.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday 8 December 2013

உழைப்புக்கேற்ற; வேலைக்கேற்ற; உங்களுக்கேற்ற; உணவு!






'உடல் ஆரோக்கியத்துக்கு சரிவிகித உணவை, சரியான நேரத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால், இரவு நேரம் கண் விழித்து வேலை பார்ப்பவர்கள், நீண்ட நேரம் நின்றபடி வேலை பார்ப்பவர்கள், வெப்பம் மிகுந்த இடத்தில் வேலை பார்ப்பவர்கள் என்று பலருக்கும் தங்களுக்கு ஏற்ற உணவு எது என்ற சந்தேகம் இருந்துகொண்டே இருக்கிறது. இவர்களுக்கான உணவுப்பழக்கம் எப்படி இருக்க வேண்டும்? என்பது குறித்து, ஊட்டச் சத்து நிபுணர்களான தாரிணி கிருஷ்ணன் மற்றும் ஷைனி சந்திரன் அளிக்கும் ஆலோசனைகள்.


இரவுநேரப் பணியில் ஈடுபடுபவர்கள்:


இவர்களுக்கு சோர்வு, தூக்கம் தொடர்பான பிரச்னைகள், வயிற்றுப் புண் போன்ற பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். காரணம் இன்றி உடல் எடை அதிகரிப்புதான் இவர்கள் சந்திக்கும் மிக முக்கியமான பிரச்னை. இரவில் பணிபுரிவதால் ஏற்படும் பிரச்னைகளைச் சமாளிக்க, இவர்கள் உணவில் அதிக அளவில் புரதச் சத்தைச் சேர்த்துக்கொண்டு, கார்போஹைட்ரேட் உணவைக் குறைத்துக்கொள்ள வேண்டும். புரதச் சத்து, கவனம் மற்றும் விழிப்புத் தன்மையை (அலர்ட்) அளிக்கிறது. 
 
 
இதேபோல், இனிப்புமிக்க பானங்களைத் தவிர்க்க வேண்டும். சர்க்கரைச் சத்துள்ள உணவுப்பொருள் அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெரிந்ததே. இருப்பினும், நம் உடலின் சர்க்கரையைக் கையாளும் திறன் இரவு நேரத்தில் குறைவாக இருக்கும். இந்த நேரத்தில், அதிக அளவில் சர்க்கரை உள்ள உணவுப்பொருட்களை எடுத்துக்கொள்வது உடலைப் பாதிக்கும். இரவு பணியில் உள்ளவர்கள், நொறுக்குத் தீனிகளை அதிக அளவில் எடுத்துக்கொள்வர். இது தேவையற்ற கலோரிகளைச் சேர்த்து, கொழுப்பாக மாற்றிவிடும். இதைத் தவிர்க்க வேண்டும்.


இரவு நேரத்தில் சப்பாத்தி, இட்லி, பொங்கல் போன்ற ஏதாவது ஒன்றைச் சாப்பிடுவது நல்லது. இரவு ஒரு மணிக்கு 'ஃப்ரூட் சாலட்’ அல்லது ஏதாவது ஒரு 'ஃப்ரெஷ் ஜூஸ்’ குடிக்கலாம். பேரிக்காய், ஆப்பிள், பப்பாளி, வாழைப்பழம், மாதுளம்பழம் போன்ற பழங்களையும் சாப்பிடலாம். அதிகாலை மூன்று மணிக்கு நல்ல குளிர்ச்சியான பானங்கள் குடிக்கலாம். பணியின் இடையே பசித்தாலும் முளைகட்டிய பயறு வகைகளை, சாலட் செய்து சாப்பிடுவது நல்லது.


அதிகம் உஷ்ணமான இடங்களில் வேலை செய்பவர்கள்:


இவர்களுக்கு நீரிழப்புதான் மிக முக்கியமான பிரச்னை. நம்முடைய உடலில் 26 லட்சத்துக்கும் மேற்பட்ட வியர்வைச் சுரப்பிகள் உள்ளன. உடலில் வெப்பம் அதிகரிக்கும்போது, குளிர்விப்பதற்காக அதிக அளவில் வியர்வை சுரக்கிறது. இதனால் உடலில் உள்ள நீரும், தாது உப்புக்களும் வெளியேறுகின்றன. வெப்பமான இடத்தில் வேலை செய்பவர்களுக்கு, சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால், நீர் பற்றாக்குறை உள்ளது என்று அர்த்தம்.
 
