.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label மென்பொருள்-புதுசு!. Show all posts
Showing posts with label மென்பொருள்-புதுசு!. Show all posts

Sunday 13 October 2013

iPhone 5S கைப்பேசியில் புதிய பிரச்சினை - iPhone 5s Blue Screen Of Death Bug!!!

                        




பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அப்பிள் நிறுவனத்தினால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட iPhone 5S ஸ்மார்ட் கைப்பேசியில் Blue Screen of Death பிரச்சினை ஏற்படுவதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர்.


விண்டோஸ் எக்.பி போன்ற இயங்குதளங்களைக் கொண்ட கணனிகளிலேயே இவ்வாறான பிரச்சினை இதுவரையில் காணப்பட்டு வந்தது.


இந்நிலையில் தற்போது முதன்முறையாக கைப்பேசிகளில் இப்பிரச்சினை ஏற்பட ஆரம்பித்துள்ளது.


எனினும் இந்தப் பிரச்சினைக்கான தீர்வு இதுவரையில் முன்வைக்கப்படவில்லை என்பதுடன் iPhone 5S கைப்பேசிகள் iOS 7 இயங்குதளத்தில் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



Saturday 12 October 2013

இந்திய இளைஞருக்கு ஐ. நா. விருது - இணையதளம் மூலம் திறந்தவெளி கல்வி திட்டத்தை உருவாக்கியதற்கு!!


பள்ளிக்கல்வி திட்டம் உருவாக்கியதற்காக ஐ.நா.வின் சிறப்பு விருதுக்கு இந்தியாவை சேர்ந்த வருண் அரோரா தேர்ந்தெடுக்கப்பட்டார்.தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிக்கு இணையதளம் மூலம் திறந்தவெளி கல்வி திட்டத்தை உருவாக்கியதை பாராட்டி அவருக்கு இந்த விருது கிடைத்திருக்கிறது.

12 - varon arora u n award winner

 


உலக அளவில் தொழில் நுட்ப துறைகளில் சிறந்த திட்டங்களை உருவாக்கும் இளைஞர்கள் 10 பேரை, சர்வதேச தொலைத் தொடர்பு யூனியன்(ஐ.டி.யூ.) தேர்வு செய்து ஐ.நா. சிறப்பு விருது வழங்கி கவுரவிக்கிறது. இதற்கான போட்டியில் 88 நாடுகளை சேர்ந்த 600-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.


18 வயது முதல் 26 வயதிற்குட்பட்டவர்களே பங்கேற்க முடியும். இந்த விருதுக்கு தேர்வு பெற்ற 10 பேரின் பெயர் விவரத்தை ஐ.டி.யூ. அமைப்பின் பொதுச்செயலாளர் ஹாமாடோவின் தோரே நேற்று அறிவித்தார்.
இந்த விருதுக்கு இந்தியாவை சேர்ந்த வருண் அரோரா தேர்வு பெற்றார். தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிக்கு இணையதளம் மூலம் திறந்தவெளி கல்வி திட்டத்தை உருவாக்கியதை பாராட்டி அவருக்கு இந்த விருது கிடைத்திருக்கிறது.


மேலும் வியட்னாம், டிரினிடாட் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களும் தேர்வாகி இருக்கிறார்கள். வெற்றி பெற்ற 10 பேரும் நவம்பர் மாதம் பாங்காக்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Indian youth wins UN award

*********************************************
 


A young man from India is among 10 people from around the world selected for a prestigious United Nations award in recognition of their work as entrepreneurs and use of technology to change the world. 

நம் மரணத்தை கணித்து சொல்லும் ‘கடிகாரம்’!


ஒருவர் எப்போது மரணமடைவார் என்பதை அவர் மரணமடையும் நேரத்திற்கு நெருங்கிய செகன்ட வரை கணித்து கூறக்கூடிய கைக்கடிகாரமொன்றை ஸ்வீடன் நாட்டு கண்டுபிடிப்பாளர் ஒருவர் உருவாக்கியுள்ளார். மேலும் விபத்து மற்றும் கொலை உள்ளிட்ட சம்பவங்கள் குறித்த வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் இறந்த நேரம் என்பது விசாரணைக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.


ஆனால், தற்போதுள்ள முறையில் இறந்த நேரம் உத்தேசமாகவே ‌ கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் இறந்த நேரத்தை துல்லியமாக கணக்கிட இக்கடிகாரம் உதவும் என்றும் கூற்ப்படுகிறது.




12 - tec deathwatch-

 


பிரெடிக் கொல்டிங் என்பவரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ள இந்த கைக்கடிகாரம் ‘மரண கைக்கடிகாரம்’ என அழைக்கப்படுகின்றது. இந்தக் கைக்கடிகாரம் மரணமடையப் போகும் நேரத்தை கணித்துக் கூறுவது மட்டுமல்லாது மரணமாகும் கணத்தை கவுண்ட்- டவுன் செய்யவும் ஆரம்பிக்கிறது.


இந்த கைக்கடிகாரம் அதனை அணிந்துள்ளவரின் வயது, மருத்துவ பிரச்சினைகள் மற்றும் புகைப்பிடித்தல் பழக்கங்கள் என்பன தொடர்பான பல்வேறு கேள்விகளை உள்ளடக்கியுள்ளது. அந்தக் கேள்விகள் அனைத்துக்கும் பயன்பாட்டாளர் பதிலளித்ததும் அது அத்தகவல்களை பகுப்பாய்வு செய்து அவர் மரணமடையும் தருணத்தை கணக்கிட்டு எண்ண ஆரம்பிக்கிறது. இந்த ரிக்கர் கைக்கடிகாரத்தின் விலை 59 அமெரிக்க டாலராகும். இந்த கைக்கடிகாரமானது எஞ்சியுள்ள நம் வாழ்வின் அளவை அறிந்து அதனை பயனுள்ளதாக வாழ பயன்பாட்டாளர்களுக்கு உதவும் என பிரெடிக் கூறுகிறார்.


அத்துடன் விபத்து மற்றும் கொலை உள்ளிட்ட சம்பவங்கள் குறித்த வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் இறந்த நேரம் என்பது விசாரணைக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.ஆனால், தற்போதுள்ள முறையில் 
இறந்த நேரம் உத்தேசமாகவே  ‌கொடுக்கப்படுகிறது. 


இந்நிலையில் இறந்த நேரத்தை துல்லியமாக கணக்கிட இக்கடிகாரம் உதவும் என்றும் கூறுகிறார்.

Friday 11 October 2013

சர்வதேச எல்லையை கடக்கும் தமிழக மீனவர்களுக்கு ஸ்பெஷல் செல்போன்!


“வெகு காலமாக சர்வ தேச கடல் எல்லையை தமிழ்க் மீனவர்கள் தெரிந்தே கடந்து செல்கின்றனர் என்று ஒரு சாரார் கூறுவதுண்டு. ஆனால் அப்படி யாராவது போவதாக இருந்தாலும், நாங்கள் கண்டுபிடித்துள்ள கருவிகள் செல்போனில் எழுப்பும் அபாய ஒலி மூலம், அவர்களின் மன எண்ண ஓட்டங்களில், ஒரு கட்டத்தில் மாற்றங்கள் வரக்கூடும்.”என்று நம்பிக்கை தெரிவிக்கின்ற்னர் எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளையின் விஞ்ஞானிகள்.


11 - TEC FISH MOBIL

 


இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே சர்வதேச கடல் எல்லையில் பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது. கடல் எல்லையைக் கடந்து மீன் பிடிக்கும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் செல்வதும், பின்னர் தமிழகத்தில் இருந்து அரசும் அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்த பிறகு அவர்களை விடுவிப்பதும் தொடர்கதையாகிவிட்டது.


