.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label எச்சரிக்கை!. Show all posts
Showing posts with label எச்சரிக்கை!. Show all posts

Sunday 29 December 2013

90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்.....?




90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்

ஆர்ட்டிக் மற்றும் அண்டார்டிகா பகுதிகளில் உள்ள பனிக்கட்டி இப்போதைய வேகத்திலேயே உருகினால் அடுத்த 90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும் என்கிறார் ‘ஐஸ் மேன்’ என்று அழைக்கப்படும் உலகின் முன்னணி துருவப் பகுதி ஆராய்ச்சியாளர் ராபர்ட் ஸ்வான்.

தனது வாழ்வின் பெரும்பாலான பகுதிகளை துருவப் பகுதிகளில் உள்ள பனிப் பிரதேசங்களில் ஆராய்ச்சியில் கழித்துள்ள இவர், அங்கு நடந்து வரும் இயற்கை மாற்றங்களால் அதிர்ந்து போயுள்ளதாகக் கூறுகிறார்.

இப்போது சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத எரிசக்திக்கு உலகம் மாற வேண்டியதன் அவசரமான அவசியம் குறித்து உலகெங்கும் பயணித்து பிரச்சாரம் செய்து வரும் இவர் சென்னை வந்துள்ளார். பல்வேறு விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை நடத்தி வரும் நிருபர்களிடம் பேசுகையில்,

நான் உண்மையில் ஐஸ் மேன் தான், எனது பெரும்பாலான நாட்களை மைனஸ் 73 டிகிரி வெப்பநிலையில் கழித்துவிட்டேன். அந்த வெப்பத்தில் நம் கண்களில் உள்ள நீர் பனிக்கட்டியாகிவிடும், பார்வை தெரியாது. பற்களில் பிளவுகள் ஏற்பட்டுவிடும். சென்னையி்ன் இந்த சூடான வெப்பநிலை எனக்கு புத்துணர்ச்சியைத் தந்துள்ளது.

அண்டார்டிகாவிலும் ஆர்ட்டிக் பகுதிகளில் பனி மலைகள் மிக வேகமாக உருகி வருகின்றன. இதை நான் கண்கூடாகவே பார்த்துள்ளேன். சென்னையில் நீங்கள் ஓட்டும் கார்கள், பைக்குகளில் இருந்து வெளியாகும் கார்பன் டை ஆக்ஸைட் துருவப் பனியை உருக்குவதை நீ்ங்கள் உணர வேண்டும்.

இந்த பனி உருகலால் உலகின் கடல் மட்டம் வி்ஞ்ஞானிகள் கூறியதை விட மிக வேகமாகவே உயர்ந்து வருகிறது. கடல் மட்டம் 2 மீட்டர் உயர்ந்தால் போதும், அது உலகின் பல்வேறு பகுதிகளை நீரி்ல் மூழ்கடித்துவிடும். இது மிக வேகமாகவே நடக்கப் போகிறது என்ற அபாயத்தை உணர்த்தவே நான் பனிப் பகுதிகளை விட்டுவிட்டு உலக நாடுகளை சுற்றி வந்து பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளேன்.

இந்த சுற்றுச்சூழல் பேராபத்தை தவிர்க்க ஒரே வழி சூரிய மின்சாரமும் காற்றாலை மின்சாரமும் தான். இல்லாவிட்டால் நிலக்கரி, பெட்ரோலியத்தை எரித்து நாம் தயாரிக்கும் எரிசக்தியே நம்மை அழித்துவிடும் என்கிறார்.

தனது 33 வயதிலேயே வட துருவத்தையும் தென் துருவத்தையும் முழுக்க முழுக்க நடந்தே கடந்த மனிதர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராபர்ட் சவான் 1984-ம் ஆண்டு தென்துருவத்தில் 70 நாட்கள் 900 மைல் தூரம் நடந்து சென்று ஆய்வு நடத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

லண்டனைச் சேர்ந்த இவர் ஆரம்ப காலத்தில் தனது துருவப் பகுதி ஆராய்ச்சிக்காக டாக்சி ஓட்டியும், குடோன்களில் வேலைபார்த்தும் பணம் சேர்த்துள்ளார்.

கடும் போராட்டத்துக்குப் பின் ஒரு வழியாக சில சுற்றுச்சூழல் அமைப்புகளும் கைகொடுக்கவே 1984ம் ஆண்டு சதர்ன் குவெஸ்ட் என்ற கப்பலை வாடகைக்கு எடு்த்துக் கொண்டு 3 மாதம் 15,000 மைல்கள் பயணித்து அண்டார்டிகாவை அடைந்துள்ளார். இவருடன் இரு நண்பர்களும் பயணித்தனர்.

அண்டார்டிகாவில் இந்த மூவரும் 1,400 கி.மீ. தூரம் நடந்துள்ளனர். வயர்லெஸ் உதவியோ, அவசரகால உதவியோ இல்லாமல் இவர்கள் 70 நாட்கள் நடந்துள்ளனர்.

இந்தப் பயணத்தின்போது இவர்களின் கண்களின் நிறம் மாறியுள்ளது. இதற்கான காரணத்தை அவர்கள் கண்டறிந்தபோது அதிர்ந்து போயினராம்.

இவர்களது கண்களி்ல் உள்ள நிறமிகள் நிறமிழக்கக் காரணம், அண்டார்டிகா பகுதியின் மேலே வளி மண்டலத்தில் ஓசோன் படத்தில் ஏற்பட்ட ஓட்டை வழியாக ஊடுருவிய சூரியக் கதி்ர்கள் என்று தெரியவந்ததாம்.

இந்தப் பயணத்துக்குப் பின்னர் ஆர்ட்டிக் பிரதேசத்துக்கு 8 நிபுணர்களுடன் பயணித்தார் ஸ்வான். அங்கு 56 நாட்கள் சுமார் 1,000 கி.மீ. நடந்து ஆய்வுகளை மேற்கொண்டபோது பனிக் கட்டிகள் மிக வேகமாக உருகுவதைக் கண்டு அதிர்ந்துள்ளனர்.

உலகின் வெப்பமயமாதலுக்கு வளர்ந்த நாடுகள் இதுவரை செய்த தவறுகளே காரணம் என்று கூறும் ஸ்வான், அதே தவறை இந்தியாவும் சீனாவும் செய்துவிடக் கூடாது. வேகமாக பொருளாதார வளர்ச்சியை எட்டி வரும் இந்த நாடுகளின் வளர்ச்சிக்கு அடிப்படையான எரிசக்தி சூரியனிடமிருந்தும் காற்றாலைகளில் இருந்தும் வந்தால், உலகம் தப்பும் என்கிறார்.


எல்லோரும் வாழ்வோம் !
நன்றாக வாழ்வோம் !!
ஒன்றாக வாழ்வோம் !!!

பற்களில் காரை படிந்துள்ளதா....? இனி கவலை எதற்கு....?




பற்களில் காரை படிந்துள்ளதா....? இனி கவலை எதற்கு....?

என்ன தான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் காரை (decay) கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது.

பல் மருத்துவக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் சொல்லித் தருவதே, அவர்களின் பற்களை சுத்தம் செய்து கொண்டு வரச் சொல்வது தான்..

நீண்ட நாட்களாக இருக்கும் காரைப் படிவங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது. பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள்(pottasium permanganate.) (KMNO4) பெரும்பாலான மருந்துக் கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும்.

இதனை வாங்கி வெது வெதுப்பான நீரில் மிகச்சிறிய அளவில் (small pinch)போட்டு (தண்ணீரில் போட்டவுடன் ஊதா நிறமாக மாறும்) அந்த தண்ணீரை வாயில் ஊற்றி நன்றாக கொப்புளிக்க வேண்டும்.. (துவர்ப்புத் தன்மை கொண்டது) அதிகமாக இந்த வேதிப்பொருளை நீரில் போடக்கூடாது.. கரு ஊதா நிறமாக மாறும். துவர்ப்புத் தன்மை அதிகரித்து விடும்..

கொஞ்சம் கொஞ்சமாக கொப்புளித்த பின்னர் பிரஷ் கொண்டு (பேஸ்ட் போடாமல்) சுத்தம் செய்யும் போது பல வருடங்களாக இருந்த காரைகள் பெயர்ந்து வெளியேறும். பற்கள் பளிச்சென்று ஆகிவிடும்.

வருடத்திற்கொருமுறை அனைவரும் இதனை செய்து கொள்வது நல்லது.. பிறகென்ன பல் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியமே இருக்காது.. முயற்சித்துப் பாருங்களேன்.

பெண்களின் உடலைப் பற்றிய 5 கட்டுக்கதைகள்!!!!




பெண்களின் உடலைப் பற்றிய 5 கட்டுக்கதைகள்!

தொன்றுதொட்டே ஆய்வுகள் அனைத்தும் ஆண்களை மையமாகக் கொண்டே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு, இருபாலினத்தவரையும் பாதிக்கக்கூடிய புற்றுநோய்க்கான முக்கியமான சில மருத்துவ முன்னோட்டங்களில் பெண்களுக்கு மிகக் குறைவான பிரதிநிதித்துவமே அளிக்கப்பட்டுள்ளதாக ஒரு புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.


 குழந்தை வளர்ப்பு சார்ந்த பிரச்சனைகள் முதற்கொண்டு பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்வதற்கான வயது தொடங்கி பரிசோதனை முயற்சியாக வழங்கப்படும் மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் வரையிலானவை பற்றிய விழிப்புணர்வை பெண்களிடையே பரப்புவதில் ஆய்வாளர்கள் காட்டும் தயக்கம் வரையிலான பல விஷயங்களும் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


பெண்களின் உடல்நலக் கோளாறுகள் தொடர்பான, ஆய்வுகள் அவ்வளவாக மேற்கொள்ளப்படாத, இதர பிரிவுகளில், பிரச்சனைக்குரியது பாலுணர்வு மட்டுமே அல்ல. பெண்களின் ஹார்மோன் சுரப்புகளின் ஏற்ற இறக்கங்கள் சிக்கலானவை. அவை அடிப்படையான சில கண்டுபிடிப்புகளையும் குழப்பிவிடக்கூடியவை. ஆனால் சமீபத்திய வருடங்களில், பெண்களின் மீதான கவனம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

என்றாலும், இப்போதும் கூட பெண்களின் உடற்கூறைப் பற்றிய தவறான தகவல்களே சமூகத்தில் உலவி வருகின்றன. இங்கு பெண்ணின் உடற்கூறு பற்றிய கட்டுக்கதைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பார்ப்போமா!!

கட்டுக்கதை 1

ஒரு பெண் கன்னி தானா என்பதை ஒரு மருத்துவரால் கண்டறிய முடியும்.

10 மடிப்பு கொண்ட உருத்தோற்றப் பெருக்கியை உபயோகித்து சோதித்தாலும் கூட, மருத்துவர்களால் கன்னிப்பெண்களை, ஏற்கெனவே பாலுறவு கொண்டிருக்கக்கூடிய பெண்களிடம் இருந்து வேறுபடுத்த இயலாது என்று பல்வேறு ஆய்வுகளும் இடித்துரைக்கின்றன. கன்னித்திரையில் ஓட்டை இருக்கிறதா என்று பார்த்து சுலபமாக சொல்லி விட முடியாது, ஏனெனில் கன்னித்திரையில் ஓட்டை இருக்கவே செய்யும்


.
"கன்னித்திரையானது, பெண்ணின் பிறப்புறுப்பை மூடி இருக்கும் (கன்னித்தன்மையை இழக்கும் வரை) என்று சிலர் எண்ணிக் கொள்கிறார்கள்; ஆனால், இது முற்றிலும் தவறான எண்ணமாகும்", என்று இந்தியானா யுனிவர்ஸிட்டியைச் சேர்ந்தவரும், கரோலுடன் இணைந்து "டோன்ட் ஸ்வால்லோ யுவர் கம்."-இல் இணை ஆசிரியராகப் பணியாற்றியவருமான டாக்டர்.ரேச்சல் வ்ரீமன் கூறுகிறார். மிக அரிதாக அவ்வாறு கன்னித்திரை பிறப்புறுப்பை மூடியிருக்கும் பட்சத்தில், மாதவிலக்கின் போது ஏற்படக்கூடிய இரத்தப்போக்கு, கர்ப்பப்பையில் தேங்கி, மிக மோசமான உடல்நலக் கோளாறுகளை உருவாக்கிவிடும் என்றும் அவர் கூறுகிறார்.

கட்டுக்கதை 2

ஆன்டிபயாட்டிக் மருந்துகள் குடும்பக் கட்டுப்பாடு மாத்திரைகளின் நம்பகத்தன்மையை குறைக்கின்றன.

