.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label தொழில்நுட்பம். Show all posts
Showing posts with label தொழில்நுட்பம். Show all posts

Sunday 5 January 2014

நண்பர்கள் ரியாக்‌ஷனை பார்த்து ரசிக்க ஒரு செயலி..



விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் நகைச்சுவை புகைப்படங்களையோ ,வீடியோக்களையோ நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளாதவர்கள் யார் ? சொல்லுங்கள். ஆரம்பத்தில் இமெயில் வாயிலாக, அப்புறம் பேஸ்புக் வாயிலாக என்று , யாம் பெற்ற சிரிப்பு நண்பர்களும் பெறட்டும் என , நகைச்சுவை படங்களை அனுப்பி வைப்பது இயல்பாக தான் இருக்கிறது. இப்போது , இதற்காக என்றே ஒரு செல்போன் செயலி அறிமுகமாகியிருக்கிறது.

கிகில் மெயில் எனும் அந்த செயலி சிரிக்க வைக்கும் படங்களை எடுத்து நண்பர்களுக்கு அனுப்பி வைக்க உதவுகிறது. இது என்ன புது விஷயமா ? புகைப்பட புகழ் செயலி ஸ்னேப்சேட் இதை தானே செய்கிறது என்று கேட்கலாம். இன்னும் கூட பல செயலிகள் செல்வழி புகைப்படங்களை பகிர வைக்கின்றனவே என்று செயலிகள் விஷயத்தில் அப்டட்டாக இருப்பவர்கள் கேட்கலாம்.

சரி தான், புகைப்பட பகிர்வுக்கு செய்லிகள் இல்லாமல் இல்லை. ஆனால் கிகிலி மெயில் செயலி , ஸ்னேப்சேட்டை விட ஒரு படி மேலே சென்று அசத்துகிறது. எப்படி தெரியுமா?  ஸ்னேப்சேட் போன்றவை புகைப்படங்களை எடுத்து அனுப்ப மட்டும் தானே செய்கின்றன ? கிகில் மெயில் இப்படி அனுப்பிய புகைப்படத்தை பார்த்ததும் நண்பர்கள் என்ன ரியாக்‌ஷன் செய்கின்றன்றோ அதை பார்த்து ரசிக்க உதவுகிறது.

சிரிப்பு புகைப்படம் அல்லது வீடியோவை பகிர்வதே, என்னைப்போல நீங்களும் சிரியுங்கள் என்று சொல்வது தானே. அப்படி இருக்க, சிரிப்பு படத்தை பார்த்த்தும் நண்பர்கள் எப்படி உணர்ந்தனர் என்று தெரிந்து கொண்டால் தான் அந்த பகிர்வு முழுமையாகும். ஆனால் எங்கோ இருக்கும் நண்பர்கள் ரியாக்‌ஷனை எப்படி தெரிந்து கொள்வது? இதை தான் கிகில் மெயில் சாத்தியமாக்குகிறது. இதன் மூலம் , புகைப்பட அல்லது வீடியோவை அனுப்பியதுமே , அவர்கள் போனில் புதிய  மெயிலுக்கான தகவல் போய் சேரும் . அந்த மெயிலை கிளிக் செய்து பார்த்ததுமே நண்பர்கள் ரியாக்‌ஷன் என்னவோ அது அப்படியே புகைப்படமாக கிளிக் ஆகி, பதில் மெயிலாக வந்தடையும். ஆக, நண்பர்கள் நகைச்சுவை காட்சியை பார்த்து , எப்படி ரசித்து மகிழ்கின்றனர் என்று இந்த செயலி வழியே உடனடியாக தெரிந்து கொள்ளலாம்.

மிகவும் சுவாரஸ்ய்மான செயலி தான். கொஞ்சம் யோசித்து பாருங்கள், இதில் எத்தனை விதமான ரியாக்‌ஷ்ன்களை எல்லாம் பார்க்க கூடும் என்பதை . சில வீடியோக்களை பார்த்து பலரும் விழுந்து விழுந்து சிரிக்கலாம். சிலர் சிரித்து கொண்டே இருக்கலாம். இன்னும் சில படங்களை பார்த்து யாரேனும் , உம்மனா மூஞ்சியாக முகத்தை வைத்துக்கொள்ளலாம். சிரிப்பு படத்துக்கான இந்த ரியாகஷனே கூட சிரிக்க வைக்கலாம் தானே.

செயலி முகவரி:  http://www.gigglemail.com/#

ஜிஎஸ்எல்வி-டி 5 ராக்கெட் இன்று மாலை விண்ணில் பாய்கிறது



 இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜினுடன் ஜிஎஸ்எல்வி - டி 5 ராக்கெட் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து இன்று மாலை 4.18 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இதற்கான 29 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று காலை 11.18க்கு துவங்கியது. மொத்தம் 1982 கிலோ எடை கொண்ட ஜிசாட்-14 என்ற தொலைத்தொடர்பு செயற்கைகோளை இந்த ராக்கெட் விண்ணில் செலுத்த உள்ளது. ஜிஎஸ்எல்வி-டி5 ராக்கெட் மொத்தம் 17 நிமிடங்கள் பயணம் செய்து ஜிசாட் - 14 செயற்கைகோளை பூமியிலிருந்து அதிகபட்சமாக 35 ஆயிரத்து 975 கிலோமீட்டர் தூரமும், குறைந்தபட்சம் 180 கி.மீட் டர் தூரமும் கொண்ட பாதையில் நிறுத்தும்.

இந்த 17 நிமிடங்களில், கிரையோஜெனிக் இன்ஜின் மட்டும் 12 நிமிடங்கள் இயக்கப்படும். தவிர எரிபொருள்களை எடுத்துச் செல்லும் 4 ஸ்ட்ராப் ஆன் மோட்டார்களும் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் தகவல் தொடர்புகளை அளிக்கும் வகையில் 6 கே.யு. டிரான்ஸ்பாண்டர்கள், 6 இ.எக்ஸ்.டி, சி பாண்டு டிரான்ஸ்பாண்டர்கள், கே.ஏ. பாண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த செயற்கோளின் ஆயுள் காலம் மொத்தம் 12 ஆண்டுகள் ஆகும். இன்சாட் - 3சி, இன்சாட் 4சிஆர், கல்பனா-1 ஆகிய செயற்கைகோளுக்கு அருகில் இது நிலைநிறுத்தப்படும்.

ஜிஎஸ்எல்வி-டி5 இந்தியாவின் 8வது ராக்கெட் ஆகும். இதில் 2வது முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜினுடன் இந்த ராக்கேட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இன்ஜின் பொருத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி-டி5 ராக்கெட் ஆகஸ்ட் 19ம் தேதி மாலை விண்ணில் செலுத்தப்பட இருந்தது. கடைசி நேரத்தில் ராக்கெட்டின் 2வது நிலை இன்ஜினில் இருந்து திரவ எரி பொருள் கசிவு கண்டுபிடிக்கப்பட்டதால், ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.

ஜிஎஸ்எல்வி கடந்து வந்த பாதை

ஜிஎஸ்எல்வி -டி 1 கடந்த 2001ம் ஆண்டு ஏப்ரல் 18ம் தேதியும், ஜிஎஸ்எல்வி- டி 2 2003ம் ஆண்டு மே 8ம் தேதியும், ஜிஎஸ்எல்வி- எப்-01 2004 செப்டம்பர் 20ம் தேதியும் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

2006ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி செலுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி - எப்-02 தோல்வியில் முடிந்தது.

ஜிஎஸ்எல்வி - எப்- 4 2007ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

ஜிஎஸ்எல்வி- டி 3 2010 ஏப்ரல் 15ல் செலுத்தப்பட்டது தோல்வியடைந்தது. ஜிஎஸ்எல்வி எப்-06- 2010 டிசம்பர் 25ம் தேதி செலுத்தப்பட்டதும் தோல்வியடைந்தது. தற்போது ஜிஎஸ்எல்வி டி-5 இன்று மாலை 4.18க்கு விண்ணில் ஏவப்படுகிறது.

Friday 3 January 2014

ஆன்ட்டி வைரஸ் இயங்கும் முறை இப்படித்தான்...!



தற்போது எந்த வகையான கம்ப்யூட்டர் பயன்படுத்தினாலும், அதில் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தியே ஆக வேண்டும். இல்லை எனில், நம் கம்ப்யூட்டர் செயல்பாடு கேள்விக்குறியதாக மாறிவிடும். இணையப் பயன்பாடு இருந்தால் தான், வைரஸ் புரோகிராம்கள், மால்வேர் புரோகிராம்கள் நம் கம்ப்யூட்டரைத் தாக்கும் என்பதில்லை.


நாம் பயன்படுத்தும் ப்ளாஷ் ட்ரைவ்கள் வழியாகவும், இவை பரவலாம். எனவே, கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் போன்று, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் இன்றியமையாத ஒரு மென்பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன. விண்டோஸ் இயங்கும் கம்ப்யூட்டர்களில் இயங்கும் அதிகத் திறன் கொண்ட சாப்ட்வேர் புரோகிராமாக ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் உள்ளன.


நம்மில் பலரும், இந்த புரோகிராம்கள் எப்படி வைரஸ் புரோகிராம்களைக் கண்டறிகின்றன, ADVERTISEMENT கம்ப்யூட்டரில் மற்ற சாப்ட்வேர் புரோகிராம்கள் இயங்குகையில் அவற்றின் செயல்பாட்டில் குறுக்கிடாமல் எவ்வாறு இயங்குகின்றன, ஏன் இவற்றை அப்டேட் செய்திட வேண்டும், இவற்றைக் கொண்டு குறிப்பிட்ட கால அளவில், கம்ப்யூட்டரை சோதனை செய்திட வேண்டுமா என்பது குறித்து எண்ணி இருக்கலாம். இவற்றிற்கான பதில்களைச் சுருக்கமாக இங்கு காணலாம்.


 ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் என்பது, பல நிலைகளில் இயங்கும் கம்ப்யூட்டர் பாதுகாப்பு வட்டத்தில் ஒரு முக்கிய பகுதி ஆகும். நீங்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவது குறித்து மிக அதிகமாகத் தெரிந்தவராக இருந்தாலும், அதனை எப்படிப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது என அறிந்தவராக இருந்தாலும், தற்போது பிரவுசர்களில் காணப்படும், வைரஸ் புரோகிராம்கள் எளிதாகத் தாக்கக் கூடிய தவறான குறியீடுகள், ப்ளக் இன் புரோகிராம்கள், ஏன் vulnerabilities என்று சொல்லக் கூடிய வழுக்கள் பல உள்ள விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகிய அனைத்தும், செம்மையாகச் செயல்படும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றினை உங்களின் அவசியத் தேவையாக மாற்றுகிறது.