 
 
 இதைத் தவிர்க்க 15 முதல் 20 நிமிடங்களுக்கு, ஒரு முறை ஒரு டம்ளர் நீர் அருந்த வேண்டும். வெப்பத்தினால் ஏற்படக்கூடிய உடல்நலப் பிரச்னைகளைத் தவிர்க்க, அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும். காய்கறிகள், பழங்களை அதிக அளவில் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. தினசரி உணவில் இளநீர், மோர் கண்டிப்பாகச் சேர்க்க வேண்டும். ஃப்ரிஜ்ஜில் வைத்த குளிர்பானங்கள், குளிர்ந்த நீர் அருந்துவதைத் தவிர்த்து, மண் பானைத் தண்ணீர் அருந்தினால் மிகவும் நல்லது.


நீண்ட நேரம் நடந்து/நின்றுகொண்டு வேலை செய்பவர்கள்:



இவர்கள், குறைந்த கலோரி, புரதம் அதிகம் உள்ள உணவுகளைச் சாப்பிடவேண்டும். இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 1,800 கலோரி உணவு தேவை. வேலை நிமித்தம் பல்வேறு இடங்களுக்கு அலைந்துகொண்டே இருப்பதால், பஜ்ஜி, போண்டா என்று ஆங்காங்கே கிடைக்கும் பொரித்த உணவைச் சாப்பிடுவதையும் இவர்களால் தவிர்க்க முடியாது. இதனால், கலோரியின் அளவும் 2,200-க்கு மேல் அதிகரித்துவிடும். 
 
 
நொறுக்குத் தீனியைத் தவிர்த்து, வேகவைத்த கடலை, பழங்கள் சாப்பிடலாம். காலையில் மிதமான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். மதிய வேளையில் ஒன்று முதல் ஒன்றரை கப் அளவு சாதம், அதற்குச் சரிசமமாக காய்கறிகளைச் சேர்க்கவேண்டும். மூன்று மணியளவில் தேநீர் அருந்தலாம். மாலை வேளையில் முளைகட்டிய பயறு வகைகளை வேகவைத்துச் சாப்பிடலாம்.


அமர்ந்தே வேலை செய்யும் அலுவலகப் பணியாளர்கள்:



அதிகம் கொழுப்புச் சத்துள்ள உணவுகளை முற்றிலும் தவிர்த்து, எனர்ஜி அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். மோர், இளநீர், ஜூஸ் தவிர்த்து பழங்கள் சாப்பிடலாம். கைக்குத்தல் அரிசி, கேழ்வரகு, கம்பு ஆகியவற்றை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். குறைவான சாதத்துடன், அதிகம் காய்கறிகளைச் சாப்பிடவேண்டும். அலுவலகத்தில் ஒரே இடத்தில் உட்காராமல் ஒவ்வொரு நான்கு மணி நேரத்துக்கும் ஒருமுறை, சிறிது தூரம் நடந்து போய்விட்டு வரலாம். இரவு உணவை எட்டு மணிக்கு முன்னால் முடித்துக்கொள்வது மிகவும் நல்லது.

வாயுத் தொல்லையை ஏற்படுத்தும் காய்கறிகள்!!!



காய்கறிகளே நமது தினசரி உணவுகளில் மிகுதியான அளவில் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டத்தையும் இயற்கையான முறையில் தருபவை. காய்கறிகள் எத்தகைய நற்பண்புகளை பெற்றிருந்தாலும் அதில் ஒரு சில பக்க விளைவுகள் உள்ளதை நாம் மறுக்க முடியாது. சில காய்கறிகள் நமக்குத் தேவையான ஊட்டச்சத்தை கொடுப்பது மட்டுமல்லாமல் அதிக அளவு வாய்வு பிரச்சனையை உண்டாக்கி, கீழ் வயிற்றை உப்பச் செய்கிறது. இதனால் உணவிற்கு பின் வயிறு உப்பிய நிலையில் இருந்து, பின்னர் அடிக்கடி வாய்வை வெளிவரச் செய்கிறது.


