.......................................................................... ....................................................................... ......................................................................

Friday 23 August 2013

சிறப்பான சிந்தனைகள் பத்து!

சிறப்பான சிந்தனைகள் பத்து!

  1. படித்தவனிடம் பக்குவம் பேசாதே, பசித்தவனிடம் தத்துவம் பேசாதே.
  2. மகான் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்.
  3. உழைப்புக்கு என்றும் மரியாதை உண்டு.
  4. வாய்ப்பு ஒரு முறைதான் வரும், இனி வாய்ப்பைத் தேடி நாம் தான் செல்ல வேண்டும்.
  5. பகைவரையும் நண்பனாக கருது, பண்பாளன் தான் உலகை வயப்படுத்த முடியும்.
  6. ஆசைகள் வளர வளர தேவைகள் வளர்ந்து கொண்டே போகும்.
  7. எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ அவ்வளவு குறைவாகப் பேசு.
  8. மரண பயம் வாழ்நாளைக் குறைத்து விடும்.
  9. கோபத்தில் வெளிவரும் வார்த்தைகள் அர்த்தமற்றவை.
  10. அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.

பழமொழிகள் சில...

பழமொழிகள் சில...

அகல உழுகிறதை விட ஆழ உழு. 
பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாது.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். 
போதுமென்ற மனமே பொன் செய் மருந்து.  
பல்லுப் போனால் சொல்லுப் பேச்சு. 
படிக்கிறது திருவாய் மொழி இடிக்கிறது பெருமாள் கோயில்.  
உற்றது சொன்னால் அற்றது பொருந்தும்.
பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்.
பழகப் பழகப் பாலும் புளிக்கும்.
பசியுள்ளவன் ருசி அறியான். 
மொழி தப்பினவன் வழி தப்பினவன்.
அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துபேர்.
தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போனது.
பதறாத காரியம் சிதறாது. 
எரிகிற வீட்டில் பிடுங்கின மட்டும் லாபம்.
நிழலின் அருமை வெயிலில் தெரியும்.
ஆற்றிலே கரைத்தாலும் அளந்து கரை.
பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும். 
வாய் சர்க்கரை கை கருணைக் கிழங்கு.
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.
இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
பகலில் பக்கம் பார்த்துப் பேசு இரவில் அதுதானும் பேசாதே.
பகுத்தறியாமல் துணியாதே , படபடப்பாகச் செய்யாதே.  
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
பலநாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான்.
பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான்.  
மின்னுவதெல்லாம் பொன்னல்ல.

ஹைக்கூ கவிதைகள் தொகுப்பு


 பூக்கள்.
அரளிச் செடியிலும்.


இருண்ட பௌர்ணமி.
அட...
சந்திர கிரகணம்.


வறுத்த மீன்.
மடித்த காகிதத்தில்
"உயிர்களைக் கொல்லாதீர்" வாசகம்.


சுமக்க விரும்பியதென்னவோ
புத்தகப் பையை.
தீப்பெட்டிச் சிறுமி.


ரேசன் கடையில்
அரிசி கிடைத்தது.
எறும்புகளுக்கு மட்டும்.


உலகெங்கும்
ஒரே மொழியில் பேசும்
மழை.


பால் குடித்த பிள்ளையாரை
ஏக்கமாய் பார்க்கும்
பசித்த சிறுமி.


சாத்தான் வேதம் ஓதியது.
சிகரெட் பெட்டியில்
எச்சரிக்கை.


கொட்டும் மழை.
எரியும் மனது
விற்றுவிட்ட நிலம்.


வானத்துக்குள் பிரவேசித்த
இன்ப வெள்ளத்தில்...
ஊஞ்சல் சிறுமி



பூங்காவில் ஒரு
நேர்காணல்...
மலர்களோடு!


தரையைத் தொடும்வரை
ஊஞ்சலாக்கி மகிழ்விக்கிறதே
ஆலம் விழுதுகள்!

மூன்று என்ற சொல்லினிலே...


மூன்று என்ற சொல்லினிலே...