நம் கம்ப்யூட்டர் இயங்கும்போது, பின்புலத்தில், ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும். கம்ப்யூட்டரில் திறக்கப்படும் ஒவ்வொரு பைலையும் அது சோதனை செய்திடும். இதனை, உங்கள் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமின் தன்மைக் கேற்பப் பல பெயர்களால் அழைக்கின்றனர். அவை - onaccess scanning, background scanning, resident scanning, realtime protection. நீங்கள் ஒரு EXE பைலை இயக்க, அதனை இருமுறை கிளிக் செய்திடுகையில், அது உடனே இயக்கப்படுகிறது என்றுதானே நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். அதுதான் இல்லை. உங்கள் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் முதலில் அந்த பைலை ஒவ்வொரு முறை திறக்கும் போதும் சோதனை செய்கிறது.


ஏற்கனவே அந்த புரோகிராமிற்குத் தெரிந்த வைரஸ் புரோகிராம்கள் மற்றும் பிற வகையான மால்வேர் புரோகிராம்கள் அதில் இணைந்துள்ளதா எனச் சோதனை செய்திடும். இவற்றுடன் தானாக வைரஸை அறிந்து கொள்ளும் சோதனையையும் மேற்கொள்கிறது. இதனை "heuristic" checking என அழைக்கின்றனர். இந்த வகையில், திறக்கப்படும் புரோகிராம் வழக்கத்திற்கு மாறான செயல்பாடு எதனையும் மேற்கொள்கிறதா என, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் சோதனை மேற்கொள்கிறது. இதன் மூலம் அதுவரை அறியப்படாத வைரஸ் இருப்பதனை அறிந்து கொள்கிறது.


இயக்க (EXE) பைல்கள் மட்டுமின்றி, மற்ற வகை பைல்களையும் இது சோதனை செய்கிறது. எடுத்துக்காட்டாக, சுருக்கப்பட்ட .zip archive பைலில், வைரஸ் புரோகிராமும் சேர்ந்தே சுருக்கப்பட்டு இருக்கலாம். அல்லது வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில் கெடுதல் விளைவிக்கும் மேக்ரோ ஒன்று பதிந்திருக்கலாம். எனவே, எப்போதெல்லாம் பைல்கள் பயன்படுத்தப்படுகின்றனவோ, அப்போதெல்லாம், ஆண்ட்டி வைரஸ் சோதனை நடத்தப்படும்.


எடுத்துக் காட்டாக, நீங்கள் ஒரு EXE பைலை டவுண்லோட் செய்தாலோ, அல்லது ப்ளாஷ் ட்ரைவ் போன்றவற்றிலிருந்து மாற்றினாலோ, அதனை நீங்கள் இயக்குவதற்குத் திறக்கும் முன்னரே, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் அதனை சோதனை செய்திடும். இது போன்ற, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றின், எப்போதும் சோதனை செய்திடும் தன்மையை நாம் நிறுத்தி வைக்கலாம். ஆனால், அது சரியல்ல. ஏனென்றால், வைரஸ் உங்கள் கம்ப்யூட்டரைப் பாதித்து, அதன் வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டால், அதனை நீக்குவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.

செவ்வாய்க் கிரக ஒரு வழிப் பயணத்திற்கு 62 இந்தியர்கள் தேர்வு!




நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த லாப நோக்கின்றி செயல்படும் மார்ஸ் ஒன் என்ற நிறுவனம் செவ்வாய்க் கிரகத்தில் நிரந்தரமான மனிதக் குடியிருப்புகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதையடுத்து அங்கு குடியேற 62 பேர் இந்தியாவிலிருந்தும் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


 செவ்வாய்க் கிரகத்தில் குடியேற விருப்பமுள்ள ஆர்வலர்களுக்கான விண்ணப்பங்களை அந்த நிறுவனம் வெளியிட்டிருந்தது. இதற்கு பதில் அளித்து 140 நாடுகளில் இருந்து 2,00,000 பேர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பியிருந்தனர்.


இவர்களில் இருந்து ஸ்பேஸ்.காம் அமைப்பு 1,058 பேரைத் தேர்ந்தெடுத்துள்ளது. இவர்களில் 297 பேர் அமெரிக்காவிலிருந்தும், 75 பேர் கனடாவிலிருந்தும், 62 பேர் இந்தியாவிலிருந்தும், 52 பேர் ரஷ்யாவிலிருந்தும் தேர்வாகியுள்ளனர்.


தேர்வான விண்ணப்பதாரர்கள் குறித்து மார்ஸ் ஒன் இணை நிறுவனரான பஸ் லன்ஸ்டோர்ப் கூறுகையில் புதிய மனிதக் குடியிருப்பு குறித்த உறுதியான பார்வையாக இந்தத் தேர்வு வெளிப்படும் என்று குறிப்பிட்டார். இத்தனை அதிக அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டது குறித்து தங்களின் பாராட்டுதல்களையும், மகிழ்ச்சியையும் தெரிவிப்பதாகக் கூறிய லன்ஸ்டோர்ப் உடற்தகுதியிலும், மனத்தகுதியிலும் செவ்வாய்க் கிரகத்திற்கான தூதுவர்களாகச் செயல்படும் திறன் கொண்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.


வரும் 2018 ஆம் ஆண்டில் தங்களது முதல் ஆளில்லா செவ்வாய்க் கிரக பயணத்தைத் தொடங்கும் இந்த நிறுவனம் 2024 ஆம் ஆண்டு நான்கு ஆண்களையும், ஒரு பெண்ணையும் செவ்வாய்க் கிரகத்திற்கு அனுப்ப உள்ளது. அதன்பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நான்கு தேர்வாளர்களை செவ்வாய்க் கிரகத்திற்கு அனுப்பி வைக்க இருப்பதாக இந்த நிறுவனம் தங்களது இணையதளத்தில் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தியாவுக்கு பெரிய சவாலான‌ – ஜி எஸ் எல் வி 5 – சக்ஸஸ் ஆகுமா?




இந்தியன் ஸ்பேஸ் ரிஸர்ச் ஆர்கனைசேஷனுக்கு ஒரு பெரிய சவால் நாளை மறு நாள் காத்து கொண்டு இருக்கிறது அது என்ன? ஏற்கனவே மூன்று முறை தோற்று போன ஜி எஸ் எல் வி ராக்கெட் இம்முறையாவது சக்ஸஸ் ஆக விண்ணில் பாய வேண்டும் என்பதே? இந்தியா தான் அடிக்கடி ராக்கெட் அனுப்புதே அப்புறம் என்ன கதைன்னு கேக்குறவங்களுக்கு – அது பி எஸ் எல் வி ரக ராக்கெட்கள் அதில் இந்தியா சூப்பர் பெர்ஃபார்மென்ஸ்.


ஜி எஸ் எல் வி என்றால் – ஜியோசின்கரனஸ் சாட்டிலைட் லான்ச் வெகிக்கிள் (geosynchronous satellite launch vehicle) என்னும் இந்த வகை ராக்கெட்கள் மூலம் சாட்டிலைட்டை நினைத்த இடத்தில் நிலை நிறுத்த முடியும். இது புவியீர்ப்பு சக்த்திக்கு அப்பார்பட்ட இடமாக இருக்கும் இடமாகும். இது வரை இந்தியா இதை பிரன்ச் கயானா என்னும் இடத்தில் இருந்து மூன்றாம் கம்பெனி ராக்கெட் மூலம் நமது சாட்டிலைட்டை லாஞ்ச் செய்தது. இதற்க்கு தேவையான பவர்ஃபுல் கிரைஜினிக் எஞ்சினை இந்தியா இன்னும் மாஸ்டர் செய்ய முடியவில்லை. இதில் எக்ஸ்பர்ட்டான யு எஸ் எ ஆர் என்னும் பழைய சோவியத் யூனியன் இதை இந்தியாவுக்கு தர ஒப்பு கொண்டது பழைய கதை.


ஆனால் USSR துண்டு துண்டாய் உடைந்து போனதால் ரஷியா இதை தர் ஒப்பு கொண்டாலும் அமெரிக்கா இதற்க்கு தடை விதித்து வெறும் ஏழு எஞ்சின்களை மட்டும் கொடுக்கலாம் என்று கண்டிஷன் போட்டது பழைய கதையாகும். இதை வைத்து முதன் முதலில் 2001 ஆம் ஆண்டு லாஞ்ச் செய்தது செயல்பாடு சரியில்லாமல் ஃபெயிலாகி போனது. அடுத்து 2003 – 2004 இரண்டு முறையும் சக்ஸஸ் ஆகினாலும் கொடுத்த 7 எஞ்சின்களில் 6 முடிந்து போனது. கையில் ஒன்றை மட்டும் வைத்து கொண்டு 2010 ஆம் ஆண்டு செலுத்த முயலுகையில் சில நொடிகளிலே ஃபெயில் ஆகி போனது. கொஞ்சம் சரி செய்து அதே வருடத்தில் டிசம்பர் மாதம் அட்டம்ப்ட் செய்த போதும் ஃபெயில் ஆகியது. சரியென்று கடைசியாக கவனமாக ஆராய்ந்து 2013ல் ஆகஸ்ட் மாதம் லாஞ்ச் செய்யும் கடைசி நேரத்தில் பியூல் லீக் அகி அதுவும் ஃபெயில் ஆகி போனது.


இந்த என்சின் திரவ் ஆக்ஸிஜனையும், ஹைட்ரஜனையும் கொண்ட கலப்பு எரிபொருள். இது நேற்று திருச்சியில் இருந்து ஹரிகோட்டா வரை பலத்த போலீஸ் ராணுவம் உதவியோடு தரைவழியாக ஸ்பெஷல் கன்டெயினர் மூலம் எடுத்து வரபட்டது – அதை நிறைய பேர் பார்த்திருக்க வாய்ப்புண்டு இப்போது எல்லாவற்றிக்கும் ரெடி ஆகி நாளை கவுன்ட் டவுன் ஆரம்பித்து 5 ஆம் தேதில் லாஞ்ச் செய்ய ஏற்பாடு ஆகி இருக்கிறது. இது மேலே போய் ஜிஸாட் 4 ( 2004ல் லான்ச் செய்யபட்டது) பல தமிழ் இந்திய சேனல்களின் உயிர் நாடியான இந்த சாட்டிலைட்டுக்கு பதில் போய் அதே இடத்தில் நிலை நிறுத்த வேண்டும். இந்தியா இதில் சாதிக்கும் என நம்புவோமாக..!

Monday 30 December 2013

செல்போன் விபரீதம் பெண்கள் ஜாக்கிரதை...??





