.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday 10 December 2013

இசை எனும் இன்பம் - கட்டுரை!

 "கருத்தின் உறைவிடமாகவும், அழகின் இருப்பிடமாகவும் அமைந்து, உள்ளத்தை உள்ளம் உணர்ந்தவாறு வெளிப்படுத்தி உள்ளத்திற்கு உவகையூட்டுவதால் இசை தன்னலம், பழி பாவங்களும் நிறைந்த இந்த உலகை விட்டு அழைத்துச் செல்கிறது" என்கிறார் கவிஞர் தாகூர்.


இசை மனதில் தோன்றும் அழகுணர்ச்சியை வெளிப்படுத்துகிறது. இசை முத்தமிழ்க்கு முன்னும், இயலுக்குப் பின்னும், நாடகத்திற்கு இடையில் நின்று இரண்டோடும் இணைந்து இயங்குவது. ஒசையும் நயமும் இசைந்து மனதுக்கு இன்பம் அளிப்பது இசை. இசை மன இறுக்கத்தைத் தளர்த்துகிறது - கோபதாபங்களைத் தடுகிறது. உற்சாகத்தை உண்டாக்குகிறது. இரத்த அழுத்தத்தை அமைதிப்படுத்துகிறது. சிந்தனை தெளிவு உண்டாக்குகிறது. நோய்களைத் தீர்க்கிறது. உயிர் அணுக்கள் வளர இசை உதவுகிறது.


-என்று அறிவியல் மேதைகள் தங்கள் அனுபவத்தில் சொல்கிறார்கள்.


இசை வாழ்க்கையைத் தெய்வீகமாக்குகிறது. இசை மூலம் இறைவனை அடையலாம் என்று நிருபித்தவர்கள் நம் பெரியோர்கள். சங்க காலம், தொல்காப்பிய காலம் அதற்கு பின் வேத காலம்; இடைக்காலம் என்றெல்லாம் வரலாற்று காலங்களில் தோன்றிய நூல்கள் எல்லாம் இசையை வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே காட்டுகின்றன. இசை மக்களுக்குக் காலம் காலமாக பண்பாட்டுக் காவல் கருவியாக ஆன்மீக உணர்வு - சமய நெறி - கோவில் வழிபாடு, நாட்டியம், மொழி உணர்வு என்று இருந்து வருகிறது. தமிழ் இசை வளர்ச்சி அடைந்தால் தமிழ்ப் பண்பாடும் வளர்ச்சியும் அடையும்.


தமிழ் மூன்று வகை -  இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ்.

இயற்றமிழ்- சத்து,  இசைத்தமிழ் - சித்து,  நாடகத்தமிழ்- ஆனந்தம் என்பார்கள்.

இசைத் தமிழின் ஏற்றம்

முத்தமிழ் வித்தகத்தில் இசை நடுநாயகமாகத் திகழ்கிறது.

"ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே "    - என்கிறார் அப்பர் பெருமான்.

ஒசையிலிருந்து உலகம் உண்டாயிற்று என்று ஞானநூல் கூறுகிறது.

ஆட வல்லானுடைய திருக்கரத்தில் விளங்கும் உடுக்கையின் ஓசையில் உலகம் தோன்றியது.



"தோற்றந் துடியதனில்" - உண்மை விளக்கம்.
எங்கும் நீர்மயமாகி எல்லாம் ஒடுங்கியபோது சிவபெருமான் வீணை வாசித்து மீளவும் உலகத்தை மலரச் செய்தார் என்று அப்பர் பெருமான் அருளிச் செய்கின்றார்:



''பெருங்கடல் மூடிப் பிரளயங் கொண்டு பிரமனும் போய்
இருங்கடல் மூடியிறக்கும் இறந்தான் களேபரமும்
கருங்கடல் வண்ணன் களேபர முங்கொண்டு கங்காளராய்
வருங்கடல் மீளன் றெம்மிறை நல்விணை வாசிக்குமே "



நவக்கிரங்களாகிய ஒன்பது கோள்களையும் சிவபெருமான் வீணை வாசித்து அவற்றின் கொடுமைகளை நீக்கி நல்லவராகச் செய்கிறார் என்று திருஞான சம்பந்தனார் .


