.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday 29 December 2013

கமலுடன் ஜோடி சேர காஜலுக்கு ரூ.2 கோடி...!




உலக நாயகன் கமல் ஹாஸனுக்கு ஜோடியாக நடிக்க நடிகை காஜல் அகர்வாலுக்கு 2 கோடி ரூபா சம்பளம் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் நயன்தாராவுக்கு இணையாக அதிக சம்பளம் பெறும் நடிகை என்ற அந்தஸ்துக்கு உயர்ந்துள்ளார் காஜல் அகர்வால்.

2004இல் இந்தி திரைப்படமொன்றில் அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். 2008ஆம் ஆண்டு வரை அவருக்கு பேசிக்கொள்ளும்படி திரைப்படங்கள் அமையவில்லை. 2009இல் மகதீரா (தமிழில் 'மகாவீரன்') தெலுங்கு திரைப்படத்தின் வெற்றி அவருக்கு பெரிய நட்சத்திர அந்தஸ்தை தந்தது.

தமிழில் 'நான் மகான் அல்ல', 'துப்பாக்கி', 'மாற்றான்', 'ஆல் இன் ஆல் அழகு ராஜா' போன்ற திரைப்படங்களில் நடித்தார். தற்போது விஜய் ஜோடியாக 'ஜில்லா' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

லிங்குசாமி தயாரிப்பில் உலக நாயகன் கமல் ஹாஸன் நடிக்கும் 'உத்தம வில்லன்' திரைப்படத்துக்கு கதாநாயகி தேர்வு நடந்தது. அனுஷ்காவை பரிசீலித்தனர். ஆனால் அவர் தெலுங்கில் தயாராகும் இரண்டு சரித்திர திரைப்படங்களில் பிஸியாக நடிப்பதால் கால்ஷீட் இல்லை என்று கூறிவிட்டாராம்.

இதனையடுத்து காஜல் அவர்வாலிடம் பேசினர். அவர் இளம் ஹீரோக்களுடன் மட்டுமே நடிப்பேன் என்று கூறி வந்ததால் யோசித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து ரூ.2 கோடி சம்பளம் தருவதாக உறுதி அளிக்கப்பட்டதாகவும் இதையடுத்து 'உத்தமவில்லன்' திரைப்படத்தில் நடிக்க காஜல் அகர்வால் ஒப்புக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

கணவ‌ரிட‌ம் ‌பிடி‌க்காத ‌விஷய‌ம்....?





கணவ‌ரிட‌ம் இரு‌க்கு‌ம் ‌சில பழ‌க்க வழ‌க்க‌ங்க‌ள் மனை‌வி‌க்கு‌‌ப் ‌பிடி‌க்காம‌ல் போகலா‌ம். ஆனா‌ல் பெரு‌ம்பாலான மனை‌விகளு‌க்கு‌, த‌ங்களது கணவ‌ரிட‌ம் ‌பிடி‌க்காத ‌விஷய‌ம் எ‌ன்று ஒ‌ன்று இரு‌க்குமானா‌ல் அது எதுவாக இரு‌க்கு‌ம் எ‌ன்று உ‌ங்களா‌ல் க‌ணி‌க்க முடியுமா?


தாய்க்குப் பின் தாரம் எ‌‌ன்று ஒரு பழமொ‌ழி உ‌ள்ளது. இதனை ச‌ரியாக உண‌ர்‌ந்தா‌ல் இ‌ந்த தவறு ச‌ரிசெ‌ய்ய‌ப்படு‌ம். அனைத்து பெண்களுக்குமே கணவரிடம் பிடிக்காத விஷயம் எது தெரியுமா? தன்னுடைய கணவர் அம்மா பிள்ளையாக இருக்கிறார் என்பதுதான்.


