.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday 20 August 2013

எந்த நாட்டு பாஸ்போர்ட் அளவு போட்டோ வேண்டும் உங்களுக்கு?



எந்த நாட்டு பாஸ்போர்ட் அளவு போட்டோ வேண்டும் உங்களுக்கு?

 

எல்லா  நாட்டிற்கும் தகுந்தாற்போல் பாஸ்போர்ட் அளவு போட்டோக்களை நாம் கொடுக்கும் போட்டோவிலிருந்து தரும் இணையதள முகவரி: http://www.makepassportphoto.com/




 
மேற்காணும் படத்தில் உள்ளவாறு உங்கள் போட்டோவினையும் அதற்கேற்ற தெரிவுகளையும் தேர்வு செய்து சில நிமிடங்களில் எந்த நாட்டு பாஸ்போர்ட் அளவு போட்டோவினையும் நீங்கள் பெறலாம். 


பிரமிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம்!





மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள்.

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை!!.
 

 
இவ்வளவு தானா... இல்லை, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது", அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி ஆராய்ந்தார்கள்!!!. அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்கு பெய்வதை போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!!!


ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அது தான் முதலில் "எர்த்" ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள் !!!!. சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது!!! இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது!! பிரம்மிப்பு !!!

அதெப்படி என்று கேட்கிறவர்கள் படத்தைப் பார்க்கவும். இதை எல்லாம் பார்க்க போனால் "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது.

சும்மாவா சொன்னாக பெரியவங்க !!!
 

ரக்க்ஷா பந்தன் எனும் சகோதர திருநாள்!



ரக்க்ஷா பந்தன் எனும் சகோதர திருநாள்:

  

 
 
ரக்ஷாபந்தன் எனும் சகோதர திருநாள் நம் இந்திய திருநாட்டில் கொண்டாடி வருவது அனைவரும் அறிந்த ஒன்றே. அதன் அடிப்படையான வரலாற்று செய்தியை நாம் இங்கு காண்போம். நம்  வீடுகளில் சகோதர, சகோதரிகள் இணைந்து பிறக்கிறார்கள். ஆனால், சிலருக்கோ சகோதரரோ, சகோதரியோ இருப்பதில்லை. இது அவர்கள் மனதில் ஒரு ஆதங்கமாகவே இருக்கும். இப்படி ஒரு நிலைமை, விநாயகரின் மகன்களுக்கே இருந்ததாம்.

தமிழகத்தில் நாம் விநாயகரை பிரம்மச்சாரியாகவே காண்கிறோம். வட மாநிலங்களில் சித்தி, புத்தி என்ற தேவியர் அவருக்கு உண்டு. இவர்களுக்கு சுபம், லாபம் என்ற ஆண் குழந்தைகள் பிறந்தனர். ஒருமுறை, இவர்கள் தங்கள் சகோதரர்களின் கையில் ரக்ஷா என்னும் கயிறு கட்டும் சகோதரிகளைக் கண்டனர். தங்களுக்கும் சகோதரி வேண்டுமென தந்தையிடம் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையும் நிறைவேறியது. சந்தோஷப்பட்ட சுபமும் லாபமும், தங்கள் தங்கைக்கு "சந்தோஷி' என்று பெயர் சூட்டினர். சந்தோஷிமாதா வழிபாடு வடமாநிலங்களில் பிரசித்தம். இவர்களைக் குடும்பமாக தரிசிக்க வேண்டுமானால், அகமதாபாத்திலுள்ள அம்பாஜி மாதா கோயிலுக்குச் செல்ல வேண்டும். அங்கே தனி சந்நிதியே இருக்கிறது.

இந்த நிகழ்வின் அடிப்படையில், பெண்கள் யாரை சகோதரர்களாக ஏற்கிறார்களோ, அவர்களுக்கு "ராக்கி' என்னும் கயிறு கட்டுவார்கள். "ரக்ஷ' என்றால் "பாதுகாப்பு தரும் கயிறு'. இதை அணிவிக்கும் தினமே ரக்ஷாபந்தன். ஆவணி பவுர்ணமியன்று இது கொண்டாடப்படுவது வழக்கம். இன்றும், நாளையும் பவுர்ணமி திதி இருப்பதால், இரண்டு நாட்கள் சகோதரர்களுக்கு கயிறு கட்டலாம். சொந்த சகோதரர்கள் உள்ளவர்களும், அவர்களின் நலன் கருதி இந்தக் கயிறை அணிவிக்கலாம். ரக்ஷா கயிறு கட்டுவதன் மூலம், ஒரு ஆண், குறிப்பிட்ட பெண்ணின் பாதுகாப்பு, எதிர்கால வாழ்வுக்கு துணையாக இருப்பதாக உறுதியளிக்கிறார்.மகாபலி சக்கரவர்த்தியை ஆட்கொள்ள வந்த விஷ்ணு, பூலோகம் வந்த போது, அவரைப் பிரிய விரும்பாத லட்சுமியும் பூலோகம் வந்தாள். சாதாரண பெண்ணாக வேடம் தரித்த அவள், ஆவணி பவுர்ணமியன்று மகாபலியின் அரண்மனைக்கு வந்து சேர்ந்தாள். மகாபலியைத் தன் சகோதரனாக எண்ணி ரக்ஷா கயிறு கட்டினாள். இதனாலும், இந்த விழா நடப்பதாகச் சொல்வதுண்டு.

கி.பி.1303ல் ராஜஸ்தானில் உள்ள சித்தூர்கரை அந்நியப்படைகள் தாக்கும் போது, ராணி பத்மினி அண்டை நாட்டு மன்னர்களுக்கு ராக்கி அனுப்பியதாக வரலாறு கூறுகிறது. அந்த மன்னர்களும் சகோதர உணர்வுடன் ராணியைக் காக்க தங்களின் படையை அனுப்பி உதவி செய்தனர். சகோதரத்துவத்தை பேணும் இந்த திருவிழாவை நாமும் கொண்டாடி மகிழ்வோம்.
 

உத்தரகாண்டில் 11 கிராமங்களை தத்தெடுத்த எல்லைப் பாதுகாப்பு படை!



உத்தரகாண்டில் மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட 11 கிராமங்களை எல்லைப் பாதுகாப்பு படை தத்தெடுத்தது.


உத்தரகாண்ட் மாநிலம் காளி நதிக் கரையில் அமைந்துள்ள காளிமத், கவில்தா, கோட்மா, சியான்சு, சிலோண்ட், குல்ஜெத்தி, கென்னி, ஜல்டலா, செüமசி, புயுன்கி உள்பட 11 கிராமங்கள் அண்மையில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டன. இக்கிராமங்களை எல்லைப் பாதுகாப்பு படை தத்தெடுக்க முடிவு செய்துள்ளது.அங்கு சாலைகள்,பாலங்கள் அமைப்பது மட்டுமின்றி கிராம மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க எல்லைப் பாதுகாப்பு படை முன்வந்துள்ளது.


வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கிராமங்களில் எல்லைப் பாதுகாப்பு படையினர் முகாமிட்டு மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவார்கள்.சீரமைப்பு பணிகள் அனைத்தும் முடிந்த பிறகே அவர்கள் அக்கிராமங்களை விட்டு வெளியேறுவார்கள் என்று எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த சிறப்பு பொறியியல் நிபுணர்கள் குழு ஒன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் உடைந்த அணைகள்,சாலைகளை சீரமைத்து போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபடுவர்.மழையால் சேதமடைந்துள்ள காளிமத் கோவிலை புதுப்பிக்கும் பணியிலும் எல்லைப் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்படுவர்.ஏற்கனவே துணை ராணுவ படையானது தங்களது ஒரு நாள் சம்பளமான ரூ.16 கோடியை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண நிதியாக வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது

. BSF adopts 11 villages in Uttarakhand 

**************************************************

 Delhi: BSF has adopted 11 villages in Uttarakhand and has deployed a contingent of its personnel to provide succour for the locals of the rain ravaged state. The border guarding force has not only created a number of communication infrastructure like bridges and roads, it has also improvised and started a number of civic facilities in flood hit villages of the Kalimath valley.

ஆசிய இளைஞர் விளையாட்டு: ஸ்குவாஸ் போட்டியில் இந்தியாவிற்கு முதல் தங்கம்!



          இரண்டாவது ஆசிய இளைஞர் விளையாட்டு போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் அபிஷேக் யாதவ் வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளார். முதல் நாள் நடந்த போட்டிகளில் இந்தியாவின் எம். கவிதா தேவி சிறுமிகளுக்கான ஜூடோவிலும், டி. லால்சன்ஹிமா சிறுவர்களுக்கான பளுதூக்குதல் போட்டியிலும் தலா ஒரு வெண்கலம் பெற்றது குறிப்பிடத்தக்கது.மேலும் இதுவரை இந்தியாவிற்கு மொத்தம் 4 பதக்கங்கள் கிடைத்து நிலையில் சென்னை இளைஞர் குஷ் குமார் முதல் தங்கத்தை பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

         நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒறையர் ஸ்குவாஷ் போட்டியில் சென்னையை சேர்ந்த இளைஞர் குஷ் குமார் 17, மலேசியாவின் முகமது ஸ்யபிக் மோத் கமலுடன் மோதினார்.

        இதில் குஷ் குமார் 11-9 5-11 11-9 11-7 என்ற செட்டுகளில் மலேசியாவின் கமலை வீழ்த்தி தங்கத்தை வென்றார். நடைபெற்றும் வரும் ஆசிய இளைஞர் விளையாட்டு போட்டியில் சென்னை இளைஞர் குஷ் குமார் முதல் தங்கத்தை பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Squash: Kush Kumar bags first gold for India at Asian Youth Games 2013 


******************************************************************************

17-year-old Kush Kumar, a trainee at the Indian Squash Academy, Chennai, becomes the first Indian to win a gold medal at the second Asian Youth Games 2013 being held in Nanjing, China.[1] Kush Kumar (AOI) beat [2] Syafiq Kamal (Mas) 11/9, 5/11, 11/9, 11/7 in the final- a match that lasted three minutes short of an hour.Kush started off well with an aggressive pace, but was being caught time and again by Shafeeq’s delicate drops and some awesome deceptive play.

Monday 19 August 2013

அதிகம் அறியப்படாத பிரவுசர்கள்!



