.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday 2 November 2013

தீபாவளி எத்தனை தீபாவளி!

 
 
 
தீபாவளியன்று வைணவர்கள் கோவர்த்தன பூஜையைச் செய்து அன்னதானம் செய்வர்.

* வங்காளிகள் காளி பூஜையாக இந்நாளைக் கொண்டாடுகின்றனர்.

* வடநாட்டினர் தீபாவளியைக் குபேர பூஜையாகக் கொண்டாடுகின்றனர்.

* இராஜபுதனர்கள் இந்த நாளை ராமபிரானுக்குரிய நாளாக வழிபடுகின்றனர்.

* ஆதிசங்கரர் ஞானபீடங்களை ஒரு தீபாவளிநாளில்தான் நிறுவினார்.

* ஜைனர்கள் மகாவீரர் மகாநிர்வாணம் அடைந்த நாளாக தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர்.

* சீக்கியர்கள் மதகுருவான குருநாணக் பிறந்தநாள் தீபாவளியாகும்

* மேற்கு வங்கத்தில் தீபாவளியன்று இளம்பெண்கள் தீபங்களை ஏற்றி ஆற்றில் மிதக்க விடுகிறார்கள்.

* தீபாவளியின்போது நாம் பட்டாசு வெடிப்பது போல் ஜெர்மனி நாட்டில் வசந்த கால விழாவில் பட்டாசு வெடிக்கின்றனர்.

* தீபாவளியின் போது ஆந்திரா, மகாராஷ்டிரம், வங்காளம் போன்ற மாநிலங்களில் ரங்கோலி கோலம் போடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

* பல்வேறு தகவல்களை அள்ளி வழங்கும் இன்டர்நெட்டில் தீபாவளிப் பண்டிகை குறித்த 3000க்கும் மேலான வெப்சைட்கள் உள்ளன.

* சீக்கியர்கள் தங்கள் சமய குருவான கோவிந்தசிங் எதிரிகளின் சிறையிலிருந்து தப்பி வந்த நாளை தீபாவளியாகக் கொண்டாடுகின்றனர்.

* பீகார் மக்கள் கண்ணன் கோவர்த்தனகிரிமலையை குடையாக எடுத்த தினமாக தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்.

* தீபாவளி திருமாலின் கிருஷ்ணாவதாரச் சிறப்பையும், ஓணம் திருமாலின் வாமனாவதார சிறப்பையும் கொண்டாடும் பண்டிகையாகும்.

* ஞான நூல்களுள் பகவத்கீதை சிறப்பான இடத்தைப் பெறுவது போல தீபாவளி பண்டிகைகளுள் உயர்ந்த இடத்தைப் பெறுவதால் இதனை ஆச்சார்ய ஸ்வாமிகள் பகவத்கீதையின் தம்பி என்று அருளியுள்ளார்கள். லட்சுமி செல்வத்தின் அதிபதி. அதனால் தீபாவளி அன்று லட்சுமி பூஜை செய்தால் செல்வம் வளரும் என்று நம்பிக்கை.

* சந்திர குப்த விக்ரமாதித்தன் தீபாவளித் திருநாள் அன்று அரியணை அமர்ந்ததாக சரித்திரம் கூறுகிறது. அதனால்தான் விக்ரம சகாப்தம் தோன்றியதாகக் கூறுவர்.

* தேனி மாவட்டம் சங்கம்பட்டியில் 24 மனை செட்டியார்கள் வசித்து வருகிறார்கள். பல மாவட்டங்களில் தலை சுமையாக ஜவுளிகளை எடுத்துச் சென்று வியாபாரம் செய்வது அவர்கள் குல வழக்கம். ஆண்டிப்பட்டி&தேனி சாலையில் அவர்கள் குல தெய்வமாக கல்லால் செதுக்கப்பட்ட யானை சிலையை வைத்து வழிபடுகின்றனர். தீபாவளியன்று மாலையில் அந்த யானைக்கு நல்லெண்ணெயால் அபிஷேகம் செய்வார்கள். பின் பட்டுத் துணி போர்த்தி பட்டத்து யானையைப் போல் அலங்கரித்துப் பொங்கல் வைத்து விழாக் கொண்டாடுகிறார்கள். அப்போது 24 மனை கோத்திரங்களையும் சேர்ந்தவர்கள் குலதெய்வத்தை வழிபட கூடிடுவர்.