மிகக் கடினமானவை மூன்றுண்டு:
1. இரகசியத்தை காப்பது.
2. இழைக்கப்பட்ட தீங்கை மறப்பது.
3. ஓய்வு நேரத்தை உயர்ந்த வழியில் பயன்படுத்துவது.


நன்றி காட்டுவது மூன்று வகையிலாகும்:
1. இதயத்தால் உணர்தல்.
2. சொற்களால் தெரிவித்தல்.
3. பதிலுக்கு உதவி செய்தல். 

மகிழ்ச்சியான வாழ்க்கைக்குரியவை மூன்றுண்டு:
1. சென்றதை மறப்பது.
2. நிகழ்காலத்தை நேர்வழியில் செலுத்துவது.
3. வருங்காலத்தைப் பற்றிச் சிந்திப்பது.

 
இழப்பு மூன்று வகையிலுண்டு:
1. சமையல் அமையாவிட்டால் ஒருநாள் இழப்பு.
2. அறுவடை சிறக்காவிடில் ஓராண்டு இழப்பு.
3. திருமணம் பொருந்தாவிட்டால் வாழ்நாள் முழுவதும் இழப்பு.

 
உயர்ந்த மனிதனின் வாழ்வு மூன்று வகையில் இருக்கும்:
1. அவன் ஒழுக்கத்தோடிருப்பதால் கவலையற்றிருப்பான்.
2. அவன் அறிவாளியாயிருப்பதால் குழப்பங்களற்றிருப்பான்.
3. அவன் துணிவாக இருப்பதால் அச்சமின்றியிருப்பான்.

பொது அறிவு கேள்வி பதில்களின் தொகுப்பு!


