.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday 19 December 2013

பகுத்தறிவு....?



ஒரு மகாராஜாவின் மகன் மிகவும் மக்காக இருந்தான். அதிகாரம் உள்ள பல குடும்பங்களில் இந்த “மக்கு மகன்” பிரச்சனை எப்போதும் உண்டு. அவனுக்கு ஆட்சியை கொடுக்க மக்கள் விரும்பவில்லை. மூத்தவர் சபை எதிர்த்தது. “என்ன செய்யலாம்” என்று அரசர் கவலைப்பட்டார். வெளிநாட்டில் திறமையான கலாசாலையில்  மகனைச் சேர்த்துவிட்டால் அவர்கள் எப்படியும் அறிவாளி ஆக்கிவிடுவார்கள் என்று மகாராஜா முடிவு செய்தார். அங்கு பலதுறைகள் இருந்தன. உயர்தரமான அந்தக் கலாசாலையில் ஐந்து ஆண்டுகள் தங்கிப் படித்துவிட்டு இளவரசன் திரும்பி வந்தான்.

அவனது உடை, நடை, பாவனைகள் என எல்லாம் மாறியிருந்தன. பளிச்சென்று உடையணியப் பழகியிருந்தான். அழகாக நடப்பது, கைகுலுக்குவது, மரியாதையாய்ப் பேசுவது என்று நிறைய மாற்றங்கள். மகாராஜாவுக்கு ஆனந்தம் தாங்கவில்வைல. முதியோர் சபையில் மகனை நிறுத்தி அவர்கள் அனுமதியுடன் அறியாவளியாக்கப்பட்ட மகனை அரசனாக்க நினைத்தார். பலரும் அவனை அறிவாளி என்றே ஒப்புக் கொண்டனர். பல்கலைக் கழகத்தின் சாதனையைய் பாராட்டினர்.

ஒரு வயதானவர் மட்டும் இளவரசனைச் சோதிக்க நினைத்தார். “என்ன படித்தாய்?” என்றார். “நிறைய, நிறைய… சோதிடம் கூட முறையாக கற்றுத் தந்தார்கள். நீங்கள் சோதிடத்தில் கேள்வி கேட்டால் கூடச்  சொல்வேன்” என்றான். வயதானவர் தமது மோதிரத்தை உள்ளங்கையில் வைத்து மூடிக் கொண்டு, “இது என்ன?” என்றார். இளவரசன் யோசித்தான். ஒரு காகிதத்தை எடுத்து கணக்குப் போட்டான். “உங்கள் கையில் உள்ளது வட்டமானது. நடுவில் ஓட்டையானது. ஒளியுடையது” என்று விடை சொன்னான். வயதானவருக்கு உள்ளூர சந்தோஷம். இருந்தாலும், “அடையாளங்களைச் சொல்கிறாயே ஒழிய அது இன்னதென்று சொல்லக்கூடாதா?” என்றார். “அது எங்கள் பாடத்திட்டத்தில் இல்லை” என்றார் இளவரசன். “யூகித்துச் சொல்” என்றார் வயதானவர். உடனே இளவரசன் “பாடத் திட்டத்தில் இல்லையென்றாலும் என் பொது அறிவை வைத்துச் சொல்லி விடுவேன்.. அது ஒரு வண்டிச் சக்கரம்” என்றான்.

முட்டாள். சர்வகலாசாலை சொல்லிக் கொடுத்ததைச் சரியாகச் சொல்லிவிட்டான். ஆனால் வண்டிச்சக்கரத்தை எவரும் உள்ளங்கையில் ஒளித்து வைக்க முடியாது என்ற சின்ன விஷயம்கூட அந்த மடையனுக்குத் தெரிந்திருக்கவில்லை.

முட்டாளையும் படிப்பாளியாக்க முடியும். ஆனால் அறிவாளியாக்க முடியாது.

“You can educate fools; but you cannot make them wish”.

நம்மூர் பழமொழி – ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.

திருக்குறள் கூறுவது:

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்

கடையரே கல்லா தவர்

குறள்விளக்கம்: அறிவுடையார் முன் அறிவில்லாதவர் போல் தாழ்ந்து நின்று, மேலும் கற்க கொள்பவர்களின் ஆர்வத்தைக் கற்றக் கொள்ளாதவர்கள் கடைநிலை மாந்தராகக் கருதப்படுவார்கள்.

 எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவ மென்ப திழுக்கு

குறள்விளக்கம்: நன்றாக சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு.

சமயோசிதத்தின் அவசியம் - குட்டிக்கதைகள்!




திருடனும் தெனாலி ராமனும்..


தெனாலி ராமன் இரவில்படுக்க போகும் முன் திருடன் ஒருவன் தோட்டத்தில் புதரில் மறைந்துருப்பதை பார்த்துவிடுகிறான்...

திருடன் என்று கத்தினால் நிச்சயம் மற்றவர்கள் பிடிப்பதற்குள் ஒடிவிடுவான்...
தனிப்பட்ட முறையில் தெனாலிராமனால் முடியாது...

