.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday 22 December 2013

காதலின் வயது எது???



வாழ்க்கை என்றால் என்ன என்ப...



தைபுரிந்து கொள்ள இயலாத வயதில் உனக்கு
எதற்கு காதல்!!!


கல்வி கற்கும் வயதில் நீ ஏன் காதலை பற்றி கனவு காண்கிறாய்?
கொஞ்சம் சிந்தி!


முதலில் நீ உன் காலில் நிற்கத்தக்கதகுதியை
பெற்றுக் கொள்...


அதற்கு பின் தாராளமாய் நீ காதலி


அப்போது புரியும் வாழ்க்கை
பயணம் என்பது எத்தனை கரடுமுரடான தென்று.


உங்கள் கருத்துக்கள் வரவேற்கதக்கது...

உன்னால் முடியும் என்று நம்பு!

மா மேதை அப்துல் கலாமின் கனவு
        
         அது 1950 வருடங்களில் நிகழ்ந்த சம்பவம்...



தமிழ்நாடுமுழுவதும் சூறாவளியாகப் பயணம் செய்து மக்களைத் தன்னுடைய சாதுர்யமான பேச்சினால் கவர்ந்து கொண்டி ருந்தார் அண்ணா. அவருடைய எரிதழலும், தென்றல் காற்றும் கலந்த அறிவார்ந்த பேச்சு மக்களிடையே ஒரு பெரிய எழுச்சியையே ஏற்படுத்திக் கொண்டிருந்தது. இராமநாதபுரம் ஸ்வார்ட்ஸ் பள்ளி மாணவர்களாகிய நாங்களும் மகுடிக்கு அடங்கிய பாம்பு போல் அந்த வசீகரப் பேச்சில் கட்டுண்டு கிடந்தோம்.

அவரை எப்படியாவது எங்களுடைய பள்ளி விழாவுக்கு அழைத்து வந்து பேச வைக்க வேண் டும் என்கிற ஆசை தணியாத தாகமாய் மாறியது. ஒருநாள் நானும் சக மாணவர்கள் சிலரும் சென்னைக்கு ரயில் ஏறி விட்டோம். அறிஞர் அண்ணாவின் வீட்டைக் கண்டுபிடித்து அவரைச் சந்தித்தும் விட்டோம். மிக எளிமையான வீட்டில், ரொம்ப சிம்பிளாக இருந்த அந்த மாபெரும் தலைவரை முதல் முதலாகப் பார்த்த போது எனக்கு வியப்பில் மூச்சடைத்தது. இவரா மேடைகளில் புயல் கிளப்பும் பேச்சுக்களை அனல் பறக்க விடுபவர் என்கிற எண்ணம் ஏற்பட்டது.

ஆனால் அந்த கரகரப்பான மயக்கும் குரல் அருகில் ஒலித்ததை நான் நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். கைலி, கை வைத்த பனியன் மற்றும் ஷேவ் செய் யாத முகத்துடன் இருந்த அண்ணா, "இப்போதைக்கு என்னால் அங்கே வர முடி யாது'’என்று சொன்னதும் எங்களுக்கு ஏமாற்றமாக இருந் தது. ஆனாலும் நாங்கள் விடாப்பிடியாக "தாங்கள் கண்டிப்பாக வந்தே ஆக வேண்டும்'’என்று பிடிவாதம் பிடித்தோம். மெலிதாகப் புன்னகை புரிந்த அவர் “"சரி, திருவையாருக்குச் சுற்றுப் பயணம் வரும்போது உங்கள் பள்ளிக்கு அவசியம் வருகிறேன்' என்று உறுதி மொழி அளித்து எங்களை அனுப்பி வைத்தார். நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

திரும்பும் வழி எங்கும் அண்ணா எங்கள் பள்ளிக்கு வந்து பேசுவது போன்ற கனவுகளே வந்து கொண்டிருந்தன. இங்கே சிக்கல் ஒன்று இருந்தது. நாங்கள் சென்னைக்குக் கிளம்பி வந்து அண்ணா அவர்களைப் பார்த்ததோ, அவர் எங்கள் பள்ளிக்கு வர ஒப்புக் கொண்ட தோ எங்கள் பள்ளித் தலைமை ஆசிரியருக்குத் தெரியாது. அன்றிருந்த திராவிட இயக்க அரசியல் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருந்தது. தலைமை ஆசிரியருக்குத் தெரிந்தால் திட்டுவார் என்று பயந்து அவரிடம் இந்த விஷயத்தை மறைத்து விட்டோம்.

