.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday 15 January 2014

மிஸ்டுகால்- தவறிய அழைப்புகளில் தடம் புரளும் வாழ்க்கை..!

மிஸ்டுகால்- தவறிய அழைப்புகளில் தடம் புரளும் வாழ்க்கை!!! எச்சரிக்கை ரிப்போர்ட் :-


மிஸ்டு கால்(Missed Call) – இது ஒரு அழையா விருந்தாளி. மீனைப் பிடிக்க தூண்டில் போட்டு காத்திருப்பவர் போலவே சிலர் மிஸ்டு கால்கள் மூலம் வலை வீசுகின்றனர்.

உலகமெங்கும் விரிக்கப்பட்டுள்ள மிஸ்டு கால் என்ற வலையில் சிக்குபவர்கள் இளம் பெண்களும், திருமணமான பெண்களுமாவர். மிஸ்டுகால்களை தொடுக்கும் பாலியல் வக்கிரப் புத்திக் கொண்டோரின் அம்புகளால் தாக்கப்படுபவர்களில் வளைகுடாவாசிகளின் மனைவிகளும் அடங்குவர் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

மிஸ்டுகால் மூலம் போடப்படும் தூண்டில்

ஆர்குட், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் புகைப்படங்களை போஸ்ட் பதிவது, தகவல்கள், போன் நம்பர்கள் போன்றவற்றைத் தருவதும் மிஸ்டு கால்களுக்கு தூண்டுகோலாக அமைந்துவிடுகிறது. அந்த படங்களை பார்த்து, எண்ணைப் பார்த்து மிஸ்டு கால் பிரச்சினை உருவாகலாம்.

ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் தெரியாத, எண்களில் இருந்து வரும் மிஸ்டு கால், எஸ்.எம்.எஸ் போன்றவற்றை நிராகரித்து விட்டால் தேவையற்ற

    தொடர்ந்து இங்கே படிக்கலாம்....

வீரம் வசூல் எவ்வளவு..?



அஜித்தின் வீரம் படம் வெளியான நான்கு நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.31 கோடி வசூல் செய்துள்ளது.

சிவா இயக்கத்தில் அஜித், தமன்னா ஜோடி சேர்ந்த வீரம் படம் பொங்கல் பண்டிகை விருந்தாக கடந்த 10ம் திகதி வெளியானது.

நகரத்து ஹீரோவாக வலம் வந்த அஜித் நீண்ட காலம் கழித்து இந்த படத்தில் கிராமத்து.....

    தொடர்ந்து இங்கே படிக்கலாம்....


வெற்றியின் விலை சமயோசிதம்....அவசியம் படிக்கலாம்!


இயல்பாகவே குழந்தைகளுக்கு பெற்ற தாயின் மீது பாசம் அதிகம். ஆனால் நியூயார்க் நகரத்தில் மர்கிட்டா ஆண்ட்ருஸ் என்ற 12 வயது பள்ளி மாணவி தனது தாயின் மீது வைத்த பாசம் மிக அதிகம். ஏனென்றால் இவளின் தந்தை இவள் சிறுமியாக இருந்தபொழுதே தாயை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். இவளின் தாயார் மிகவும் கடினமாக வேலை செய்து இவளைப் படிக்க வைத்தாள். மேலும் தனது புதல்வியின் கல்லூரிப் படிப்புக்காக கடினமாக உழைத்து சேமித்து வந்தார்.


ஆனால் பெற்ற தாயின் கனவோ இந்த உலகத்தைச் சுற்றி வரவேண்டும் என்பதே. தனது குழந்தையின் நலன் கருதி தனது ஆசையை அந்த தாய் வெளிக்காட்டாமல் இரவு பகல் பார்க்காமல் பாடுபட்டு சேமித்து வந்தார். தாயின் ஆசையை மர்கிட்டா தெரிந்து கொண்டு எப்படியாவது தனது தாயை உலகச் சுற்றுலா அழைத்துச் செல்லவேண்டும் என்று விரும்பினாள்.