மனைவியை கூப்பிட்டு வாய்கொப்பளிக்க தண்ணீர் கேட்கிறான்..

சொம்பு சொம்பாக வந்து கொடுக்கிறாள்.

புதரில் மறைந்து இருக்கும் திருடன் மீது கொப்பளிக்கிறான்..

 ''என்னது..எவ்வளவு தண்ணீர் வந்து கொடுப்பது நிறுத்தமாட்டியா.''.கத்துகிறாள் மனைவி.

 ''என்னது எதிர்த்தா பேசுகிறாய்.''அவள் மேல் துப்புகிறான்

''என்னது கேட்பதுற்க்கு ஆளில்லையா..''அலற துவங்குகிறாள் மனைவி..

தெனாலி ராமன் விட்டீல் பிரசினை என்று பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் வருகிறார்கள்..

 ''என்ன தெனாலிராமா இது '' கேட்கிறார்க்ள..

 ''பாருங்கள்..எவ்வளவு நேரமாக இந்த ஆளின்மீது துப்ப்புகிறேன்..ஒன்றுமே சொல்லவில்லை..ஒரு தடவை துப்பியதும் ஊரை கூட்டி விட்டாள் ''எனகிறான்தெனாலிராமன்...

திருடன் பிடிபடுகிறான்....

சமயோசிதத்தின் அவசியத்தை உணர்த்துகிறது இந்த கதை.

10 ரூபாய்க்கு சாப்பாடு - நகைச்சுவை!



தம்பி என்னப்பா அந்த ஓட்டல்ல ஒரே கூட்டமா இருக்கு,



அங்க 10 ரூபாய்க்கு முட்டைவெச்சி சாப்பாடு போடுறாங்களாம்,



என்னது...10 ரூபாய்க்கு முட்டைவெச்சி சாப்பாடு போடுறாங்களா..


அதுசரி வரும்போது ஏன் எல்லாம் மூஞ்சில ரத்தத்தோடு வராங்க,


அவங்க 10 ரூபாய்க்கு  செவுத்துல முட்டவெச்சி

 சாப்பாடு போடுறாங்களாம்.

நிகழ்வுகள்...?



இரண்டு ஆங்கிலேயர்கள் தமிழ் நாட்டுக்கு வந்திருந்தினர்.

காய்கறிச்சந்தைக்குச் சென்றார்கள்.

அங்கு குடை மிளகாய் பார்த்தனர். இது என்ன பழம்?,

ஆப்பிள் பழம் போல் இருக்கின்றதே என்று வியாபாரியிடம் கேட்டனர்!.

அவர் பேசும் தமிழ் இவர்களுக்கு புரியவில்லை.

இவர்கள் பேசும் ஆங்கிலம் அவருக்கு விளங்கவில்லை.
சரி இரண்டு பழங்கள் வாங்கி சாப்பிடலாம் என்றெண்ணி வாங்கினார்கள்.

முதலில் ஒருவன் சாப்பிட்டான். மிளகாய் காரமாக இருந்ததால் அவன் கண்களில் கண்ணீர் வழிந்தது.

கண்ணீரைப் பார்த்த நண்பன் கேட்டான், 'ஏன் அழுகிறாய்'.?

 'இல்லை 10 வருடத்திற்கு முன் என் மாமாவை தூக்கில் போட்டார்கள். அவரை நினைத்ததால் அழுகை வந்தது' என்றான்.

பிறகு 'இந்தா நீயும்சாப்பிடு' என்று இன்னொரு மிளகாயை நண்பனிடம் கொடுத்தான்.

நண்பனும் ஆர்வத்துடன் சாப்பிட்டான். காரத்தால் அவனுக்கும் கண்ணீர்வந்தது.

அடப்பாவி, உண்மையை மறைத்து விட்டானே என்று கோபம் கோபமாய் வந்தது.

அவன் கண்களில் கண்ணீரைக்கண்டதும், முன்னவன் கேட்டான், 'நீ ஏன் அழுகின்றாய்?'

இவன் பதில் சொன்னான். 'இல்லை 10 வருடத்திற்கு முன் உன் மாமாவை தூக்கில் போட்ட போது ஏன் உன்னையும் சேர்த்து போடவில்லை என்று நினைத்தேன்' என்றான்

மிருகங்களுக்கு உரிய குணம்...?



ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன.

ஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.



அப்போது, சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கி விழுந்துவிட்டார்.

நண்பர் மனைவியைத் தூக்க முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கிவிட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை.

இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார். ஆனால், விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார்.

பாய்ந்து வந்த மாடு கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும் விவேகானந்தரையும் விட்டு விட்டு, ஓடிக்கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது. அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடி வந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப்போட்டனர்.

விவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார். அங்கு வந்த நண்பருக்கோ ஒரே வியப்பு. அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம் தெளிந்து எழுந்தார்.

