.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday 17 December 2013

கோபத்தை கையாள எளிய வழிகள்..




 1. கோப உணர்ச்சிகள் அதிக இரத்த அழுத்தம், கண் சிவப்பு அமில சுரப்பு, அல்சரை உண்டு பண்ணும் & மிருக குணத்தை உச்ச நிலைக்கு உயர்த்திடும்.

2. தண்ணீர் குடித்திட கோபம் தணியும்.

3. ஒன்று முதல் பத்து வரை எண்ணிடலாம்

4. கோபத்தை இறைவனிடம் சமர்ப்பிக்கலாம்.

5. கோபப்படும் இடம், நபரிடம் இருந்து விலகிச் செல்லலாம்.

6. கோபத்திற்கு காரணமாக சொல், செயல், எண்ணத்தில் இருந்து வேறு செயல் செய்தல்.

7. கோபத்தின் போது முகம் விகாரமாகி, அன்பு, சாந்தம் குறைவதை கண்ணாடி மூலம் உணர்ந்து குறைத்தல்.

8. கோபத்திற்கான காரணத்தை ஒரு பேப்பரில் வரிசையாகப் பட்டியல் இட்டு எழுத கோபம் குறையும்.

9. தியானம், சாந்தி ஆசனம் செய்ய கோபம் குறையும்.

10. வயிறு ஈரத்துணிப் பட்டி, கண் பட்டி, நெற்றிப்பட்டி போடலாம்.

11. நீர்வீழ்ச்சி, ஷவர் பாத், தொட்டிக் குளியல் செய்ய கோபம் குறையும்.

12. தொடர்ந்து இயற்கை உணவுகளை, இயன்ற வரை சாப்பிட்டுப் பழக கோபம் படிப்படியாகக் குறையும்.

13. பழச்சாறுகள், இயற்கை உணவுச் சாறுகள் குடித்து கோபத்தை குறைக்கலாம்.

புகழ்ச்சி....?



புகழ்ச்சி இது ஒரு அதிசய மருந்து. இதனை உருவாக்க எந்த ஒரு கருவியும் தேவையில்லை. நாமே நமது எண்ணத்தால் இதனை உருவாக்கிட முடியும். இந்த மருந்தை மற்றவருக்குக் கொடுப்பதனால் “புகழ்பவரும் மகிழ்ச்சி அடைகிறார்! புகழப்பட்டவரும் மகிழ்ச்சி அடைகிறார்!!”.

இந்த அதிசய மருந்திற்கு வயது வரம்புகள் எதுவும் கிடையாது. நமது ஆழ்மனதில் தோன்றும் எண்ண அலைகளே இதற்குக் காரணம்.

 பயன்கள்:

 உங்கள் குழந்தைகளிடம் தேர்விற்கு முன்னரோ அல்லது தினசரியிலோ சபாஷ்! நீ நன்றாகப் படிக்கிறாய் என்று கூறிப்பாருங்கள். இந்த மருந்தைக் கொடுத்தவுடன் குழந்தை முன்பு படித்ததை விட மேலும் ஆர்வமாக படிக்கத் தொடங்குகிறது. தேர்வில் அதிக மதிப்பெண் பெறுகிறது.

வியாபாரத்தில் உங்கள் வர்த்தக பங்குதாரர்கள் புகழ்ச்சியின் காரணமாக ஒத்துழைத்து உங்கள் வெற்றிக்கும் செல்வச் சேமிப்பிற்கும் உறுதுணை ஆகிறார்கள். புகழ்ச்சி அவர்களுக்கு கிடைக்கும்  போது அவர்களுடைய ஒத்துழைப்பு உங்களுக்கு மிகையாகக் கிடைக்கிறது.

இந்த மருந்தை நீங்கள் கொடுக்கும் போது, உங்களுக்கும் அது போதுமான அளவில் கிடைத்து, உங்களை மகிழ்ச்சியாகவும், புகழ்மிக்கவராகவும் மற்றும் செல்வந்தராகவும் ஆக்கிவிடுகிறது.


அதிசய மருந்து பற்றி மூத்த அறிஞர்கள் கூறுவது:

சொல்வேந்தர் சுகி சிவம்: பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள்! பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள்!! பிறர் உங்களைப் பாராட்டாத பொழுதும் நீங்கள் மற்றவர்களைப் பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள்!!!

அமெரிக்காவின் மிகப்பெரிய தத்துவ ஞானியும், மனோ தத்துவ நிபுணரும் ஆன வில்லியம் ஜேம்ஸ் கூறுகையில், “மனித இயல்பின் ஆழமான தத்துவம் என்னவென்றால், பாராட்டைப் பெறுவதற்காக ஏங்குவது தான்”.

