.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday 17 December 2013

நம்பிக்கை...?



உங்களுக்கு  நான் கூற விரும்புவது பல முறை நாம்  எந்த  விஷயதிட்காகவது தாகம் அடைகிறோம் ஏங்குகிறோம். ஆனால் நாம் நம்பிக்கை நிறைந்தவர்களாக இருப்பதில்லை.தாகமும் ஏக்கமும் நம்பிக்கை இல்லாமல் இருக்கும் பொது நிராசை அடைகின்றது.நிராசையுடன் ஒருவனது முதல் அடி எடுத்து வைக்கும் போது நிராசையுடனே கடைசி அடியும் நிறைவு பெறும். கடைசி அடி வெற்றியிலும் அர்த்தமுள்ளதாகவும் அமைய வேண்டுமெனில் முதல் அடி மிகுந்த நம்பிக்கையுடன் எழ வேண்டும்.

வாழ்க்கை முழுவதற்குமே நம்பிக்கையுடன் கூடிய திருஷ்டிக் கோணம் தேவை என்று உங்களுக்கு வலியுறுத்துகின்றேன். உங்கள் சித்தம் நம்பிக்கையால் நிறைந்து ஒரு வேலையைச் செய்கிறதா அல்லது நிராசையுடனா என்பதைச் சார்ந்தே அனைத்தும் இருக்கின்றன.நம்பிக்கையை இழந்து விட்டால், உங்கள் கைகளினாலேயே நீங்கள் அமர்ந்து இருக்கும் கிளையை வெட்டுகிறீர்கள்.

சாதனை விசயத்தில் நம்பிக்கை நிறைந்து இருப்பது மிகவும் முக்கியம். நம்பிக்கையினால் நிறைந்து இருப்பது என்பதன் பொருள், உலகில் எந்த மனிதனாலாவது   சத்திய நிலையை அடைந்து இருந்தாலோ அல்லது எப்பொழுதாவது ஒரு மனிதன் எல்லையற்ற ஆனந்தத்தையும் அமைதியையும்  அடைந்து இருந்தான் என்றால் நாம் அடைய முடியாததற்கு எந்த காரணமும் இல்லை என்றே நாம்  எண்ண வேண்டும்.

இருள் சூழ்ந்த இலட்சணக்கான மனிதர்களை பார்க்காதீர்கள். எந்த வித நம்பிக்கையும் எந்த  ஒளிக்கிரகணமோ  இல்லாத பிரகாசம் அளிக்காத கோடிக்கணக்கான மனிதர்களை பார்க்காதீர்கள் .
சத்யப்ப்ராப்தி அடைந்த சில மனிதர்களைச் சரித்திரத்தில் நோக்குங்கள். மலர்ச்சி அடைந்து பரமாத்மா வரை சென்ற சொற்ப மனிதர்களை நோக்குங்கள். அந்த விதைகளுக்கு சாத்தியமானது ஒவ்வொரு விதைக்கும் சாத்தியமே. ஒரு மனிதனுக்கு சாத்தியமானது மற்ற மனிதனுக்கும் சாத்தியமே.
விதை உருவில் உங்களிடம் உள்ள சக்தி புத்தர் மகாவீரர் ஜேசு இவர்களுடைய சக்தியின் அளவேதான் என்று உங்களுக்கு கூற விரும்புகிறேன்.

இறைவனின் உலகில் குறைந்த சாத்தியக் கூறு சிலருக்கு அதிக வல்லமை சிலருக்கு என்ற பாகுபாடு கிடையாது. ஆனால் இயற்கை நடப்புக்கள் அனைவருக்கும் சமமானதாக இல்லை.ஏனெனில் நம்மில்  அனேகமாக அனைவரும் தமது சாத்தியங்களை இயற்கை நடப்பாகப் பரிணமிக்கும் பிரயாசையை ஒரு பொழுதும் செய்வதில்லை.

வாழ் நாள் முழுவதும் நிராசையில் சென்று பார்த்தாயிற்று  இப்பொழுது நம்பிக்கையில் சென்று பாருங்கள். நீங்கள் முழு நம்பிக்கை வைக்கும் போது உங்களது ஒவ்வொரு மூச்சும் நம்பிக்கையினால் நிறைகிறது. உங்கள் எண்ணங்களில் நம்பிக்கை ஒளிர்கிறது. உங்களது தனித்தன்மை முழுவதும் நம்பிக்கையுடன் நிறைந்து விடும்பொழுது நீங்கள் ஒன்றைச் செய்ய முடியும் என்ற துவக்கம் ஆரம்பம் ஆகி விடுகின்றது.

இன்று இரவே உறங்கப் போகும் போது மிகுந்த நம்பிக்கையுடன் உறங்குங்கள். நாளைக் காலையில் எதுவும் நேரும், நேர முடியும், எதையாவது செய்து விட முடியும் என்ற பூரண நம்பிக்கையுடன் உறங்குங்கள்.

ஓஷோவின் படிப்படியாக தியானம் என்ற நூலில் இருந்து.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top