" வேயுறு தோளியபங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமே லந்தென்
உளமே புகுந்தவதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டுமுடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாராவர்க்கு மிகவே "



இறைவனை வேண்டித் தவஞ் செய்து அசுவதரன், கம்பளதரன் என்ற இரு கந்தவர்கள் குண்டலமாகிச் சிவமூர்த்தியின் செவிகளில் அகலமாக இருந்து கொண்டு, இடையறாது இசைபாடி இறைவனை மகிழ்விக்கின்றார்கள்.


யாழ் வாசித்து உதயணன் மதயானையை அடக்கினான் என்று உதயண காவியம் கூறுகின்றது.


குழந்தையும், பாம்பும், பசுவும் இசை கேட்டுத் தம்மை மறந்து விடுகின்றன.


உண்மையான இன்பம்



இன்பத்தை விரும்பாத உயிர்களே இல்லை. எல்லா மதத்தவரும், எல்லாத் தேசத்தவரும் எல்லாக் காலத்தவரும், எல்லாக் கட்சியினரும் இன்பத்தை விரும்புகிறார்கள். எனக்குத் துன்பம் வேண்டும் என்று, எங்காவது, எவரேனும் கூறுகிறார்களா ? இன்பத்தை அடைந்தவர்கள் கோடிக்கொருவரும் இலர். ஏன்? இன்பத்தை விரும்புகிறார்களே அன்றி இன்பத்தைப் பெறும் வழியைத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தவர் இல்லை.


நம்மில் அநேகர் பொருளால் இன்பம் வரும் என்று பிழையாகக் கருதி வாழ்நாள் முழுவதும் பொருள் தேடி வாடி வருந்தி ஓடி அலைந்து உழன்று இன்பத்தைப் பெறாது துன்புற்று மாய்கிறார்கள். பெருந்தனம் படைத்தவர்கள் அல்லும் பகலும் துன்புற்று துடிப்பதைக் கண் கூடாகப் பார்க்கின்றோம். ஆதலால் பொன்னால் பொருளால் இன்பம் இல்லை. விளக்கைக் கனியெனக் கருதி அதில் வீழ்ந்து மாயும் மாந்தர் பலர் துன்புறுவதை எங்கும் காண்கிறோம்.


"மதலையைப் பெறுநாள் துன்பம் வளர்த்திடு நாளுந் துன்பம்
விதலை நோயடையில் துன்பம் வியன் பருவத்துந் துன்பம்
கதமுறு காவர் வந்து கைப்பற்றில் கணக்கில் துன்பம்
இதமுறு பாலர் தம்மால் எந்நாளுந் துன்பமாகும்...     - குசேல உபாக்யானம் .



"மனைமக்கள் சுற்றம் என்னும் மாயா
வலையைக்க அறியாதே
வினையிற் செருக்கியடி நாயேன்
விழலுக்கிறைத்து விடலாமே'.."        - திருப்புகழ்



"கற்பகமரத்தின் கீழ்வாழும் பெருஞ்சுகத்தை விரும்பி நான் பெருந்துன்பம் அடைந்தேன் " என்று இந்திரனுடைய புதல்வன் ஆன்றான்.


"தண்டேன் துளிக்குந் தருழற்கீழ் வாழ்க்கை வெஃகிக்
கொண்டேன் பெருந்துயரம் வான்பதமுங் கோது என்றே கண்டேன்"



ஆதலால் பொன்னாலும், பொருளாலும், நிலபுலங்களாலும் சுகமில்லை என்பது உண்மை. எங்கே, எதனால் இன்பம் எய்தும்? எங்கே மனம் ஒடுங்குகின்றதோ, அங்கேதான் இன்பம் விளைகின்றது.


மனம் அடங்க இசை


மனம் அடங்கியிருக்கும் இடம் சுகம் ஆரம்பம். இந்தச் சுகத்தை மறைகள் எல்லாம் முழங்குகிறது.


"சும்மா விருக்கச் சுகஞ்சுக மென்று கருதியெல்லாம்
அம்மா நிரந்தரஞ் சொல்லவும் கேட்கும் அறிவின்றியே
பெம்மான் மவுனி மொழியையுந் தப்பி என் பேதைமையால்
வெம்மாயை அற்று வெளிக்குள் வெளிகடந்து
சும்மா இருக்குள் சுகம்...."                     - வள்ளலார்.



இனிச் சும்மா இருப்பதாகிய மனம் அடங்கும் நிலை எவ்வாறு உண்டாகும் என்று சிந்திப்போம்.



