.......................................................................... ....................................................................... ......................................................................

Friday 23 August 2013

ஹைக்கூ கவிதைகள் தொகுப்பு


 பூக்கள்.
அரளிச் செடியிலும்.


இருண்ட பௌர்ணமி.
அட...
சந்திர கிரகணம்.


வறுத்த மீன்.
மடித்த காகிதத்தில்
"உயிர்களைக் கொல்லாதீர்" வாசகம்.


சுமக்க விரும்பியதென்னவோ
புத்தகப் பையை.
தீப்பெட்டிச் சிறுமி.


ரேசன் கடையில்
அரிசி கிடைத்தது.
எறும்புகளுக்கு மட்டும்.


உலகெங்கும்
ஒரே மொழியில் பேசும்
மழை.


பால் குடித்த பிள்ளையாரை
ஏக்கமாய் பார்க்கும்
பசித்த சிறுமி.


சாத்தான் வேதம் ஓதியது.
சிகரெட் பெட்டியில்
எச்சரிக்கை.


கொட்டும் மழை.
எரியும் மனது
விற்றுவிட்ட நிலம்.


வானத்துக்குள் பிரவேசித்த
இன்ப வெள்ளத்தில்...
ஊஞ்சல் சிறுமி



பூங்காவில் ஒரு
நேர்காணல்...
மலர்களோடு!


தரையைத் தொடும்வரை
ஊஞ்சலாக்கி மகிழ்விக்கிறதே
ஆலம் விழுதுகள்!

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top