.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday 15 September 2013

கோச்சடையானில் 2 நாளுக்கு ரூ.3 கோடி வாங்கிய தீபிகா படுகோனே...!


ரஜினியின், கோச்சடையான் படத்தில் இரண்டே இரண்டு நாள் நடிக்க ரூ.3 கோடி சம்பளம் பெற்றுள்ளாராம் நடிகை தீபிகா படுகோனே. ரஜினியின் இளையமகள் செளந்தர்யா, தனது அப்பா ரஜினியை வைத்து இயக்குநராக அவதரித்துள்ள படம் கோச்சடையான். 3டி அனிமேஷனாக மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் ஹாலிவுட் படங்களான அவதார், டின் டின் பட பாணியில் தயாராகியுள்ளது இப்படம். சமீபத்தில் இப்படத்தின் முதல் டீசர் வெளியிடப்பட்டது. வெளியான இரண்டு நாளில் சுமார் 2 மில்லியன் பேர் இந்த டீசரை பார்த்து மகிழ்ந்துள்ளனர். ரஜினி இந்தபடத்தில் முற்றிலும் வித்தியாசமாக தோன்றுகிறார், அதுவும் இ‌ளமையாக காட்சியளிக்கிறார். 

இதற்கிடையே இப்படத்தில் ரஜினி ஜோடியாக இந்தி நடிகை தீபிகா படு‌கோனே நடித்துள்ளார். படத்தில் இவருக்கு ‌கொடுக்கப்பட்டுள்ள சம்பளம் ரூ.3 கோடி என தகவல் வெளியாகி இருக்கிறது. இத்தனைக்கும் இவர் நடித்தது என்னவோ வெறும் இரண்டு நாட்கள் தானாம். இருந்தும் அவர் இவ்வளவு சம்பளம் பெற்று இருக்கிறார். 
மாதகணக்கில் கால்ஷீட் கொடுத்து நடிக்கும் நடிகைகள் பலரே கோடிக்கும் குறைவாகத்தான் சம்பளம் பெறுகின்றனர். அதிலும் தென்னிந்தியாவில் முன்னணி நடிகைகளாக இருக்கும் அனுஷ்கா, சமந்தா, நயன்தாரா போன்ற நடிகைகளே ரூ.1 முதல் ரூ.1.5 கோடி தான் சம்பளம் பெறுகின்றனர். அப்படி இருக்கையில் இரண்டு நாளுக்கு, தீபிகாவுக்கு இவ்வளவு சம்பளம் கொடுத்து இருப்பது நம்மூர் நடிகைகளை வாயடைக்க செய்துள்ளது.

வாயேஜர் விண்கலம் சாதனை : ஒலியை பதிவு செய்து பூமிக்கு அனுப்பியது!






சூரிய மண்டலத்தை கடந்து சென்றுள்ள முதல் விண்கலமான அமெரிக்காவின் வாயேஜர் 1 முதன்முறையாக சில விநாடிகள் நீடிக்கும் ஒலியை பதிவு செய்து பூமிக்கு அனுப்பியுள்ளது.அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் சூரிய மண்டலத்தை ஆய்வு செய்வதற்காக, கடந்த 1977ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ம் தேதி வாயேஜர்  1 என்ற விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பியது. அதற்கு துணை விண்கலமாக 16 நாட்களுக்குப் பிறகு வாயேஜர்  2 விண்கலத்தையும் அனுப்பியது. ரூ.6500 கோடி செலவில் இந்த திட்டத்தை நாசா செயல்படுத்தியது. 36 ஆண்டுகள் பயணம் செய்த வாயேஜர்1 விண்கலம் கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி சூரிய மண்டலத்தை கடந்து இன்டர்ஸ்டேல்லர் மண்டலத்தை அடைந்தது. சூரியனில் இருந்து ஏறக்குறைய 1900 கோடி கி.மீ. தூரத்தில் இருக்கிறது. 


மனிதனால் உருவாக்கப்பட்ட விண்கலங்களால் சூரிய மண்டலத்தை தாண்டி பயணம் செய்ய முடியுமா என்ற கேள்வி நீண்ட காலமாக அறிவியல் உலகத்தில் இருந்து வந்தது. ஆனால், புளுடோனியத்தால் தயாரிக்கப்பட்ட வாயேஜர்  1 விண்கலம் முதல் முதலாக சூரிய மண்டலத்தை தாண்டி சென்றுள்ளது. இது அறிவியல் உலகில் மிகப்பெரிய நினைத்து பார்க்க முடியாத சாதனையாக கருதப்படுகிறது.



