.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday 3 November 2013

பாண்டிய நாடு – திரை விமர்சனம்..!

மருதை எப்பவோ தூங்கா நகரம்ங்கிறது போய குருதி நகரமாய் சினிமாவில் சித்தரிப்பது இது ஒன்றும் புதிதில்லை. அதனால் இந்த படத்த்துகு அது விதிவிலக்கல்ல. டை ரக்டர்கள்ள்ள் ஏற்கனவே சுட்ட தோசையின் மேல் காய்கறி வைத்து ஃபிரஷா செய்த பீஸா என்று கூறி தம்பட்டம் அடித்து கொல்லுவது ஒன்றும் புதிதல்ல. வழக்கம் போல மதுரையின் கட்ட பஞ்சாயத்து செய்து சமீபத்தில் மாய்ந்த பொட்டு சுரேஷின் கதை தான் இந்த படம். ஆனாலும் இந்த படம் இதே இயக்குனர் கைவண்ணத்தில் வந்த ” நான் மகான் அல்ல” (2010)ன் படத்தை அப்படியே தூசி தட்டி 2013ல் பாண்டிய நாடு என்று ரீமேக் ஸ்டோரிக்கே ரீமிக்ஸ் செய்திருக்கிறார்.



nov 3 - ravi pandiya nadu


இந்த படமும் அந்த படமும் ஒரே கதை ஒரே மேனரிஸம் கொண்ட சராசரி ஹீரோக்கள். அதில் அப்பா பனால் இதில் அண்ணன் பனால். அங்கே ஆரம்பிக்கும் பழி வாங்கும் படலம் இங்கும் அதே மாதிரி – அட ஹீரோ கையில் எடுத்து புள புளன்னு புளக்கும் ஆயுதம் கூட அதே ஆயுதம்னா பார்த்துக்கோங்க.
படத்தில் முக்கியமாய் மூன்று விஷயம்……….


வழக்கம் போல் விஷால் சலம்ப விடாமால் அவரை கட்டுக்குள் வைத்து அவருக்கு ஏற்ற மாதிரி நடிக்க வைத்தது.


பாரதிராஜாவை பொறுப்பள்ள அப்பாவாய் நடிக்க இல்லை வாழ வைத்தது.
17 சீன்களில் வரும் சும்மாங்காச்சி சேர நாட்டின் ஹீரோயின். ஃபைவ் ஃபைவ் ஃபைவ் பாட்டுக்கு போடும் ஆட்டம் உண்மையில ஒரு நல்ல டான்சர் என நிருபித்த கோரியகிராஃபர்.


18 வயசு கூட ஆகாத ஹீரோயினை டீச்சராய் நடிக்க வைக்கிறேன்னு காட்டன் புடவை கொடையை கொடுத்து கொஞ்சமும் பொருத்தமில்லாத ஹீரோயின். படம் முழுக்க வில்லன்கள் ஒரு மாறுதலாய் சுமோ / டவேரா போய் ஹைடெக் டொயோட்டா பார்ட்ச்சுனா வச்சுகிட்டி சர்ரு புர்ருனு போயிட்டு வர்ர சீன் தான் அதிகம். எல்லோரும் சாமியை காட்டி ஒப்பனிங் சீன் வைக்கிறாங்க நான் புதுமையா சாவு வீட்ல ரேப் பாடி ஆரம்பிச்சி வச்சு / இன்டர்வல்ல ஒரு சாவு அப்புறம் ஒவ்வொரு 10 நிமிஷத்துக்கு ஒரு டசன் சாவுன்னு சும்ம்மா சாவடி, படத்தில் சுமார் ஒரு சென்ச்சூரி கொலைகள் நடக்கிறது.


 சந்தானம் இல்லாமல் புரோட்டா சூரியை வைத்து பர்கர் காமெடியாய் ரென்டு ரொட்டி துன்டுக்கு நடுவே கொஞ்சமும் வேகாத இறைச்சி போல. விக்ராந்த எதுக்கு வர்ரார்ர்னு தெரியவே இல்லை. அழகர் சாமி குதிரை ஹீரோயினும் எதுக்கு இந்த படத்தில் வர்ரார்னு தெரியலை ஆனா இயக்குனர்கள் சிலர் எல்லா படத்திலும் தன் ஃபேவரட் ஆர்ட்டிஸ்ட்டை வைத்து தான் எடுப்பது தமிழ் படத்தின் விதி.


விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தக்காளி சாஸ் படம் எடுப்பதை நிறுத்தினால் தான் கொஞ்சம் நாளைக்கு இன்டஸ்ட்ரியில் இருக்கலாம். பாண்டிய நாடு – பன்டல் நாடு – போகும் போது ஒரு அரைக்கிலோ பஞ்சை எடுத்து போனால் கால் கிலோ ரென்டு காதுக்கும் கால் கிலோ ரெண்டு கண்ண்ணூக்கு வைத்து நல்லா ஏசில குற்ட்டை விட வசதி இல்லைனா ரெண்டு துண்டு பஞ்சி மூக்கில வச்சி நம்ம கண்ணீர் அஞ்சலிக்கு கியாரன்டி.

2 comments:

vivek kayamozhi said...

Kalakkaal review boss...

ram said...

நன்றி!

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top