இந்தப் பிரச்சினைக்கு அறிவியல்பூர்வமான முற்றுப்புள்ளி வைப்பதற்கான ஆய்வுகளை, எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளையின் விஞ்ஞானிகள் எஸ்.வேல்விழி, ஸ்ரீநாத், டி.சுவிதா ஆகியோர் கொண்ட குழு மேற்கொண்டது. தற்போது செல்போன் மூலம் தகவல் பறிமாற்றம் செய்யும் தொழில்நுட்பத்தை இந்தக் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.


இதுகுறித்து கேட்டபோது வேல்விழி, ஸ்ரீநாத், சுவிதா ஆகியோர்,”மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளின் தீர்வுக்கான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். மீனவர்களுக்கு தேவையான தகவல் செல்லும் கிராம அறிவு மையம் என்ற திட்டம் 1998-ம் ஆண்டில் புதுச்சேரியில் தொடங்கினோம்.


மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் “இன்கோர்ஸ்” என்ற நிறுவனத்திடம் இருந்து, கடல் சம்பந்தப்பட்ட தகவல்களை அறிந்து ஒலிபெருக்கி மூலம் அறிவிப்போம். மீன் அதிகம் கிடைக்கும் பகுதி, காற்றின் வேகம், அலையின் உயரம், வானிலை ஆகியவை உட்பட்ட தகவல்கள் அதில் இருக்கும்.


தமிழகம், புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில், அந்தந்த மீன்பிடி பகுதிகளில் உள்ள சூழ்நிலைக்கு ஏற்ற தகவல்களை கொடுத்து வந்தோம். பின்னர் தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த நிலையில் உலக இடம் நிர்ணயக் கருவி (ஜி.பி.எஸ்.) பொருத்தப்பட்ட படகுகளுக்கு, தகவல்களை தமிழில் மொழி பெயர்த்து அனுப்பினோம்.


இந்த தகவல் பரிமாற்ற நடவடிக்கைகள் குறித்து மீனவர்களிடம் பரவலாக கருத்துகளைக் கேட்டு பெற்றோம். அவர்கள் கூறிய அம்சங்களையும் தொழில்நுட்பம் மூலமாக தகவல் பரிமாற்றத்தில் புகுத்தினோம்.
இதற்காக டாடா டெலி சர்வீசஸ் நிறுவனம், குவால் காம் மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை இணைந்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டோம். சி.டி.எம்.ஏ. தொழில்நுட்பப்படி, மீனவ நண்பன் கைபேசி- முதல் பாகம் என்ற திட்டத்தைத் தொடங்கினோம். இதில், டாடா போன் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் எழுத்துத் தகவல்கள், குரல் தகவல்கள் கிடைக்கும் நிலை இருந்தது.


எனவே அனைத்து மீனவர்களும் பயன்பெறும் வகையில் தற்போதுள்ள நவீன தொழில்நுட்பத்தின்படி, அதன் இரண்டாம் பாகம் என்ற திட்டத்தைத் டாடா கன்சல்டன்சி, குவால் காம் மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை இணைந்து தயார் செய்து வருகிறோம்.


இதன்படி, ஆண்ட்ராய்ட் 4.0 என்ற ஆபரேட்டிங் சிஸ்டம் மற்றும் 3ஜி இணைப்பு ஆகியவற்றைக் கொண்ட செல்போன்களில், நாங்கள் கொடுக்கும் அனைத்துத் தகவல்களையும் மீனவர்கள் பெற வகை செய்யப்பட்டுள்ளது.


அந்த செல்போன்களில் மீனவர்களுக்கான தனி “ஐ.கான்” கொடுக்கப்பட்டு இருக்கும். அதை கிளிக் செய்தால் அதிக மீன் பிடிக்க வாய்ப்புள்ள பகுதி, ஜி.பி.எஸ்., கடல்நிலை முன்னறிவிப்பு, வானிலை முன்னறிவிப்பு, மீனவர்களுக்கான அரசுத் திட்டங்கள், மீன் சந்தை விலைத் தகவல்கள், உள்ளூர் செய்திகள், முக்கிய தொடர்பு எண்கள் ஆகியவை இருக்கும்.
அதில் தேவையானதை கிளிக் செய்து தகவல் பெறலாம். யார் யார் எந்தெந்த பகுதிகளில் மீன் பிடிக்கிறார்களோ, அந்தந்த கடலில் நிலவும் சூழ்நிலைகளைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ளலாம். கடல் வழியாக வேறு மாவட்டத்துக்கு சென்றுவிட்டால்கூட, அந்தப் பகுதியின் விவரங்களையும் அறிய முடியும்.


அதுமட்டுமல்லாமல், மீன்களைப் பிடித்து வெளியே கொண்டு வரும்போது, அந்தந்த வகை மீன்களின் விலையை கடலுக்குள் இருக்கும்போதே அறிந்து கொள்ளலாம்.


இதுதவிர இலங்கை மற்றும் இந்திய கடல் எல்லையில் உள்ள அச்சரேகை, தீர்க்கரேகை ஆகியவற்றின் இருப்பிடத்தையும் பதிவு செய்து வைத்துள்ளோம். எனவே இந்த செல்போனை கொண்டு சென்றால், கடல் எல்லைக்கு 5 கி.மீ. தூரத்தில் வரும்போதே, செல்போன் அலறத் தொடங்கிவிடும். இதன் மூலம் கடல் எல்லையை காட்டித் தரப்பட்டுவிடும். அதற்கேற்ற தொழில்நுட்பத்தை அதில் புகுத்தி இருக்கிறோம்.


எனவே எல்லை குறித்த எச்சரிப்பை மீனவர்கள் அறிந்து அதற்கேற்றபடி செயல்படலாம். தற்போது ஒவ்வொரு பகுதியில் உள்ள 100 மீனவர்களுக்கு, 100 செல்போன்களை பரீட்சார்த்த முறையில் கொடுத்துள்ளோம். அவர்கள் அந்த செல்போன்களை பயன்படுத்திப் பார்த்து, மேலும் தகவல்களை சேர்க்கும்படி கேட்டுக்கொண்டால், அதையும் சேர்த்து தொழில்நுட்பத்தை முழுமையாக்குவோம்.


இந்தப் பணிகள் முடிவதற்கு 6 மாதங்கள் ஆகும். எனவே முழுமை அடைந்த பிறகு அந்த ஐ.கானை கூகுள் போன்ற இணையதளங்களில் இலவசமாக பதிவிறக்கம் செய்வதற்காக போட்டுவிடுவோம். எனவே நவீன வகை செல்போன் வைத்திருக்கும் அனைத்து மீனவர்களும் இந்த ஐ.கானை இலவசமாக பதிவிறக்கம் செய்து பயனடையலாம்.


கடல் எல்லையை மீனவர்கள் தெரிந்தே கடந்து செல்கின்றனர் என்று ஒரு சாரார் கூறுவதுண்டு. ஆனால் அப்படி யாராவது போவதாக இருந்தாலும், இதுபோன்ற கருவிகள் எழுப்பும் அபாய ஒலி மூலம், அவர்களின் மன எண்ண ஓட்டங்களில், ஒரு கட்டத்தில் மாற்றங்கள் வரக்கூடும்.கடல் எல்லை என்பது, கண்ணினால் தெரியும் அளவுக்கு ஏற்படுத்தவில்லை. தெரியாமல் எல்லையைக் கடந்து செல்லும் மீனவர்களுக்கு உயிர்காக்கும் தோழனாக இந்த செல்போன் இயங்கும்.” என்று தெரிவித்தார்கள்.


Mobile phones distributed to fishermen

******************************* 


Small mechanised boat fishermen of a couple of coastal villages in the district will enjoy a few extended benefits of safe fishing — by getting forecast information about the rough sea, bad weather; they can access information about their exact location in the waters thereby avoiding any trespassing in to the international marine boundary line. Further, they will get to know the information about marketing techniques.

Thursday 10 October 2013

HTC டிசயர் 500 ரூ.21.490 விலை-க்கு இந்தியாவில் அறிமுகம்!




