.......................................................................... ....................................................................... ......................................................................

Friday 6 December 2013

குளிர்கால ஆலோசனைகள்!

* காய்கறிகளை சூப்பாகத் தயார் செய்து அருந்துவது
 குளிர் காலத்திற்கு பொருத்தமானது.


* வெங்காயம், பூண்டு, வெந்தயம் போன்றவற்றை
 உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் குளிர்கால
 நோய்கள் ஏற்படாது.


* ஆப்பிள், திராட்சை, தக்காளி, கேரட் போன்றவற்றில்
 ஏதாவது ஒன்றை தினசரி பச்சையாகச் சாப்பிட்டு வர
 குளிரால் ஏற்படும் சளி, இருமல் தொல்லைகள் மாறும்.


 * குளிர்காலத்தில் சளியைக் கூட்டும் மற்றும் உடம்பில்
 குளிர்ச்சியை ஏற்படுத்தும் உணவுகளை ஒதுக்கிவிட
 வேண்டும். அதிக இனிப்புகளைத் தவிர்த்துவிட வேண்டும்.
சற்று காரமான உணவு வகைகளை உண்ணலாம்.
கிரீம் சேர்த்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.


* குளிர்காலத்தில் சிலருக்கு மூக்கில் நீர் ஒழுகிக் கொண்டே
 இருக்கும். இதற்கு ஓமத்தை சிறிதளவு எடுத்து ஒரு
 வெள்ளைத் துணியில் முடிந்துகொண்டு உறிஞ்சி வர
 மூக்கு நீர் நிற்கும். தலைபாரம், ஜலதோஷம் மாறும்.


* குளிர்பானங்கள், தயிர், மோர் போன்றவற்றை அருந்த
 வேண்டியதற்கு மாறாக இளஞ்சூடான பானங்கள்,
தேயிலை போன்றவற்றை அருந்துதல் நல்லது.


* இரவில் தூங்கப் போகும் முன் கோல்டு கிரீமை
 தடவலாம். உதடு வெடிப்பைத் தவிர்க்க வெண்ணெய்
 அல்லது தேங்காய் எண்ணெயை உதடுகளில் பூசலாம்.


 * காபி, டீ, பால் இவற்றில் இஞ்சி சேர்த்தல் நல்லது.
இது தொண்டை சம்பந்தமான பிரச்னையைத் தீர்க்கும்.


* மழைக்காலத்தில் தோல் செருப்பு, கவர் ஷுக்களைப்
 பயன்படுத்தாமல் ரப்பர் செருப்புகளையே அணியவும்.


 * அதிக சூடான நீரில் குளித்தால் சருமத்தின் இயற்கையான
 எண்ணெய் பசை மாறிவிடும். எனவே இளஞ்சூடான நீரில்
 குளித்தலே நல்லது.


* குளிர்காலத்தில் இரவு கால்களில் சாக்ஸ் மாட்டிக்
 கொண்டால் நல்லது. வயதானவர்களுக்கு அதிக குளிர்
 தாக்காது.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top