சிலருக்கு இத்தகைய வாய்வு பிரச்சனை அதிகமாகும் போது அது வலியை ஏற்படுத்துகிறது. சர்க்கரையை பல வடிவங்களில் கொண்டுள்ள காய்கறிகள் தேவையான அளவை விட அதிக அளவு வாய்வை உண்டாக்குகின்றன. இராஃபினோஸ், லாக்டோஸ், பிரக்டோஸ் மற்றும் சார்பிட்டால் ஆகியவை சர்க்கரையின் வடிவங்களாகும் மற்றும் இவை அதிக அளவு வாய்வை உண்டாக்கும் பொருட்கள். இராபினோஸ் என்ற சாக்கரை வகை அதிக அளவு உப்புசம் தந்து கீழ் வயிற்றில் வலியை உண்டாக்குகிறது. இது வாய்வுடன் தொடர்புடையதால் தான் இத்தகைய விளைவுகள் ஏற்படுகின்றன. எப்படி இருந்தாலும் ஒருவருடைய உடல் வாகை கொண்டே இதை நாம் உறுதியாக கூற முடியும். ஒருவருக்கு ஒத்துப்போவது மற்றொருவருக்கு சரியாக வராது.


 நல்ல காய்கறி சேர்த்த உணவை உண்ட பின் இத்தகைய இடையூறுகள் வாய்வு தொல்லையால் ஏற்பட்டால் அந்த காய்கறிகளை உட்கொள்ளுவதை குறைத்துக்கொள்வது மிக அவசியமானதாகும். வெங்காயம், கேரட், பிரஸ்ஸல்ஸ், வெள்ளரிக்காய், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், முள்ளங்கி மற்றும் தானிய வகைகள் ஆகியவை வயிற்றில் வாய்வு உண்டாக்கும் சில காய்கறிகளாகும். இவைகளை நாம் ஒரேடியாக நிறுத்தி விட முடியாது. ஏனெனில் இவற்றில் சத்துக்களும் மிகுதியாக உள்ளன. ஆகையால் இவ்வகை காய்கறிகளை உட்கொள்ளும் அளவை குறைத்து கொள்வதும் மற்றும் நீண்ட இடைவெளி விட்டு உண்பதும் நல்லது.


ஆண்களுக்கு அதிக அளவில் கேஸ் உண்டாக்கும் காய்கறிகள் - ஓரு கண்னோட்டம்

 நமது நாட்டில் எந்த இடமாயினும் வெங்காயம் பயன்படுத்தாமல் இருக்க மாட்டோம். இது ஒரு அடிப்படை உணவில் கூட கலப்பதை தவிர்க்க முடியாது. வெங்காயங்களை சமைக்கும் பொது தவிர்க்கவும் முடியாது. ஆனால் அதை சிறிதளவு குறைத்துக் கொள்ள முடியும். இதைச் செய்வதன் மூலம் கேஸ் அடைவதிலிருந்தும் மற்றும் கேஸ் உருவாவதிலிருந்தும் தப்பிக்கலாம். வெங்காயத்தில் பல நற்குனங்கள் உள்ளதால், அதனை உணவில் தவிர்ப்பது சரியான செயல் அல்ல.

பிரஸ்ஸல்ஸ்

 முட்டைக்கோஸ், ப்ரோக்கோலி ஆகிய தாவர வகையை சார்ந்த பிரஸ்ஸல்ஸ் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி, ஃபோலிக் அமிலம், நார்ச்சத்துகள் ஆகிய சத்து வகைகளை கொண்டுள்ளது. இவை சிக்கலான கார்போஹைட்ரேட் ஆகிய ஓலிகோ-சாக்கரைட்ஸ் எனப்படும் ஊட்டத்தை கொண்டவை. இவை அதிக அளவிலான காற்றை செரிமானத்தின் போது வயிற்றில் உருவாக்கும்.