HTC நிறுவனம் அதன் டிசயர் 500 ஸ்மார்ட்போன் ரூ 21.490 விலை-க்கு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், சாதனத்தில் இரட்டை சிம் ஆதரவுடன் கிடைக்கும்.


HTC டிசயர் 500 ஸ்மார்ட்போன் அம்சங்கள்:


1.2GHz Quad-core செயலி,


4.3 இன்ச் காட்சி,


8MP முதன்மை கேமரா,


1.6MP முன் எதிர்கொள்ளும் கேமரா,


4GB உள் நினைவகம்,


1GB ரேம்,


ஆடியோ பீட்ஸ்,


1,800 Mah பேட்டரி,


microSD 64GB வரை ஆதரிக்கும்,


அண்ட்ராய்டு 4.2 (ஜெல்லி பீன்) ஓஎஸ் இயங்குகிறது.




சாம்சங் நிறுவனம் இந்தியாவில் மூன்று புதிய அல்ட்ரா HD டிவி அறிமுகம்!




சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் அதன் F9000 வரம்பின் கீழ் இந்தியாவில் மூன்று புதிய அல்ட்ரா உயர் வரையறை (Ultra High-Definition) தொலைக்காட்சிகளை வெளியிட்டுள்ளது. இந்த தொலைக்காட்சிகள் நான்கு மடங்கு முழு HD தொலைக்காட்சி தீர்மானம் கொண்டுள்ளன மற்றும் 55 இன்ச், 65 இன்ச் மற்றும் 85 இன்ச் ஆகிய மூன்று அளவுகளில் வந்துள்ளது.


இந்நிறுவனம் 55 இன்ச் தொலைக்காட்சி ரூ.3.29 லட்சமும் மற்றும் 65 இன்ச் தொலைக்காட்சி ரூ.4,39 லட்சமும், 85 இன்ச் மாடல் ரூ.28 லட்சத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், சாம்சங் புதிய F9000 UHD தொலைக்காட்சிகளில் துல்லிய பிளாக் புரோ தொழில்நுட்பம் மற்றும் மைக்ரோ அல்டிமேட் டிம்மிங்கால் அம்சம் பயன்படுத்தப்படுகிறது. இந்த புதிய சாம்சங் UHD தொலைக்காட்சிகள் கேமரா, வீடியோ chat திறன் மற்றும் மொபைல் சாதனங்கள் கொண்டு வயர்லெஸ் மூலம் screen mirroring-க்கு பகிர்ந்துகொள்ளலாம்.  

Monday 7 October 2013

களஞ்சியம் இலவச அகராதி!


இணைய இணைப்பு இல்லாமல், சிறிய பைல் ஒன்றினை இயக்குவதன் மூலம், ஆங்கிலம்- தமிழ், ஆங்கிலம்- ஆங்கிலம் மற்றும் தமிழ்-தமிழ் எனப் பல்முனை அகராதி ஒன்றை நம் டெஸ்க் டாப்பில் வைத்துப் பயன்படுத்தும் வகையில், மென்பொருள் ஒன்று இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. இதன் பெயர் ""களஞ்சியம் அகரமுதலி''. இதற்கான மூல கோப்பு கிடைக்கும் தள முகவரி 


www.ekalai.com/kalanjiyam/dowload/.
 


இந்த தளத்திற்குச் சென்றவுடன் அகராதிக்கான கோப்பாக KalanjiamDictionarySetup என்ற கோப்பு கிடைக்கிறது. இதன் அளவு ஏறத்தாழ 189 எம்.பி. ஆகும். இதனை டவுண்லோட் செய்து, பின்னர் அதன் மீது டபுள் கிளிக் செய்திட, அகராதி நம் கம்ப்யூட்டரில் பதியப்படுகிறது. அகராதியைப் பயன்படுத்த, கண்ட்ரோல் + டில்டே(கீ போர்டில் எண் 1 கீக்கு முந்தைய கீ) (Ctrl+~) கீகளை அழுத்த வேண்டும். பயன்படுத்திய பின்னர், அகராதிக் கட்டம் தாண்டி, திரையில் கிளிக் செய்தால், டாஸ்க்பாரில் அகராதி சென்று அமர்ந்துவிடும். மீண்டும் தேவை எனில், டாஸ்க் பாரில் கிளிக் செய்து பெறலாம். அல்லது மீண்டும் மேலே குறிப்பிட்ட இரு கீகளை அழுத்த வேண்டும்.


இதனைக் கணிப்பொறியில் இயக்கி வைத்துள்ள நிலையில், எந்த அப்ளிகேஷன் புரோகிராமில் உள்ள சொல்லையும் தேர்ந்தெடுத்து, உடன் கண்ட்ரோல் + டில்டே கீகளை அழுத்தினால், அகராதி திரையில் தரப்பட்டு அதற்கான பொருள் தரப்படுகிறது. எந்த நேரத்திலும், இதே கீகளை அழுத்தினாலும், அகராதியில் பொருள் தேடும் கட்டம் விரிகிறது. 



வழக்கமான இரு மொழிகளுக்கிடையேயான அகராதியாக இல்லாமல், மேலே குறிப்பிட்டபடி, பலமுனை அகராதியாக இது அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஏறத்தாழ 2 லட்சம் தனிச் சொற்கள் இருப்பதாக, இதனைத் தரும் இணைய தளம் அறிவித்துள்ளது. அத்துடன், இணைப்பு சொற்களாக, 40 லட்சம் சொற்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. 



இந்த அகராதியை இயக்கியவுடன், இதனைப் பயன்படுத்தக் கிடைக்கும் இடைமுகம் மிகவும் எளிதாகச் செயல்படும்படி அமைக்கப்பட்டுள்ளது. முதலில் எந்த அகராதியைப் பயன்படுத்தப் போகிறோம் என்பதனைத் தேர்ந் தெடுக்க வேண்டும். முன்பே குறிப்பிட்டபடி, ஆங்கிலம்-தமிழ், தமிழ்-தமிழ் மற்றும் ஆங்கிலம்- ஆங்கிலம் என மூன்று வகையான அகராதிகள் கிடைக்கின்றன.



இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, பின்னர், சொல் அமைக்கும் கட்டத்தில், சொல்லை அமைக்க வேண்டும். தமிழ்ச் சொல்லுக்குப் பொருள் தேவை எனில், Type in Tamil என்பதில் டிக் கிளிக் செய்து, Look up என்பதற்கு அருகே உள்ள கட்டத்தில் சொல்லை அமைக்கலாம்.



 தமிழ்ச் சொற்களை உள்ளீடு செய்திட அஞ்சல்/போனடிக் எனப்படும் ஒலி சார்ந்த கீபோர்ட் முறை பயன்படுத்தப்படுகிறது. பின்னர் தேடு (Search) என்ற கட்டத்தில் கிளிக் செய்தால், கீழே உள்ள கட்டத்தில் சொல்லுக்கான அனைத்து நிலை பொருளும் தரப்படுகிறது. சொல் இலக்கணப்படி எந்த வகையைச் சேர்ந்தது (Verb/ Noun/Adjective.) எனக் காட்டப்பட்டு பொருள் தரப்படுகிறது. வலது பக்கம் உள்ள கட்டத்தில், அந்த சொல் சார்ந்த சொற்களும் தரப்படுகின்றன. 


எடுத்துக்காட்டாக, Computer என்ற சொல்லைத் தந்த போது Compute, Key, laptop, monitor, mouse, processor, type, usb ஆகிய சொற்கள் அக்கட்டத்தில் காட்டப்பட்டன.இந்த சொற்களில் ஏதேனும் ஒன்றுக்குப் பொருள் பெற விரும்பினால், இந்தக் கட்டத்தில் அதன் மீது கிளிக் செய்தால் போதும். பொருளைத் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பெறலாம். இரண்டும் வெவ்வேறு வண்ணத்தில் தரப்படுவது, முதல் முறையாகப் பொருளைப் படிப்பவருக்கு கூடுதல் வசதியைத் தருகிறது. 