நாணயத்துக்கு இருபக்கம் இருப்பது போல் தொழில்நுட்பத்துக்கும் உண்டு. அதற்கு உதாரணம் செல்போன். கூலித் தொழிலாளி முதல் தொழிலதிபர் வரை இன்று அனைவரின் கையிலும் தவழ்கிறது செல்போன். உலகின் எந்த மூலையில் இருந்தாலும் மகள் சாப்பிட்டாளா? தாத்தாவுக்கு உடம்பு எப்படி இருக்கு? சரக்கு டெலிவரி ஆகிவிட்டதா?என்று பேச, ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கு சிறிதும் தாமதிக்காமல் உதவிட என்று அனைத்து தரப்பினருக்கும் ஆபத்பாந்தவனாக இருக்கிறது.


ஆனாலும் இந்த செல்போன்கள் எதிர்விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. இதில் பாதிக்கப்படுபவர்கள் குறிப்பாகப் பெண்கள் தான்.


 எம்.எம்.எஸ், அறிவியலின் அற்புத தொழில்நுட்பம் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. ஆனால், சில விஷமிகள் தோழிகளாக பழகும் பெண்களை ஆபாச படம் பிடிக்கவும், பயமுறுத்தவும் இதைப் பயன்படுத்துகின்றனர். இதனால், பல பெண்களின் வாழ்க்கைச் சீரழிவது தொழில் நுட்பக் கொடுமை.
ஆண்களை விட இளம் பெண்கள் அதிகம் செல்லின் வசம் அடிமையாகிக் கிடக்கின்றனர் என்கிறது ஒரு ஆய்வு.


ஓயாத செல் பேச்சு, எந்நேரமும் மெசேஜ் எனத் திரியும் பெண்கள் அதனாலே பல தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள். ‘ஹாய்‘ என்று ஒரு சின்னஞ்சிறு குறுஞ்செய்தியில் ஆரம்பிக்கும் ஆண் பெண் தொடர்பு தற்கொலை, கொலை போன்ற அசாதாரண சம்பவங்களில் முடிவதில் பெரும்பங்கு செல்லுக்குத் தான். செல்லில் இருக்கும் மிஸ்டு காலை பார்த்து பேச ஆரம்பித்து பிறகு அந்த அறிமுகம் இல்லாத நபரிடமிருந்து தொடர் குறுஞ்செய்திகள், போன்கால்கள் என வம்பில் மாட்டிக் கொள்கிறார்கள் பல பெண்கள். பெற்றோர்கள் கவனமின்மையும் இதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.


  செல்லில்பேசிக்கொண்டே தண்டவாளத்தைக் கடக்க முயன்று ரயில் மோதி உயிரிழந்த சம்பவங்கள் தினமும் தொடர்கதையாகவே உள்ளது. பம்பர் லாட்டரி, பரிசு,  என்று வரும் மெசேஜைப் பார்த்து ஏமாந்து பணத்தை பறிகொடுத்துவிட்டு, கமிஷனர் அலுவலகம் வரும் அப்பாவிகள் ஏராளம்.
அதீத செல்போன் பழக்கத்தினால் தூக்கமின்மை, மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு பெண்கள் ஆளாகின்றனர். அளவுக்கதிகமான செல்போன் பயன்படுத்தும் பழக்கம் கேன்சரில் முடிவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 


பெண்களை ஏமாற்ற இத்தகைய செயல்களில் இளைஞர்கள் ஈடுபடுவதை தடுக்க அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆனால் அது மட்டும் போதாது எந்நேரமும் அரசாங்கம் பெண்கள் பின்னே நிற்க முடியாது என்பதால் இதுகுறித்து பெண்களிடையே மிகுந்த விழிப்புணர்ச்சி ஏற்படுவது தான் இதற்கான சிறந்த தீர்வாக இருக்கமுடியும்.


பெற்றோரின் கண்காணிப்பின்றி நகரங்களில் தங்கி படிக்கும், வேலை பார்க்கும் பெண்கள் தான் செல்லால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.


குடும்பத்திற்கு தெரியாமல் ரகசிய செய்கைகளில் ஈடுபடுவது அவர்களை ஆபத்திற்குள்ளாக்கும் என்பதை பெண்கள் உணரவேண்டும். அதனால், தேவையற்ற நபர்களின் எஸ்.எம்.எஸ்க்குப் பதில் அளிக்காதீர்கள். காதலன் தானே, பாய்பிரண்ட் தானே என்று அலட்சியப்பேச்சும் வேண்டாம். உங்களுக்குள் பிரிவு ஏற்படும் போது அது உங்களை படுகுழியில் தள்ளிவிடும். பெண்களுக்கு பெரும் பாதிப்புகளை உண்டாக்கும் இத்தகைய பேச்சுகளை பெண்கள் தவிர்க்கவேண்டும்.


அறிமுகம் இல்லாத நபர்களிடம் உங்கள் செல்போன் எண்ணை பகிர்ந்துகொள்வதை தவிர்த்துவிடுங்கள். தேவையற்ற நபர்களிடம் தேவையற்ற பேச்சுக்கள் அறவே வேண்டாம். அறிமுகம் இல்லாத, அவ்வளவாக பழக்கமில்லாத நபர்களிடம் சொந்த தகவல்களை பகிர்வது, வீட்டுக்குள் அனுமதிப்பது போன்ற செயல்களையும் பெண்கள் கட்டாயம் தவிர்த்துவிடுங்கள்.


 விக்கிறவனுக்கு ஒரு கண் போதும், வாங்குகிறவனுக்குத் தான் ஆயிரம் கண்கள் வேண்டும் என்றொரு பழமொழி தமிழில் உண்டு. அது போல ஆண்களை விட பெண்கள் எப்போதும் ஒரு படி மேலே ஜாக்கிரதை உணர்வோடு செயல்பட்டால் இது போன்ற சுய கவுரவத்திற்கு இழுக்கு ஏற்படும் நிலைமையிருந்தும், சமூக நெருக்கடிகளில் இருந்தும், பல இழப்புகளிலிருந்தும் தங்களை காப்பாற்றிக் கொள்ளமுடியும்.

கனவுகளை நிறைவேற்றித்தரும் இணையதள‌ம்....!




எல்லோருக்கும் கனவுகள் உண்டு.ஆனால் அவற்றை நிறைவேற்றிக்கொள்ளும் ஆற்றலோ வாய்ப்போ எல்லோருக்கும் அமைந்துவிடுவதில்லை.


சின்ன கனவோ பெரிய கனவோ அவற்றை நிரைவேற்றித்தர யாராவது உறுதி அளித்து உதவி செய்தால் எப்படி இருக்கும்?அற்புதமாக தான் இருக்கும் ஆனால் அத்தகைய நல்லிதயங்களை எங்கே தேடுவது என்று கேட்கிறீர்களா?


கவலையை விடுங்கள் உங்கள் கனவுகளை நிறைவேற்றித்தரக்கூடிய நல்ல மனிதர்களை கண்டு பிடித்து தரும் இணைய‌தளம் ஒன்று உதயமாகியிருக்கிறது. ஸ்பியின் நாட்டில் குடியேறியுள்ள கொலம்பியா நாட்டைச்சேர்ந்த கட்டிட கலை நிபுணர் ஒருவரால் உருவாக்கப்பட்டுள்ள இந்த இணையதளம் உங்கள் கனவுகளை சொல்லுங்கள் அதனை நிறைவேற்றித்தருகிறோம் என்று உத்வேகம் அளிக்கிறது.


அதாவது சமூக வலைப்பின்னல் வகையைச்சேர்ந்த இந்த தள‌த்தில் எவர் ஒருவரும் தங்கள் கனவை குறிப்பிட்டால் சக உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து அதனை நிறைவேற்றித்தருகின்றனர்.ஆனால் அதற்கு முன் நாமும் பதிலுக்கு இப்படி முன்று உறுப்பினர்களின் கனவுகள் நிரைவேற உதவுவதாக வாக்கு தர வேண்டும்.


அது தான் இந்த தள‌த்தின் சிற‌ப்பம்சம்.நம்முடைய கணவு மற்றவர்கள் உஅதவியால் உண்மையாவதோடு நாமும் மற்றவர்களின் கனவு பூர்த்தியாக கைகொடுக்கிறோம்.இப்படி சங்கிலித்தொடராக கணவுகள் நிறைவேறிக்கொண்டே இருக்கும். சமூக வலைப்பின்னல் கருத்தாக்கத்தை நன்மை எல்லோருக்கும் நன்மை செய்யும் நோக்கத்தோடு இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.


லாபாப்பயா என்னும் பெயரில் பிலிப் வேலாகியூஸ் இதனை உருவாக்கியுள்ளார். மனிதர் கொலம்பியாவில் வெற்றிகரமான கட்டிட கலை நிபுணராக திகழ்ந்தவர். ஆனால் ஒரு கட்டத்தில் தொழில் மீது வெறுப்பு வந்திருக்கிறது.அதாவது வீடுகளை வாங்கி வசிக்கும் மக்களின் நலனில் அக்கரை செலுத்தும் வகையில் தனது தொழில் அமையவில்லை என அவர் உணர்ந்திருக்கிறார்.


இதனையடுத்து கொலம்பியாவில் இருந்து ஸ்பெயின் நாட்டில் குடியேறி எல்லோருக்கும் நன்மை பய்க்கும் நோக்கத்தொடு லாப்பபயா இணையதளத்தை நிறுவினார்.


கொலம்பியாவில் அதிகம் காணப்படும் பப்பாளியின் ஆங்கில பெயரிலேயே தளத்தை அமைத்துள்ளார்.பப்பாளி விதைகளை போல இந்த தளம் மூலம் பலரது கணவுகள் நிறைவேறி மேலும் பலரது கணவுகள் நிறைவேற வேண்டும் என்று அவர் கனவு காண்கிறார்.


இப்போது உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடியின் பாதிப்பு நிலவும் பொது சக மனிதர்கள் கை கொடுத்தால் எதையும் சாதிக்கலாம் என்றும் அவர் நம்புகிறார்.


உதவி செய்ய வேண்டும் என்பது தொற்று வியாதியைப்போல் இண்டெந்ர்நெட் முலம் பரவ வேண்டும் என்றும் அவர் எதிர்பார்க்கிறார்.தனி மனிதர்களின் கணவுகளை நினைவாக்க வேண்டும் என்ப்தே இந்த முயற்சியின் நோக்கம் என்கிறார் அவர்.


நகரச‌பைகளோடு இணைந்து பெரிய அளவிலான மக்கள் நலத்திட்டங்களுக்கும் கைகொடுக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

http://lapapaya.org/home/

AUTORUN.INF வைரசை அகற்ற எளிய வழி!