        இணையத்தை நம்முடன் இணைக்க, இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், குரோம் (சபாரி மற்றும் ஆப்பரா ஆகியவற்றையும் இந்த பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.) ஆகிய பிரவுசர்களே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், ஏறத்தாழ இவை தரும் வசதிகளுடனும், திறனுடனும் இன்னும் சில பிரவுசர்கள் நமக்குக் கிடைக்கின்றன. அனைத்தும் ஒரே மாதிரியான திறனுடன் செயல்படும் வகையில் வடிவைக்கப்படவில்லை என்றாலும், இவற்றையும் விரும்பினால் பயன்படுத்திப் பார்க்கலாம்.

1. ஸீ மங்கி (SeaMonkey):

இங்கு தரப்படும் மற்ற பிரவுசர்களைப் போல் இல்லாமல், இது சற்று எளிதில் புரிந்து கொண்டு பயன்படுத்தக் கூடிய பிரவுசரே. இதனைப் பயன்படுத்துபவர் எண்ணிக்கை சற்று கணிசமானதாகும். இது பிரவுசர் மட்டுமல்ல. இமெயில் பெற்றுத் தரும் கிளையண்ட், பீட் ரீடர், எச்.டி. எம்.எல். எடிட்டர், ஐ.ஆர்.சி. சேட் என இன்னும் பல செயல்பாடுகளை மேற்கொள்ள வழி வகுத்திடும் புரோகிராம் ஆகும். பயர்பாக்ஸ் மற்றும் இமெயில் கிளையண்ட் புரோகிராமான தண்டர்பேர்ட் ஆகியவற்றில் காணப்படும் பல வசதிகளை இதில் காணலாம். Sync, session restore, themes, feed detection, smart location bar, popup blocker, safe mode, find as you type என இன்னும் பல வசதிகள் இதில் உள்ளன. இந்த பிரவுசரின் பதிப்பினைப் பார்க்கையில், இது மிக முந்தையது போலத் தெரியும். இருப்பினும் பல்வேறு வகைப்பட்ட இணைய வசதிகளை ஒரே புரோகிராமில் பெற வேண்டும் என விருப்பப்பட்டால், இந்த பிரவுசரைப் பயன்படுத்தலாம். ஸீ மங்கி பிரவுசர், விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் சிஸ்டங்களில் இயங்கும் வண்ணம் கிடைக்கிறது.

2. கே மெலான் (KMeleon):

இது ஒரு ஓப்பன் சோர்ஸ் முறையில் கிடைக்கும் பிரவுசராகும். இந்த பிரவுசரும் Session save, mouse gestures, context menu, keyboard shortcut customization, popup blocker, fast load times, popup search bar, themes, macros என இன்னும் பலவகையான சிறப்பு வசதிகளைத் தருகிறது. இதனுடைய இன்டர்பேஸ், விண்டோஸ் சிஸ்டம் டூல் கிட் அடிப்படையில் இயங்குவதால், ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் திறனையும் பயன்படுத்திக் கொள்கிறது. எங்கும் எடுத்துச் செல்லும் வகையில், இந்த பிரவுசரின் போர்ட்டபிள் பதிப்பும் கிடைக்கிறது. ஒரு யு.எஸ்.பியில் எடுத்துச் சென்று, எந்த விண்டோஸ் கம்ப்யூட்டரிலும் இணைத்துப் பயன்படுத்தலாம். இது விண்டோஸ் சிஸ்டத்தில் மட்டுமே செயல்படும்.
 
3. பேல் மூன் (Pale Moon):

 விண்டோஸ் சிஸ்டத்தில் இயங்கும் வகையில்,
பயர்பாக்ஸ் பிரவுசரினைப் போல இயங்கும் முறையில் வடிவமைக்கப்பட்டது. இது தனிப்பட்ட கட்டமைப்பினைக் கொண்டிராமல், நமக்கு அதிகம் பயன்தரும் வசதிகள் கொண்ட பிரவுசர் அமைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. வேகம், திறன் ஆகிய இரண்டுமே இதன் முக்கிய அம்சங்களாகும். புதிய ப்ராசசரில் சிறப்பாகச் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. SVG graphics, HTML5/CSS/Advanced DOM supportஆகியவற்றை சப்போர்ட் செய்கிறது. பயர்பாக்ஸ் பிரவுசர் எடுத்துக் கொள்ளும் மெமரி இடத்தைக் காட்டிலும் சற்றுக் குறைவாகவே இடம் எடுத்துக் கொள்கிறது. குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய வசதிகளைத் தரும் வகையில், பயர்பாக்ஸ் அடிப்படையில், விண்டோஸ் இயக்கத்தில் இயங்கும் பிரவுசர் வேண்டும் எனில், பேல் மூன் பிரவுசரை தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

4. லூனாஸ்கேப் (Lunascape):

விண்டோஸ் இயக்கத்தில் மட்டுமே செயல்படும் பிரவுசர். Geko, WebKit, and Trident என மூன்று பிரவுசர் இஞ்சின்களிலும் செயல்படும். இதனால், நமக்கென்ன பிரயோஜனம் என்று எண்ணுகிறீர்களா? பிரவுசர் புரோகிராம் எழுதுபவர்கள், இணைய தளம் வடிவமைப்பவர்கள், இந்த மூன்று இஞ்சின் உள்ள பிரவுசர்களை ஒவ்வொன்றாகச் சோதனை செய்து பார்க்காமல், இதில் மட்டுமே இயக்கிச் சோதித்துப் பார்க்கலாம். நாம் பார்க்க விரும்பும் சில இணைய தளங்களில் சில, பக்கங்களைக் காட்ட இயலாமல் தடுமாறும். இதற்குக் காரணம், இந்த பிரவுசர் இயக்க இஞ்சின்களில், ஒரு சிலவற்றை அந்தப் பக்கங்கள் தங்களின் கட்டமைப்பினில் சேர்த்திருக்காது. அப்படிப்பட்ட நிலைகளில், இந்த பிரவுசர் தானாகவே மாறிக் கொண்டு இயங்கி, பக்கங்களை அழகாகக் காட்டும். Highlight search, engine autoswitch, cascade view, tab lock எனப் பல சிறப்பு வசதிகளையும் இந்த பிரவுசர் தருகிறது.

5. நெட் சர்ப் (NetSurf):

மிகச் சிறியதாக இருந்தாலும், பல்வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்கும் திறன் கொண்டது. வேகத்தில் மிகச் சிறப்பானது. சிறியதாக இருப்பதால், அதிக வசதிகளைத் தராது என எண்ண வேண்டாம். நாம் அடிக்கடி பயன்படுத்தும், எதிர்பார்க்கும் அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது. Web page thumbnailing, local history trees, global history, hotlist manager, URL completion, scale view, searchasyoutype, cookie manager என இன்னும் பல வசதிகளைக் கொண்டுள்ளது. இது இணைய இயக்கத்திற்கான அனைத்து ஸ்டாண்டர்ட்களையும் கொண்டுள்ளது. இதன் போர்ட்டபிள் பார்மட் ஒன்றும் கிடைக்கிறது. Haiku, BeOS, AmigaOS, Atari, Linux, UNIX, RISC OS என இன்னும் பல ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் இயங்கும் தன்மை கொண்டது
.
இணையத்தில் கிடைக்கும் அனைத்து இணைய பிரவுசர்களும், சமமான திறனுடனும் வசதிகளுடன் வடிவமைக்கப்படவில்லை. மேலே காட்டப்பட்டுள்ளவற்றுள் சில, பயர்பாக்ஸ் அல்லது குரோம் பிரவுசர் போன்று சிறப்பான சில வசதிகளைத் தராமல் இருக்கலாம். ஆனால், இவை ஒவ்வொன்றும், தனக்கென ஒரு சில தனிச் சிறப்புகளைக் கொண்டதாகவே அமைக்கப்பட்டுள்ளன. அதனால், இவை ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு காரணத்திற்காக உங்களை நிச்சயம் கவரும். ஆர்வத்தினைத் தூண்டும். எனவே, ஒருமுறை இன்ஸ்டால் செய்து இவை அனைத்தையும் ஒவ்வொன்றாகப் பயன்படுத்திப் பார்க்கவும். இதனால், நீங்கள் தற்போது பயன்படுத்திக் கொண்டிருக்கும் பிரவுசரின் அதி சிறப்புத் தன்மையையும் உறுதிப் படுத்திக் கொள்ளலாமே!

ஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள்



ஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள்

 
 
நாங்கள் பரிட்சை எழுத 
நீங்கள் அல்லவா படித்தீர்கள் 
நாங்கள் வெற்றிப் பெற 
நீங்கள் அல்லவா உழைத்தீர்கள் 

 
 
கல்லும் உடையாமல் 
சிலையும் சிதறாமல் 
எங்களை செதுக்கிய 
சிற்பி அல்லவா நீங்கள் 

 
 
மழையின் அருமை தெரியாமல் 
மழையை கண்டு ஓடுபவர்போல 
உங்களைக் கண்டு ஓடினோம் 
மழையின் அருமை 
கோடையில் தெரியும் 
உங்களின் அருமை, பெருமை 
இப்போது உணர்கிறேன் !

யாருக்காக ஆசிரியர் தினம்?



வருடம் முழுவதும் எத்தனையோ விஷேச நாட்கள் வருகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக, அதன் முக்கியத்துவத்தைப் பொறுத்து அனுசரிக்கப்படுகின்றன. ஆனால், வருங்கால தலைமுறையினரான மாணவர்கள், அந்த வருங்காலத்தை, தங்களுக்குள் நிர்மாணிப்பதில் பெரும் பங்கு வகிக்கும் ஆசிரியர்களுக்காக, அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு வைபவமாக கொண்டாடுவது ஆசிரியர் தினம். அந்த வகையில், மற்ற சிறப்பு தினங்களோடு ஒப்பிடுகையில், இந்த ஆசிரியர் தினமானது மாறுபட்டு நிற்கிறது.


ஆசிரியர் தின வரலாறு

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில், வெவ்வேறு தேதிகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்தந்த நாட்டை சேர்ந்த சிறந்த கல்வியாளரை கவுரவிக்க அல்லது அந்தந்த நாட்டில், கல்வி தொடர்பாக ஏற்பட்ட ஒரு சிறப்பான மாற்றத்தை நினைவுகூற என்ற காரணங்களுக்காக ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதால், ஒவ்வொரு நாட்டிலும் தேதி மாறுபடுகிறது.

