.......................................................................... ....................................................................... ......................................................................

Friday 27 December 2013

இசைஞானியின் கிங் ஆப் கிங்ஸ் 2ற்கான ஒத்திகைகள் தொடங்கின




கார்த்திக் ராஜா வழங்கும் இசைஞானி இளையராவின் லைவ் இசைக் கச்சேரியான கிங் ஆப் கிங்-2 வருகிற டிசம்பர் 28ல் கோலாலம்பூரில் நடைபெறவுள்ளது. இவ்விழாவிற்கான ஒத்திகைகள் இன்று தொடங்கவுள்ளதாக கார்த்திக் ராஜா கூறியுள்ளார்.

கோலாலம்பூர் மெர்டேக்கா ஸ்டேடியத்தில் இவ்விழா நடைபெற உள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து மேடைகளை அமைக்கும் பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன.

சுமார் 25,000 பார்வையாளர்கள் ரசிக்கவுள்ள இவ்விழாவில் 90ற்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டு இசை, நடனம் மற்றும் நகைச்சுவை நிகழ்ச்சிகளை நிகழ்த்தவுள்ளனர். பல்வேறு மொழி மற்றும் கலாச்சாரக் கலவைகளைக் கொண்ட மலேசியாவில் நடைபெறும் இந்நிகழ்ச்சி இளையராஜாவின் உலக அளவிலான இசை ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாக அமையவுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இசைஞானி இளையராஜாவிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டு அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும், இன்று அவர் பூரண குணமடைந்து வீட்டிற்குத் திரும்பியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வுகளால் இசை நிகழ்ச்சி பாதிக்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.



0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top