.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday 21 September 2013

திருநெல்வேலி திரிபாகம்! - சமையல்!


 Groundnut oil fry the dough. After pouring the boiling milk than




என்னென்ன தேவை?

கடலை மாவு  - 1 கப்,
சர்க்கரை - 1 கப்,
பால் - 1 கப், நெய் - 1 கப்.
 


எப்படிச் செய்வது?  

கடலை மாவை நெய்யில் வறுக்கவும். பிறகு அதில் பாலை ஊற்றிக் கொதிக்க விடவும். மாவு வெந்தவுடன் சர்க்கரை போட்டுக் கிளறி, நெய்விட்டுக்  கிண்டினால் திரிபாகம் ரெடி.
 

மார்ஸ் கிரகத்திற்க்கு பாம்பு ரோபோட்: நாஸா



 
 

நாஸா (NASA) அமைப்பு மார்ஸ் கிரகத்திற்ககு சோஜோர்னர் (sojourner), ஸ்பிரிட் (spirit) மற்றும் ஆப்பர்ஷூனிட்டி (opportunity) ரோபோட்களை அனுப்பி மார்ஸ் கிரகத்தில் உள்ள மண்ணின் மாதரியை எடுக்க மற்றும் கேமராவை ஆப்ரேட் செய்ய ரோபோடிக் கைகளும் உண்டு. 




இந்த ரோபோட்கள் மார்ஸ் கிரகத்தில் இருக்கும் மண்ணை சோதனை செய்து அதை பற்றிய தகவலை பூமிக்கு அனுப்பும். ஆனால் இந்த ரோபோட்கள் மார்ஸ் கிரகத்தில் உள்ள சில முக்கியமான இடங்களுக்கு சென்று மண்ணை எடுத்து பரிசோதிக்க முடியவில்லை. அதற்க்காகவே பாம்பு ரோப்பாட்டை (snake robot) அடுத்து மார்ஸ்க்கு பரிசீலனை செய்கின்றனர். பாம்பு வடிவ ரோபோட் மார்ஸ் கிரக்கத்தில் உள்ள மத்த ரோபோட்கள் செல்ல முடியாத இடத்திற்க்கு சென்று மண்ணை பரிசோதிக்க உதவும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து. 


செவ்வாய் தான் இப்போதைக்கு மனிதர்கள், மற்ற உயிரினங்கள் வாழ தகுதியாக உள்ளதாம்!




மனிதன் உட்பட உயிரினங்கள் உயிர் வாழும் இந்த பூமியின் ‘உயிர் வாழும்’ காலம் எவ்வளவு தெரியுமா? 175 கோடி ஆண்டுகள் தான். அதன் பின், இந்த பூமி, சூரிய மண்டலத்தின் உச்சகட்ட கொதிக்கும் கிரகமாகி விடுமாம்; தண்ணீர் ஒரு துளி கூட இருக்காதாம். பிரிட்டனில் நம்பர் 1 பல்கலைக்கழகம் யுனிவர்சிட்டி ஆப் ஈஸ்ட் ஆங்கிலியா. இந்த பல்கலைக்கழக வான் உயிரியல் ஆராய்ச்சி குழுவினர், நிபுணர் ஆன்ட்ரூ ரஷ்பி என்பவர் தலைமையில் பல ஆண்டாக பூமி பற்றிய ஆய்வுகளை செய்து வருகிறது. சமீபத்தில் இந்த குழு வெளியிட்ட அதிர்ச்சி தகவல் தான் இது. 



இது தொடர்பாக ஆன்ட்ரூ ரஷ்பி கூறியதாவது:  பூமி இன்னும் எத்தனை ஆண்டுகள் உயிர் வாழும் என்பது பற்றி நாங்கள் பல வகையில் ஆராய்ச்சி செய்து வருகிறோம். எங்கள் ஆராய்ச்சி இன்னும் முடிந்தபாடில்லை. காரணம், பூமி பற்றிய ஆய்வுகள் முடிவில்லாதவை. ஆனால், எங்கள் கண்டுபிடிப்புகள் பல கட்டங்களில் உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளன. 