பேய் மனம் எளிதில் அடங்காது, ஒடுங்காது. எண்ணில்லாத காலமாக அலைந்து அலைந்து, அதன் கொட்டத்தை அடக்குவது மிகவும் கடினம். வடநாட்டில் மனம் அடங்கக் கஞ்சா, அபின் போன்ற போதை பொருட்களை சில துறவிகள் கையாளுகின்றார்கள். நமது தென்னாட்டில் மனம் அடங்கக் கண்டு பிடித்த வழி இசைப் பாடலேயாகும்.


சங்கீதம் தெரிந்தவர் தம்பூராவை மீட்டிப் பாட்டினால் கேட்டவர்கள் மனம் அப்படியே ஒருமைப்பாட்டை அடைந்து விடுகின்றது. சங்கீதத்தின் மூலம், இசை மூலம் பக்தி என்பது இறைவனோடு நம்மை இணைப்பதுடன் மனிதர்க்கு ஏற்படும் நோய்களையும் குறைபாட்டையும் இறைவன் அருளால் அகற்றிடும் மாமருந்தாகவும் திகழ்கிறது. பிணி தீர்க்கும் இசை என்பது வழக்கமான சங்கீதமோ அல்லது பாடல்களோ அல்ல. அதற்கென்று தனிப்பட்ட சில சாஸ்திரங்கள், விதிமுறைகள் இருக்கின்றன. அந்த சாஸ்திர விதிகளின்படி ஒரு சித்த புருஷன், ஒரு யோகி முயற்சி செய்தால் இசையின் வாயிலாகப் பிணிகள் அகற்றும் சாத்தியமுண்டு.


1 ) கல்யாணி, வாசந்தி, கோசலம், அனுமத்தோடி, சிவரஞ்சனி, புராகாகிய இராகங்கள் பிரகிருதி தத்துவத்தின் மாசுபடாத தொனியாகக் கொண்டவை.


2 ) நீலாம்பரி ராகம் சுகமான நித்திரை தரும்.



3 ) ஸ்ரீராகம் நல்ல ஜீரண சக்தியைத் தரும்.



4 ) சாமா மன உளைச்சலை தடுக்கும்.



சங்கீத சிகிச்சையும் ஒருவகை மருந்தாகப் பயன்படுகிறது. எனவே இனிய நாதம் மருந்தாக, ஓடி அலையும் மனத்தை ஒடுங்கச் செய்யும் பேராற்றலையுடையது. இசை உயிரையும் உய்விக்கும்; பயிரையும் வளர்க்கும். கயிலை மலையைப் பேர்த்த இராவணன் இசையால் பாடி உய்வு பெற்றான். நாயன்மார்கள், ஆழ்வார்கள் நாளும் இன்னிசையால் தமிழை வளர்த்தார்கள். தமிழ் வேதப் பாடல்களைத் திருநீலகண்ட யாழ்ப்பாணர் யாழில் இசைத்து வாசித்து உலகுக்கு இன்பத்தை வழங்கினார். [தமிழ் நாடு, ப.தண்டபாணியின் 'திராவிட இசை' என்ற குறிப்பிலிருந்து...]


இன்று உலகெல்லாம் வழங்கி வரும் இசை முறைகள் எல்லாம் திராவிட இசையினின்று தோன்றியவையே. தமிழர்கள் உலகின் பல பகுதிகளிலும் பரவிச் சென்றபோது தங்கள் இசையையும் உடன் கொண்டு சென்றனர். எனினும் அந்தந்தப்பகுதிகளின் தட்பவெப்ப நிலைகளுக்குக்கேற்ப அது சில மாற்றங்களுடன் வளர்ந்து வந்துள்ளது எனக் கூறவேண்டும்.


 ச ரி க ம ப த


இப்புவியெங்கும் வழங்கிவரும் இசைமுறைகளுக்கெல்லாம் அடிப்படையாய் இசை விளங்குபவை ச, ரி, க, ம, ப, த என்னும் ஏழு சுரங்களே. இவற்றை உலகுக்குத் தந்தவர்களும் பழந்தமிழர்களே. தமிழர்கள் குரல், துத்தம், கைக்கிளை உழை இளி.விளா தாரம் என்றழைத்த ஏழு இசை ஒலிகளுக்கும் முதலில் ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள ஆகிய ஏழு நெடில் உயிரெழுத்துகளைக் குறிகளாக வைத்தனர். காலப்போக்கில் அந்த ஏழு இசை ஒலிகளுக்கும் பொருத்தமான தமிழ் எழுத்துகளாகிய ச, ரி, க, ம, ப, த என்பனவற்றைக் குறியீடுகளாகத் தமிழர்கள் மாற்றியமைத்தார்கள். வாய்ப்பாட்டுக்கு மட்டுமல்லாது இசைக்கருவிளை வாசிக்கக்கூடத் தமிழர்கள் பின்னர் தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்தினர். அப்போது ஏற்பட்டவையே ச, ரி, க, ம, ப, த, என்னும் ஏழு தமிழ் குறியீடுகள். இது குறித்து சிகண்டி என்னும் முனிவரால் பண்டை நாளில் இயற்றப் பட்டுள்ள தமிழ் வெண்பா பின் வருமாறு எடுத்தியம்புகிறது.