இந்தியாவில் செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. நமது நாட்டின் இரண்டாவது ஜனாதிபதியாக பதவி வகித்த சர்வபள்ளி திரு. ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளையே ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம். அவர் ஒரு ஆசிரியராக இருந்தவர். சிறந்த தத்துவமேதை என்று பெயர் பெற்றவர். நல்ல கல்வியாளர். ஒருமுறை அவரது மாணவர்கள் சிலர், அவரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு அனுமதி கேட்டபோது, அவர் பின்வருமாறு கூறினார், "எனது பிறந்தநாளை தனிப்பட்ட முறையில் கொண்டாடுவதைவிட, அதையே ஆசிரியர் தினமாகக் கொண்டாடினால், நான் பெருமையாக உணர்வேன்" என்றார். அவரின் வேண்டுகோளுக்கிணங்க, கடந்த 1962ம் ஆண்டு முதல் இந்தியாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆசிரியப் பணியின் மதிப்பு

ஆசிரியர்களுடைய பணியின் மதிப்பு அளவிடப்பட முடியாதது. ஏனெனில், ஒரு மனிதனை மனிதன் என்று அடையாளப்படுத்துவது, மிருகங்களை மீறிய சிறப்பு பண்புக்கூறுதான். அந்த சிறப்புப் பண்புக்கூறு சிறந்த கல்வியின் மூலமே கிடைக்கிறது. அந்த சிறந்தக் கல்வியை அளிக்கும் மாபெரும் பணி ஆசிரியர்களை சார்ந்துள்ளது. ஏனெனில், ஆசிரியர்கள் உருவாக்கும் மாணவர் சமூகமானது, ஒரு நாட்டின் எதிர்காலத்தை மட்டுமல்ல, இந்த உலகின் எதிர்காலத்தையே தீர்மானிக்கிறது. அனைத்து மக்களின் நல்வாழ்வும் அந்த சமூகத்தின் கைகளில்தான் உள்ளது. எனவே, இந்த இடத்தில் ஆசிரியர் என்பவரின் பணியானது, அனைத்தையும்விட உயர்ந்து நிற்கிறது.

மற்ற பணிகளைப்போல ஆசிரியர் பணி என்பது ஒருவரின் வாழ்வாதாரத்திற்கான பணி அல்ல. தனது வாழ்வையே ஆதாரமாக்கும் பணி. அந்தப் பணியில் வேண்டுமானால், வாழ்வை நகர்த்துவதற்கான ஊதியம் கிடைக்கலாம். ஆனால் அந்த ஊதியத்திற்காக அந்தப் பணி அல்ல என்பதுதான் ஒரு சிறந்த ஆசிரியரின் தத்துவம். ஆசிரியர் பணி என்பது ஒரு உயிரோட்டமான பணி. ஆய்வு ரீதியான பணி. உளவியல் ரீதியான பணி. சேவை ரீதியான பணி. அர்ப்பணிப்புள்ள பணி. கால-நேரமற்ற பணி. ஒரு சிறந்த ஆசிரியர் வகுப்பறைக்குள் மட்டுமே ஆசிரியராக இருப்பதில்லை, இருக்கவும் முடியாது. அவர் தன் வாழ்வின் பெரும்பகுதி நேரங்கள் ஆசிரியராகவே இருக்கிறார். அவரின் சேவைக்கு எல்லை கிடையாது. மனித வாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்தி, அதற்கு அர்த்தத்தைக் கொடுக்கும் ஒரு கடமை ஆசிரியருக்கு உள்ளது. உலகில் உள்ள பணிகளிலேயே, ஆசிரியர் பணியே அதிக திறமைகள் தேவைப்படும் பணி என்று சொல்லும் அளவிற்கு அதன் பொறுப்புகள் அதிகம். எனவே, அந்தப் பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவதை உறுதிசெய்வது அரசின் பிரதான கடமை.

அனைவருமே சிறந்த ஆசிரியர்களா?

ஆனால் இன்றைய இந்திய சூழலில், ஆசிரியப் பணி என்பது சலுகைகள் மற்றும் சம்பளம் அதிகம் கிடைப்பதால், துளியளவுக்குக்கூட அப்பணிக்கு பொருத்தமற்ற பலர், அத்துறையில் வேலை வாய்ப்பை பெற்று வருகிறார்கள். பலர் வேலை வாய்ப்புக்கு காத்துக்கொண்டுள்ளார்கள். பலர் அதற்காகப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று ஆசிரியப் பணியில் இருப்பவர்களில் கணிசமான சதவீதத்தினர், தகுதியும், திறமையும் இல்லாமல், அதைப்பற்றி கவலையும் படாமல், சம்பளத்தோடு, டியூஷன் மற்றும் சொந்த தொழில்களை நடத்திக் கொண்டு வருமானம் ஈட்டி வருகிறார்கள்.

இவர்களே போற்றத்தக்கவர்கள்!

எது எப்படியிருந்தாலும், சிறந்த அர்ப்பணிப்பு உணர்வுடன், எந்த லாபநோக்கமும் இன்றி, பாடப்புத்தக அறிவு மட்டுமின்றி, பல்துறை பரந்த அறிவை மாணவர்களுக்கு வழங்கி, அவர்களின் உலகை விரியச் செய்து, உத்திரவாதமான எதிர்காலத்தை தொடர்ந்து வழங்கி வரும் ஆசிரியக் கண்மணிகள் கணிசமான அளவில் இருந்து, சமூக முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறார்கள். கற்றல்-கற்பித்தல் என்பதே அவர்களின் தாரக மந்திரம். இத்தகைய ஆசிரியர்கள், சமூக உருவாக்கத்தின் மூல ஆதாரங்களாக திகழ்கிறார்கள்.

இவர்களைப் போன்றவர்களை போற்றவும், புகழவும், கவுரவிக்கவுமே ஆசிரியர் தினம். இந்த தினத்தில், ஆசிரியர்களுக்கு தாங்கள் செய்ய வேண்டியதை மாணவர்கள் சிறப்பாக செய்தலே நன்று!

என்ஜினில் இருந்து வெண்ணிற புகை வெளியேறியதால் ஜி.எஸ்.எல்.வி. டி -5 ராக்கெட் கவுன்ட் டவுன் திடீர் நிறுத்தம்!

ஜி.எஸ்.எல்.வி. டி-5 ராக்கெட் விண்ணில் செலுத்துவதற்கான கவுன்ட் டவுன் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.



இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜினுடன் ஜி.எஸ்.எல்.வி டி-5 ராக்கெட், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் தளத்தில் இருந்து இன்று மாலை 4.50 மணிக்கு விண்ணில் செலுத்துவதற்கான ஏற்பாடு தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. இதற்கான 29 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று காலை 11.50 மணிக்கு தொடங்கியது.


114 டன் எடையும், 160 அடி உயரம் கொண்ட இந்த ராக்கெட்டை, இன்று விண்ணில் செலுத்துவதற்கு ஒரு மணி நேரம் 14 நிமிடங்கள் இருந்தபோது திடீரென கவுன்ட் டவுன் நிறுத்தப்பட்டது.என்ஜினில் இருந்து வெண்ணிற புகை வெளியேறியதால் கவுன்ட் டவுன் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கவுன்ட் டவுன் நிறுத்தப்பட்டதால் ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதில் தாமதம் ஏற்படும் என்று தெரிகிறது.


 இந்த ராக்கெட் மூலம் ஜிசாட் –14 என்ற தகவல் தொடர்பு செயற்கைகோளும், இந்தியாவில் தகவல் சேவை வழங்குவதற்காக 6 கே.யூ.பேண்ட் டிரான்ஸ்பான்டர்களும், 6 விரிவுபடுத்தப்பட்ட சி பேண்ட் டிரான்ஸ்பான்டர்களும் செலுத்தப்படுத்த இருந்தது குறிப்பிடத்தக்கது.


       ISRO’s GSLV-D5 launch from Sriharikota put on hold
***************************************************************

 he much awaited launch of India’s geosynchronous satellite launch vehicle-D5 (GSLV-D5), with communication satellite GSAT-14 as payload, from Sriharikota rocket port in Andhra Pradesh was put on hold on Monday.GSLV-D5, one of the most crucial launches for the India Space Research Organisation (ISRO), was scheduled to blast-off at 4.50 pm but the space agency put it on hold at around 4 pm.Official announcement on the reasons behind move is awaited.


Sunday 18 August 2013

பொறியியல் பட்டதாரிகளுக்கு கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் பணி வாய்ப்பு!



மத்திய அரசுக்கு சொந்தமான கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: Project Officer (Mechanical -12, Electrical – 06, Electronics-02, Civil-02 )

கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ முடித்திருக்க வேண்டும். அத்துடன் கப்பல் கட்டும் தளம், மரைன் இன்ஜினியரிங் பயிற்சி நிலையம், கனரக பொறியியல் தொழிற்சாலையில் இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 பணி காலம்: 2 வருடம். ஒப்பந்த அடிப்படையிலானது.


 உதவித்தொகை: பயிற்சியின்போது முதலாம் ஆண்டு மாதம் ரூ.22,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ. 22,500 வீதம் வழங்கப்படும். பணியின் நேரத்தை விட கூடடுதலாக வேலை செய்தால் மாதம் ரூ.3,000 வரை OT சம்பளம் வழங்கப்படும்.

வயதுவரம்பு: 30-க்குள் இருத்தல் வேண்டும். அனைத்து பிரிவினருக்கும் அரசு விதிகளின் படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத்தேர்வு மையம்: கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: www.cochinshipyard.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்


மேலும் முழுமையான தகவல்களை அறிய www.cochinshipyard.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.08.2013 ஆன்லைன் படிவ நகல் மற்றும் சான்றிதழ் நகல்கள் அஞ்சலில் சென்று சேர கடைசி தேதி: 27.08.2013

Tamil Proverbs in English pdf



Tamil Proverbs in English pdf






Swami vivekananda complete works vol. 1 to 9 pdf



Swami vivekananda complete works vol. 1 to 9 pdf






Saturday 17 August 2013

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள் - pdf download




சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள்



Find your Lost Smartphone with Android Device Manager



Way to locate lost smartphones using Android Device Manager

It really hurts once your new phone is purloined. It’s even worse after you haven't recognized the same phone in others hand. iPhone users are already using Apple’s iCloud service to search out their stolen phones for a moment, however there’s been no official comparable service from Google none the less. Google recently proclaimed the approaching launch of the Android Device Manager. It’s a replacement feature for Android phones running version 2.2 and up that works with a great deal like Apple’s iCloud once it involves finding lost phones. Android Device Manager will find your lost Android Smartphone and provides you a number of choices like wiping the data on the lost Android device within the case of it being stolen by some wicked person.
 