பொருள் தரும் கட்டத்தின் கீழாக, Image, Nearest, Synonyms, Antonyms என்று நான்கு டேப்கள் அமைக்கப்பட்டு ஒரு கட்டம் கிடைக்கிறது. இதில் Image என்பது தேர்ந்தெடுக்கப்பட்டால், சொல்லுக்கான படம் காட்டப்படுகிறது. 3,000க்கும் அதிகமான படங்கள் இந்த அகராதியில் தரப்பட்டுள்ளன. மேலும், ஒரு நாட்டின் பெயரை, சொல் தேடும் கட்டத்தில் அமைத்துத் தேடினால், கீழாக, அந்த நாட்டுடன் உலக வரைபடம், நாட்டின் வரைபடம், அதன் தேசிய கொடி ஆகியவை காட்டப்படுகின்றன. இது பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குத் தேவையான ஒன்றாகும்.


இதே போல, தொழில் நுட்ப சொற்களைத் தந்தால், அது வழக்கமான அகராதியிலிருந்து தரப்படாமல், Glossary என்ற பகுதியிலிருந்து அதற்கான பொருள் தரப்படுகிறது. எடுத்துக் காட்டாக, கணிப்பொறி இயல் துறையில் வழங்கப்படும் WYSIWIG என்ற சொல்லைக் கொடுத்துப் பாருங்கள். தனியே அதற்கான விளக்கமும், தமிழில் பொருளும் கிடைக்கும்.



Nearest என்ற கட்டத்தின் கீழாக, பொருளை ஒட்டிய மற்ற சொற்களும், Synonyms என்பதன் கீழ் அதே பொருள் தரும் சொற்களும் மற்றும் Antonyms என்ற பிரிவில், எதிர்ப்பதங்களும் தரப்படுகின்றன. 



இதே போல, வினைச்சொல் ஒன்றைத் தந்தால், வலதுபுறம் கீழாகத் தரப்பட்டுள்ள கட்டத்தில், அந்த வினைச்சொல்லுக்கான இறந்த, நிகழ், எதிர்கால வினை குறிக்கும் சொற்கள் தரப்படுகின்றன. 



தமிழ்ச் சொல்லை உள்ளிட, ஒலி அடிப்படையிலான அஞ்சல் கீ போர்ட் செயல்முறை தரப்பட்டுள்ளதால் எளிதாகவும், விரைவாகவும் அனைவரும் சொல்லை இட முடிகிறது. தமிழ்ச் சொல்லைத் தந்துவிட்டு, ஆங்கிலம்- தமிழ் அகராதிப் பிரிவைத் தேர்ந்தெடுத்தால், அதற்கான ஆங்கிலச் சொற்களுடன் விளக்கம் தரப்படுகிறது. தமிழ்-தமிழ் என்ற அகராதிப் பிரிவினைத் தேர்ந்தெடுத்தால், பொருளும், சார்ந்த தமிழ்ச் சொற்களும் தரப்படுகின்றன. 



எடுத்துக் காட்டாக, கிணறு என்ற சொல்லைத் தந்த போது, தமிழ்-தமிழ் அகராதியில், அசும்பு, உறவி, குழி, கூபம், கூவல், பூவல் மற்றும் கேணி என்ற வகையில் பொருட் சொற்கள் தரப்படுகின்றன. அதே நேரத்தில், சார்ந்த ஆங்கிலச் சொற்களும் தனிக் கட்டத்தில் கிடைக்கின்றன.


ஆங்கிலம்- ஆங்கிலம் அகராதியைத் தேர்ந்தெடுத்து சொல் ஒன்றுக்குப் பொருள் பார்க்கையில், பொருளுடன், அந்தச் சொல்லை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என எடுத்துக் காட்டு வாக்கியங்கள் தரப்படுகின்றன.



எந்த சொல்லைக் கொடுத்தாலும், தேடல் கட்டத்தின் வலது மூலையில் உள்ள அம்புக் குறியினைக் கிளிக் செய்தால், சார்ந்த சொல் பட்டியல் கிடைக்கிறது. பட்டியலில் உள்ள சொல்லையும் கிளிக் செய்து பொருள் பெறலாம்.




இந்த அகராதியின் இன்னொரு தனிச் சிறப்பு என்னவெனில், நாம் உள்ளிடும் சொல்லை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதற்கும் உள்ள வசதியினைக் கூறலாம். சொல்லை அமைத்துவிட்டு, அருகே உள்ள ஸ்பீக்கர் ஐகானில் கிளிக் செய்தால், சொல் உச்சரிக்கப்படுகிறது. தமிழ்ச் சொற்களும் சற்று வித்தியாசமாக உச்சரிக்கப்படுகின்றன. 



புதியதாக ஓர் சொல்லை இந்த அகராதியில் தேடுகையில் கிடைக்கவில்லை எனில், அதன் பொருளைத் தேடி அறிந்து, இந்த அகராதியில் உள்ளீடு செய்திடும் வசதி கொடுக்கப்பட்டிருப்பது இதன் இன்னொரு சிறப்பு. மிகச் சிரமப்பட்டு உருவாக்கி, இலவசமாக, தமிழ்ச் சமுதாயத்திற்கு, இந்த அகராதியினைத் தந்திருக்கும் கம்ப்யூட்டர் வல்லுநர் சேகர் பாராட்டுக்குரியவர். 



இவர் தன் முறையான கல்வியை 10ஆம் வகுப்போடு முடித்துக் கொண்டவர். கணிப்பொறி இயலில் ஆர்வம் இருந்ததன் காரணமாக, தானே கணிப்பொறி மொழிகளைக் கற்று, இப்படி ஒரு படைப்பினைத் தந்துள்ளார். ஆர்வம் இருந்தால், யாரும் எதனையும், கல்வி நிலையங்கள் செல்லாமலேயே படிக்கலாம் என்பதற்கு இவர் ஓர் எடுத்துக்காட்டு. நன்றியும் வாழ்த்துக்களும் சேகர்.

Saturday 5 October 2013

LG அறிமுகப்படுத்தும் Vu 3 Phablet சாதனம்!










LG நிறுவனமானது Vu 3 Phablet எனும் சாதனத்தை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.


கூகுளின் Android 4.2.2 Jelly Bean இங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இச்சாதனமாது 5.2 அங்குல அளவுடையதும் 1280 x 860 Pixel Resolution உடையதுமான IPS தொடுதிரையினைக் கொண்டுள்ளது.


மேலும் 2.26GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Quad Core Qualcomm Snapdragon 800 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியனவும் காணப்படுகின்றன.
இவற்றுடன் 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் 2.1 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.


LG Vu 3 handled shortly in first hands-on videos


 LG recently unveiled a new version of its Vu 3 phablet. With a characteristic 4:3 screen, it stands apart from the flood of 16:9 and 16:10 devices. It's quite a capable phablet, borrowing a number of features from the LG G2 flagship, some of which can be seen in the first hands-on videos of the device.
 
The first video shows KnockOn – a way to wake or lock the device without needing to hit the power button (even though it's not on the back like on the G2). You just double tap the screen.
Then there's a quick peek at the LG Vu 3's dual shot camera – it can do a picture-in-picture photo with its 13MP camera on the back and the front-facing camera.


The LG Vu 3 also packs a powerful Snapdragon 800 chipset, a stylus that sheaths into the phablet's body, LTE-Advanced connectivity, Guest mode, and will have translucent QuickView covers.


 




Thursday 3 October 2013

QR கோட்டினை சுயமாகவே உருவாக்கும் Google Docs!






 



சில இரகசியத் தரவுகள் உட்பட இணையத்தளங்களை மொபைல் சாதனங்கள் மூலம் விரைவாக பயன்படுத்துவதற்கு QR கோட் உதவிபுரிகின்றது.


