.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label உலகம். Show all posts
Showing posts with label உலகம். Show all posts

Tuesday 10 December 2013

உலக முதல் 10 மிக பணக்கார நாடுகள்!




உலக முதல் 10 மிக பணக்கார நாடுகள்


10). மெக்ஸிக்கோ:


பத்தாவது பணக்கார நாடு GNI தொகை $ 550.000.000.000 உள்ளது மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு GNI சதவீதத்தில் தொகை விகிதம் 1.8% ஆக $ 839.181.900.000 ஆகும்.

9). ஸ்பெயின்

 இந்த நாட்டின் GNI தொகை $ 558.000.000.000 உள்ளது மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு $ 1.223.988.000.000 மற்றும் GNI அளவு சதவீதம் 2% ஆகும்.

8). கனடா:


கனடாவின் GNI தொகை $ 628.000.000.000 உள்ளது மற்றும் GNI தொகை $ 1.251.463.000.000 மற்றும் GNI தொகை சதவீதம் 2.3% ஆகும்.

7). இத்தாலி:

இந்த நாட்டின் $ 1.120.000.000.000 GNI அளவு மற்றும் 3.7% என்ற GNI தொகை சதவீத $ 1.844.749.000.000 கொண்டிருக்கிறது.

6). சீனா:

GNI தொகை $ 1.130.000.000.000 உள்ளது மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு GNI அளவு விகிதம் சதவீதம் 3.8% ஆக $ 2.668.071.000.000 உள்ளது.

5). பிரான்ஸ்:

பிரான்ஸ் GNI தொகை $ 1.380.000.000.000 உள்ளது மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு 4.6% ஆக GNI தொகை சதவீத $ 2.230.721.000.000 உள்ளது.

4). ஐக்கிய ராஜ்யம்


 நான்காவது பணக்கார நாடு $ 1.480.000.000.000 என்ற GNI தொகை மற்றும் $ 2.345.015.000.000 அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு பிரிட்டன் உள்ளது மற்றும் GNI தொகை சதவீதம் 4.9% ஆகும்.

3). ஜெர்மனி:


GNI தொகை வீதம் $ 1.940.000.000.000 உள்ளது மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு விகிதம் ஜெர்மனி $ 2.906.681.000.000 மற்றும் GNI சதவீதத்தில் 6.5% ஆகும்.

2). ஜப்பான்:

இந்த $ 4.520.000.000.000 என்ற GNI தொகை மற்றும் $ 4.340.133.000.000 அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு இரண்டாவது பணக்கார நாடு உள்ளது மற்றும் GNI சதவீதம் 15.1% ஆகும்

1). ஐக்கிய அமெரிக்கா


GNI தொகை $ 9.780.000.000.000 மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு $ 13.201.820.000.000 மற்றும் GNI தொகை சதவீதம் கூட மற்ற நாடுகளில், அதாவது, 32,7% ஆகும் அனைத்து பிற நாடுகளில் பணக்கார நாடாக உள்ளது.

Monday 9 December 2013

கண்டங்களின் பெயர்ச்சி....

எல்லோரும் உலக வரைப்படத்தைப் பார்த்திருப்பர். அதில் கண்டங்களின் வடிவையும் இடங்களையும் பார்த்திருப்பர். என்றாலும்கூட அவர்கள் இன்று காண்பது போலவே உலகம் என்றும் ஒரே அமைப்பில் காணப்பட்டதில்லை.


எழுபது ஆண்டுகளுக்கு முன்னால், அல்பிரட் வெக்கனர் என்னும் பெயரிய நிலநூல் அறிஞர் ஒருவர், இன்று காணப்படும் கண்டங்கள் இப்போது இருப்பதை விட மிக நெருக்கமாக இருந்ததாகக் கூறுகின்றார். அக்கண்டங்கள் இப்போது இருக்கும் இடங்களுக்கு மெல்ல மெல்ல பல கோடி ஆண்டுகளுக்கு முன்னால் பெயர்ந்து வந்தன. இங்குக் காணப்படும் வரைப்படங்கள் அவ்வரலாற்றைக் காட்டுகின்றன.


1.முப்பது கோடி ஆண்டுகளுக்கு முன் நீங்கள் உலக வரைப்படத்தைப் பார்ப்பீர்கள் என்றால் அது ஏறக்குறைய இவ்வாறுதான் காட்சி அளித்திருக்கும். இக்கண்டங்கள் அனைத்தும் ஒரே மாபெரும் கண்டமாக ஒன்றொடன்று முற்றிலும் இணைந்திருந்தன. அதனைப் பெங்கியா என்றழைக்கின்றனர்.






2.பதினெட்டுக் கோடி ஆண்டுகளுக்கு முன் ஒரே கண்டமாக இருந்த பெங்கியா என்னும் இம்மாபெரும் கண்டமானது, வடக்குத் தெற்காக இரு பிரிவாகப் பிரிந்தது. வடக்குப் பிரிவு லோரேசியா என்று அழைக்கப்படுகிறது. தெற்குப் பிரிவு கோண்டுவானா என்றழைக்கப்பெறுகிறது.







3.பதிமூன்றரைக்கோடி ஆண்டுகளுக்கு முன் இன்றைய வட அமெரிக்கா ஐரோப்பாவினின்றும் ஆசியாவினின்றும் பெயரத்தொடங்கியது.






4.ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன் இன்றைய கண்டங்கள் மேலும் தொலைவாகப் பெயர்ந்தன. அவற்றின் தனித் தோற்றங்களை உங்களால் அடையாளம் காண முடிகின்றதா? இக்காலகட்டத்தில் ஆஸ்திரேலியா இன்னமும் தெந்துருவத்துடன்( அண்டார்ட்டிக்கா ) இணைந்திருப்பதைக் கவனியுங்கள்






5.இந்த வரைப்படம் கண்டங்களின் இன்றைய இடங்களைக் காட்டுகின்றது. ஆனால் அவை இன்னமும் தொடர்ந்து பெயர்ந்து கொண்டுதான் இருக்கின்றன எனபதை நினைவில் கொள்ளுங்கள்






வட அமெரிக்காவும் ஐரோப்பாவும் ஓர் ஆண்டுக்கு இரண்டு செண்டி மீட்டர் இடைவெளியில் ஒன்றைவிட்டு ஒன்று பெயர்ந்து கொண்டுள்ளன. இன்றிலிருந்து எதிர்வரும் 5 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு கண்டங்களின் தோற்றம் எவ்வாறு இருக்கும் என்பதை நீங்களே ஊகித்து ஓர் உலக வரைப்படத்தை வரைந்து பாருங்களேன். இன்னும் 5 கோடி ஆண்டுகாலத்தில் அவை ஆயிரம் கிலோ மீட்டர் இடைவெளியைக் கொண்டிருக்கும்.

Saturday 7 December 2013

இதைப் படித்தால் பென்ஸ், BMW கார்களை நெனச்சிகூட பார்க்கமாட்டீங்க!



ஜெர்மன் நாட்டில் பெர்லின் நகரில் வசிக்கும் நண்பர் ஒருவர், சமீபத்தில் சென்னை வந்து இருந்தார். பெங்களூரு அவரது சொந்த ஊர். ஜெர்மனியில் குடியேறி 20 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. அங்கு, “பென்ஸ்’ மோட்டார் தொழிற்சாலையில், “பிட்டர்’ ஆக வேலை செய்கிறார். உடைந்த தமிழில் பேசுவார்.


பிட்டராக இருந்தாலும் விபவரமானவர்; பல சப்ஜெக்ட்களிலும் ஞானம் உள்ளவர். அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது, பல அரிய தகவல்கள் கிடைத்தன. அது: தம்பி… இப்போது இந்தியாவுலே பென்ஸ் கார் 45 லட்ச ரூபாய்க்கு கூட கிடைக்குது… ஆஹா ஜெர்மன் நாட்டு கார்ன்னு பணக்காரங்களும், பெரிய தொழில் அதிபர்களும் போட்டி போட்டுக்கிட்டு வாங்கறாங்க. இந்தக் கார்ல இருக்கிற பல முக்கியமான பாகங்கள், கியர் பாக்ஸ் உட்பட, இந்தியாவுலே, “டாட்டா’ கம்பெனியிலே செஞ்சு, ஜெர்மனிக்கு வருது… நாங்க, அதை அங்கே பூட்டி, பல நாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கிறோம்! இதுக்கு காரணம் என்ன தெரியுமா?


ஜெர்மனியிலே அந்த பாகங்களை உற்பத்தி செய்ய ஆகும் செலவில் கால்வாசி செலவு தான் ஆகிறது இந்தியாவில். நாங்கள், எங்களுக்குத் தேவையான டிசைன் மற்றும் மூலப் பொருட்களைக் கொடுத்து விடுகிறோம்… இங்கே லேபர், “சீப்!’ அது ஜெர்மானியர்களுக்கு பெரிய, “அட்வான்டேஜ்’ ஆகிப் போகிறது. இந்தியாவில் லேபர் எவ்வளவு, “சீப்’ என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன் கேட்டுக்க தம்பி…’ என்றவர், தம் சட்டைப் பையில் இருந்து, ஒரு காகிதத்தை எடுத்துப் படித்துக் காட்டினார்.