பெ‌ற்று, ‌வள‌ர்‌த்து ஆளா‌க்‌கிய தாயை ம‌தி‌ப்பதோ, அவரது சொ‌ல்படி நட‌ப்பதோ ந‌ல்ல ‌விஷய‌ம்தா‌ன். ஆனா‌ல், ‌திருமணமா‌கி த‌ன்னை ந‌ம்‌பி வ‌ந்த பெ‌ண்ணு‌க்கு‌ம் அ‌ந்த அள‌வி‌ற்கு மு‌க்‌கிய‌த்துவ‌ம் தர வே‌ண்டியது‌ம் அவ‌சியமா‌கிறது. பொதுவாக எதை‌ச் செ‌‌ய்தாலு‌ம் அ‌ம்மா‌வி‌ன் அனும‌தியை‌ப் பெற வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌நினை‌ப்பது தவ‌றி‌ல்லை. ஆனா‌ல் ‌சி‌ன்ன ‌சி‌ன்ன ‌விஷய‌ங்களு‌க்கு‌ம் அவரது சொ‌ல்படிதா‌ன் நட‌ப்பே‌ன் எ‌ன்று ‌நீ‌ங்‌க‌ள் ‌நினை‌த்தா‌ல் உ‌ங்களு‌க்கு சுயபு‌த்‌தி‌யி‌ல்லை எ‌ன்று மனை‌வி ‌நினை‌க்க வே‌ண்டி வரு‌ம்.


மேலு‌ம், உ‌ங்க‌ள் இருவரு‌க்கு‌ள் ‌இரு‌க்கு‌ம் ‌சில ‌சி‌ன்ன ‌சி‌ன்ன ‌விஷய‌ங்க‌ளு‌ம், தா‌ய்‌க்கு தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டா‌ல், ஒரு சுத‌ந்‌திர மன‌ப்பா‌ன்மையை உ‌ங்க‌ள் மனை‌வி இழ‌க்க வே‌ண்டி வரு‌ம்.


எனவே, எது ச‌ரி, எது தவறு எ‌ன்று முடிவெடு‌த்து அதனை உ‌ங்க‌ள் தா‌யி‌ன் கவன‌த்‌தி‌ற்கு‌ம் கொ‌ண்டு வ‌ந்து ‌நீ‌ங்க‌ள் செ‌ய்வ‌தி‌ல் தவ‌றி‌ல்லை.


ச‌ரி இ‌ப்படி ஒரு ஆ‌ண், தனது தா‌யி‌ன் பே‌ச்சை‌க் கே‌ட்டு நட‌ப்பதை ‌விரு‌ம்பாத பெண், எதிர் காலத்தில் தன்னுடைய மகன் அம்மா பிள்ளையாக இருக்க வேண்டும் என்று ஆசை‌ப்படுவதையு‌ம் நா‌ம் பா‌ர்‌க்க முடி‌கிறது. பெற்றோர் மீது பாசமுள்ள கணவர்தான், மனைவி மீதும் பாசமாக இருப்பார் என்பதை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


‌திருமணமானது‌ம் எ‌ல்லாமே மனை‌வியாக‌த்தா‌ன் இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌நினை‌ப்பது‌ம் தவறு, உ‌ங்களது அ‌‌ன்பு, அ‌க்கறை போ‌ன்றவை தா‌ன், ஒரு ஆணு‌க்கு தா‌ய் செ‌ய்ய வே‌ண்டிய கடமைக‌ளி‌ல் ‌சி‌றிது தள‌ர்வை ஏ‌ற்படு‌த்துமே‌த் த‌விர, ‌அ‌திகார‌ம் அ‌ல்ல. எ‌‌ந்த‌ப் பெ‌ண்ணு‌ம் தனது கணவரை தா‌யை ‌வி‌ட்டு‌ப் ‌பி‌ரி‌த்து கொ‌ண்டு வர வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌நினை‌த்தா‌ல் முத‌லி‌ல் ‌‌நீ‌ங்க‌ள் இழ‌ப்பது உ‌ங்க‌ள் கணவ‌ரி‌ன் அ‌‌ன்பை‌த்தா‌ன். எனவே எதையு‌ம் உ‌ங்களது அ‌ன்பாலு‌ம், அ‌க்கறையாலு‌ம் ச‌ரி செ‌ய்ய முடியு‌ம் எ‌ன்பதை உணரு‌ங்க‌ள்.