எங்கள் முந்தைய கணிப்பு படி, பூமி இன்னும் 325 கோடி ஆண்டுகள் வரை ‘உயிர் வாழும்’ தகுதி படைத்ததாக இருக்கும் என்று தான் மதிப்பிட்டிருந்தோம். ஆனால், வானிலை மாற்றங்கள் கடுமையாக மாறி வருகின்றன; கடல் மட்டம் மாறி வருகிறது; கடல் நீர் அதிவேகமாக நீராவி ஆகி வருகிறது. இப்படி பல வகையான வானிலையில் மிக மோசமான மாற்றங்கள் ஏற்பட்டு வருவதால், பூமி ‘உயிர் வாழும்’ காலம் வெகுவேகமாக குறைந்து வருகிறது. அதாவது, எங்கள் இப்போதைய கணிப்பு 175 கோடி ஆண்டுகள் வரை பூமி ‘உயிர் வாழும்’ என்பது தான். 



ஆம், அதுவரை பூமியில், தண்ணீர் இருக்கும்; வெப்பம், மனிதர்களால் தாங்கும் அளவுக்கு இருக்கும். அதன் பின், வெப்பம் மிகவும் கொடூரமாக இருக்கும்; மனிதர்கள் பொசுங்கி போவர்; ஆடு, மாடு போன்ற உயிரினங்கள் அதிர்ச்சி தரும் வகையில் கோடிக்கணக்கில் மடிந்தும் மறைந்தும் விடும்.  அதனால் மாற்று இடம் தேடி தான் மக்கள் போக வேண்டியிருக்கும். சூரிய மண்டலத்துக்கு வெளியே கிட்டத்தட்ட ஆயிரம் கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் மனிதர்கள் உட்பட உயிரினங்கள் உயிர் வாழ தகுதி இருக்கிறதா என்று ஆராய்ச்சிகளும் நடந்து வருகின்றன. 



 செவ்வாய் உட்பட எட்டு கிரகங்கள் தான் உயிரினங்கள் உயிர் வாழ, வானிலை உட்பட  எல்லா வகையிலும் அருமையாக இருக்கும். அதில் மனிதர்கள் குடியேறலாம். மனிதர்களுக்கு ஏற்ற வகையில் செவ்வாய் உட்பட இந்த கிரகங்களில் இயற்கை வளங்கள், வசதிகள் இருக்கும். இவ்வாறு ஆன்ட்ரூ ரஷ்பி கூறினார். 



எந்த கிரகம் வசதியானது?

* சூரியனின் காலம் இன்னும் 600 கோடி ஆண்டுகள்.
* சூரியனை வைத்து தான் மற்ற கிரகங்கள் உயிர் வாழுகின்றன. அதாவது, பல வகையிலும் உயிர் வாழும் தகுதிகளை படைத்துள்ளன.
* அப்படி பார்த்தால் செவ்வாய் தான் இப்போதைக்கு மனிதர்கள், மற்ற உயிரினங்கள் வாழ தகுதியாக உள்ளதாம்.
* மேலும், பூமிக்கு வெகு அருகாமையில் உள்ளதும் செவ்வாய் தான்.
* பூமி போலவே, வானிலை அருமையாக இருக்கும்; தண்ணீர் போன்ற வசதிகள் இருக்குமாம்.

ஐ.நா.- இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி வழங்க வேண்டும்! மன்மோகன் சிங் வலியுறுத்தல்!



ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்த உள்ளார். 


நியூயார்க்கில் ஐ.நா பொது சபை கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் வரும் 28ம் தேதி உரையாற்ற உள்ளார். அப்போது  ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி வேண்டுமென்ற கோரிக்கையை அவர் முன்வைப்பார் என்று வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதாசிங் தெரிவித்துள்ளார். ஐநா பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்தி, அதில் இந்தியாவிற்கு நிரந்தர உறுப்பினர் பதவி வழங்க வேண்டுமென்று ஐநா பொதுச்சபையில் பிரதமர் வலியுறுத்த உள்ளதாகவும் குறிப்பிட்டார். 