"மருத்துவர்கள் பலரே இந்தக் கதையை நம்புகின்றனர்," என்று கரோல் கூறுகிறார். குடும்பக்கட்டுப்பாடு மாத்திரைகளை தனியாக உட்கொள்ளும் போது, அவை செயல்படாமல் போகக்கூடிய வாய்ப்பு ஒரு சதவீதமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பெரும்பாலான ஆன்டிபயாட்டிக் மருந்துகளுடன் எடுத்துக் கொண்டாலும் கூட இந்த விகிதத்தில் எவ்வித மாற்றமும் இருக்காது என்றும் கரோல் குறிப்பிட்டுள்ளார்.



காசநோய்க்கென பரிந்துரைக்கப்படும் ஆன்டிபயாட்டிக்கான ரிஃபாம்பின் என்ற மருந்து மட்டுமே இதற்கு விதிவிலக்காக இருக்கக்கூடும். குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரைகள் முடுக்கிவிடக்கூடிய கர்ப்பத் தடை ஹார்மோன்களின் அளவை ரிஃபாம்பின் குறைக்கும்; என்றாலும் கர்ப்பம் தரிக்கும் சாத்தியத்தை அதிகரிக்கக்கூடிய அளவுக்கு இதன் தாக்கம் இருக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ரிஃபாம்பின் பற்றிய ஆய்வே ஆன்டிபயாட்டிக்/குடும்பக் கட்டுப்பாடு வதந்தியை கிளப்பியிருக்கலாம் என்று கரோல் எண்ணுகிறார். "சில நேரங்களில் மக்கள் எதையாவது சொல்லப்போக, அது அப்படியே காட்டுத்தீ போல பரவி விடுகிறது," என்றும் அவர் கூறியுள்ளார்.

கட்டுக்கதை 3

பெண்களுக்கும், ஆண்களுக்கும் சமமான அளவு உறக்கமே தேவைப்படுகிறது.

திரும்பித் திரும்பி புரண்டு படுப்பது பெண்களுக்கு மனச்சோர்வை உண்டாக்குவதோடு, அவர்களின் இன்சுலின் மற்றும் அழற்சியின் அளவுகளை உயர்த்தி, பல வித உடல்நலக்கோளாறுகளையும் உண்டாக்கும் என்று ட்யூக் யுனிவர்ஸிட்டியைச் சேர்ந்த எட்வார்ட் சுவாரெஸ் அவர்களின் தலைமையின் கீழ் 2008 ஆம் ஆண்டில் ஆய்வு மேற்கொண்ட சுமார் 210 பேர் அடங்கிய குழு கண்டுபிடித்துள்து.

சுமார் 6,000-க்கும் அதிகமான பங்கேற்பாளர்களுடன், வார்விக் யுனிவர்ஸிட்டியைச் சேர்ந்த ஆய்வாளர்களின் வழிகாட்டுதலுடன் 2007 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, ஐந்து மணி நேரம் அல்லது அதற்கும் குறைவான நேரமே உறங்கும் பெண்களுக்கு உயர் இரத்த அழுத்தத்தினால் அவதிப்படக்கூடிய வாய்ப்பு, ஏழு மணி நேரம் அல்லது அதற்கு மேற்பட்ட நேரம் உறங்கும் பெண்களைக் காட்டிலும் இரு மடங்கு அதிகமாக உள்ளது என்று கண்டறிந்துள்ளது.

ஆண்களிடையே, இத்தகைய ஒப்பீடுகள் ஏதும் இருப்பது போல் தெரியவில்லை. எனவே உறங்கும் தேவதைகள் தமக்கு விழிப்புத் தட்டிய பின் எழுவதே அவர்களின் உடல்நலத்துக்கு நல்லது.

கட்டுக்கதை 4

இறுதி மாதவிடாய்க்கு பின் பாலுறவில் நாட்டம் இருக்காது.

இறுதி மாதவிடாயினால் படுக்கையறை பழக்கவழக்கங்களில் மட்டுமே மாற்றம் காணப்படும் என்று கூற முடியாது. அமெரிக்காவைச் சேர்ந்த எட்வார்ட் லௌமன் அவரது சகாக்களுடன் இணைந்து 1994 ஆம் ஆண்டில் மேற்கொண்ட பாலுறவு பழக்கவழக்கங்கள் பற்றிய விரிவான சர்வேயில், ஐம்பதுகளில் உள்ள பெண்களில் ஏறத்தாழ பாதிப்பேர் ஒரு மாதத்தில் பலமுறை பாலுறவு வைத்துக் கொள்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.



இறுதி மாதவிடாய்க்கான அறிகுறிகளுள் ஒன்றான ஜுரம் மற்றும் இதர தொந்தரவுகள் தற்காலிகமாக பெண்களுக்கு பாலுறவில் நாட்டமின்றிப் போகச் செய்யலாம். ஆனால் பாலுறவு சார்ந்த நாட்டத்திற்கும், இறுதி மாதவிடாய்க்கும் இடையே எவ்வித தொடர்பும் இல்லை என்று வ்ரீமன் கூறியுள்ளார். அதனால் உங்களுக்கு இறுதி மாதவிடாய் ஏற்பட்டிருந்தால், நீங்கள் பாலுறவுக்கு டாட்டா காட்ட வேண்டிய அவசியம் இல்லை.

கட்டுக்கதை 5

மாதவிடாயின் போது ஒரு பெண்ணால் கருத்தரிக்க இயலாது.

மாதவிடாயின் போது ஒரு பெண் கர்ப்பம் தரிக்கக்கூடிய சாத்தியம் இல்லை தான்; என்றாலும், கர்ப்பம் தரித்தல் என்று வரும் போது, எதுவும் சாத்தியமே" என்று இந்தியானா யுனிவர்ஸிட்டியைச் சேர்ந்தவரும், "டோன்ட் ஸ்வால்லோ யுவர் கம்: மித்ஸ், ஹாஃப்-ட்ரூத்ஸ் அண்ட் அவுட்ரைட் லைஸ் அபவுட் யுவர் பாடி அண்ட் ஹெல்த்" (செயின்ட்.மார்டின்'ஸ் க்ரிஃபின், 2009) -இன் இணை ஆசிரியருமான ஆரோன் கரோல் கூறியுள்ளார்.

ஒரு பெண்ணின் உடலுக்குள் சென்றடைந்த பின், ஆணின் விந்தணு, சினை முட்டைக்காக சுமார் ஒரு வார காலம் வரை காத்திருக்கும். சினை முட்டை வெளியேற்றம் உடனேயே நிகழலாம் அல்லது பெண்ணின் மாதவிடாய் சுழற்சியின் போது இரத்தப்போக்கு இருக்கும் காலத்திலும் கூட நிகழ்ந்து, பொறுமையாக காத்துக் கொண்டிருக்கும் விந்தணுவுக்கு அதிர்ஷ்டம் அடிக்கலாம்.


 குடும்பக்கட்டுப்பாட்டிற்கான காலதிட்ட அமைப்பு, சரிவர செயல்படுவது இல்லை என்று கூறும் கரோல், இத்திட்ட அமைப்பை கடைப்பிடிக்கும் தம்பதியர் பல நேரங்களில் பெற்றோர் ஆகிவிடுவதையும் ஒப்புக் கொண்டுள்ளார்.

Tuesday 24 December 2013

அமுக்குவான் பேய் - உண்மையா?....




இரவு நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது, யாரோ உங்கள் மேல் ஏறி அழுத்துவது போல் இருக்கும். உங்களால் கண்ணைத் திறக்க முடியாது. கத்தலாம் என்றாலும் குரல் வெளியே வராது. சரி, திரும்பிப் படுக்கலாம் என்று நினைத்தாலும் திரும்பி படுக்க முடியாது. ஒரு நிமிடம் கழித்துத்தான் உங்களால் எதுவும் செய்யமுடியும். எழுந்து பார்த்தால் யாரும் அருகில் இருக்கமாட்டார்கள். என்னடா இது என்று திகைத்திருப்பீர்கள். இதுதான் அமுக்குவான் பேய்.


உயிரைக் கொல்லும் அளவுக்கு கொடூரமான பேய் இல்லை என்றாலும், இதுவும் ஒரு முக்கியமான பேயாக கிரேக்கப் புராணங்களில் கூறப்படுகிறது. பொதுவாய் அமுக்குவான் பேய்கள் மற்ற பேய்கள் போல் புளியமரத்திலோ வேப்பமரத்தின் உச்சியிலோ இருக்காது. பூச்சிகளின் இராஜாவான இது உங்கள் வீட்டின் சிலந்திகளின் கூட்டிற்குள், எறும்புகளின் குறிப்பாக சிவப்பு எறும்புகளின் புற்றில், கரப்பான் பூச்சிகளின் பொந்துகளில் தான் வாழும். இது உலவும் நேரம் பெரும்பாலும் சூரியன் உதிப்பதற்கு சற்று முன்பாக மூன்று மணியில் இருந்து நாலு மணி வரை ஆனால் சில சமயம் அவை பகலில் கூட வரும். என்றெல்லாம் சுவாரஸ்யமாக த்ரில்லாக கதை எழுத ஆசைதான் ஆனால் அது உண்மை இல்லையே, என்ன செய்வது? நம்மூரில் அமுக்குவான் பேய் என்று சொல்லப்படுவது உண்மையில் தூக்க பக்கவாதம் என்கிற கோளாறு.


சில சமயம் உங்கள் மூளை விழித்துக்கொண்ட பிறகும் உங்கள் உடல் தூங்கிக் கொண்டே இருக்கும். அதனால்தான் உங்களால் எழவோ, பேசவோ, கண்களைத் திறக்கவோ முடியாது. இந்தக் கோளாறு தூக்கத்தில் ஏற்படும் இடையூறினால் இது வருகிறது. துயில் மயக்க நோய், ஒற்றைத் தலைவலி, ஏக்க நோய்கள், மற்றும் தூக்கத்தில் மூச்சுத் திணறல் ஆகிய கோளாறுகளுக்கும் இதற்கும் தொடர்புகள் உண்டு. இதை தனிமைத் தூக்க பக்கவாதம், தொடர் தனிமைத் தூக்க பக்கவாதம் என்று இரண்டு வகைகளாகப் பிரிக்கிறார்கள்.


இதில் தனிமைத் தூக்க பக்கவாதம் என்பது ஒரு நபரின் வாழ்க்கையில் எப்போதாவது இரு நிமிடங்களுக்கும் குறைந்த நேரத்தில்தான் நிகழும். இது ஒன்றும் பிரச்னைக்குரியது அல்ல. தொடர் தனிமைத் தூக்க பக்கவாதம் பேருக்கு ஏற்றபடி அடிக்கடி ஏற்படும். மேலும் இது ஒரு மணி நேரம் வரைக்கும் கூட இருக்கும். சில சமயம் அந்தரத்தில் பறப்பது போல்கூட தோன்றும். இதற்கு மருத்துவர்களிடம் (மந்திரவாதிகளிடம் அல்ல) சென்றே ஆகவேண்டும். துயில் மயக்க நோய் உடையவர்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களில் 50 சதவீதம் பேருக்கு இப்பிரச்னை ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


 ஆனால், இன்றும் பெரும் அளவில் மக்கள் இது ஏதோ பில்லி சூனியத்தின் வேலை என்று நினைத்துக் கொண்டு மந்திரவாதிகளைத் தேடி ஓடிக்கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரி மூட நம்பிக்கைகளில் இருந்து மக்கள் விடுபடும் காலம் என்றுதான் வருமோ?

இரண்டாவது குழந்தையால் அப்செட்டாகும் முதல் குழந்தை!




முதல் குழந்தை பிறந்ததும், தாய், தந்தை இருவருக்குமே முதன் முதலில் பெற்றோரான மகிழ்ச்சி ஏற்படுகிறது. அதனால், இருவருமே அன்பு முழுவதையும் பொழிந்து முதல் குழந்தையை வளர்க்கின்றனர்.

இதற்கிடையில் இரண்டாம் முறை கருவுற்றால் நீங்கள் சீக்கிரமே தளர்வடைந்து போவீர்கள். ஏனெனில், நீங்கள் இந்த சமயத்தில் இரண்டு வேலைகளைப் பார்க்க நேரிடும். ஒன்று உங்கள் உடல் நலத்தை பார்த்துக் கொள்ளுவது இரண்டாவதாக உங்கள் முதல் குழந்தை கவனித்து கொள்ளுவது. அதிலும் உங்கள் முதல் குழந்தையின் உணர்ச்சிகளை புரிந்து கொண்டு அவர்களின் ஆசைகளை நிறைவேற்ற வேண்டும். பின்னர் பிரசவம் முடிந்த 6 முதல் 8 வாரங்களுக்கு இன்னும் கடினமாக இருக்கும். காரணம் அச்சமயம் உங்கள் கைக் குழந்தையையும் கவனிக்க வேண்டி இருக்கும்.