முற்காலத்தில் இசை வழங்கிய எல்லாக் குழற் கருவிகளுக்கும் 'வங்கியம்' என்னும் பொதுப் பெயர் உண்டு. வங்கியத்தின் ஏழு துளைகளிலிருந்தும் இசை பிறக்கும் பொழுது அது எழுத்தால் பிறக்கும். ச, ரி, க, ம, ப, த என்பன அந்த எழுத்துகள். அந்த ஏழு எழுத்துகளையும் மாத்திரை குறையாது வாசித்தால் அவற்றுள்ளே ஏழிசையும் பிறக்கும்


குழலும் யாழும்.


இன்று இசைக்குத் தாரச் சுருதியைக் கூட்டும் தம்புராவைப் பற்றி " கல்லாட்டம்" என்னும் பழைய பழந்தமிழ் இலக்கிய நூலில்தான் முதன் முதலில் தம்புராவைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.


யாழ்களில் தும்புரு யாழ் என்று ஒரு வகை யாழ் முன்னால் தமிழகத்தில் இருந்தது. அதுவே பிற்காலச் சுருதிக் கருவிக்கு அடிப்படையாகும். அந்தத் "தும்புரு" என்னும் தமிழ்ப் பெயரே பின்னர் வடமொழியில் தம்புரா எனத் திரிந்து வழங்கப்பட்டது. குழலும் யாழும் இசைக் கருவிகளில் முதன்மையானவை. முதன்முதலாகக் குழல் வசித்தவர் குமாரக் கடவுள்.


" குழலன் கோட்டன் குறும்பல்லியத்தன் "   - திருமுருகாற்றுப்படை.



முதன்முதலாக யாழ் வாசித்தவர் சிவபெருமான். இதற்கு "வீணா தட்சிணாமூர்த்தியே" சான்று.



"குழலினிது யாழ் இனிது என்ப" என்கிறார் திருவள்ளுவர்.



இறைவனை நமது தாய்மொழியால் பாடித் துதிப்பது மிகவும் சிறந்தது. பொருள் தெரிந்து பாடுகின்ற போது மனம் ஒன்றுகின்றது.


இனிமையும் நீர்மையும் தமிழாகும்.மொழிகளில் சிறந்த மொழி தமிழ், ஏனைய மொழிகள் கனமானவை. தமிழ் இலகுவான மொழி. கனமான உடம்புடையவனும் மென்மையான உடம்புடைவனும் நடக்கத் தொடங்கினால் பருத்த உடம்புடையவன் பிந்துவான்; மென்மையுள்ளவன் முந்துவான். வன்மையான பிற மொழிகள் பிந்தும், மென்மையான தமிழ் முந்தும். அதனாலே,


 " முந்து தமிழ்மாலை கோடிக்கோடி " -என்கிறார் அருணகிரி சுவாமிகள்


இறைவனுடைய செவியில் முந்திச் சென்று சேரும் மொழி தமிழ். அது இனிய மொழி. என்றுமுள்ள இளந்தமிழ், சாவாதது; மூவாதது, தேவாமிர்தம் போன்ற தித்திக்கும் மொழி. சித்திக்கும் முத்திக்கும் உரியது தமிழ். தேவாரம் முதலிய திருமுறைகளும், திருப்புகழ் தமிழ்மறைகளும் இசைமயமானவை. அகத்திய முனிவருடைய சீடர் பன்னிருவர்களில் ஒருவரான சிகண்டி முனிவர் 'இசை நுணுக்கம்' என்ற நூலைத் தந்தவர்.

மனம் அடங்க - மனம் நிலை பெற , இசை எனும் இன்பத்தில் நாமும் மயங்கி மகிழ்வோம்.