செப்டம்பர் 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை பிரதமர் அமெரிக்காவில் பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அமெரிக்க அதிபர் ஒபாமாவை வரும் 27ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் சுஜாதா சிங் கூறியுள்ளார். அப்போது ஆசியா கண்டத்தில் பலம்மிக்க நாடான இந்தியாவை ஜநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக்க மன்மோகன்சிங் வலியுறுத்துவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 




ஜநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் உள்ளன. ஜநா கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மன்மோகன்சிங், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பை சந்திப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 


இந்தியாவால் தேடப்படும் ஹபீஸ் சையது உள்ளிட்ட தீவிரவாதிகள் பாகிஸ்தானில் எந்தவித தடையுமின்றி நடமாடி வருகின்றனர். இந்தியா கோரியபடி பாகிஸ்தான் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நவாஸ் ஷெரிப்பை, பிரதமர் மன்மோகன் சிங் சந்திக்க வாய்ப்பு குறைவாக இருப்பதாகவே கூறப்படுகிறது. 

பெண்களின் தலையாய பிரச்னையாக மாறி வரும் தைராய்டு!


கழுத்தில் வலி மற்றும் வீக்கம், நிணநீர் திரளையில் வீக்கம், குரல் கரகரப்பாவது, மூச்சு விடுதலில் சிரமம், விழுங்குவதில் சிரமம் ஆகியவையோ அல்லது நல்ல பசியிருந்தும் உடல் எடை குறைதல், இருதயத் துடிப்பு அதிகரிப்பு, உயர் ரத்த அழுத்தம், நரம்புத்தளர்ச்சி, அதிக வியர்வை, மாதவிடாய் சட்டு சட்டென வருதல், குடல் இயக்கம் அதிகரித்தல், கை நடுக்கம். ஆகியவையோ இருந்தாலும் மேலும் உடல் எடைக்குறைப்பிற்கான அனைத்து வேலைகளைச் செய்தும் உடல் எடை குறையாமல் இருப்பது அல்லது உடல் எடை அதிகரிப்பது, சோம்பல், இருதய துடிப்பு இருக்கவேண்டிய அளவை விட குறைதல், கைகள் மறத்துப் போதல், வறண்ட சருமம், மாதவிடாயில் வெளியேற்றம் கடுமையாக இருத்தல். மலச்சிக்கல் ஆகியவையில் ஏதாவது இருக்கிறதா?



இதையெல்லாம் தாண்டி எந்நேரமும் தூக்கம் தூக்கமா வருது, அடிக்கடி எதையாவது மறந்துட்டு முழிக்கிறேன், கொஞ்சம் தான் சாப்பிடறேன்.. உடம்புல அதிகமாக வெயிட் போடுது, ரொம்ப சோர்வா இருக்கு, அதோட சின்ன சின்ன விஷயத்துக்கு கூட டென்ஷன், எரிச்சல் வந்து படப்படப்பா இருக்கு, என்னை பாத்தா எனக்கே புடிக்கல.. என்பது போன்ற அறிகுறிகள் இருந்தால் கூட நீங்கள் உடனடியாக தைராய்டு டெஸ்ட் எடுத்துக் கொள்வது அவசியம் என்கிறார்கள் மகப்பேறு மருத்துவர்கள்.



Male thyroid anatomy

 



இது குறித்து நம்மிடம் விவரித்த டாக்டர்கள்,”இப்போதெல்லாம் இந்த தைராய்டு பெண்களின் தலையாய பிரச்னையாக மாறி வருகிறது. ஆனால், ஆண்களுக்கு மிகக் குறைந்த அளவிலேயே பாதிப்பை ஏற்படுத்துகிறது.தைராய்டு நமது கழுத்துப் பகுதியில் பட்டர்பிளை வடிவத்தில் உள்ள ஒரு நாளமில்லா சுரப்பி. இது சுரக்கும் ஹார்மோன் அளவு அதிகரிப்பது, குறைவது இரண்டுமே உடலில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். இப்பிரச்னை உள்ளவர்கள் மருந்து சாப்பிடுவதன் மூலம் ஹார்மோனை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். 