இப்படி இரண்டாவது குழந்தை பிறந்ததும் முதல் குழந்தையின் அன்புதான் பகிர்ந்தளிக்கப்படுகிறது. இதனால் பெற்றோரின் அன்பை முழுமையாக அனுபவித்த முதல் குழந்தைக்கு,இப்போது ஏமாற்றம் ஏற்பட்டு அது ஏக்கமாக மாறுகிறது. அத்துடன் பெற்றோரைப் போன்றே உறவினர்களின் அன்பும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. எனவே, இந்த பகிர்தல் தெரியாத வண்ணம் குழந்தையிடம் பாரபட்சம் காட்டாமல் வளர்க்க வேண்டும். அதற்கான வழிமுறைகளில் சில இதோ..

# முதல் குழந்தைக்கு அன்பு முழுவதையும் பொழிந்துவிட்டு இரண்டாவது குழந்தை வந்ததும் அதனை அதிகமாகப் பராமரிக்க ஆரம்பிக்கின்றனர். சிறு குழந்தை என்பதால், இரண்டாவது குழந்தையைக் கொஞ்சுகின்றனர். இதில், ஆண், பெண் வித்தியாசமில்லை. பெரிய குழந்தையின் ஏக்கம் இரண்டாவது குழந்தையின் மேல் கோபமாக மாறுகிறது. இதை தவிர்ப்பதற்கு இரண்டாவது குழந்தை வயிற்றில் இருக்கும்போதே, “நீ தனியா விளையாடுகிறாய்; பாப்பா வந்ததும் உன்னுடன் சேர்ந்து விளையாடும். நீ தான் பாப்பாவுக்கு எல்லாம் சொல்லித் தர வேண்டும்” என்று சொல்லி சொல்லி, முதல் குழந்தையிடம் இரண்டாவது குழந்தையைப் பற்றிய ஆசையை வளர்க்க வேண்டும்.

# உறவினர்கள் ஒரு குழந்தையிடம் அன்பை காட்டிச் சென்ற பின், தாயோ அல்லது தந்தையோ மற்றொரு குழந்தையிடம் அரவணைப்பைக் காட்டி “உன் சகோதரன் (சகோதரி) தானே, நீ விட்டுக் கொடுக்க வேண்டும்” என்பதை, நம் அன்பில் சிறிதும் குறையாமல் புரிய வைக்க வேண்டும்.

# கொஞ்சம் வளர்ந்த பின், சிறுவர் சிறுமியாயிருக்கும் போது பள்ளிக்கோ அல்லது பக்கத்திலிருக்கும் உறவினர் வீட்டுக்கோ அனுப்பும் போது, சிறு குழந்தையைப் பாதுகாக்கும் பொறுப்பை பெரிய குழந்தையிடம் ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான், பெரிய குழந்தைக்கு சிறு குழந்தையின் மீது, பொறுப்புடன் கூடிய அன்பு வளரும். மேலும், அன்பு, உணவு என அனைத்தையுமே இரு குழந்தைகளுக்கும் சமமாகக் கொடுக்க வேண்டும்.

# ஒரு குழந்தை படிப்பிலோ, விளையாட்டிலோ திறமையாக இருக்கலாம். குணத்திலோ மற்றவருடன் பழகும் விதத்திலோ சிறப்பாக இருக்கலாம். ஆதலால், எக்காரணத்தைக் கொண்டும், ஒரு குழந்தையை மற்ற குழந்தையோடு ஒப்பிட்டுப் பேசக் கூடாது. தாழ்வு மனப்பான்மை உண்டாகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். எந்த விதத்திலும் தன் ஆதிக்கத்தை மற்றொன்றின் மேல் செலுத்தாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இவையெல்லாம் அமைந்தால், சகோதர, சகோதரி பாசம் என்பது ஆயுள் வரை அன்புடம் நீடிக்கும்.

Monday 23 December 2013

ஆண்கள் பெண்களை ஏமாற்றும் 7 தகவல்கள்..?


பொதுவாக பெண்களை காதலிப்பதாக கூறும் காதலர்கள் தனது காதலிக்கு தெரியாமல் மூன்றாம் நபரையும் காதலிக்க வாய்ப்புண்டு  அப்படிபட்ட நபர்களை கண்டறிய சில டிப்ஸ்


01. காதலன் கடைசி நிமிடத்தில் இருவரும் போக இருந்த பயணத்தை அல்லது வெளியே செல்லுவதை மாற்றுதல் அல்லது கேன்சல் செய்தல்.



காதலாகள் இருவரும் எங்காவது போக திட்டமிட்டு இருந்து, வருகிறேன் என்று இருந்த காதலன் கடைசி நிமிடத்தில் ”எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது. நீ வேண்டுமானால் உன் தங்கையோடு அல்லது தோழியோடு போய்ட்டு வா” என கூறினால் கொஞ்சம் கவனம். ஏனென்றால் மற்றைய காதலியோடு வெளியே போக வேண்டி இருக்கலாம்


02. வெளியே செல்லும் போது சில இடங்களை வேண்டாம் என கூறுதல்.

நீங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தை கூறி அங்கு போகலாம் என கூறியவுடன் வேண்டாம் அங்கு சரியில்லை. வேறு இடத்துக்கு போவோம் என கூறினால் சில நேரம் அவரது காதலி அந்த பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம்.


03. அவரது சொந்தங்களுடன் பழகுவதை விரும்பாமல் இருத்தல்


அவரது சொந்தங்களான அவரின் தாய், சகோதரி போன்றோரோடு நீஙகள் பழகுவதை அவர் விரும்பாவிடினும் கொஞ்சம் கவனம். தனது மகன் அல்லது சகோதரன் ”வேறு பெண்ணை அல்லவா காதலிக்கிறான்” என உங்களிடம் சொல்லிவிட கூடிய அபாயம் இருக்கிறது. நண்பர்களிடம் ”மச்சான் நான் ரெண்டு பிகர லவ் பண்ணுறேன்” சொல்லும் நம்ம பிரதர்ஸ் தனது தாய், சகோதரிகளிடம் அப்படி சொல்ல மாட்டாங்க.


04. கண்கள் அலைபாய்தல்

உங்கள் காதலன் உங்களோடு நேரத்தை செலவிட்டு கொண்டிருக்கையில் கவனம் வேறு பக்கம் திரும்பினாலும் கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்க. ஏனென்றால் இரண்டு பேரை காதலித்தால் கட்டாயம் அவர் இதை விட நல்லதா யாராவது கிடைக்க மாட்டாங்களா என தேடி கொண்டிருக்கலாம். அல்லது மற்றைய காதலி வந்திடுவாளோ என்கிற பயமும் காரணமா இருக்கலாம்.


05. அவரது தொலைபேசி, மடிக்கணனி, பர்ஸ் போன்றவற்றை உங்களிடமிருந்து மறைத்தல்

அவர் தொலைபேசி கணனி போன்றவற்ளை உங்களிடமிருந்து மறைத்து வைத்திருந்தால், மேலும் பாஸ்வேர்ட் போட்டு எல்லாவற்றையும் மூடி வைத்திருந்தால், அவரது பேஸ்புக் போன்ற சமூக வலைபின்னல்களை உங்களிடமிருந்து மறைத்தால். நீங்கள் இருக்கும் போது அவருக்கு வரும் தொலைபேசி அழைப்புகளில் ”அப்புறம் பேசுறேன்” என்று சொல்லிட்டு கட் பண்ணினால் ரொம்பவே கவனம்.


06. உங்களை செல்லப் பெயர் கொண்டு அழைத்தல்

அவர் உங்களை செல்லப் பெயர் அல்லது பொதுப் பெயர் கொண்டு அழைத்தால் கொஞ்சம் கவனம். இதற்கு இரண்டு காரணம் இருக்கலாம். ஒன்று பொதுவான பெயர் கொண்டு அழைத்தால் தவறுதலாக மற்றைய காதலியின் பெயர் சொல்லிவிட தேவையில்லை. இரண்டாவது நீஙகள் தொலைபேசியில் அழைத்தால் மற்றைய காதலி முன்னாலே உங்கள் பொது பெயரை கூறி அது வேறு யாராவது என கூறி மழுப்பலாம்.


07. அவள் எனது முன்னால் காதலி இப்போ நாங்க ரொம்ப நல்ல பிரண்ட்ஸ் என கூறல்

ஏற்கனவே காதலித்து பிரிந்துவிட்டோம் என கூறி அவரோடு தொடர்பில்லை சும்மா கதைப்போம் என கூறினாலும் கவனித்துக் கொள்ளவும்.

Thursday 19 December 2013

வெளிநாட்டு வேலைக்கு போறீங்களா.? அப்ப இதை முதலில் படிங்க..!





சிங்கப்பூரில் சித்தாள் வேலைக்கு ஆட்கள் தேவை.. சவுதியில் சமையல் வேலைக்கு ஆட்கள் தேவை..’ கண்ணைப் பறிக்கும் கலரில் ஒட்டப்படும் இந்த போஸ்டர்களை நம்பி இன்னமும் பலபேர் போலிஏஜென்ட்களிடம் ஏமாந்து கொண்டி ருக்கிறார்கள். இப்படி எல்லாம் இஷ்டத் துக்கு போஸ்டர் ஒட்டி, வெளிநாட்டுக்கு ஆள் பிடிப்பது சட்டப்படி குற்றம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

வெளிநாட்டு வேலைக்கு ஆட்கள் எடுப் பவர்கள் குடிபெயர்வோர் பாதுகாவலரி டம் (Protector Of Emigrants) லைசென்ஸ் பெறவேண்டும். தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, கேரளா இந்த நான்கு மாநிலங் களுக்குமான குடிபெயர்வோர் பாதுகாவ லர் (பி.ஓ.இ) அலுவலகம் சென்னையில் இருக்கிறது. வெளிநாடு வாழ் இந்தியர் நலனுக்கான அமைச்சகத்தின் கீழ் செயல் படும் இந்த அலுவலகத்தில் ஐ.ஏ.ஏஸ். அதிகாரி பி.ஓ.இ-யாக இருக்கிறார்.

வெளிநாட்டு வேலைகளுக்கு ஆட் களை எடுக்கும் நிறுவனங்கள் 45 லட்ச ரூபாய்க்கு சொத்து மதிப்பும் 20 லட்ச ரூபாய்க்கு வங்கி உத்தரவாதமும் கொடுக்க வேண்டும். குறைந்தது 500 சதுர அடியில் சகல வசதிகளுடன் அலுவலகம் இருக்க வேண்டும். இதெல்லாம் இருந்தால் தான் லைசென்ஸ் கிடைக்கும். இந்த லைசென்ஸ் ஐந்தாண்டுகளுக்கு செல்லுபடியாகும். அதற்குள்ளாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பலாம்.

ஆள் பிடிப்பது குற்றம்


 லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள், பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து ஆட்களை இன்டர்வியூவுக்கு அழைக்க லாம். துண்டுப் பிரசுரங்கள் கொடுத்தோ, லோக்கல் சேனல்களில் விளம்பரம் செய்தோ, சுவரொட்டிகளை ஒட்டியோ ஆள் பிடிப்பது சட்டப்படி குற்றம். லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள் தவிர மற்றவர்கள் தனிநபர்களின் பாஸ்போர்ட் களை வாங்கி வைத்திருப்பதே கைதுக்குரிய குற்றம் என்கிறது சட்டம்.

வேலைக்கு ஆட்களை எடுக்கும் வெளி நாட்டுக் கம்பெனியானது பணியாளருக் க்கான குறைந்தபட்ச ஊதியம், விசா, தங்கு மிடம், உணவு, மருத்துவம், போக்கு வரத்து வசதி உள்ளிட்டவைகளை இலவச மாக அளிப்பதுடன், பணியாளர் இறக்க நேரிட்டால் பிரேதத்தை தங்கள் செலவி லேயே இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதாக வும் உத்தரவாதம் தரவேண்டும்.

வங்கி உத்தரவாதம்

 எதிர்பாராத விதமாக வெளிநாட்டில் இந்திய பணியாளருக்கு ஏதாவது அசம்பா விதம் நடந்தால் அதற்கான இழப்பீட்டுத் தொகையை வெளி நாட்டுக் கம்பெனியிட மிருந்து வாங்கிக் கொடுக்கும் பொறுப்பு இங்கி ருந்து ஆட்களை எடுத்து அனுப்பும் நிறுவனத்துடையது. இதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால், அந்த நிறுவனத்தின் வங்கி உத்தரவாதத்தை வைத்து அரசே சம்பந்தப்பட்ட பணியாளருக்கு இழப் பீட்டை வழங்கிவிடும்.

