.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday 17 September 2013

நோயற்ற வாழ்வும் ...கல்வியும்.-நீதிக்கதைகள்



அருண் ஆறாம் வகுப்பு மாணவன்..அவனது அப்பா ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.அருணின் நண்பன் பிரகாஷின் தந்தையோ பணக்காரர்.பிரகாஷிற்கு அவன் தந்தை கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்தார்.
எப்போதும் பிரகாஷிடம் பண நடமாட்டம் இருந்தது.ஆனால் அருணோ தன்னிடம் பிரகாஷைப் போல் பணமில்லையே என வருந்தினான்..தனக்கும் பணம் அதிகம் வேண்டும் என கடவுளை வேண்டினான்.


கடவுள் அவன் முன்னால் தோன்றி ..'அருண் உனக்கு என்ன வேண்டும் என்று கேள் தருகிறேன்.ஆனால் யோசித்துக் கேள்'என்றார்.


அருண் உடனே..'இறைவா..நான் எதைத் தொட்டாலும் பணமாக வேண்டும்' என்றான்.


அதைக் கேட்டு சிரித்த இறைவன் அப்படியே ஆகட்டும் என வரம் கொடுத்து மறைந்தார்.


உடன் அருண் பக்கத்திலிருந்த புத்தகத்தைத் தொட அது பணக்கட்டாய் மாறியது..அப்பா.அம்மாவைக் கூப்பிட்டு அருண் நடந்ததைச் சொன்னான்.


அருணுக்கு பசி எடுக்க..அம்மா உணவு எடுத்து வந்தார்.அருண் உணவில் கை வைக்க அது பணமானது.தண்ணீர் குடிக்க டம்ளரை எடுத்தால் அது பணமானது.பசியால் வாடிய அருண்.....

அப்போது தான் இறைவனிடம் கேட்ட வரம் தவறு என்று உண்ர்ந்தான்.


மீண்டும் இறைவனை வேண்டினான்.இறைவன் தோன்ற ,அவரிடம், தனக்கு நடந்ததைக் கூறி ...தன்னை மன்னிக்கும்படியும் ..தான் கேட்ட வரம் வேண்டாம் என்றும் கூறினான்.


உடன் இறைவன் அருணைப்பார்த்து ..'அருண் உன்னைப்போன்ற மாணவர்களுக்கு நல்ல கல்வியறிவும்..நோயற்ற வாழ்வும் தான் செல்வம்.அவை இருந்தால் வாழ்வில் பணம் சம்பாதிப்பது எளிது'
என்று கூறி..அவனுக்கு..அவ்விரண்டையும் அருளினார்.

தேப்லா!

தேப்லா


தேவையான பொருட்கள் :

 

கோதுமை மாவு - 2 கப்
 

நெய் - 1 ஸ்பூன்
 

உப்பு -தேவையான அளவு 



செய்முறை :


 

• கோதுமை மாவுடன் உப்பு சேர்த்து தேவையான தண்ணீர் கலந்து மெத்தென்று பிசைந்து கொள்ளவும்.

 

• மெல்லி சப்பத்திகளாக திரட்டி தோசைக்கல்லில் போட்டு சுட்டெடுங்கள்.

 

• பூரியை விட சற்று பெரிய சப்பாத்திகளாக மெல்லியதாக திரட்டுங்கள்.

 

• தோசைக்கல்லை காயவைத்து திரட்டிய சப்பாத்தியை போட்டு இருபுறமும் திருப்பிவிட்டு அது உப்பும்போது சற்று கனமான துணியைக் கொண்டு லேசாக அழுத்திவிடுங்கள்.

 

• அதனுள் இருக்கும் காற்று, மற்ற இடங்களுக்கு பரவி பூரி போல எழுப்பி வரும். மறுபுறம் திருப்பிவிட்டு மீண்டும் லேசாக துணியால் அழுத்திவிட்டு எடுத்து சிறிதளவு நெய் தடவி வையுங்கள்.

 

• மிக மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும் இந்த சப்பாத்தி. 

முள்ளங்கி தயிர் பச்சடி!


முள்ளங்கி தயிர் பச்சடி


தேவையானவை:

முள்ளங்கி - 3
தயிர் - ஒரு கப்,
பச்சை மிளகாய் - ஒன்று (சிறியது),
கொத்தமல்லித் தழை - சிறிதளவு,
கடுகு - கால் டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு  - அரை டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - சிறிதளவு,
எண்ணெய் - அரை டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:


 

• முதலில் முள்ளங்கியை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.

• தயிரை நன்றாக கடைந்து கொள்ளவும்.

• ப.மிளகாய், கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• துருவிய முள்ளங்கியுடன் உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வைக்கவும் (காரல் நீங்குவதற்கு).

• பிறகு அதைப் பிழிந்து, தயிருடன் சேர்க்கவும் .

• கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து சேர்த்து, கொத்தமல்லித் தழை போட்டு கலக்கவும்.

• இந்த முள்ளங்கி தயில் பச்சடி சப்பாத்திக்கு மிகவும் நன்றாக இருக்கும். மேலும் உடல் குளிர்ச்சிக்கு இந்த பச்சடி சிறந்தது. 


முழுப்பக்க ஸ்கிரீன் ஷாட் பெறுவதற்கு!



இணையப் பக்கம் ஒன்றின் ஸ்கிரீன் ஷாட் வேண்டுமென்றால், அது முழுமையாகக் கிடைக்காது. ஸ்கிரீனில் தெரியும் பகுதி மட்டுமே கிடைக்கும். முழுமையாகக் கிடைக்க வேண்டும் எனில், இதற்கான தேர்ட் பார்ட்டி புரோகிராம் தேவை.


 ஒவ்வொரு பிரவுசருக்குமான இத்தகைய புரோகிராம் இணையத்தில் கிடைக்கிறது. 


Screen grab for Firefox பயர்பாக்ஸ் பிரவுசருக்கும்,


 IE Screenshot இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கும், 


Talon குரோம் பிரவுசருக்கும் இணையத்தில் கிடைக்கின்றன. 



கூகுள் சென்று இவை இருக்கும் தளம் அறிந்து டவுண்லோட் செய்து பயன்படுத்தவும்.

Click Here

முடி கொட்டுவது நிற்க சில குறிப்புகள்!


முடி கொட்டுவது நிற்க சில குறிப்புகள்


* முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியை தடவினால் முடி வளரும். 


*  கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்க்கும். 



*  நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும். 



* சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது. 



* செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும். 



* முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டு குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும். 



* வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்து பர்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதை தடுக்கும். கருகருவென முடி வளர தொடங்கும்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top