வாய்புண் தொல்லைக்கு வீட்டிலேயே மருந்திருக்கு...




 நெல்லி இலைகளை அவித்த நீரீனால் அடிக்கடி வாய் கொப்பளித்துவர வாய்ப்புண்கள் ஆறிவிடும். நெல்லிச் சாறையும், தேனையும் சமமாகக் கலந்து, மூச்சுத் திணறல், நீண்ட கால விக்கல் நோய் முதலியவற்றிற்குக் கொடுத்து வரலாம். சில மருத்துவர்ள் இதோடு திப்பிலி சூரணத்தையும் சேர்த்துக் கொடுப்பார்கள்.


வாய்ப்புண் போக, மணத்தக்காளி இலைகளை நிறைவாய் போட்டு மென்று, சற்று நேரம் வாயில் வைத்திருந்து விழுங்கவும். இவ்வாறு முற்றின தேங்காயையும் உபயோகிக்கலாம்.


வாயில் வயிற்றில் புண் இருந்தால் பாலில் சிறிது தேனைக் கலந்து சாப்பிட்டுவர சில நாட்களில் புண் குணமாகும். வாய்ப்புண் அதிகமாகி விட்டால் காரத்தை அடியோடு நிறுத்த வேண்டும். மாசிக் காயை உடைத்து அதன் தோலை மாத்திரம் வாயில் போட்டு அப்படியே அடக்கிக் கொள்ளுங்கள். ஊறிவரும் நீரை விழுங்குங்கள். வாய்ப்புண் சரியாகிவிடும்.


வாயில் புண் இருந்தால், அகத்திக்கீரையைச் சமைத்துப் சாப்பிடவும். வாய்ப்புண்ணும் நாக்குப் புண்ணும் குணமாகும். புண் அதிகமாக இருந்தால், புண் மீது பசு வெண்ணையைத் தடவுங்கள். குழந்தைகளுக்கு வாய்ப்புண் வந்தால், மாசிக்காயை பாலில் கரைத்து தேனில் குழைத்து நாக்கில் தடவ குணமாகும்.


தீராத வாய்ப்புண்ணிற்கு கடுக்காயை உடைத்து ஒரு துண்டை வாயில் அடக்கி வைத்திருக்கவும். சாறு தொண்டையில் போகப்போக உடனடியாக குணம் கிடைக்கும். பச்சரிசி, பயத்தம்பருபபு 1 ஸ்பூன் வெந்தயம், முழு பூண்டு 1 உரித்துப்போட்டு குக்காரில் வைத்து வெந்தவுடன், அத்துடன் கெட்டியான தேங்காய்ப்பால் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்புண் ஆறி வாய்ப்புண்ணும் நீங்கும். மணத்தக்காளிக் கீரையையும், அகத்திக் கீரையையும் பொரியலாகச் செய்து, தேங்காய்ப் பருப்பு சேர்த்து சாப்பிட்டால், வாய்புண் இரண்டே நாட்களில் குணமாகும்.

குரல் வளத்தை பெருக்கும் மாந்தளிர்!"




 மாம்பழத்தில் விட்டமின் ஏ நிறைந்திருக்கிறது. மாந்தளிரை நன்றாக காய வைத்து பொடித்து வைத்துக்கொண்டு தண்ணீரில் மூன்று சிட்டிகை கலந்து குடித்தால் தொண்டை சம்பந்தப்பட்ட எந்த நோயும் நெருங்காது. அதோடு குரல் வளமும் பெருகும்.


மா இலை சாற்றுடன் அதே அளவு தேன் பால் பசும் நெய் கலந்து சாப்பிட்டால் கட்டை குரலும் இனிமையாக மாறும். மா இலையை சுட்டு தேனில் வதக்கி சாப்பிட்டு வந்தால் தொண்டைக்கட்டு கரகரப்பு சளி நீங்கும். மா இலையை பொடியாக்கி பற்களில் தேய்த்து வர பல்லில் உள்ள காரை மறைந்து பற்கள் முத்து போல ஜொலிக்கும்.


மாம்பழ மலமிளக்கியாக செயல்படுவதுடன் முகத்தில் உள்ள பருக்களையும் போக்ககூடியது. சூடு உடல் கொண்டவர்கள் மாம்பழம் சாப்பிட்டதும் ஒரு டம்ளர் பாலை பருகினால் சூடு பிடிக்காது.