போலிகளை தண்டிக்க முடியும்


“நிறுவனங்கள் மூலமாக இல்லாமல், சுயமுயற்சியில் வெளிநாட்டு வேலை களுக்கு போகும் நபர்களுக்கு தினமும் நாங்களே இரண்டு மணி நேரம் வகுப்பு எடுக்கிறோம்’’ என்கிறார்கள் பி.ஓ.இ. அலுவலக அதிகாரிகள். “அதெல்லாம் சரி.. ஊர் ஊருக்கு பெட்டிக் கடை போட்டு வெளிநாட்டு வேலைக்கு ஆள் எடுப்பதாகச் சொல்லும் மோசடிக் கம்பெனிகளை தடுக்க முடியாதா?’’ என்று கேட்டால், “தமிழகத்தில் முறைப்படி லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள் 104 மட்டுமே. மற்ற வைகள் எல்லாமே போலிகள் தான். போலிகள் மீது நட வடிக்கை எடுக்க முடியும். ஆனால், எங்களி டம் அதற்கான மேன் பவர் இல்லை; போலீஸைத்தான் நம்ப வேண்டி இருக்கி றது. இதற்கு ஒரே வழி மக்கள் விழிப்புடன் இருப்பது தான்’’ என்கிறார்கள்.

சமையல் எண்ணை ஓர் தெளிவு!



சமையல் எண்ணையில் கொழுப்புச் சத்து அதிகமாக உள்ளது. கொழுப்புச் சத்துக்களை இரண்டுவகையாகப் பிரிக்கலாம்.


1) முழுமையடையாத கொழுப்பு (Poly unsaturated Acid)


2) முழுமையடைந்த கொழுப்பு (Saturated Fatty Acid)


இதில் முதல்வகைக் கொழுப்பில் அதிக தீங்குகள் இல்லை. இவை இரத்தக் குழாயில் படியாது. இதிலுள்ள Linolic Acid கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மையுடையது.

இரண்டாம் வகைதான் மிக ஆபத்தானது. இதில் உள்ள கொழுப்புக்கள் இரத்தக் குழாயில் படிந்து பெரும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது.

எனவே முழுமையடைந்த கொழுப்புக்கள் அதிகமாக உள்ள தேங்காய் எண்ணெய், நெய், பாம் ஆயில் போன்றவற்றை தவிர்த்துக் கொள்வதோடு சபோலா கார்டி ஆயில், கார்ன் ஆயில், சன் ஃபிளவர் போன்ற சமையல் எண்ணைகளை பயன்படுத்தி ஆரோக்கிம் காப்பீர்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
மனித வாழ்க்கையில் மரணம் என்பது தடுத்து நிறுத்த முடியாத ஒன்று, எனினும் நாம் உடல் நலத்துடன் வாழ முயற்சித்தல் வேண்டும். இவ்வளவு விஷயங்களை நம் வாழ்வில் நடைமுறைப்படுத்துவது சாத்தியம் தானா? முயன்றால் நம்மால் முடியும். அதே நேரம் மார்க்கக் கண்ணோட்டத்தோடு நோக்கினால் நிச்சயம் முடியும்.

ஐந்துக்கு முன் உள்ள ஐந்தினைப் பேணிக் கொள்ளுங்கள்.

1) முதுமைக்கு முன் உள்ள வாலிபம்

2) வறுமைக்கு முன் உள்ள செல்வம்

3) நோய்க்கு முன் உள்ள ஆரோக்கியம்

4) வேலைக்கு முன் உள்ள ஓய்வு

5) மரணத்திற்கு முன் உள்ள வாழ்வு


எனவே மேலே கூறியது போன்று நோய்க்கு முன் உள்ள ஆரோக்கிய வாழ்வினைப் பெற்று அதனைத் தக்க வைத்துக் கொள்ள மரணத்திற்கு முன் உள்ள வாழ்வில் வேலைக்கு முன் உள்ள ஓய்வினை உண்பதற்கும் உறங்குவதற்கும் மட்டுமே பயன்படுத்தாது நமக்கும், நம் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும், படைத்த இறைவனுக்கும் ஆற்ற வேண்டிய நற்செயல்களை கருத்தில் கொண்டு உணவுக் கட்டுப்பாட்டுடன் கூடிய உடற்பயிற்சி செய்து நோயற்ற வாழ்வு வாழ எல்லாம் வல்ல இறைவன் நமக்கு உதவி செய்வானாக!

Wednesday 18 December 2013

மரங்களை வெட்டுங்கள்......??



உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் ( குளோபல் வார்மிங் ) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால்  நீங்களும் ' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் '  என்று சொல்வீர்கள்.  அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற  முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள்  நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.


 மண்ணின் வில்லன்

 அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட  போகிற விஷ மரம்.  தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்' தான் அது.  ( பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை வெட்டிகொண்டே  விளக்கம் சொல்வாரே ! )

 நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை  இங்கு தூவியதாக ஒரு கருத்தும் ,  கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம் )  வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று ' யாம் அறியேன் பராபரமே'


ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய  பிரச்சனை....!? , இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம்.  முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.


இதன் கொடூரமான குணங்கள்


இவை எந்த  வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது.  பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி , தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது, ( அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் சில சுயநல  மனிதர்களை போல...! ) இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக  வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!


இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி  செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது..... ??!!  இப்படி காற்றின் ஈரபதத்தையும்  , நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.

தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே  முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.
   
   
உடம்பு முழுதும் விஷம்



இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது.  முக்கியமான விஷயம் ஒன்றும்  உள்ளது , ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான்.  இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால்  அவை மலடாகிவிடும் , அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....?!!


ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி  நீரை விஷமாக  மாற்றிவிடுகிறது மற்றொரு புறம்  இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ  முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு என்ற செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை.


காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது , ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற  காற்று மண்டலமே நச்சுதன்மையாக  மாறிவிடுகிறது.


அறியாமை


நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம்  என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.


கேரளாவின் விழிப்புணர்வு


நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!!  அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது.   ஆனால்  நம் தமிழ்நாட்டில் விறகிற்க்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??! என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??


ஆராய்ச்சியாளர்களும்,  இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.


நல்ல மரம் ஆரோக்கியம்


வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம்  இல்லையே என்பதே என் ஆதங்கம் .


சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?


இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....


இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....!  நம் மண்ணின் மாண்பை காப்போம்..

Tuesday 17 December 2013

பிடிவாதம்.....?



எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும், அனைத்து அதிகாரங்களையும் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் வைத்திருந்தாலும் இறுதியில் அவர்களது அழிவு அவர்களது ‘பிடிவாத’ குணத்தால்தான் நிகழ்கிறது. காலம், சூழ்நிலை, தன்நிலை, பிறர்நிலை, அறிவு சார்ந்த ஆய்வு, மாற்றத்தைப் புரிந்துகொள்ளல், புரிந்ததை ஏற்றுக் கொள்ளல் போன்றவற்றில் கவனம் செலுத்தாதவர்கள் தோல்வியடைகிறார்கள். உலகச் சர்வாதிகாரிகள் அனைவரும் இந்தப் பட்டியலில் இடம் பிடிப்பவர்களாகவே இருப்பார்கள். ஹிட்லர், முசோலினி, இடி அமீன், சதாம் உசேன் போன்றவர்களை உதாரணங்களாகக் கூறலாம்.


ஐரோப்பிய நாடுகள் அனைத்தையும் வென்ற ஹிட்லர், பிரிட்டனை ‘கோழிக்குஞ்சு’ என்று கூறிவிட்டு சோவியத் யூனியனை (ரஷ்யா) பிடித்தால் தான் என் ஆசை தீறும் என்ற ‘பிடிவாத’ குணத்தால் ரஷ்யாவின் மீது போர் தொடுத்தான். கால நிலைகளின் மாறுதல் அறியாமையாலும், அப்போதைய தன் படையின் பலவீனத்தாலும் ‘அவனது சவம்’ அங்கேயே புதைக்கப்பட்டது. பல நாடுகளின் தலைவனாக ஆட்சி செய்த ஹிட்லர் தனது ‘பிடிவாதத்தால்’ இறுதியில் தன்னையே இழந்தார்.


“தான் எடுத்த காரியத்தில் விடாமுயற்சியுடன், சிறதும் விட்டுக் கொடுக்காமல், எந்தத் துன்பம் வந்தாலும் வெற்றி பெறும் நோக்கத்துடன் போராடுவது பிடிவாதம் ஆகாது”.


“அதே சமயத்தில் எது எப்படி இருந்தாலும், எனது நிலையில் இருந்து பின்வாங்க மாட்டேன். அந்த நிலைப்பாடு தவறு என்று தெரிந்தாலும் மாற மாட்டேன் என்று இருப்பதுதான் பிடிவாதம்”.



நாம் பிறர் போற்றத்தக்க அல்லது மிக உயர்ந்த பதவியில் இருந்தாலும் இப்படிப்பட்ட குணம் உடையவர்களைப் பற்றி நம்மூர் மக்கள் கூறுவது:


    * காட்டான். ஒரு விஷயமும் தெரியாது.

    * தான் பிடித்த பிடியிலேயே இருப்பான், புரிய வைக்கவும் முடியாது.

    * பணம் மட்டும் இருக்கிறது, அறிவு கிடையாது.

    * தான் பிடிச்ச முயலுக்கு மூணு கால்னு நிப்பான்.



இலக்கியம் கூறுவது: 


மகாபாரதத்தில், துரியோதனனிடம் கிருஷ்ணர் கடைசியாகக் கேட்டது ஐந்து கிராமங்களையாவது பஞ்ச பாண்டவர்களுக்குத் தர வேண்டும் என்பதைத்தான். ஆனால், அதைக்கூடக் கொடுக்க முடியாது என்ற மூர்க்கத்தனமான பிடிவாதத்தால், துரியோதனன் அனைத்தையும் இழக்க வேண்டியதாயிற்று.

Sunday 15 December 2013

குழந்தை வளர்ப்பதில் சில தவறான பழக்க வழக்கங்கள் !

 
 
1. குழந்தை பிறந்தவுடன் குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே தரவேண்டும். வேறு எந்தப் பொருளும் என்ன காரணம் கொண்டும் ஊட்டக்கூடாது.


*
2. பிறந்த சில குழந்தைகளுக்கு மார்பகத்தில் பால் கட்டி தடித்து இருக்கும். இதை குழந்தை வீறிட்டு அழுவதையும் பொருட்படுத்தாது நசுக்கி விட்டு பாலை வெளியே எடுக்கும் பழக்கம் உள்ளது. இது நல்லது அல்ல. மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம்.


*
3. பச்சிளங்குழந்தை அழுவதற்கு காரணம் ‘உரம் விழுந்து இருக்கிறது’ என்று எண்ணி ‘உரம் எடுத்தல்’ என்று செய்கிறார்கள். இது தவறான பழக்கம். இப்படியொரு ‘நோய் நிலை’ இல்லை.


*
4. அடிக்கடி பேதியாகும் குழந்தைகளுக்கும் தொக்கம் எடுக்கிறார்கள். அப்படி ஒன்று கிடையாது. பேதியின் காரணம் என்ன என்று அறிந்து அதற்கான வைத்தியம் செய்ய வேண்டுமே தவிர தொக்கம் எடுப்பது தவறு - சில சமயம் விபரீதம் ஏற்படக் கூடும்.



பேதியை உடனே நிறுத்தும் மாத்திரையை கண்டிப்பாக உபயோகிக்கக் கூடாது. வயிற்றில் ஏதோ ஒரு பொருள் ஒதுங்கி உள்ளது என்று ‘தொக்கம் எடுத்தல்’ என்று சொல்கிறார்கள். இது இல்லாத ஒன்று. அது போல் குடல் ஏற்றம் என்று ‘குடல் தட்டல்’ என்று செய்கிறார்கள். இது தவிர்க்கப்படவேண்டும்.


*
5. சில குழந்தைகளுக்கு பிறந்து சில மாதங்களுக்கு தொப்புள் சிறிது வெளியே தள்ளிக் கொண்டு இருக்கும். அதை அமுக்கி காசு வைத்து கட்டும் பழக்கம் கூடாது. மாறாக தொப்புளைச் சுற்றி உள்ள பகுதியில் விரலை வைத்து சிறிது சிறிது அமுக்கி அமுக்கி விடலாம்.


*
6. சாம்பிராணி, கொமஞ்சான் புகை போடுவதால் சில குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்பட்டு மூச்சு திணறல் ஏற்படும் வாய்ப்பு உண்டு. அவை அவசியமில்லை; பயனுமில்லை.


*
7. சில பெரியவர்கள் மூக்கில் ஊதி சளியை எடுக்க முயல்கிறார்கள். இது தவறான பழக்கம். இதனால் இவர்களின் வாயில் உள்ள நுண்கிருமிகள் எளிதில் குழந்தைகளுக்குப் பரவும்.


*
8. தலைக்கு குளிக்க வைக்கும் முன் தலையில் எண்ணெய் தடவும் பழக்கம் உள்ளது. இதனால் எண்ணை தண்ணீருடன் முகத்தில் இறங்கி மூக்கு துவாரம் அருகே வரும்போது மூக்கு அனிச்சை செயலாக அதை உறிஞ்சி உள்ளே இழுத்து அதனால் சளி, நிமோனியா போன்ற நோய் வர வாய்ப்பு உள்ளது.