அண்ணாவிடமிருந்து ஒருநாள் "நான் இந்த தேதியில் பள்ளிக்கு வருகிறேன்' என்கிற தகவல் வந்ததும் நாங்கள் புளகாங்கிதம் அடைந்தோம். இனிமேலும் தலைமை ஆசிரி யரிடம் மறைக்க முடியாது என்கிற சூழ்நிலை யில் அவரிடம் தயங்கித் தயங்கி விஷயத்தைப் போட்டு உடைத்தோம். கடுங்கோபம் கொண்ட அவர் தன்னிடம் கேட் காமல் எப்படி அவ ரை அழைக்கலாம் என்று கேட்டு ஆகாயத்துக்கும் பூமிக்கும் குதித்தார். அவரை மெல்ல மெல்ல ஆசுவாசப் படுத்தினோம். கடைசியில் ஒப்புக்கொண்டார்.

அண்ணாவை வரவேற்பதற்கான கோலாகலமான ஏற்பாடுகளைச் செய்தோம். இராமநாதபுரம் மாவட்டமே விழாக்கோலம் பூண்டிருந்தது. அண்ணாவும் எங்கள் பள்ளிக்கு வருகை தந்தார். அருமையான உரையை நிகழ்த்தினார். மேடைப் பேச்சில் அவருடைய அணுகு முறை மிகவும் வித்தியாசமானது. அன்று எங்கள் பள்ளி மேடையில் ஏறிய அவர் மாணவர்களாகிய எங்களைப் பார்த்து ""நான் எந்த தலைப்பில் பேச வேண்டும் என்று சொல்லுங்கள்..அதில் பேசுகிறேன்..''’என்றார். ஒரு கணம் நாங்கள் திகைத்துப் போனோம். எங்களுக்குள் அவசர அவசரமாகப் பேசி முடிவெடுத்து "நதிகள்'’என்கிற தலைப்பில் பேசுமாறு வேண்டினோம்.

மடை திறந்த வெள்ளம் போல் அந்தத் தலைப்பில் பேச ஆரம்பித்தார் அறிஞர் அண்ணா. மனித வரலாற்றில் ஐயாயிரம் வருடங்களுக்கும் மேலாக நதிகள் எப்படி மனித நாகரிகத்தை மேம்படுத்தின என்பதில் ஆரம்பித்து, இந்திய நாகரீக வளர்ச்சியில் நதிகளின் பங்கு, மற்றும் மேற்கு நாடுகளான சுவிட்ஸர்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா முதலியவற்றில் நதி நீர் எவ்வளவு அற்புதமாகப் பயன்படுத்தப் படுகிறது என்பது வரை சுமார் ஒன்றரை மணி நேரம் தேனருவி போன்ற பேச்சை அளித்தார். நாங்கள் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந் தோம். நதிகளின் முக்கியத் துவம் பற்றி அப்போது அவர் பேசிய பேச்சு என் மனதில் பசு மரத்தாணி போல் பதிந் தது. இன் றைக்கும் நான் பேசும் பல கூட்டங்களிலும், எழுதும் கட்டு ரைகளிலும் நதி நீர் இணைப்பின் முக்கியத்துவம் பற்றிச் சொல்வதற்கு அந்தப் பேச்சு ஒரு ஆரம்ப விதை என்றே சொல்லலாம்.

ஐம்பது வருடங்களுக்கு முன் னால் அந்த தீர்க்கதரிசி பேசியது இன்று நிறைவேறக்கூடிய ஒரு சூழ் நிலை மெதுவாகக் கனிந்து வருகிறது. தீர்க்கதரிசிகள் பலரின் கனவுகள் பலிக்கும்போது அவர்கள் இருப்ப தில்லை என்பது வரலாற்றில் சோகமான நடப்பு.

நமது நாட்டில் ஆண்டுதோறும் 1500 BMC நதிநீர் வெள்ளத்தினால் கடலுக்குள் போய் சேருகிறது. அதில் 300 BMC நீரை நாம் உபயோகித்தாலே, நாடு வளம் பெற்று நலம் பெறும். அந்த 300 BMCநீரை எப்படி நாட்டுக்குள் திருப்பி விடுவது என்பதைப் பற்றி நாம் யோசித்து செயல்பட வேண்டிய கட்டத்தில் இருக் கிறோம். நதிநீர் இணைப்பு என் பது இன்று பேச் சளவில் ஒரு கருத்துருவாக்க மாக இருந்தா லும் மிக விரை வில் காலத்தின் கட்டாயத்தினால் அது நனவாகி விடும் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு. ஆனால், பல பேர் முடியாது, முடியாது என்பதை தாரக மந்திரமாக வைத்துள் ளார்கள்.