AUTORUN.INF வைரசை அகற்ற எளிய வழி!



கணினியை பயன்படுத்துவோர் பலருக்கும் AUTORUN வைரசை பற்றி கண்டிப்பாக தெரிந்திருக்கும். இது பெரும்பாலும் FLASHDRIVE கள் மூலமாக பரவக்கூடியது. இது பல்வேறு வைரஸ் தாக்குதல் நமது கணினியில் நிகழ அடிப்படையானது. இதை சாதாரண முறையில் நமது கணினியில் இருந்து அழிக்க முயன்றால் முடியாது.இதை நீக்க சில PROGRAM களும் உள்ளன. இருந்தாலும் SOFTWARE எதுவும் இல்லாமல் இதை கணினியில் இருந்து நீக்கலாம்.

முதலில் உங்கள் கணினியில் NOTEPAD ஐ திறந்து கொள்ளுங்கள். அதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த CODE ஐ அப்படியே TYPE செய்து NOTEPAD ல் PASTE செய்யுங்கள். (c,d,e,f,g,h,i,k mentioned are Driver Letters. If you have more than k: you can add it)

 cd\
 c:
 attrib -r -s -h autorun.inf
 del autorun.inf
 d:
 attrib -r -s -h autorun.inf
 del autorun.inf
 e:
 attrib -r -s -h autorun.inf
 del autorun.inf
 f:
 attrib -r -s -h autorun.inf
 del autorun.inf
 g:
 attrib -r -s -h autorun.inf
 del autorun.inf
 h:
 attrib -r -s -h autorun.inf
 del autorun.inf
 i:
 attrib -r -s -h autorun.inf
 del autorun.inf
 j:
 attrib -r -s -h autorun.inf
 del autorun.inf
 k:
 attrib -r -s -h autorun.inf
 del autorun.inf


இந்த DOCUMENT ஐ ஏதாவது ஒரு பெயரில் .bat என்று முடியும் வகையில் சேமியுங்கள் .(உதாரணம் filename.bat) இப்போது நீங்கள் சேமித்த அந்த கோப்பை RUN செய்யுங்கள். இப்போது உங்கள் கணினியில் இருந்து autorun.inf வைரஸ் நீக்கப்பட்டிருக்கும்.

Sunday 29 December 2013

செல்போன் சந்தேகங்களுக்கு தீர்வு தரும் செயலி..?




செல்போன் என்று வாங்கிவிட்டால் அதன் செயல்பாட்டில் அடிக்கடிசந்தேகங்களும் பிரச்சனைகளும் வரத்தான் செய்யும். அதிலும் ஸ்மார்ட் போன்கள்என்றால் கேட்கவே வேண்டாம். இது போன்ற நேரங்களில் கைகளை பிசைந்து கொண்டும்நிற்க வேண்டாம். சம்பந்தப்பட்ட நிறுவனங்களை தொடர்பு கொண்டு பதில் பெறமுடியாமல் அல்லாடவும் வேண்டாம்.


ஒரே ஒரு குறுஞ்செய்தியில் உங்கள் செல்போன் சார்ந்த பிரச்சனைக்கான தீர்வைஉரிய நிபுணர்களிடம் இருந்து தெரிந்து கொண்டு விடலாம் :டிவைஸ் ஹலெப் செயலிஇந்த நம்பிக்கையை தான் அளிக்கிறது. மும்பையை சேர்ந்த ஹாப்டிக் எனும்நிறுவனத்தால் உருவாகக்ப்பட்டுள்ள செயலி இது. ஆப்பிலின் ஐபோன் மற்றும்ஆண்ட்ய்ராய்டில் செயல்படக்கூடிய இந்த செயலியின் வழியே உங்கள் செல்போன்பிரச்ச்னைகளை குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கலாம். இந்த சந்தேகங்களுக்கானதீர்வுகளை தொடர்புடைய நிபுணர்கள் குறுஞ்செய்தி வழியாகவே வழங்குவார்கள்.


செல்போன்பயன்பாட்டில் கில்லாடிகளாக இருக்கும் நபர்கள் மற்றும் செல்போன்நிறுவனங்களிலேயே பணியாற்றியவர்களை சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும்நிபுணர்களாக இணைத்து கொண்டிருப்பதாக ஹாப்டிக் சொல்கிறது.


செல்போனில்நாம் அதிகம் பயன்படுத்துவது குறுஞ்செய்தி வசதியை தான். ஆனாலும் கூடசெல்போனில் ஒரு பிரச்ச்னை என்றால் யாருக்காவது போன் செய்து அல்லாடவேண்டியிருக்கிறது. இந்த நிலையை மாற்றி செல்போன் சந்தேகங்களுக்குகுறுஞ்செய்தி வடிவிலேயே எளிதான பதில் பெற உதவும் டிவைஸ் ஹெல்ப் செயலியைமுதலில் உருவாக்கியிருப்பதாக ஹாப்டிக் தனது இணையதளத்தில்குறிப்பிட்டுள்ளது. அடுத்த கட்டமாக செயலி மூலமே அனைத்து தொழில்நுட்பஉதவிகளையும் பெற வைக்கும் திட்டம் இருக்கிறதாம். டிவைஸ் ஹெல்ப் ஆர்ம்பம்தான் என்கிறது ஹாப்டிக்.

யூடியூப் வழங்கும் புதிய வசதி....? அற்புதம்!




தனிநபர் தொலைகாட்சி பற்றி எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இது வரை யோசிக்கவிட்டாலும் இனி யோசியுங்கள். ஏனெனில் தனிநபர் தொலைகாட்சி நடத்துவது மிகவும் சுலபமானது. அதை நீங்களும் கூட செய்யலாம். எப்படி என்று ஆர்வத்துடன் கேட்கிறீர்களா? பிரபல வீடியோ பகிர்வு சேவையான யூடியூப் இதற்கான வசதியை அறிமுகம் செய்துள்ளது.


இணைய உலகில் ஸ்டீரிமிங் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். பட்டனை தட்டியதும் குழாயில் இருந்து தண்ணீர் பாய்வது போல ஆடியோ அல்லது விடியோ கோப்புக்கள் கிளிக் செய்ததும் ஒளிபரப்பாகத்துவங்கி விடுவதை தான் ஸ்டீரிமிங் என்கின்றனர். ஸ்டீரிமிங் செய்யப்படும் போது கோப்புகளை டவுண்லோடு செய்யத்தேவையில்லை. ஒரு நிகழ்ச்சி நடக்கும் போதே ஸ்ட்டிர்மிங் செய்யப்பட்டால் அதை நேரடியாகவே பார்த்தோ கேட்டோ ரசிக்கலாம். இதற்கு லைவ் ஸ்டீரிமிங் என்று பெயர். தொலைகாட்சியில் நேரடி ஒளிபரப்புக்கு நிகரானது.


இப்போது யூடியூப்பிற்கு வருவோம். யூடியூப்பில் வீடியோக்களை பார்த்து ரசிப்பது போலவே நாமும் கூ ட அதில் சுலபமாக வீடியோக்களை பதிவேற்றலாம். விரும்பினால் யூடியூப்பில் ஒரு கணக்கு துவங்கி நமக்கான சேனலையும் அமைத்து கொள்ளலாம். இந்த சேனல் வசதியையே கூட நமக்கான தொலைக்காட்சி சேனல் என்று சொல்லலாம். பலர் வெற்றிகரமாக இப்படி யூடியூப்பில் சொந்த சேனை வைத்திருக்கின்றனர். வீடீயோ வலைப்பதிவாளர்களும் கூட இருக்கின்றனர்.


ஆனால் இந்த சேனலில் என்ன பிரச்சனை என்றால் நிகழ்ச்சிகளை நேரடியாக பார்க்க செய்ய முடியாது. ஏற்கனவே ஒளிப்பதிவு செய்த நிகழ்ச்சிகளை வீடியோ கோப்பாக பதிவேற்றி பார்க்க செய்யலாம்.
இதற்கு மாறாக நிகழ்ச்சிகளை நேரடியாக பார்க்க செய்ய முடிந்தால் எப்படி இருக்கும் எனும் ஏக்கத்தை பூர்த்தி செய்யும் வகையில் யூடியூப் சில மாதங்களுக்கு முன் நேரடி ஒளிபரப்பு வசதியை அறிமுகம் செய்தது. இதன் மூலம் நிகழ்ச்சிகளை அவை நடக்கும் போதே யூடியூப்பில் பார்க்க செய்வது சாத்தியம். முதலில் இந்த வசதி அதிக சந்தாதாரர்களை கொண்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பிறகு குறைந்தது ஆயிரம் சந்தாதாரர்களாவது இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது.


இப்போது யூடியூப்பில் சரி பார்க்கப்பட்ட கணக்கு உள்ள யாரும் இந்த வசதியை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக, உங்களிடம் யூடியூப் கணக்கு இருந்தால் போதும் நீங்களும் கூட யூடியூப்பில் நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப துவங்கிவிடலாம். அது மட்டும் அல்ல கூகுல் ஹாங்கவுட்ஸ் சேவையையும் இதில் இணைக்க முடியும். எனவே ஹாங்கவுட்ஸ் பயன்படுத்துவர்கள் அதில் பகிர்ந்து கொள்ளும் வீடியோ தகவலை யூடியூப்பிலும் ஒருங்கிணைக்க முடியும். மேலும் இப்படி ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை எத்தனை பேர் பார்க்கின்றனர் என்பது போன்ற புள்ளி விவரங்களையும் யூடியூப்பே தருகின்றது.


வர்த்தக நிறுவனங்கள் மற்றும் இசைக்குழு போன்றவை இந்த நேரடி ஒளிபரப்பு வசதியை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்களோடு மேலும் துடிப்பான வழியில் தொடர்பு கொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது. ஏன் தனிநப்ர்களும் கூட இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.
திறமையும் ஆர்வாமும் இருந்தால் நீங்களே நிகழ்ச்சி தயாரித்து ஒளிபரப்பவும் செய்யலாம். அது பார்வையாளர்களை காவருமானால் உங்களுக்கான தனிநபர் தொலைகாட்சி தாயாராகிவிட்டது என பொருள். யார் கண்டது யூடியூப்பில் இத்தனை லட்சம் பேர் பார்த்த வீடியோ என்று தானே இப்போது பெசுகிறோம். இனி வரும் காலத்தில் இத்தனை லட்சம் பார்த்து ரசித்த நேரடி நிகழ்ச்சி என்று பேசப்படலாம்.

பற்றில்லாத பாஸ்வேர்டு செய்வோம்....?




