.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday 29 December 2013

ஸ்பைஸ்ஜெட் வழங்கும் அதிரடி ஆஃபர்! ஒரு டிக்கெட்டுக்கு 65% தள்ளுபடி!!!




இந்த புத்தாண்டை கொண்டாடும் வகையில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை அளித்துள்ளது. அதாவது முப்பது நாட்களுக்கு முன் டிக்கட்டுகளை பதிவு செய்த வாடிக்கையாளர் களுக்கு 65 சதவிகிதம் சலுகையை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வழங்குகிறது. அதிலும் இதே சலுகையில் இந்நிறுவனம் ஒரு மில்லியன் டிக்கட்டுகளை விற்பனை செய்ய முன்வந்துள்ளது.ஆனால் ஜனவரி 19 முதல் ஏப்ரல் 15 வரை பயணிக்க விரும்புகின்றவர்கள் ஜனவரி 5-க்குள் டிக்கட்டுகளை பதிவு செய்து கொள்ள வேண்டும்.


ஜனவரி மாதத்தின் முற் பகுதியில் பயணக்காலம் முடிவடையும் என்பதால், விமான சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் இது தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது மட்டுமலாமல் பிற்காலத்திலும் இந்த சேவையை பயன்படுத்த இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.


பிப்ரவரி முதல் மார்ச் மாதங்களில் பயணக் காலங்களாக இல்லாததால் இந்த நாட்களில் மக்கள் அதிகம் பயணிக்க மாட்டார்கள். இச்சலுகையின் முலம் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பயணிகளை கவர திட்டமிட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.


குறிப்பாக இந்த சலுகையில் வாங்கப்படும் டிக்கட்டுகள் ஜனவரி 19 முதல் ஏப்ரல் 15 வரை பதிவு செய்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பயணம் செய்வதற்கு 90 நாட்களுக்கு முன்னதாகவே முன்பதிவு செய்பவர்களுக்கு அதிகபட்ச சலுகை விலை வழங்கப்படும்.


56 விமானங்கள் கொண்ட இந்த விமான நிறுவனம் 40,000 இருக்கைகளை உள்நாட்டு சேவைக்கு பயன்படுத்தி வருகின்றது.


மற்றொறு சலுகையாக ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் மாடல் திட்டத்தை பயன்படுத்தி பயணிக்கும் மக்களுக்கு 50 சதவிகிதம் சலுகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அதன் விமான இதழில் தோன்றும் விமான பணியாளர்கள் பணியில் இருக்கும் போது இந்த சலுகைகளை பயணிகள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.


ஜனவரி 19 முதல் ஏப்ரல் 15 வரை பயணிக்க விரும்புகின்றவர்கள் ஜனவரி 5-க்குள் டிக்கட்டுகளை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

கார்த்தி சின்ன வயசுல எப்படி இருந்திருப்பார்? - ஜாலி கற்பனை!




யார் கண் பட்டுச்சோ, தொடர்ந்து மொக்கைப் படங்களாக் கொடுத்திட்டு இருக்கிற கார்த்தி சின்ன வயசுல எப்படி இருந்திருப்பார்?


ஸ்கூலுக்கு டவுசர் பாக்கெட்டுக்குள் ரெண்டு கையையும் விட்டுக்கொண்டு ஸ்டைலாகத் தலையை ஆட்டியபடிதான் நடந்து போயிருப்பார்.

அப்பாவை விட சித்தப்பா ரொம்ப பெஸ்ட் ஃப்ரெண்டு. 'வா சித்தப்பு, ஸ்கூலுக்குப் போகலாம்’ என இழுத்துட்டுப் போயிருப்பார். 

வகுப்பறை பெஞ்ச்சில் அடிக்கடி 'ஜிந்தாக்கு ஜிந்தா ஜிந்தா ஜிந்தாக்குத் தா’ சவுண்டைக் கொடுத்து பட்டையைக் கிளப்பியதால் ஒருநாள் முச்சூடும் முட்டிக்கால் போட்டிருந்தார்.

அப்பாவின் டார்ச்சரால் அநியாயத்துக்கு அவதிப்பட்டிருப்பார். கம்பராமாயணத்தை அப்பாவிடம் ஒப்பிக்கும் அசைன்மென்ட்டில் அண்ணன் சூர்யா தப்பித்தாலும் பொறுப்புத் தம்பியாய் மனப்பாடம் செய்து ஒப்பித்திருப்பார்.

கொஞ்சம் பூசினாற்போல இருந்ததற்காக, ஸ்கூல் ஃபேன்சி டிரெஸ் காம்பெடீஷனில் அண்ணன் சூர்யாவுக்கு முருகர் வேடத்தைக் கொடுத்தவர்கள் இவருக்கு எப்போதும் உல்ட்டாவாய் பிள்ளையார் வேடம்தான் கொடுப்பார்களாம். இதனாலேயே ஏகக் கடுப்பில் இருந்திருப்பார். 