So, here is the question raises on how to locate and ring your misplaced device. If you over up dropping your phone between those couch cushions, Android Device Manager will rescue you to quickly ring your phone at most volume. Therefore you'll notice it, even it’s been suppressed and within the event that your phone or pill is out of, you'll find it on a map in real time.
 
 
track android device manager
 
How realistic it is. You can even protect the personal data and crucial information that present on you Android Smartphone. If you are trying to catch the lost phone then, Android Device Manager will assist you by sending the information from ending up within the wrong hands. If your phone can’t be recovered, or has been purloined, you'll quickly and firmly erase all of the information on your device within few moves.

Here is the way on how to do it

After the release of Android Device Manager, do change these settings to get registered with latest Android Device Manager to track lost smartphone. As we are expecting that this application will be added by default on all supporting devices like wise happened with Google Settings app.
 
  • After downloading the app, register your smartphone with Android Device Manager by signing into Gmail Account.
  • Now, when your mobile fell down somewhere or purloined, reach nearest PC and select the best option as per your requirement whether to wipe the data or to ring the mobile phone.
 
To repeat, Android Device Manager are going to be out there on all devices running Android 2.2 and above, later this month. Google notes that you just ought to be signed into your Google Account to make use of it.

Videocon A24 Review - The Wow Jelly Bean SmartPhone



Budget Videocon A24 Review: Videocon A24 will definitely become the rage to reckon with as it’s a pocket friendly Smartphone in the sub 5k segment. The wow factor sets itself apart from the crowd because of its smart features you can hardly find at this price. A wonder created by Videocon comes as a boon for the consumers who wish to shift from a feature phone to a Smartphone and here is the Videocon A24 Review. To add to all of this is Android 4.2.2 Jelly bean already installed coupled with dual core 1.2 GHz processor. Another surprise waits as these two can hardly be put together for such a low price. It’ll create an impact on the public as at such a price you will be getting more features. The 4 inch WVGA capacitive touch screen, dual-SIM and two cameras (3.2 MP Rear camera for taking images and the front camera for video conferencing) are the big attractions.
 

Videocon A24 Review

It is the beginning of a new era whereby the features of a Smartphone comes to your doorstep for just Rs. 4,699 . Other features of Videocon A24 includes are Bluetooth, WI-Fi, 512 MB Internal Memory and 256 MB RAM, radio with recording. It is sleek and is available in two variants - White chrome and Black eyed peas. Videocon A24 is user friendly so no problems for the first time Smartphone users. No hard times you will have to face before using this Smartphone. Videocon known its stuff well before it released this phone. It’s a range to go for. People can flaunt the new gadget in town as its sleek and can turn eyes on itself with its splendid features.
 
Videocon A24 Review
 
The only jitter this phone will give you is that through its internal memory is low can be expanded up to 32GB. But this Videocon A24 Smartphone is the best bet. As at this price tag you neither may nor get Android 4.2.2 Jelly Bean. This is absolutely out of the box. Just to come to its wits, features of various ranges are an add-on to Videocon A24. Now-a-days companies are also focussing on budget phones what with the house-hold prices sky rocketing and Videocon made its mark pretty well, ahead of others.
 

During the launch of Videocon A24, Mr. Khalid Zamir, Head Product Planning and Development as the saying goes ‘Slow & Steady wins the race’. We have got to move with times and rephrase the above sentence as “Fast & steady wins the race”. That’s what Videocon has brought with itself the latest technology – The giant leap of the year. It’s for time to decide, tell us which way do the wind turns.
 

Remove Background Music from Songs using Audacity



How to remove vocals from MP3 Songs

Do you want to sing your favourite song along with background music? Then this tutorial might help you to get it done. It is possible to remove background music from a song if it is in stereo mode using a piece of free software called Audacity. This software is actually handy and will provide a full version of converted song without any hassles. Before proceeding to remove vocals from MP3 songs, it should be checked that the particular song is in stereo or in mono mode. Currently this free vocal removal software called Audacity only supports songs which are composed in stereo mode.

What is Audacity?

Audacity is free open source software that allows user to record audio or to edit the audio files. Apart from these, it has an awesome feature of removing vocals from MP3 songs within few steps. With the help of Audacity, it is possible to separate background music from song and can sing the vocal of the particular song in a party that you are hosting. How awesome it is?

How to Separate Vocals from Songs?

This day, we would like to explain the procedure of using Audacity to remove vocals. This can be achieved in few steps and we will explain the same with the support of images. However, based on the amplification of the song, vocal remains same but with compressed volume.
 
how to remove vocals from songs
 
Step 1: Download Audacity Free Software from the official website and install it on your PC that runs with Windows, OS X, UNIX and Linux.

Step 2: After installing, import the audio file which you want to remove vocal. Tip: You can even drag and drop the song.

Step 3: Now observe the image carefully and split the audio into two by choosing "Split Stereo Track".

remove background music of song
 
Step 4: Now select the below track (should turn to grey).

remove vocals from mp3 songs
 
Step 5: After selecting, go to "Effect" then choose "Invert"

seperate background music from songs
 
Step 6: This is the final step. Turn both the separated tracks to Mono.
 
using audacity
 
That’s it. If you still get the vocal, try changing amplification settings. Do remember this software will only remove background music of song when they composed in stereo mode.
 

Top 10 Must Try Android Apps of 2013



Knowing the best Android Application from the huge Android Market is not at all an easy task. Few essential apps like Gmail, YouTube and Google Maps etc are the preloaded apps in almost all Android Smartphones. So, apart from those we have explored few must try Android Apps of 2013. All these applications are interesting and will do miracles from the margin of Smartphone performance. If you haven’t looked at the following apps before, then install the top 10 must try Android Apps of 2013 now.
 

Floating Notifications

First we have Floating Notifications. With this application installed on your Smartphone when you receive any notification like new Email, Facebook status updates of your friend, it will show a pop-up on the screen on any application indicating that you a got new message. It is easy to manage multiple notifications by just tapping it. Within the settings it is possible to customize which app should come to top when any notification comes. This is one of the best must have apps for Android 2013. - Download
Floating Notifications
 
Clean Master

Next we have Clean Master. This app will help you to increase the performance of the Smartphone. This particular app is very effective to clean the junk part with few moves. There are four sub divisions in Clean Master which are Junk Files, Privacy, Tasks and App Manager. To clear the temporary files, just tap Junk Files in Clean Master then it will clean the entire dump within a single click. Similarly, it is likely to clear the browsing history or any privacy related work using Privacy section. Using App and Task manager it is achievable to limit the background processes and to kill unnecessary tasks. This useful app can be downloaded from the Play Store for free. - Download
Clean Master
TTPod

Next one we have is TTPod. In Android platform we can find lots of music players with tons of features for free. But this particular TTPod app stands unique with its rare features. The excelling characteristic about this TTPod application is that, it automatically downloads the lyric files of the particular song and it will display the lyrics of the song on the screen while playing. It gives ease to customize the marquee of the lyrics and can move on to home screen with its on screen lyric feature. Try out the different cool features by moving onto settings tab. This is one of the best must have app for Android. - Download
TTPod
Snapdragon BatteryGuru

Next we have Snapdragon BatteryGuru Application. It’s a battery life saver app and this application extends the battery life, performance of your Smartphone. After installing Snapdragon BatteryGuru Android App, it will start running in learning mode for 2 days. It will record all your tasks within these 2 days and optimizes those apps for best performance by lowering all other background processes. We highly recommend having this Snapdragon BatteryGuru app to enhance the battery life. - Download
Snapdragon BatteryGuru
Gravity Screen Off

Next application in the list is Gravity Screen Off. With the support of this Android app we can use the gravity and proximity sensor to turn screen on or off. When you keep your Smartphone in the pocket, it automatically turns off as per the adjusted settings and the angel used. Do play with different settings that this app comes with. It works well in the low light condition since it uses both gravity and proximity sensor. - Download
Gravity Screen Off
Dock4Droid

Next great app in the list is Dock4Droid. Multitasking is one of the great features in Android. With Dock 4Droid, multitasking will become much easier and faster. After installing Dock4Droid on your Smartphone, just swipe right of the screen to make the app work. It is easy to choose a particular application you wish to open. You can even customize the dock with contacts, recently opened apps whatever you wish to add. It will remain side of your screen where ever you go. Play with different features that this Dock4Droid provides and make multitasking easier. - Download
Dock4Droid
Next Browser for Android

Next we have Next Browser for Android. This provides faster and smooth web surfing experience. After starting this app, on the main page we have Bookmarks and Google Search box and switching between tabs is very easy. On swiping the home screen, it will take down to next tab where we can browse latest news related to various topics. This Next Browser for Android will also support extensions which is really a cool feature to consider. This browser is very fast and is a great choice for Android user. - Download
Next Browser for Android
iTranslate

Next we have iTranslate. With this app you can convert the voice of words into different languages. You can speak any language and can convert the output in desired language. This voice recognition is very accurate and can also listen to the resulted output. This app is exactly similar to S Translator. Using this app it is possible to learn new languages easily. - Download
iTranslate
Home Manager

Next best app in my list is Home Manager. As being an Android user, you might have installed a lot of launchers on your Smartphone. While switching between another launcher there might be some situations that the launcher doesn't get closed. But with the help of Home Manager, we can just manage the list of launchers easily and effectively. Use this app to kill off the launchers to increase the performance of the phone. - Download
Home Manager
Live Scores

Last but not the least is Live Scores App. With this app you can keep track the scores and the updates related to various sports events like Football, Hockey, Soccer, Cricket etc. that are happening live. There is a dedicated button to view all the live events that happening in the particular time. In the settings you can choose the score refresh speed and the vibration intensity. This is the best must have app for Android 2013. - Download
Live Scores
These are my list of must have applications for Android 2013. It would be great, if share your list of favorite Android applications via comment section.

+2 தேர்ச்சியுடன் D.T.Ed முடித்தவர்களுக்கு சென்னை ராணுவ குடியிருப்பில் பணி வாய்ப்பு!



சென்னை பல்லாவரத்தில் உள்ள St. Thomas Mount Cantonment Board -ல் காலியாக பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரகவேற்கப்படுகின்றன.

பணி: Secondary Grade Teacher

காலியிடங்கள்: 02

சம்பளம்: ரூ.5,200 – 20,200

வயது வரம்பு: 25-க்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் D.T.Ed முடித்திருக்க வேண்டும். பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.


 16 - vazhikatti Cantonment


பணி: உதவி மருத்துவ அதிகாரி

காலியிடங்கள்: 02

சம்பளம்: ரூ.15,600 – 39,100

வயதுவரம்பு: 35-க்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி: எம்பிபிஎஸ் முடித்து ஒரு வருட Intership முடித்திருக்க வேண்டும். மருத்துவ படிப்பை இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.