வாயேஜர் விண்கலம் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நட்சத்திரங்களுக்கு இடையே உள்ள பிளாஸ்மா பகுதியில் பயணம் செய்து, இன்டர்ஸ்டெல்லர் மண்டலத்தை அடைந்துள்ளது. அங்கிருந்து வாயேஜர் 1 அனுப்பும் சிக்னல்கள் பூமியை வந்தடைய 17 மணி நேரம் ஆகிறது. இத்தனைக்கும் சிக்னல்கள் ஒலியின் வேகத்தில் பயணம் செய்கின்றன. ரேடியோ சிக்னல்களையும் ஒலி சிக்னல்களையும் அங்கிருந்து தொடர்ந்து அனுப்பி வருகிறது.

அக்னி -5 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ; அணு ஆயுதம் ஏந்தி இலக்கை தாக்கியது!



இந்தியா தயாரித்த அணு ஆயுதங்களை சுமந்து கொண்டு எதிரியின் இலக்கை துல்லியமாக தாக்கும் அக்னி-5 ஏவுகணை இன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. ஒடிசா மாநிலம் பாலசோர் வீலர் தீவு பகுதியில் இருந்து இந்த சோதனை நடத்தப்பட்டது. கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த ஏவுகணை சீனாவை மிரட்டும் அளவிற்கு பலம் படைத்ததாகும். 


இது போன்ற அக்னி 5 சோதனை கடந்த 2 ஆண்டுகளில் இன்று 2வது முறையாகும். அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா போன்ற 5 நாடுகளில் மட்டுமே இது போன்ற அணு ஆயுதம் சுமந்து தாக்கு ஏவுகணையை கொண்டுள்ள நாட்டில், இந்தியாவும் 6 வது நாடாக இடம் பிடிக்கிறது. 




இதுவரை குறைந்த தூரம் மட்டுமே செல்லக்கூடிய அக்னி தற்போது 5 ஆயிரம் கி.மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் வல்லமை கொண்டது அக்னி-5. இந்தியாவும் நீண்ட தூரம் சென்று தாக்கும் அணு ஆயுதம் தன்வசம் வைத்திருக்கிறது என்பது பாதுகாப்பு துறையில் ஒரு கூடுதல் மைல்கல் . இது 50 டன் எடை கொண்டது. தரையில் இருந்து தரையில் உள்ள இலக்கை தாக்கும் வகையில் வெடிபொருட்களை தூக்கி செல்லும் திறன் படைத்தது, 17 மீட்டர் உயரம் கொண்டது. இன்றைய அக்னி-5 சோதனை உலக அளவில் இந்தியாவை நிமிரச்செய்துள்ளது என்பது மிகை அல்ல. 

"கர்வம் கூடாது"...................குட்டிக்கதைகள்




ரமேஷ் புத்திசாலி மாணவன்...

அதனால் அவனுக்கு கர்வம் உண்டு...யாருடனும் நட்பு வைத்துக்கொள்ளமாட்டான்..எல்லோரும் அவனை விட அறிவில் மட்டமானவர்கள் என எண்ணம்.

மற்ற மாணவர்கள் அனைவரும் சேர்ந்து எப்படியாவது ரமேஷை ஏதாவது ஒரு பந்தயத்தில் தோற்கடித்து ...வல்லவனுக்கு வல்லவன் பூமியில் உண்டு என நிரூபிக்க வேண்டும் என எண்ணினர்

அப்போது ...அந்தப் பள்ளியில் புதிதாக சேர்ந்த வினோத் என்ற மாணவன் அந்தப் பணியை ஏற்றான்.

அவன் ரமேஷிடம் சென்று 'ரமேஷ் நீ புத்திசாலி ..அதேபோல நானும் உன்னைவிட புத்திசாலி தான்' என்றான்.

கோபமடைந்த ரமேஷ் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் ..'நான் ஒரு கேள்வி கேட்பேன் .உனக்கு விடை தெரியவில்லை எனில் நீ எனக்கு பத்து ரூபாய் தரவேண்டும்.நீ கேட்கும் கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை என்றால் நான் நூறு ரூபாய் தருகிறேன்'என்றான்.ஆனால் அந்த கேள்விக்கு உனக்கு விடை தெரியவில்லை என்றால் கூட நீ பத்து ரூபாய் கொடுத்தால் போதும்' என்றான்.

பின் ரமேஷ் கேட்டான்'பூமிக்கும் ..சந்திரனுக்கும் இடையே எவ்வளவு தூரம்'.

வினோதிற்கு பதில் தெரியாததால் பத்து ரூபாயை ரமேஷிற்கு கொடுத்தான்.இப்போது வினோத் கேள்வி கேட்கவேண்டும்.

வினோத் கேட்டான்..

'மலை ஏறும்போது மூன்று கால்களுடன் ஏறி..இறங்கும்போது நான்கு கால்களுடன் இறங்கியது யார்'.