அதே போல் உணவிலும் கட்டுப்பாட்டைக் கடைபிடிக்க வேண்டும். மாதவிலக்கு காலம் மற்றும் கர்ப்பகாலத்தில் தைராய்டு பிரச்னை உள்ள பெண்கள் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். தைராய்டின் அளவு அதிகரித்தால் மாதவிடாய் காலத்தில் அதிக உதிரப்போக்கு மற்றும் பிரசவ காலப் பிரச்னைகளை உருவாக்கும். 



தைராய்டு குறைவாக இருக்கும் போது வறண்ட தோல், உடல் எடை அதிகரித்தல், மலச்சிக்கல், சாதாரண நாட்களிலும் குளிர்வ தைப் போல உணர்வது, முறையற்ற மாதவிலக்கு, குரல் மாறுதல் உள்ளிட்ட பிரச்னைகள் உண்டாகும். தைராய்டு அளவு அதிகரிக்கும் போது தொண்டைப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டு எச்சில் விழுங்குவதில் சிரமம் ஏற்படும். பிரச்னை சிறிதாக இருக்கும் போதே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்வது முக்கியம். இதன் மூலம் தைராய்டு அளவு அதிகரிப்பதையோ, குறை வதையோ தடுக்கலாம். 



உடலில் அயோடின் உப்பின் அளவு குறைவதன் காரணமாக தைராய்டு பிரச்னை வருகிறது. அயோடின் உள்ள உப்பு எடுத்துக் கொள்வதன் மூலம் தைராய்டு பிரச்னையை சரி செய்ய முடியும். அடுத்தகட்டமாக மாத்திரைகள் கைகொடுக்கும். தொண்டையில் கட்டி பெரிதாகும் பட்சத்தில் ரேடியோ தெரபி அல்லது அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும். தைராய்டுக்கான அறிகுறிகள் இருக்கும் போதே உடனடியாக சிகிச்சையை தொடங்குவது முக்கியம். இதன் மூலம் அடுத்து வரும் பிரச்னைகளை தவிர்க்க முடியும். 



பாதுகாப்பு முறை: 

தைராய்டு பிரச்னை பரம்பரையாகவும் வரலாம். தாய்க்கு தைராய்டு பிரச்னை இருந்தால் குழந்தைக்கும் தைராய்டு பிரச்னை உள்ளதா என்பதை சிறுவயதிலேயே சோதித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். மேலும் பெண்கள் பூப்படையும் சமயத்தில் முகப்பரு, முடி கொட்டுதல், மறதி, டென்ஷன், படபடப்பு போன்ற பிரச்னைகள் தோன்றும். காரணமின்றி இந்த அறிகுறிகள் தென்பட்டால் தைராய்டு பிரச்னை இருக்கிறதா என்பதை சோதிக்க வேண்டும். இது பற்றி பல பெண்களுக்கு தெளிவாக தெரியவில்லை. அறியாமையை தவிர்த்து, தைராய்டு அளவைக் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் உடலில் உண்டாகும் மற்ற பிரச்னைகளை சரி செய்ய முடியும். 



உடற்பயிற்சி மூலமும் இந்த தொல்லையை எதிர்கொள்ளலாம். வாக்கிங் செல்வது அவசியம். சத்தான உணவுகள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும். அதே சமயத்தில் தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளை ஒருபோதும் எடுத்துக் கொள்ளக் கூடாது. உணவில் கல் உப்பு பயன்ப டுத்துவதன் மூலம் அயோடின் குறைபாட்டைத் தடுக்கலாம். சுடு தண்ணீரில் கல் உப்பு போட்டு தொண்டையில் படும்படி கொப்பளிப்பதன் மூலம் தொண்டையில் அயோடின் சேர வாய்ப்புள்ளது. இது போன்ற நடைமுறைகளால் தைராய்டு பாதிப்புகளில் இருந்து காத்துக் கொள்ளலாம்.” என்றனர்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top