ஷங்கர் படத்தில் நான்!




“ஓகே சார், நான் ரெடி...” என்றார். நானும் நிமிர்ந்து உட்கார்ந்துகொண்டேன். ஒருவேளை நான் ஜூஸ் குடித்து முடிப்பதற்காகக் காத்திருந்திருப்பாரோ என்று நினைத்தபடி அவசரமாகக் கடைசி மடக்கைக் குடித்துவிட்டு, வாயைத் துடைத்துக்கொண்டு நானும் ரெடி என்றேன்.

இயக்குனர் ஷங்கரைப் பேட்டி எடுப்பது என்பது எப்போதுமே முக்கியமான விஷயம். பெரும்பாலும் அவர் தரும் ஸ்டில்களும் சொல்லும் தகவல்களும் படு சுவாரஸ்யமாக இருக்கும். முதல் ரசிகனாக நம் பார்வைக்குக் கிடைக்கும் என்பதால் அது எல்லோருக்குமே பிடித்ததாக இருக்கும். அவருடைய பாய்ஸ் படப்பிடிப்பின் இறுதிக் கட்டத்தில் பேச சம்மதித்திருந்தார்.

“பேட்டியைத் தொடங்கிடலாமா..?” என்றார். நானும் சோபாவில் வசதியாக அமர்ந்துகொண்டேன். “நான் ரெடி சார்” என்றேன். என் அசைவைப் பார்த்துக்கொண்டிருந்தவர், என் கைகளையே பார்த்தார். கைகளைத் தேய்த்துக்கொண்டேன். “நானும் ரெடி சார்...” என்றேன் மறுபடியும்!

“இல்லே... நான் பதில் சொல்லத் தயாரா இருக்கேன்னு சொல்ல வந்தேன்...” என்றார். நானும் கேள்வியைத் தொடங்கிடுறேன் என்று சொல்லிவிட்டு, “இந்த ப்ராஜெக்ட் தொடங்கறப்பவே ஒரு கல்ச்சுரல் ஃபெஸ்டிவல் மூட்லதான் தொடங்குனீங்க... முடிக்கறப்ப எப்படி இருந்துச்சு?” என்றேன்.

இப்போது அவருடைய பார்வை என் சட்டைப் பை பக்கம் போனது. அவருடைய மனதில் என்ன ஓடுகிறது என்ற எண்ணத்தோடு நான் காத்திருக்க, அவரும் என் முகத்தையே பார்த்துக்கொ|ண்டு அமர்ந்திருந்தார்.

“எதுனா ஸ்டில் வந்திரட்டும்னு வெயிட் பண்றீங்களா சார்?” என்றேன்.

“இல்லே... நீங்க குறிப்பெடுத்துக்க தொடங்கினதும் நான் சொல்லத் தொடங்கிடுவேன்...” என்றார். அப்போதுதான் அவர் என் கைகளையே பார்த்ததற்கும் ரெக்கார்ட் செய்ய மைக்ரோ டேப் எதுவும் வைத்திருப்பேனோ என்று பையைப் பார்த்ததற்கும் பொருள் விளங்கியது.

“இல்லே சார்... நாம பேசத் தொடங்கிடலாம்... ரெக்கார்ட் பண்ணவோ குறிப்பெடுத்துக்கவோ தேவையில்லை... அப்படியே பழகிட்டேன்” என்றேன். அவர் முகத்தில் மொத்த நம்பிக்கையும் போய்விட்டது. “கேள்வியை ரிப்பீட் பண்ணவா சார்?” என்றேன். “வேண்டாம்... ஆனா, குறிப்பெடுத்துக்காம எப்படி எழுதுவீங்க..?” என்றார். பதில் சொல்வதைவிட கேள்வி கேட்பதில் சுவாரஸ்யமாகி விட்டார்.