பணி: Lower Division Clerk

 காலியிடங்கள்: 03

சம்பளம்: ரூ.5,200 – 20,200

வயதுவரம்பு: 25-க்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் தட்டச்சு செய்யும் திறமை பெற்றிருக்க வேண்டும். M.S. Office முடித்திருப்பது விரும்பத்தக்கது.

பணி: Health Inspector

காலியிடம்: 01

சம்பளம்: ரூ.5,200 – 20,200

வயதுவரம்பு: 25-க்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் Sanitary Inspector பாடத்தில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். (அரசு மருத்துவதுறை கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்)

வயதுவரம்பு: விண்ணப்பதாரரின் வயதுவரம்பானது 26.07.2013 தேதிப்படி நிர்ணயிக்கப்படும். அனைத்து பிரிவினருக்கும் உச்ச வயதுவரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.cbstm.org.in   or pdf file  என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களுடன் அட்டெஸ்ட் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: The Chief Executive Officer, Cantonment Board, St.Thomas Mount, Chennai -16.

 விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.09.2013

Friday 16 August 2013

தமிழ் பழமொழிகள் விளக்கத்துடன் - pdf Book download




தமிழ் பழமொழிகள் விளக்கத்துடன்






தமிழ் - தமிழ் அகராதி!



தமிழ் - தமிழ் அகராதி




Download;  தமிழ் - தமிழ் அகராதி

தொல்காப்பியம் pdf book download



தொல்காப்பியம் --- ஆசிரியர்- தொல்காப்பியர்




                     Download :  தொல்காப்பியம்

வைஃபைக்கு அடுத்து வைப்பேட்…!



இதுவரை கம்பியில்லா டேட்டா சர்வீஸுக்கு வைஃபை அல்லது வயர்லெஸ் கம்யூனிகேஷன் மூலம் தொடர்பு கொண்ட அத்தனை ஸ்மார்ட் ஃபோன் / கணனி மற்றும் அனைத்து வகை சாதனங்களுக்கும் ஒரே சோதனை அது வயர்லெஸ் மூலம் தொடர்பு கொண்டாலும் ஒரு இடத்தில் வயரால் தான் இணைக்கபட்டிருக்கும் அதுதான் அதற்க்கு தேவையான பவர் எனப்படும் மின்சார சக்திக்காக.


 இதற்கிடையில் இப்போது வாஷிங்டன் பல்கலைகழகம் வயர்லெஸ் மாதிரி வைபேட் என்னும் கம்பியில்லா பேட்டரி சர்வீஸ் டெக்னாலஜியை கண்டு பிடித்திருக்கிறது. இதன் மூலம் ஏற்கனவே நம்மை சுற்றி உள்ள ஆர் எஃப் எனப்படும் தொலைக்காட்சி மற்றும் ரேடியோ வேவ்களால் எப்படி வயர்லெஸ் டேட்டா பரிமாற்றம் செய்ய முடிகிறதோ அதே மாதிரி பேட்டரி லெஸ் கூட சாத்தியம் என கண்டுபிடித்திருக்கின்றனர்.

 16 - ravi wifi


அது மட்டுமின்றி இதன் மூலம் ஒரு சாதனம் முற்றிலும் கம்பியில்லா சேவையில் 100% இயங்க முடியும். அதாவது அந்த் சாதனத்திற்க்கு தேவையான பேட்டரி கூட இதே ஆர் எஃப் அலைகளால் பெற முடியும் என்பதே இதன் ஆரம்பகால ஆராய்ச்சியின் முடிவுகள். இந்த ஆராய்ச்சி கண்டுபிடிப்பில் நம் இந்தியர் ஷ்யாம் என்பவரும் உள்ளார் என்பது அடிசினல் ஹேப்பி நியூஸ்.



அவர் என்ன கூறுகிறார் என்றால் ”நமக்கு தேவையோ இல்லை தேவையில்லையோ நம்மை சுற்றி மொபைல் / ரேடியோ / டிவி அலைகள் இருக்கின்றன அதனால் அதை வைத்து இந்த வையர்லெஸ் டேட்டா மற்றும் பேட்டரிலெஸ் சாதனமும் சாத்தியமே. அது போக 100% மனிதனே இல்லாமல் இந்த சாதனங்கள் இயங்க முடியும் ஏன் என்றால் இதற்க்கு தேவையான பவர் வெளி சோர்ஸில் இருந்து கிடைப்பதால் இதை வைத்து பல சென்சார்கள் செய்து அதுவே இயங்குமாறு இன்ஸ்டால் செய்தால் வேலை மிச்சம்”.



இதற்கு மேலும் இதன் வெள்ளை அறிக்கை (White Paper) மூலம் நீங்கள் இன்னமும் அதிகமாய் படித்து தெரிந்து கொள்ள விரும்பினால்.


– http://abc.cs.washington.edu/files/comm153-liu.pdf



Battery power from AIR -.



 Washington University researchers claim that the wireless devices will soon go battery free and create a network for information exchange out of thin air. The researchers have developed small battery-free prototype devices that can identify the TV / Cellular signal using antennas and harness them. This technology, the researchers say, will enable forming a network of devices and sensors that can communicate with each other without needing an external power source or human attention. Shyam Gollakota, assistant professor of CS & Engineering says that the researchers were able to repurpose the wireless signals that already exist in the air into both source of power and a communication medium. He expects that the technology will have applications in a number of areas like wearable computing, self-powered sensor networks and smart homes etc. Please read the white paper for more details –

 http://abc.cs.washington.edu/files/comm153-liu.pdf 

Thursday 15 August 2013

இந்திய சுதந்திர தினத்தையொட்டி தொண்டு நிறுவனங்களுக்கு கூகுள் வழங்கும் 3 கோடி ரூபாய்க்கான போட்டி!



          இந்திய சுதந்திர தினத்தையொட்டி கூகுள் நிறுவனம் போட்டி ஒன்றை நடத்துகிறது. அதன்படி சமூக நலப் பணிகளுக்காக நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த திட்டம் வைத்துள்ள தொண்டு நிறுவனங்கள் மக்களுக்கு உதவ தாங்கள் வைத்துள்ள திட்டம் பற்றி கூகுள் நிறுவனத்திடம் தெரிவிக்கவேண்டும்.



 15 - google



          அதிலும் இந்தியாவில் முறையே பதிவு செய்யப்பட்டுள்ள என்.ஜி.ஓ. அமைப்புகள் மட்டுமே கூகுள் நிறுவனத்திற்கு தங்கள் திட்டத்தை அனுப்பி வைக்க வேண்டும். இதில் தேர்வு செய்யப்படும் 4 என்.ஜி.ஓ.க்களுக்கு தலா ரூ.3 கோடியும், தங்கள் திட்டத்தை நடைமுறைப்படுத்த தொழில்நுட்ப உதவியும் கூகுள் வழங்கும். இந்த போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் என்ஜிஓக்கள் வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவு செய்யலாம்.


           அதில் தேர்ந்தெடுக்கப்படும் சிறப்பான 4 திட்டங்களுக்கு தலா 3 கோடி ரூபாயை கூகுள் பரிசாக வழங்குவது தவிர தொண்டு நிறுவனங்களின் திட்டத்தை செயல்வடிவம் பெறவும் கூகுள் நிறுவனம் உதவும். கூகுள் இம்பாக்ட் சேல்லஞ் (Google Impact Challenge) என்ற பெயரிலான இத்திட்டத்தையே இந்திய சுதந்தர தினத்தை முன்னிட்டு செயல்படுத்துவதாக கூகிள் தெரிவித்துள்ளது.இதில் கூகுளை பயன்படுத்தும் இந்தியர்கள் உள்ளிட்ட உலக மக்கள் சமர்பிக்கப்பட்ட திட்டங்களை பரிசீலித்து அதில் 10 சிறந்த திட்டங்களை அக்டோபர் 21ம் தேதி அறிவிப்பார்கள் என்றும் அதன் பிறகு நடுவர் குழு அதில் இருந்து 3 திட்டங்களை தேர்வு செய்வதுடன்.மக்கள் அளிக்கும் வாக்குகளை வைத்து ரசிகர்கள் விருப்ப விருதும் வழங்கப்படுகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

********************************************************************************

Ahead of India’s Independence Day celebrations this week, Google announced to launch “Google Impact Challenge in India,” inviting Indian nonprofits to tell how they would use technology to improve people’s lives. At the end of the challenge, four nonprofits will each receive a Rs 3 crore (around USD500,000) Global Impact Award and technical assistance from Google to bring their projects to life, the California-based tech-giant announced Monday.

தனி மனித ஆற்றலை வெளிக் கொணரச் செய்வதே உண்மையான சுதந்திரம்! – முதல்வர் சுதந்திர தின உரை!


      ”சுதந்திரம் என்பது பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், கல்வி சுதந்திரம், வேலைவாய்ப்பு சுதந்திரம், சிந்தனை சுதந்திரம் என பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது. சமூக, பொருளாதார காரணிகளால் ஒடுக்கப்படாமல் ஒவ்வொரு தனி மனிதருக்குள் இருக்கும் ஆற்றலை வெளிக் கொணரச் செய்வதே உண்மையான சுதந்திரத்திற்கான இலக்கணம்.” என்று முதல்வர் ஜெயலலிதா கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரை ஆற்றியபோது தெரிவித்தார்.


 தமிழக அரசின் சார்பில் சுதந்திர தின விழா, சென்னை கோட்டையில் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஜெயலலிதா, தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சாகச செயல் புரிந்த பெண்ணுக்கு கல்பனா சாவ்லா விருதை வழங்கினார். நாடு முழுவதும் 67-வது சுதந்திர தினவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக அரசு சார்பில் சென்னை கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தின விழா நடந்தது. இதற்காக கோட்டை கொத்தளம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.


 15 - t n cm flag


விழாவில் பங்கேற்பதற்காக காலை 8.25 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா வீட்டில் இருந்து புறப்பட்டார். அவரை போலீசார் இரு சக்கர வாகனங்களில் அணிவகுத்து அழைத்து வந்தனர். விழா மேடை அருகே வந்த முதல்வரை தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் வரவேற்றார். அதைத்தொடர்ந்து ஆந்திரா, தமிழ்நாடு கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களின் தலைமை படை தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் டி.கே.பிள்ளை, கடற்படை பொறுப்பு அதிகாரி கமாண்டர் மகாதேவன், தாம்பரம் விமானப்படை அதிகாரி ஏர் கமோடர் எஸ்.பிரபாகரன், கடலோர காவல்படை கிழக்கு மண்டல கமாண்டர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் எஸ்.பி.ஷர்மா, தமிழக டிஜிபி ராமானுஜம், கூடுதல் டிஜிபி (சட்டம் – ஒழுங்கு) டி.கே.ராஜேந்திரன், சென்னை கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரை முதல்வர் ஜெயலலிதாவுக்கு தலைமைச் செயலாளர் அறிமுகம் செய்து வைத்தார்.