*
9. தோலில் சிலசமயம் நுண்கிருமிகளின் பாதிப்பால் சிறுசிறு சீழ் வைத்த பரு போன்று கூட்டாக ஏற்படுவதை ‘அக்கி’ என்று சொல்லி அதற்கு அக்கி எழுதுவதாக சிலர் நம்புகிறார்கள். மருந்தை உட்கொண்டாலே ஒழிய வெறும் அக்கி எழுதுவதால் போய் விடாது.

Saturday 14 December 2013

இது தான் சுதந்திரமா??



இது தவறு? இது தீமை? என்று சொல்லும் அரசுகள் அந்த தவறையும் அந்த தீமைகளையும் மக்களுக்கு உருவாக்கித் தருபவர்கள் மீது மட்டும் எந்த நடவடிக்கைகளும் எடுக்காமல் அதற்கு காரணமே நாங்கள் தான் என்ற உண்மையை மூடி மறைத்து புதிய,புதிய சட்டங்கள் மூலமும், புதிய புதிய தண்டனைகள் மூலமும் ஆளும் அரசுகளை தங்களை நம்பியிருக்கும் நாட்டு மக்களை அடிமைகள் போல நடத்தி வருகிறது.


"ஜனநாயக ஆட்சி" உள்ள நாட்டில் இருக்கிறோம்,நாங்கள் சுதந்திர நாட்டில் வாழ்ந்து வருகிறோம் என்று கொஞ்சம் கூட வெட்கப்படாமல் சொல்லிக்கொண்டு நாமும் அடிமை வாழ்க்கை முறையை வாழ்ந்து வருகிறோம். இதை நம்மில் எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம்.


உதாரணம் 1. புகைப்பிடித்தல் ஒரு மனிதனின் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என்று அறிவியலும்,அரசாங்கமும் சொல்கிறது.புகைப்பிடிப்பவர்களை விட அந்த புகை கலந்து வரும் காற்றை சுவாசிப்பவர்களுக்கு அது அதிக பாதிப்பை உண்டாக்குகிறது என்று ஆளும் அரசு பொது இடங்களில் புகைப் பிடிக்கும் தடை சட்டத்தைக் கொண்டு வந்து பொது இடங்களில் புகைப்பிடித்தால் அபராதம் என்று மக்களின் பொது இட சுதந்திரத்தை தடை செய்தது.


அதே நேரம் அந்த புகைபிடிப்புக்கு காரணமான அதை தயாரித்து விற்பனை செய்பவர்களை அரசு என்ன செய்தது? அந்த தயாரிப்புகளை தடை செய்ததா? ஒன்றுமே செய்யவில்லை, முதலில் தயாரித்து விற்பதை தடை செய்யாமல் அதை வாங்கி பயன்படுத்துபவர்களை துன்புறுத்துவது எந்த விதத்தில் நியாயம்?


"புகைப்பிடிப்பது கேடு" என்று வரும் போது மக்கள் மீது உண்மையிலேயே அக்கறை உள்ள அரசு என்ன செய்திருக்க வேண்டும்? அந்த தயாரிப்பை அல்லவா நிறுத்தி இருக்க வேண்டும்.


ஆனால் அப்படி செய்யவில்லையே அரசு.மாறாக நாங்கள் தயாரித்து விற்போம் அதை நீங்கள் எல்லா இடங்களிலும் பயன்படுத்தினால் அபராதம் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்? ஒரு தனி மனிதனின் சுதந்திரத்தில் தலையிடும் இந்த செயல்தான் ஜனநாயக ஆட்சி முறையா?


உதாரணம்: 2 மது குடித்தல் தீமை என்பது எல்லோருக்கும் தெரியும்.ஆனால்,மது குடித்தல் "நாட்டுக்கும், வீட்டுக்கும், உயிருக்கும் கேடு" என்ற வாசகத்துடன் அரசே அந்த மதுவை மக்களுக்கு விற்பனை செய்யும் கேவலமான செயலை என்னவென்று சொல்வது?மக்களின் நலம் பேணும் அரசு என்று வாய் கூசாமல் பொய்களை பேசி மக்களை ஒரு போதைக்குள் வைத்துக் கொண்டு அவர்களுடைய உயிரை கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கும் இந்த பாவச்செயலுக்கு என்ன பரிகாரம் தேடப் போகிறது ஆளும் அரசுகள்.


உதாரணம்: 3 பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதால் அது நம்மை தாங்கி நிற்கும் பூமித்தாய்க்கு தீமை, அதனால் இந்த பூமியில் வாழும் நமக்கும் தீமை என்று வாய் கிழிய வக்கனையாக பேசும் அரசு அந்த பிளாஷ்டிக் பொருட்களில் தயாரிப்பை நிறுத்துவதை விட்டு விட்டு அதை வாங்கி பயன்படுத்தும் மக்களை மட்டும் தண்டிக்க நினைப்பது எந்த விதத்தில் நியாயம்?


உதாரணம்: 4 "ஹெல்மெட்" என்று சொல்லப்படும் தலைக்கவசம் போடுவது வாகன ஓட்டிகளுக்கு நல்லது தான் என்று சொல்கிறது இந்த அரசு, நாளுக்கு நாள் வாகன விபத்துகள் அதிகரித்து வருகிறது என்றும் அதை தவிர்க்க தலைக்கவசம் அணிந்து கொள்வதை கட்டாயமாக்கி மக்களின் சுதந்திரத்தை பிடுங்கிக் கொள்ளும் இந்த அரசு வாகன விபத்துக்கு மிக மிக முக்கிய காரணம் அந்த வாகனங்கள் செல்லும் சரி இல்லாத சாலைகள் தான் என்ற தனது தவறை மட்டும் என் ஒத்துக் கொள்ள மறுக்கிறது?எத்தனை விபத்துகள் சாலைகள் சரி இல்லாத காரணங்களினால் நடக்கிறது?இந்த தவறை மூடி மறைத்து விட்டு தலைக்கவசம் போடாமால் போவதால் தான் அதிக விபத்துகள் நடக்கிறது என்று சொல்வது எதில் சேர்த்தி?


உதாரணம் : 5 பலச்சாறுகளே கலக்காத வெளிநாட்டு குளிர்பானங்கள் நச்சுப் பொருட்கள் கலந்தது என்று அறிவியல் ஆய்வுகள் சொல்கிறது, அதை குடித்தால் மனித உடலுக்கு தீங்கை விளைவிக்கும் என்று அறிவியல் அதை நிரூபித்தும் விட்டது,ஆனால் இதுவரை ஆளும் அரசுகள் அந்த வெளிநாட்டு குளிர்பானங்களை தடை செய்திருக்கிறதா? இல்லையே? மாறாக அதை காற்று புக முடியாத இடத்தில் கூட விற்பனை செய்ய வைத்து வேடிக்கை பார்த்து விட்டு அந்த நிறுவனங்கள் தரும் வரிப்பணத்தில் ஆட்சி நடத்துகிறது.


இந்த கேவலத்தையும்,காட்டு மிராண்டித்தனத்தையும் எங்கு போய் சொல்வது? இப்படி பல தவறுகளை உதாரணங்களாக சொல்லிக் கொண்டே போகலாம்.


"சுதந்திரமான நாட்டில் வாழ்கிறோம்" என்று நாம் சந்தோசப்பட்டுக் கொண்டாலும்,அல்லது "சுதந்திரமாக வாழ்கிறோம்" என்று நாம் நினைத்துக் கொண்டாலும் உண்மையில் ஒரு நிமிடம் நாம் சிந்தித்துப் பார்த்தோமானால் ஆளும் அரசுகளால் நாம் "அடிமைப்படுத்தப்பட்டு வருகிறோம்" என்ற அதிர்ச்சியான உண்மைகள் புலப்படும்.


மக்கள் தவறு செய்தால் அரசாங்கம் சட்டங்களைப் போட்டு தண்டிக்கிறது, ஆனால் அரசாங்கமே தவறு செய்தால்..?

மது அருந்துபவர்களுக்கு இனிப்பான தகவல்!



மது அருந்துபவர்கள் கல்லீரலின் முக்கியத்துவம் தெரியாமல் இருக்கிறார்கள். மது அருந்துபவர்களுக்கு கல்லீரல் கடுமையாக பாதிக்கப்படும். இந்த கல்லீரல் மற்ற எல்லா உறுப்பகளையும் விட அதிகமான பணிகளைச் செய்கிறது. 500 வேலைகளைச் செய்கிறது 1000 க்கும் மேற்பட்ட என்சைம்களை உருவாக்குகிறது.


உங்கள் தாய், தகப்பன், மனைவி, குழந்தைகள் இவர்கள் அனைவரையும் விட உங்கள் மேல் அக்கறை உள்ள ஒருவர் உண்டென்றால், அது லிவர் எனப்படும் கல்லீரல் மட்டுமே.


முடி கொட்டிவிடுமே என்று கவலைப்படுகிற அளவுகூட கல்லீரல் கெட்டுவிடுமே என்று கவலைப்படாமல் இருப்பவர்களைக் கண்டால் வேதனையாக இருக்கிறது. சில கல்லீரலின் பணிகளைச் சொல்கிறேன் கேளுங்கள்.


 உங்கள் கையில் ஒரு பிளைடு அறுத்துவிட்டது என்று வைத்துக் கொள்வோம், உடனே கல்லீரல் என்ன செய்யும் தெரியுமா பதறிப்போய் அந்த இடத்துக்கு Prothrombin என்ற இரசாயனத்தை அனுப்பிவைக்கும். அந்த இரசாயனம் இரத்தத்தை உறையச்செய்து இரத்தப் போக்கை நிறுத்தும். கல்லீரல் மட்டும் அந்த இரசாயனத்தை அனுப்பவில்லை என்றால் அந்த சிறு காயமே போதும் உங்கள் முழு இரத்தமும் வெளியேறிவிடும். கல்லீரல் கெட்டுப் போனால் அதுதான் நடக்கும்.


பிறகு நீங்கள்(குடிப்பவர்கள்) போனால் போகட்டும் போடா என்று பாடிக் கொண்டே போய்விட வேண்டியதுதான். அது மட்டுமா இப்போதெல்லாம் எதெற்கெடுத்தாலும் மத்திரைதான் ஒரு சிறு தலைவலி என்றால் கூட உடனே மெடிக்கலுக்கு ஓடிப்போய் ஒரு மாத்திரையை வாங்கி உள்ளே தள்ளிவிட வேண்டியது.


இப்படி கண்ட கண்ட மாத்திரைகளை உள்ளே தள்ளுவதால் மாத்திரையிலுள்ள விஷத்தன்மை நம் உடலை பாதிக்கா வண்ணம் கல்லீரல் அந்த விஷத்தன்மையை முறிக்கிறது. அப்படி அது செய்ய வில்லை என்றால் விஷத்தன்மை நேராக இதயத்துக்குச் சென்று இதயத்தை செயலிழக்கச் செய்துவிடும். பிறகு இதயமே இதயமே என்று ஒப்பாரி வைக்க வேண்டியதுதான்.


''எவ்வளவு குடித்தாலும் ஸ்டெடியாக இருப்பேன்'' அட மரமண்டைகளா நீங்கள் குடிக்கும் மதுவின் விஷத்தன்மையை முறிக்க கல்லீரல் இரவு முழுவதும் போராடிக் கொண்டிருக்கிறது. அதுக்கு அதிகமாவேலையைக் கொடுத்து அது கெட்டுப் போச்சுன்னா அப்புறம் நீ ஸ்டெடியா மூச்சுகூட விட முடியாது.


 ''கல்லீரல் என்பது கழுதை. பாரம் சுமக்கும். படுத்தால் எழாது''. இதையும் நான் சொல்லவில்லை. ஐயா வைரமுத்து அவர்கள் குடியால் கெட்டுப்போய் மாய்ந்து போகிறவர்களைக் கண்டு வேதனையோடு சொன்னது.

Friday 13 December 2013

பெண்களின் வாழ்க்கையை சிதைக்கும் ஆண் நட்பு...



பழகும் போதே மொத்தத்தில் ஆண் நண்பர்களின் மனநிலையை புரிந்து கொள்ளுங்கள். தவறான நட்பை ஆரம்பத்திலேயே துண்டித்து விடுங்கள். சமூகத்தை புரிந்து கொண்டு பழகுங்கள். பருவ வயது ஆரம்பிக்கும் டீன்ஏஜ் பருவத்தில் தான் எதிர்பாலினர் மீது கூடுதல் ஈர்ப்பு தொடங்குகிறது. பள்ளி செல்லுதல், டியூசன் செல்லுதல் போன்ற நேரங்களில் தான் பெண்களுக்கு ஆண்களை சந்திக்கும் வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கிறது. இயல்பாக பழகியும் விடுகிறார்கள்.