சோளம்

 சோளமும் ஒரு வகை பிரதானமான உணவாகும். அதில் அதிக அளவு சத்துக்களும் மற்றும் சுக்ரோசும் உள்ளது. அதிக அளவு ஸ்டார்ச் மற்றும் சர்க்கரை இதில் இருப்பதால் உணவு செரிக்கப்படும் போது கேஸ் ஏற்படுகிறது. இந்த உணவில் உள்ள காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் செரிமானத்தை கடினப்படுத்தி அதில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து மற்றும் சாக்கரை கேஸை உருவாக்குகிறது.

ப்ரோக்கோலி

 முட்டைக்கோஸ் குடும்பத்தை சார்ந்த ப்ரோக்கோலியில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள், பைட்டோ-கெமிக்கல்கள் ஆகியவை உடலுக்கு ஆரோக்கியம் தருபவையாகும். இதில் பல நற்குணங்கள் இருந்தாலும், குடலில் இது உருவாக்கும் கேஸ் காரணமாக பலர் இதை தவிர்க்கின்றனர். ப்ரோக்கோலியில் உள்ள இராஃபினோஸ் என்ற சர்க்கரையை என்ஸைம்களால் செரிக்க வைக்க முடிவதில்லை. இதனால் கேஸ் உருவாகிறது.

முட்டைக்கோஸ்

 முட்டைக்கோஸ் உடலுக்கு மிகவும் சத்து மிகுந்த கார்போஹைட்ரேட் உள்ள உணவாகும். அதே நேரம், இந்த கார்போஹைட்ரேட்களில் ஆலிகோ-சாக்கரைட்ஸ் என்ற சிக்கலான பொருட்களும் உள்ளன. ஆலிகோ-சாக்கரைட்ஸ்களை செரிமானம் செய்யும் போதும் அவற்றிலிருந்து கேஸ் உருவாகிறது.

பீன்ஸ்

 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வகைகளை கொண்ட பீன்ஸில், ஒவ்வொரு வகைகும் ஒரு வகையான பலன்கள் உள்ளன. பீன்ஸில் ஸ்டாசியோஸ் என்ற மூன்று சாக்கரை பொருள், இராஃபினோஸ் என்ற நான்கு சாக்கரை பொருள் மற்றும் வெர்பாஸ்கோஸ் என்ற ஐந்து சர்க்கரைப் பொருள் ஆகியவை இருப்பதால் செரிமாணம் கடினமாகி விடுகிறது. இதை சமாளிக்கும் என்ஸைம்கள் நம் உடலில் இல்லை.

பீட்ரூட்


 சென்சிட்டிவ்வான வயிற்று உறுப்புகள் மற்றும் எரிச்சல் கொண்ட குடல் நோய் உள்ளவர்கள் பீட்ரூட் சாப்பிட்டால், அதிகமான கேஸ் உருவாகி வயிற்று கோளாறுகள் ஏற்படும். அதனால் வயிறு உப்புசமடைதல், கீழ் வயிற்று வலி, கேஸ் பிரச்னை மற்றும் வயிற்று பிடிப்பு ஆகியவை ஏற்படும். பீட்ரூட்டில் உள்ள பாலிசாக்கரைட் என்னும் கார்போஹைட்ரேட் செரிப்பதற்கு கடினமானதாக இருப்பதால் அது கேஸை உருவாக்குகிறது.

துளசி மல்லி கஷாயம்




துளசி மல்லி கஷாயம்

 துளசி - 2 கைப்பிடி,

சுக்கு - 1 துண்டு,

வெள்ளை மிளகு - 20,

ஏலக்காய் - 5,

தனியா - 2 டேபிள்ஸ்பூன்,

காய்ந்த திராட்சை - 20, பனங்கல்கண்டு

 அல்லது பனைவெல்லம் - தேவைக்கேற்ப.


சுக்கு, வெள்ளை மிளகு, தனியாவை ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். அத்துடன் துளசியும் காய்ந்த திராட்சையும் சேர்த்து, 3 டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும். அது பாதியாக சுண்டியதும், வடிகட்டி, பனங்கல்கண்டோ, பனைவெல்லமோ சேர்த்துப் பரிமாறவும்.