“சிறிது கூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது?” என்று கேட்டார் நண்பர். அதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்த விவேகானந்தர், “நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும்; சமாளிப்போம் என்ற ஒரு வித மன உறுதியுடன் நின்றுவிட்டேன். ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களுக்கு உரிய குணம். அதனால்தான் மாடு என்னை விட்டுவிட்டு, ஓடிக்கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது,” என்று முடித்தார்.

உயிருக்கு ஆபத்தான நேரத்தில் கூட, அதைக் கண்டு பயந்து ஓடாமல், வருவது வரட்டும் என்ற மன உறுதி பெற்றிருந்த சுவாமி விவேகானந்தரைப் பார்த்துப் பெரிதும் வியந்தார் நண்பர்.

இந்த உலகம் ஒரு கண்ணாடி போன்றது...குட்டிக்கதைகள்!



தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது.

அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிரிச்சி ஏனெனில் சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன.

சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது, அந்த நூறு நாய்களும் பதிலுக்கு "உர்ர்.. உர்ர்.." என்றது.

அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது இருந்தும் கோபம் தாளாமல் "லொள் லொள்" என குறைக்க ஆரம்பித்தது.

எல்லா நாய்களும் சேர்ந்து குறைத்து. அந்த நாய் குறைப்பதை நிறுத்தியவுடன் எல்லா நாய்களும் குறைப்பதை நிறுத்திகொண்டது.

மறுபடியும் கோபமும் பயமும் அதிகமானது.

உடனே வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குறைக்க ஆரம்பித்தது பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன.

இறுதியில் அந்த நாய் பயத்தில் இறந்தே போய் விட்டது.

அந்த நாய் கொஞ்சம் கவனித்து இருந்தால் அதற்க்கு புரிந்திருக்கும்.
1. தான் நுழைந்தது நூற்றுக் கணக்கான கண்ணாடிகளை கொண்ட அறை என்று
2. தன்னை சுற்றி இருந்தது தனது பிம்பங்கள் என்று
3. குறைத்து சுற்றி இருந்த நாய்கள் அல்ல தன் எதிரொலி என்று

 நீதி:


இந்த உலகம் ஒரு கண்ணாடி போன்றது.

நாம் கோபப்பட்டால் பதிலுக்கு கோபம் கிடைக்கும். அன்பு செலுத்தினால் அன்பு கிடைக்கும்.

வெளிநாடுகளில் ‘அனேகன்’




‘அனேகன்’ படத்தின் படப்பிடிப்பினை அதிகமாக வெளிநாடுகளில் நடத்த திட்டமிட்டுள்ளாராம் கே.வி.ஆனந்த்.தமிழ்த் திரையுலகில் வெளிநாட்டுக் கதைக்களங்களைக் தெரிவு செய்வது சமீபத்திய வழக்கமாகியுள்ளது.


ஜார்ஜியா, ஜப்பான் போன்ற நாடுகளில் படப்பிடிப்பை நடத்திய இயக்குனர்களைத் தொடர்ந்து கே.வி.ஆனந்தும் அந்த வரிசையில் தனது புதிய படத்தினை வெளிநாடுகளில் எடுக்கத் திட்டமிட்டுள்ளார்.


இவரின் 'அனேகன்' திரைப்படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்க இவருக்கு ஜோடி போட்டுள்ளார் அமிரா.


இப்படத்தின் படப்பிடிப்பானது தெற்காசிய நாடுகளில் நடைபெற உள்ளது.


மேலும் மியான்மர், மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளார்.


இந்தப் படத்தின் ஒளிப்பதிவு வரும் ஜனவரி மாதம் தொடங்க உள்ளது. இதுவரை சிறிய பகுதியினை மட்டும் படமாக்கியுள்ளனர்.

சத்தமில்லாமல் நடந்த 'ஜில்லா' இசை வெளியீட்டு விழா!



இன்று சென்னை தி.நகர் ஜி.ஆர்.டி  கிரேண்ட் ஹோட்டலில் நடிகர் விஜய்  பத்திரிகையாளர்களை சந்தித்தார். தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியும் உடன் இருந்தார்.


சினிமாவுக்கு வந்து 21 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, தன்னை வைத்து படம் எடுத்த நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு உதவ முன்வந்தார்.


மூன்று தயாரிப்பாளர்களுக்கும், இரண்டு தயாரிப்பாளர்கள் குடும்பத்தினருக்கும் தலா ஐந்து லட்சம் வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் எதிர்பாராதவிதமாக, 'ஜில்லா' இசையை வெளியிட்டார். நிகழ்ச்சி ஆரம்பித்தபோது 'ஜில்லா' இயக்குநர் நேசனும், இசையமைப்பாளர் இமானும் அரங்கத்தில் இல்லை.


விஜய் மேடையேறியதும், நேசன், இமான் ஆகிய இருவரும் அரங்கத்துக்குள் வந்தனர்.


விஜய் 'ஜிலலா' இசையை வெளியிட, ஐந்து தயாரிப்பாளர்களும் பெற்றுக்கொண்டனர். 21ல் 'ஜில்லா' இசை வெளியிடப்படும் என அறிவித்துவிட்டு, திடீரென இசை வெளியீட்டை நிகழ்த்தியது ஏன்? என்பதுதான் இப்போதைய ஹாட் டாபிக்.

குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை எப்படி பெற்றோர்கள் மறக்கடிப்பது !!




குழந்தைகள் என்றாலே விரல் சூப்புவது என்பது இயல்புதான். நாம் என்னதான் கையை எடுத்துவிட்டால் குழந்தைகள் மீண்டும் மீண்டும் கையை வாய்க்குதான் கொண்டு செல்லும். குழந்தை விரல் சூப்புவதற்கு முக்கிய காரணம், தனக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கவில்லை என்று உணர்வதால்தான் என்கிறார்கள், உளவியல் அறிஞர்கள்.

மூன்று வயது வரை இந்த பழக்கத்தை பெரிதாக நினைக்க வேண்டிய அவசியமில்லை. தாயின் கருவறையில் இருக்கும் போதே இந்தப் பழக்கம் ஏற்பட்டு விடுகிறது. இதனால் கவலை அடைய வேண்டிய அவசியமில்லை. குறிப்பிட்ட வயதில் இந்தப் பழக்கம் மாறிவிடும். நான்கு வயது வரை இந்தப் பழக்கம் நீடித்தால் குழந்தை நல சிறப்பு மருத்துவரிடம் காட்டி சிகிச்சை பெறுவது நல்லது

பெற்றோரிடம் தேவையான அன்பு, பராமரிப்பு, பாதுகாப்பு ஆகியவை கிடைக்காதபோது விரல் சூப்பும் பழக்கம் அதிகமாக இருக்கும். ஐந்து, ஆறு வயதில் இந்த பழக்கம் இருந்தாலும் மன நெருக்கடி மற்றும் அதிக கோபம் வரும். கையில் கிடைத்ததை எல்லாம் தூக்கி வீசுவார்கள்.இவர்களிடம் அதிகமாக அன்பு செலுத்தி அரவணைத்தால் மட்டுமே விரல் சூப்பும் பழக்கம் மாறும். நான்கு வயது முதல் 14 வயது வரை விரல் சூப்பும் குழந்தைளுக்கு உடலில் பல மாற்றங்கள் நிகழும்.

டி.வி. பார்க்கும்போது விரல் சூப்பும் பழக்கம் அதிகம் என்பதும் உண்மைதான். குழந்தைகளின் கவனம் முழுவதும் டி.வி.க்குள் போய்விடுவதால். தங்களை அறியாமலேயே அந்த பழக்கத்தைக் கையாளுகின்றனர். இதனால் குழந்தைகள் டி.வி. பார்க்கும்போது தனியாக பார்க்க விடாமல் பெற்றோர் துணையாக இருப்பது நல்லது. மேலும் குழந்தைகள் டி.வி. பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

விரல் சூப்பும் பழக்கத்தை எப்படி மாற்றுவது?

விரல் சூப்பும் குழந்தையிடம் அந்த பழக்கத்தை மாற்றுவதற்காக பெரிய பிரச்சினைகளை செய்ய வேண்டாம். வயது வந்த குழந்தைகளை, விரல் சூப்பும் பழக்கத்தை விட்டுவிடுமாறு கட்டாயப் படுத்துவதோ அல்லது அவர்களை அடிப்பதோ, உடலில் சூடு போடுவதோ கூடவே கூடாது.

4 வயதுக்கு மேல் அவர்களிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி அவர்களை திருத்தலாம். அல்லது நிறைய அன்பு செலுத்தி அவர்களாகவே அந்த பழக்கத்தை நிறுத்த முயற்சிக்கலாம். குழந்தைகளுக்கு விரல்களுக்கு வேலை கொடுக்கும் விதமாக அவர்களை விளையாட வைக்கலாம்.

எதையாவது எழுதச் சொல்லலாம் அல்லது ஓவியம் வரைய வைக்கலாம். இப்படி கை விரல்களுக்கு வேலை கொடுத்தால் விரல் சூப்பும் பழக்கத்தை தன்னாலேயே கொஞ்சம் கொஞ்சமாக மறந்து விடுவார்கள் குழந்தைகள். அதேபோல், தூங்கும்போது அவர்கள் கையில் பொம்மையை கொடுத்தால், அந்த பொம்மையை பிடித்துக் கொள்வதில் கவனம் செலுத்தும்போது விரல் சூப்புவதை மறப்பார்கள்.

வெளிநாட்டு வேலைக்கு போறீங்களா.? அப்ப இதை முதலில் படிங்க..!