கரிகாலன் முடியாது என்று நினைத்திருந்தால் தமிழ்நாட்டில் கல்லணை கிடையாது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்க்க முடியாது என்று காந்தியடிகளும், சுதந்திர போராட்ட வீரர்களும் நினைத் திருந்தால், நமக்கு சுதந்திரம் கிடைத் திருக்காது. சி.சுப்பிரமணியமும், எம். எஸ். சுவாமிநாதனும் முடியாது என்று நினைத்திருந்தால் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து இருக்காது. வர்கீஸ் கொரியன் முடியாது என்று நினைத்திருந்தால் இந்தியா வெண்மை புரட்சியில் வெற்றி அடைந்து இருக்காது. விக்ரம் சாராபாய் முடியாது என்று நினைத்திருந்தால் இன்று செயற்கைக்கோளை இந்தியா ஏவியிருக்க முடியாது.

முடியாது என்ற நோய் நம்மிடம் பல பேரிடம் அதிகமாக உள்ளது. முடியும் என்று நம்பும் மனிதனால்தான் வரலாறு படைக்கப்பட்டு இருக்கிறது. எனவே நண்பர்களே, முடியும் என்ற நம்பிக்கை கொண்ட 54 கோடி இளைஞர்கள்தான், இந்திய நதிகளை இணைக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்ட இளைஞர்கள்தான் அனுபவத் தின் துணை கொண்டு வெற்றியை காண வேண்டும். நதிகளை இணைக்க வேண்டும் என்றால் என்ன வேண்டும்... "முடியும்' என்ற நம்பிக்கை முதலில் ஓவ்வொரு இந்தியனுக்கும் வேண்டும்.

ஒவ்வொரு இந்தியனின் மேம்பாட்டுக்காக, மாநிலங்கள் பெருந்தன்மையுடனும், பரந்த மனப்பான்மையுடனும் நதிநீர் இணைப்புக்காக ஒன்றுபட வேண் டும் என்பதுதான் என் அவா. இதற்குத் தேவை கூட்டு மனப் பான்மை (ன்ய்ண்ற்ஹ் ர்ச் ம்ண்ய்க்ள்). எல்லா மனங்களும் இந்த விஷயத்தில் ஒன்றுபட வேண்டும். இந்த கூட்டு மனப்பான்மையை அந்த நாள் முதல் இந்நாள் வரை நான் இராமநாத புரத்து மக்களிடம் பார்க்கிறேன். பொதுப் பிரச்னையில் அவர்கள் எப்போதும் ஒன்றுபட்டே முடிவெடுப் பார்கள்.

ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் நான் மேற் கொண்ட என்னுடைய முதல் சொந்த ஊர்ப்பயணம் மறக்க முடியாத ஒன்றாக இருந்தது. என்னைக் காண மக்கள் அலை அலையாக வந்து கொண்டே இருந்தார்கள். அவர்களிடம்தான் எத்தனை கதைகள்! எத்தனை சோகங்கள்! எத்தனை போராட்டங்கள்! எத்தனை வெற்றிகள்!

அவர்களுடைய கோரிக்கைகளில் ஒன்று இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ஒரு அறுவை சிகிச்சை தியேட்டர் வேண்டும் என்பது. கொச்சியில் இருந்த மாதா அமிர்தா மருத்துவ அறிவியல் கழகத்திடம் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு நான் வேண்டுகோள் விடுத்திருந்தேன். நானும் ஒரு நிதியை அதற்காக ஒதுக்கியிருந்தேன். அவர்களும் மனம் உவந்து அப்பணிகளை மேற்கொண்டிருந்தார்கள்.

அந்த மருத்துவமனை ஆபரேஷன் தியேட்டர் திறப்பு விழா எனக்கு மிக மகிழ்ச்சியைத் தந்தது. சில வருடங்களுக்கு முன்னால் இதே இராமநாதபுரம் மாவட்டத்துக்கு நான் வருகை தந்த போதும் எண்ணற்ற இளைய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களைக் கண்டேன். அவர்களிடம் இந்தியா முன்னேறிய நாடாக மாற வேண்டும் என்கிற கனவு கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

நம்முடைய பக்கத்து நாடுகள் சிலவற்றில் மனித உரிமைகள் நசுக்கப்படுவதை நாம் காண்கிறோம், அந்த நாடுகள் இராமநாதபுரம் மாவட்ட மக்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.