ஒரு ஜெர்மன் தொழிலாளிக்கு குடுக்கற சம்பளத்திலே இரண்டு அமெரிக்க தொழிலாளியை வேலைக்கு அமர்த்தலாம்… இல்லே, தைவான் நாட்டுத் தொழிலாளி ஐந்து பேரையோ, பிரேசில் நாட்டு தொழிலாளி எட்டுப் பேரையோ வேலைக்கு வைத்துக் கொள்ள முடியும்… ஆனா, இந்தியாவின் கதையோ அபாரம்… ஒரு ஜெர்மன் தொழிலாளியின் சம்பளத்தில் 128 இந்திய தொழிலாளிகளை வேலைக்கு வைத்துக் கொள்ளலாம்ன்னா பாரேன்…


இந்திய தொழிலாளியின் குறைந்தபட்ச சம்பளம் மணிக்கு 25 ரூபாய்ன்னா, ஜெர்மன் தொழிலாளியின் சம்பளம் மணிக்கு 1,150 ரூபாய்! அப்புறம் ஏன் ஜெர்மன் தொழில் அதிபர்கள், புதிய பொருளாதாரக் கொள்கை வந்த பின்னே இங்கே மூலதனத்தைக் கொட்டத் தயங்கப் போறாங்க! கடந்த, 20 ஆண்டுகளில், இந்தியாவில் பல தொழில்களில் முதலீடுகளை செய்துள்ளனர் ஜெர்மானியர்கள்…


ஆனால், இதில் சோகமான விஷயம் என்னவென்றால், சுற்றுப்புறச் சூழ்நிலைக்கும், உடல் நலத்திற்கும் கேடு விளைவிக்கக் கூடிய பாதுகாப்பு அம்சங்கள் குறைந்த, ஜெர்மன் சட்டப்படி அங்கு தடை செய்யப்பட்ட தொழில்கள் தான் இங்கு வந்துள்ளன,’ என்றார் அந்த நண்பர்.


புதிய பொருளாதாரக் கொள்கையின் மூலம் வெளிநாட்டு மூலதனத்தை இங்கே குவிப்பதை மட்டுமே அரசு கருத்தில் கொள்ளாமல், நம்நாடு குப்பைத் தொட்டிகளின் சங்கமமாகாமல் பார்த்துக் கொள்வதும் மிக, மிக அவசியம்.

தமிழன் கட்டாயம் படிக்க வேண்டிய செய்தி!

 

சமீபத்தில் அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் "மரியா ஸ்மித் ஜோனெஸ்" என்ற பெண்மணி இறந்து விட்டார். ஒன்பது பிள்ளைகளுக்கு தாயான இவர் இறக்கும் போது இவருடைய வயது 89. இவருடைய இறப்பு பலருக்கு துயரத்தை கொடுத்துள்ளது. அவருடைய இழப்பை யாராலுமே ஈடு செய்ய முடியாது என்று சொல்கிறார்கள். பழங்குடி இனத்தை சேர்ந்த மரியா ஸ்மித் அலாஸ்காவில் வாழும் பழங்குடி மக்களின் உரிமைக்காக பல போராட்டங்களை மேற்கொண்டவர்.


ஆனால் அவருடைய இறப்பு யாராலும் ஈடு செய்ய முடியாததாக பார்க்கப்படுவதற்கு காரணம் அது இல்லை. உண்மையான காரணம், மரியா ஸ்மித் போகும் போது ஒரு மொழியையும் தன்னுடனே சேர்த்துக் கொண்டு போய் விட்டார். ஆம், அலாஸ்காவின் பழங்குடி மக்களின் மொழிகளில் ஒன்றான "ஏயக்" என்கின்ற மொழியை பேசத் தெரிந்த உலகின் கடைசி மனிதராக அவர் மட்டும்தான் இருந்தார். அவர் இறந்ததன் பிறகு இன்றைக்கு உலகில் யாருக்குமே அந்த மொழியை பேசத் தெரியாது.


அவர் இறந்த தினத்தோடு உலகில் உள்ள பல மொழிகளில் ஒரு மொழி அழிந்து விட்டது. மரியா ஸ்மித்திற்கு ஒன்பது பிள்ளைகள் இருந்தும், யாருமே "ஏயக்" மொழியை கற்பதற்கு ஆர்வம் காட்டவில்லை. எல்லோரைப் போன்று அவர்களும் ஆங்கிலம் கற்பதும், பேசுவதும்தான் நாகரீகமானதும், தேவையானதும் என்ற கருத்தோடு இருந்து விட்டார்கள். "ஏயக்" மொழியைப் பேசும் கடைசி மனிதராக தான்தான் இருக்கப் போகின்றேன் என்ற விடயம் மரியா ஸ்மித்திற்கு அன்றைக்கு தெரிந்திருந்ததா என்பதும் தெரியவில்லை.


"ஏயக்" மொழி பேசத் தெரிந்த மரியா ஸ்மித்தின் ஒரு சகோதரி 1993இலேயே இறந்து விட்டார். அதன் பிறகு மரியா ஸ்மித்தோடு "ஏயக்" மொழியில் உரையாடுவதற்கு யாருமே இருக்கவில்லை. "ஏயக்" மொழி அழிந்து விடக் கூடாது என்பதற்கு மரியா ஸ்மித் சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஒரு மொழியியல் வல்லுனரின் உதவியோடு "ஏயக்" மொழிக்கான அகராதியையும், இலக்கண நூலையும் தயாரித்தார். இனிமேல் யாராவது இந்த நூல்களின் உதவியோடு ஏயக் மொழியை கற்றுப் பேசினால் மட்டும்தான், அந்த மொழி மீண்டும் உயிர் பெறும்.


ஏயக் மொழிக்கு மட்டும்தான் இந்த நிலைமை என்று இல்லை. உலகின் பெரும்பாலான மொழிகளின் நிலைமை இதுதான். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு மொழி அழிவதாக மொழியியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றார்கள். மரியா ஸ்மித் வாழ்ந்த அலாஸ்காவில் பேசப்படுகின்ற மொழிகளில் மேலும் 20 மொழிகள் விரைவில் அழிந்து விடும் நிலையில் இருக்கின்றன. உலகம் எங்கும் மொழிகள் அழிந்து வரும் வேகம் அதிகரிக்கின்றதே தவிர குறையவில்லை. ஒரு மொழி அழிகின்ற பொழுது ஒரு இனத்தின் பண்பாடு அழிகிறது. இன்னும் சொல்வது என்றால் ஒரு இனமே அழிகிறது. அழிகின்ற மொழிகளில் பெரும்பாலானவை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப் பழமையான மொழிகள். அந்த மொழிகளுக்குள் மனித குலத்தின் வரலாற்றின் பெரும் பகுதி புதைந்து கிடக்கின்றது. மொழிகளோடு மனித குலத்தின் வரலாற்று உண்மைகளும் அழிந்து போகின்றன. இன்றைக்கு உலகிலே வாழுகின்ற அறுநூறு கோடி மக்களும் மொத்தம் ஆறாயிரம் மொழிகளைப் பேசுகின்றார்கள். நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆறாயிரம் மொழிகளிலே அறுநூறு மொழிகள் மட்டுமே மிஞ்சியிருக்கும். மிச்சம் ஐந்தாயிரத்து ஐந்நூறு மொழிகளும் அழிந்து விடும். இது மொழியியல் வல்லுனர்களின் தீவிரமான ஒரு எச்சரிக்கை. இன்றைக்கு பேசப்படுகின்ற ஆறாயிரம் மொழிகளில் மூவாயிரம் மொழிகளை ஆயிரத்திற்கும் குறைவானவர்களே பேசுகின்றார்கள். ஏறக்குறைய ஆயிரத்து ஐந்நூறு மொழிகளை நூறு பேர் வரையிலானவர்களே பேசுகிறார்கள். ஐந்நூறு மொழிகளை வெறும் பத்துப் பேர்தான் பேசுகிறார்கள்.


ஒரு மொழி நிலைத்து நிற்பதற்கு ஆகக் குறைந்தது ஒரு இலட்சம் பேராவது அந்த மொழியை பேச வேண்டும் என்பது மொழியியல் வல்லுனர்களின் கருத்து. அந்த வகையில் தமிழ் மொழி தற்போதைக்கு அழியாது என்று நம்பலாம். உலகில் மிக அதிகமானவர்களால் பேசப்படுகின்ற இருபது மொழிகளின் பட்டியலில் தமிழும் இருக்கின்றது. கல்வெட்டில் இருந்து கணினி வரை தமிழ் மொழி பரந்து நிற்கின்றது. ஆனால் ஒரு மொழி அழிவதற்கு தேவையான அனைத்துக் காரணங்களையும் தமிழ் மொழியும் கொண்டுதான் இருக்கின்றது என்பது இதிலே ஒரு அபாயகரமான செய்தி. ஒரு மொழி அழிவதற்கான முக்கிய காரணங்களாக சில விடயங்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன. மொழிக்குள் மற்றைய மொழிகளின் ஊடுருவலும் ஆதிக்கமும், வட்டாரப் பேச்சு வழக்குகள் தனி மொழிகளாக கிளர்வது, இளந்தலைமுறை மொழியை கற்கவும் பேசவும் ஆர்வம் அற்று இருப்பது போன்றவை ஒரு மொழி அழிவதற்கு முக்கிய காரணங்கள். வேற்று மொழிகளின் ஊடுருவல் தமிழுக்குள் மித மிஞ்சிப் போய் கிடக்கின்றது