ஒரு டீஸ்பூன் மாங்கொட்டை பொடியுடன் ஒரு துளி நெய் கலந்து சாப்பிட்டால் வயிற்றில் பூச்சி தொல்லை இருக்காது. நகத்தின் மேல் இருக்கும் வெள்ளை புள்ளிகள் நக வெட்டு தோலில் உள்ள வெள்ளை திட்டுகளும் நீங்கிவிடும்.


மா மரத்தின் பட்டையில் வடியும் பாலை கால் வெடிப்பில் தடவினால் வெடிப்பு மறைந்து பாதம் பட்டு போல் மாறிவிடும்..


ஒரு சிட்டிகை மா மர பிசினை ஒரு டம்ளர் மாம்பழ ஜீஸீடன் கலந்து சாப்பிட்டால் தேமல் தழும்பு படை நீங்கி தோல் மிருதுவாகும்.

உலக முதல் 10 மிக பணக்கார நாடுகள்!




உலக முதல் 10 மிக பணக்கார நாடுகள்


10). மெக்ஸிக்கோ:


பத்தாவது பணக்கார நாடு GNI தொகை $ 550.000.000.000 உள்ளது மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு GNI சதவீதத்தில் தொகை விகிதம் 1.8% ஆக $ 839.181.900.000 ஆகும்.

9). ஸ்பெயின்

 இந்த நாட்டின் GNI தொகை $ 558.000.000.000 உள்ளது மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு $ 1.223.988.000.000 மற்றும் GNI அளவு சதவீதம் 2% ஆகும்.

8). கனடா:


கனடாவின் GNI தொகை $ 628.000.000.000 உள்ளது மற்றும் GNI தொகை $ 1.251.463.000.000 மற்றும் GNI தொகை சதவீதம் 2.3% ஆகும்.

7). இத்தாலி:

இந்த நாட்டின் $ 1.120.000.000.000 GNI அளவு மற்றும் 3.7% என்ற GNI தொகை சதவீத $ 1.844.749.000.000 கொண்டிருக்கிறது.

6). சீனா:

GNI தொகை $ 1.130.000.000.000 உள்ளது மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு GNI அளவு விகிதம் சதவீதம் 3.8% ஆக $ 2.668.071.000.000 உள்ளது.

5). பிரான்ஸ்:

பிரான்ஸ் GNI தொகை $ 1.380.000.000.000 உள்ளது மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு 4.6% ஆக GNI தொகை சதவீத $ 2.230.721.000.000 உள்ளது.

4). ஐக்கிய ராஜ்யம்


 நான்காவது பணக்கார நாடு $ 1.480.000.000.000 என்ற GNI தொகை மற்றும் $ 2.345.015.000.000 அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு பிரிட்டன் உள்ளது மற்றும் GNI தொகை சதவீதம் 4.9% ஆகும்.

3). ஜெர்மனி:


GNI தொகை வீதம் $ 1.940.000.000.000 உள்ளது மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு விகிதம் ஜெர்மனி $ 2.906.681.000.000 மற்றும் GNI சதவீதத்தில் 6.5% ஆகும்.

2). ஜப்பான்:

இந்த $ 4.520.000.000.000 என்ற GNI தொகை மற்றும் $ 4.340.133.000.000 அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு இரண்டாவது பணக்கார நாடு உள்ளது மற்றும் GNI சதவீதம் 15.1% ஆகும்

1). ஐக்கிய அமெரிக்கா


GNI தொகை $ 9.780.000.000.000 மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு $ 13.201.820.000.000 மற்றும் GNI தொகை சதவீதம் கூட மற்ற நாடுகளில், அதாவது, 32,7% ஆகும் அனைத்து பிற நாடுகளில் பணக்கார நாடாக உள்ளது.

உங்கள் சமையல் அறையில் இருக்கிறது ஆண்மையே அதிகரிக்கும் பொருள்கள் !!




வாழ்வில் அனைத்து வளங்களைப் பெற்றிருந்தும், இல்லற சுகம் என்ற உன்னதத்தை முழுவதும் அனுபவிக்க முடியாத ஆண்கள் ஏராள மானோர் உள்ளனர், இயற்கையின் வரப்பிரசாத மான சாதாரணமாகக் கிடைக்கக் கூடய சமையல் அறை உணவுகள், வாசனைப் பொருட்களை சாப் பிட்டாலே நல்ல பலனைக் காணமுடியும் என்பது பலருக்கு தெரிவதில்லை.