பள்ளி வயதில் ஒரு கட்டுபாட்டுக்குள் இருக்கும் அவர்கள் கல்லூரிக்கு சென்றதும் சுதந்திரமாக ஆண் நண்பர்களுடன் பழக வாய்ப்பு கிடைக்கிறது. சிலருக்கு பெற்றோரை விட்டு தங்கி படிக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படுகிறது. நட்பு என்கிற ரீதியில் கல்லூரிக்குள் கூட்டமாக அமர்ந்து அரட்டையடிப்பதில் கிடைக்கிறது புதுப்புது நண்பர்களின் பழக்கம். இது மட்டுமல்லாமல் கல்லூரியை விட்டு பெண்கள் வரும் வழியிலும், அவர்கள் அடிக்கடி செல்லும் இடங்களிலும் சந்திக்க நேரும், நட்பாய் பழகநேரும் ஆண்களுடனும் பழக்கம் ஏற்படுகிறது. கல்லூரி வட்டத்தை தாண்டி வெளியில் ஏற்படும் பழக்கம்தான் நிறைய பேரின் வாழ்க்கையை சிதைக்கிறது.


இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட ஆண் நண்பர்களுடன் பழகும் வாய்ப்பு கல்லூரிக்குள்ளும், கல்லூரிக்கு வெளியிலும் இயல்பாகவே பெண்களுக்கு கிடைக்கிறது. சில காலத்துக்கு பிறகு இந்த ஆண் நண்பர்கள் வட்டத்தில் யாராவது ஒருவன் தனக்கு மிகவும் பிடித்தமானவனாக இருக்க, அவன் அவளுக்கு `பெஸ்ட் ஃபிரண்டாக` மாறி விடுகிறான். நல்ல வேலையில் இருக்கிறான், நன்றாக படிக்கிறான், என்னை நேசிக்கிறான், எனக்காக காத்திருக்கிறான், பரிசு வாங்கி தருகிறான், நல்ல நேரத்தில் உதவினான் என்று அவர்களுக்கு சாதகமான ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லிக் கொண்டு அன்பை வளர்க்கிறார்கள். இந்த நட்பு எல்லை மீறி ஏமாறும் போது தான் பெண்களுக்கு பிரச்சினை ஏற்படுகிறது.


பல பெண்கள். எவ்வித பிரச்சனையும் இல்லாமல் திருமணம் செய்து கொண்ட பெண்களுக்கு வேறு ரூபத்தில் பிரச்சினை ஏற்படுகிறது. இவர்களுக்கு சிக்கல் ஏற்படுவதே திருமணத்துக்குப் பிறகு தான். இவர்களை மணந்து கொள்ளும் ஆண்கள், திருமணத்துக்கு முந்தைய தங்கள் மனைவியின் ஆண் நட்பு வட்டம் பற்றி இயல்பாக பேசி தெரிந்து கொள்கிறார்கள். பெண்களின் ஆண் நட்பை அப்படியே ஏற்றுக் கொள்ளும் கணவர்கள் எவருமில்லை.


மனைவி இயல்பாகவே தன் பாய் ஃபிரண்டை கணவனிடம் அறிமுகப்படுத்தினாலும், அவர்களுடன் பழகநேர்ந்த தருணங்களை நினைவுபடுத்தினாலும் கணவருக்கு உள்ளுர சந்தேகம் வலுத்துக் கொண்டே போகிறது.


இதற்குப்பிறகு கணவன்-மனைவிக்குள் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், முதலில் கணவன் ஆரம்பிப்பது பாய் ஃபிரண்ட் பற்றிய பேச்சைத்தான். அடிக்கடி நடக்கும் இதுபோன்ற பிரச்சினை நேரங்களில் எல்லாம் கூசாமல் மனைவி மீது சந்தேக அம்பை வீசி விடுகிறான் கணவன். இதனால் ஏராளமான பெண்களின் வாழ்க்கை பாழாகி இருக்கிறது. இப்படிப்பட்ட சந்தேகப் பிரச்சினைகளால் தகராறு ஏற்பட்டு விவாகரத்துக்குச் செல்பவர்கள்தான் ஏராளம்.

மருத்துவ கழிவுகளால் விளையும் பேராபத்து!




உயிரி மருத்துவக் கழிவுகள் தொடர்பான சட்ட விதிகளை மீறியதாக ஒடிசா மாநிலம் ஜெகத்சிங்பூர் சார்பு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அஞ்சன் குமார்தாஸ் என்பவர் மீது அண்மையில் தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு இரண்டாண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.மருத்துவக் கழிவுகள் என்பது மருத்துவமனையில் நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்குப் பிறகு, வெளியேற்றப்படும் கழிவுப் பொருள்கள் ஆகும். அதாவது பயன்படுத்தப்பட்ட சிரிஞ்சுகள், ஊசிகள், கத்தி, ரத்தக்குழாய்கள், செயற்கை சுவாசக் குழாய்கள், ரத்தம் மற்றும் சீழ் துடைக்கப்பட்ட பஞ்சுகள், பேண்டேஜ் துணிகள், கையுறைகள் போன்றவை.


சில நோய்களுக்கு உடல் உறுப்புகளையே அகற்ற வேண்டியுள்ளது. உதாரணமாக சர்க்கரை நோய் போன்றவற்றுக்கு, பாதிப்பின் நிலையைப் பொருத்து விரல்கள் அல்லது கை, கால் போன்ற உறுப்புகளை அகற்ற வேண்டியுள்ளது. அதுபோல் மருத்துவ ஆய்வுக் கூடங்களிலிருந்து நுண்ணுயிர்க் கிருமிகள் கலந்த கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. இவையும் கழிவுகள் பட்டியலில் சேர்க்கப்படுகின்றன.


இவை மட்டுமின்றி காலாவதியாகும் மருந்துப் பொருள்களும் கழிவுப் பட்டியலில் சேர்கின்றன. ரத்த வங்கிகளில் சேமிக்கப்படும் ரத்தம் கூட குறிப்பிட்ட நாள்களுக்குப் பின்னர் பயனற்ற கழிவாகிறது. இவ்வாறு சேரும் கழிவுகளை முறையாக அழிப்பதற்கென, சுற்றுச்சூழல் விதிமுறைகள் உள்ளன.


ஆபத்தை ஏற்படுத்தும் மருத்துவக் கழிவுகள் பெரும்பாலான இடங்களில், முறையாக அகற்றப்படாமல் அப்படியே குப்பையில் கொட்டப்படுகின்றன. குப்பையில் சேரும் மருத்துவக்கழிவுகள் நோய் பரப்பும் கிருமிகளாக உருவெடுக்கின்றன. இதனால், ஒரு நோயாளியை குணமாக்கியதன் காரணமாக வெளியேற்றப்பட்ட மருத்துவக் கழிவுகள் பத்து நோயாளிகள் உருவாகக் காரணமாகின்றன.


இது குறித்து மருத்துவ கழிவுகள் அகற்றம் பற்றி மாசு கட்டுப்பாடு வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மருத்துவமனைகளில் ஏற்படும் கழிவுகள் தரம் வாரியாக பிரிக்கப்படுகிறது. மனித உடற்கூறு கழிவுகள், நுண்ணுயிர் கழிவுகள், கூர்முனை கழிவுகள் (ஊசி) என 10 வகையான கழிவுகளை மருத்துவமனை ஊழியர்களே பிரித்து விடுவார்கள். இந்த கழிவுகள் மஞ்சள், சிகப்பு, கருப்பு மற்றும் புளூ அல்லது வெள்ளை கவரில் சேகரித்து வைக்கப்படும்.


பின்னர் தனியார் ஊழியர்கள் ஒவ்வொரு மருத்துவமனையாக சென்று அனைத்து கழிவுகளையும் சேகரித்து பாதுகாப்பான இடங்களில் எரித்தும், புதைத்தும் அழித்து விடுவார்கள். மருத்துவ கழிவுகளை சேகரித்து எரிப்பதற்காக, செங்கல்பட்டு, காட்பாடி, ஊட்டி, ராமநாதபுரம், சேலம், கோவை, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட 12 இடங்களில் நிலையங்கள் உள்ளன.


தமிழகத்தில் தினமும் 26 டன் மருத்துவ கழிவுகள் அப்புறப்படுத்தப்படுகிறது. சராசரியாக ஒரு படுக்கைக்கு 250 கிராம் மருத்துவ கழிவுகள் சேரும். அவற்றை 48 மணி நேரத்துக்குள் அப்புறப்படுத்த வேண்டும். இது ஒழுங்காக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கண்காணிப்பார்கள். மீறும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.


இந்திய மருத்துவமனைகளில் சேரும் மருத்துவக் கழிவுகளில், பாதிக்கும் மேற்பட்டவை முறையாக அழிக்கப்படுவதில்லை என்றும், அவை நகராட்சி குப்பைத் தொட்டிகளில் கொட்டப்படுவதாகவும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருந்தது.இந்தியாவில் மருத்துவமனை களிலிருந்து நாள்தோறும் பல லட்சம் கிலோ அளவுக்கு மருத்துவக்கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.”என்று சொன்னார்


மேலும் சில ஆண்டுகளுக்கு முன் புது தில்லியிலுள்ள குப்பைமேடு ஒன்றில் பழைய பொருள்களை சேகரித்த ஆறு பேருக்கு உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. குப்பையிலிருந்த மருத்துவக் கதிரியக்கப் பொருளை கையில் எடுத்ததால் வந்த பாதிப்பு என்பது விசாரணையில் தெரியவந்தது. பாதிக்கும் மேற்பட்ட மருத்துவக் கழிவுகள் இந்தியாவில் எங்கும் முறையாக அழிப்பதில்லை என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அப்போது தெரிவித்தது.


குப்பைகளில் போடப்படும் ஊசி, சிரிஞ்ச் போன்வை,பள்ளிக் குழந்தைகளின் கண்களில் படும்போது ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. அறியாமல் டாக்டர் விளையாட்டு என குப்பையில் போடப்பட்ட ஊசியை எடுத்து பயன்படுத்தும்போது குழந்தைகளுக்கு நோய் பரவ வாய்ப்புள்ளது.


சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழலேரிக் கரையை ஒட்டி மருத்துவக் கழிவுகள் ஏராளமான அளவில் கொட்டப்பட்டு நீராதாரம் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் மருத்துவக் கழிவுகளால் தொற்றுநோய் பாதிப்பு ஏற்படும் ஆபத்து உள்ளதால் அவற்றை முறையாகக் கையாளவும், அழிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். மருத்துவக் கழிவுகளைக் கையாளவும், அழிக்கவும் பெரிய மருத்துவமனைகளில் வசதிகள் உள்ளன. ஆனால் சிறிய மருத்துவமனைகளில் இதுபோன்ற வசதிகள் குறைவாகவே உள்ளன. எனவே மருத்துவக்கழிவுகளை முழுமையாக அழிப்பதற்கான “ட்ரீட்மெண்ட் பிளாண்ட்’டுகளை அதிகரிக்க வேண்டியுள்ளது.


“ட்ரீட்மெண்ட் பிளாண்ட்’டுகளில் “இன்சினரேட்டர்’, “மைக்ரோவேவ்ஸ்’ போன்ற எரிப்பான்கள் மூலம் உயர் வெப்பநிலையில் எரித்தல் போன்ற முறைகளைக் கையாண்டு மருத்துவக்கழிவுகள் அழிக்கப்படுகின்றன.


சிறிய மருத்துவமனைகளின் கழிவுகளை வாங்கி அழிக்க அரசும், தனியாரும் ட்ரீட்மெண்ட் பிளாண்ட்டுகளை அதிகரிக்க முயற்சிக்க வேண்டும். மேலும் அவ்வப்போது மருத்துவமனைகளுக்குச் சென்று, மருத்துவக் கழிவுகள் முறையாக அப்புறப்படுத்தப்படுகிறதா என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.


கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டால் மருத்துவக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கலாம். மருத்துவமனைகளுக்குச் சென்று ஆய்வுகளில் ஈடுபடும் அமைச்சர்களும், அதிகாரிகளும் மருத்துவக் கழிவு மேலாண்மை குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும்.

Wednesday 11 December 2013

கியாஸ் கசிவு ஏற்பட்டால் புகார் செய்ய இலவச தொலைபேசி வசதி..!




  கியாஸ் கசிவு ஏற்பட்டால் புகார் செய்ய 24 மணி நேர இலவச தொலைபேசி வசதி - ஐ.ஓ.சி அறிமுகம் இந்தியன் ஆயில் நிறுவனம் இன்டேன் கியாஸ் வாடிக்கையாளர்களுக்காக புதிய இலவச தொலைபேசி வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.


அந்த எண் 1800-425-247-247.


தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள இன்டேன் வாடிக்கையாளர்களுக்கு உதவுவதற்காக இந்த வசதி தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 80 லட்சம் கியாஸ் இணைப்புகள் உள்ளன.