“அதெல்லாம் நல்லா நினைவுல இருக்கும் சார்... எத்தனை நாள் கழிச்சும்கூட நான் எழுதிருவேன்… அப்படியே பழகிருச்சு…” என்றேன்.

“உங்க முதல் கட்டுரையில் இருந்தே இப்படித்தானா?” என்றார், அவர் பேட்டி பின்னுக்குப் போய்விட்டது. “இல்லே சார்… ஆரம்பத்துல நானும் பல கட்டுரைகளுக்காகப் போறப்ப குறிப்புகளை எழுதியிருக்கேன். பையிலே சின்ன பாக்கெட் டைரி வெச்சிருப்பேன். அதிலே கிட்டத்தட்ட முழு கட்டுரையையுமே எழுதிருவேன். அப்புறம்தான் விட்டுட்டேன்” என்றேன்.

“ஏன் விட்டுட்டீங்க..?” என்றார். “ஏன்னா… என்ன பேசுனோமோ அதை மட்டும் எழுதற மாதிரி ஆகிடுது” என்றேன்.

ஷங்கர் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்துவிட்டார். “இதென்ன பதில்? அப்ப சொல்லாததையும் எழுதுவீங்களா..?” என்றார். “அப்படி இல்லை சார்… நாம குறிப்பு எழுத ஆரம்பிச்சதும் பேட்டி கொடுக்கறவங்க கான்ஷியஸ் ஆகிடுவாங்க… பேச்சுல இயல்புத் தன்மை கெட்டுப் போயிரும். நாம குறிப்பு எழுதலைன்னா நம்மோட உரையாடுற இயல்போட பேசுவாங்க…” என்றேன்.

“அப்ப… இப்ப நாம பேசிகிட்டிருக்கறதை உங்களால அப்படியே எழுத முடியுமா?” என்று கேட்டார். “எப்ப வேணா எழுத முடியும் சார்… கூடவே, நீங்க பேசறப்ப லேசா முகத்தை மேல பார்த்து வெச்சுக்கறீங்க… லேசா இடது பக்கம் தலையைச் சாய்ச்சுகிட்டே பேசறீங்க… ரெண்டு கைகளையும் ஒரே ரிதம்ல அசைச்சுகிட்டே பேசறீங்க… சோபாவிலே உட்கார்றப்ப கால்களைக் கொஞ்சம் அகட்டி வெச்சுக்கறீங்க… இதையும் சேர்த்து என்னால எழுத முடியும். அதைச் சேர்த்து சொல்றப்ப பேட்டி இன்னும் சுவாரஸ்யமா ஆகிடும். இதையெல்லாம் பேப்பர்ல எப்படி சார் குறிச்சுக்கறது?” என்றேன்.

நான் சொன்னதை ரசித்தார். ஆனாலும் அவருக்குத் தான் பேசும் விஷயங்கள் முழுமையாகப் பேட்டிக்குள் இடம் பிடிக்குமா என்ற சந்தேகம் இருந்தது. கொஞ்சம் கவலையான குரலிலேயே மொத்த பேட்டியையும் பேசினார். புறப்படும் சமயம், “நான் வேணா ஆர்டிஸ்ட் லிஸ்ட், டெக்னீஷியன்ஸ் லிஸ்ட் குடுக்கட்டுமா..?” என்றார். “தேவைப்பட்டா கேட்டுக்கறேன் சார்…” என்றேன்.

அந்த வாரம் ஷங்கர் பேட்டிதான் பத்திரிகையின் ஹைலைட். அதன் பிறகு ஷங்கர் கலந்துகொண்ட ஒரு விழாவுக்கு நானும் கவரேஜுக்காகப் போயிருந்தேன். என்னைப் பார்த்ததும், “வெரிகுட்… என் வார்த்தைகளும் உங்க அப்சர்வேஷனும் அவ்ளோ அழகா பொருந்தியிருந்துச்சு” என்று பாராட்டினார்.