சிங்கப்பூரில் சித்தாள் வேலைக்கு ஆட்கள் தேவை.. சவுதியில் சமையல் வேலைக்கு ஆட்கள் தேவை..’ கண்ணைப் பறிக்கும் கலரில் ஒட்டப்படும் இந்த போஸ்டர்களை நம்பி இன்னமும் பலபேர் போலிஏஜென்ட்களிடம் ஏமாந்து கொண்டி ருக்கிறார்கள். இப்படி எல்லாம் இஷ்டத் துக்கு போஸ்டர் ஒட்டி, வெளிநாட்டுக்கு ஆள் பிடிப்பது சட்டப்படி குற்றம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

வெளிநாட்டு வேலைக்கு ஆட்கள் எடுப் பவர்கள் குடிபெயர்வோர் பாதுகாவலரி டம் (Protector Of Emigrants) லைசென்ஸ் பெறவேண்டும். தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, கேரளா இந்த நான்கு மாநிலங் களுக்குமான குடிபெயர்வோர் பாதுகாவ லர் (பி.ஓ.இ) அலுவலகம் சென்னையில் இருக்கிறது. வெளிநாடு வாழ் இந்தியர் நலனுக்கான அமைச்சகத்தின் கீழ் செயல் படும் இந்த அலுவலகத்தில் ஐ.ஏ.ஏஸ். அதிகாரி பி.ஓ.இ-யாக இருக்கிறார்.

வெளிநாட்டு வேலைகளுக்கு ஆட் களை எடுக்கும் நிறுவனங்கள் 45 லட்ச ரூபாய்க்கு சொத்து மதிப்பும் 20 லட்ச ரூபாய்க்கு வங்கி உத்தரவாதமும் கொடுக்க வேண்டும். குறைந்தது 500 சதுர அடியில் சகல வசதிகளுடன் அலுவலகம் இருக்க வேண்டும். இதெல்லாம் இருந்தால் தான் லைசென்ஸ் கிடைக்கும். இந்த லைசென்ஸ் ஐந்தாண்டுகளுக்கு செல்லுபடியாகும். அதற்குள்ளாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பலாம்.

ஆள் பிடிப்பது குற்றம்


 லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள், பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து ஆட்களை இன்டர்வியூவுக்கு அழைக்க லாம். துண்டுப் பிரசுரங்கள் கொடுத்தோ, லோக்கல் சேனல்களில் விளம்பரம் செய்தோ, சுவரொட்டிகளை ஒட்டியோ ஆள் பிடிப்பது சட்டப்படி குற்றம். லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள் தவிர மற்றவர்கள் தனிநபர்களின் பாஸ்போர்ட் களை வாங்கி வைத்திருப்பதே கைதுக்குரிய குற்றம் என்கிறது சட்டம்.

வேலைக்கு ஆட்களை எடுக்கும் வெளி நாட்டுக் கம்பெனியானது பணியாளருக் க்கான குறைந்தபட்ச ஊதியம், விசா, தங்கு மிடம், உணவு, மருத்துவம், போக்கு வரத்து வசதி உள்ளிட்டவைகளை இலவச மாக அளிப்பதுடன், பணியாளர் இறக்க நேரிட்டால் பிரேதத்தை தங்கள் செலவி லேயே இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதாக வும் உத்தரவாதம் தரவேண்டும்.

வங்கி உத்தரவாதம்

 எதிர்பாராத விதமாக வெளிநாட்டில் இந்திய பணியாளருக்கு ஏதாவது அசம்பா விதம் நடந்தால் அதற்கான இழப்பீட்டுத் தொகையை வெளி நாட்டுக் கம்பெனியிட மிருந்து வாங்கிக் கொடுக்கும் பொறுப்பு இங்கி ருந்து ஆட்களை எடுத்து அனுப்பும் நிறுவனத்துடையது. இதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால், அந்த நிறுவனத்தின் வங்கி உத்தரவாதத்தை வைத்து அரசே சம்பந்தப்பட்ட பணியாளருக்கு இழப் பீட்டை வழங்கிவிடும்.

போலிகளை தண்டிக்க முடியும்


“நிறுவனங்கள் மூலமாக இல்லாமல், சுயமுயற்சியில் வெளிநாட்டு வேலை களுக்கு போகும் நபர்களுக்கு தினமும் நாங்களே இரண்டு மணி நேரம் வகுப்பு எடுக்கிறோம்’’ என்கிறார்கள் பி.ஓ.இ. அலுவலக அதிகாரிகள். “அதெல்லாம் சரி.. ஊர் ஊருக்கு பெட்டிக் கடை போட்டு வெளிநாட்டு வேலைக்கு ஆள் எடுப்பதாகச் சொல்லும் மோசடிக் கம்பெனிகளை தடுக்க முடியாதா?’’ என்று கேட்டால், “தமிழகத்தில் முறைப்படி லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள் 104 மட்டுமே. மற்ற வைகள் எல்லாமே போலிகள் தான். போலிகள் மீது நட வடிக்கை எடுக்க முடியும். ஆனால், எங்களி டம் அதற்கான மேன் பவர் இல்லை; போலீஸைத்தான் நம்ப வேண்டி இருக்கி றது. இதற்கு ஒரே வழி மக்கள் விழிப்புடன் இருப்பது தான்’’ என்கிறார்கள்.

வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க இலகுவான வழி!




தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.

இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டு விடும். கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.

இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் Install செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணனியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.