பொதுவாக தூதுவளைதான் கபம் போக்கும். வெயில் காலத்தில் தூதுவளையின் சூட்டைத் தவிர்க்கவே இங்கே துளசி சேர்த்திருக்கிறோம். உணவின் மூலம் ஏற்படும் மந்தம் நீக்கி, தொற்று வராமல் காக்கும் கஷாயம் இது. மாலை 6 முதல் 9 மணிக்குள் குடிக்கலாம். சளி பிடிக்காமல் தடுக்கும்.

குற்றவாளிகளும் கோடீஸ்வரர்களும் நிறைந்த மாநிலங்களவை!



மாநிலங்களவை உறுப்பினர்களில் 38 எம்பிக்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 15 பேர் கொடூர குற்றங்களுக்கான வழக்குகள் உள்ளது என்றும் இதில் 67 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் எனவும் ஜனநாயக சீர்திருத்த கூட்டமைப்பு என்ற தன்னார்வ அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாநிலங்களவையில் மொத்தம் 245 எம்பிக்கள் உள்ளனர். இவர்களில் 12 பேர் நியமன உறுப்பினர்கள். 6 இடங்கள் காலியாக உள்ளன. எஞ்சியுள்ள 227 எம்பிக்களின் சொத்து மதிப்பு மற்றும் குற்ற பின்னணி குறித்த விவரங்களை ஜனநாயக சீர்திருத்த கூட்டமைப்பு என்ற தன்னார்வ அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி மொத்தமுள்ள 227 எம்பிக்களில் 67 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள். இவர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 20 கோடி. காங்கிரஸ் எம்பிக்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 16.74 கோடி. இதற்கு அடுத்தபடியாக மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி எம்பிக்களின் சராசரி மதிப்பு ரூ. 13.82 கோடி.


பாஜ எம்பிக்களின் சொத்து மதிப்பு ரூ. 8.51 கோடி. ராஜ்யசபா எம்பிக்களில் மிகப்பெரும் செல்வந்தராக இருப்பவர் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த மகேந்திர பிரசாத். இவருக்கு ரூ. 683 கோடி மதிப்புக்கு சொத்து உள்ளது. இவருக்கு அடுத்தபடியாக கர்நாடகாவை சேர்ந்த சுயேட்சை எம்பி விஜய் மல்லய்யாவுக்கு ரூ. 615 கோடி சொத்து உள்ளது. சமாஜ்வாடி உறுப்பினரும் நடிகர் அமிதாப் பச்சனின் மனைவியுமான ஜெயா பச்சனுக்கு ரூ. 493 கோடி சொத்து இருக்கிறது. 38 எம்பிக்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 15 பேர் கொடூர குற்றங்களுக்கான வழக்குகள் உள்ளது.

பொருளாதாரம் ஈட்டும் பெண்களா? பொழுதை போக்கும் பெண்களா?



பெண்கள் எப்போதும் வினோதமானவர்கள், இயற்கையாய் கடவுள் பெண்களை சற்றே குறைவான உடல் சக்தியுடன் படைத்த காலத்தில் இருந்து சாட்டிலைட்டை இயக்கும் தற்கால பெண்மணிகள் வரை நீங்கள் பார்த்தால் எவ்வளவு பரிணாம மாற்றங்கள். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்க்கு என அடக்கி வாசித்த ஆண் வர்க்கம் இதை செய்தது மூன்று காரணங்களுக்காக. பெண்கள் சமைந்த உடன் வெளியே அனுப்பினால் என்னவாகும் என்ற பதபதைப்பு. இரண்டாவது பெண் ஒரு படி பார்க்கும் மாப்பிளையை விட படித்திருந்தால் கல்யாண்ம் அமையாது. மூன்றாவது பெண் படித்து இந்த பெண் என்ன சாதிக்க போகிறாள். அடுப்படி தானே இவளுக்கு நிரந்தரம் என்ற நினைத்தமையால் ஒரு மூன்று நான்கு ஜெனரேஷனில் படிப்பு என்பது ஆரம்ப கல்வியோடு முடிந்து போனது.
 