பொது அறிவு கேள்வி பதில்களின் தொகுப்பு

தொகுப்பு -I
 
1.பெரியார் நீதிக்கட்சியின் தலைவராக ஆன ஆண்டு?
2.கொடிகாத்த குமரன் தடியடிபட்டு மரணமடைந்த ஆண்டு?
3.தமிழ்நாட்டில் காவேரி ஆறு ஏற்படுத்தும் நதித் தீவு?
4.தக்கோலம் போர் நடந்த ஆண்டு?
5.டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு?
6.புள்ளலூர் போர் நடந்த ஆண்டு?
7.சென்னையில் தொலைக்காட்சி நிலையம் தொடங்கப்பட்ட
ஆண்டு?
8.தமிழில் வெளியான முதல் வார இதழ்?
9.தந்தை பெரியார் மறைந்த ஆண்டு?
10.தமிழ்நாட்டில் நான்காவது தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்ட ஆண்டு?
பதில்கள்:
1.1938, 2.1932, 3.ஸ்ரீரங்கம், 4.கி.பி.949, 5. 1987, 
6.கி.பி.620, 7.1975, 8.தினவர்த்தமானி, 9.1973, 10.1901. 
தொகுப்பு -II
1.கன்னியாகுமரி திருவள்ளூவர் சிலையை வடிவமைத்தவர் யார்?
2.தமிழ் இலக்கியங்கள் அயல்நாடு வணிகரைக் குறிப்பிடும்
பெயர் என்ன? 
3.முதலாம் மகேந்திரவர்மனின் மகன் யார்?
4.தமிழ்நாட்டின் முதல் அனல் மின் திட்டம் எது?
5.தோல் மற்றும் தோல்பொருட்கள் தயாரிக்கும் மாவட்டங்கள்?
6.கூரம் என்ற பட்டயம் உடன் தொடர்புடையவர்கள்?
7.தமிழ்நாட்டின் முதல் நீர்மின் திட்டம்?
8.தில்லையாடி வள்ளியம்மை பிறந்த இடம் எது?
9.1983 -ல் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகம் எது?
10.தமிழ்நாட்டில் ஆண்கள் எழுத்தறிவு விகிதம் என்ன?
பதில்கள்: 
1. கணபதி ஸ்தபதி, 2.யவணர்கள், 3.முதலாம் நரசிம்மன்,
4.நெய்வேலி, 5.வேலூர்,திண்டுக்கல், 6.பல்லவர்கள், 
7.பைகாரா (நீலகிரி), 8.ஜோகன்ஸ்பர்க்(தென் ஆப்பிரிக்கா), 
9.அன்னை தெரசா பல்கலைக்கழகம், 10.82.4%.
தொகுப்பு -III 
1.தமிழ்நாட்டில் 100% எழுத்தறிவு பெற்ற மாவட்டம் எது? 
2.'நரை முடித்துச் சொல்லால் முறை செய்த அரசன்' யார்? 
3.சென்னையில் முதல் பேசும் படம் வெளியீடப்பட்ட ஆண்டு?
4.தமிழ்நாட்டில் பத்தினி வழிபாட்டினை கொண்டுவந்தவர் யார்?
5.தியாகராஜ சுவாமிகளின் புகழ் ஸ்தலம் எது? 
6.முடத்திருமாறன் மதுரை நகரை அமைத்த ஆற்றின் பெயர்? 
7.திராவிட இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு எது? 
8.தமிழகத்தின் தங்க கோவில் எங்குள்ளது? 
9.புறம்பு மலையை ஆண்ட பாரியின் நண்பன் யார்? 
10.கல்வியில் பெரியவர் என்ற பெருமை கொண்டவர் யார்?
பதில்கள்: 
1.புதுக்கோட்டை, 2.கரிகாலன், 3.1931, 4.சேரன் செங்குட்டுவன்,
5.திருவாரூர், 6.வைகை,7.கி.பி.467, 8.ஸ்ரீபுரம் (வேலூர்), 
9.கபிலர், 10.கம்பர்.
தொகுப்பு -IV 
1.சர்வதேச ஒலிம்பிக் விருதுபெற்ற முதல் இந்தியர் யார்?
2.மிகவும் பழமையான எழுத்துக்கள் எது?
3.முதன் முதலில் மின்சார கம்ப்யூட்டரை கண்டுபிடித்தவர் யார்?
4.ஆசியாவிலே மிகப்பெரிய சர்ச் இருக்கும் இடம் எது?
5.ஜெட் என்ஜினை உருவாக்கியவர் யார்?
6.இந்தோனேசியா சுதந்திரம் பெற்ற ஆண்டு என்ன?
7.செஞ்சிலுவைச் சங்கம் எப்போது தொடங்கப்பட்டது?
8.சூரியனை சுற்றிவரும் கிரகங்கள் மொத்தம் எத்தனை?