மர்கிட்டா பள்ளியில் படித்துக் கொண்டு இருந்த காரணத்தால் வேலைக்கு போய் உலகச் சுற்றுலா செல்வதற்கான பெரும் தொகையை சம்பாதிக்க முடியாது. எப்படி தனது தாயின் ஆசையை நிறைவேற்றலாம்? என்று சிந்தித்துக் கொண்டு இருந்த பொழுதுதான் அவள் படித்த பள்ளியின் சாரணர் இயக்க நோட்டீஸ் போர்டு செய்தி அவளைத் துள்ளிக் குதிக்கச் செய்தது. அந்த செய்தி என்னவென்றால் பிஸ்கட் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று சாரணர் இயக்கத்தில் உள்ள பெண்களில் யார் அதிகமாக “” பிஸ்கட் பாக்கெட் விற்பனை செய்கின்றனரோ அவர்களுக்கு “கோடை விடுமுறையில் நடைபெற உள்ள கோடை முகாமில் இலவசமாக பங்கேற்க வாய்ப்பு” மற்றும் மிகவும் அதிகமாக விற்பனை செய்பவர்களுக்கு “உலகத்தைச் சுற்றி வர இரண்டு நபர்களுக்கான இலவச டிக்கட்” என்று அறிவித்திருந்தனர். மர்கிட்டா இந்த செய்தியைப் படித்தவுடன் தரையிலே நடக்கவில்லை. வானத்தில் பறப்பதைப் போன்று உணர்ந்தாள். தனது தாயின் ஆசையை நிறைவேற்ற சரியான தருணம் என்று துள்ளிக் குதித்தாள்.


தனது பள்ளியில் படித்த நேரம் தவிர மற்ற நேரங்களில், அவள் தனது அத்தையின் அறிவுரையின் பேரில் ஸ்கவுட் சீருடையை அணிந்து கொண்டு மக்கள் கூடுகின்ற இடங்களான ஷாப்பிங் மால்கள், பெரிய அப்பார்ட்மெண்ட், தெருமுனை, மார்க்கெட் போன்ற இடங்களைத் தேர்வு செய்து, யாரிடமெல்லாம் பிஸ்கட் வாங்க பணம் இருக்கும் என்று தெரிகின்றதோ, அவர்களிடம் சென்று, “எனது பள்ளியில் நடை பெறும் கோடை விடுமுறை இலவச சம்மர் கேம்பில் பங்கேற்க உதவுங்கள். அதற்கு என்னிடம் இந்த பிஸ்கட் பாக்கெட் வாங்குங்கள்” என்று கூவிக் கூவி பிஸ்கெட் பாக்கெட்டுகளை விற்றாள்.


 சிலர் அவளின் சிறந்த அணுகுமுறைக்காக வாங்கினர். சிலர் அவளின் ஆர்வத்திற்காகவும், உற்சாகத்திற்காகவும் பிஸ்கெட் பாக்கெட் வாங்கினார்கள். இன்னும் சிலர் பிஸ்கெட் வாங்க முன்வரவில்லை. மர்கிட்டா சிறிதும் கவலைப் படாமல் அவர்களிடம் சென்று சாரணர் இயக்கத்திற்கு 30,000 டாலர்கள் நன்கொடை அளிக்க முடியுமா? என்று பணிவுடன் கேட்டாள். அதற்கு அவர்களிடமிருந்து முடியாது என்ற பதில் வந்தது. உடனே மர்கிட்டா அப்படியென்றால் என்னிடம் ஒரு பிஸ்கெட் பாக்கெட் தாங்கள் வாங்கலாமே என்று கூறி மிக எளிதாக விற்றாள்.


முதல் பாக்கெட் விற்பது தான் மிகவும் கடினமாக இருந்தது. பிறகு சிரமம் ஏதுவுமில்லை. ஏனென்றால் அவளின் சிந்தனை மற்றும் இலக்கு முழுவதும் தன்னுடைய சம்மர் கேம்பில் பங்கேற்பதும், தனது தாயின் கனவை நிறை வேற்றுவது தான். மிகவும் கடின மாக உழைத்தாள். மர்கிட்டாவின் முயற்சி அறிந்த பொதுமக்கள் பலர் அவளின் ரசிகையானார்கள். அந்த ரசிகர்களே மற்றவர்களிடம் அவளின் லட்சியத்தைக் கூறி அந்த சிறுமி ஜெயிக்க வேண்டும் என்று உதவி கோரினர். மர்கிட்டாவின் முயற்சி வீண்போகவில்லை.