     பின்னர் பேசிய அவரது உரையின் போது,”அனைவருக்கும் எனது அன்பு கலந்த வணக்கத்தையும், சுதந்திர தின நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். 67-வது சுதந்திர தின நன்னாளில் சுதந்திரக் கொடியை ஏற்றி வைத்ததில் பெருமிதம் அடைகிறேன். இந்த வாய்ப்பை நல்கிய தமிழக மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.



     சுதந்திரம் என்ற வார்த்தையே நமது மனங்களில் மட்டற்ற மகிழ்ச்சியையும், பெருமித உணர்வையும் ஏற்படுத்துகிறது. இப்படிப்பட்ட மகிழ்ச்சிகரமான சுதந்திரத்தைப் பெற ஆங்கிலேயர்களுக்கு எதிராக தமிழகத்திலிருந்து முதலில் குரல் கொடுத்தவர்கள் பாளையக்காரர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இவர்களில் வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவர், மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை ஆகியோரின் புரட்சி மகத்தானது. இதுவே சுதந்திரப் போராட்டத்திற்கான முதல் வித்தாக அமைந்தது.



      இந்திய அளவில், சர்தார் வல்லபாய் பட்டேல், பாலகங்காதர திலகர், அண்ணல் அம்பேத்கர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் என பல தலைவர்கள் இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டுள்ளனர். இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு மகத்தானது. கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரம் பிள்ளை, மகாகவி சுப்ரமண்ய பாரதியார், திருப்பூர் குமரன், தீரர் சத்தியமூர்த்தி, சுப்ரமண்ய சிவா, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், அயல்நாட்டு வீராங்கனை அன்னி பெசன்ட் அம்மையார், மாவீரன் வாஞ்சிநாதன் என எண்ணற்ற தலைவர்கள் ரத்தம் சிந்தியும், உயிரைக் கொடுத்தும் ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரத்தை நமக்குப் பெற்றுக் கொடுத்துள்ளனர். இந்த விடுதலைத் திருநாளில் சுதந்திரத்திற்காக பாடுபட்ட அனைத்து தியாகிகளுக்கும் என்னுடைய வீர வணக்கத்தினை செலுத்துகிறேன்.



சுதந்திரம் என்பது பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், கல்வி சுதந்திரம், வேலைவாய்ப்பு சுதந்திரம், சிந்தனை சுதந்திரம் என பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது. சமூக, பொருளாதார காரணிகளால் ஒடுக்கப்படாமல் ஒவ்வொரு தனி மனிதருக்குள் இருக்கும் ஆற்றலை வெளிக் கொணரச் செய்வதே உண்மையான சுதந்திரத்திற்கான இலக்கணம்.” என்று குறிப்பிட்டார்.

Wednesday 14 August 2013

இந்தியா வல்லரசாவதில் மாணவர்களின் பங்கு..!! பேச்சுப் போட்டி!



 இந்தியா வல்லரசாவதில் மாணவர்களின் பங்கு..!!






ஆண்டவன் படைச்சதுலயே
ரெண்டு சிறந்த விஷயம்.

ஒண்ணு - இந்தியா
இன்னொன்னு - இந்தியன்ஸ்..

2020-ல இந்தியா வல்லரசு ஆகணும்.
அது நம்ம கனவு, இலட்சியம்.

சரி.. முதல்ல வல்லரசுன்னா என்ன..?

1. அணு ஆயுதம் வெச்சி இருக்கறதா.?
2. ஐ.நா.சபை சொல்றதை கேக்காம இருக்கறதா..?
3. மத்த நாடுகள அதிகாரம் பண்றதா.?
இல்ல..
4. ஏமாந்த நாடுங்க கூட சண்டைக்கு போறதா..?

இப்படி இருந்தா தான் வல்லரசா..?

No..!!

எந்த ஒரு நாடு
1. கல்வி.,  2. உணவு உற்பத்தி., 3. மருத்துவம்.,
4. தொழில் நுட்பம்., 5. பாதுகாப்பு

இந்த 5 துறைலயும் தன்னிறைவு
அடைஞ்சி இருக்கோ அதுதான்
வல்லரசுன்னு அப்துல் கலாம் சொல்றாரு..

இதுவரைக்கு இருந்த வல்லரசெல்லாம்
ஒரே மாதிரி - ஆனா இனிமே
இந்தியா தான் உலகத்துக்கே முன்மாதிரி

ஒரு நாட்டின் முழுமையான வளர்ச்சியை,
அந்த நாட்டில் இருக்குற குழந்தைகளோட
கல்விதான் நிர்ணயிக்குது..

கல்விதுறை வளர்ந்தாலே மத்த
எல்லா துறையும் தானா வளர்ந்துடும்..

இவரு பணக்காரரா இருந்தாரு..
இப்ப ஏழையாயிட்டாருன்னு சொல்லலாம்..
இவரு பலசாலியா இருந்தாரு..
இப்ப நோயாளி ஆயிட்டாருன்னு சொல்லலாம்..
ஆனா யாராவது இவரு 10வது படிச்சவரு.
இப்ப 8வது ஆயிட்டாருன்னு சொல்ல முடியுமா.?

கல்வி தான் அழியாத சொத்து..

அதனால நாம எல்லோரும்
நல்லா படிக்கணும்..

அது மட்டும் போதுமா நம்ம நாட்ல
இன்னும் 4 கோடி குழந்தைகளுக்கு
சரியான கல்வி கிடைக்கல..

அந்த நிலைமை மாறணும்..

"எண்ணிய முடிதல் வேண்டும்,
நல்லனவே எண்ண வேண்டும்.
பாரதி சொல்றரு..

இந்த நிலைமை மாறணும்னு
நல்ல எண்ணம் இருந்தா மட்டும்
போதாது. நாமளும் எதாவது பண்ணனும்..

என்ன பண்ணலாம்..?

நாம எல்லோரும் லீவ் நாள்ல
பக்கத்தில இருக்கிற கிராமத்துக்கு
போயி அங்கே இருக்குற குழந்தைகளுக்கு
எழுத படிக்க Help பண்ணணும்..

அதுக்காக நம்ம டீச்சர்ஸ்
கம்மியா Home work குடுத்து
நமக்கு Help பண்ணனும்..

நம்ம வீட்டை சுத்தி, ஸ்கூலை சுத்தி
மரம் நட்டு வளர்க்கணும்..

நம்ம நாடு வளர இந்த மாதிரி
சின்ன சின்ன விஷயங்கள
நாம செஞ்சாலே போதும்..

இதெல்லாம் நீங்க பண்ண
போறீங்களான்னு சந்தேகமா பாக்காதீங்க..
கண்டீப்பா பண்ணுவோம்

நாங்கல்லாம் ஒரு தடவை முடிவு
பண்ணிட்டா.. எங்க பேச்சை நாங்களே
கேக்க மாட்டோம்..

சரி.. இப்ப கஷ்டப்பட்டு நல்லா
படிச்சிட்டோம்.. அது மட்டும் போதுமா.?

இனிமே தான் இருக்கு முக்கியமான
மேட்டர்..

இன்னிக்கு இந்தியா தான் உலகிலயே
மிக இளமையான நாடு..

117 கோடி மக்கள்ல 54 கோடி பேர்
இளைஞர்கள்..

திறமையும், உழைப்பும் இருக்குற
பெரிய இளைஞர் சக்தி நம்ம பலம்..

ஆனா இந்த மாபெரும் இளைஞர் சக்தி
" டாலர் " கனவுல தன் அறிவையும்
உழைப்பையும் வேற நாட்டு
வளர்ச்சிக்காக பயன்படுத்திட்டு இருக்கு..

அமெரிக்கா டாக்டர்கள்ல - 38% இந்தியர்கள்..

நாசா விஞ்ஞானிகள்ல - 36 % இந்தியர்கள்..

பில்கேட்ஸ் கம்பியூட்டர் கம்பெனியில
- 34 % இந்தியர்கள்..

நம்ம ஆளுங்களால தான் அமெரிக்கா
இன்னிக்கு வல்லரசா இருக்கு..

இப்ப புரியுதா..
இந்தியா தான் டாப்பு..
அமெரிக்கால்லாம் வெறும் டூப்பு..!!

உலகத்தையே கட்டி ஆளுற திறமை
இருக்கிற இந்திய இளைஞர்கள்
நம்ம நாட்டு வளர்ச்சியில அக்கறை
காட்டினா நாம தானே அடுத்த வல்லரசு..

நேற்றைய உலகம் அமெரிக்கா கையில்......!
இன்றைய உலகம் சைனா கையில்......!
நாளைய உலகம் நம் கையில்......!!

ஜெய் ஹிந்த்..!!

சுதந்திர தினம்!



                             Independence-Day

 
           ‘1947, ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி’ என்பது ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும், நினைவிலும் நிற்கும் தினமாகக் கருதப்படுகிறது. அந்நாள், ‘நம்முடைய புதிய தேசத்தின் உதய நாள்’ மற்றும் ‘ஒரு புதிய தொடக்கத்தின் தொடக்க நாள்’ என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனென்றால், இறையாண்மைக் கொண்ட நாடாகத் திகழும் நமது இந்தியாவின் சுதந்திரம் என்பது, நூற்றுக்கணக்கான ஆன்மாக்கள் மற்றும் ஆயிரக்கணக்கானப் புரட்சியாளர்கள் மற்றும் தலைவர்களின் வெற்றி என்று பெருமையுடன் தலைநிமிர்ந்து சொல்லலாம். நமது தாய்நாடான இந்தியா சுதந்திரமடைந்து, சுமார் அரை நூற்றாண்டுகளையும் கடந்து, நாம் சுதந்திரமாக நமது தாய்மண்ணில் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு முதன்முதல் காரணம், நமது தேசிய தலைவர்களும், போராட்ட வீரர்களுமே! இருநூறு ஆண்டுகளாக, நமது நாட்டிலேயே நாம் அந்நிய தேசத்தவரிடம் அடிமைகளாக இருந்த போது, அவர்களை தைரியத்துடனும், துணிச்சலுடனும் பலரும் வீறு கொண்டு எதிர்த்து பல புரட்சிகளையும், கிளர்ச்சிகளையும், போர்களையும் நடத்தி, வெற்றியும், தோல்வியும் கண்டுள்ளனர். சுதந்திரம் என்ற ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு, தமது இன்னுயிரையும் துறந்த மகான்களின் தியாக உள்ளங்களையும், அவர்கள் போராடி பெற்றுத் தந்த சுதந்திரத்தை, அந்நாளில் நாம் களிப்புற கொண்டாடுகிறோம், என்றென்றைக்கும் கொண்டாடுவோம். நமது சுதந்திரத்திற்காகப் போராடிய பல தலைவர்களும், புரட்சியாளர்களும் தள்ளாடும் வயதைக் கடந்துகொண்டிருக்கும் வேளையில், சுதந்திரத்தைப் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் நமது இந்திய நாட்டின் பிரஜைகள் அனைவரும் தெரிந்து கொள்வது அவசியம்.