9.இறக்கை இல்லாத பறவை எது?
10.உலகில் மிகச்சிறிய கடல் எது?
பதில்கள்: 
1.பா.சிவந்தி ஆதித்தன், 2.சுமேரிய எழுத்துக்கள், 
3.ஜே.பி.எக்கர்ட், 4.கோவா, 5.ஹீரோ,6.1948, 7.1920, 
8.ஒன்பது, 9.கிவி, 10.ஆர்டிக்கடல்.
தொகுப்பு -V
1.ஆங்கில அகராதியை உருவாக்கியவர் யார்?
2.’நியான் வாயு’ எப்படி தயாரிக்கப்படுகிறது?
3.சனிக்கிரகத்தின் நிறம் என்ன?
4.பல்லிக்கு முதுகெலும்பு உண்டா?
5.’மாண்டவி’ என்பவள் யார்?
6.மூளையில் மின் அதிர்வுகளை பதிவு செய்ய உதவும்
கருவி எது?
7.2000 ஆம் ஆண்டின் உலக அழகி யார்?   
8.ஜீன் மாற்றங்களின் மூலம் கண்டிப்பாக தடுக்கக் கூடிய நோய்?
9.இங்பேனாவை கண்டுபிடித்தவர் யார்?
10.’ரோபோட்’ என்னும் பெயர் வைத்தவர் யார்?
பதில்கள்: 
1.டாக்டர் ஜான்சன், 2.காற்றின் திரவ நிலையிலிருந்து,3.மஞ்சள்,
4.உண்டு, 5.பரதனின் மனைவி, 6.ஈஈஜி, 7.லாரா தத்தா,
8.நீரிழிவு, 9.லூயிபாஸ்டர், 10.காரல் கேபெக்.
தொகுப்பு -VI
1.கடற்கரை வாலிபால் போட்டியில் மொத்தம் எத்தனை பேர்
  விளையாடுவார்கள்?    
2.சர்ர்லஸ் டார்வின் எந்த நாட்டில் பிறந்தார்?
3.அமெரிக்காவின் பெரிய நகரம் எது?
4.கொழுக்கட்டையை முதன் முதலில் விநாயகருக்குப் 
படைத்தவர் யார்?
5.தேச பந்து என அழைக்கப்படுபவர் யார்?
6.புத்தரின் பல்லை புனிதமாக கருதி போற்றி பாதுகாத்து வரும்
நாடு எது?
7.இந்திய விளையாட்டு ஆணையத்தின் தலைமையகம்
எங்குள்ளது?
8.இராமயணத்தில் பரதனின் மனைவி யார்?
9.இந்தியாவின் முதல் துனைப்பிரதமர் யார்?
10.லோட்டஸ் டெம்பிள் எங்கு அமைந்துள்ளது?
பதில்கள்: 
1.இரண்டு பேர், 2.இங்கிலாந்து, 3.அலாஸ்கா,
4.அருந்ததி, 5.சி.ஆர்.தாஸ், 6.இலங்கை, 7.பெங்களூர்,
8.மாண்டவி, 9.சர்தார் வல்லபாய் படேல், 10.புதுடெல்லி.
தொகுப்பு -VII
1.தமிழ்நாட்டில் பெண்கள் எழுத்தறிவு விகிதம் என்ன?
2.தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் யார்?
3.'ஒர் இரவு' என்ற நாடகத்தின் ஆசிரியர் யார்?
4.ஆண் - பெண் விகிதம் அதிகமாக உள்ள மாவட்டம் எது?
5.பல்லவர்களின் கோவில்கள் எங்குள்ளது?
6.தமிழ்நாட்டில் பாயும் மிக நீளமான ஆறு எது?
7.நேரு உள்விளையாட்டு அரங்கம் உள்ள இடம் எது ?
8.திருச்சி எந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ளது?
9.ஆண் - பெண் விகிதம் குறைவாக உள்ள மாவட்டம் எது?
10.தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு?
பதில்கள்: 
1.64.4%, 2.முத்துலெட்சுமி ரெட்டி, 3.அறிஞர் அண்ணா,
4.தூத்துக்குடி, 5.மாமல்லபுரம், 6.காவேரி, 7.சென்னை,
8.காவேரி, 9.சேலம், 10.2001.
தொகுப்பு -VIII
1.'இந்த ஆண்டின் பெண்மணி' என்ற சங்கம் எப்போது
 தொடங்கப்பட்டது?
2.நம் நாட்டிற்கு இந்தியா என்ற பெயரை சூட்டியவர்கள் யார்?
3.ஆசியாவின் தென்கோடியில் அமைந்துள்ள தீபகற்பம் எது?
4.உலகிலேயே மிகப்பெரிய நூலகம் எந்த நாட்டில் உள்ளது?
5.தொலைக்காட்சி நிலையங்கள் அதிகம் உள்ள நாடு எது?
6.வருமான வரி செலுத்தாத நாடு எது?