அவளின் கடின உழைப்பால் 3526 பெட்டிகள் (ஒரு பெட்டிக்கு ஒரு டஜன் பிஸ்கெட்டுகள்) விற்பனை செய்து அந்த ஆண்டு விற்பனையில் முதல் இடத்தைப் பிடித்தாள். அவள் தாயின் கனவை நிறைவேற்றினாள். தாயை அழைத்துக் கொண்டு மிகவும் சந்தோஷமாக உலகத்தைச் சுற்றி வந்தாள்.


இந்த சாதனை புரிந்து 5 ஆண்டுகளில் மர்கிட்டாவின் விற்பனை 39,000 பெட்டிகள் அதன் மதிப்பு 80,000 டாலர்கள். இப்பொழுது மர்கிட்டாவை எல்லோரும் கவனிக்க ஆரம்பித்தனர். அனைவரும் அந்த சிறுமியின் சாதனையைப் பற்றியே பேசினார்கள். மர்கிட்டாவின் பேட்டிகள் பத்திரிகையில் செய்தியாகவும், கட்டுரையாகவும் வரத்துவங்கின. உலகின் முன்னணி கணினி இயந்திரம் விற்பனை செய்யும் ஐஆங என்ற நிறுவனம் தங்களிடம் பணி புரியும் விற்பனை பிரதிநிதிகளிடையே மர்கிட்டா உரையாற்றுவதற்கு வாய்ப்பு அளித்தது.


 வால்ட் டிஸ்னி என்ற உலகின் முன்னோடியான சினிமா தயாரிக்கும் நிறுவனம் மர்கிட்டாவின் விற்பனை அனுபவத்தை “த குக்கி கிட்” என்ற பெயரில் 12 நிமிடம் ஓடக்கூடிய குறும்படம் ஒன்றைத் தயாரித்து வெளியிட்டது. அந்த குறும்படம் பல பெரிய நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு உற்சாகம் அளிக்கும் பாடமாக பயன்பட்டது. மர்கிட்டா எழுதிய “குக்கிஸ் எப்படி விற்பனை செய்யலாம்” என்ற புத்தகம் விற்பனையில் சாதனை புரிந்தது.


மர்கிட்டாவின் விற்பனைத் திறனைப் பற்றித் தெரிந்து கொள்ள ஒரு துளி. மில்லியன் டாலர் ரவுண்ட் டேபிள் என்ற இன்சூரன்ஸ் ஏஜெண்ட் களுக்கான அமைப்பில் 5000 ஏஜெண்ட்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் விற்பனை திறன்கள் பற்றி உரையாட மர்கிட்டா சென்று இருந்தாள். மிகவும் சிறப்பாக உரையாடி முடித்துவிட்டு நான் இந்த ஆண்டு கோடை விடுமுறையில் சம்மர் கேம்பில் கலந்து கொள்வதற்கு நீங்கள் உதவலாமா? அதற்கு நீங்கள் எத்தனை டஜன் பிஸ்கட் வாங்கப் போகின்றீர்கள்? என்று கேட்ட மறுநிமிடம் விற்று தீர்ந்தன, 5000 பிஸ்கெட் பெட்டிகள்.