1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.

2) Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.

3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.

4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.

5) attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள் ஒவ்வொருபகுதிக்கும் Space சரியாககொடுக்கவும்.

◦நீங்கள் சரியாக கொடுத்துஉள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.

◦சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும்.

பிரிவு - கவிதை?



வலி மிகுந்த

 வாழ்க்கை பயணம்...

வழி நெடுக

புதுமுகங்களின் சந்திப்பு...

ஒவ்வொரு முகமும்

 ஒவ்வொரு உறவாக

 மனதில் பதிகின்றன...

ஆனால்...

எந்த உறவும் இறுதி வரை

 உடன் வரபோவதில்லை...

ஏதோ ஒரு நிமிடத்தில்

 பிரிந்தாக வேண்டிய கட்டாயம்...

அந்த நிமிடம் மரணமாகக்

 கூட இருக்கலாம்...

எதிரிகளை வெல்லுங்கள்.!



1.நம்மை அறிந்தோ அறியாமலோ வாழ்வில் எதிரிகள் உருவாகி விடுகின்றார்கள்.நமது கருத்துக்கு முரன்பாடான கருத்துக்களை செயல்களை நம்மை நோக்கி செயல் படுத்துபவர்கள் நேரிடையான எதிரிகள்.நம்முடன் இருந்து கொண்டே குழி பறிப்பவர்கள் மறைமுகமான எதிரிகள்.

2.இந்த மறைமுகமான எதிரிகளை நாம் தவிர்க்கவே முடியாது அவர்கள் நமது அன்றாட வாழ்வில் அங்கம் வகிக்கும் உறவினர்கள்,நண்பர்கள் ,என்ற போர்வையில் இருப்பார்கள் .நாம் ஒரு அடி முன்னேற எடுத்து வைக்கப் போகின்றோம் என்றால் அதை முளையிலேயே கிள்ளி எரிவதில் வல்லவர்கள்.
                                         
3.இவர்களை எப்படி நாம் எதிர் நோக்குவது இப்படிப்பட்ட எதிரிகள் இல்லாமல் வாழ்வை நாம்  அமைக்க முடியுமா?என்றால் இவர்கள் இல்லாமல் நமது வாழ்வு இருக்காது ,ஆகவே இவர்களை நாம் தவிர்க்க முடியாது .ஆனால் எதிர் கொள்ளலாம்.

4.அதே போல் நேரிடையான எதிரிகளை எதிர் கொள்ள நேரிடையான செயல்கள் மேற்கொள்ளலாம்,நாம் அவர்களை விட்டு விலகலாம்,நண்பர்களாக மாற்றலாம் இல்லையென்றால் அவர்கள் கற்றுக் கொடுக்கும் பாடங்களைப் படிக்கலாம்.

5.இவர்களை எதிர் கொள்வதில் தான் நமது வாழ்க்கை வெற்றி ரகசியம் இருக்கின்றது .இவர்களது தொல்லை பொறுக்க முடியாமல்  நாம் பழிவாங்கல் என்னும் செயலில் இறங்கினால் அது நமக்குத்தான் கெடுதலைத் தரும்.

6.ஒவ்வொரு மனதிலும் உருவாக்கப்படும் வெளியிடப்படும் எண்ணங்கள் ,அது வெளியிடப்படும் மனங்களில் எல்லாம் பரவி ஒரு நாள் நம்மிடமே அது திரும்பி வரும் .
                                                 
அப்பொழுது தெரியாது இந்த எண்ணம் நம்மால் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்டு இன்று செயலாக நம் முன் பரிணமித்து நிற்கின்றது என்று.சில எண்ணங்கள் உடனேயே நம்மை நோக்கி திரும்பும் .

7.ஆகவே முதலில் நம்மை எதிர்க்கும் நேரடியான எதிரியோ மறைமுகமான எதிரியோ அழிந்து விட வேண்டும்,அவர்களுக்கு நாமும் தொல்லை தர வேண்டும் , என்று  நினைத்து செயல்கள் செய்ய ஆரம்பித்தோம் என்றால், அந்த தொல்லைகளும் ,அழிவும்  ஒரு நாள் நம்மை நோக்கி பூமராங் போல கட்டாயம் திரும்பி வரும்.

8.ஆகவே முதலில் நமது எதிரிகள் என்ன பாடத்தை நமக்கு கற்றுக் கொடுக்கின்றார்கள் என்பதை உணர்ந்து அந்த பாடத்தை நாம் கற்று தெளிவுர வேண்டும்.அவர்கள் கட்டை போடும்,தொல்லைகள் தரும்  விசயத்தில் நமது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

9.ஒரு ஆழமான வழக்குச் சொல் ஒன்று உண்டு ஒரு எதிரியைப் பழி வாங்க வேண்டும் என்று உங்கள் மனதில் தோன்றி விட்டால்   "அவர்கள் கண் முன்  நன்றாக வாழ்ந்து காண்பித்து அவர்களைப் பழி வாங்கு"  என்று. எவ்வளவு ஆழமான நேர்மறையான தனி நபர் வளர்ச்சிக்கும்  சமூக வளர்ச்சிக்கும் உகந்த ஆக்கப்பூர்வமான வழக்குச் சொல் இது.