475 ஏஜென்சிகளின் கீழ் இந்த வாடிக்கையாளர்கள் உள்ளார்கள். தற்போது அவசர தேவைக்கு 3 செல்போன் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதை டிஸ்ட்ரிபியூட்டர்கள் கையாளுகிறார்கள். அலுவலக நேரம் தவிர, மற்ற நேரங்களில் அவசர உதவிக்கு புகார் செய்ய முடியாத நிலை இருந்தது. எனவே இந்தியன் ஆயில் நிறுவனம் இந்த புதிய சேவை வசதியை ஏற்படுத்தி உள்ளது.


இந்த தொலைபேசி மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை செயல்படும். சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் 24 மணிநேரமும் இயங்கும். கியாஸ் கசிவு பற்றி இரவு நேரத்தில் புகார் செய்தாலும் உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதி மெக்கானிக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்படும்.


உடனடியாக அவர் கியாஸ் கசிவை பார்த்து விட்டு கால்சென்டருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

Tuesday 10 December 2013

கம்ப்யூட்டரால் வரும் கண் பிரச்னை! அதன் அறிகுறிகள் எப்படியிருக்கும்? தீர்வுகள் என்ன?



கம்ப்யூட்டர் என்பது இன்று அனேகம் பேருக்கு மூன்றாவது கை மாதிரி. அது இன்றி ஒரு நிமிடம் கூட நகராது. உணவு, உறக்கமெல்லாம் கூட இரண்டாம் பட்சம்தான். கம்ப்யூட்டர்தான் வாழ்க்கை பலருக்கும். அந்தளவுக்கு கம்ப்யூட்டர் பயன்பாடு தவிர்க்க முடியாததாகி வருகிற நிலையில், இடைவெளியே இல்லாமல் 24 மணி நேரம் கம்ப்யூட்டரே கதி என இருப்பவர்களுக்கு ‘கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்’ என்கிற பிரச்னை வரலாம் என எச்சரிக்கிறார் கண் மருத்துவ நிபுணர் பிரவீன் கிருஷ்ணா.


அதென்ன ‘கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்’? அதன் அறிகுறிகள் எப்படியிருக்கும்? தீர்வுகள் என்ன? எல்லாவற்றையும் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் அவர். ‘‘அதிக நேரம் கம்ப்யூட்டர் உபயோகிக்கிறவங்களுக்கு கண்கள் வறண்டு, கண்ணீரே இல்லாமப் போகலாம். அடிக்கடி தலைவலி, கண்கள் இழுக்கிற மாதிரி உணர்வு, கண்கள் துடிக்கிறது, எரிச்சல், பார்வை மங்கின மாதிரி உணர்வு... இதெல்லாம் கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோமோட அறிகுறிகளா இருக்கலாம்.


சதா சர்வ காலமும் கம்ப்யூட்டரே கதியா இருக்கிறவங்க, ‘20 - 20 - 20’ விதியைப் பின்பற்றியே ஆகணும். அதாவது 20 நிமிடங்களுக்கு ஒரு முறை, 20 நொடிகளுக்கு, 20 அடி தொலைவுல உள்ள காட்சியைப் பார்க்கணும். உள்ளங்கைகளை சூடு பறக்கத் தேய்ச்சு, மூடின கண்கள் மேல வச்சு எடுக்கலாம். கண்கள் ரொம்ப வறண்டு போனா, கண் மருத்துவரைப் பார்க்கணும்.



வறட்சியோட அளவைப் பொறுத்து, தேவைப்பட்டா, கண்களுக்கான செயற்கை கண்ணீர் மருந்துகளைப் பரிந்துரைப்பாங்க’’ என்கிற டாக்டர் பிரவீன், கம்ப்யூட்டர் வேலையில் சேர்வதற்கு முன்பே, கண் பரிசோதனையை மேற்கொண்டு, ஆலோசனை பெறுவது பாதுகாப்பானது என்றும் அறிவுறுத்துகிறார்.


‘‘கிட்டப்பார்வையும் இல்லாம, தூரப்பார்வையும் இல்லாம கம்ப்யூட்டருக்கு நடுத்தர பார்வை தேவை. கண்ணாடி தேவைப்படும்போது, தூரப்பார்வைக்கும் கிட்டப்பார்வைக்குமான கண்ணாடி கம்ப்யூட்டருக்கு சரி வராது. கம்ப்யூட்டர் வேலைக்கான பிரத்யேக கண்ணாடிகள் இருக்கு. ஸ்பெஷல் கோட்டிங்கோட, நடுத்தரப் பார்வைக்கான அதைக் கேட்டு வாங்க வேண்டியது அவசியம். கம்ப்யூட்டருக்கும் உங்களுக்குமான இடைவெளி சரியா இருக்கணும்.


பாதங்கள் தரையைத் தொடற மாதிரி உட்காரணும். 90 டிகிரி கோணத்துல உட்கார்றது சரியா இருக்கும். கம்ப்யூட்டருக்கு ‘ஆன்ட்டி ரெஃப்ளெக்ஷன் மானிட்டர்’ போடறதும் கண்களைப் பாதுகாக்கும். பொதுவா 40 பிளஸ்ல இருக்கிறவங்களுக்கு, வெள்ளெழுத்தோட சேர்ந்து, இந்த கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் பிரச்னையும் வரும்.

Sunday 8 December 2013

உங்கள் அக்கவுண்டில் பணம் குறைகிறதா? உஷார்!


முன்பெல்லாம் ரொக்கமாகப் பணத்தை கையில் வைத்துக் கொள்ள பயப்படுவார்கள். ஆனால் இப்போது டெபிட் கார்டுகளை வைத்திருக்கதான் அதிகம் பயப்பட வேண்டிருக்கிறது. காரணம், சமீப காலமாக பலருடைய பேங்க் அக்கவுன்டில் இருந்து அவர்களுக்குத் தெரியாமல் பணம் சூறையாடப்பட்டு விடுவதுதான்.


ஏ.டி.எம். கார்டில் இருக்கும் தகவல்களை 'ஸ்கிம்மர்’ எனும் கருவி மூலம் அபகரித்து, அதைக் கொண்டு போலி கார்டுகளை உருவாக்கி, பணத்தை எடுத்து விடுகிறார்கள் சில சமூக விரோத சக்திகள்.


குறிப்பாக சென்னை போன்ற நகரங்களில் இத்தகைய நவீன கொள்ளைகள் அதிகமாக நடந்து வந்தாலும், மற்ற இடங்களிலும் நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.


அதனால் பணத்தைப் பறிகொடுப்பதற்கு முன்பாக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டால்
 இழப்பைச் சந்திக்க வேண்டியதிருக்காது.


கவனிக்க வேண்டியவை :


 *வழக்கத்திற்கு மாறாக ஏ.டி.எம். இயந்திரத்தின் முன்பக்கத்திலிருந்து ஏதாவது வயர்கள் வெளியே செல்வதைப் பார்த்தால் அந்த இயந்திரத்தைப் பயன்படுத்தாதீர்கள்.


 *பின் நம்பரை டைப் செய்யும்போது, அதை யாரும் பார்க்காதபடி மறைத்துக் கொள்ளுங்கள்.


 *பரிமாற்ற ரசீதுகளை ஏ.டி.எம். இயந்திர அறையிலோ அல்லது அருகிலோ தூக்கி எறியாமல் கையோடு எடுத்துச் செல்லுங்கள்.


 *ஏ.டி.எம். இயந்திரத்தில் ஏற்படும் சந்தேகங்களுக்கு வங்கியைத் தவிர, அறிமுகம் இல்லாத வெளிநபரிடம் எந்த உதவியையும் கோர வேண்டாம்.


 *ஏ.டி.எம். சென்டரில் ஒன்றுக்கு மேற்பட்ட மெஷின்கள் இருந்து ஏதாவது ஒன்று வேலை செய்யாமல் இருந்தால், மற்றதைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. காரணம், மற்ற மெஷின்களை தற்காலிகமாகச் செயலிழக்கச் செய்து, 'ஸ்கிம்மர்’ கருவி பொருத்தப் பட்ட மெஷினை பயன்படுத்தும் வகையில் சமூக விரோதிகள் நமக்கு வலை விரித்திருக்கலாம்.


 *ஏ.டி.எம். இயந்திரத்தைச் சுற்றி சந்தேகப்படும்படியான விஷயங்கள் அல்லது நடமாட்டங்கள் ஏதேனும் இருந்தாலோ அல்லது உங்களது கணக்கில் நீங்கள் செய்யாத பரிமாற்றங்கள் இருந்தாலோ உங்களது வங்கிக்கும், காவல் துறைக்கும் முதலில் தெரியப்படுத்துங்கள்.


 *ஓட்டல்கள், கடைகள் போன்ற இடங்களில் பில்லை டெபிட் கார்டு மூலம் செலுத்தும் போது ஜாக்கிரதையாக இருப்பது அவசியம். ஏனெனில், நீங்கள் கார்டை கொடுத்து விட்டு உட்கார்ந்துவிட்டால், அதை ஸ்கிம்மர் பொருத்திய மெஷினில் ஸ்வைப் செய்தாலும் தெரியாமல் போய்விடும். அதன் மூலம் நம் ஏ.டி.எம். கார்டு தொடர்பான விஷயங்கள் நமக்கே தெரியாமல் திருடு போக வாய்ப்பிருக்கிறது.

Saturday 7 December 2013

பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள்!

 ஒரு பிளாஸ்டிக் பையின் சராசரி பயன்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் அது மக்குவதற்கு ஆகும் காலமோ நூற்றுக்கணக்கான ஆண்டுகள். வகையைப் பொருத்து இந்தக் காலம் மாறுபடும்.


Plastic waste - கடலில் மிதந்து கொண்டிருக்கும் கழிவுகளில் 90 சதவீதம் பிளாஸ்டிக்கே



- தற்போது உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்கில் வெறும் 7 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. அதாவது மறுபடி பயன்படுத்தப்படுகிறது. அப்படியானால், சென்னையில் ஒரு நாளில் மட்டும் கொட்டப்படும் கழிவு பிளாஸ்டிக்கின் அளவு 1,86,000 கிலோ.


சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்கள் தனித்தனியாக ஒரு நாளைக்கு 2,00,000 கிலோ (200 முதல் 250 டன். டன் என்றால் ஆயிரம் கிலோ) பிளாஸ்டிக் கழிவை உருவாக்குகின்றன. இதில் பாதி பிளாஸ்டிக் கழிவுகள் மட்டும் 4 சதுர கிலோ மீட்டர் பரப்பை அடைத்துக் கொள்ளும் தன்மை கொண்டவை. அடிக்கடி வீட்டுச் சாக்கடை, தெருச் சாக்கடை, மழைக்காலங்களில் மழை நீர் வடிகால் குழாய் போன்றவை அடைத்துக் கொண்டு நாறுவதற்கும், வெள்ளக் காடாவதற்கும் இந்த பிளாஸ்டிக்கே காரணம். இப்படி அடைத்துக் கொள்வதால் கழிவுநீர் தேங்குகிறது. ஆட்கொல்லி நோய்களைப் பரப்பும் கொசுக்கள், கிருமிகள் பல்கிப் பெருகி நோய் தாக்குவதற்கு நாமே வாய்ப்பு உருவாக்கித் தருகிறோம்.


நாம் அனைவரும் கவனக்குறைவாக வெளியேற்றும் கீழ்க்காணும் கழிவுகள்தான் நகராட்சி பிளாஸ்டிக் கழிவுகளில் 50 சதவீதத்தை உருவாக்குகின்றன.

- கேரி பேக்குகள்

- காய்கறி கேரி பேக்குகள்

- மளிகைப் பொருள் அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகள்

- பேக்கேஜிங் பைகள், சுருள்கள்

- வீட்டு குப்பை பைகள்

- வணிக குப்பை பைகள்

- தொழிற்சாலை லைனர்கள்

- மருத்துவ, ஹோட்டல் குப்பை பைகள்

மக்கிப் போவதற்கு ஆகும் காலம்
பிளாஸ்டிக் பைகள் 100-1000 ஆண்டுகள்

வாழைப்பழத் தோல் - 2-10 நாட்கள்

பஞ்சுக் கழிவுகள் - 1-5 மாதங்கள்

காகிதம் - 2-5 மாதங்கள்

கயிறு - 3-14 மாதங்கள்

ஆரஞ்சு தோல் - 6 மாதங்கள்

உல்லன் சாக்ஸ் - 1-5 ஆண்டுகள்

டெட்ரா பேக்குகள் - 5 ஆண்டுகள்

தோல் காலணி - 25-40 ஆண்டுகள்

நைலான் துணி - 30-40 ஆண்டுகள்

தகர கேன் - 50-100 ஆண்டுகள்

அலுமினிய கேன் - 80-1000 ஆண்டுகள்

பிளாஸ்டிக் ரிங்க்ஸ் - 450 ஆண்டுகள்

டயபர், நாப்கின் - 500-800 ஆண்டுகள்

பிளாஸ்டிக் பாட்டில்கள் - எக்காலத்திலும் அழியாது


எனவே, பிளாஸ்டிக் கேரி பேக், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்றவற்றை வாங்காதீர்கள். அந்தக் குப்பையை எந்த வகையிலும் உருமாற்றவோ, அழிக்கவோ முடியாது. இன்னும் 10, 20 ஆண்டுகளில் உலகம் கழிவு பிளாஸ்டிக்கால் நிரம்பி வழியும் என்று நம்பப்படுகிறது. நமது முதுமைக் காலத்தை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.