இந்து மதத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கலாம், இல்லாமல் போகலாம். ஆனால் அதன் பற்றில்லாத தன்மை கொள்கை பாஸ்வேர்டு விஷயத்தில் பின்பற்றத்தக்கது. ஆய்வாளர்கள் அப்படி தான் சொல்கின்றனர். அதாவது பற்றில்லாத தன்மையுடன் பாஸ்வேர்டை உருவாக்க வேண்டும் என்கின்றனர்.

பாஸ்வேர்டில் என்ன பற்றும் பற்றில்லா தன்மையும் என்று கேட்கலாம். இதற்கு பதில் அறியும் முன் ஒரு நிமிடம் கண்களை மூடிக்கொண்டு புதிய பாஸ்வேர்டு ஒன்றை உருவாக்க பாருங்கள். நீங்கள் உருவாக்கிய பாஸ்வேர்டு எதுவாக இருதாலும் , அநேகமாக அது ஏதோ ஒரு விதத்தில் உங்களை சார்ந்ததாகவே இருக்கும். ஒன்று உங்கள் பெயர் அல்லது உங்கள் பிறந்த நாள் அல்லது உங்களுக்கு நெருக்கமானவர்களின் பெயர் … இப்படி உங்களை சார்ந்த விஷயங்கள் சார்ந்தே நீங்கள் பாஸ்வேர்டுக்கான எழுத்துக்களை தேர்வு செய்திருப்பீர்கள்.

இது இயல்பானது தான். தேர்வு செய்யப்பட்ட பாஸ்வேர்டு நினைவில் நிற்க பலரும் கையாளும் வழி இது. ஆனால் பாஸ்வேர்டு திருடர்களும் இவற்றை அறிந்திருப்பதா ல் , ஒருவரது தனிப்பட்ட விவரங்களை கொண்டு அவர்கள் பாஸ்வேர்டு என்னவாக இருக்கும் என யூகித்துவிட முடியும்.

இதை தடுக்க எளிய வழி இருக்கிறது. பாஸ்வேர்டுக்காக யோசிக்கும் போது உங்களை மறந்து விடுங்கள் ! உங்கள் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் நெருக்காமானவர்களின் விவரங்களை மனதில் கொள்ளாமல் யோசித்தீர்கள் என்றால் உருவாகும் பாஸ்வேர்டு உங்களோடு பற்றில்லாததாக இருக்கும். அப்போது அது களவாடப்பட முடியாததாகவும் இருக்கும்.

சும்மாயில்லை, தாக்காளர்கள் களவாடி வெளியிட்ட லட்சக்கணக்கான பாஸ்வேர்டுகளை ஆய்வு செய்து இந்த பற்றில்லாத வழியை கண்டுபிடித்துள்ளனர். பகிரங்கமான பயனாளிகளின் பாஸ்வேர்டுகளை பார்க்கும் போது அவற்றில் பளிச்சிடும் பொதுத்தன்மை அடிப்படையில் , பொதுவாக பாஸ்வேர்டு உருவாக்கத்தில் பெரும்பாலானோர் கடைபிடிக்கும் வழிகளை கண்டறிந்துள்ளனர்.

பெர் தோர்சியம் எனும் ஆய்வாளர் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளார். இதன் மூலம் அவர் முன்வைக்கும் பாஸ்வேர்டு பொது தன்மைகள் சில ; ஆண்கள் பாஸ்வேர்டு உருவாக்கத்தில் பரவலான வேறுபாட்டை நாடுகின்றனர். பெண்கள் நீளமான பாஸ்வேர்டை நாடுகின்றனர்.

சிவப்பு முடி கொண்ட பெண்கள் மிகச்சிறந்த பாஸ்வேர்டை உருவாக்குகின்றனர். தாடி வளர்த்த தலைகலைந்த ஆண்கள் மோசமான பாஸ்வேர்டுக்கு சொந்தக்காரர்களாக இருக்கின்றனர்.

எப்படி இருக்கிறது ஆய்வு !

தெரியுமா உங்களுக்கு?





1. குறுந்தகடு(சி.டி) செயல்படும் விதம்:

சிடிக்கள் என அழைக்கப்படும் காம்பாக்ட் டிஸ்க்குகள் அதில் பதிந்துள்ள தகவல்களை நடு மையத்திலிருந்து படிக்கத் தொடங்கி விளிம்பில் முடிக்கின்றன. இது மியூசிக் ரெகார்டுகளுக்கு எதிரான வழியாகும். மியூசிக் ரெகார்டுகள் விளிம்பிலிருந்து தொடங்கி நடுப்பாகம் செல்கின்றன.


 2. பாராசிடமால் மாத்திரையின் மறுபக்கம்:

மழை, குளிர் காலங்களில் குழந்தைகளுக்கு காய்ச்சலினால் உடலின் வெப்ப நிலை சராசரிக்கும் மிக அதிகமாகும் போது, "இழுப்பு' போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.காய்ச்சல் வெப்ப நிலையை உடனடியாகக் குறைக்க, பாராசிட்டமால் உதவுகிறது. ஆனால் 18 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, அடிக்கடி பாராசிட்டமால் கொடுத்தால் ஆஸ்துமா, அலர்ஜி போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளது என, லண்டனில் நடந்த ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. 6 வயது குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்பட்டதற்கான காரணங்களை ஆராயும் போது, அவர்களுக்கு ஒன்றரை வயதுக்குள் அதிகளவில் பாராசிட்டமால் கொடுத்திருந்தது தெரிய வந்துள்ளது. குழந்தைகள் நல மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையிலேயே, பாராசிட்டமாலைப் பயன் படுத்த வேண்டும். அவர்கள் நிர்ணயித்த அளவு மட்டுமே தர வேண்டும். பெற்றோர்கள் தன்னிச்சையாக பாராசிட்டமாலை குழந்தை களுக்கு தரக்கூடாது.



 3. கைபேசி தொலைந்தால் கண்டுபிடிக்க:

ஒரு மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06# என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள எண்ணைத் (International Mobile Equipment Identity) தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மொபைல் போனுக்கான வாரண்டி இதனைச் சார்ந்ததாகும். மேலும் உங்கள் மொபைல் தொலைந்து போனால் இந்த எண்ணைக் கொண்டு தேடிக் கண்டுபிடிக்கலாம். 



4.குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகள்:


இந்தியாவில் ஓராண்டில் பிறக்கும் குழந்தைகளில் 2.5 கோடி பேர் ஏதாவது ஒரு குறையுடன் பிறக்கின்றனர். தமிழகத்தில் ஆண்டுக்கு 11.5 லட்சம் குழந்தைகள் எடைக்குறைவு உட்பட பல்வேறு குறைபாடுகளுடன் பிறக்கிறது. இந்தியாவில் 5 சதவிகிதம் பேர் டிஸ்லெக்சியா, ஆட்டிசம் போன்ற அரிய வகையிலான குறைகளுடன் பிறக்கின்றனர்.


5. 'ஆண்டி பயாடிக்’ மாத்திரை ஆபத்து!:

'ஆண்டி பயாடிக்’ மாத்திரைகளை அடிக்கடி சாப்பிடுவதால் ஜீரண உறுப்பு அரிக்கப்படுகிறது. இதனால் உடலில் உள்ள `பி காம்ப்ளக்ஸ்’ குறைகிறது. அதைத்தொடர்ந்து வாய் நாற்றம், தொண்டையில் அல்சர், நாக்கு வறண்டு இருத்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. தலைவலியிலும், காய்ச்சலிலும் பல வகைகள் இருக்கின்றன. இதில் ஏதேனும் ஒன்றால் பாதிக்கப்பட்டு, அது எந்த வகை என்று தெரியாமல் ஒரே மாத்திரையை தொடர்ந்து சாப்பிடுவது தவறு. இந்த பழக்கம் அதிகமானால் சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாகிவிடலாம்.


6. அழிவின் விளிம்பில் தேசிய விலங்கு புலி:

இந்தியாவில் 1988 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை, தினமும் ஒரு புலி வீதம் எங்கோ ஒரு மூலையில் கொல்லப்பட்டது. இந்த வனவிலங்கு கழகம் ஒருமுறை கூட, கூடி சிந்திக்காததால் இதை தடுக்க முடியவில்லை. இவற்றின் தோல் சீனர்களின் வீடுகளை அலங்கரிக்கிறது. எலும்புகள் சீன மருந்துவத்தில் முக்கிய இடத்தை பெறுகின்றன. சீனர்கள் அதிகம் விலை கொடுப்பதால், இந்தியாவில் புலிகளை கொன்று ஏற்றுமதி செய்வது அதிகரித்தது. இப்படி புலிகளின் எண்ணிக்கை மிக குறைந்து போய் கொண்டிருப்பது, இந்திய அரசின் கவனத்திற்கு வந்தது. பின் போர் கால அடிப்படையில் புலிகளை காப்பதற்கான எல்லா நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது.

கம்ப்யூட்டர் மேதைக்கு அரச மன்னிப்பு....?



ஒரு வரலாற்று தவறு அரச மன்னிப்பு மூலம் சரி செய்யப்பட்டிருக்கிறது. கணிணி யுகத்தின் முன்னோடியும் , இரண்டாம் உலகபோரில் ஆயிரக்கணக்கானோரின் உயிர்களை காக்க தனது கணிணி திறமை மூலம் உதவியவருமான ஆலன் டியிரிங் மீதான களங்கம் துடைக்கப்பட்டிருக்கிறது. ஓரினச்சேர்க்கையாளர் என் தண்டிக்கப்பட்ட டியூரிங்கிற்கு பிரிட்டன் மகாரணியின் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆலன் டியூரிங் கண்ணி யுகத்தின் முன்னோடி. கணிதப்புலி. அந்த காலத்து தாக்காளர். அப்போதே கம்ப்யூட்டர்களை சிந்திக்க வைப்பது பற்றி யோசித்தவர். ஆரம்ப கால கப்யூட்டர்களுக்கான நிரல்களை உருவாக்கியவர். இன்று கம்ப்யூட்டர் , சூப்பர் கம்ப்யூட்டர் என்று எல்லாம் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்களுக்காக அவருக்கு உலகம் நன்றி கடன் பட்டிருக்கிறது. அது மட்டும் அல்லாமல் ஹிட்லரின் கை ஓங்கியிருந்த இரண்டாம் உலகப்போரின் போது அவரது பங்களிப்பே நேச நாடுகளுக்கு வெற்றியை தேடித்தந்ததோடு ஆயிரக்கணக்கானோரின் உயிர்களையும் காப்பாற்றியது. எனியாக் கம்யூட்டர் மூலம் ஹிட்லர் அனுப்பிய ரகசிய செய்திகளை டியூரிங் இடைமறித்து அவற்றின் சங்கேத குறியீடுகளை உடைத்து புரிய வைத்தார். இதற்காக அவர் பாம்ப் ( Bombe) எனும் பெயரில் கம்ப்யூட்டர் குறியீடுகளை புரிந்து கொள்வதற்கான கம்ப்யூட்டரை உருவாக்கினார்.

