.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday 15 December 2013

பொருளாதாரத்தை மேம்படுத்துவது எப்படி?



பணக்காரனாக ஆக வேண்டும் என்றால், அது எப்படி சாத்தியாகும் என்பதை ஒரு பணக்காரரிடமிருந்தோ அல்லது பல பணக்காரர்களைப் பற்றிய நூல்களிலிருந்தோ அல்லது அவர்கள் பின்பற்றிய வழிமுறைகளை அறிந்தோ நாமும் பணக்காரனாக ஆகிவிடலாம்.


 இதனை ஒரு பணக்காரரிடமிருந்து நேரடியாக கேட்டும் தெரிந்து கொண்டால் தவறில்லை. ஐந்தாயிரம் கோடிக்கும் மேல் மதிப்புள்ள சொத்துக்களை குவித்துள்ள ஜே. பால் கெட்டி என்கிற கோடீஸ்வரரின் ஆலோசனைகளை நாம் இங்கு அறிவோம்.


ஒரு பேட்டியில் அவரிடம் ஒரு கேள்வி கேட்க்கப்பட்டது. “தங்களுடைய வெற்றியின் ரகசியம் என்ன?”. கோடிக்கணக்கான பணம் சம்பாதித்ததை மூன்று வார்த்தையில் ரகசியமாக அவர் குறிப்பிட்டார்.


“இன்னும் கடினமாக முயற்சி செய்”.  அது தான் அவர் சொன்னது. “இன்னும் கடினமாக முயற்சி செய்” மிக எளிமையானதாக தோன்றுகிறது. ஆனால் அதைப்பற்றி தீர்க்கமாக சிந்தித்து முடிவுக்கு வர வேண்டும்.


முதலில் கடினமாக முயற்சி செய்யுங்கள்… பிறகு அதைவிட கடினமாக முயற்சி செய்யுங்கள்… பிறகு அதைவிட இன்னும் கடினமாக முயற்சி செய்யுங்கள். இவ்வாறு மேலும் மேலும் முயற்சிக்கின்ற போது, “முயற்சி கூடுவதைப் போலவே, முயற்சியின் பலனும் கூடிக்கொண்டே போகும்”.


கூட்டுவட்டி எவ்வாறு அதிவேகமாகப் பெருகிக் கொண்டே போகிறதோ, அதைப் போலவே தொடர்ந்து செய்யப்படும் முயற்சியின் பலன்களும் அதிவிரைவில் அதிகரித்துக் கொண்டே போகும். உங்கள் முயற்சி கோபுரம் போல் உயரும் போது லாபமும் கோபுரம் போல உயரத் தொடங்குகிறது. இலாபத்தின் வேகம் அதிகரிக்கும் போது நமது பொருளாதாரமும் உயர்ந்து கொண்டே செல்லும்.


 “இன்னும் கடினமாக முயற்சி செய்”

காலத்தின் அருமை!



1 வருடம் – தோல்வியடைந்த‌ மாணவனுக்குத் தெரியும்.




1 மாதம் – குறை பிறசவத்தில் குழந்தை பெற்ற குணவதிக்குத் தெரியும்.




1 வாரம் – வாரப் பத்திரிக்கை ஆசிரியருக்குத் தெரியும்.



1 நாள் – ஒரு நாள் முன்னதாகப் பதவியில் சேர்ந்து பதவி உயர்வு


பெற்றவனைய் பார்த்து பதவி உயர்வு பெறாதவனுக்குத் தெரியும்.


1 மணி – பரிட்சை எழுதும் மாணவனுக்குத் தெரியும்.



1 நிமிடம் – இரயிலைக் கோட்டைவிட்டவனைக் கேட்டால் தெரியும்.



1 வினாடி – ஓட்டப் பந்தயத்தில் ஒரு வினாடியில் தோற்றுப் போனவனுக்குத் தெரியும்.

தமிழ் சினிமாக்களில் அடிக்கடி கேட்கிற வசனங்கள்!



1. இன்ஸ்பெக்டர்ர்ர்ர்ர்.. நீங்க யார் கிட்டே பேசிக்கிட்டிருக்கீங்க தெரியுமா??

2. ஸாரி.. எதையுமே இருபத்து நாலு மணிநேரம் கழிச்சுதான் சொல்லமுடியும்.

3. நான் உங்களை உயிருக்குயிராஆஆஆஆ காதலிக்கறேன்..