பிளாஸ்டிக் பைகளைத் தவிர்ப்பதற்கு இதற்கு மேல் வலுவான காரணம் வேண்டுமா?


சுத்தமான, மாசுபாடற்ற சுற்றுச்சுழலைப் பெறுவது ஒவ்வொருவரது அடிப்படை உரிமை


அனைத்து மாற்றங்களும் நம் வீட்டிலிருந்து, நம்மிடமிருந்தே தொடங்குகின்றன.

கிரெடிட் கார்டும்.. கஸ்டமர் கேரும்.?



கிரெடிட் கார்டு புழக்கம் அதிகமாக இருக்கற காலம் இது.. பெரும்பாலும் ஐ.டி துறையினர்தான் கிரெடிட் கார்டுக்கு அடிமையாய் இருக்காங்க.. ஒருமுறை கிரெடிட்கார்டை யூஸ் பண்ணிப் பழக்கப்படுத்திட்டோம்னா.. எந்தக் கடைக்குப் போனோம்னாலும் சரி.. நமக்கு எவ்வளவு சம்பளம்.. எவ்வளவுக்கு சாப்பிட வைச்சிருக்கோம் எதுவும் நினைப்பு இருக்காது.. எடுத்து சரக்.. முடிஞ்சது.. அடுத்து பில் வந்ததுக்குப் அப்புறம்தான் மண்டையில ஏறும்.. இதுக்கெல்லாம் பணம் கட்டனுமான்னு..

பொருட்கள் வாங்கினது என்னமோ நாமதான்.. வாங்கின பொருளை யூஸ் பண்ண மட்டும் நல்லா இருக்கும்... பணம் கட்டதாங்க அவ்ளோ கஷ்டமாயிருக்கு.. :-)

பில் வந்துடுச்சா.. நமக்கு என்னதான் வேற பிரச்சினை இருந்தாலும் சரி.. வேற தலை போற கமிட்மெண்ட் இருந்தாலும் சரி.. கார்டுக்குப் பில் கட்டிட்டா தப்பிச்சோம்.. இல்ல அடுத்த பில்லிங்ல கிரெடிட் லிமிட்டை விட ரெண்டு மடங்கு பில் வரும்..

நம்முடைய பில் 500.26 ரூபாய் அப்படின்னு வந்திருக்குனு வைச்சிக்குவோம்.. சரி ஒரு ரெளண்டா இருக்கட்டுமே அப்படின்னு 500 ரூபாய் மட்டும் கட்டினாலும் அடுத்த பில்லுல நமக்கு அதிர்ச்சி இருக்கு.. கட்டாம விட்ட .26 பைசாக்கு வட்டி போடறது மட்டுமில்லாம புதிய பில்லிங்ல இருக்கற அனைத்து பொருட்களுக்கும் சேர்த்துதான் வட்டி போட்டு அனுப்பியிருப்பாங்க..

டேய் என்னடா பண்ணியிருக்கீங்க.. நான் போனமாசம் கரெக்டா பில் கட்டியிருக்கண்டா.. எதுக்கு வட்டி அப்படின்னு கேட்டா.. கன்சர்ன் டிபார்ட்மென்ட்டுக்கு உங்க காலை டிரான்ஸ்ஃபர் பண்றேன் சார் வெயிட் பண்ணுங்கன்னு சொல்லிட்டு.. மியூசிக்கைப் போட்டு விட்டுட்டுப் போயிடுவாங்க கஸ்டமர்கேர்ல.. கொஞ்ச நேரத்துல யாராவது ஒருத்தன் காலை எடுத்து திரும்பவும் கதை கேட்டுட்டு.. சார் நீங்க .26 பைசாவைக் கட்டாம விட்டு இருக்கீங்க.. இது சிஸ்டமேட்டிக் இல்லையா.. அதனால ஏற்கனவே உங்க பில்லிங்ல .1 பைசா பெண்டிங் இருந்தாலும் அதுக்கும் இந்த மாச பில்லிங்கும் சேர்ந்துதான் வட்டி போடுவோம் சார்.. நீங்க எங்களோட டெர்ம்ஸ் அண்ட் கண்டிசன்ஸை திரும்பவும் படிச்சுப் பாருங்க தெரியும்னு சொல்லுவான்.. அப்ப வரும் பாருங்க கோவம்.. என்னாங்கடா நினைச்சுட்டு இருக்கீங்க.. .26 பைசா கட்டாம மிஸ் பண்ணினதுக்கு இவ்வளவு வட்டி போடுவீங்களான்னு ரொம்பக் கத்தினோம்னா.. சரிங்க சார்.. கம்ப்ளைண்ட் நம்பர் நோட் பண்ணிக்கங்க.. வித்தின் 48 அவர்ஸ்ல உங்க பிரச்சினையை சால்வ் பண்றோம்னு சொல்லிட்டு வைச்சிடுவான்..

இதெல்லாம் தேவையா.. தேவையா.. ஒழுக்கமா அந்த .26 பைசாவையும் சேர்த்து கட்டியிருந்தா இவ்வளவு கத்த வேண்டியிருந்திருக்குமா.. அப்படின்னு நொந்துக்கிட்டு.. புது பில்லை அவங்க பிராசஸ் பண்ற வரைக்கும் அவங்களைத் திரும்பத் திரும்ப ஃபாலோ பண்ண வேண்டியிருக்கும்..

திரும்பவும் பில்லை ப்ராசஸ் பண்றதுக்கு.. இன்னும் நாலு முறை தொங்கி.. நானு.. அப்படின்னு ஆரம்பிச்சு.. திரும்பவும் பில்லை பிராசஸ் பண்றேன்னு சொல்லியிருக்காங்க.. என்னப்பா சொல்றீங்கன்னு அழுதவுடனே.. அப்புறம் பில்மாறி வரும்..

மக்களே இது என்னுடைய எக்ஸ்பீரியன்ஸ் இல்ல.. நான் கிரெடிட் கார்டு வாங்கின அன்னைக்கு என்னோட பிரண்ட் ஒருத்தன் இப்படி ஒரு அனுபவத்தை சொன்னான்.. அதுல இருந்து பில் வந்ததுன்னா 5 ரூபாய் அதிகமாவே கட்டிடறது.. எதுக்கு வம்புன்னு..

இருந்தாலும் கிரெடிட் கார்டு வாங்கின புதுசுல அதை ஆன்லைன்ல அக்சஸ் பண்றதுக்கு பின் நம்பர் வேனும் இல்லையா.. அதை கார்டு அனுப்பி பின்னாடியே ஒரு 15 நாள்ல அனுப்புவானுங்க.. அது எனக்குத் தெரியாதே.. சரி கஸ்டமர் கேருக்குப் போன் பண்ணிக் கேப்பமே அப்படின்னு போன் பண்ணினேன்.. விசயத்தைக் கேட்டுட்டு.. சார் நாங்க வைச்சிருக்கற மெடிக்கிளைம் கார்டை சப்ஸ்கிரைப் பண்ணினாத்தான் புதுக் கஸ்டமருக்கு பின் நம்பர் அனுப்புவோம்.. உங்களுக்கு மெடிக்கிளைம் ஆக்டிவேட் பண்ணி விடட்டுங்களான்னு கேட்டுச்சு அந்தப் பொண்ணு..

அப்படியா... சரி இருங்க நான் திரும்ப போன் பண்றேன்னு.. எனக்கு அட்வைஸ் பண்ணின பிரண்டுக்குப் போன் பண்ணிக் கேட்டேன்... டேய் நல்லா மிளகாய் அரைச்சிருப்பாங்க உன் தலையில.. உனக்கு பின் நம்பர் வீடு தேடி வரும் வெயிட் பண்ணுன்னு சொல்லிட்டு வைச்சிட்டான்.. எனக்கு அடப்பாவிகளான்னு ஆயிடுச்சு.. சரி இனி இந்தப் பயிலுககிட்ட கொஞ்சம் கவனமாகவே இருக்கனும்னு மனசுக்குள்ள உறுதி மொழியெடுத்துக்கிட்டேன்..

ஒரு மாசம் முடிஞ்சது.. முதல் முறையா கிரெடிட் கார்டு வாங்கியிருந்தனா.. அதனால தினமும் கார்டை ஒருமுறை பெருமையாக எடுத்துப் பார்த்துட்டு பர்ஸ்குள்ள வைச்சுப்பேன்.. ஒரு நாள் திரும்பவும் ஒரு கால் வந்தது.. சார் மெடிக்கல் இன்சூரன்ஸ் ஒன்னு உங்க பேர்ல 4 லட்சத்துக்கு ஆக்டிவேட் ஆயிருக்கு சார்.. நீங்க ஓகேன்னு சொன்னா.. இந்தக் போன் காலவே கன்பர்மேசனா எடுத்துக்கிட்டு உங்களுக்கு கொரியர் பண்ணிடுவேன்.. நீங்க மாசம் அதுக்கு 4 ஆயிரம் ரூபாய் கட்டனும்.. அதையும் உங்க கார்டுல இருந்தே லவட்டிக்குவோம்னு சொல்லுச்சு அந்தப் பொண்ணு.. என்னம்மா சொல்ற.. நான் எந்த மெடிக்கல் இன்சூரன்ஸுக்கும் அப்ளை பண்ணவே இல்லையே அப்படின்னேன்.. இல்லங்க சார் நீங்க கார்டு அப்ளை பண்றதுக்கு ஃபாம் ஃபில் பண்ணிங்க இல்லையா.. அதுல இருந்த ஒரு செக் பாக்சை டிக் பண்ணிட்டீங்க.. அதனால உங்க பேர்ல அப்பவே ஆக்டிவேட் ஆயி இன்னும் டெலிவரி பண்ணாம இருக்கு அப்படின்னு சொல்லுச்சு அந்தப் பொண்ணு.. இல்ல வேணாம் கேன்சல் பண்ணிடுங்கன்னேன்.. ஃபார் டி ஆக்டிவேசன்.. யூ நீட் டூ பே 25000 ருபீஸ் சார் அப்படின்னு சொல்லுது..

எனக்கு பக்குன்னு ஆயிடுச்சு.. இது என்னடா வம்பாப் போச்சுன்னு நான் இதே நம்பருக்கு உங்களைக் கூப்பிடறேன்னு சொல்லிட்டு.. கஸ்டமர் கேருக்கு கால் பண்ணி விசயத்தை சொல்லி விவரம் கேட்டேன்.. அதுக்கு அங்கே இருந்த பொண்ணு.. சார் நீங்க சொல்ற மாதிரி எதுவும் கிடையாது.. பொய் சொல்லியிருக்காங்க.. ஆனால் உங்களுக்காக நான் ஒரு ஸ்பெசல் ஆஃபர் வைச்சிருக்கேன்.. உங்களுக்கு இன்ட்ரஸ்ட் இருக்கா சார் அப்படின்னு கேட்டுச்சு.. எனக்கு வந்தது பாருங்க கோவம்.. வாய் வரைக்கும் வந்திடுச்சு.. அடக்கிக்கிட்டு "நாட் இன்ட்ரஸ்டடு" அப்படின்னு சொல்லி வைச்சிட்டு.. எனக்கு ஃபோன் பண்ணி அன்னைக்கு நைட் தூக்கத்தைக் கெடுத்த பொண்ணுக்கு கால் பண்ணித் திட்டினேன் பாருங்க.. இதுவரைக்கும் தெரியாத பொண்ணுங்களை எல்லாம் திட்டினதே இல்ல.. அப்படி ஒரு திட்டு..

ஆனால் திட்டிட்டு வைச்சுட்டு கோவம்லாம் அடங்கினதுக்கு அப்புறம் யோசிச்சுப் பார்த்தேன்.. பாவம் அந்தப் பொண்ணு.. என்ன பண்ணும்.. அதோட பிழைப்பு அது.. இப்படி எல்லாம் பொய் சொல்லித்தான் ஒவ்வொருத்தரையா பிடிக்க வேண்டியிருக்குன்னு நினைச்சிக்கிட்டேன்..

சோ.. கிரெடிட் கார்டு யூஸ் பண்ணனும்னு முடிவு பண்ணிட்டோம்னா.. இதெல்லாம் நாம பாஸிட்டிவா எடுத்துக்கிட்டு.. நாம கவனமா இருந்துக்கனும்.. கஸ்டமர் கேர்ல இருந்து கால் பண்ணி எது வேனும்னு கேட்டாலும் சரி.. கண்ணை மூடிக்கிட்டு "நோ" சொல்லிடுங்க.. ரைட்டா..

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top