7.ஜெருசலம் எந்த நாட்டின் தலைநகரமாகும்?
8.பிளாஸ்டிக் பேப்பரை தயாரித்த முதல் நாடு எது?
9.ரவீந்திரநாத் தாகூரின் முதல் கவிதை புத்தகத்தின்
பெயர் என்ன ?
10.ரேடியத்தை கண்டிபிடித்த மேரிகியூரியின் சொந்தநாடு எது?
பதில்கள்: 
1.1945 ஆம் ஆண்டு, 2.கிரேக்கர்கள், 3.இந்தியா,
4.அமெரிக்கா, 5.ஸ்வீடன், 6.குவைத்,
7.இஸ்ரேல், 8.ரஷ்யா, 9.மாலைப் பாடல்கள், 10.போலந்து.
தொகுப்பு -IX
1. பாஸ்பரஸ் எங்கு சேமித்து வைக்கப்படுகிறது?
2. சூரியனின் உட்பகுதிக்கு கொடுக்கப்பட்ட பெயர் என்ன?
3. உலகிலேயே மிகப்பெரிய நூலகம் எது
4. இந்திய கிரிக்கெட் அணிக்கு முதன்முதலாக நியமிக்கப்பட்ட
வெளிநாட்டு பயிற்சியாளர் யார்?  
5. மிக நீளமான இரயில்வே பாலம் எது?
6. இந்தியாவில் பாலிவுட் எனப்படும் நகரம் எது?  
7. பாடல்கள் இல்லாத முதல் தமிழ்ப்படம் எது?
8. வண்ணச் சாயம் அளிக்கும் பூச்சி எது?  
9. மிகப்பெரிய நீர்ப்பறவை எது?  
10. கிரேக்கத்தின் புகழ் பெற்ற கணிதவியலாளர் யார்?  
பதில்கள்: 
1.நீருக்கடியில், 2.தெர்மோஸ்பியர், 3.காங்கிரஸ் நூலகம்,
USA,4.ஜான்ரைட், 5.சோனி பாலம், 6.மும்பை,7.அந்த நாள், 
8.கோக்ஸ் பூச்சி, 9.அன்னம், 10.பித்தாகரஸ்.
தொகுப்பு -X
1.அண்ணா சர்வதேச விமான நிலையம் உள்ள இடம் எது?
2.அருண்மொழி தேவர் என அழைக்கபடுபவர் யார்? 
3.தமிழ்நாட்டில் விவசாய வருமான வரி விதிப்பது? 
4.தமிழ்நாட்டில் கார் பந்தைய போட்டிக்கான பாதை உள்ள
இடம் எது? 
5.தமிழ்நாட்டின் எந்த பரம்பரைக்கலை இந்தியா முழுவது
பெருமை பெற்றுள்ளது?
6.தமிழ்நாடு நில உச்சவரம்பு சட்டத்தின் படி நில உச்சவரம்பு?
7.சங்ககால சோழர்களின் தலைநகர் எது? 
8.புனித பூமி என தமிழ்நாட்டில் அழைக்கப்படுவது? 
9.இரண்டாம் புலிகேசி சார்ந்த வம்சம் எது? 
10.பிற்காலச் சோழர்களின் தலைநகர் எது?
பதில்கள்: 
1.சென்னை, 2.சேக்கிழார், 3.மாநில அரசு, 4.இருங்காட்டுக்
கோட்டை, 5.பரதநாட்டியம், 6.15 ஏக்கர்கள், 7.உறையூர்,
8.இராமேஸ்வரம், 9.சாளூக்கிய வம்சம், 10.தஞ்சாவூர்.
தொகுப்பு -XI 
1.சங்க கால  சோழ மன்னர்களில் சிறந்த் அரசன் யார்? 
2.தமிழகத்தில் மும்மொழி திட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு?
3.தமிழகத்தின் இருண்ட காலம் யாருடைய காலம்?
4.சென்னை முதல் மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்ட ஆண்டு?
5.மூன்றாவது தமிழ்ச் சங்கத்தை நிறுவியவர் யார்? 
6.தமிழகத்தின் பொற்காலம் யாருடைய காலம்?
7.தமிழ்நாடு மின்சார வாரியம் அமைக்கப்பட்ட ஆண்டு?
8.அரிக்கமேடு எங்கு உள்ளது? 
9.பாஞ்சாலி சபதம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
10.சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை எங்குள்ளது?
பதில்கள்: 
1.கரிகாலன், 2.1965, 3.களப்பிரர்கள் காலம், 4.1835,
5.முடத்திருமாறன் , 6.சங்க காலம், 7.1957, 8.பாண்டிச்சேரி,
9.பாரதியார், 10.மணலி.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top