எத்தனையோ சொற்களை, அவைகள் தமிழ் சொற்களா இல்லையா என்பதை அறிவதே மிகக் கடினமாக இருக்கின்றது. அதே போன்று பல துறைகளில் ஆங்கிலம் போன்ற மொழிகளின் ஆதிக்கம் இருக்கின்றது. வட்டாரப் பேச்சு வழக்கு மொழிகளாக இருந்தவை தனி மொழிகளாக பிரிந்து போனதையும் தமிழ் மொழி சந்தித்திருக்கின்றது. இன்றைக்கு தமிழ் கொண்டிருக்கும் நூற்றுக் கணக்கான வட்டார மொழிகள் நாளை தனி மொழிகளாக மாறி விடாது என்று உறுதியாக நம்புவதற்கு போதுமான காரணங்கள் இல்லை. "பொதுவான தமிழ்" இன்றைக்கு எழுத்தில் மட்டும்தான் இருக்கின்றது. ஆனால் "வட்டார மொழி இலக்கியங்கள்" என்ற பெயரில் வருகின்ற அதிகரித்த படைப்புக்கள் இதற்கும் முடிவு கட்டி விடுமோ என்ற அச்சத்தைக் கொடுக்கின்றது. தமிழ் நாட்டின் சென்னை போன்ற பெரு நகரங்களிலும், புலம் பெயர்ந்த நாடுகளிலும் வாழும் இளந்தலைமுறை தமிழை எவ்வளவு தூரம் பேசுவதற்கும், கற்பதற்கும் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.


இன்றைக்கும் தமிழ் மொழி உயிரோடு இருப்பதன் ஒரே ஒரு காரணம், தமிழை பேசுபவர்கள் ஆறு கோடிக்கும் மேற்பட்டவர்களாக இருப்பதுதான். ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்றில் முப்பது ஆண்டுகளில் அழியப் போகின்ற மொழிகளில் ஒன்றாக தமிழும் இருப்பதாக செய்தி ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் முப்பது ஆண்டுகளில் எல்லாம் தமிழ் அழிந்து விடாது. முப்பது ஆண்டுகள் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. அதே வேளை நீண்ட காலத்திற்கு நாம் இப்படி இறுமாப்போடு இருக்க முடியாது. பேசுபவர்களின் எண்ணிக்கையில் மட்டும் ஒரு மொழியின் இருப்பு தங்கியிருக்க முடியாது. எண்ணிக்கையும் மாறுபடக் கூடிய ஒன்றுதான். மொழி அழிவதற்கு தேவையான மற்றைய காரணிகளும் தமிழில் இருக்கின்றன. ஆகவே தமிழ் மொழி நீடித்து நிலைக்க வேண்டும் என்ற சிந்தனை ஒவ்வொரு தமிழரின் நெஞ்சிலும் இருந்தால் மட்டும்தான், தமிழ் மொழி நீண்ட காலத்திற்கும் நிலைக்கும். இல்லையென்றால் "அழிந்து போன மொழிகளின் பட்டியலில்" தமிழ் இடம் பெறுவது தவிர்க்க முடியாததாகி விடும். மரியா ஸ்மித் ஜோனஸின் உடலோடு "ஏயக்" மொழியும் புதைக்கப்பட்டுவிட்ட இந்த நாளில் தமிழர்களைப் பார்த்து சொல்லக் கூடிய செய்தி இதுதான்.


தமிழரோடு தமிழில் பேசுவோம்...

தமிழன் என்று சொல்வோம்....

தலை நிமிர்ந்து நிற்போம்.....

"தமிழன் இல்லாத நாடில்லை

தமிழனுக்கென்று ஒரு நாடில்லை..."

Thursday 5 December 2013

இந்தியாவை ஜெயிக்க முடியாதுங்கோ!- பாக். கிற்கு பிரதமர் சவால்!

காஷ்மீரை மையமாகக் கொண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே எந்நேரமும் 4வது முறையாக போர் நடைபெறும் என்றும் தனது வாழ்நாளுக்குள் காஷ்மீரை இந்தியாவில் இருந்த பிரித்து தனிநாடாக அமைக்க வேண்டும் என்பதே தனது கனவு எனவும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்ததையுடுத்து என் வாழ்நாளில், இந்தியாவுடன் போரிட்டு பாகிஸ்தான் ஜெயிக்க வாய்ப்பு இல்லை என்று இந்தியா பிரதமர் மன்மோகன்சிங் சவால் விட்டுள்ளார்.
 
 nov 34 - kasmir 

நேற்று காஷ்மீரின் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு பகுதியில் ஆசாத் ஜம்மு-காஷ்மீர் கவுன்சிலின் பட்ஜெட் கூட்டத்தில் பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப் உரையாற்றினார். அப்போது அவர்,”காஷ்மீரை மையமாக கொண்டு இந்தியா,பாகிஸ்தான் நாடுகளிடையே எந்நேரமும் 4வது முறையாக அணுஆயுத போர் நடைபெறும்; இந்தியா ஆயுத போட்டியை ஏற்படுத்தி உள்ளது; அதனால் பாகிஸ்தானும் அதில் பங்கேற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது; காஷ்மீர் பிரச்னையை அப்பகுதி மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப தீர்க்க வேண்டும் எனவும், அப்பகுதியில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் எனவும் ஐ.நா., தெரிவித்துள்ளது; ஆனால் இது நடக்காத காரியம்; இந்திய எல்லையில் பாக்., படைகளின் முன்னேற்றம் திருப்திகரமாக உள்ளது”என்று நவாஸ் ஷெரீப் தெரிவித்திருந்தார்.


இப்படியொரு செய்தி பாகிஸ்தானின் முன்னணி பத்திரிகை ஒன்றில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து நவாஸ் ஷெரீப் அலுவலகம் உடனடியாக அச் செய்தியை மறுத்தது. ‘இந்த செய்தி அடிப்படை ஆதாரமற்றது, தீய உள்நோக்கம் கொண்டது. நவாஸ் ஷெரீப் இந்த வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்தவில்லை. இந்தியா–பாகிஸ்தான் இடையிலான எந்த பிரச்சினைக்கும் அமைதி வழியில் தீர்வு காண வேண்டும் என்பதே நவாஸ் ஷெரீப்பின் கருத்து’ என்றெல்லாம் நவாஸ் ஷெரீப் அலுவலகம் மறுப்பு தெரிவித்தது.


இதற்கிடையில் நவாஸ் ஷெரீப் பேச்சு குறித்து நிருபர்கள் கருத்து கேட்டபோது, பிரதமர் மன்மோகன்சிங் “–என் வாழ்நாளில், இந்தியாவுடனான எந்த போரிலும் பாகிஸ்தான் வெற்றி பெற வாய்ப்பு இல்லை”.என்று அவர் கூறினார்.

Wednesday 4 December 2013

ஐக்கிய நடுகள் சபை (ஐ.நா)





ஐ.நா. அமைப்புக்கள் (UN Associated Agencies)


 1.சர்வதேச அணுசக்திக் கழகம்.

Intenational Autamic Engery Agency (IAEA)


 2.ஐ.நா. கல்வி, அறிவியல், கலாசாரக் கழகம்.

United Nations Educational Scientific and Cultural Organisation (UNESCO)


 3.சர்வதேச தொழிலாளர் நிறுவனம்.

International Labour Organsation (ILO)


 4.உணவு மற்றும் விவசாய நிறுவனம்.

Food and Agriculture Organisation (FAO)


 5.உலகச் சுகாதார நிறுவனம்.

World Health Organisation (WHO)


 6.சர்வதேச நிதி நிறுவனம்.

International Monetary Fund (IMF)


 7.சர்வதேச சீரமைப்பு மற்...........


Monday 2 December 2013

அமெரிக்காவில் மாண்புமிகுக்கள் இல்லாமல் போனது ஏன்?

பட்டங்கள் கொடுப்பது பற்றி அமெரிக்க அரசியல் சட்டம் என்ன சொல்கிறது?

அரசியல் சட்டம் ஆர்ட்டிகிள் 1, பிரிவு 9:8


“அமெரிக்க அரசு எந்த பட்டத்தையும் யாருக்கும் வழங்க கூடாது. அமெரிக்க அரசில் பணியாற்றும் யாரும் எந்த வெளிநாட்டு மன்னர், அரசிடமும் எந்த பட்டத்தையும் பெறக்கூடாது…”


அமெரிக்க தேச தந்தையர் அன்றைய காலகட்ட ஐரோப்பாவில் “பிரபு, மை லார்ட், ஹிஸ் எக்சலன்சி” என அழைக்கும் மரபை கடுமையாக வெறுத்தார்கள்.


 தாமஸ் பெயின் அது குறித்து கூறுகிறார்:


“பட்டங்களும், அடைமொழிகளும், மைலார்ட் என்பதுபோன்ற விளிப்புகளும் அப்படி அழைக்கபடுபவரை பீடத்தில் வைத்து, அந்த ஆபாச விளிப்புகளில் மயங்கிய மக்கள் அவரை எந்த கேள்வியும் கேட்கமுடியாமல், விமர்சிக்க இயலாமல் செய்துவிடுகிறது”


அமெரிக்க ஜனாதிபதியை எப்படி விளிப்பது என்றும் ஒரு விவாதம் எழுந்தது. “ஹிஸ் ஹைனஸ், பிரசிடெண்ட் ஆஃப் தெ யுனைடெட் ஸ்டேட்ஸ்” என அழைக்கவேண்டும் என ஒரு சாரார் கூறினர். “ஹிஸ் எக்சலன்ஸி” என அழைக்கவெண்டும் என்றனர் சிலர். அரசியல் சாசன தந்தை ஜேம்ஸ் மேடிசன் அனைத்தையும் நிராகரித்துவிட்டார்.