நாம் பல நேரங்களில் பல விதமான சிந்தனைகளை அந்த சூழலுக்கேற்பத் தேர்வு செய்கின்றோம். இதில் எந்த சிந்தனை சரி? எந்த சிந்தனை தவறு? என்ற சிந்தனைக்கே இடமில்லை நாம் சிறுமி மர்கிட்டாவின் அனுபவத்தி லிருந்து பார்த்தால் நமக்கு மிகவும் தெளிவாகப் புரியும். மர்கிட்டா தன்னால் பிஸ்கட் விற்பனை செய்யும் போட்டியில் பங்கேற்க முடியாது என்று நினைத்திருந்தால், அவள் தெருத்தெருவதாக சென்று பிஸ்கெட் பாக்கெட் விற்றிருக்க மாட்டாள். அவள் தாயின் கனவு நிறைவேறி இருக்காது. அவள் பள்ளியில் நன்றாகப் படித்து தாயின் சேமிப்பின் மூலம் ஏதாவது ஒரு கல்லூரியில் சேர்ந்து படித்து இருப்பாள். இதுவும் சரி.


மர்கிட்டா தன்னால் முடியும் என்று நம்பியதால், முயற்சி செய்தாள். கடினமாக உழைக்க ஆரம்பித்தாள், சாதனை புரிந்தாள். உலகமே அவளைத் திரும்பிப் பார்த்தது. தனது தாயின் கனவும் நிறைவேறியது. இதுவும் சரி.


நாம் முடியும் என்று சிந்தித்தால் வெற்றி வாய்ப்புகளுக்கான கதவுகள் அனைத்தும் திறக்கப் படும். முடியாது என்று நம்பி முடிவெடுத்து விட்டால் எத்தனைமுறை தட்டினாலும் வெற்றி வாய்ப்புகளுக்கான கதவுகள் திறக்காது. நீங்களும் எந்த காரியம் செய்வதற்கு முன்பும் உங்கள் அறிவு மனது உங்களிடம் முடியாது என்று கூறினாலும், நீங்கள் அதோடு போட்டியிட்டு உங்களால் முடியும் என்ற முடிவினை எடுத்தால் வெற்றி நிச்சயம் .

Monday 13 January 2014

தலையை பாராட்டிய தளபதி அற்புத நிகழ்வு!


சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய், மோகன்லால் நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ஜில்லா.


இன்று இப்படத்தின் சக்சஸ் மீட் சென்னை ரெசிடென்சி டவர் ஹொட்டலில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய விஜய், உலகம் முழுவதும் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் ஜில்லா படம் அனைவரையும் கவர்ந்துள்ளது என விநியோகஸ்தர்கள் கூறுகின்றனர். மிகவும் சந்தோஷம்.


முதலில் எனது ரசிகர்களுக்கு நன்றி, படம் வெளியாகும் முதல் நாள் குளிரையும் பொருட்படுத்தாமல் திரையரங்குகளுக்கு வந்து அலங்காரம் செய்துள்ள காட்சிகளை காணொளியில் பார்த்தேன். இதன் பின்னால் இருந்த எல்லோருக்கும் நன்றி.


மேலும் அஜித் அவர்களின் 'வீரம்' படமும் நன்றாக வந்துள்ளது என்று கேள்விப் பட்டேன். அதில் பங்குபெற்ற அஜித், இயக்குனர் சிவா உள்ளிட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள் என்று தெரிவித்துள்ளார்.

Friday 10 January 2014

‘ஜில்லா’ ! ஜெயிக்குமா? - திரை விமர்சனம்...




ஊர் பெரிய மனிதர் சாக கிடக்கிறார். அரசியல் எதிரிகளால் அந்த பெரிய மனிதரின் மகன் படுகொலை செய்யப்பட, இளம் விதவை ஆகிறார் பூர்ணிமா பாக்யராஜ். சாகக்கிடக்கும் தருவாயில் இருக்கும் பெரியவர் தன்னுடைய விதவை மருமகளை மோகன்லால் திருமணம் செய்துக் கொள்ள வேண்டுமென்று ஒரு ‘பேக்கரி டீலிங்’ ஒப்பந்தம் போட்டுக் கொள்கிறார். இதனால் அவரது அடுத்த அரசியல் வாரிசாக மோகன்லால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஒரு ஆண், ஒரு பெண் என்று இரண்டு குழந்தைகளின் தாயான பூர்ணிமா பாக்யராஜை மோகன்லால் மணந்துக்கொண்டு வாக்குறுதியை காப்பாற்றுகிறார். பூர்ணிமாவின் மகன் தான் இளைய தளபதி விஜய். பிற்பாடு மோகன்லாலுக்கும் அவருக்கும் இன்னொரு உருப்படாத மகன் பிறக்கிறான். மகத்.