டியூரிங் அந்த காலத்திலேயே கம்ப்யூட்டர்களை சிந்திக்க வைத்து செய்றகை மூளையை உருவாக்கும் ஆய்வில் ஈடுபட்டிருந்தார். இயந்திர அறிவிற்காக அவர் உருவாக்கிய பரிசோதனை  டியூரிங் சோதனை என்று பிரபலமாக குறிப்பிடப்படுகிறது. கம்ப்யூட்டர் துறையின் ஈடு இணையில்லாத மேதை என்று கொண்டாடப்படும் டியூரிங் மீது ஒரு களங்கமும் இருந்தது. டியூரிங் ஓரினச்சேர்க்கை பழக்கம் கொண்டிருந்தவர். அவரது காலத்தில் அது குற்றமாக கருதப்பட்டதால் அவர் தண்டிகப்பட்டார். ரசாயணம் மூலம் ஆண்மை நீக்கம் செய்யப்பட்டார். 1952 ல் இந்த அவமானம் அவருக்கு நேர்ந்தது. இதைவிட மோசமாக அவர் மேற்கொண்டிருந்த ஆய்வில் ஈடுபட அனுமதிக்கப்படவில்லை. இதனால் மனம் உடைந்து 1954 ல் அவர் தற்கொலை செய்து கொண்டார்.

டியூரிங் மறைவுக்கு பிறகு கம்ப்யூட்டர் துறை எங்கேயோ வளர்ந்து வந்துவிட்டது. ஆனால் இந்த வளர்ச்சியில் அவரது பங்களிப்பு மகத்தானது . அவரது மேதமையை கொண்டாடி வருபவர்கள் அவர் மீதான களங்கம் துடைக்கப்பட வேண்டும் என்றும் குரல் கொடுத்து வந்தனர். 2009 ஆம் ஆண்டு டியூரிங் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக அவருக்கு மன்னிப்பு வழஙக்ப்பட வேண்டும் எனும் கோரிக்கை இணைய விண்ணப்பமாக முன் வைக்கப்பட்டது. இதற்கு பல்லாயிரக்கனக்கானோர் ஆதரவு தெரிவித்தனர். அப்போது பிரிட்டன் பிரதமராக இருந்த காடன் பிரவுன் , அர்சு சார்பில் மன்னிப்பு கேட்டுக்கொண்டு டியூரிங் தண்டிக்கப்பட்டது தவறு என்று தெரிவித்தார். 2011 ம் ஆண்டு டியூடிங்கிறகு மன்னிப்பு வழங்க கோரி மீண்டும் இணையா கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கும் ஆயிரக்கணக்கில் ஆதரவு குவிந்தது.

இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது டியூரிங்கிற்கு அரச மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.அந்நாட்டு நீதித்துறை அமைச்சர் கிறிஸ் கிரேலிங் வேண்டுகோளை ஏற்று முறைப்படி இதற்கான உத்தரவு பிறப்பிக்ப்பட்டுள்ளது. ஒரு மேதை மீதான சரித்திர களங்கம் துடைக்கப்பட்டுள்ளது.

இமெயில் சந்தாவில் இருந்து வெளியேற எளிய வழி...?




கட்டுரைகளையோ , செய்திகளையோ இமெயில் பெற சம்மதம் தெரிவிப்பது சுலபமானது தான். இப்படி இமெயில் வழியே சந்தாதாரவது தேவையானது தான். இமெயிலேயே தேவையான தகவல் வந்துவிடுவதால் தனியே குறிப்பிட்ட அந்த தளங்களுக்கு செல்ல வேண்டியதும் இல்லை. அந்த தளங்களில் புதிய தகவல் அல்லது கட்டுரைகளை தவற விடும் வாய்ப்பும் இல்லை.

இமெயிலில் சந்தாதாரவது சுலபமாகவும் பயனுள்ளதாக இருந்தாலும் சில நேரங்களில் இமெயில்ல் வரும் தகவல்கள் சுமையாகவோ , இடைஞ்சலாகவோ மாறிவிடலாம். திடிரென முகவரி பெட்டியில் மெயில்களாக குவிந்து அவற்றை படிக்க முடியாமல் திண்டாடும் போது இமெயில் சந்தாக்களில் வரும் தகவல்கள் அதிருப்தியை தரலாம்.

ஆனால் நல்ல வேளையாக இமெயிலில் புதிய தகவல்களை பெற சம்மதம் தெரிவிப்பது போலவே, இனி தேவையில்லை என்று சொல்வதும் சுலபமானது தான். இதற்காகவே சந்தா விலக்கல் (அன் சப்ஸ்கிரைப் ) வசதி இருக்கிறது. இமெயில் செய்தியில் எந்த இடத்தில் இந்த வசதிக்கான ஐகான் இருக்கிறது என் பார்த்து கிளிக் செய்தால் மெயில் வரத்து நின்று போகும். இருந்தாலும் பல நேரங்களில் இந்த சந்தா விலக்கல் வசதி எங்கிருக்கிறது என்று தெரியாமலும் திண்டாடலாம். அது மட்டும் அல்லாமால் மெயிலை திறந்து அந்த வசதியை தேர்வு செய்து கிளிக் செய்வதற்கு அலுப்பாக இருக்கலாம். சந்தா சேவையே ஒரு வகையில் சோம்பலுக்கான தீர்வு தானே. அதே சோம்பல் சந்தா வேண்டாம் எனும் வசதியை தேடி கிளிக் செய்யவும் தடையாக இருக்கலாம்.

எது எப்படியோ, இமெயில் சந்தாவில் இருந்து விலகுவதற்கான சுலபமான வழியை ரிமூவ் மீ இணையதளம் வழங்குகிறது. இமெயில் முகவரி பெட்டியை ஒரே கிளிக்கில் தேவையில்லாத மெயில்களில் இருந்து விடுவிக்க வழி செய்வதாக சொல்லும் இந்த தளம், இனியும் வேண்டாம் என நினைக்கும் சந்தாவில் இருந்து விடுபட சுலபமான வழியை முன்வைக்கிறது. அதுவும் எப்படி தெரியுமா? குறிப்பிட்ட அந்த சேவையில் மெயிலை திறக்கமாலேயே ஒரே கிளிக்கில் அதற்கு குட்பை சொல்ல வைக்கிறது. எப்படி என்றால் , முகவரி பெட்டியில் அந்த மெயிலுக்கு அருகிலேயே அதற்கான வசதியை காண்பிக்கப்படுகிறது. அதில் ஒரு கிளிக் ,அவ்வளவு தன இனி அந்த மெயில் வராது.

இமெயில் சந்தாக்களை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு நிச்சயம் ரிமூவ் மீ பயனுள்ளதாக இருக்கும். ஆனால் அதற்கு முன் இதை தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

சந்தா விலக்க சேவையுடன் , இமெயில் சர்பார்ப்பு சேவையையும் இந்த தளம் வழங்குகிறது . அதாவது குறிப்பிட்ட இமெயில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து தான் வந்திருக்கிறதா இல்லை ஏதேனும் விளம்பர அல்லது ஏமாற்று மெயிலா என்பதை இது உறுதி செய்கிறது.உதாரணமாக பேஸ்புக்கில் இருந்து ஒரு அப்டேட் வந்திருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள், அந்த மெயிலுக்கு அருகே அந்த நிறுவன லோகோ தோன்றுவதை பார்த்து பேஸ்புக் மெயில் தான் என உறுதி கொள்ளலாம்.

ரிமூவ் மீ சேவையை வழங்குவது பவர் இன்பாக்ஸ் எனும் நிறுவனம். பவர் இன் பாகஸ் நிறுவங்களின் இமெயில் தகவல்களை மேலும் சிறந்த வழியில் பெற வழி செய்கிறது. கிட்டத்தட்ட இதுவும் இமெயிலுக்கான சந்தா சேவை போல் தான். இமெயில் சந்தா சேவை வழங்கும் ஒரு நிறுவனமே சந்தா விடுபடல்சேவை வழங்குவது அழகான முரண் தான். இது ஒருபுறம் இருக்கட்டும், பவர் இன்பாக்ஸ் சேவையை பயன்படுத்தினால் பேஸ்புக் மறும் டிவிட்டர் போன்ற சமூக வலைப்பின்னல் சேவைகளை உங்கள் இமெயில் முகவரி பெட்டியில் இருந்தே இயக்கலாம். அதாவது , பேஸ்புக் அல்லது டிவிட்டர் சேவைக்கான வசதி மெயிலுக்கு அருகே தனியே தோன்றுகிறது. ஆக மெயிலில் இருந்து விலகிச்செல்லாமலேயே பேஸ்புக்கை அப்டேட்டை சரி பார்க்கலாம்.

இணையதள முகவரி; http://ub.powerinbox.com/removeme/

ஜாவாஸ்க்ரிப்ட் மாயாஜாலம் உங்களுக்காக..




n4ʞƃıuıuɐʞ sı sıɥʇ ıɥ இப்படி தலைகீழாக பேர் அடிச்சி பார்க்கனுமா? வாங்க!
பயப்படாதீங்க! பயப்படாதீங்க! உங்க கம்ப்யூட்டரில் வைரஸ் எதுவும் வந்து விடவில்லை.

எல்லாம் ஜாவாஸ்க்ரிப்ட் மாயாஜாலம்.

இந்த வெப்சைட் http://www.sevenwires.com/play/UpsideDownLetters.html போங்க. ஆங்கிலத்தில் நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்களை தலைகீழாக மாற்றி கொடுக்கும்.

Cut and Paste பண்ணிக்குங்க.

இலவசமாக பேஸ்புக்கை பயன்படுத்தலாம்!! ஏர்டெல்லின் அசத்தலான ஆஃபர்...!




இனி இலவசமாக பேஸ்புக்கை பயன்படுத்தலாம்!! ஏர்டெல்லின் அசத்தலான ஆஃபர்...
சமூக வலை தளமான பேஸ்புக் பயன்பாட்டை ஒன்பது மொழிகளில் நாடு முழுதும் உள்ள தன் ப்ரி-பெய்டு வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு இலவசமாக வழங்க உள்ளதாக பார்தி ஏர்டெல்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 "இது பேஸ்புக் தளத்தை நாடு முழுதும் உள்ள வாடிக்கையாளர்கள் ஒன்பது மொழிகளில் இலவசமாக பயன்படுத்த வழங்கும்" என அந்நிறுவன அறிக்கை தெரிவிக்கிறது.