அமெரிக்க ஜனாதிபதி “மிஸ்டர் பிரசிடெண்ட்” என மட்டுமே அழைக்கபடுவார்!!!!!!

Sunday 1 December 2013

சந்திரனுக்கு ஆளில்லா விண்கலம்: நாளை அனுப்புகிறது சீனா!

 

சீனா முதல் முறையாக சந்திரனுக்கு ஆளில்லா விண்கலத்தை நாளை அனுப்புகிறது. இதன் மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் உலகில் தனித்துவமான இடத்தைப் பெற வேண்டும் என்ற சீனாவின் லட்சியத் திட்டம் நிறைவேறுகிறது.

சாங் இ-3 (கியான் வைபிங் -3) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கலம், ஜிசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து திங்கள்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக விண்கல ஏவுதளத் தலைமை அலுவலகக் குழுவினர் தெரிவித்தனர்.

சீனா இதற்கு முன்பு சந்திரனுக்கு அனுப்பிய 2 விண்கலங்களும் சந்திரனின் சுற்றுப் பாதையில் சுற்றி வருகின்றன. தற்போது சந்திரனின் மேற்பரப்பை ஆராய்ச்சி செய்வதற்காக ஆளில்லா விண்கலத்தை சீனா முதல் முறையாக அனுப்புகிறது.

விண்கலத்தை செலுத்துவதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், ஏவுதளமும் அதற்கேற்ப நல்ல நிலையில் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்ததாக ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சாங் இ-3 விண்கலம் "யுது' என்று அழைக்கப்படும் சந்திரனை ஆராய்ச்சி செய்யும் கருவியையும், அதை தரையில் நிலைநிறுத்தக் கூடிய கருவியையும் தாங்கிச் செல்கிறது. ("யுது' என்பது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக சீன மக்களால் சந்திரக் கடவுளாக வணங்கப்பட்டு வரும் வெள்ளை முயலைக் குறிப்பதாகும்.)

சந்திரனில் உள்ள இயற்கை வளங்கள், மேற்பரப்பில் உள்ள பொருள்கள், புவியியல் அமைப்பு போன்றவற்றை "யுது' ஆய்வு செய்யும்.

விண்வெளி மையத்தில் ரஷியா அமைத்துள்ள மீர் விண்வெளி நிலையத்தைப்போல, ஒரு நிரந்தரமான விண்வெளி நிலையத்தை தானும் அமைக்க வேண்டும் என்பதுதான் சீனா தொடர்ந்து விண்கலங்களை சந்திரனுக்கு செலுத்தி வருவதின் பின்னணியாகும்.

சந்திரனையும் தாண்டி, செவ்வாய், புதன் போன்ற கிரகங்கள் தொடர்பான நீண்ட ஆராய்ச்சியில் ஈடுபடவும் எங்களது விஞ்ஞானிகள் தயாராக உள்ளனர். அதற்கான அனுமதி கிடைத்தவுடன் செயல்படத் தொடங்குவோம் என்று சாங் இ-3 விண்கலத்தின் தலைமை விஞ்ஞானி யே பெய்ஜியான் தெரிவித்தார்.

சைனா Vs ஜப்பான் : பெரியண்ணன் அமெரிக்காவின் அத்து மீறல்.!

 

நாமெல்லாம் அடிக்கடி சொல்வோமே?- ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் அதை நினைவூட்டும் வகையில் நெடு நாள் பிரச்சினையான கிழக்கு சைனா ஸீயில் உள்ள ஒரு தீவு. இதை சைனா “டையாயூ” எனவும் ஜப்பான் “செனாக்கூ என பெயரிட்டு அழைத்து வருகிறது.இதற்கிடையில் பல நாளாக இது யாருக்கு சொந்தம் என்ற வகையில் போட்டி இருந்தது.

நவம்பர் 23 ஆம் தேதி சைனா இந்த பிரதேசத்தையும் சேர்த்து தன்னுடைய வான் எல்லை சைனா ஏர் டிஃபன்ஸ் ஐடென்ட்டிஃபிக்கேஷன் ஜோன் என்று அறிவித்த போது தான் பிரச்சினை எழுந்தது ஜப்பானுக்கு. அது மட்டுமல்ல பெட்ரோலுக்கு சைனா போர் விமானங்களை பறக்க செய்ய நேற்று ஆள் இல்லாத அமெரிக்க பி 52 பாம்பர் விமானங்களும் 10 ஜப்பான் ஏர் ஃபோர்ஸ் விமானங்களும் அங்கு பறந்து அமெரிக்கா நான் ஜப்பான் நண்பனாக்கும் என பறைசாற்ற கொஞ்சம் நேரத்தில் சைனா அத்தனை விமானங்களையும் விமான தடங்களையும் ஸ்கிராம்பிள் செய்து விட்டது. இதையொட்டி மெல்ல பற்றி கொண்டது ஒரு பதட்டம்.

“Air Defense Identification Zone” – ADIZ என்றால் என்ன? – தன் நாட்டை விட்டு அதன் அருகாமையில் உள்ள ஒரு இடத்தை கிளேய்ம் செய்யும் நாடுகள் – அமெரிக்கா ஜப்பான் போன்றவை ஏடிஸ் வைத்துள்ளன். இந்த வான் பறப்பில் பறக்கும் விமானங்கள் தங்களை ஏர் ஜோனுக்கு செல்லும் முன் – பறக்கும் போதும் தன்னை அடையாளப்படுத்தி கொள்ள வேண்டும் என்பது ஏடிஸின் விதிமுறை.

இந்த வகையில் ஜப்பான் செனாக்கூ தீவை ஏடிஸ் என அடையாளம் காட்ட வெகு நாள் பிரச்சினையாக கொண்ட இந்த தீவை சைனாவும் தன் பங்குக்கு இது சைனீஸ் ஏடிஸ் என அறிவிக்க இரண்டு நாட்டினரும் கிழக்கு சைனா ஸீயில் தன் புஜத்தை உயர்த்தி காட்டிய சமயத்தில்தான் அமெரிக்கா தன் பங்கிற்கு ஜப்பானுக்கு ஆதரவாக 4 விமானங்களை அனுப்ப சைனா இதை ஸ்கிராம்பிள் செய்ததுதான பெரும் பரபரப்புக்குண்டான விஷயம்.

அதே சமயம் சைனா கொஞ்சம் நாளைக்கும் முன்புதான் Yellow Sea எனப்படும் மஞ்சள் கடலில் கொரியாவுடன் உரன்டையை இழுத்த விவகாரம் உங்களும் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. அதாவது சவூத் கொரியாவில் இருந்து 149 கிலோமீட்டரில் மற்றூம் சைனாவில் இருந்து 287 கிலோமீட்டரில் உள்ள ஒரு ரீஃபின் பெயர் “லீடோ”. கொரியர்கள் ஏற்கனவே அங்கு கடலின ஆராய்ச்சி செய்து வருவது அனைவருக்கு தெரிந்த ஒன்று, அங்கும் சைனா திடீரென்று இதை ஏடிஸ் வட்டத்துக்குள் கொண்ட வந்த போதும் அப்ஸெட்டானது சௌத் கொரியா மட்டுமல்ல – அமெரிக்காவும் தான்.

இத்தனைக்கும் உலகின் முக்கியமாக ஏசியாவின் அதிக பண வளம் கொண்ட ஜப்பான் / சைனா / தாய்வான் / சவுத் கொரியா – மற்றூம் சைனாவின் தலை நகரமான பெய்ஜிங் இதன் அருகாமயில் இருப்பதால் சைனா கொஞ்சம் ஓவராய் உணர்ச்சிவசப்படுகிறது.

மேலும சைனா இதை 1440 முதல் தனக்கு சொந்தம் என சில டாக்குமென்ட்களை வைக்க ஜப்பானோ 1885 ஆம் ஆன்டு சர்வே செய்த போது இதில் இருந்தவர்கள் வெறும் ஜப்பானியரே. அதனால் ஜப்பான் 1895 ஆம் ஆண்டு இதை அங்கு வாழும் மக்களுகென இதை விற்று இதை ஜப்பானின் ஒரு பகுதியாக அறிவிக்கபட்டது. 1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் சரண் அடைந்த போது இந்த தீவு அமெரிக்கா கைவசம் வந்தது. 1972 ஆம் ஆண்டு அமெரிக்கா ஜப்பானின் அத்தனை இடத்தையும் ஜப்பானிடமே ஒப்படைத்த போது இந்த தீவும் ஜப்பானுக்கே சொந்தமானது.

அப்போது சைனா இதில் எங்களுக்கு பங்குண்டு என கேட்க 1978 ஒரு ஒப்பந்தம் சைனாவும் ஜப்பானும் இதை அப்புறம் பார்த்து கொள்ளலாம் இதை வைத்து நாம் சண்டை செய்ய வேண்டாம் என கையெழுத்திட்ட பிறகு அமைதியாக இருந்த சைனா போன வருடம் ஜப்பான் அதன் அருகே இருக்கும் தீவுகளை வாங்கி அரசுடமைபடுத்திகிறது என்ற விஷயம் கசிய அதில் செனாக்கூவும் உண்டு என தகவல் பரவ சைனாவில் கலவரம் வெடித்து அரசு இந்த ஜோனை ஏடிஸ் ஆக்கியது தான் ஆதியும் அந்தமும்.