அரசியலில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து மாநில அளவில் பெரிய மனிதராகிறார் மோகன்லால். கட்டிவர சொன்னால் வெட்டிவர தயாராக வளர்ந்து நிற்கிறார் விஜய். ஆனால் மகத்தோ வெட்டியாக ஊர் சுற்றிக்கொண்டு, கண்ணில் படும் பெண்களை ரேப் செய்துக்கொண்டு, டோபு அடித்துக்கொண்டு வெளங்காவெட்டியாக உருவெடுக்கிறார்.

அரசியலில் விஜய்க்கு மோகன்லால் முக்கியத்துவம் கொடுப்பதை ஆரம்பத்திலிருந்தே மகத் விரும்பவில்லை. இளைஞரணித் தலைவர் பதவியை விஜய்க்கு தருவதை கடுமையாக எதிர்க்கிறார். ஆனாலும் மோகன்லால் விஜய்யைதான் அரசியலில் வளர்க்க விரும்புகிறார். ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பு என்று அப்பா தன்னை வெறுப்பதாக கருதிக்கொள்ளும் மகத் , கடுப்பாகி ஹாஃப் ஹாஃபாக சரக்கடித்து, ஃபுல் போதையில், மோகன்லாலிடம் பணிபுரியும் பாஷா என்பவரின் மகளை கதறக் கதற…

இந்த அடாத செயலுக்காக மகத்தை தண்டிக்க வேண்டுமென்று விஜய் போர்க்கொடி தூக்குகிறார். விஜய்யை போட்டால்தான் தான் உயிரோடு இருக்க முடியுமென்று மகத் அவர் மீது கொலைமுயற்சியை நடத்துகிறார். விஜய் இதிலிருந்து தப்பிக்க, மிருகமாக மாறிவிட்ட மகத் என்ன செய்கிறோம் என்பது புரியாமல் பூர்ணிமாவின் மகளையும் (அதாவது விஜய்க்கு டைரக்ட், மகத்துக்கு இன்டைரக்ட் அக்காவை), அவரது கணவரையும்கூட போட்டுத் தள்ளிவிடுகிறார். அக்காவை இழந்த விஜய் எரிமலையாய் வெடிக்கிறார். தன்னுடைய மகளை கற்பழித்துக் கொன்ற மகத்தை ஒழிக்க வேண்டுமென்று விஜய்யோடு மோகன்லாலின் நம்பிக்கைக்குரிய சகாவான பாஷாவும் கரம் கோர்க்கிறார். மகத்தை போட்டுத் தள்ளுகிறார் விஜய்.

தூங்கிவிடாதீர்கள். ட்விஸ்ட் மிச்சமிருக்கிறது.

இதுவரை படத்தில் காட்டப்பட்டது மாதிரி மோகன்லால் அவ்வளவு பெரிய யோக்கிய கொண்டையெல்லாம் கிடையாது. தன் ரத்தத்தில் பிறந்த மகனான மகத்தை நன்றாக வாழவைக்க, விஜயை ஒரு பலியாடாகதான் வளர்த்துக் கொண்டிருந்தார். விஜய்யின் ஒரிஜினல் தந்தை அரசியல் கலவரத்தால் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்டதும் பொய். அவரை கொன்றவரே மோகன்லால்தான் என்று பழைய கதைகளை தெரிந்த பாஷா சொல்கிறார்.

க்ளைமேக்ஸ்.