இதை உடைத்தெறிந்த பல தலைவர்கள் பெண்களுக்கு கல்வி முக்கியம் என ஒரு வழியாக போராடி பெற்று கொடுத்த படிப்பு இன்று பெரும்பாலும் பொருள் ஈட்ட, பொழுது போக்க, புரளி பேச மட்டுமே பயன்படுகிறது என்று நினைக்கையில் வருத்தம் தான் சற்றே ஓங்கியிருக்கிறது.


பெண்களுக்கு கட்டாய‌ கல்வி என்று நினைத்த சில கர்ம வீரர்களின் எண்ணம் வேறு. பெண்கள் படிப்பது வேலைக்கு செல்வதற்க்கு மட்டுமல்ல என்று அவர்களின் உயர்ந்த எண்ணம் அனேக பெண்களுக்கு தெரிவதில்லை. அடிமை சாசனமாய் இருந்த பெண்களுக்கு படிப்பு என்பது ஒரு மூன்றாம் கண் போல.


பெண்களுக்கு அனைத்து தெரிந்திருக்க வேண்டும். சட்டம் தெரிந்திருக்க வேண்டும். குடும்பத்தில் பண்போடு பழகவும், குழந்தைகளுக்கு படிப்பு சொல்லி கொடுக்கவும், குடும்ப வர்த்தகம் என்று ஒன்று இருந்தால் அதிலும் ஞானம் பெறவே இந்த படிப்பறிவுக்கு பாடுபட்டனர்.


என்னை கேட்டால் பெரும்பாலும் பெண்கள் படிக்கும் நோக்கமே தான் சொந்தக்காலில் நிற்க முடியும் என்பதற்க்கே. பத்தாம் வகுப்பு படிக்கும் போதே மனம் சொல்கிறது இந்த குருப் படித்தால் இந்த வேலைக்கு செல்லாம் இந்த மென்பொருள் படித்தால் இந்த நாட்டுக்கு செல்லாம் என்று அதை நோக்கியே பயணித்து 34 வருஷம் சர்வீஸ் போட்ட அப்பாவை விட தற்காலிக பொருளாதாரத்திர்க்கு ஏற்ப அப்பாவை விட முதல் மாததிலே சம்பளம் அதிகம் வாங்கி காட்டின உடன் பெற்றோர்கள் புளங்கிதம் அடைகின்றனர்.


இது கஷ்டப்படும் குடும்பம் என்றல்ல அனைத்து பெற்றோர்களும் கல்வி இருந்தா என் பெண் எப்படியாவது புழைச்சிக்கிடுவான்னு ஒரு நம்பிக்கை. ஆனால் இந்த படிப்பு அவர்களுக்கு ஞானத்தை பெற்று தந்தாலும், கூடவே தனித்துவத்தை தந்து விடுகிறது இது தனியே இருக்கும் வரை ஒரு நல்ல செயல்தான். ஆனால் கல்யாண்ம் என்ற ஒரு புது உறவில் இதுவே பெரும் பிரச்சினையாக வந்து விடுகிறது. பெண் பார்க்கையிலே பெண்ணோடு அப்பா கன்டிஷன் போடுவார் பெண் வேலைக்கு போவா கல்யானத்திர்க்கு பிறகும் என்று ஆரம்பிக்கும் இந்த கண்டிஷன் தான் பலர் வாழ்க்கையில் சத்துரு.


பொருளாதார சூழ் நிலையில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இது பொருந்தாது. பெருமைக்காக, பெண் என்ன ஆண்களுக்கு அடிமைபட்ட இனமா? மாமியார் தொல்லை, வீட்டு வேலை அலர்ஜி என்று பல காரணங்களுக்காக வேலைக்கு செல்லும் பெண்கள் இழப்பது ஒன்றல்ல இரண்டல்லா பெரும்பாலும் நிம்மதியற்ற வாழ்க்கை. அநநியோன்யம் மறந்து போகிறது. பிள்ளைகளின் மழலையை ரசிக்க முடியாமல் போகிறது. தான் படித்த படிப்பு தன் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்காமல் தன்னை விட குறைவாய் படித்த ஒரு ஆளிடம் டியூஷன் விடுவது, தன் குடும்பத்துக்கு ஏனோ தானோ என்று சமைக்கும் ஒரு அரை குறை ஆளை வைப்பது என எல்லாவற்றிற்க்கு அவுட் சோர்ஸ் செய்து தான் நிம்மதியாக வெளியே சென்று திரும்ப வரும் ஒரு விஷயத்தை தவிர வேறு எதுவும் இவர்கள் பெற்று விடவில்லை.