இந்த QR கோட்டினை உருவாக்குவதற்கு விசேட மென்பொருட்கள், ஒன்லைன் இணையத்தளங்கள் காணப்படுகின்றன.



அதேபோன்று கூகுளின் பிரபல சேவைகளுள் ஒன்றான Google Docs இலும் QR கோட்டினை சுயமாகவே உருவாக்கிக்கொள்ளும் வசதி காணப்படுகின்றது.


இதனை விளக்கும் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது, அதனை இங்கே காணலாம்.

Jolla அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி!




Jolla எனும் நிறுவனமானது தனது முதலாம தலைமுறை ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.5 அங்குல அளவு மற்றும் 960 x 540 Pixel Resolution உடைய HD தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது 1.4 GHz வேகத்தில் செயலாற்றவல்ல Snapdragon Processor, பிரதான நினைவகமாக 1 GB RAM ஆகியவற்றினை உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது.



141 கிராம் நிறையுடைய இப்புதிய கைப்பேசியில் 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் 2 மெகாபிக்சல்களை உடைய துணையான கமெரா போன்றனவும் காணப்படுகின்றன. 


இவற்றில் காணப்படும் 2100 mAH மின்கலமானது 3G வலையமைப்பு தொடர்பாடலின்போது தொடர்ச்சியாக 8 மணித்தியாலங்களுக்கு மின்னை வழங்கக்கூடியவாறு இருக்கின்றது. 


மேலும் இதன் விலையானது 400 யூரோக்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Smart Phone களுக்கு போடுகின்ற Lock’ஐ கணனியில் போட வேண்டுமா?







Android Phone களுக்கு போடுகின்ற லொக்கை (Lock) எமது கணனியிலும் போடலாம். இந்த Lock ஆனது Android போன்களுக்கான lock ஆகும். அதிகமானோருக்கு இந்த Android Lock பற்றி தெரியும்.


ஆனால் கணனிகளுக்கு இவ்வாறான Lock போடுவது பற்றி அநேகமானோருக்கு தெரியாமல் இருக்கலாம்.


இந்த Lock இல் நிறைய விடயங்கள் இருக்கின்றன. அதை Settings பகுதியில் சரி செய்து கொள்ளலாம். இந்த lock இன் Password ஐ மூன்று தடவை தவறுதலாக கொடுத்ததால் Alarm ( அலாரம் ) அடிக்கும். ஒரு நிமிடத்தின் பின்னர் நின்றுவிடும்.


இதற்கு Key கொடுப்பது எளிது. Key கொடுக்க வேண்டிய இடத்தில் இரண்டு அல்லது மூன்று முறை தவறுதலாக கொடுங்கள் பின்னர் தானாக License Active ஆகிடும்.



Saturday 28 September 2013

ஆப்பிள் நிறுவனம் புதிய ios7.0.2 மேம்படுத்தல் வெளியீடு!



ஆப்பிள் நிறுவனம் ஐபோன், ஐபேட் மற்றும் ஐ பேட் டச் சாதனத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ios7 அல்லது ios7.0.1 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை மேம்படுத்தப்பட்டு(updates) புதிய ios7.0.2 என்ற புதிய ஆப்ரேட்டிங் சிஸ்டம் அறிமுகப்படுத்தியுள்ளது.


ios7 வெளியீட்டுக்குப் பிறகு லாக் ஸ்கிரீன் சிக்கல்களை மேம்படுத்தப்பட்டு சரி செய்துள்ளது. ஐபோன் 5-ல் 21MB பதிவிறக்கம் செய்யக்கூடியதாக ios7.0.2 மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் போன் லாக் ஸ்கிரீன் சிக்கல்கள் ஏற்படும் போதும் ஐபோன் வாடிக்கையாளர் மற்றொருவர்களுக்கு அழைக்ககூடியதாக மேம்படுத்தப்பட்டுள்ளது.



ஐபோன் சாதனத்தில் போன் லாக் ஸ்கிரீன் சிக்கல்கள் இருக்கும் போது கூட எமர்ஜென்சி கால் (emergency call) அழைப்பினை மட்டும் ஏற்கக்கூடியதாக இல்லாமல் சாதனத்தில் இருக்கும் நம்பர்களை அழைக்கக்கூடியதாக மேம்படுத்தப்பட்டுள்ளது. NULL dereferences என்ற சிக்கல்களை சரி செய்வதற்காக இந்த புதிய 7.0.2 ஆப்ரேட்டிங் சிஸ்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

iphone 5S hack செய்ய முடியுமா! அட கடவுளே!






திருடர்களை விட ஒருபடி மேலேயே யோசிக்கிறாங்களே….



அண்மையில் ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஐபோன் 5-ல் கைரேகை ஸ்கேனிங்க் மூலம் பாதுகாப்பு வசதி அளித்துள்ளது.



ஐபோனை ஆக்சஸ் செய்வதற்கென கைரேகையை வழங்கினால் மாத்திரம் பயன்படுத்த கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. எனினும் ஒருசில நாட்களிலேயே இப்பாதுகாப்பு வசதியை தாம் உடைத்துவிட்டதாக தற்போது அறிவித்துள்ளனர் ஜேர்மனிய ஹேக்கர் குழுவினர்.



கைரேகையை படம்பிடித்து அதியுயர் தரத்தில் கிளாஸ் ஒன்றில் பதிவு செய்துள்ளனர். பின்னர் அதைக்கொண்டே ஐபோனை இயக்குவது போன்ற வீடியோ காட்சிகள் வெளிவந்துள்ளன.


Friday 27 September 2013

புதிய தலைமுறை கணனியை கண்டுபிடித்து இந்திய விஞ்ஞானி !!



உலகிலேயே முதன்முறையாக உலோகமற்ற கரிம நுண் குழாய் (கார்பன்-நானோடியூப்) மூலம் புதிய தலைமுறை கணனியை உருவாக்கி அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.



அமெரிக்காவில், இந்திய வம்சாவளி விஞ்ஞானி சுபாஸிஷ் மித்ரா தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினரே இந்த சாதனையை படைத்துள்ளர்.



சிலிக்கானைவிட மேம்பட்ட கார்பன் நானோடியூபுகளால் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கணனி, மின்னணுவியல் பயன்பாட்டில் புதிய அத்தியாயமாகும்.



குறைந்த ஆற்றலில், மிக வேகமான செயல்திறனை இந்தக் கணினி பெற்றிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.



இது குறித்து ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக மின்னியல் பொறியாளரும், கணிப்பொறி விஞ்ஞானியுமான சுபாஸிஷ் மித்ரா கூறுகையில்,


“புதிய சாகாப்தத்தைச் சேர்ந்த கார்பன் நானோடியூப், சிலிக்கானைவிட சிறப்பானது என பேசப்பட்டு வந்தது.



அந்த நம்பிக்கையை நிரூபிக்கும் வகையில், அந்த கணினியில் நடத்தப்பட்ட தொழில்நுட்ப பரிசோதனைகள் அமைந்துள்ளன’ என்றார்.


Thursday 26 September 2013

நோக்கியா Lumia 1020 அக்டோபர் 11-ம் தேதி இந்தியாவில் அறிமுகம்!






நோக்கியா நிறுவனம் அதன் புதிய நோக்கியா Lumia 1020 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. நோக்கியா Lumia 1020 அக்டோபர் 11-ம் தேதி முதல் நாடு முழுவதும் சில்லறை விற்பனையாளர்களிடம் கிடைக்கும். நோக்கியா Lumia 1020 ஒரு 4.5-அங்குல டிஸ்ப்ளே கொண்டுள்ளது.


பிளாக் வெள்ளை மற்றும் மஞ்சள் போன்ற மூன்று வண்ணங்களில் புதிய Lumia 1020  கிடைக்கும்.  மேலும், இரண்டு அக்சசரி பாகங்கள் கொண்ட Lumia 1020  இந்தியாவில் அறிவிக்கப்பட்டுள்ளது. நோக்கியா கேமரா கிரிப் ரூ.7,500  மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஷெல் ரூ.3,200 விலையில் கிடைக்கும்.