மோகன்லாலை பார்க்க வருகிறார் விஜய். இவரை எதிர்கொள்ள முடியாமல் கூசிப்போகும் மோகன்லால், “நல்லவன், கெட்டவன் பாகுபாடெல்லாம் உலகத்தில் இல்லை. இலட்சியங்களை அடைய அனைவரும் சிறு சிறு தவறுகளை செய்தவர்கள்தான்” என்று தன்னுடைய கடந்தகால தவறுகளுக்கு சப்பைக்கட்டு கட்டுகிறார். விஜய்யிடம் தன்னுடைய பழைய விஷயங்களை எல்லாம் போட்டு கொடுத்துவிட்ட பாஷாவை போட்டுத் தள்ளுமாறு ஆணையிடுகிறார். அதை மறுக்கும் விஜய், மோகன்லாலின் காலில் விழுந்து வணங்கி “யார் என்ன சொன்னாலும் நீ மட்டும்தான் என் அப்பா. என்னோட ஒரிஜினல் அப்பன் இப்போ உயிர்பிழைச்சி வந்தாலும் கூட, உன்னைதான் என் அப்பனா ஏத்துப்பேன். ஏன்னா நீ என்னை அப்படி வளர்த்திருக்கே” ரேஞ்சுக்கு எட்டு, பத்து நிமிஷத்துக்கு முழம் முழமாய் செண்டிமெண்டை கொட்டி வசனம் பேசுகிறார். அவரும், பாஷாவும் சில்லவுட்டாக தனியாக இருக்கும் மோகன்லாலை விட்டுக் கிளம்புகிறார்கள்.

இளைய தளபதியின் லாங் டயலாக்கை கேட்டு உலகத்தையே வெறுத்துவிட்ட மோகன்லால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு சாகிறார்.

2007ல் ‘பிரஸ்தானம்’ என்கிற பெயரில் சாய்குமார், சர்வானந்த் நடிப்பில் தெலுங்கில் வெளியான திரைப்படம் இது. தமிழில் இதுதான் ‘ஜில்லா’வாகிறது. பாலகிருஷ்ணாவின் ஆல்டைம் ப்ளாக்பஸ்டரான ‘சிம்மா’ ரிலீஸ் ஆன தேதியில் பிரஸ்தானமும் ரிலீஸ் ஆகித் தொலைத்ததால் படுதோல்வி அடைந்தது. வேறு தேதியில் ரிலீஸ் ஆகியிருந்தாலும் தோல்வி அடைந்திருக்கும். சாய்குமாரின் நடிப்பு மட்டும் நன்றாக பேசப்பட்டது. அவருக்கு அவ்வருடத்துக்கான ஃபிலிம்பேர், நந்தி விருதுகள் இப்படத்தில் நடித்ததற்காக கிடைத்தது. சில காலம் முன்பு இப்படம் ‘பதவி’ என்கிற பெயரில் டப் ஆகி தமிழிலும் ரிலீஸ் ஆனது. வந்த சுவடே யாருக்கும் தெரியவில்லை.

பின்னணி இப்படியிருக்க, ‘வேலாயுதம்’ ஷூட்டிங்கில் ஜெயம் ராஜாவின் உதவியாளராக இருந்த நேசன் சொன்ன மதுரைப் பின்னணி கதை ரொம்பவும் பிடித்துப்போய் ‘ஜில்லா’வில் நடிக்க விஜய் ஒப்புக்கொண்டதாக கதையளக்கிறார்கள். தெலுங்கு ரீமேக் என்று சொல்லிக் கொள்வதற்கு என்ன தயக்கமென்று தெரியவில்லை. தெலுங்கில் ஹீரோவுக்கு ஜோடியில்லை. இதில் சேர்த்திருக்கிறார்கள் போல. நேசன் ஏற்கனவே ‘முருகா’ என்கிற படத்தையும் இயக்கியிருக்கிறார். விஜய்க்கு நல்ல ஸ்க்ரிப்ட் கேட்க தெரியவில்லை. தமிழில் விஜய் நடித்தால் ஷ்யூர் ஹிட் என்று சொல்லிக்கொள்ளக் கூடிய ஏராளமான படங்கள் சமீபமாகவே தெலுங்கில் வந்திருக்கின்றன. அப்படியிருக்கையில் அரதப்பழசான சப்ஜெக்ட்டுகளை ஏன்தான் குறிவைத்து தேர்ந்தெடுக்கிறாரோ தெரியவில்லை.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top