நீங்கள் வெளிச்சத்தை மற்றவர்கள் மீது பாய்ச்சும் போது, அதன் பிரதிபலிப்பு உங்கள் மீது அதிகமாக வரத் தொடங்குகிறது. உங்கள் மீது நீங்கள் வெளிச்சம் பாய்ச்சுவதைவிட இது பிரகாசமானது. இறுதியாக, மற்றவர்களை நீங்கள் புகழ்வது வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்குத் தேவையான மனோபாவத்தை உங்களிடம் ஏற்படுத்துகிறது.

மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?




1. பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல்.
2. காலையில் ஆறு மணிக்கு முன் எழுந்திருத்தல்.
3. எப்போதும் சிரித்த முகம்.
4. நேரம் பாராது உபசரித்தல்.
5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.
6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.
7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.
8. அதிகாரம் பணணக் கூடாது.
9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.
10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.
11. கணவனை சந்தேகப்படக் கூடாது.
12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.
13. பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.
14. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.
15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.
16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.
17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது.
18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
19. கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.
20. கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.
21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
22. எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.
23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.
24. தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.
25. அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.
26. குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.
27. சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.
28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.
29. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
30. உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.
31. தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.
32. அதிகம் சினிமா பார்க்கக் கூடாது.
33. உடற்பயிற்சி செய்து உடம்பை சிலிம் ஆகவைத்துக் கொள்ள வேண்டும்.

பிள்ளைகளுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டுங்கள்!




தன்னம்பிக்கை என்பது மனித வாழ்க்கைக்கு ஒரு நெம்புகோல் போன்றது. அது இல்லையேல் வாழ்க்கை இல்லை. இதனைப் பெற்றோர் தம் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும். சுயமாகச் சிந்திக்க, சுயமாகச் செயல்பட குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.


படிப்பில் , அதோடு கூட வீட்டு வேலைகளில் குழந்தைகளுக்குப் பெற்றோர் போதிய பயிற்சி அளிக்க வேண்டும். குழந்தைகளை அச்சுறுத்தி அடித்துக் கண்டிக்கக் கூடாது.


ஆனாலும் அதன் போக்கில் எதேச்சையாக விட்டுவிடக் கூடாது. குழந்தைகளுக்கு அனபுப்பால் ஊட்டி, அரவணைத்துப் பெருமைப் படுத்த வேண்டும்.


'நீ ராசா அல்லவா? ராசாத்தி அல்லவா? ' என்கிற வாசகங்கள் பெற்றோர் வாயிலிருந்து வர வேண்டும். 'மக்கு, மண்டு, மண்டூகம் - போன்ற வாசகங்கள் மலையேற வேண்டும்.


பயம், கூச்சமின்றி, உறுதியான நெஞ்சம், உண்மையான பேச்சு, உயர்வான பண்பு இவை குழந்தைகளுக்கு அமைய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

பயன் தரும் இயற்கை மருத்துவக் குறிப்புகள்:-




* காய்ச்சி வேப்ப எண்ணெய் தடவி வர சேற்றுப்புண் குணமாகும்.

* வில்வபழம் சாப்பிட மூளை தொடர்பான நோய்கள் தீரும்.

* வெண்ணீரில் தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வர ஞாபகசக்தி பெருகும்.

* யானைக்கால் நோய் குணமாக வல்லாரை கீரை தொடர்ந்து சாப்பிடலாம்.

* நார்த்தங்காய் ஊறுகாய் மலச்சிக்கலைப் போக்கி நல்ல ஜீரண சக்தியைக் கொடுக்கும்.

* பாதாம் பருப்பு வறுத்து அடிக்கடி உண்டு வர கண் பார்வை தெளிவு பெறும்.

* வேப்பம் பூவுடன் மிளகு, சீரகம் சேர்த்து உண்டுவர பித்தப்பை நோய் குணமாகும்.

* சப்போட்டா பழம் தினமும் பகல் பொழுதில் உண்டுவர இரவில் நன்றாக தூக்கம் வரும்.

* சுக்கை அரைத்து நெற்றியில் பற்று வைக்க தலைவலி குணமாகும்.

* காய்ந்த நெல்லிக்காயை பொடியாக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து சுட வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்; முடி உதிர்வது நிற்கும்.

* வாழைத்தண்டுச் சாறு, பூசணிச் சாறு, அருகம்புல் சாறு இவற்றுள் ஏதேனும் ஒன்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலும் சதை போடுவதைத் தடுக்கலாம்.

* எருக்கஞ் இலையின் பின்புறம் விளக்கெண்ணெய் தடவி தணலில் காட்டி கட்டிகள் மீது வைத்துக் கட்டினால் கட்டி பழுத்து உடையும்.

* தொடர் வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் பப்பாளிப்பழம் சாப்பிட குணமாகும்.

* இலந்தை மரத்தின் இலையை மைய அரைத்து காயத்தின் மீது போட்டு வர வெட்டுக்காயம் குணமாகும்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top