ரமேஷிற்கு விடை தெரியவில்லை.அதனால் ஒப்புக் கொண்டபடி நூறுரூபாயை வினோதிற்கு கொடுத்துவிட்டு ..விடையை நீயே சொல்' என்றான்.

'எனக்கும் தெரியாது'என்ற வினோத் பத்து ரூபாயை நீட்டினான்.அப்போது தான் கூறிய வார்த்தைகளை வைத்தே வினோத் தன்னை வென்றதை உணர்ந்து ரமேஷ் தலை குனிந்தான்.

அவன் கர்வம் மறைந்து அனைவருடனும் நட்பாக பழக ஆரம்பித்தான்.

நடுவுல கொஞ்சம் ஜீவனை காணோமே?



நிஜத்தில் கெட்டவனாக வாழ்ந்து நிழலில் நல்லவர்களாக வாழ்வதும் நிஜத்தில் நல்லவனாக வாழ்ந்து, நிழலில் கெட்டவர்களாக நடிப்பதும் சினிமாவின் இன்னொரு பக்கம்….இதுவரை ஏற்ற அனைத்து வேட்ன்களுமே நெகடிவ் தான் என்றாலும் ஜீவன் அப்படியொன்றும் கெட்டவனில்லையாம் …ஆம்..சுமார் இரண்டரை வருடங்களாக திரை வட்டாரத்தில் இருந்து விலகி இருந்த ஜீவன் திடீர் அவதாரம் எடுத்திருக்கிறார்.இதையடுத்து கண் இல் பட்ட அவரிடம் “என்ன..நடுவுல கொஞ்சம் ஜீவனை காணோமே ? என்று கேட்டோம்.


sep 15 jeevan-actor



அதற்கு பதிலளித்த ஜீவன்”கிருஷ்ணா லீலை முடிந்து ரிலீஸுக்கு தயாரானது சில காரணங்களால் தடை பட்டு போனது அது ரிலீஸாகி இருந்தால் இந்த இடைவெளி தெரியாமல் போயிருக்கும் .அதோடு நான் கலையுலகில் பயணித்த காலம் வேண்டுமானால் அதிகமாக இருக்கலாம் ஆனால் நடித்த படங்கள் குறைவுதான் அதனால் இந்த இடைவெளி எனக்கு பெரிதாக தெரியவில்லை.இதையெல்லாம் விட சமீபத்தில் தான் என் அப்பா இறந்தார்.எங்களுக்கு இருக்கிற வியாபாரங்களை ஒழுங்கு படுத்த வேண்டிய பொறுப்பில் நான் இறங்கியதால் இந்த இடைவெளி.வெளிநாட்டில் இருந்து சென்னை வந்ததும் செல்வா சார் ஒரு கதை சொன்னார் நான் எதிர் பார்த்த திருப்தி அதில் இருந்தது அதோடு ஏற்கனவே நானும் அவரும் நான் அவனில்லை பார்ட்,பார்ட் ,தோட்டா என மூன்று படங்களில் இணைந்தோம் வெற்றிபெற்றோம் இது நான்காவது முறை.தயாரிப்பாளர் விஷ்வாஸ் சுந்தர் பெரிய தயாரிப்பாளர் அதனால் மீண்டும் வருவேன்


அது சரி.. நீங்கள் நல்லவனா? கெட்டவனா ?ரெடிமேட் ஆடைகளை போல் கெட்டவன் பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திப் போகிறீர்களே?


திருட்டு பயலே படத்தில் நான் மட்டும்மல்ல…சோனியாஅகர்வால்,மாளவிகா,அப்பாஸ்,என எல்லோருக்குமே நெகடிவ் ரோல் தான் கிளைமாக்ஸில் நல்லவர்களாக மாறுவது மாதிரி முடித்திருந்தார் சுசிகணேசன்.அது மாதிரி காக்க காக்க படத்தில் ,முழு வில்லன்.நான் அவணில்லை யில் கெட்டவன் மாதிரியான நல்லவன் பாத்திரம் …


.தோட்டாவில் கெட்டவன் ஒருவன் நல்ல போலீஸ்காரனை உருவாக்க முடியும் என கதாபாத்திரம்.சில கதாபாத்திரங்கள் என்னை முன்னிலைப் படுத்தியதால் அப்படியொரு வில்லன் தோற்றம் எனக்கு.அதுவும் என்னை லைம்லைடில் வைத்திருப்பதால் எனக்கு சந்தோசமே.இனி வேட்டை ஆரம்பித்து விட்டேன் நல்ல கதைகளையும் ,கதாபாத்திரங்களையும் வேட்டையாடி என்னை நான் நிலை நிறுத்தி கொள்வேன் …முதலில் செல்வா இயக்கும் படத்திற்கு நல்ல டைட்டிலை வேட்டையாடி கொண்டிருக்கிறோம் விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது…என்கிறார் ஜீவன்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top