வர்மக்கலை! அதிசயம்!




வர்மக்கலை என்பது உடலின் முக்கிய நாடிகள், நரம்புகள் அல்லது புள்ளிகளை பற்றிய அறிவை மையமாக கொண்ட ஒரு தற்காப்புக் கலையாகும். கரமடி, உடல் அசைவுகள், ஆயுதங்களை உபயோகித்து சண்டை ஆகிய அம்சங்களும் இதில் அடங்கும். வர்மக் கலை தமிழ் மரபில் தோன்றிய ஒரு கலையாகும். வர்ம சூத்திரம் எனப்படும் தமிழ் மருத்துவ விஞ்ஞானத்தை அடிப்படையாக வைத்து தொடங்கப்பட்டுப் பின்னர் ஒரு தற்காப்புக்கலையாக வளர்த்தெடுக்கப்பட்டது. டிராகன் டி. ஜெய்ராஜ் அவர்களின் வர்மக்கலை மர்மங்கள் 108 விளக்கப் படங்களுடன் இக் கலையை விளக்குகின்றது.


வர்மம் என்றால் என்ன?

உடலின் குறிப்பிட்ட சில நரம்புகளில், குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட அளவில் தட்டுப்பட்டால் ஒருவர் உணர்விழப்பர். அந்தக் குறிப்பிட்ட இடங்களே வர்மம் எனப்படும். உடல் சீராக இயங்குவதற்காக உடலின் 108 இடங்களில் நின்று இயங்கும் உயிர்நிலைகளே வர்மங்கள் எனப்படும். அதாவது உயிர்நிலைகளின் ஓட்டம் எனக் கூறுவர்.


குண்டலினியும் வர்மக்கலையும்


வர்மக்கலை பயில்பவர் முதலில் குண்டலினி யோக முறைகளைப் பற்றி அறிந்து வைத்திருத்தல் வேண்டும். குண்டலினி யோகம் மனித உடலின் 7 சக்கரங்களைப் பற்றியே கூறுகிறது. ஆனால் வர்மக்கலை 108 சக்கரங்களைப் பற்றிக் கூறுகிறது.


வர்மத்தின் அதிசயங்கள்

வேறெந்த தற்காப்புக் கலைகளிலோ, மருத்துவ உத்திகளிலோ இல்லாத அதிசயங்கள் வர்மத்தில் உண்டு

    * ஒளிவு, பூட்டு, பிரிவு என்னும் மூன்று அடிமுறை உத்திகளும் வர்மக்கலையில் இருப்பது போல் வேறெந்தத் தற்காப்புக் கலையிலும் இல்லை.


    * வெட்டுக் காயங்ளிலிருந்து பீறிடும் இரத்தத்தை எந்தக் கட்டும் போடாமலேயே வர்ம நரம்புப் பிடியால் கட்டுப்படுத்தி நிறுத்திவிட முடியும்.


    * ஜன்னி, வாந்தி, ஆகிய நோய்களை எந்தவித மருந்தும் இல்லாமலேயே வர்மக்கலையின் தடவுமுறைகளால் உடனடியாகச் சரிசெய்துவிட முடியும்.


    * ஒற்றைத் தலைவலி என்னும் கொடிய நோயைக் கணைக்காலில் உள்ள வர்ம அடங்கல் கொண்டு நாலைந்து நிமிடங்களில் ஓட்டிவிடலாம்.


    * நட்போடு கைகுலுக்குவது போலவோ, பாசத்தோடு கட்டியணைப்பது போலவோ நடித்துக் கொண்டு பகையாளியைப் பிணமாகக் கீழே வீழ்த்திவிட வர்மம் அறிந்தவனுக்கு முடியும்.


    * மயங்கி வீழ்ந்தவனையும், அசைவற்று மரணப்பிடியில் கிடப்பவனையும் வர்மக் கலையின் உயிர்நிலை நாடிகளைப் பயன்படுத்தி உடனே எழுப்பிவிட முடியும்.

Saturday 21 December 2013

கையால் எழுதப்பட்ட பழைய பாஸ்போர்ட் 2015 ஆண்டிற்கு பிறகு செல்லாது!



கையால் எழுதப்பட்ட பழைய பாஸ்போர்ட் 2015 ஆண்டிற்கு பிறகு செல்லாது! 