உணவே மருந்து


 பொதுவாக, செக்ஸ் உந்துதலானது, சாவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் முதியவனையும் நிமிர்ந்து உட்காரச் செய்யக்கூடிய ஈர்ப்பு சக்தி உடையது. உடல் உறவுக்கும், உணவுக்கும் தொடர்பு உண்டு. நாம் தினசரி சாப்பிடும் சாதா ரண சமையலுக்குப் பயன்படும் பொருட்கள் வயோதிகர்களையும் முறுக்கேறிய வாலிபர்களாக மாற்றும் ஆற்றலைக் கொண்டிருக்கின்றன. கறிவேப்பிலையின் மகத்துவத்தை உணராமல் எப்படி தூக்கி ஏறிகிறோமோ, அதைப் போல் வாசனைப் பொருட்களின் மகத்துவத்தை அறியா மல் நாம் அதனை கறிவேப்பிலை போலவே பயன்படுத்தி வருகிறோம்.

விவரம் அறிந்தவர்களைக் கேட்டால் அவற் றில் உள்ள பல விஷயங்கள் புரியவரும். அவற்றில் நமக்கு எளிதில் கிடைக்கும் சிலவற்றைப் பார்ப் போம்.

பெருங்காயம்

 ஆண்மைகுறைவால் மனதில் ஏற்பட்டிருக்கும் பெரும் காயத்தை ஆற்றவல்லது பெருங்காயம். வாசனைக்காக சமையலில் சிறிதளவில் சேர்க்கப் படுகிற பெருங்காயத்தில் இனிய விறு விறுப் பூட்டும், உணர்ச்சிப் பெருக்கேற்படுத்தும் ஆற்றல் உள்ளது. சிலருக்கு இந்த வாசனை பிடிக்காது என்பதால் சமையலில் சேர்க்கமாட்டார்கள். சமையலில் தொடர்ந்து பெருங்காயத்தை சேர்த்து பாருங்கள். ஆண்மை குறைபாட்டால் உங்கள் மன தில் நீண்ட நாட்களாக இருக்கும் “பெருங்காயம்”, பெருங்காயத்தால் ஆறிவிடும்.

ஏலக்காய்


 ஏலக்காய் விதைகளை தூள் செய்து அதனை பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து அதன் பின்னர் அரை ஸ்பூன் தேன் சேர்த்து சாப்பிட் டால் நல்ல பலன் தெரியும்.

ஆனால் ஜாக்கிரதை, இதை அதிக அளவில் பயன்படுத்தினால் எதிர்மறை விளைவிரகளை ஏற்படுத்தி ஆண்மை குறைவு பிரச்சனையை ஏற்படுத்தி விடும் என்று மூலிகை ஆராய்ச்சியாளர் கள் எச்சரிக்கின்றனர்.

மிளகு

 மிளகு மிகவும் எளிதில் கிடைக்கக்கூடியது. மிளகு உணர்ச்சியைத் தூண்டி உத்வேகம் அளிக் கும் ஆற்றல் உள்ளது. பண்டைய கிரேக்கர்கள், ரோமனியர்கள் கூட உணவில் மிளகு சேர்த்து வந்தனர். அரேபியர்கள் பல்வேறு விதங்களில் மிளகை உட்கொண்டனர். நான்கைந்து மிளகு களைப் பொடி செய்து பாலில் கலந்து குடித்து வந்தால் நரம்புகள் முறுக்கேறும், தாம்பத்யத்துக்கு முன்பு சில மிளகுகளை வாயில் போட்டு மென்று தின்றால் நல்ல பலன் கிடைக்கும்.

லவங்கம்

 லட்டு போன்றவற்றில் லவங்கம் சேர்க்கப் படுவதுண்டு. பண்டைய சீனர்கள் இதன் பயனை நன்கறித்தனர். பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஐரோப்பியர்களும் லவங்கத்தின் மதிப்பை நன்கு உணர்ந்திருந்தனர் 1642-ம் ஆண்டின் சுவிடன் நாட்டைச் சேர்ந்த மூலிகை விஞ்ஞானி லவங்கத் தைப் பற்றி எழுதியிருந்தார்.