இந்திய மொழிகள்

 மொபைல் போன்களில் பேஸ்புக் உபயோகிப்போர் (ப்ரௌசர் அல்லது நேரடி அப்ளிகேஷன்) இனி ஹிந்தி, பெங்காலி, குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் இலவசமாக பயன்படுத்தலாம் என வாடிக்கையாளர்களுக்குத் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட கால சலுகை


"ஒரு குறிப்பிட்ட கால சலுகையாக வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு 30 எம்பி வரையிலான இந்த இலவச பயன்பாட்டை பெற்று மகிழ ஏர்டெல் அனுமதிக்கும்" என அந்நிறுவன அறிவிப்பு தெரிவிக்கிறது.

மென்பொருள்

 இந்த புதிய சேவை ஜாவா, ஆண்ட்ராயிடு, ஐபோன் மற்றும் விண்டோஸ் முதலியவற்றில் இயங்கும் சாதனங்களுக்குப் பொருந்தும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மொபைல் இண்டர்நெட் சேவை


 ஏர்டெல் நிறுவனம் மொபைல் இண்டர்நெட் சேவையின் முலம் அதிகப்படியான லாபத்தை அடைகிறது. டிராய் எஸ்எம்எஸ் கட்டுப்பாடு விதிகளை விதித்தப் பிறகு எஸ்எம்எஸ் மூலம் கிடைக்கும் வருவாய் குறைந்தது. இதனால் மொபைல் இண்டர்நெட் பயன்பாடு அதிகரித்தது. அதன் மூலம் ஏர்டெல் 6 மடங்கு அதிக லாபத்தை அடைந்தது.

டேட்டா கேபிள் வேண்டாம் – ஆன்ட்ராய்ட் ட்ரிக்ஸ்!




டேட்டா கேபிள் வேண்டாம் – ஆன்ட்ராய்ட் ட்ரிக்ஸ்!

டேட்டா கேபிள் இல்லாமலேயே நீங்கள் வைத்திருக்கும் ஆன்ட்ராய்ட் மொபைல் போனிலிருந்து தகவல்களை(Data) கணினி, டேப்ளட் பிசி, மற்றும் மற்றவகை மொபைல்போன்களுக்கு தகவல்களைப் பரிமாறிக்கொள்ள முடியும்.

Soft Data Cable

USB Cable எனப்படும் தகவல்பரிமாற்ற கம்பி இல்லாமேலே உங்கள் ஆன்ட்ராய்ட் மொலைலிருந்து கணினி,மொபைல், டேப்ளட் பிசி (Computer, tablet, android smartphone) போன்ற மற்ற சாதனங்களுக்கு WiFi மூலம் தகவல்களை பரிமாறிகொள்ள ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன் (Android apps) ஒன்று உதவுகிறது.

இந்த அப்ளிகேசனை(software data cable) நீங்கள் இந்த முகவரியிலிருந்து பெற்று பயன்படுத்திக்கொள்ளலாம்.

Download Link – தரவிறக்கச்சுட்டி

Install Soft Data Cable ( http://goo.gl/0jbJaz )

மேற்கண்ட இணைப்பின் வழிச்சென்று உங்கள் ஆன்ட்ராய்ட் மொபைல்போனில் இந்த பயன்பாட்டு மென்பொருளை நிறுவிடுங்கள்.

அடுத்து அந்த பயன்பாட்டு மென்பொருளை இயக்கி WiFi மூலம் உங்கள் கணினி, டேப்ளட் பிசி, மொபைல் போன்ற சாதனங்களுடன் உங்கள் ஆன்ட்ராய்ட் மொபைலையும் எளிதாக இணைத்துவிடலாம்.

இதன் மூலம் எந்த ஒரு கம்பி இணைப்பு இல்லாமலேயே, கணினிக்கும், மொபைலுக்கும் இணைப்பை ஏற்படுத்திக்கொண்டு, அதன் மூலம் வேண்டிய தகவல்பரிமாற்றங்களைச் செய்துகொள்ளலாம்.

இந்த அப்ளிகேஷனின் பயன்கள்: (ஆங்கிலத்தில்)

BENEFITS WITH SOFTWARE DATA CABLE
The fewer cables to carry the better
The computer doesn’t need to have drivers it does need installed
Send photos, music, videos, apps etc. to other phones, tablets or TV anytime, anywhere
Auto-sync photos and other important files to computer or cloud storage (on a daily, weekly basis to backup data)
Extend mobile storage space without any cost

1610 கிலோமீட்டர் வேகம் வெறும் 0-42 நொடிகளில்…..!!…அதிசிய கார் தயார்!!!




உலகத்தின் அதி வேக கார் தயார்!

சென்னை டு டெல்லி – ஒன்னேகால் மணி நேர கார் பயணம்? – இது சாத்தியமா என்றால் – ஆம் தான் பதில். இந்த 2188 கிலோமீட்டரை அடைய தேவையான உலகத்தின் அதி வேக கார் தயாராகி கொண்டு இருக்கிறது. இதன் வேகம் மணிக்கு 1610 கிலோமீட்டர் ஆனால் அதற்கு தேவையான நெடுஞ்சாலை இருந்தால் இது சாத்தியம்.


உலகின் அதிவேக கார் டிரைவரான பிளட் ஹூன்ட் தன் பிளாக்கில் இதை எழுதியிருக்கிறார். பிரிட்டனை சேர்ந்த இவர் ஒருவரே இது வரை அதி வேக தரை கார் சாதனையாளர். இவர் தற்போது உலகின் அதி வேக கார் ரெடியாகிறது என்று அதன் சில படங்களை வெளியிட்டு இதை தானே 2015 ல் ஓட்ட போவதாய் தெரிவித்திருக்கிறார்.


இந்த காருக்கு யூரோஃபைட்டரின் டைஃபூன் எஞ்சின் ரகம் பொருத்த படுகிறதாம். இந்த அதிவேக கார் பயணம் சவூத் ஆஃப்ரிக்காவில் நடக்க இருக்கிறது. ஆடி கியூ 7 இருந்தாலும் டாட்டா நானோ இருந்தாலும் என்ன பயன்? இருக்கிற டிராஃபிக்கில 30 போகவே மூச்சு முட்டுது இதுல 1610 கிலோமீட்டர் வேகாமான்னு நீங்க சலிச்சிகிறது எனக்கு கேட்கும் – யெஸ் நான் உங்க மைன்ட் வாய்ஸை கேட்ச் பண்ணிட்டேன்…………..


இன்னொரு ஆச்சர்யம் இந்த 1610 கிலோமீட்டர் வேகம் வெறும் 0-42 நொடிகளில்…..!!!…

குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி கேந்திரம் ஏன் அமைக்க வேண்டும்?




சென்னைக்கு வடக்கே ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி கேந்திரத்திலிருந்து இந்தியாவின் செயற்கைக்கோள்களும் ஆளில்லா விண்கலங்களும் செலுத்தப்பட்டு வருகின்றன. இங்கு இரண்டு ராக்கெட் செலுத்து மேடைகள் உள்ளன. மூன்றாவது மேடை அமைக்கப்பட உள்ளது. இதற்கிடையே வேறு ஓர் இடத்தில் புதிதாக ஒரு விண்வெளி கேந்திரம் அமைக்கத் திட்டம் உள்ளது.இப்புதிய விண்வெளி கேந்திரத்தைத் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் அமைக்க வேண்டும் என்று தமிழகத்திலுள்ள பல தரப்பினர் மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றனர்.

ராக்கெட்டுகளைச் செலுத்துவதற்கான விண்வெளி கேந்திரத்தை அமைக்க இரு முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும். முதலாவதாக அது கிழக்குக் கடற்கரை ஓரமாக இருக்க வேண்டும். இரண்டாவதாக அது கூடியவரை பூமியின் நடுக்கோட்டுக்கு அருகே இருக்க வேண்டும். குலசேகரப்பட்டினம் இந்த இரு தகுதிகளையும் பூர்த்தி செய்கிறது. அது கடலோரமாக அமைந்துள்ளது. அது 8 டிகிரி வடக்கு அட்சரேகையில் அதாவது பூமியின் நடுக்கோட்டுக்கு அருகே அமைந்துள்ளது.

ஏன் கிழக்குக் கடற்கரை ஓரமாக இருக்க வேண்டும்? பொதுவில் பெரும்பாலான செயற்கைக்கோள்கள் கிழக்கு திசை நோக்கித்தான் செலுத்தப்படுகின்றன. உயரே கிளம்பும் ராக்கெட்டில் ஏதாவது கோளாறு ஏற்பட்டு அதன் காரணமாக அது வெடிக்கக்கூடும். ராக்கெட்டின் பகுதிகள் கடலில் விழுவதுதான் நல்லது.

வேறு சில சமயங்களில் ஏதோ கோளாறு காரணமாக ராக்கெட் திசை திரும்பி கரையை நோக்கி அதாவது விண்வெளி கேந்திரத்தை நோக்கிப் பாயலாம். விண்வெளி கேந்திர அதிகாரிகள் ராக்கெட் கடல் பகுதிக்கு மேலாக இருக்கும் போதே அதை நடுவானில் அழிப்பர். இதற்கான பொத்தானை அமுக்குவதற்கென்றே தனி அதிகாரி இருப்பார். உதாரணமாக 2010 ஆம் ஆண்டு டிசமபர் 25 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து உயரே செலுத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் திசை மாறியபோது இவ்விதமாக நடுவானில் அழிக்கப்பட்டது.

விண்வெளி கேந்திரத்தை கூடியவரை பூமியின் நடுக்கோட்டுக்கு அருகே அமைப்பது வழக்கம். இப்படி அமைப்பதால் ஆதாயம் உண்டு. அதாவது பூமி தனது அச்சில் சுழல்வதன் பலனாக ராக்கெட்டுக்கு கூடுதல் வேகம் கிடைக்கும் இது இலவசமாகக் கிடைப்பதாகும்.

பூமியானது பம்பரம் போல மேற்கிலிருந்து கிழக்கு திசை நோக்கி சுழல்கிறது. எனவே பூமிக்கு சுழற்சி வேகம் உண்டு. பூமியின் நடுக்கோட்டுப் பகுதியில் பூமியின் சுற்றளவு 40,075 கிலோ மீட்டர். பூமி தனது அச்சில் ஒரு முறை சுற்றி முடிப்பதற்கு 23.93 மணி நேரம் பிடிக்கிறது. பூமியின் சுற்றளவை 23.93 ஆல் வகுத்தால் பூமியின் நடுக்கோட்டுப் பகுதியில் பூமியின் சுழற்சி வேகம் மணிக்கு 1674 கிலோ மீட்டர்.