ஆரம்பகால இந்தியா:-


‘தீப கற்பம்’ என்றும் ‘பாரத தேசம்’ என்றழைக்கப்படும் நமது நாடானது, மேற்கே பாகிஸ்தான், கிழக்கே வங்காளதேசம், எனப் பெருவாரியானப் பரப்பளவைக் கொண்டு ஒரே நாடாக இருந்தது. மன்னர்கள் ஆட்சியில் மிகவும் செழிப்பாகவும், பசுமையாகவும் இருந்த நமது நாடு, செல்வ செழிப்பில் உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் சிம்மசொப்பனமாக இருந்தது. தென்னிந்தியாவை சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்து, அவர்களது புகழை மேன்மேலும் ஓங்கச் செய்தனர். இவர்களைத் தொடர்ந்து, இசுலாமியர்கள் (1206–1707), தில்லி சுல்தானகம் (1206–1526), தக்காணத்து சுல்தானகங்கள் (1490–1596), விஜயநகரப் பேரரசு (1336–1646), முகலாயப் பேரரசு (1526–1803), மராட்டியப் பேரரசு (1674–1818), துர்ரானி பேரரசு (1747–1823), சீக்கியப் பேரரசு (1799–1849) எனப் பலரும் நமது நாட்டின் எல்லைகளையும், செல்வங்களையும் விரிவுபடுத்துவதிலே மிகவும் கவனமாக இருந்தனர்.


மேலைநாட்டவர்களின் வருகை:-


           விஜயநகரப் பேரரசு காலத்தில், நமது இந்தியாவிற்குக் கடல்வழியாக முதன்முதலில் வந்தவர் தான், வாஸ்கோடகாமா. ‘வந்தோரை வாழவைக்கும் நாடெங்கள் நாடு’ என்ற பெருமை நமது இந்தியாவிற்குத் தொடக்கத்திலிருந்தே உள்ளது. ஒரு போர்ச்சுகீசியரான அவர், கடல் வழியே இந்தியாவிற்கு வழியைக் கண்டு பிடித்து, நமது நாட்டில் கால்பதித்தார். இவரது வருகையைத் தொடர்ந்து, இந்தியாவில் உணவுக்கு சுவை சேர்க்கும் கறிமசாலா பொருட்கள் இருப்பதை அறிந்த ஐரோப்பியர்கள், அதைத் தங்களது நாடுகளுக்கு விற்பனை செய்யும் வணிகத்தில் ஈடுபட எண்ணி, கோழிக்கோடு துறைமுகத்தில் 1498-ஆம் ஆண்டு வந்திறங்கினர். இதுவே, பண்டமாற்று முறைக்கு வித்திட்டது. போர்ச்சுகீசியர்கள் இந்தியாவின் கடலோரப் பகுதிகளான கோவா, டியூ, டாமன் மற்றும் பாம்பே போன்ற இடங்களில் தங்களது வாணிக முகாம்களை அமைத்தனர். இவர்களைத் தொடர்ந்து, டச், ஆங்கிலேயர்கள் போன்ற அந்நிய நாட்டவர்கள் நமது நாட்டிற்கு வருகைத் தந்ததால், அவர்களும் போர்ச்சுகீசியர்கள் போலவே வாணிக முகாம்களை அமைக்க எண்ணி, சூரத்தின் வடக்கு கரையோரத்தில் நிறுவினர். 1619 ஆம் ஆண்டில், பிரெஞ்சுகாரர்களும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். வாணிகம் என்ற பெயரில் ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் நுழையும் ஐரோப்பியர்கள், நாட்கள் செல்ல செல்ல அந்நாட்டின் சிம்மாசனப் பொறுப்பைக் கைப்பற்றுவர். அதற்கேற்றவாறு, பல நாட்டவரும் இந்தியாவுக்குள் நுழைந்ததால், பல போர்களும், குழப்பங்களும் நிலவியதால், ஐரோப்பியர்கள் அரசியல் ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்தனர். ஆனால், தாங்கள் கைப்பற்றிய அனைத்து நாடுகளையும், ஒரே நூற்றாண்டில் ஆங்கிலேயர்களிடம் இழந்தனர்.


ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனி:-


     ஐரோப்பியர்களை மிகவும் சூழ்ச்சியால் வென்ற ஆங்கிலேயர்கள், இந்தியாவில் இருந்து வாணிகம் செய்து வந்ததோடு மட்டுமல்லாமல், அப்போதைய முகலாயப் பேரரசர் ஜெஹாங்கிரின் அனுமதிப் பெற்ற பின்னர், இந்தியாவைத் தலைமையிடமாகக் கொண்டு அவர்களது கிழக்கிந்திய கம்பெனியையும் நிறுவினர். நாளடைவில் அவர்கள் வரி செலுத்தாமலேயே வாணிகம் செய்ததால், அவர்களை வங்காளத்தின் நவாப் ‘சிராஜ் உட துலாத்’ என்பவர் எதிர்த்ததால், 1757 ஆம் ஆண்டில், ‘பிளாசி யுத்தம்’ தொடங்கியது. இதில், நவாப் ஆங்கிலேயர்களிடம் தோல்வியுற்றதால், அவர்கள் இந்தியாவில் உள்ள நிலங்களை ஆக்கிரமிக்கத் துவங்கினர். இதையடுத்து, 1764 ஆம் ஆண்டில் பக்சார் போரிலும் வெற்றிப் பெற்று, வங்காளத்தை ஆட்சி செய்ய அப்போதைய முகலாயப் பேரரசரிடம் அனுமதிப்பெற்றதால், இந்தியா முழுவதும் ஆங்கிலேயரின் ஆட்சிக்குள் வர அதுவே, முதன்முதல் காரணமாக இருந்தது. இதன் பின்னர், வரிகள், நிலங்கள் கையகப்படுத்துதல், போன்றவற்றால் இந்தியா பஞ்சம் வரும் நிலைமைக்குத் தள்ளப்பட்டது. 20 மில்லியன் மக்கள் ‘கிரேட் பாமின் ஆஃப் 1876–78’ மற்றும் ‘இந்தியன் பாமின் ஆப் 1899–1900ல்’ மடிந்ததொடு மட்டுமல்லாமல், ‘மூன்றாம் பிளக் பாண்டமிக்’ என்ற கொடிய நோயால் மேலும் 10 மில்லியன் மக்கள் செத்து மடிந்தனர். கிழக்கிந்திய நிறுவனத்தால், ஏற்பட்ட இத்தகைய மாபெரும் இழப்பைக் கண்டு வெகுண்டத் துடிப்பான இளைஞர்கள் பலரும் இணைந்து, ‘1857 இந்திய கலகம்’ என்ற இயக்கத்தை முகாலாயப் பேரரசர் பகதூர் ஷா சபர் அவர்களை மானசீக தளபதியாகக் கொண்டு உருவாக்கினர். இதுவே, ‘முதல் இந்தியப் போர்’ என்று அழைக்கப்பட்டது. ஒரு வருடமாகப் போராடிய பின்னர், இவ்வியக்கத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அதன் தளபதியையும் நாடு கடத்தி, முகலாய வம்சத்திற்கு ஒரு முற்றுப்புள்ளியும் வைத்தனர், ஆங்கிலேயர்கள்.

 
ஆங்கிலேயர்களின் ஆதிக்கம்:-


         முதல் இந்தியப் போரைத் தொடர்ந்து, தனது அதிகாரத்தை நேரடியாக செயல்படுத்த முடிவெடுத்தனர், ஆங்கிலேயர்கள். என்னதான் ஆங்கிலேயர்கள் ஒருபுறம் தனது ஆதிக்கத்தை மேலோங்கச் செய்து கொண்டே இருந்தாலும், நமது இந்தியர்கள் ‘முதல் இந்தியப் போரைத்’ தொடர்ந்து, பல போராட்டங்களிலும், கிளர்ச்சிகளிலும் ஈடுபட்டுக் கொண்டே இருந்தனர். 1867ல் ‘கிழக்கிந்திய கூட்டமைப்பை’ தாதாபாய் நவ்ரோஜியும், 1876ல் ‘இந்திய தேசிய கூட்டமைப்பை’ சுரேந்திரநாத் பானர்ஜியும் உருவாக்கினர். 1877 ஆம் ஆண்டில், விக்டோரியா மகாராணி டில்லியில் முடிசூட்டப்பட்டதால், ஓய்வுபெற்ற பிரித்தானிய பொதுப்பணி சேவகர் ஏ.ஓ.ஹ்யூமினால் இந்தியர்கள் பலரும் தூண்டப்பட்டு, 1885ல் மும்பையில் எழுபத்து மூன்று இந்தியப் பிரதிநிதிகள் இணைந்து ‘இந்திய தேசிய காங்கிரஸை’ நிறுவினர். சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், பால கங்காதர திலகர், லாலா லஜபத் ராய், விபின் சந்திர பாலர், வ. உ. சிதம்பரம்பிள்ளை, ஸ்ரீ அரபிந்தோ, சுப்பிரமணிய பாரதி, சுப்பிரமணிய சிவா, பக்கிம் சந்திர சட்டர்ஜி, சர் சயீது அஹ்மது கான், ரபீந்திரநாத் தாகூர் மற்றும் தாதாபாய் நவ்ரோஜி போன்றோரின் உழைப்பு விடுதலை உணர்வுக்கான புத்தெழுச்சியை பரவச்செய்தது.