4. சட்டத்தின் பிடியிலிருந்து யார்ர்ர்ர்ர்ர்ர்ரும் தப்ப முடியாது.

5. இன்னிக்கு ராத்திரி சரியா பனிரெண்டு மணிக்கு சரக்கோட அவன் வருவான்.

6. மிஸ்டர்____________! யூ ஆர் அண்டர் அர்ரெஸ்ட்!!

7. அடடே… யார் வந்திருக்காங்க பாரு..!!

8. நீயில்லாம என்னால ஒரு நிமிஷம்கூட உயிர் வாழ முடியாது.

9. தூக்குடா அவன..

10.நான் யாருங்கறது முக்கியமில்ல. நான் சொல்லப் போற விஷயம்தான்
   முக்கியம்.

11.உன்னப் பெத்து… வளத்து… ஆளாக்கி..

12.என் அன்னையின் மேல் ஆணை..

13.யாரும் அசையாதீங்க..அசைஞ்சா சுட்டுருவேன்.

14.அவன அடிச்சு இழுத்துட்டு வாங்கடா…

15.தாயில்லாத புள்ளையாச்சேன்னு செல்லம் குடுத்து வளத்தேனே…

16.எல்லாமே மேல இருக்கிறவன் பாத்துக்குவான்.

17.நான் கண்ண மூடறதுக்குள்ள இவள யார் கையிலயாவது புடிச்சுக்
   குடுத்தாதான் எனக்கு நிம்மதி.

18.என்னங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்க!!!.. எங்களையெல்லாம் ஏமாத்திட்டுப்
   போயிட்டீங்களே..

19.உங்க உப்பைத் தின்னு வளந்தவன் எஜமான். சொல்லுங்க என்ன
   செய்யணும்?

20.ஏய்ய்ய்ய்ய்ய்ய்!

21.என் வயித்துல நெருப்பு அள்ளிக் கொட்டிட்டியேடிஈஈஈஈ பாவி!!

22.என்னமோ தெரியல.. உன்னப் பாத்தா செத்துப் போன என் பையனை
   பாக்கிறமாதிரியே இருக்கு.

23.ச்சே.. நீங்கல்லாம் அக்கா தங்கச்சிகூட பொறக்கலே??

24.ஏ.. யாருடி அவன்..?

25.சார்.. போஸ்ட்..!!

26.கனம் கோர்ட்டார் அவர்களே.. ஒரு குற்றவாளி தப்பிக்கலாம். ஆனால் ஒரு
   நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது.

27.ஒரு பொண்ணு நினைச்சா…

28.இத்துடன் கோர்ட் கலைகிறது.

29.நான் இப்ப எங்கிருக்கேன் ?

30.எங்கப்பாவ கொன்னவன நான் பழிக்குப் பழி வாங்காம விடமாட்டேன்.

31.ஒரு பொண்ணோட மனசு ஒரு பொண்ணுக்குத்தான் தெரியும்..

32.நான் சொல்லப் போறதக் கேட்டு அதிர்ச்சியடையாதீங்க.. அவருக்கு
   வந்திருக்கறது…

அன்பு என்றால் என்ன ?



அன்பு நம்மில் பலர் இறைவனை நம்புகிறோம் சிலர் நம்புவதில்லை. இருப்பினும் நம் அனைவருக்கும் அப்பாற்பட்ட ஏதோ ஒரு சக்தி நம்மை ஆட்டுவிப்பதாக நம்புகின்றோம். அந்த சக்தியை நாம் ஏன் அன்பென்று எண்ண கூடாது ?


பலவிதமான மனித உறவுகளிடமும் நாம் எதிர்பார்ப்பதும், பெற விரும்புவதும் அன்புதான். மனிதர்களான நாம் மட்டுமின்றி விலங்கினங்களும் அன்பை தான் எதிர்பார்க்கின்றது. துன்பமும் பயமும் நிறைந்ததாக நாம் எண்ணுகின்ற வாழ்வில் அன்புதான் நமக்கு இருக்கும் ஒரே ஆறுதல்.


அன்பு என்றால்  என்ன ?


பல அர்த்தங்கள் பொதிந்த வார்த்தை இது. இதுதான் அன்பு என அவ்வளவு எளிதில் சொல்ல முடியாது. மேலும், அந்த அளவிற்கு ஆழமான வார்த்தை அன்பு. அன்பைப் பற்றி பேசாதவர்களே இல்லை.