ஏன் ரவி உலகத்தில் பெண்கள் வேலைக்கே செல்வதில்லையா, பெண்கள் ப்டித்தால் அதை வீட்டில் தான் செலவிட வேண்டுமா என்று நீங்கள் என்னை பிரான்டும் நேரத்திற்க்குல் சொல்வேன் நீங்கள் வாழ்வது இந்திய சமூகம். இது குடும்பம் குழந்தை என பழகி போன உங்கள் மாமியாரும், மாமனாரும், என்னதான் படித்திருந்தாலும் தன் மனைவி வேலைக்கு செல்வதில் நாட்டமில்லை என்று நினைக்கும் பெரும்பாலான கணவர்களுக்கு நடுவில் இது சக்ஸ்ஸான சாத்தியம் என்று சொல்லுவதற்க்கில்லை.


அப்படி ஒரு [புதுமை பெண்ணாய் நீங்கள் ஜொலிக்க விரும்பினால் இந்த கல்யாண்ம் என்ற அடைப்புக்குறியில் நீங்கள் அடங்கவே முடியாது. இதுவும் வேனும் அதுவும் வேணும் என்று அடம் பிடிக்கும் சிறு குழந்தைத்தனமான எண்ணம் தான் உங்களுக்கு நீங்கள் வைக்கும் வேட்டு.


இதையும் மிஞ்சி வேலைக்கு செல்லும் பெண்கள் கண்டிப்பாய் அவர்கள் சுய நலம் ஒன்றின் காரணமே தவிர வேறு ஒன்றுக்கு இல்லை என்பதே. திருமணம் ஆகி பின்பு பொருளாதார சூழ் நிலையால் சுய தொழில், வேலைக்கு செல்வது என சில முடிவுகள் வரேவேற்க்க தக்கது, வீட்ல ஒரே போருப்பா என ஒரே காரணத்திர்க்காக வெளியே வேலைக்கு செல்வது கண்டிப்பாய அவர்கள் வாழ்வுக்கு அவர்களே வைக்கும் ஆப்பு தான்.


மெத்த படித்த பல பெண்கள் கவுரவத்தோடு இன்று வீட்டில் இருந்து சாதிக்கின்றனர், தன் பிள்ளைகளை நன்கு படிக்க வைத்த நற் பண்புகளோடு நல்ல சிட்டிசன்களாய் உருவாக்கும் இவர்கள் தான் உண்மையிலே சக்ஸஸ் பெண்மனிகள். வீட்டுக்கு வெளியே கிளம்பும் போது எடுக்கும் மொபைல் ஃபோன் வீட்டுக்குள் நுழைவதற்க்குள் சில எஸ் எம் எஸ்களையும், சில கால் லிஸ்டில் உள்ள கால்களையும் அழித்து விட்டு வரும் பெண்களும் ஆண்களும் இன்று இந்த குடும்பம் சார்ந்த வாழ்க்கை வாழாதது தான்.


குடும்பம் வேணும் நல்ல குழந்தைகள் வேணும் ஆனாலும் வேலைக்கு சென்று இதை சாதிப்பேன் என்று பெண்களுக்கு – நீங்கள் யாரை ஏமாற்றுகிறேர்கள் என்றே கேட்பேன். இவை அனைத்தையும் தாண்டி நிறைவான குடும்பம் உங்கள் இன் லாஸ் மற்றூம் பொறுப்பு மிகுந்த கணவன் மற்றும் பிள்ளைகளின் மூலம் நீங்கள் அடைந்தால் நீங்கள் வரம் வாங்கியவர்கள் தான் வாழ்த்துக்கள்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top