    1905ல், ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டார், அப்போதைய வங்காளத்தின் வைஸ்ராயும், கவர்னர் ஜெனரலுமான கர்சன் அவர்கள். வங்காளப் பிரிவினையைக் கண்டு கொதித்த இந்தியர்கள் பலரும், சுதேசி மற்றும் புறக்கணிப்புப் போராட்டங்களில் ஈடுபட்டனர். முதல் இந்திய தேசியவாதியாக இருந்து, சுயராஜ்ஜியத்தை ஏற்றுக் கொண்டார், பால கங்காதர திலகர். இதனால், தேசியவாதம் அடிப்படைவாதம் என இரண்டு தலைமைகளில் காங்கிரஸ் இரண்டாக 1907ல் பிரிந்தது. தொடர்ச்சியான வன்முறைகளும், கொந்தளிப்புகளும் நாட்டில் நிலவியதால், அதைத் தடுக்க எண்ணிய ஆங்கிலேயர்கள், தலைவர்களான பால கங்காதர திலகர் மற்றும் வ.உ.சியை 1908 ஆம் ஆண்டில் கைது செய்தனர். வங்காளப் பிரிவினையால் தொடர் போராட்டங்கள் ஏற்பட்டதால், அந்தச் சூழ்நிலையைத் தணிக்க முயற்சித்த ஆங்கிலேயர்கள், 1911 ஆம் ஆண்டில், ஐந்தாம் ஜார்ஜ் டர்பாரில் என்பவரை இந்தியாவிற்கு அனுப்பிவைத்தனர். அவர், வங்கப் பிரிவினையை மீண்டும் பெறப்போவதாக அறிவித்ததோடு மட்டுமல்லாமல், டெல்லியின் வடக்குப்பகுதியில் கட்டப்படவிருந்த நகரத்திற்கு தலைநகரத்தை கல்கத்தாவிலிருந்து மாற்றுவதாகவும் அறிவித்தார்.


முதல் உலகப் போரும், இந்தியர்களின் துணிவும்:-


         உலகிலுள்ள நாடுகளுக்கிடையே நிலவிய மோதல்கள் மற்றும் விரோத போக்குகளால் 1914ல் ‘முதல் உலகப் போர்’ ஆரம்பமானது. ஆங்கிலேயர்கள் நமது இந்தியாவில் ஆட்சி செய்து கொண்டிருந்ததால், அவர்களது போர் முயற்சிகளுக்கு நமது இந்தியா பெருமளவில் பங்களித்தது. முதல் உலகப்போரின் பின்விளைவுகளாக உயர் உயிரிழப்பு விகிதம், உயர்ந்த பணவீக்கம், பரவிய இன்புளூயன்ஸா கொள்ளைநோய் மற்றும் போரின்போது ஏற்பட்ட வர்த்தகத்தின் பாதிப்பு போன்றவை, இந்திய மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால், பிரித்தானிய ஆட்சியைத் தூக்கியெறிய இந்திய வீரர்கள் முற்பட்டனர். அச்சமயம், அதாவது, 1915 ஆம் ஆண்டில், தென்னாப்பிரிக்காவில் நிறவெறி எதிர்ப்பு இயக்கத்தின் முக்கியத் தலைவராக இருந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், மீண்டும் இந்தியாவிற்கு வந்தார். இந்திய மக்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்ததால், 1916ல் கத்தர் கட்சியினரை பிரிட்டிஷார் வேட்டையாடியதோடு மட்டுமல்லாமல், 1918ல் ‘கறுப்புச் சட்டம்’ என்ற ‘ரௌலட் சட்டம்’ ஒன்றை நடைமுறைக்குக் கொண்டுவந்தனர். இதன் மூலம் ‘பத்திரிக்கைகளை மூடுதல், விசாரணையின்றி அரசியல் செயல்பாடுகளை நசுக்குதல், மற்றும் கைதாணை இல்லாமல் கலகம் அல்லது ராஜ துரோகத்தில் ஈடுபட்டதாக கருதப்படும் எந்த ஒரு தனிநபர்களையும் கைது செய்தல்’ போன்ற அக்கிரமங்களை, அதிகாரம் என்ற பெயரில் துஷ்ப்ரயோகம் செய்தனர், வைஸ்ராய்கள். மேலும், 1919ல், அமிர்தசரசில் ஜாலியன் வாலாபாக்கில் கூடியிருந்த நிராயுதபாணியான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என்ற சந்தேகித்திற்கு இடமற்ற கூட்டத்தை நோக்கி சுடமாறு பிரித்தானிய ராணுவத் தளபதியான பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்ட் டயர் ஆணையிட்டார். இந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை, இரண்டாக பிளவுற்ற காங்கிரஸ் கட்சி, போராட்டங்கள், கிளர்ச்சிகள் எனப் பிரிந்திருந்த இந்திய மக்கள் அனைவரையும் ஒன்று சேர்த்தது. 1920 ஆம் ஆண்டில், ‘கிலாபாத்’, ‘ஒத்துழையாமை இயக்கம்’, ‘கம்யூனிஸ்ட் கட்சி’, ‘அகில இந்தியத் தொழிற்சங்க காங்கிரஸ்’ போன்றவைகள் உதயமானது. தனது நாட்டில் நிலவிய சூழலைத் தடுக்க மகாத்மா காந்தி அவர்கள், முதல் சத்தியாக்ரஹ இயக்கத்தைத் தொடங்கி, ஆங்கிலேயர்களை எதிர்த்தார். இதனால், காந்திக்கு 1922ல் ஆறுவருட சிறைதண்டனை விதிக்கப்பட்டு, இரண்டாண்டுகளிலேயே விடுதலையும் செய்யப்பட்டார். 1929ல், டில்லி பாராளுமன்றத்தில் பகத்சிங் குண்டு வீசினார். இதை மிகவும் கடுமையாக எதிர்த்த காந்தியடிகள், ‘அமைதியால் மட்டும் தான் சுத்தந்திரம் அடைய முடியுமென்று’ எண்ணி, 1930 ஆம் ஆண்டில் ‘தண்டி யாத்திரை’ எனப்படும் ‘உப்பு சத்தியாக்கிரகம்’ நடத்தினார். அப்போது தான் முதல் வட்ட மேசை மாநாடு நடைபெற்றது. அடுத்த ஆண்டில், ‘காந்தி-இர்வின்’ ஒப்பந்தம் கையெழுத்தானதோடு மட்டுமல்லாமல், அவர் லண்டனில் நடந்த இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்துகொண்டார். இந்த மாநாடு தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அவர் இந்தியா திரும்பினார். அதே ஆண்டில் தான் ஆங்கிலேயர்களை எதிர்த்த பகத்சிங், ராஜகுரு மற்றும் சுகதேவ் ஆகிய மூவரும் தூக்கிலிடப்பட்டார்.


         இரண்டாம் உலகப் போரில் இந்தியா கலந்துகொண்டது. மேலும், காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஆங்கிலேயர்கள், இந்தியாவை இரண்டு நாடுகளாகப் பிரித்தனர். 1940ல் ‘தனிநபர் சத்தியாக்கிரகம்’ மற்றும் 1942ல் ‘வெள்ளையனே வெளியேறு தீர்மானம் போன்றவை நிறைவேற்றப்பட்டது. 1943 ஆம் ஆண்டில், நேதாஜி இந்திய ராணுவத்தை தென்கிழக்காசியாவில் நாடுகடத்தப்பட்ட இந்திய தேசபக்தர்களையும் ஜாப்பான் உதவியுடன் உருவாக்கினார். இதைத் தொடர்ந்து, 1946ல் ‘ஆர்ஐஎன் கழகம்’ எனப்படும் ‘கப்பற்படை எழுச்சி’ எழுப்பப்பட்டது.


இந்தியா சுதந்திரம் அடைதல்:-


       சுதந்திரத்திற்காகப் பல போராட்டங்களையும், கிளர்ச்சிகளையும் எழுப்பியத் தலைவர்களும், புரட்சியாளர்களும் சிறிதளவு கூட களைப்படையவில்லை. ஆனால், பிரித்தானிய மக்களும், பிரித்தானிய ராணுவமும் இந்தியாவில் மென்மேலும் அடக்குமுறையை ஏற்படுத்துவதற்கு விருப்பமற்றிருந்தது. 1947 ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்திய கவர்னர்-ஜெனரலான விஸ்கவுண்ட் லூயி மவுண்ட்பேட்டன் அவர்கள், ஜூன் 3 ஆம் தேதியன்று ‘பிரித்தானிய இந்தியப் பேரரசை மதச்சார்பற்ற இந்தியா’ என்றும், ‘முஸ்லீம் பாகிஸ்தான்’ என்றும் பிரித்தளிப்பதாக அறிவி்த்தார். இந்தத் தேசப் பிரிவினையால், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 14 ஆம் தேதி பாகிஸ்தான் தனி தேசமாக பிரிந்துசென்றது. மேலும், இந்தியா 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் தேதி நள்ளிரவில், சுதந்திர தேசமானது. சுதந்திர இந்தியாவின் பிரதமராக ஜவஹர்லால் நேருவும், துணைப் பிரதமராக சர்தார் வல்லபாய் படேலும் பதவியேற்றனர். அவர்கள், இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட்பேட்டனை அதே பதவியில் தொடரும்படி அழைத்தனர். அவர்களது அழைப்பை ஏற்ற அவரும், சிறிது காலம் பதவியில் இருந்தார். பின்னர், 1948 ஆம் ஆண்டு ஜூனில் சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரி அவருக்கு பதிலாக அமர்த்தப்பட்டார்.


சுதந்திர தின கொண்டாட்டங்கள்:-


            ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தந்த மாவட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தேசியக் கொடியேற்றி நலத் திட்ட உதவிகளை வழங்குவார்கள். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, மாணவர்களுக்கு இனிப்பு வழங்கிய பின்னர், விடுமுறை அளிக்கப்படும். டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்படும் இத்தினத்தில், நாட்டின் பிரதமர் செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, மக்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்து, உரையாற்றுவார். இவ்விழாவில், முப்படை அணிவகுப்பு, நடனம், நாட்டியம் எனப் பல்வேறு வண்ணமயமான நிகழ்ச்சிகளும் இடம்பெறும். ஒவ்வொரு பிரஜைக்கும் முக்கியமான தினம் என்பதால், அனைவரும் தங்களது வாழ்த்துகளை, இந்நாளில் தங்களது பிரியமானவர்களிடம் பகிர்ந்து கொள்வார்கள்.


தேசபக்தியுடன் சுதந்திர தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடி, தேசப்பற்றை வளர்ப்போம்! வாழ்க இந்தியா!!! வளர்க பாரதம்!!!


 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top