அதன் பிறகு அதே பாய்ஸ் படத்தில் நடித்த பாய்ஸ் பேட்டிக்காக மறுபடியும் ஷங்கர் அலுவலகத்துக்குப் போயிருந்தேன். பத்திரிகைக்காக பல்வேறு கோணங்களில் போட்டோ செஷன் பரபரப்பாக நடந்துகொண்டிருக்க, பாய்ஸ் கெட்ட அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே வந்த ஷங்கர், “தம்பிகளா… ரிப்போர்ட்டர் கையிலே பேப்பர் இல்லையேன்னு எதையாச்சும் பேசி வைக்காதீங்க… அவர் வேற டைப் ஆளு!” என்றார்.

அந்த சந்திப்பின்போது, நான் மாணவ நிருபராக இருந்த காலத்தில் அவர் தன் முதல் படமான ஜெண்டில்மேனுக்காக எங்கள் ஊருக்கு வந்ததையும் அப்போது அவரை நான் பேட்டி எடுத்ததையும் சொன்ன்னேன். “அப்போதாச்சும் குறிப்பு எழுதுவீங்களா?” என்றார் சிரித்துக்கொண்டே. “ஆமாம்… குறிப்பு எழுதினேன்” என்று சொல்லி விட்டு, “நான் குறிப்பு எழுதாதது உங்களை சங்கடப்படுத்திவிட்டதா?” என்றேன்.

“நீங்க பேசிட்டு போனப்ப பயம் இருந்தது. ஆனா, பேட்டியைப் படிச்சதும் சந்தோஷமாகிடுச்சு… உங்க அப்சர்வேஷன் அந்தக் கட்டுரையை அழகாக்கி இருந்துச்சு… நான் நாடகங்கள்ல நடிச்சுகிட்டிருந்தப்ப ஷோ தொடங்கறதுக்கு முன்னே வாழைப்பழம் சாப்பிடுவேன். அது பதற்றத்தைக் குறைச்சு நிதானமாக்கும். அதை முதல்வன்லகூட பயன்படுத்தியிருப்பேன். அதேபோல, எதையும் கண்ணால குறிச்சுகிட்டு கரெக்டா படைப்புல கொண்டு வர்ற உங்க குணமும் என் கதாபாத்திரங்கள்ல எங்கேயாச்சும் வரும்… அவ்ளோ பாதிச்சுடுச்சு…” என்றார்.

அந்நியன்லயோ சிவாஜியிலேயோ எந்திரன்லயோ நண்பன்லயோ நான் பார்க்கலை..!

‘ஐ’ படத்தில் நான் இருக்கேனான்னு பார்க்கணும்!

கணவன் வாங்கலையோ..கணவன்....?




ஒரு ஊர்ல கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது....அந்த கடை வாசலில் கடையோட விதிமுறை போர்டு வச்சுருந்தாங்க ..


அது என்னன்னா...!  

1.கடைக்கு ஒரு தடவை தான் வரலாம்.


2. கடைல மொத்தம் 6 தளங்கள் இருக்கு...ஒவ்வொரு தளத்துளயும்


இருக்குற ஆண்களோட தகுதிகள் மேல போக போக அதிகமாகிட்டே போகும்.


ஒரு தளத்துல இருந்து மேல போயிட்டா மறுபடி கீழ வர முடியாது ..
அப்டியே வெளிய தான் போக முடியும்.  


இதெல்லாம் படிச்சுட்டு ஒரு பெண்மணி கணவர் வாங்க கடைக்கு போறா...."மச்..கணவர் வாங்குறது என்ன காய்கறி வாங்குற மாதிரி கஷ்டமா என்ன...ச்சே ச்சே அப்டி எல்லாம் இருக்காது   



முதல் தளத்துல அறிக்கை பலகைல


 "முதல் தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்" அப்டின்னு போட்டுருந்துச்சு   



இது அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போக முடிவு செய்றா



இரண்டாம் தளத்துல அறிக்கை பலகைல



 "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் " அப்டின்னு போட்டுருந்துச்சு    



இதுவும் அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போறா.   