இதில் கச்சா எண்ணெய் / தாது பொருட்கள் மற்றும் மீன் பிடிப்புக்காக தான் இந்த சண்டை மற்றும் நேர் தாக்குதல் சைனாவின் பெய்ஜிங்கிற்க்கு உண்டு..என்பதை தனியாக சொல்ல வேண்டுமா என்ன?

அது சரி!ஜெட் ஸ்க்ராம்பிளீங் என்றால் என்ன? – அதாவது ஒரு நாட்டின் வான் எல்லைக்குள் வரும் விமாங்கள் இரண்டு வகைப்படும். கமர்ஷியல் விமானங்கள் – இது மனிதர்கள் பயணிக்கின்ற விமானங்கள்…இவ்வகை விமானங்கள் அனுமதி பெற்ற வான் எல்லைக்குள் தான் பறக்கும். இதன்படி மலேஷிய விமானங்கள் , ஈரான் விமாங்கள் இஸ்ரேல் எல்லையில் பறக்காது அந்த மாதிரி நிறைய விமானகள் நிறைய நாடுகளை அவாய்ட் செய்யும்.

மற்றது விமானப்படையை சேர்ந்தது. இது கூட்டு பயிற்ச்சி படை மற்று அறிவிக்க்பட்ட எல்லை கடந்து போகும் விஷயத்தை முன் கூட்டியே அறிவித்தால் அந்த் அந்த நாடு அதற்கு அனுமதி அளித்தி ரேடாரில் தென்படும்போது ஒன்றும் செய்யாது. அறிவிக்கபடாத விமாங்கள் அது கமர்ஷியல் அல்லது ராணுவ அல்லது ஆளில்லா விமானங்கள் வந்தால் உடனே ரேடார் உஷார் படுத்தும்.உடனே அந்த நாட்டு போர் விமானங்கள் ங்கள் விமானத்தை ரவுன்ட் செய்து உங்களை வலுகட்டாயமாக அவர்களின் வான் எல்லையில் இருந்து தள்ளும் அல்லது பாம் செய்து விடுவார்கள், இப்படி ஸ்கிராம்பிளிங் செய்திருந்தால் 9/11 அமெரிக்க இரட்டை கோபுரம் தப்பியிருக்கும் – உலகில் அதிகம் ஸ்கிராம்பிளிங் செய்யபடும் ஜோன் அலாஸ்காவில் அடிக்கடி ரஷிய விமானங்கள் நுழைய அதை அமெரிக்கா விரட்டியடிக்கும் ரெகுலர் ஒன்று

Friday 29 November 2013

துபாய் என்ற அற்புதம்!


துபாய் என்ற ஒரு நகரம் இல்லாமல் போயிருந்தால் இன்றைக்கு இந்தியாவில் பல்வேறு மாநிலத்தில் வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் அடித்தட்டு மட்டும் நடுத்தர மக்களின் வாழ்க்கை முன்னேற்றம் கேள்விக்குறியாகியிருந்திருக்கும்.

பல மலையாளிகளும் தமிழர்களும் துபாயின் திர்ஹம்ஸை ஊதியமாகப் பெற்று..... குடிசை வீடுகளை மாடி வீடுகளாக மாற்றி இருக்கின்றனர்...., தாயின், தந்தையின் கனவுகளை நிறைவேற்றி இருக்கின்றனர். வறுமையிலிருந்த எத்தனையோ சகோதரர்கள் தங்களின் சகோதரிகளுக்கு மணமுடித்து வைத்திருக்கின்றனர்.....

அமீரகம் ஆன்மீகத்தோடு நெருங்கிய தொடர்புடைய நேர்மறை அதிர்வுகள் கொண்ட பூமி...! இங்கே உழைத்து பெறும் ஒவ்வொரு திர்ஹமும் பரக்கத்தானது. சிறு ஊதியம் பெற்றாலும் அவனால் எல்லாவற்றையும் ஓரளவிற்கு அவன் சொந்த ஊரில் நிகழ்த்திக் காட்ட முடிந்திருக்கிறது.

உலகின் பல்வேறு பகுதியிலிருந்து வந்து குடியமர்ந்திருக்கும் அத்தனை மக்களையும் மரியாதையுடனும், அன்புடனும் பாரபட்சமின்றி நடத்தும் அமீரகத்தின் அன்பு மிகக் கம்பீரமானது....! பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அவர்கள் கொடுக்கும் முன்னுரிமையை, மரியாதையை இந்த உலகத்தின் இன்ன பிற நாடுகள் பார்த்துக் கற்றுக் கொள்ளவேண்டும்....!

இதோ கடந்த சிலமாதங்களாக ஒட்டு மொத்த அமீரகத்தின் அத்தனை குடிமக்களும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த எக்ஸ்போ 2020ல் துபாய் வென்றிருக்கிறது. அறிவால் இணைவோம் புதிய எதிர்காலத்தை உருவாக்குவோம் (Connecting minds creating the future) என்ற கருத்தாக்கத்தோடு களத்தில் நின்ற துபாயின் வெற்றி திடமான தொலைநோக்குப் பார்வை கொண்ட தெளிவான தலைமைத்துவத்தின் வெற்றி.

ஏற்கெனவே அசுரகதியில் இயங்கிக் கொண்டிருக்கும் துபாய் இன்னும் வேகமாக இயங்கப் போகிறது. அந்த பிரம்மாண்ட உழைப்பு உருவாக்கிக் கொடுக்கும் வாய்ப்புகளால் பல்வேறு தேசங்களைச் சேர்ந்த மனிதர்களின் வாழ்க்கை வளம் பெறப்போகிறது என்பது உறுதி....!

மலாலா – பிரிட்டனின் செல்வாக்குமிக்க ஆசியர்!

nov 28 -malala_yousafzai_

மலாலா மீது எந்நேரத்திலும் தாங்கள் தாக்குதல் நடத்துவோம் என்று தலிபான் பயங்கரவாதிகள் மிரட்டியதற்கு பதிலடியாக, பயங்கரவாதிகளால், எனது உடலைத் தான் சிதைக்க முடியுமே தவிர, எனது கனவுகளை ஒருபோதும் சிதைக்க முடியாது என்று தெரிவித்த
மலாலா யூசுப்சையை, பிரிட்டனின் செல்வாக்குமிக்க ஆசியர் என்று லண்டனிலிருந்து வெளிவரும் வார இதழ் புகழாரம் சூட்டியுள்ளது.

பெண் கல்வியை வலியுறுத்தி பிரசாரம் செய்து வந்த பாகிஸ்தான் சிறுமி மலாலா மீது தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் சர்வதேச நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் லண்டனில் உள்ள பிரபல மருத்துவமனையில் மலாலாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அவர் உடல்நலம் தேறியுள்ளார். சர்வதேச நாடுகள், மலாலாவை பாராட்டி பல விருதுகள் வழங்கி வரும் நிலையில், அண்மையில் லண்டனில் நடைபெற்ற கராவி குஜராத்-2 என்ற கூட்டத்தில் தைரியத்திற்காக வழங்கப்படும் ஹேமர் விருதுக்கு, மலாலாவும் அவருடன் சுடப்பட்ட மற்ற இரு சிறுமிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் பிரிட்டனை சேர்ந்த வாரப் பத்திரிக்கை ஒன்று பிரிட்டனில் செல்வாக்கு மிக்க 101 பேரின் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் மலாலா யூசப்சாய் செல்வாக்கு மிக்க முதல் ஆசியராக உள்ளார் என்று தெரிவித்துள்ளது.

இவருக்கு அடுத்தபடியாக, லேபர் கட்சியின் எம்.பி.யும், பாராளுமன்ற விவகாரக்குழு தலைவருமான கீத் வாஸ் இரண்டாவது செல்வாக்கு மிக்க ஆசியராக உள்ளார். ஒருமுறை பிரிட்டனின் மிகப்பெரிய பணக்காரராக இருந்த லட்சுமி மிட்டல் இப்போது இந்த பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார் .

Thursday 28 November 2013

நோய்களை குணப்படுத்தும் 'தொழுகை' - இஸ்ரேல் - அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு


 குறித்த நேரத்தில் இஸ்லாம் விதித்துள்ள ஐங்கால கடமையான தொழுகையை நிறைவேற்றுவதன் மூலம் அல்ஸிமர்ஸ் எனும் ஞாபக மறதி நோயை 50% கட்டுப்படுத்தலாம் என அமெரிக்க-இஸ்ரேலிய விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

டெல் அவீவ், யாபா, அமெரிக்காவின் இதர பல்கலைக்கழகத்தைச் சார்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.

நினைவாற்றல் குறையாமலிருக்க பயிற்சி மையங்கள் மற்றும் இதர வழிகளில் பயிற்சி மேற்கொள்பவர்களை விட குறிப்பிட்ட நேரத்தில் தொழுகையை பேணுபவர்களுக்கு அல்ஸிமர்ஸ் நோய் தாக்கும் வாய்ப்பு குறைவாகும் என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

டெல் அவீவ், யாபா, அமெரிக்காவின் இதர பல்கலைக்கழகத்தைச் சார்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.