மழை அலர்ஜி. ஆனால் ஸ்கூல் கேர்ள்ஸை அட்ராக்ட் பண்ண, நனைந்து ஆட்டம் போட்டிருப்பார்.

அப்பா நல்ல பிராண்டட் சட்டை, பேன்ட் எடுத்துக் கொடுத்தாலும் அழுக்குச் சட்டையையும் அப்பாவின் கைலியும்தான் சாருக்கு ஃபேவரைட் டிரெஸ். அதைப் போட்டுக்கொண்டு நடந்து செல்வதைப் பெருமையாக நினைப்பார்.

அப்பா ஸ்டைலில் அடிக்கடி விரதம் இருப்பார். 'பிரியாணி’ சாப்பிட்டு விரதத்தை முடிப்பார்.

பிரபு ரசிகராக இருந்திருப்பார். 'வெள்ளைரோஜா’ படத்தின் 'ஓ மானே மானே...’ பாட்டுதான் கார்த்தியின் ஆல் டைம் ஃபேவரைட்.

காலை எழுந்ததும் வீட்டில் களேபரம்தான். அண்ணன் சூர்யா, 'சன்ரைஸ் வேணும்’ என அடம்பிடிக்க... தம்பி கார்த்தியோ, 'எனக்கு ப்ரூதான் வேணும்’ என அடம் பிடித்திருப்பார். பொறுத்துப்பார்த்த அப்பா சிவக்குமார், 'கண்ணுகளா....நிலவேம்புக் கஷாயம் குடிங்க. ரொம்ப நல்லதுப்பா’ எனச் சொல்லி வாயில் ஊற்றிவிட்டதால், டரியலோ டரியல் ஆகி இருப்பார்கள்!

நடிகை சமீரா ரெட்டி தொழிலதிபரை மணக்கிறார்: 2014-ல் திருமணம்!




நடிகை சமீரா ரெட்டி நடிகர் சூர்யாவுடன் நடித்த 'வாரணம் ஆயிரம்' படம் மூலம் ஏராளமான ரசிகர்களால் அறியப்பட்டவர் ஆவார். இவரது திருமண நிச்சயதார்த்தம் கடந்த 14-ம் தேதி நடைபெற்றுள்ளது.


தனித்தனியே அனுப்பப்படும் மோட்டார் பைக்குகளின் பாகங்களை ஒருங்கிணைத்து வண்டிகளைத் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருபவர் அக்ஷய் வர்தே என்பவர். இவர்கள் இருவருக்கும் பொதுவான நண்பர் ஒருவர் இவர்களை சென்ற வருடம் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் செய்துவைத்தார். சமீராவிற்கும், அக்ஷய்க்கும் மோட்டார்பைக்குகளும், அவற்றில் பயணம் செய்வதும் மிகப் பிடித்தமான ஒன்றாக இருந்ததினால் அந்த விருப்பம் இருவரையும் ஒருங்கிணைத்துள்ளது.


கடந்த 14-ம் தேதி இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. குடும்ப விழாவாகவே அந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று சமீராவின் பிறந்த நாள் என்பதுவும் இன்னொரு சிறப்பாகும் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரம் தகவல் தெரிவித்தது.


அடுத்த வருடம் திருமணம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை உறுதி செய்த சமீரா இது குறித்து தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார். சமீராவின் மணமகன் கார்ப்போரேட் பின்னணியைக் கொண்டவராக இருப்பினும் திரையுலகப் பரிச்சயமும் இவருக்கு இருந்திருக்கின்றது.


நடிகர் அக்ஷய்குமார் நடித்த 'ஓ மை காட்' திரைப்படத்தில் அவர் பயன்படுத்திய பைக்கையும், நடிகர் பாலகிருஷ்ணா தனது 'லெஜென்ட்' படத்தில் உபயோகப்படுத்திய சூப்பர் பைக்கையும் இவரது நிறுவனமே வடிவமைத்துத்தந்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் வயது ..?







சென்னை வானிலை ஆய்வு மையத்தின் வயது என்ன இருக்கும் என்று நினைக்கிறீர்கள் ?