வரும் 24.11.2015-க்கு பிறகு கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட் செல்லாது என்பதால்அவற்றை புதுப்பித்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


இது தொடர்பாக கோவை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சசிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சர்வதேச விமான போக்குவரத்து ஆணைய உத்தரவின்படி உலகம் முழுவதும் வினியோகிக்கப்பட்ட கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகளுக்கு 24.11.2015-ந் தேதியோடு கெடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் 25-ந் தேதி முதல் கம்ப்யூட்டரால் பதிவு(நான் மெஷின் ரீடபிள் பாஸ்போர்ட்) செய்ய இயலாத அதாவது கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகளுக்கு உலக நாடுகள் விசாக்கள் வழங்க மறுத்து விடும்.

புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம்:

கையால் எழுதப்பட்டு போட்டோ ஒட்டிய பாஸ்போர்ட்டுகள் 20 ஆண்டுகளுக்கு முன்பு வினியோகிக்கப்பட்டன. அந்த பாஸ்போர்ட்டுகளை கம்ப்யூட்டரில் பதிவு செய்ய முடியாத பாஸ்போர்ட்டுகளாக கருதப்படுகின்றன.இந்திய அரசு கடந்த 2001-ம் ஆண்டு முதல் கம்ப்யூட்டர் பதிவு செய்யப்பட்ட பாஸ்போர்ட்டுகள் வினியோகித்து வருகிறது. எனவே கோவை மண்டலத்தில் கையால் எழுதப்பட்டு 24.11.2015-ந் தேதிக்கு பின்னர் காலாவதியாகும் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் கம்ப்யூட்டரால் பதிவு செய்யப்படும் பாஸ்போர்ட்டுக்கு (மெஷின் ரீடபிள் பாஸ்போர்ட்) விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதன் மூலம் விசா மறுக்கப்படுவது மற்றும் குடியுரிமை பிரச்சினைகளை தவிர்க்கலாம் .இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Indian citizens holding handwritten and 20-year passports with validity beyond November 24, 2015 will have to apply for Machine Readable Passports (MRPs).

 "From November 25, 2015 onwards, foreign governments may deny visa or entry to any person travelling on a non-MRP passport," a Ministry of External Affairs release said.

 The Central Government has announced phasing out of all non-MRPs from November 24, 2015, complying with the deadline by the International Civil Aviation Organisation (ICAO) as part of its global drive. "The Indian Embassy is far ahead in this matter. We have crossed the struggling stage of issuing MRP passports. There are only a few and rare cases of citizens holding handwritten passports. We are moving towards a more advanced passport system," a senior official from the Indian Embassy in Muscat said.

 All handwritten passports with pasted photos issued by the Government of India are considered non-MRP passports.

 All 20-year validity passports will also fall in this category.

 The government has started issuing MRP passports, which are ICAO-compliant, since 2001.

 ICAO is a specialised agency of the United Nations created in 1944 to promote safe and orderly development of international civil aviation throughout the world.

 ICAO sets the standards and regulations necessary for aviation safety, security, efficiency and regularity, as well as for aviation environmental protection.

 The organisation serves as the forum for cooperation in all fields of civil aviation among its 191-member states.

‘இவன் வேற மாதிரி’ நல்ல பொழுதுபோக்கு படம்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!




தமிழில் ‘எங்கேயும் எப்போதும்’ படத்தை இயக்கிய சரவணன், தற்போது விக்ரம் பிரபுவை வைத்து இயக்கியுள்ள படம் ‘இவன் வேற மாதிரி’. இப்படத்தில் நாயகியாக சுரபி நடித்துள்ளார். கணேஷ் வெங்கட்ராம், வம்சி கிருஷ்ணன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். சத்யா இசையமைத்துள்ளார்.

இப்படத்தை காதல் மற்றும் ஆக்‌ஷன் கலந்த கலவையாக சரவணன் இயக்கியுள்ளார். இப்படம் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தை பார்த்தார். பின்னர் அவர் இப்படம் குறித்து கூறியதாவது:-

‘இவன் வேற மாதிரி’ படத்தை பார்த்தேன். ஒரு கிளாஸான ஆக்‌ஷன் படம். இது வரைக்கும் எந்தப் படத்திலும் பார்த்திராத படத்தின் உச்சக்கட்ட காட்சிகள் பிரமிக்க வைக்கிறது. இது நல்ல பொழுதுபோக்கு படம். இந்தப்படம் வெற்றி பெற்ற என் வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top