.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday 12 November 2013

300 திரையரங்குகளில் வெளியாகிறது இரண்டாம் உலகம்!

 

இரண்டாம் உலகம்’ திரைப்படம் 300 திரையரங்குகளில் ரிலீஸாகிறது.

ஆர்யா, அனுஷ்காவை வைத்து செல்வராகவன் இயக்கியிருக்கும் மெகா பட்ஜெட் படம் ‘இரண்டாம் உலகம்’. இப்படம் தமிழகம் முழுவதும் 22ம் தேதி 300 திரையரங்குகளில் ரிலீஸாகிறது. இதற்காக திரையரங்குகளை புக் செய்யும் பணியில் பிவிபி நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

இப்போதைக்கு தீபாவளி படங்கள் அனைத்து திரையரங்குகளிலும் ஓடிக்கொண்டிருக்கிறது. எப்படியும் 22ம் தேதிக்கு முன்பாக ‘ஆரம்பம்’, ‘பாண்டிய நாடு’ படங்களை அனைத்து தரப்பு ரசிகர்களும் பார்த்துவிடுவார்கள் என்பதால் ‘இரண்டாம் உலகம’ படத்துக்கு முக்கியமான திரையரங்குகள் கிடைப்பதில் பிரச்சினை ஏற்படாது.

மேலும் இரண்டாம் உலகம் திரைப்படம் தமிழகத்தில் வெளியாகும் அதேநாளில்தான் ஆந்திராவிலும் ரிலீஸாகிறது.  தெலுங்கில் இப்படம் ‘வர்ணா’ என்ற பெயரில் வெளியாகிறது. ரசிகர்களுக்கு இப்படம் மிகவும் த்ரில்லான அனுபவமாக படம் இருக்க வேண்டும் என்று திரைக்கதையில் மிகவும் மெனக்கெட்டு இருக்கிறார் செல்வராகவன்.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top