நம் தாய் தந்தையை நேசிக்கிறோம், சகோதர சகோதரிகளுடம் பாசம் கொள்கிறோம், ஒருவன்/ ஒருத்தியை காதலிக்கிறோம், நட்பு கொள்கிறோம். அன்பு, காதல், பாசம், நேசம்,  நட்பு என்று பல்வேறு பெயர்களில் நாம் அழைத்தாலும் எல்லாமே அன்பு என்பதைத்தான் மையப்படுத்துகிறது.


மனிதனின் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வை அளிக்கக்கூடியது அன்பு மட்டும்தான். இதில் என்ன பிரச்சனையென்றால் அன்பாக இருப்பது எப்படி என்பதை நாம் உணராமலிருப்பதுதான்.


அன்பை நாம் எப்படி உணரப்போகிறோம் ? அன்பாக இருப்பதுதான் அன்பு என்பதை நாம் உணர வேண்டும். பலரிடமும் நாம் அன்பாக இருப்பதாக சொல்கிறோம், பேசுகிறோம். ஆனால் உண்மை என்ன ?


உதடுகள் சிரிப்பதை விடுங்கள். பொய்யாக சிரித்து போலியாக புகழ வேண்டிய கட்டாயம் பலருக்கும் வாழ்வின் பல நிலைகளிலும் ஏற்பட்டிருக்கலாம். நம்மில் எத்தனை பேர் சந்திக்கின்ற அனைவரிடமும் அன்பாக இருந்திருப்போம்?


மனம் நிறைந்த அன்பு மட்டுமே பலனைத் தரும். உள்ளன்போடு செய்யும் எந்தச் செயலும் மன மகிழ்வைத் தரும்.


எவ்வளவு துன்பங்கள், பிரச்சனைகள் இருப்பினும் அனைத்தையும் மறந்து மகிழ்ந்திருக்கச் செய்கிற சக்தி அன்பிற்கு மட்டும்தான் உண்டு. அன்பிற்கு மட்டுமே வாழ்வை இனிமையாக்க கூடிய சக்தி உண்டு.

ஒரு பிறவி பலமுறை வாழ்தல்?



கண்ணதாசனின் பாடல் வரிகளில் சில….


உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்

உலகம் உன்னிடம் மயங்கும் – நிலை

உயரும் போது பணிவு கொண்டால்

உயிர்கள் உன்னை வணங்கும்!

ஆசை கோபம் களவு கொள்பவன்

பேசத் தெரிந்த மிருகம்

அன்பு, நன்றி, கருணை கொண்டவன்

மனிதவடிவில் தெய்வம்!!



மானிடப் பிறவி: அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது. அதனின் கூண், குருடு, செவிடு நீங்கி பிறத்தல் அரிது. இப்படியொரு மானிடப் பிறவியைய் பெறுவதற்கு என்ன தவம் செய்திடல் வேண்டும். இந்த அரியதொரு மானிட பிறவியில் பிறந்து பிறவிப் பயனை அடைவதற்குள், தினம் தினம் நமது வாழ்க்கையில் எத்தனை போராட்டங்கள், வேதனைகள், சோதனைகள். இறுதியல் சாதனைகள்! ஒரு பிறவியைய் எடுத்து அதில் ஒரு வாழ்க்கையைய் வாழ்வதில் நாம் இவ்வளவு சோதனைகளை சாதனைகாளக மாற்றுகிறோம். இப்படிப்பட்டதொரு வாழ்க்ககையைய் வாழ்கின்ற நம் மத்தியல் ஒரு பிறவியல் பலமுறை வாழ்ந்தவர்களைப் பற்றிப் பார்ப்போம். இவர்கள் அனைவரும் ‘மனித வடிவில் தெய்வமானவர்கள்’ என்றே கூறலாம்!!


* சர் கிறிஸ்டோஃபர் ரென் 17ம் நூற்றாண்டிலவ் வாழ்ந்தவர். இவர் இந்த 17ம் நூற்றாண்டில் இரண்டு முறை வாழ்ந்திருக்கின்றார்.