10.இந்த வழக்குச் சொல் உணர்த்துவது உங்களது வாழ்க்கையில் தடை போடுபவர்களைக் கண்டு,தொல்லைகள் தருபவர்களைக் கண்டு  கலங்காமல் ,அவர்கள் போடும் தடையையே உணவாகக் கொண்டு வாழ்ந்து காண்பி என்று.வாழ்ந்து காண்பிப்போமா?

'குளிர்காலம்..' வறண்ட சருமக்காரர்கள் உஷார்!




இந்த குளிர் காலத்தில் பலருக்கு உடம்பு முழுவதுமே வறண்டு காணப்படும். அதிலும் இயற்கையிலேயே வறண்ட சருமம் உடையவர்களுக்கு கேட்கவே வேண்டாம்.. முகம் அதிக அளவில் வறண்டு போய்விடுவதால், ஒருவித அசௌகரியத்தை அவர்கள் உணர்வார்கள்.

இத்தகையவர்களுக்காகவே கைகொடுக்கிறது ஆரஞ்சு பழமும், தேனும். வறண்ட சருமம் உடையவர்கள் மட்டுமல்லாது எண்ணெய் வடியும் முகத்தை கொண்டவர்களுக்கும் இந்த இரண்டும் அற்புத மாற்றத்தை ஏற்படுத்திவிடும்.

ஆரஞ்சு பழத்தில் சாத்துக்குடி ஒருவகையென்றால், சுளை சுளையாக காணப்படும் கமலா ஆரஞ்சு இந்த குளிர் சீசனில் அதிகமாகவே சந்தைகளில் கிடைக்கும்.

வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் அதிகம் நிறைந்த இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மேனி மினு மினுப்படைவது உத்தரவாதமான ஒன்று என்கிறார்கள் அழகுக் கலை நிபுணர்களும், டயட்டீசன்களும்.

பொதுவாக மேனி வறண்டுபோகாமல் இருக்க வழக்கமாக கூறப்படும் ஆலோசனை, அதிக அளவில் தண்ணீர் அருந்துவது. அது ஒரு வகையில் பலனளிக்கும் என்றாலும், ஆரஞ்சு மற்றும் தேன் ஆகியவை புரியும் மாயஜாலம் அதி அற்புதமானவை என்கிறார்கள் நிபுணர்கள்.

ஆரஞ்சு பழ சுளைகளை உண்டுவிட்டு அதன் தோலை தூக்கி எறிந்துவிடாமல், அதனை காயவைத்து பவுடராக்கி தண்ணீருடன் குழைத்து முகம் மற்றும் கைகளில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவினால் வறண்ட சருமம் போயே போச்!

அதேப்போன்று அரை மூடி எழுமிச்சை பழச்சாறில் ஒரு டம்ளர் சுடு நீரை கலந்து, அதனுடன் ஓரிரு ஸ்பூன் தேனை கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், மேனி மினு மினுப்படைவதோடு, உடம்பில் உள்ள தேவையற்ற சதைகள் குறைந்து உடம்பும் "சிக்"கென்று இருக்கும்.

எண்ணெய் சருமம் உடையவர்கள் ரோஸ் வாட்டரை ஒரு பஞ்சில் நனைத்து தடவ, சருமம் மினு மினுக்கும்.

தோலில் தழும்புகள், கீறல் வடுக்கள் போன்றவை உள்ளவர்கள் தக்காளி பழக்கூழுடன், தயிர் கலந்து தடவி சிறிது நேரம் காயவிட்டு, பின் கழுவி வர தழும்புகள் மறையும்.

மக்காச்சோள மாவு மற்றும் தயிர் கலந்த கலவையை தினசரி உடம்பில் தடவி, காயவிட்டு பின்னர் கழுவி வர சருமம் மின்னுவது சர்வ நிச்சயம் என்கிறார்கள் அழகு கலை நிபுணர்கள்.

இவையெல்லாவற்றையும் விட வெளியில் செல்லும்போது வெயில் படாமல் இருக்க கையில் குடை எடுத்து சென்றால் சூரிய கதிர்களின் வெப்பத்தினால் சருமம் வறண்டு போவதை தடுக்க முடியும்.

மேற்கூறியவற்றில் உங்களுக்கு வசதியானவற்றை பின்பற்ற ஒரு சில நிமிடங்கள்தான் தேவை. அதை செய்தால் பள பளக்கும் மேனியை நிச்சயம் பெறலாம்.

சமையல் எண்ணை ஓர் தெளிவு!



சமையல் எண்ணையில் கொழுப்புச் சத்து அதிகமாக உள்ளது. கொழுப்புச் சத்துக்களை இரண்டுவகையாகப் பிரிக்கலாம்.