நினைவாற்றல் குறையாமலிருக்க பயிற்சி மையங்கள் மற்றும் இதர வழிகளில் பயிற்சி மேற்கொள்பவர்களை விட குறிப்பிட்ட நேரத்தில் தொழுகையை பேணுபவர்களுக்கு அல்ஸிமர்ஸ் நோய் தாக்கும் வாய்ப்பு குறைவாகும் என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இத்தகைய நபர்களுக்கு நோயின் கடுமை 24 சதவீதம் குறைவாக இருக்கும் என ஆய்வில் கூறப்படுகிறது. அல்ஸிமர்ஸ் நோயை தடுக்க இதர பயிற்சி வகைகளை விட குறித்த நேரத்தில் தொழுவதால் இரட்டிப்பு பலன் கிடைப்பதாக ஆய்வு கூறுகிறது.

குறித்த நேரத்தில் தொழுகையை பேணுவது அல்ஷிமர்ஸ் நோயிலிருந்து காப்பாற்றுவதுடன் புத்தியாகவும், சிந்தனை ரீதியாகவும் பேசுவதற்கு தேவையான ஆக்கப்பூர்வமான பலன்கள் கிடைப்பதாக இந்த ஆய்வுக் குழுவின் தலைவராக பணியாற்றிய பேராசிரியர் Rivka Inzelberg கூறுகிறார்.

65 வயதுக்கு மேற்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 92 பேருக்கு மட்டுமே ஞாபக மறதி நோய் பாதித்துள்ளது. 300 பேருக்கு சிறிய அளவில் பாதித்துள்ளது. மீதமுள்ளோருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.

உலகில் உள்ள மிகவும் புகழ் பெற்ற நடன வகைகள்!!!

நம்மில் பல பேருக்கு உணர்சிகளையும் உணர்வுகளையும் வெளிப்படுத்த பெரிதும் உறுதுணையாக விளங்குகிறது நடனம். மேலும் நம்முடைய சந்தோஷம், காதல், காயம் மற்றும் வலி போன்ற உணர்வுகளையும் அது வெளிப்படுத்த உதவும். ஒரு வகையில் புத்துணர்ச்சி பெறவும் பொழுதை போக்கவும் நடனம் பயன்படுகிறது. இசைக்கு பிறகு நம்மை சாந்தப்படுத்தி அமைதி படுத்த இன்னொன்றால் முடியும் என்றால் அது தான் நடனம்.

இந்த உலகத்தில் பல வகையான நடனங்கள் உள்ளது. ஒவ்வொரு சாதியும் பண்பாடும் தனக்கென ஒரு வகையான நடனத்தை உருவாக்கியுள்ளது. நடனத்தால் பல வகையான நாட்டுப்புற பண்பாடுகள் பிரபலமடைந்துள்ளது. அதன் விளைவாக அதனை உலகத்தில் பலரும் பின்பற்ற ஆரம்பித்துள்ளனர். இவ்வகையான பல நடனங்கள் புகழை பெற்று ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்படி புகழை பெற்று உலகம் முழுவதும் அதனை பின்பற்றுவதால் இனி எந்த ஒரு நடனமும் ஒரு தனிப்பட்ட இடத்தை மட்டும் சார்ந்திருப்பதில்லை. அதே போல் ஒவ்வொரு நடனத்தின் ஸ்டைல்களையும் எங்கிருந்து வேண்டுமானாலும் கற்று கொள்ளும் வசதியும் இப்போது வந்து விட்டது.

உலகில் உள்ள மிகவும் புகழ் பெற்ற நடன வகைகள்!!!

ஹிப்-ஹாப், கிளாசிகள், சல்சா, பெல்லி, பாலே என எண்ணிலடங்கா பல வகை நடனகள் உலகம் முழுவதும் புகழ் பெற்று விளங்கி வருகிறது. நம் நாட்டையே எடுத்துக் கொள்வோம்; பரதநாட்டியம், கத்தக், ஒடிஸி, குச்சிப்பிடி, கத்தக்களி என பல வகைகள் உள்ளது. இது போக புகழ் பெற்ற குத்து டான்ஸை யாரும் மறக்க முடியாது. இப்படி ஒவ்வொரு நடனமும் ஒவ்வொரு வகையில் முக்கியத்துவம் வாய்ந்துள்ளதாக விளங்குகிறது.
   
ஹிப்-ஹாப் நடனம்

புகழ் பெற்ற நடன வகையான இதனை ஸ்ட்ரீட் டான்ஸ் (தெரு நடனம்) என்றும் அழைக்கின்றனர். 1970-ஆம் ஆண்டில், அமெரிக்காவில் ஹிப் ஹாப் இசை கலாச்சாரத்தால் உருவாக்கப்பட்டதே இவ்வகை நடனம். இவ்வகை நடனம் இன்று உலகத்தில் உள்ள அனைவராலும் பழகி ஆடப்படுகிறது. லாகிங் மற்றும் பூப்பிங் நடன ஸ்டைல்கள் இந்த நடனத்திலேயே அடங்கும். ஹிப்-ஹாப் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி ஆடும் நடனமாக புகழ் பெற்று விளங்குகிறது.

சல்சா

ஈர்ப்புள்ள ஆற்றல் நிறைந்த இவ்வகை நடனம் முதன் முதலில் க்யூபாவில் தான் தொடங்கிற்று. இன்று ஒவ்வொரு இளம் ஜோடிகளும் இவ்வகை நடனத்தை விரும்பி ஆடுகின்றனர். காதல், மனக்கிளர்ச்சி மற்றும் உணர்ச்சிகளை மிகவும் நேர்த்தியான முறையில் வெளிப்படுத்த உதவும் இந்நடனம். ஜோடிகள் ஆடும் இந்நடனம் உலகம் முழுவதும் புகழ் பெற்று விளங்குகிறது. லத்தீன் அமெரிக்க இசையோடு மிகவும் பொருத்தமாக அமையும் இந்த நடனம். இருப்பினும் இன்றைய காலகட்டத்தில் அனைத்து இசை வகைகளுக்கும் இந்த நடனம் ஆடப்படுகிறது.

கத்தக்

இந்திய நடனக் கலையான கத்தக், மேலோங்கி ஈடுகொடுக்கும் ஒரு நடன வகையாகும். தென் இந்திய மாநிலங்களில் உருவாக்கப்பட்ட இவ்வகை நடனம் இந்தியாவில் உள்ள 8 கிளாசிகள் நடன வகைகளில் ஒன்றாகும். இந்நடனம் அதன் தோரணைகள் மற்றும் முத்திரைகளுக்காக புகழ் பெற்று விளங்குகிறது. பண்டைய காலங்களில் கதைகள் மற்றும் புராணங்களை விளக்க இவ்வகை நடனம் பயன்படுத்தப்பட்டது. மிகவும் கடினமான இந்த நடனத்தில் தேர்ச்சி பெற தீவிரமான பயிற்சி தேவைப்படும். இந்த நடனத்திற்கு பல பரீட்சைகளும் உள்ளது. இந்த நடனத்தில் தேர்ச்சி பெற பல வகையில் உள்ள இந்த தேர்வுகளில் தேற வேண்டும். பொதுவாக இந்திய கிளாசிக் இசையோடு கத்தக் நடனம் ஆடப்படும்.

பெல்லி நடனம்

கவர்ச்சிகரமான பெண்கள் ஆடும் இந்த நடனம் மேற்காசிய நாடுகளில் உருவாக்கப்பட்டது. ப்கழ் பெற்ற நடன வகைகளில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது. இவ்வகை நடனத்தில் உடம்பில் உள்ள அத்தனை பாகங்கள் ஈடுபட்டாலும் கூட இடுப்பு மற்றும் வயிற்றுப் பகுதிக்கு அதிகமாக முக்கியத்துவம் அளிக்கப்படும். முதலில் இவகை நடனம் எல்லோராலும் அங்கீகாரப் படுத்தப்படவில்லை. இருப்பினும் காலப்போக்கில் இது அனைவராலும் ஏற்கப்பட்டு விட்டது. சரியான நேரத்தில் சரியான அசைவுகளை கொடுக்க வேண்டியுள்ளதால் பெல்லி நடனம் என்பது லேசுபட்டதில்லை.

லைன் நடனம்

இவ்வகை நடனம் கண்டுப்பிடிக்கப்பட்டு நீண்ட காலமாகவில்லை. இவ்வகை நடனத்தில் ஒரு குறிப்பிட்ட நடன அசைவுகளை நடன கலைஞர்கள் ஒரு கோட்டில் நின்று ஆடுவார்கள். இவ்வகை நடனம் அவர்களால் தினமும் கூட ஆடப்படுகிறது. இவ்வகை நடனத்தை ஏரோபிக்ஸ் மற்றும் ஜூம்பா போன்ற நடனங்களை போல உடற்பயிற்சி மற்றும் உடல் எடை குறைப்புக்கு பயன்படுத்தலாம்.