பூண்டு


 பூண்டுக்கு இல்லற சுகத்தை தரும் ஆற்றல் நிரம்ப உண்டு. அதன் மகத்துவத்தை எகிப்தியர்கள், கிரேக்கர்கள், ரோமனியர்கள், சீனா மற்றும் ஜப்பானியர்கள் நன்கு தெரிந்து வைத்திருந்தனர். சாப்பிட்டரத எளிதில் ஜீரணமாக்கி, பசியை உண்டாக்கும் ஆற்றல் பூண்டில் இருப்பதே அதன் பலம். பொதுவாக, ஜீரணமான பின்னரே, அதாவது சாப்பிட்டு ஒரு மணிநேரம் அல்லது அதற்குப் பிறகே உறவில் ஈடுபடவேண்டும் என்று கூறப் படு கிறது. அந்த பணியை பூண்டு எளிதில் செய்வதால், பூண்டை உட்கொண்டு உறவில் ஈடுபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

இஞ்சி

 இஞ்சி சாப்பிட்டு வந்தால் கணவன் – மனைவி இருவரும் மகிழ்ச்சியாக கொஞ்சி விளையாடலாம். இஞ்சிக்கு ஆண்மையைப் பெருக் கும் ஆற்றல் நிறையவே உண்டு. பண்டைய இலக்கி யங்களில் இஞ்சிச்சாறுடன், தேன் மற்றும் பாதி வேக வைக்கப்பட்ட முட்டையைக் கலந்து ஒரு மாதத்திற்கு சாப்பிட்டு வந்தால் மன்மதனை போல் செயல்படமுடியும் என்று எழுதப்பட்டுள் ளதே அதற்கு சான்று.

சாதிக்காய்


 சாதிக்காயை அளவாகப் பயன்படுத்தினால், தம்பத்திய வாழ்க்கையில் மிகையான பலன்களை அனுபவிக்கலாம். சாதிக்காய், தேன், பாதி வேக வைத்த முட்டை ஆகிய மூன்று கலவையும் செக்ஸ் உணர்ச்சியை அதிகரிக்கவல்லவை என்று மூலிகை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உடல் உறவுக்கு முன்பே இந்த கலவையை சாப்பிட்டால், நீண்ட நேரம் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்கின் றனர்.

ஓமம்

 உணர்ச்சியைத் தூண்டும் ஓமத்தின் ஆற் றலை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்கள் அறிந்துள்ளனர். இதன் விதைகள் “தைமால்” என் னும் சத்து அதிகம். ஓமத்தை பொடியாக்கி வைத் துக் கொள்ள வேண்டும். பின்னர் புளியங் கொட்டையின் தோலை நீக்கிவிட்டு உள்ளே இருக்கும் பருப்பை (ஓம விதைக்கு சம அளவில்) பொடி செய்து, அதனை பொடி செய்த ஓமத்து டன் கலக்கி, நெய், வெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயில் வதக்க வேண்டும். ஒரு ஸ்பூன் கல வையை பால் மற்றும் தேனுடன் கலந்து தாம்பத்ய முன் சாப்பிடலாம்.

வெங்காயம் , முருங்கை , பாதாம்

 இது தவிர நாம் தினசரி உபயோகிக்கும் காய் கறிகள், தின்பண்டங்களில் கூட ஆண்மையை அதி கரிக்கும் பொருட்கள் அடங்கியுள்ளன. சிறிய வெங்காயத்தில் ஆண்மையை அதிகரிக்கும் சக்தி உண்டு. முருங்கை விதையில் ஆண்மையைப் பெருக்கும் “பென்-ஆயில்” உள்ளது. வல்லாரை இலையை துவையலாக செய்து சாப்பிட்டால் நரம்புகள் பலம் பெறும்.

பாதாம், முந்திரி, பிஸ்தா, உலர் திராட்சை போன்றவற்றிலும் நரம்பை முறுக்கேற்றும் சக்தி அதிகமாக இருக்கிறது. வெற்றிலைக்கு ஆண்மையைப் பெருக்கும் ஆற்றல் உண்டு. நாட்டு மருந்துக்கடையில் கிடைக்கும் அமுக்கராகிழங்கை செக்ஸ் மன்னன் என்றே அழைக்கலாம்.

இது எல்லாம் கடையில் குறைந்த விலைக்கே கிடைக்கும் கடலை உருண்டைக்குக் கூட ஆண்மை யைப் பெருக்கும் மகத்துவம் உண்டு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மேற்கண்டவற்றை தேவைக்கேற்றபடி முறையாக சாப்பிட்டு வந்தால் உங்கள் செக்ஸ் பிரச்சனைகள் பறந்தோடி விடும்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top