நோக்கியா Lumia 1020 அம்சங்கள்:



768x1280 தீர்மானம் கொண்ட 4.5 அங்குல AMOLED ClearBlack டிஸ்ப்ளே


1.5GHz dual-core குவால்காம் ஸ்னாப்ட்ராகன் S4 processor


2GB RAM


உள்ளக சேமிப்பு 32GB


41-மெகாபிக்சல் PureView பின்புற கேமரா


1.2-மெகாபிக்சல் வைட் ஆங்கிள் முன் கேமரா


விண்டோஸ் போன் 8


2,000 Mah பேட்டரி


Nokia introduced the new Nokia Lumia 1020 smartphone

தங்க நிறத்தில் சாம்சங் கேலக்ஸி S4 அறிமுகம்!




சாம்சங் நிறுவனம் அதிரடியாக தங்க நிறத்தில் சாம்சங் கேலக்ஸி S4 அறிமுகப்படுத்தியுள்ளது. தங்க பிரவுன் அல்லது தங்க பிங்க் - தங்க கேலக்ஸி S4s இரண்டு வண்ணங்களில் கிடைக்கும். பிங்க் மற்றும் ப்ரவுன் போன்களில் தங்க நிறத்தில் பின் தகடு கொண்டுள்ளது.



சாம்சங் விலை அல்லது கிடைக்கக்கூடிய தகவல்களை வெளியிடவில்லை. அவை தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சந்தையில் மட்டும் கிடைக்கும். இது மத்திய கிழக்கு சந்தைகளில் விற்பனை செய்ய இலக்காக உள்ளது போல் தெரிகின்றது.



Monday 23 September 2013

வேகம் கூடிய இணைய உலாவி வெளியிட்டது மைக்ரோசொப் ( IE 11 )!


                                            
                                                     

இயங்குதள உற்பத்தியில் முன்னணியில் திகழும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட இணைய உலாவியே Microsoft Internet Explorer ஆகும்.


உலகில் அதிகளவான பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் இணைய உலாவிகளில் ஒன்றான இதன் புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


Microsoft Internet Explorer 11 எனும் இப்பதிப்பானது முன்னைய பதிப்புக்களை விடவும் 30 சதவிகிதம் வேகம் கூடியதாகக் காணப்படுகின்றது.
எனினும் இந்த உலாவியானது விண்டோஸ் 7 இயங்குதளத்தில் பயன்படுத்தக்கூடியவாறே வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

Thursday 19 September 2013

ஆப்பிள் – ஐ ஓ எஸ் -7 முதல் தமிழ் ரெவ்யூ!


2007க்கு பிறகு ஆப்பிளின் ஒரு திருப்தியான சேவை இந்த ஐ ஓ எஸ் தான். அப்படி ஒரு நேர்த்தி. என்னை போல பல டெவலப்பருக்கு தெரியும் 1 வருடம் முன்பே இது ரெடியானாலும் இதை நன்கு சோதனையோட்டம் செய்தே இன்று லான்ச் செய்திருக்கின்றனர். ஒரு புது ஐ ஃபோனை வைத்திருப்பதை போல் மகிழ்ச்சியான அனுபவம் ஐ ஓ எஸ் 7.


இதன் பயன்கள் பல இருப்பதால் – முக்கியமானதை மட்டும் பார்ப்போம்.
1. முதலில் இதன் கலர்கள் மிகவும் கண்ணை பறிக்கும் வகையில் அமைக்கபட்டிருக்கிற்து.


2. ஒவ்வொரு ஐகானும் புது மாதிரி செய்திருக்கிறார்கள், அதனால் அந்த பழைய ஐகான் இல்லவே இல்லை.


3. ஆப் ஸ்வாப் எனப்படும் ஒவ்வொரு ஆப்பின் நடுவே இன்னொரு ஆப்பை இயக்கும் ஸ்மூத் டிரான்ஸிஷன்.


sep 19 ravi phone
 


4. ரொட்டேஷன் லாக் ஐ போட் போன்று இதற்க்கு உள்ளதால் இனிமேல் ஆப் சங்கு சக்கரம் மாதிரி சுத்தாது.


5. டூ நாட் டிஸ்டர்ப் – ஒரு செம்மை ஆப்ஸ் – பல பேர் அருகில் இருந்தும் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பார்கள்.


6. ஏர் டிராப் எனப்படும் ஒரு வசதி நெட்வொர்க்கில் இருக்கும் யாருக்கும் மெயில் இல்லாமலே ஃபைல்களை அனுப்ப முடியும்.


7. சிரி எனப்படும் ஐஃபோனின் சக்காளத்தி இனிமேல் மனித குரலில் பேசும் மற்றும் உங்கள் குரலை எளிதாக அடையாளம் கண்டுகொள்ளும்.


8. சஃபாரி பிரவுசர் இனிமேல் ஒரே பிரவுசரில் மற்ற பக்கங்கள் தெரியும் வண்ணம் அது போக ஆட் நியூ பேஜ் தொல்லை இல்லை.


9. கேமரா இன்டர்ஃபேஸ் கலக்கலாய் உள்ளதால் புதுசா படம் பிடிக்கிறவங்க கூட பி சி ஸ்ரீ ராம் கண்க்கா பிடிக்கலாம் ரெடி ஆப்ஸ் அதில் டிங்கரிங் பட்டி பார்க்கலாம் வேறு ஆப்ஸ் இல்லாமல்.


10.ஃபோட்டோக்கள் இனிமேல் எந்த எடத்தில் எடுத்தோம் என கவலைஇல்லாமல் மேப்பில் இந்த படங்கள் இங்கே எடுக்கபட்டது என கூறூம். இன்ஸ்டாகிராமும் டோட்டல் சேஞ்ச ஓவர்


11. ஐ டியூன்ஸ் ரேடியோ – சூப்பர் இலவச ரேடியோ ஆப் மிகவும் குறைந்த பேன்ட்வித்தில் இயங்குகிறது – அதே போல் இதன் உபயோகம் அமெரிக்கா மக்களுக்கு மட்டுமே – கூடிய சீக்கிரம் அனைத்து நாட்டுக்கு தனி தனியே வருகிறது.


12. நோட்டிஃபிக்கேஷன் சென்ட்டர் எனப்படும் தகவல் பலகை – நீங்கள் ரெகுலராய் பார்க்கும் இன்றைய வானிலை / ஷேர் மார்க்கெட் நிலவரம் / மிஸ் கால்ஸ் / அப்பாயின்ட்மென்ட் என அத்தனையும் ஒரே ஆப்ஸில் காட்டும் நல்ல டைம் மேனேஜ்மென்ட் சாஃப்ட்வேர்.


13. ஆப்ஸ் ஸ்டோர் – ஃபைன்ட் மை ஐஃபோன் எனப்படும் ஆப்ஸ் மூலம் தொலைந்த ஃபோன் மற்றூம் அனைத்து ஆப்ஸும் ஒரே இடத்தில் சங்கமம்.


14. கலர்ஃபுல் வால்பேப்பர்ஸ் – மிக அழகாக கண்ணை பறிக்கும் டிரான்ஸ்பரன்ட் மற்றூம் முழு கலர் வால்பேப்பர்ஸ் மிக அற்புதமான சேவை.


15. பேட்டரி லைஃப் – இதில் 11% வரை பேட்டரியை சேமிக்கலாம் என கூறுகின்றனர் ஆனால் டெக்னிக்கள் பர்ஸனாய் இது 3ஜி எஸ் / 4 / 4 எஸ் இதில் முடியாது ஒன்லி ஃபர்ம் ஆப்பிள் 5 அன்ட் 5 எஸ் மட்டுமே முடியும்.

Tuesday 17 September 2013

முழுப்பக்க ஸ்கிரீன் ஷாட் பெறுவதற்கு!