1) முழுமையடையாத கொழுப்பு (Poly unsaturated Acid)


2) முழுமையடைந்த கொழுப்பு (Saturated Fatty Acid)


இதில் முதல்வகைக் கொழுப்பில் அதிக தீங்குகள் இல்லை. இவை இரத்தக் குழாயில் படியாது. இதிலுள்ள Linolic Acid கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மையுடையது.

இரண்டாம் வகைதான் மிக ஆபத்தானது. இதில் உள்ள கொழுப்புக்கள் இரத்தக் குழாயில் படிந்து பெரும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது.

எனவே முழுமையடைந்த கொழுப்புக்கள் அதிகமாக உள்ள தேங்காய் எண்ணெய், நெய், பாம் ஆயில் போன்றவற்றை தவிர்த்துக் கொள்வதோடு சபோலா கார்டி ஆயில், கார்ன் ஆயில், சன் ஃபிளவர் போன்ற சமையல் எண்ணைகளை பயன்படுத்தி ஆரோக்கிம் காப்பீர்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
மனித வாழ்க்கையில் மரணம் என்பது தடுத்து நிறுத்த முடியாத ஒன்று, எனினும் நாம் உடல் நலத்துடன் வாழ முயற்சித்தல் வேண்டும். இவ்வளவு விஷயங்களை நம் வாழ்வில் நடைமுறைப்படுத்துவது சாத்தியம் தானா? முயன்றால் நம்மால் முடியும். அதே நேரம் மார்க்கக் கண்ணோட்டத்தோடு நோக்கினால் நிச்சயம் முடியும்.

ஐந்துக்கு முன் உள்ள ஐந்தினைப் பேணிக் கொள்ளுங்கள்.

1) முதுமைக்கு முன் உள்ள வாலிபம்

2) வறுமைக்கு முன் உள்ள செல்வம்

3) நோய்க்கு முன் உள்ள ஆரோக்கியம்

4) வேலைக்கு முன் உள்ள ஓய்வு

5) மரணத்திற்கு முன் உள்ள வாழ்வு


எனவே மேலே கூறியது போன்று நோய்க்கு முன் உள்ள ஆரோக்கிய வாழ்வினைப் பெற்று அதனைத் தக்க வைத்துக் கொள்ள மரணத்திற்கு முன் உள்ள வாழ்வில் வேலைக்கு முன் உள்ள ஓய்வினை உண்பதற்கும் உறங்குவதற்கும் மட்டுமே பயன்படுத்தாது நமக்கும், நம் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும், படைத்த இறைவனுக்கும் ஆற்ற வேண்டிய நற்செயல்களை கருத்தில் கொண்டு உணவுக் கட்டுப்பாட்டுடன் கூடிய உடற்பயிற்சி செய்து நோயற்ற வாழ்வு வாழ எல்லாம் வல்ல இறைவன் நமக்கு உதவி செய்வானாக!

செவ்வாழை பழத்தின் மருத்துவ குணங்கள்?




பல்வலி குணமடையும்

பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.

சொரி சிறங்கு நீங்கும்


சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும், செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து ஏழுநாட்களுக்கு சாப்பிட்டு வர சருமநோய் குணமடையும்.

நரம்பு தளர்ச்சி குணமடையும்

நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும்.
குழந்தை பேறு தரும்

குழந்தை பேறு தரும்

திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ, ஜோசியரையோ நாடுவர். அவர்களுக்கு செவ்வாழை அருமருந்தாகும். குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

தொற்றுநோய் தடுக்கப்படும்

தொற்று நோய் கிருமிகளைக் கொல்லும் அறிய சக்தி செவ்வாழைப்பழத்தில் உள்ளது. வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வர உடலில் தொற்றுநோய் பாதிப்பு கட்டுப்படும்.

மாலைக்கண்நோய்

கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.
மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும்.

நாம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியவைகள்?



நாம் வாழ்வில் கடைப்பிடிக்க  வேண்டியவைகள் :


முதலில் வணங்க வேண்டிய தெய்வம் - தாய், தந்தை.

மிக மிக நல்ல நாள்                   - இன்று

மிக பெரிய வெகுமதி                  - மன்னிப்பு

மிகவும் வேண்டியது                   - பணிவு

மிகவும் வேண்டாதது                  - கோபம்

மிக பெரிய தேவை                    - சமயோஜித புத்தி

மிக கொடிய நோய்                    - பேராசை

மிகவும் சுலபமானது                   - குற்றம் காணல்

மிகவும் கீழ்தரமான விஷயம்       - பொறாமை

நம்ப கூடாதது                            - வதந்தி

ஆபத்தை விளைவிப்பது              - அதிக பேச்சு

செய்ய கூடாதது                         - உபதேசம்

செய்ய வேண்டியது                    - விவாதம்

உயர்வுக்கு வழி                          - உழைப்பு

நழுவ விடக்கூடாதது                  - வாய்ப்பு

பிரிய கூடாதது                           - நட்பு

மறக்க கூடாதது                         - நன்றி

மறக்க வேண்டியது                    - பிறர் நமக்கு செய்த தீமையை

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top