முதல் வாழ்க்கை – குழந்தைப் பருவ வளர்ச்சி, நல்ல கல்வி, ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் வான் இயல் பேராசிரியர் வேலை. முதல் வாழ்க்கை நாற்பத்தெட்டு ஆண்டுகள் நீடித்தது. பிறகு புதிய மாறுபட்ட வாழ்க்கை வாழ்வது என தீர்மானித்தார். வானிவியல் நிபுணராக இருந்து தூரத்திலிருந்து ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதை விட, வான் உலகத்தையே பூமிக்குக் கொண்டுவந்து அழகான தேவாலயங்களை நிர்மாணிப்பது என முடிவெடுத்தார்.


இரண்டாவது வாழ்க்கை – அடுத்த நாற்பத்தெட்டு ஆண்டுகளில், ஐம்பத்து மூன்று தேவாலயங்களை நிர்மாணிப்பதில் செலவிட்டார். அந்த தேவாலயங்கள் அவருடைய பெருமையின் நினைவுச் சின்னங்களாக கண்ணதாசன் பாடிய பாடல் வரிகள் போல் “நான் நிரந்தமானவன் அழிவதில்லை! எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை!!” இன்றும் நிலைத்து நிற்கின்றன. அவற்றில் ஒன்று தான் லண்டனில் உள்ள செயின்ட் பால் கதீட்ரல். அந்த மிகப்பெரிய தேவாலயம் இன்றைக்கும் அவருடைய புகழை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.


* டாக்டர் ஆல்பார்ட் ஸ்வைட்ஸர் – தத்துவ சாஸ்திரத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் என்கிற நிலையில் பல அறிவு விளக்க நூல்களை எழுதியிருக்கிறார். இது இவரது முதல் நிறைவான வாழ்க்கையின் அடையாளம்!!!

பிறகு மதத்துறையில் ஒரு புதிய வாழ்க்கையினை தேடினார். மத சம்பந்தப்பட்ட தத்துவங்களை பயின்று டாக்டர் பட்டம் பெற்றார். மத போதகராகி இரண்டாவது புதிய வாழ்க்கையினை தொடங்கினார். பிறகு, சங்கீதத்தை போதித்தார். அதைப் பயின்றார். சங்கீதத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். உலகப் புகழ் பெற்ற ‘சங்கீத மேதை’ என்கிற சிறப்புக்கும் உரியவரானார். சங்கீதத் துறையிலும் சிறப்பினைப் பெற்ற இவர் தனது மூன்றாவது வாழ்க்கையுடன் நிறுத்தவில்லை.


ஆப்பிரிக்க காடுகளில் வாழும் நாகரிகமற்ற மக்களுக்கும், ஏழை எளியவர்களுக்கும் மருத்துவ உதவி செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார். மருத்துவத்துறை பற்றியும் அறுவை சிகிச்சை பற்றியும் பயிலலானார். நான்காவது முறையாக, மருத்துவத் துறையில் டாக்டர் பட்டம் பெற்றார். சங்கீத மேதை என்கிற புகழை உதறி எறிந்து விட்டு நான்காவது வாழ்க்கையினைத் தொடங்கினார். ஆப்பிரிக்காவில் உள்ள லம்போர்னியாவில் உள்ள காடுகளில் நான்காவது வாழ்க்கை ஆரம்பமாயிற்று. மலைப்பாம்புகள், கொரிலாக்கள், முதலைகள், காட்டுமிராண்டிகள் வசிக்கின்ற ராட்சஸ காடுகளை அழித்து அங்கு வசிக்கின்ற மக்களுக்கு மருத்துவவசதி செய்ய மருத்துவமனை ஒன்றையும் கட்டினார். தனது நான்காவது வாழ்க்கையினை அந்த காட்டிலேயே அமைத்துக் கொண்டு தெய்வீக மயமானார்.


“நிகழ்காலத்திலேயே சிக்கித் தடுமாறுகிறீர்கள் என்று பலரும் சொல்வதை நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். அது ஒரு அறிவுப் பூர்வமான வாசகம்”. பலரும் ஒரே ஒரு வாழ்க்கைதான் வாழ்கிறார்கள். அதையும் வெற்றியாக்கிக் கொள்வதில் எத்தனையோ கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள்.


“வாழ்க்கை ஒரு சுகமான அனுபவமே!

வாழக் கற்றுக் கொள்வோம்.

நமது இப்போதைய வாழ்க்கையிலேயே சிக்கித் தடுமாறாமல் இருப்பதற்கான

வாழ்க்கையைய் வாழக் கற்றுக் கொள்வோம்.”!!

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top