ஆனால் பூமியின் நடுக்கோட்டுக்கு மேலே செல்லச் செல்ல, இந்த வேகம் குறையும். உதாரணமாக 20 டிகிரி வடக்கு அட்சரேகையில், சுழற்சி வேகம் மணிக்கு 1569 கிலோ மீட்டராகத்தான் இருக்கும். ஆகவே 20 டிகிரி அட்சரேகையில் ஒரு விண்வெளி கேந்திரம் இருந்தால் அங்கிருந்து செலுத்தப்படுகிற ராக்கெட்டுக்கு பூமியின் சுழற்சியால் கிடைக்கிற இலவச வேகம் மேலே சொன்ன அளவுக்குக் குறைவாகத்தான் இருக்கும்.

உலகில் செயற்கைக்கோள்கள்விண்கலங்கள் ஆகியவற்றை செலுத்தும் அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய விண்வெளி அமைப்பு, இந்தியா, சீனா முதலான நாடுகளை எடுத்துக் கொண்டால் ரஷியாவின் விண்வெளி கேந்திரங்கள் தவிர்க்க முடியாத வகையில் உள் நாட்டில்தான் உள்ளன. சீனாவின் சில விண்வெளி கேந்திரங்கள் உள் நாட்டில் உள்ளன. தவிர அவை பூமியின் நடுக் கோட்டிலிருந்து வடக்கே மிகவும் தள்ளி அமைந்துள்ளன.

ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் விண்வெளி கேந்திரம் பிரெஞ்சு குயானாவில் அட்லாண்டிக் கடலின் கிழக்குக் கரை ஓரமாக பூமியின் நடுக்கோட்டுக்கு மிக அருகில் 5 டிகிரி வடக்கு அட்சரேகையில் அமைந்துள்ளது. அங்கிருந்து ராக்கெட்டை ஏவினால் 1662 கிலோ மீட்டர் வேகம் கூடுதலாகக் கிடைக்கும். அமெரிக்காவின் கேப் கெனவரல் விண்வெளி கேந்திரம் மிகவும் தள்ளி 28 டிகிரி வடக்கு அட்சரேகையில் உள்ளது. அங்கிருந்து செலுத்தப்படும் ராக்கெட்டுகளுக்கு கிடைக்கும் இலவச வேகம் குறைவுதான்.

ஆகவே பூமியின் நடுக்கோட்டுப் பகுதியிலிருந்து ராக்கெட்டைச் செலுத்தினால் கூடுதல் எடை கொண்ட செயற்கைக்கோள்களைச் செலுத்த முடியும் என்பதால் ரஷிய, அமெரிக்க தனியார் நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து பசிபிக் கடலில் மிதக்கும் மேடையிலிருந்து ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்களை செலுத்தி வருகின்றன.

இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி கேந்திரம் 13 டிகிரி வடக்கு அட்சரேகையில் உள்ளது. அங்கிருந்து செலுத்தப்படும் ராக்கெட்டுக்கு பூமியின் சுழற்சியால் கிடைக்கிற கூடுதல் வேகம் 1625 கிலோ மீட்டர். ஆனால் குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி கேந்திரம் அமைத்து அங்கிருந்து ராக்கெட் செலுத்தினால் கிடைக்கிற கூடுதல் வேகம் மணிக்கு 1651 கிலோ மீட்டர்.

ஆகவே குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி கேந்திரம் அமைத்தால் ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து வழக்கமாகச் செலுத்தப்படுகிற அதே ராக்கெட்டில் குறைவான எரிபொருளை நிரப்பினால் போதும். அந்த அளவில் ராக்கெட்டின் முகப்பில் அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை வைத்துச் செலுத்த முடியும்.

குலசேகரப்பட்டினத்தில் மேலும் ஒரு ஆதாயம் உள்ளது. அதாவது ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் மூலம் வடக்கு-தெற்காக செலுத்தப்படுகின்ற துருவ செயற்கைக்கோள்களை நேர் தெற்காக செலுத்த முடிவதில்லை. அப்படிச் செலுத்தினால் அது இலங்கை மீது செல்வதாக இருக்கும். இந்திய விண்வெளித் துறையினர் இதைத் தவிர்க்க விரும்புகின்றனர். ஆகவே ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ராக்கெட் கிளம்பியதும் சிறிது தூரம் கிழக்கு நோக்கிச் சென்று விட்டுப் பிறகு தெற்கு நோக்கிச் செல்கின்றது. இதனால் கூடுதல் எரிபொருள் செலவாகிறது.

குலசேகரப்பட்டினத்திலிருந்து இந்த துருவ செயற்கைக்கோள்களைச் செலுத்தினால் இலங்கை மீது பறக்க வேண்டிய பிரச்சினையே இருக்காது. செயற்கைக்கோள்களை நேர் தெற்காகச் செலுத்த முடியும். இதனால் எரிபொருள் செலவு மிச்சமாகும். இந்தியாவோ பல்வேறு பணிகளுக்காக அடிக்கடி துருவ செயற்கைக்கோள்களைச் செலுத்தி வருகிறது. இந்த வகை செயற்கைக்கோள்களை நிரந்தரமாக குலசேகரப்பட்டினத்திலிருந்து செலுத்தலாம்.

டிவி ஒளிபரப்பு, வானிலை தகவல், ரேடியோ ஒலிபரப்பு என பல்வேறு பணிகளுக்காக பூமியின் நடுக்கோட்டுக்கு மேலே சுமார் 36 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் இந்தியா 13 செயற்கைக்கோள்களைப் பெற்றுள்ளது. இவை அனைத்தும் இந்தியாவைப் பார்த்தபடி உள்ளன. பங்கு மார்க்கெட் வர்த்தகம், தனியார் நிறுவனங்களின் தகவல் தொடர்பு, மணியார்டர் அனுப்புதல் என வேறு பல பணிகளையும் இவை செய்து வருகின்றன. இவை இல்லையேல் நாடே ஸ்தம்பித்து விடும். எடை மிக்க இந்த செயற்கைக்கோள்களை இந்தியா தயாரித்தாலும் அனேகமாக இவை அனைத்தும் ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் கூரூ விண்வெளிக் கேந்திரத்திலிருந்து பிரெஞ்சு ஏரியான் ராக்கெட் மூலம் உயரே செலுத்தப்பட்டவை.

இந்த வகை செயற்கைக்கோள்களையும் இந்திய மண்ணிலிருந்தே செலுத்த ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் உருவாக்கப்பட்டு அவை ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செலுத்தப்பட்டன. இந்த வகை ராக்கெட் முழு வெற்றி பெற்றதாகச் சொல்ல முடியாது. அடுத்து ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 என்ற அதிக சக்தி மிக்க ராக்கெட் உருவாக்கப்படுகிறது. இதற்கென ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் தளம் உள்ளது.

இந்த வகை ராக்கெட்டுகளையும் குலசேகரப்பட்டினத்திலிருந்தே செலுத்த இயலும். தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் கிழக்கு நோக்கிச் செலுத்தப்படும். இவை பூமியின் நடுக்கோட்டுக்கு நேர் மேலே இருக்க வேண்டியவை. ஸ்ரீஹரிகோட்டா 13 டிகிரி வடக்கு அட்சரேகையில் இருப்பதால் இவை குறிப்பிட்ட கோணத்தில் திரும்பி அதன் பிறகே பூமியின் நடுக்கோட்டுக்கு மேலே வந்து சேரும்.

ஆகவே இங்கு புதிய விண்வெளிக் கேந்திரத்தை அமைத்து மேற்படி ராக்கெட்டுகளைச் செலுத்தினால் அவை திரும்ப வேண்டிய கோணம் குறையும். இதன் மூலம் எரிபொருள் செலவு குறையும். ஆகவே அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களைச் செலுத்த முடியும்.

ஜி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட்டுகளை செலுத்துவதற்கென்றே ஸ்ரீஹரிகோட்டாவில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டு, குலசேகரப்பட்டினத்திலும் மறுபடி அதே வசதிகளைச் செய்வது வீண் செலவாக இருக்குமே என்று இஸ்ரோ கருதலாம். ஆனால் ஒன்று.

இந்தியா இந்த வகை ராக்கெட்டுகள் மூலம் எடைமிக்க செயற்கைக்கோள்களை செலுத்த ஆரம்பித்தால் பல நாடுகளும் தங்களது தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை உயரே செலுத்த இந்தியா பக்கம் திரும்பலாம்.

ஆகவே குலசேகரப்பட்டினத்தில் எல்லா வகையான ராக்கெட்டுகளையும் செயற்கைக்கோள்களையும் செலுத்தும் வசதிகளை செய்வதற்கு ஆகும் செலவு வீண் போகாது என்பது உறுதி.

Thursday 26 December 2013

இனி எஸ் எம் எஸ் -கூட அதிகாரப்பூர்வ செய்தி! மத்திய அரசு முடிவு?




இனி இந்தியாவில் பணப்பரிமாற்றம், பதிவு செய்வது உள்ளிட்ட பல திட்டங்களுக்கு பொதுமக்கள் அனுப்பும் குறுஞ் செய்தியையே ஆதாரமாக ஏற்க மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.


பொதுமக்கள் கொடுத்த 241 மனுக்களை, 100 துறைகளுக்கு அனுப்பி தங்களின் குறுஞ்செய்தி சோதனையை இன்று அதிகாரிகள் மேற்கொண்டனர். பொதுமக்கள் தங்கள் மனுக்களில் தகவல் அறியும் உரிமை சட்டம், சுகாதாரம், ஆதார், கல்வி பற்றிய விவரங்களை கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த “மொபைல் சேவா” திட்டத்தை அறிமுகப்படுத்திய தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் சத்யநாராயணா கூறுகையில், 90 ஆயிரம் மொபைல் சந்தாதாரர்கள் உள்ள நிலையில் ரெயில்வே நிர்வாகத்தை போன்று பரிமாற்றம் தொடர்பான விவரங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதை அதிகாரப்பூர்வ ஆதாரமாக ஏற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.


ஆறு மாதங்களுக்குள் அரசின் அனைத்து துறைகளிலும் எச்.டி.எம்.எல் 5 என்ற பயன்பாடு நிலைநிறுத்தப்படும். அப்போது அனைத்து மொபைல் சந்தாதாரர்களுக்கும் எளிதாக தகவல் பரிமாற்றம் செய்ய வழி ஏற்படும் என தொலைத்தொடர்பு துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top