இணையப் பக்கம் ஒன்றின் ஸ்கிரீன் ஷாட் வேண்டுமென்றால், அது முழுமையாகக் கிடைக்காது. ஸ்கிரீனில் தெரியும் பகுதி மட்டுமே கிடைக்கும். முழுமையாகக் கிடைக்க வேண்டும் எனில், இதற்கான தேர்ட் பார்ட்டி புரோகிராம் தேவை.


 ஒவ்வொரு பிரவுசருக்குமான இத்தகைய புரோகிராம் இணையத்தில் கிடைக்கிறது. 


Screen grab for Firefox பயர்பாக்ஸ் பிரவுசருக்கும்,


 IE Screenshot இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கும், 


Talon குரோம் பிரவுசருக்கும் இணையத்தில் கிடைக்கின்றன. 



கூகுள் சென்று இவை இருக்கும் தளம் அறிந்து டவுண்லோட் செய்து பயன்படுத்தவும்.

Click Here

தமிழைத் தாங்கி வந்த புதிய ஐபோன்கள்!





பல மாதங்களாக எதிர்பார்த்த, புதிய ஐபோன் 5, சென்ற செப்டம்பர் 10 அன்று, கலிபோர்னியாவில் தன் தலைமை அலுவலகத்தில், ஆப்பிள் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. அதே நேரத்தில், ஜப்பான் மற்றும் சீனாவிலும் இந்த போன் அறிமுகப்படுத்தப்பட்டது. “எதிர்காலத்திற்கான சிந்தனை யோடு, இதுவரை எவரும் தர முடியாத மொபைல் போன் இது” என ஆப்பிள் நிறுவனம் இது பற்றிக் கூறியுள்ளது. ஆனால், தமிழர்களுக்கு இது உண்மையிலேயே இதுவரை எவரும் தராத போனாகத்தான் உள்ளது. போனிலேயே தமிழ் உள்ளீடு செய்திடும் செயல்பாடு தரப்பட்டுள்ளது. இதில் இயங்கும் ஐ.ஓ.எஸ் 7 என்னும் ஆப்பிள் நிறுவனத்தின் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தமிழ் மொழிச் செயல்பாட்டினையும் உள்ளடக்கியாதாக உள்ளது. இது தமிழுக்குப் பெருமையாகும். இது குறித்து இங்கு விரிவாகக் காணலாம்.



ஐ போன் 5 எஸ் மற்றும் குறைந்த விலை போனாக ஐபோன் 5சி என இரு மாடல்கள் வெளியாகி உள்ளன. ஐபோன் 5 எஸ், 16, 32 மற்றும் 64 ஜிபி என மூன்று மாடல்களில், தங்கள், வெள்ளி மற்றும் ஸ்பேஸ் கிரே வண்ணங்களில் கிடைக்கும். அமெரிக்காவில், இரண்டாண்டு மொபைல் சேவை நிறுவன ஒப்பந்தத்துடன் இவை 199, 299 மற்றும் 399 டாலர் கட்டணத்தில் கிடைக்கும். நிறுவன ஒப்பந்தம் இல்லாமல், அமெரிக்காவில், 16 ஜிபி போன் 549 டாலர், 32 ஜிபி 649 டாலர் என விலையிடப்பட்டுள்ளது. ஐபோன் 5சி, ஒப்பந்தக் கட்டுப்பாடு இல்லாமல், 549 டாலர் என விலையிடப்பட்டுள்ளது. பட்ஜெட் விலை போன் என்று கூறியதெல்லாம் சும்மா என மக்கள் பேசத் தொடங்கிவிட்டனர்.


மற்ற நாடுகளில் இந்த போன்களின் விலை, இவை சந்தைக்கு வரும்போது தெரியவரும். செப்டம்பர் 20 முதல், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, சீனா, பிரிட்டன் மற்றும் பிற நாடுகளில் இவற்றை வாடிக்கையாளர்கள் வாங்கிக் கொள்ளலாம். இந்த போன்களுடன் ஐ.ஓ.எஸ்.7 என்னும் புதிய மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, ஆப்பிள் நிறுவனம் வழங்குகிறது. முதன் முதலாக, தன் ஐ.ஓ.எஸ். சிஸ்டத்தில் பெரிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. வரும் செப்டம்பர் 18 முதல் இது டவுண்லோட் செய்திடக் கிடைக்கும். ஐபோன் 4, ஐபேட் 2, ஐபேட் மினி, மற்றும் ஐபாட் டச் ஆகியவற்றில் இயங்கும்.


2007 ஆம் ஆண்டு, முதல் ஐபோன் வெளியானது. இதில் இயங்கும் மொபைல் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டம், ஐ.ஓ.எஸ்.7 என்ற பெயரில், புதிய வடிவத்தில், நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் தற்@பாது வெளிவருகிறது. தற்போதைய ஆப்பரேட்டிங் சிஸ்டம், ஏழாவது ஜெனரேஷன் என்பதால், இதற்கு ஐ.ஓ.எஸ்.7 எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் 200 புதிய வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன. புதிய பயனாளர் இண்டர்பேஸ், அறிவிப்பு மையம், விரைவாக அணுக்கம் பெற கட்டுப்பாடு மையம் என இதில் பல விஷயங்கள் புதியதாக அறிமுகமாகின்றன. மிகப் பளிச் எனத் தெரியும் வண்ணமயமான இண்டர்பேஸ் இதற்கு சரியான மேக் அப் ஆக தோற்றம் அளிக்கிறது. ஐ வொர்க் (iWork productivity suite), ஐ லைப் (iLife), ஐமூவி (iMovie) மற்றும் ஐ போட்டோ (iPhoto) ஆகிய அப்ளிகேஷன்கள், ஐ.ஓ.எஸ்.7 உடன் இணைந்து கிடைக்கின்றன. 



இவை, இந்த போன்களுக்கு நல்ல விற்பனையைத் தரலாம். ஏனென்றால், இந்த அப்ளிகேஷன்கள் மூலம், போட்டோக்களையும், வீடியோக்களையும் எடிட் செய்திட முடியும். ""இவை ஏற்கனவே மக்களால் பெரிதும் விரும்பப்பட்டவை ஆதலால், தற்போது இந்த போன்கள் மூலம் பயன்படுத்த மக்கள் ஆர்வப்படலாம். மேலும் வேறு எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் இவை தரப்படுவதில்லை என்பதால், புதிய ஐபோன்களை, இதற்காகவே மக்கள் விரும்புவார்கள்'' என ஆப்பிள் நிறுவனத் தலைமை நிர்வாகி டிம் குக் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில், ""தனக்கென ஒரு தனித்தன்மையையும், அதனையே தனிச் சிறப்பாகவும் பண்பாகவும் ஆப்பிள் எப்போதும் கடைப்பிடித்து வருகிறது. அதனை மாற்றும் எந்த முயற்சிக்கும் நான் சாட்சியாகவும் இருக்க மாட்டேன், அனுமதிக்கவும் மாட்டேன்'' என்று கூறினார். இந்த போன்களைக் காண்கையில் இது முற்றிலும் உண்மை என்பது விளங்கும்.

ஐபோன் 5 எஸ் மொபைல் போனின் சிறப்பம்சங்கள்:


1.ப்ராசசர்: ஏறத்தாழ நூறு கோடி ட்ரான்சிஸ்டர்களுடன் கூடிய 64 பிட் ப்ராசசர் கொண்ட முதல் மொபைல் போனாக ஐபோன் 5 எஸ் வந்துள்ளது.

2. விரல் ரேகை: டச் ஐடி (“Touch ID”) என்று அழைக்கப்படும் இந்த போனில், வெகுகாலமாக எதிர்பார்த்த, விரல் ரேகை அறியும் சென்சார் வசதி தரப்பட்டுள்ளது. பயனாளர்கள், இதனைப் பயன்படுத்தி, போனை இயக்கலாம். இது தேவை இல்லை என்றால், முன்பு போல நான்கு இலக்க பாஸ்வேர்ட் வைத்துக்கொள்ளலாம். அல்லது பாஸ்வேர்ட் இல்லாமலும் பயன்படுத்தலாம்.