* தீபாவளியன்று பட்டாசுகள் வெடிக்கும் பழக்கம் முகலாய வம்சத்தைத் தோற்றுவித்த பாபர் காலத்திலிருந்து ஏற்பட்டது.

* பிரகலாதனின் பேரனான மகாபலிச் சக்ரவர்த்தி முடிசூட்டிக் கொண்ட நாளே தீபாவளி என்றும் அந்நாளில் ஒளியூட்டப்படும் தீபமே யமதீபம் என்றும் வாமனபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* தீபாவளி பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. ஜப்பானில் இந்த விழாவை டோரா நாகாஷு என்றும், ஸ்வீடனில் லுசியா என்றும், தாய்லாந்தில் தீபஆவளி எனும் விளக்குத் திருவிழாகாக லாயகிரதோஸ் என்றும், மியான்மரில் தாங்கிஜி என்றும் சீனாவில் நஹும் ஹூபர் என்றும் கொண்டாடுகின்றனர்.


ஒலி எழுப்பும் பட்டாசுகள் இரவில் வெடிக்கத் தடை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரவு 10 மணிக்கு மேல் ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பண¢டிகை மற்றும் திருவிழா காலங்களில் பட்டாசுகளை வெடிப்பதால் எழும் ஓசை செவிட்டுத் தன்மை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே தீபாவளியன்று கவனக்குறைவு, அலட்சியத்தால் விபத்து ஏற்படாமல் இருக்க அதிக சத்தமுள்ள பட¢டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும். இரவு 10 மணிக்கு மேல் ஒலி எழுப்பும் பட¢டாசுகளை வெடிக்கக் கூடாது.
திறந்த வெளிகள் மற்றும் பொது இடங்களில் கூட்டாக பட்டாசு வெடிக்கலாம். குடிசைகள்,

எளிதில் தீப்பற்றும் பொருட்கள் இருக்கும் இடங்களில் வாண வெடிகளையும், ராக்கெட் வெடிகளையும் வெடிப்பதை தவிர்க¢க வேண்டும். குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிக்க அனுமதிக்கக்கூடாது. பெரியவர்கள் உடனிருப்பது அவசியம். பட்டாசு வெடிப்பதற்கு முன்பு பாத்திரங்களில் தண்ணீர், மணல் ஆகியவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றங்கள் அமைந்துள்ள அமைதிப் பகுதிகளில் வெடிகளை வெடிக்கக்கூடாது. இதையும் மீறி வெடிப்பவர்கள் போலீசாரால் நீதிமன்றத்த¤ல் ஆஜர்படுத்தப்பட்டு அபராதம் விதிக்கப்படுவர் என தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சரவெடி தீபாவளி அதிரடி தள்ளுபடி


கெனித்பார்கர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிரடி தள்ளுபடியாக 70% விலை குறைப்பு செய்திருக்கிறது. கெனித் பார்க்கர், பிரபல ஆடவர் பிராண்ட், இந்த தீபாவளிக்கு விலை களில் ஆச்சரியம் செய்திருக்கிறார்கள். மீ700/ முதல் மீ2,000/& வரை சந்தை மதிப்புள்ள ஆடைகளை மீ330, மீ460, மீ530 என்ற விலைகளில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளனர். ஃபார்மல்1, கேஷ்வல்ஸ், செமி ஃபார்மல்ஸ், பார்ட்டி வேர்ஸ் என்று எல்லா பிரிவு களிலும் டிசைனிங் டீம் அசத்தியுள்ள னர். தாம்பரம் மற்றும் திருவல்லிக் கேணியில் புதிய கிளைகளையும் துவக்கியுள்ளனர்.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top