்கு 138 காவலர்கள் பணியில் உள்ளனர். மேலை நாடுகளில் இது மூன்று மடங்கு அதிகம்.


2012-ஆம் வருடம் 77.5 லட்சம் நபர்கள் கைதாகியுள்ளனர் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 6 லட்சம்.இந்தியாவில் குற்ற கடிகாரத்தில் ஒரு மணி நேரத்திற்கு 273 வழக்குகள் பதிவாகின்றன. பதிவாகாதவை, புகார் செய்யாதவை பல இருக்கலாம். 373 நபர்கள் ஒரு மணி நேரத்திற்கு கைதாகிறார்கள். ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 3 வன்புணர்ச்சி வழக்கு பதிவாகிறது.


குற்ற கடிகார முட்களை நிறுத்துவது கடினம். தாமதமாக ஓடச் செய்யலாம், நிற்காமல் நீராக ஓடும் குற்றங்களைத் தடுக்கலாம் – காவல்துறையினர் பொதுமக்களோடு ஒன்றிஉழைத்தால்.


ஆர். நடராஜ் (காவல்துறை முன்னாள் தலைவர்).

செவ்வாய்க்கு செயற்கைகோள் ஏவுவது 2 ஆண்டு தாமதம் ஆகும்!




 அமெரிக்காவில் ஏற்பட்ட திடீர் நிதி நெருக்கடியால் செவ்வாய்க்கு செயற்கைகோள் ஏவுவதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் ரூ450 கோடி செலவில் நாசாவின் தொழில்நுட்பம் மற்றும் வழிகாட்டுதலின்படி  அக்டோபர் 28ம் தேதி மாலை 4.15 மணிக்கு விண்ணில் செவ்வாய்க்கு செயற்கைகோள் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 



இந்நிலையில் அமெக்காவில் உள்ள அரசு அலுவலகங்கள் மூடப்பட்டதால் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் உள்ள நாசா ஊழியர்கள் 18 ஆயிரம் பேரில் 97 சதவீதம் பேர் சம்பளம் இல்லாமல் கட்டாய விடுப்பு எடுத்துக்கொள்ளும்படி உத்தரவிட்டுள்ளது. இதனால் செவ்வாய் கிரகத்திற்கு செயற்கை கோள் ஏவுவதில் தாமதம் ஏற்படும் நிலை உள்ளது. இரண்டு ஆண்டுகள் தாமதமாகும்:  இஸ்ரோவில் இருந்து செவ்வாய் கிரகத்திற்கு ஏவப்படும் செயற்கைக்கோள் அக்டோபர் 28ம் தேதியில் இருந்து நவம்பர் 19ம் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படவில்லை என்றால் அதன் பின்னர் விண்ணில் செலுத்த இரண்டு ஆண்டுகள் வரை ஆகலாம்.



 நாசா மையத்தை தற்போது தொடர்புகொள்ள இயலாது என்ற பதிவு செய்யப்பட்ட தகவல் தான் ஒலிக்கிறது.


 இதுகுறித்து தேசிய நிபுணர் குழு தலைவர் யு.ஆர்.ராவ் கூறுகையில், முடிந்தவரை நவம்பர் 19ம் தேதிக்குள் செயற்கை கோளை விண்ணில் செலுத்த வேண்டும். ஆனால் தற்போதைய தருணத்தை தவறவிட்டால் சுமார் இரண்டு ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். பொதுவாக இஸ்ரோ, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து அக்டோபர், நவம்பர் மாதங்களில் செயற்கை கோள் ஏவப்படுவது தவிர்க்கப்படும். அந்த நேரத்தில் கடலில் புயல் அபாய வாய்ப்பு அதிகம் இருக்கும் என்றார். 


இந்நிலையில் இஸ்ரோ அதிகாரி தேவி பிரசாத் கார்னிக், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,  எவ்வித கால தாமதமும் இன்றி திட்ட மிட்டபடி அக்டோபர் 28ம் தேதி செயற்கை கோள் விண்ணில் செலுத்தப்படும் என்றார்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top