இவைகள் போக, இன்னமும் கூட புகழ் பெற்ற நடன வகைகள் இருக்கத்தான் செய்கிறது. பீ பாயிங், டாப் நடனம், பாலே மற்றும் புகழ் பெற்ற கங்க்னம் ஸ்டைல் நடனம் போன்றவற்றை உதாரணமாக சொல்லலாம். இவ்வகை நடனங்கள் அனைத்துமே உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த உதவும். அதனால் உங்களை நற்பதத்துடனும் ஆரோக்கியத்துடனும் வைத்திடும். இதில் ஏதாவது சிலவற்றை அல்லது அனைத்தையுமே ஆடினால், உங்கள் மனதும் உடலும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

நடனம் என்பது தூய்மையான ஒரு கலையாகும். அதனை இதயத்திலிருந்து ரசித்து அனுபவிக்க வேண்டும். நீங்கள் ஆடினால் அமைதியில் கிடைக்கும் ஆனந்தத்தை விட உங்கள் இதயம் கண்டிப்பாக ஆனந்தமாக இருக்கும்.

Sunday 24 November 2013

உலகில் விளையாடப்படும் சில விசித்திரமான விளையாட்டுக்கள்!!!

உலகில் எத்தனையோ விளையாட்டுக்கள் உள்ளன. அனைத்து விளையாட்டுக்களுமே ஒரே மாதிரியானதாக இருக்காது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். அதே சமயம் உலகில் சில விசித்திரமான விளையாட்டுக்களும் உள்ளன. அத்தகைய விளையாட்டுக்களை அனைவரும் விளையாட முடியாது. துணிச்சல் உள்ளவர்கள் தான் விசித்திரமான விளையாட்டுக்களை விளையாட முடியும்.

அப்படி துணிச்சல் இருப்பவர்கள் தான் சாதனைப் படைக்க வேண்டுமென்று பல்வேறு முயற்சிகளை எடுப்பார்கள். சிலருக்கு துணிச்சல் இருந்தும் என்ன செய்வதென்று குழப்பத்தில் இருப்பார்கள். மேலும் சிலர் தம்மிடம் இருக்கும் துணிச்சலால், விசித்திரமான பல விஷயங்களில் ஈடுபடுவார்கள். அப்படி உங்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகம் இருந்து, விளையாட்டிலேயே விசித்திரமானதை முயற்சி செய்ய நினைத்தால், தமிழ் போல்ட் ஸ்கை உலகில் உள்ள சில விசித்திரமான விளையாட்டுக்கள் சிலவற்றை பட்டியலிட்டுள்ளது.

எண்ணெய் மல்யுத்தம் (Oil Wrestling)

எண்ணெய் மல்யுத்தம் என்பது, எண்ணெய் தடவிக் கொண்டு வட்டத்தில் நின்று ஒருவரை ஒருவர் பலத்தால் வட்டத்தை விட்டு வெளியே தள்ளுவதாகும். சாதாரணமாக ஒருவரை பிடித்து தள்ளுவதே கஷ்டமாக இருக்கும். இதில் எண்ணெய் தடவிக் கொண்டு எப்படி தள்ள முடியும் என்று யோசித்து பாருங்கள்.

போ ஸ்டிக்ஸ் (Pooh sticks)


இதுவும் விசித்திரமான மற்றும் சிறுபிள்ளைத்தனமான விளையாட்டுப் போல் இருக்கும். இருப்பினும் இதையும் உலகில் உள்ள மக்கள் விளையாடுகின்றனரே! அது என்னவென்றால், இந்த விளையாட்டில் பாலத்தில் நின்று கொண்டு ஒரு குச்சியை கீழே விட வேண்டும். அப்படி நின்று கொண்டு விடும் போது, யாருடையது முதலில் விழுகிறதோ, அவர்கள் தான் வெற்றி பெற்றவராக அர்த்தம்.

பெட் ரேசிங் (Bed Racing)

பெட் ரேசிங் என்பதும் உலகில் விளையாடப்படும் ஒரு வித்தியாசமான விளையாட்டு. இந்த விளையாட்டில் படுக்கையில் ஒரு படுத்திருக்க, அவரை தள்ளிக் கொண்டு ஓட வேண்டும்.

ஜார்ப்பிங் (Zorbing)

இந்த விளையாட்டு எப்படி விளையாட வேண்டுமென்றால், ட்ராண்ஸ்பரண்ட் பிளாஸ்டிக் பந்தின் உள்ளே ஒருவர் உள்ள இருக்க, அவர்களை மேடுகளில் இருந்து கீழே தள்ள வேண்டும். இதில் யார் முதலில் கீழே வருகிறாரோ, அவரே வெற்றி பெற்றவராவார். இது உண்மையிலேயே மிகவும் சுவாரஸ்யமாகவும், வித்தியாசமான அனுபவத்தையும் கொடுக்கும்.

ஜார்ப்பிங் (Zorbing)

இந்த விளையாட்டு எப்படி விளையாட வேண்டுமென்றால், ட்ராண்ஸ்பரண்ட் பிளாஸ்டிக் பந்தின் உள்ளே ஒருவர் உள்ள இருக்க, அவர்களை மேடுகளில் இருந்து கீழே தள்ள வேண்டும். இதில் யார் முதலில் கீழே வருகிறாரோ, அவரே வெற்றி பெற்றவராவார். இது உண்மையிலேயே மிகவும் சுவாரஸ்யமாகவும், வித்தியாசமான அனுபவத்தையும் கொடுக்கும்.

மனைவியை தூக்கிக் கொண்டு ஓடுவது (Wife Carrying)


இந்த விளையாட்டில் மனைவியை தூக்கிக் கொண்டு, பல்வேறு இடங்களில் ஓர வேண்டும். அது வறண்ட இடமாகவோ அல்லது மண் அதிகம் உள்ள இடத்திலோ அல்லது நீர் நிறைந்த இடங்களாகவோ இருக்கலாம். இதுவும் மிகவும் நன்றாக இருக்கும்.

கர்னிங் விளையாட்டு (Gurning Game)

இந்த விளையாட்டு அவ்வளவு பெரிய விசித்திரமானதாக இல்லாவிட்டாலும், அந்த விளையாட்டில் ஒருவர் எந்த அளவில் தனது முகத்தை மிகவும் கேவளமாக வெளிப்படுகிறாரோ, அவரே வெற்றியாளராவார். இந்த விளையாட்டில் வீட்டில் உள்ளோருடன் கூட விளையாடலாம்.

போஸாபால் (Bossaball)


உண்மையிலேயே இது மிகவும் விசித்திரமான மற்றும் கொஞ்சம் கஷ்டமான விளையாட்டும் கூட. ஏனெனில் இந்த ஒரு விளையாட்டில் பல விளையாட்டுக்கள் கலந்திருக்கும். அதில் கைப்பந்து, கால் பந்து, ஜிம்னாஸ்டிக் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

ஆடையில்லாமல் விளையாடுவது (Nude Sports)

இந்த விளையாட்டு ரொம்பவே வித்தியாசம்பா. எப்படியெனில், விளையாடும் போது ஆடையே இல்லாமல் விளையாடுவது. இருப்பினும் இந்த விளையாட்டை உலகில் சில இடங்களில் விளையாடுகின்றனர். ஏனெனில் இப்படி விளையாடுவதால், ஆடையுடன் விளையாடும் போது கிடைக்கும் எனர்ஜியை விட, ஆடையில்லாமல் விளையாடும் போது அதிக அளவில் கிடைக்கிறதாம். 

Saturday 23 November 2013

திருமண பழமொழிகள்!

 
 திருமணம் செய்வதற்கு முன் இரண்டு கண்களையும் திறந்து வைத்துக்கொள்; திருமணம் ஆனபின் ஒன்றை மூடிக்கொள்.

- அமெரிக்கா

மணவாழ்க்கை என்பது இரும்புக் கோட்டை மாதிரி. வெளியே இருப்பவர்கள் உள்ளே செல்ல விரும்புகிறார்கள்; உள்ளே இருப்பவர்கள் வெளியே செல்ல விரும்புகிறார்கள்.

- அரேபியா

 மனைவி - வீட்டின் ஆபரணம் - இந்தியா

 கெட்டிக்காரப் பெண் - தான் காதலிப்பவனை விட்டு விட்டுத் தன்னை காதலிப்பவனைத்தான் மணப்பாள்.-

 செக்கோஸ்லோவேகியா


 திருமணம் செய்து கொள்ளும் முன்பும், கோர்ட்டுக்குச் செல்லும் முன்பும் தீர்க்கமாக யோசிக்க வேண்டும்.-

 டென்மார்க்



 திருமணத்துக்குப் பெண்ணை நாடும்போது கண்களை மூடிக் கொண்டு கடவுளை தியானம் செய்.

- வேல்ஸ்

 அழுது கொண்டே வரும் மணமகள், சிரித்து கொண்டிருக்கும் மனைவியாகிறாள். - ஜெர்மனி

 பணத்திற்காகக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டாம்; பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும்!-

ஐரோப்பா

 திருமணம் என்பது - மூடிய தட்டிலிருக்கும் உணவு போன்றது - ஸ்காட்லாந்து

 மணம் செய்யும் போதும், மாத்திரை சாப்பிடும்போதும் மிக அதிகமாகச் சிந்திக்கக் கூடாது.- ஹாலந்து

 கணவனின் அன்பே, பெண்ணிற்குப் பொக்கிஷம் - தமிழ் நாடு

 இரு இதயங்களும் ஒன்றானால் வைக்கோல் தொட்டி கூட அரண்மனையாகும்! - இலங்கை

Tuesday 19 November 2013

செவ்வாய்க்கு "மாவென்' விண்கலம்: "நாஸா அனுப்பியது"

 

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆராய்வதற்காக மாவென் என்ற விண்கலத்தை அமெரிக்கா திங்கள்கிழமை வெற்றிகரமாகச் செலுத்தியது.