3. பேட்டரி: தொடர்ந்து 10 மணி நேரம் 3ஜி இயக்கம் தரக் கூடிய திறன் கூடிய பேட்டரி தரப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால், 250 மணி நேரம் மின்சக்தியைக் கொடுக்கும். தொடர்ந்து 10 மணி நேரம் வீடியோ பார்க்கலாம்; 40 மணி நேரம் ஆடியோ கேட்டு ரசிக்கலாம்.

4. கேமரா: இதன் ஐ சைட் (iSight) கேமரா 28 மெகா பிக்ஸெல் திறன் கொண்டது. ஆப்பிள் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட லென்ஸ் இயங்குகிறது. தொடர்ந்து ஒரு விநாடியில் 10 படங்களை எடுக்கும் “burstmode” கிடைக்கிறது. தானாக போகஸ் செய்திடும் வசதி, முகம் அறிந்து இயக்கும் வசதி ஆகியவையும் தரப்பட்டுள்ளன. இதன் வீடியோ பதிவு நொடிக்கு 30 பிரேம்களைப் பதிகிறது.

5. இயக்கும் சிப்: இதில் இயங்கும் 64 பிட் ஏ7 சிப், இதற்கு முன் இருந்த ப்ராசசர்களைக் காட்டிலும் 56 மடங்கு வேகமாக இயங்கவல்லது. இதனால், ஐபோன் எஸ்5ல் உள்ள சில அப்ளிகேஷன்கள், ஐந்து மடங்கு அதிகமான வேகத்தில் இயங்கும். இத்துடன் எம்7 (M7) என்ற பெயரில் சிப் ஒன்றையும், ஆப்பிள் இதில் தருகிறது. இது ஒரு “motion coprocessor”. இது பல அப்ளிகேஷன் புரோகிராம்களின் வேகத்தை அதிகப்படுத்துகிறது.

6. இலவச அப்ளிகேஷன்கள்: இதுவரை கட்டணம் செலுத்திப் பெற்ற Apple’s Pages, Numbers, Keynote, iPhoto, and iMovie apps அப்ளிகேஷன்கள் இதில் இலவசமாகவே இணைத்துத் தரப்படுகின்றன.

7. வடிவமைப்பு: இதன் பரிமாணங்கள்: 123.8 x58.6 x 7.6 மிமீ. எடை 112 கிராம்.

8. திரை: மல்ட்டி டச் வசதியுடன் 4 அங்குல திரை 1136 x 640 பிக்ஸெல் திறன் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. 

9. சிம்: இதில் நானோ சிம் மட்டுமே பயன்படுத்த முடியும். தற்போது பயன்படுத்தப்படும் மைக்ரோ சிம் கார்டுகளைப் பயன்படுத்த முடியாது.

10. மொழிகள்: இதில் தமிழ் உட்பட பல உலக மொழிகளைப் பயன்படுத்தலாம். அதே போல பல மொழிகளுக்கான அகராதிகளும் கிடைக்கின்றன.முன் கூட்டியே சொற்களைத் தரும் predictive text மற்றும் தானாகவே சொற்களைத் திருத்தும் (auto correct) வசதிகள் உள்ளன. 


ஐபோன் 5 சி (iPhone 5C) மொபைல் போன் சிறப்புக்கள் பின்வருமாறு:


1. ஐந்து வண்ணங்களில் இது கிடைக்கிறது.

2. பாலிகார்பனேட் ஷெல் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

3. சுற்றியுள்ள ஸ்டீல் ஸ்ட்ரக்சர் ஆன்டென்னாவாகச் செயல்படுகிறது.

4. ஏ6 (A6) சிப் பொருத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் காம்பஸ், ஜி.பி.எஸ்., வை-பி ஆகிய வசதிகள் உள்ளன.

5. ஐபோன் 5 எஸ் போல, இதிலும் 4 அங்குல திரை டிஸ்பிளே கிடைக்கிறது. ரெசல்யூசன் 1136 x 640 பிக்ஸெல்கள்.

6. கேமரா 8 எம்.பி. திறனுடன் இயங்குகிறது. ஆட்டோ போகஸ், எல்.இ.டி. ப்ளாஷ், ரெடினா டிஸ்பிளே, போட்டோ ஜியோ டேக்கிங் வசதிகள் கிடைக்கின்றன. வீடியோ நொடிக்கு 30 பிரேம்களைப் பதிகிறது.

7. இதன் பரிமாணம் 124.4 x 59.2 x 8.97 மிமீ. எடை 132 கிராம்.

8. இதில் உள்ளாக அமைந்த லித்தியம் அயன் பேட்டரி தரப்பட்டு, யு.எஸ்.பி மற்றும் பவர் அடாப்டர் வழியே அதனை சார்ஜ் செய்திடும் வசதி தரப்பட்டுள்ளது. தொடர்ந்து 3ஜி அழைப்புகளை 10 மணி நேரம் பயன்படுத்தலாம். வீடியோ 10 மணி நேரமும், ஆடியோ 40 மணி நேரமும் பயன்படுத்தலாம்.


இந்த போன் மக்கள் மனதில் பட்ஜெட் விலை போனாக இடம் பெறுமா என்பது சந்தேகமே. ஆனால், ஆண்ட்ராய்ட் போனால் சரியும் தன் மொபைல் போன் சந்தைப் பங்கினை, இந்த போன் தூக்கி நிறுத்தும் என ஆப்பிள் நிறுவனம் எண்ணுகிறது.


ஆப்பிள் தந்துள்ள இந்த இரண்டு மாடல்களில், மற்ற நிறுவனங்களின் மொபைல் போன்களில் காணப்படும் சில வசதிகள் இல்லை. அவை:


1. அண்மைக் கள தகவல் தொடர்பு எனக் கூறப்படும் Nearfield communications. வருங்காலத்தில் இது பெரிய அளவில் பயன்படுத்தப்பட வாய்ப்புகள் இருப்பதால், ஆப்பிள் ஏன் இதனை விட்டுவிட்டது என்று தெரியவில்லை.


2. வயர்லெஸ் சார்ஜிங் தொழில் நுட்பம். ஆப்பிள் தொடர்ந்து இது குறித்து எந்த எண்ணமும் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. சாம்சங், எல்.ஜி. மற்றும் நோக்கியா நிறுவனங்கள் இதனைத் தங்களின் சில மாடல்களில் தந்து வருகின்றன. ஒருவேளை, இந்த தொழில் நுட்பம் இன்னும் சீராக வளர்ந்த பிறகு, ஆப்பிள் இதனைத் தன் மாடல் போன்களில் தர திட்டமிட்டிருக்கலாம்.


3. எச்.டி. ஸ்கிரீன்: ஹை டெபனிஷன் திரை தருவதை ஆப்பிள் இந்த மாடல்களிலும் தள்ளிப்போட்டுள்ளது. ஆப்பிள் போன் திரைகளில் காட்டப்படும் டிஸ்பிளே ரெசல்யூசன் இன்னும் பழைய பாணியிலேயே உள்ளது.


4. நம் வசப்படுத்தும் வசதி: இதில் நாமாக மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு மெமரி அதிகப்படுத்த இயலாது. நாமாக புதிய பேட்டரி ஒன்றை இணைக்க முடியாது.


மெமரி கார்ட் மற்றும் உபரி பேட்டரியினை வைத்து மொபைல் பயன்படுத்தும் பழக்கம் உங்களுக்கு உண்டு என்றால், ஆப்பிள் போன்களை மறந்துவிடுங்கள். இருப்பினும், இதன் நவீன ப்ராசசர், பல வண்ணங்களில் வடிவமைப்பு ஆகியவை இம்முறை குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சங்களாகக் கிடைத்துள்ளன.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top