மூன்றாம் தளத்துல அறிக்கை பலகைல



"இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள். " அப்டின்னு போட்டுருந்துச்சு



அந்த பெண்மணி வசீகரமானவர்கள்னு பார்த்ததும் ஆஹா மூணாவது தளத்துலையே இவ்வளவு தகுதிகள் இருந்தா மேல போக போக இன்னும் என்ன எல்லாம் இருக்குமோ அப்டின்னு நினைச்சு மேல போவதாக முடிவெடுத்தாள்.



நாலாவது தளத்துல அறிக்கை பலகைல




"இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள்.



வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள் " அப்டின்னு.
இதை விட வேற என்ன வேணும்...நல்ல குடும்பம் அமைக்கலாமே?



கடவுளே...மேல என்ன இருக்குன்னு தெரிஞ்சே ஆகணும்." அப்டின்னு முடிவு பண்ணிட்டு மேல போனாள்.



ஐந்தாவது தளத்துல அறிக்கை பலகைல

 

 "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள்.



வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள்.மிகவும் ரொமாண்டிக் ஆனவர்கள் " அப்டின்னு.
அவ்ளோ தான்.....


அந்த பெண்மணியாள முடியல...[ வடிவேலு ஸ்டைலில்] ...சரி இங்கயே யாரையாவது தேர்வு செய்யலாம்னு நினைச்சாலும் இன்னொரு தளம் இருக்கே..அங்க என்ன இருக்குன்னு பார்க்காம எப்டி முடிவு எடுக்குறது...சரி மேல போயி தான் பார்ப்போம்னு போறா ..   


ஆறாவது தளத்துல அறிக்கை பலகைல

 

"இந்த தளத்தில் கனவான்கள் யாரும் இல்லை..வெளியே செல்லும் வழி மட்டுமே உள்ளது ..


இந்த தளத்தை அமைத்ததற்கு காரணமே பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாதுங்குறது நிரூபிக்கத் தான் .


எங்கள் கடைக்கு வந்தமைக்கு நன்றி ...
பார்த்து பதனமாக கீழே படிகளில் இறங்கவும் " அப்டின்னு போட்டிருந்தது .

பெண்களின் மூளை பிடிக்காது, உடல் தான் பிடிக்கும் : ராம் கோபால் வர்மா




பெண்களின் மூளை பிடிக்காது, உடல் தான் பிடிக்கும் என்று இயக்குநர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.

ராம் கோபால் வர்மா இயக்கத்தில் வெளியான 'மை ஒயிஃப் மர்டர்' மற்றும் 'ரான்' உள்ளிட்ட படங்களில் பணியாற்றியவர் நடிகை சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி. ‘டிராமா குயின்’ என்ற புத்தகம் ஒன்றிணை எழுதியுள்ளார்.

அப்புத்தகத்தில் ராம் கோபால் வர்மாவை தான் திருமணம் செய்ய விரும்பியதையும், ’என்னை திருமணம் செய்து கொள்வாயா?’ என தான் அவரிடம் கேட்டதாக சுசித்ரா கூறியுள்ளார்.

அதற்கு ராம் கோபால் வர்மா அளித்த பதிலையும் குறிப்பிட்டுள்ளார். “நீ என்னை தவறாக புரிந்து கொண்டுள்ளாய். நாம் இருவருமே வெவ்வேறு குணம் உடையவர்கள். எனக்கு திருமணத்தின் மீது எல்லாம் நம்பிக்கையில்லை.

நான் உறவிற்கு மட்டுமே பெண்களை பயன்படுத்துவேன். எனக்கு பெண்களின் உடல் மட்டுமே பிடிக்கும். அவர்களின் மூளை பிடிக்காது. பெண்களைப் பார்க்கலாம், ஆனால் அவர்கள் சொல்லுவதைக் கேட்க முடியாது.” என்று ராம் கோபால் வர்மா தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ராம் கோபால் வர்மாவிடம் அனுமதி பெற்றே இதனை எழுதியதாகவும் சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top