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் அனேக இடங்களில் மழையோ, இடியுடன் கூடிய கனமழையோ பெய்ய வாய்ப்புள்ளது...' என மழைக் காலங்களில் தினமும் நம் கவனத்தைக் கவரும் சென்னை வா...னிலை ஆய்வு மையத்தின் வயது என்ன இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? அதிகபட்சம் 100 ஆண்டுகள் இருக்கலாம் என்று நினைத்தால் அது தவறு.
சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரிச் சாலை திருப்பத்தில் சற்றே உள்ளடங்கி இருக்கும் இந்த ஆய்வு மையம் சுமார் 220 ஆண்டுகள் பழமையானது. ஐரோப்பாவிற்கு வெளியே அமைக்கப்பட்ட முதல் நவீன வானியல் ஆய்வகம் என்ற பெருமையும் இதற்கு உண்டு. இதற்கான ஆரம்பப் புள்ளியை வைத்தவர் வில்லியம் பெட்ரீ (William Petrie) என்ற கிழக்கிந்திய கம்பெனி ஊழியர்.

வில்லியம் பெட்ரீ வான சாஸ்திரத்தில் தனக்கிருந்த அதீத ஆர்வம் காரணமாக, 1787இல் தன் நுங்கம்பாக்கம் வீட்டிலேயே சொந்த செலவில் ஒரு ஆராய்ச்சிக் கூடத்தை நிறுவினார். ஓய்வு நேரத்தை அங்கேயே செலவிட்டார். அப்போது அவரிடம் மூன்று அங்குல தொலைநோக்கிகள் இரண்டு, வானியல் கடிகாரங்கள் இரண்டு, நட்சத்திரங்களின் இடங்களை கண்காணிக்க உதவும் கருவி ஒன்று என வெகுசில உபகரணங்களே இருந்தன. இவற்றைக் கொண்டு கிழக்கிந்திய கம்பெனியின் கப்பல்களுக்கு அவர் வழிகாட்டி உதவினார்.

ஒருமுறை பெட்ரீ நீண்ட விடுமுறையில் இங்கிலாந்து சென்றபோது, தனது உபகரணங்களை உபயோகிக்க அரசுக்கு அனுமதி அளித்தார். பின்னர் அவர் மெட்ராஸ் திரும்பியபோது, அரசே ஒரு வானிலை ஆய்வுக் கூடத்தை நிறுவி அதை நிர்வகிக்கும் பொறுப்பை பெட்ரீயிடம் கொடுத்தது. மெட்ராஸ் அப்சர்வேட்டரி (Madras Observatory) எனப் பெயரிடப்பட்ட அந்த ஆய்வு மையத்தை அப்போதைய மெட்ராஸ் ஆளுநர் சர் சார்லஸ் 1792இல் தொடங்கி வைத்தார்.

மைக்கேல் டோப்பிங் ஆர்ச் (Micheal Topping Arch) என்ற வானியல் ஆய்வாளர் இதனை வடிவமைக்க பெரிதும் உதவினார். வானிலை ஆய்வுக்கு தேவையான பல்வேறு உபகரணங்களையும் அவர் தருவித்தார். இதன் நினைவாக இங்கிருக்கும் 15 அடி உயர கிரானைட் தூணில் அவரின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த தூணில்தான் நட்சத்திரங்களை கண்காணிக்கும் தொலைநோக்கிக் கருவி முதன்முதலில் பொருத்தப்பட்டிருந்தது.

ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னால் வருபவர்களும் அறிந்துகொள்வதற்காக...' என்ற குறிப்புடன் இந்த தூணில் லத்தீன், தமிழ், தெலுங்கு, உருது ஆகிய மொழிகளில் இதுபற்றிய தகவல் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த தூண் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

1796இல் தான் இங்கு முதன்முறையாக வானியல் நிகழ்வுகளை முறையாகப் பதிவு செய்யும் வழக்கம் தொடங்கியது. கோல்டிங்ஹாம் (Goldingham) என்பவர்தான் இவ்வாறு பதிவு செய்த முதல் வானியல் ஆய்வாளர். இவரைத் தொடர்ந்து நிறைய புகழ்பெற்ற ஆய்வாளர்கள் இங்கு பணியாற்றி உள்ளனர். இவர்களில் முக்கியமானவர் போக்சன் (Pogson). சுமார் 30 ஆண்டுகள், இவர் மெட்ராஸ் அப்சர்வேட்டரியின் ஆய்வாளராக இருந்தார். இவரது மனைவியும், மகளும் கூட இவருடைய பணியில் உதவியாக இருந்தனர்.

19ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் தெரிந்த முழு சூரிய கிரகணங்களை கண்காணித்து பதிவு செய்ததில் இந்த ஆய்வு மையம் முக்கியப் பங்காற்றியிருக்கிறது. 1867இல் இந்த மையத்தை மூடுவது பற்றி லண்டனில் விவாதிக்கப்பட்டது. அப்போது தென் பகுதியில் பிரிட்டாஷார் வேறு சில ஆய்வகங்களைத் தொடங்கி இருந்ததுதான் காரணம். மெட்ராஸ் அபசர்வேட்டரி நிறைய விஷயங்களை சேகரித்து வைத்திருந்ததால், புதிய விஷயங்களை சேகரிப்பதை நிறுத்திவிட்டு, கையில் இருக்கும் விஷயங்களை பதிப்பிப்பதில் கவனம் செலுத்தலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில்தான் 20 அங்குல தொலைநோக்கி ஒன்றை தமிழக மலைகளில் ஏதாவது ஒன்றில் பொருத்தி வானியல் நிகழ்வுகளை ஆராயலாம் என போக்சன் பரிந்துரைத்தார். அதன் அடிப்படையில் நீலகிரி மற்றும் பழனி மலைகளில் இடம்பார்க்கும் பணி நடைபெற்றது. இதன் பயனாகத்தான் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் கொடைக்கானல் அப்சர்வேட்டரி கட்டப்பட்டது. இதன் பிறகு, மெட்ராஸ் அப்சர்வேட்டரியின் பணிகள் அங்கு இடம்மாறின. இதனையடுத்து இந்த மையத்தின் முக்கியத்துவம் மெல்ல குறையத் தொடங்கியது.

இந்த நிலையில்தான் 1945இல் சென்னையில் மண்டல வானிலை ஆய்வு மையம் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி, லட்சத்தீவு ஆகியவற்றிற்கான வானிலை அறிக்கைகளை இந்த மையம் தற்போது வெளியிட்டு வருகிறது. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் ஒரு தனி மனிதனுக்கு உண்டான ஆர்வம், பெருமழை, புயல், வெள்ளம், நிலநடுக்கம் போன்றவற்றில் இருந்து இன்று நம்மை தற்காத்துக் கொள்ள உதவுகிறது.

* வில்லியம் பெட்ரீ 1807இல் மூன்று மாத காலம் மெட்ராசின் ஆளுநராக இருந்திருக்கிறார்.

* இந்த ஆய்வு மையத்தில் மணிக்கொரு முறை வானியல் நிகழ்வுகள் பதிவு செய்யப்படும் முறை 1840இல் தொடங்கியது

*தீர்க்க ரேகை போன்ற விஷயங்களில் மெட்ராஸ் அப்சர்வேட்டரி அளித்த தகவல்களின் அடிப்படையிலேயே இந்திய வரைபடம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

உதவி கேட்ட ஆவி..!




ஒரு நாள் கணவனும் மனைவியும் மதிய வேளையில் காரில் பயணம் செய்தனர்.சிறிது தூரத்தில் ஒரு பெண் இரத்தக் காயங்களுடன் தங்கள் காரை நோக்கி ஓடி வருவதை பார்த்தனர்.உடனே மனைவி காரை நிறுத்தாமல் செல்லுங்கள் நமக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடும...் என்று எச்சரித்தாள்.

ஆனால் அவள் கணவரோ வண்டியின் வேகத்தை குறைத்து அந்த பெண்ணிடம் என்ன நடந்தது என்று கேட்டார்.நாங்கள் வந்த கார் விபத்து ஏற்பட்டு அங்கே நிற்கிறது, என் கணவர் விபத்தில் இறந்துவிட்டார் என் குழந்தை உயிருக்கு போராடி கொண்டு இருக்கிறது .தயவு செய்து என் குழந்தையை காப்பாற்றுங்கள் என்று கதறினாள்.

அவரும் இறங்கி சென்று விபத்துக்குள்ளான காரை பார்த்தார்.முன் சீட்டில் ஒரு பெண்ணும் அவள் கணவரும் இறந்து கிடந்தனர் பின் சீட்டை பார்த்தார் அங்கு ஒரு குழந்தை அடிப்பட்டு மயக்கத்தில் கிடந்தது.

உடனடியாக அந்த குழந்தையை எடுத்து கொண்டு தன் காரை நோக்கி ஓடினார் ,குழந்தையை தன் மனைவியிடம் கொடுத்து விட்டு தன்னிடம் உதவி கேட்ட பெண் எங்கே என்று தேடினார்.

எங்கும் காணாததால் விபத்துகுள்ளான காரை நோக்கி சென்றார்.காரில் இறந்து கிடந்த ஒருவரையும் அவருக்கு அடுத்த சீட்டில் சீட் பெல்ட் மாட்டியபடி இறந்து கிடந்த பெண்ணை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

தன்னிடம் சற்று முன் தன் குழந்தையை காப்பாற்றும்படி உதவிகேட்ட அதே பெண் தான் அவள்.

அன்னை என்பவள் தான் இருந்தாலும் இறந்தாலும் குழந்தையின் வாழ்வுக்காகவே வாழ்பவள்.அன்னையைவிட சிறந்த தெய்வத்தை வேறு எங்கும் காண முடியாது.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top