நாஸா அமைப்பினால் உள்ளூர் நேரப்படி மதியம் 1.28 மணிக்கு, அட்லஸ் வி-401 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட இந்த விண்கலம் 10 மாதங்கள் பயணித்து செவ்வாயை அடையும். இது குறித்து நாஸா தரைக் கட்டுப்பாட்டு மையம் தெரிவிக்கையில், "விண்கலம் நல்ல முறையில் சென்று கொண்டிருக்கிறது' என்று கூறியுள்ளது.

அடுத்த ஆண்டு (2014) செப்டம்பர் மாதம் செவ்வாயை அடையும் மாவென், அந்த கிரகத்தின் நிலப்பரப்புக்கு 6 ஆயிரம் கி.மீ. உயரத்தில் ஓராண்டுக்கு சுற்றி வரும். எனினும், அது 5 முறை செவ்வாய் நிலப்பரப்புக்கு 125 கி.மீ. தூரம் நெருக்கமாக வந்து, அதன் சூழ்நிலையை ஆராயும். குறிப்பாக, அங்கு தண்ணீர் இல்லாததற்கான காரணம் போன்றவை குறித்து ஆராயப்படும்.

செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக இந்தியா சமீபத்தில் விண்ணில் செலுத்திய மங்கள்யானுக்கு முன்பாக, அமெரிக்காவின் மாவென் விண்கலம் அந்த கிரகத்தை அடைய உள்ளது. முன்னதாக, செவ்வாயின் தரைப்பகுதி தொடர்பான தகவல்களைச் சேகரிக்க அமெரிக்கா அனுப்பிய மார்ஸ் ரோவர் என்ற விண்கலம் கடந்த ஆண்டு செவ்வாய் கிரகத்தை எட்டி, புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை அனுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

Monday 18 November 2013

போயிங் 737 விமான விபத்தில் 50 பேர் பலி-வீடியோ



  
ரஷ்யாவின் கஸன் விமான நிலையத்தில் இன்று தரையிறங்க முயன்ற போயிங் 737 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 44 பயணிகள், 6 விமான சிப்பந்திகள் உள்பட 50 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இருந்து போயிங் 737 ரக விமானம் விமானி, ஊழியர்கள் 6 பேர் மற்றும் பயணிகள் 44 பேருடன் மேற்கு ரஷியாவில் உள்ள டாடர்ஸ்டன் மாகாண தலைநகர் காசன் நகருக்குப் புறப்பட்டுச் சென்றது.

அந்த விமானம் நேற்று இரவு 7.25 மணிக்கு காசன் விமான நிலையம் அருகே சென்றது. பின்னர் அங்கு தரை இறங்க விமானி முயற்சி மேற்கொண்டார். ஆனால் உடனடியாக தரை இறங்க முடியவில்லை.தொடர்ச்சியாக 3 முறை முயற்சித்தார். எனினும், தரை இறங்க முடியவில்லை.

4-வது முறையாக விமானத்தை காசன் விமானநிலைய ஓடு பாதையில் தரை இறக்க முயன்றபோது, அது தரையில் பயங்கரமாக மோதி தீப்பிடித்து எரிந்தது.இதையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் தங்களது உயிரைக் காப்பாற்றும்படி அலறினார்கள். எனினும், விபத்து நடந்த சிறிது நேரத்தில் விமானத்தில் இருந்த 50 பேரும் உயிரிழந்தனர்.

 nov 18 - Russisa accident

 

Sunday 17 November 2013

ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டத்தை கைவிட சீனா முடிவு!


கடந்த 43 ஆண்டுகளாக இருந்து வந்த, ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டத்தை கைவிட சீன அரசு முடிவு செய்துள்ளது. இதனால் சீனத் தம்பதிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உலக மக்கள் தொகை யில் முதல் இடத்தில் உள்ளது சீனா. கடந்த ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி சீனாவில் 18.5 கோடி பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்களாக உள்ளனர்.


2015ல் முதியவர்கள் எண்ணிக்கை 22.1 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5.1 கோடி முதியவர்கள் கவனிக்க ஆள் இல்லாமல் வறுமையில் வாடுகிறார்கள். மக்கள் தொகையை கட்டுப்படுத்த சீனாவில் கடந்த 1970 முதல் ஒரு குழந்தை குடும்ப கட்டுப்பாடு திட்டம் கொண்டு வரப்பட்டது. கிராமப்புறங்களில் தம்பதிக்கு பிறகும் முதல் குழந்தை பெண்ணாக இருந்தால் 2வது குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அதன் பிறகு கிராமப்புற, நகர்புறம் இரண்டிலும் ஒரு குழந்தைக்கு மேல் யாரும் பெற்று கொள்ள கூடாது என்று தடை விதிக்கப்பட்டது.


தற்போது முதியவர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் ஒரு குழந்தை திட்டத்தை கைவிட அரசு முடிவு செய்துள்ளது. சீனாவில் ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் பார்டியின் 18 வது மத்திய குழு கூட்டம் கடந்த 9ம் தேதி துவங்கி நான்கு நாட்கள் நடந்தது. இதில் 376 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


அவர்கள் ஒரு குழந்தை திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.இதை தொடர்ந்து சீனா வில் நடைமுறையில் உள்ள ஒரு குழந்தை திட்டம் தளத்தப்படுவதாகவும், தம்பதி 2 குழந்தைகள் பெற்று கொள்ள அனுமதி வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சீன மக்கள் அமோக வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Saturday 16 November 2013

அமெரிக்காவில் மருத்துவ ஜெனரலாகிறார் இந்தியரான டாக்டர் விவேக் மூர்த்தி!

 nov 16 - America Dr Murthy.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மருத்துவ சட்டத்தை நடைமுறை படுத்தும் குழுவுக்கு தலைவராக அமெரிக்காவின் தலைசிறந்த அறுவை சிகிச்சை நிபுணரான இந்தியர் விவேக் எச். மூர்த்தி இருந்து வருகிறார். இந்த விவேக் எச். மூர்த்தியை அமெரிக்காவின் பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ சிகிச்சைத் துறையை ஒட்டுமொத்தமாக நிர்வகிக்கும் உயரிய பதவியில் ஒபாமா நியமிக்க திட்டமிட்டிருப்பதாக நேற்று அறிவித்தார். இவரது பரிந்துரையை செனட் சபை ஏற்ருக் கொண்டால் அமெரிக்க வரலாற்றிலேயே மிகச்சிறிய வயதில் தலைமை அறுவை சிகிச்சை நிபுணரான பெருமைக்குரியவராக மூர்த்தி விளங்குவார்.                                  

ஹார்வார்டு மருத்துகல்லூரியில் மருத்துவம் பயின்ற இவர் தற்போதைய சர்ஜன் ஜெனரலான உள்ள ரெஜினா பெஞ்சமின் என்பவருக்கு பதிலாக பொறுப்பேற்பார். அமெரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவராகவும், இணை நிறுவனராகவும் உள்ள மூர்த்தி ஹார்வார்டு மருத்துவ நிறுவனத்தின் மருந்தியல் பிரிவின் மருத்துவர் மற்றும் பயிற்றுவிப்பாளராகவும் இருந்து வருகிறார். இதற்கிடையில் ஒபாமாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்க இந்திய மருத்துவ சங்கத்தினர் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

Obama Nominates Dr. Vivek Murthy as the Next U.S. Surgeon General

***************************************************
 

On Thursday night, the White House announced President Obama’s nomination for the next U.S. Surgeon General.The ideal nominee, Dr. Vivek Hallegere Murthy, is the co-founder and president of Doctors for America, a group that has been supporting and promoting Obama’s health care law.

Thursday 14 November 2013

செல்வாக்கான இளைஞர் பட்டியலில் மலாலா, ஒபாமா மகள் தேர்வு!



நியூயார்க்கில் இருந்து வெளிவரும் டைம் இதழ் 2013ம் ஆண்டின் செல்வாக்கு மிகுந்த 16 இளைஞர்கள் பட்டியலை கடந்த செவ்வாய் கிழமை வெளியிட்டுள்ளது.


 இந்த பட்டியலில் ஒபாமா வின் மகள் மாலியா (15), பாகிஸ்தானை சேர்ந்த மலாலா (16) மற்றும் சமூக சேவை, இசை, விளையாட்டு, தொழில்துறை விஞ்ஞானம், அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் இளைஞர்கள்  இடம்பெற்றுள்ளனர்.


அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மூத்த மகள் மாலியாவின் பேச்சு மற்றும் செயல்பாடு கள் பெரியவர்களின் செயல்பாட்டுக்கு ஒப்பாக அமைந்துள்ளது என்று டைம்ஸ் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.


மலாலாவை பற்றி கூறுகையில், பாகிஸ்தானில் பெண் கல்விக்காக போராடியவர், தீவிரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு பயப்படாமல் எதிர்த்து நின்று குரல் கொடுத்தவர் என்று குறிப்பிட்டுள்ளது.


இதைத்தவிர பாடகர்கள் லார்டு (17), ஜஸ்டின் பைபர் (19), ஒலிம்பிக் நீச்சல் வீரர் மிஸ்ஸி பிராங்க்ளின் (19) உள்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் இளைஞர்கள் பெயர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top