.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday 8 December 2013

பெண்களுக்கான சொத்துரிமை குறித்து சில விவரங்கள்!



பெண்களுக்கான சொத்து உரிமைகளை தருவது 1956-ல் நிறைவேற்றப் பட்ட இந்து வாரிசுச் சட்டப்படிதான்.இந்த சட்டம் வருவதற்கு முன்பு ‘இந்து பெண்கள் சொத்து சட்டம்’ என்று ஒன்று இருந்தது. இந்த சட்டத்தின் மூலம் பெண்களுக்கு பிறந்த வீட்டில் தங்குவதற்கான உரிமை மட்டும்தான் இருந்தது. சொத்தில் எவ்வித உரிமையும் கிடையாது. பிறந்த வீட்டிலிருந்து கொடுக்கப்பட்ட சீதனம் மட்டுமே பெண்களுக்கான சொத்தாக கருதப்பட்டது.


1956, ஜூலை 4-ம் தேதி நிறைவேற்றப்பட்ட ‘இந்து வாரிசுச் சட்டம் 1956′ பெண்களுக்கு சொத்தில் பங்கு உண்டு என்று சொன்னது. உதாரணமாக ஒரு இந்து ஆணுக்கு மனைவி, இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் இருக்கிறார்கள் எனில் அந்த ஆண் இறக்கும் பட்சத்தில் அவரது சொத்துக்கள் மனைவி, மகன்கள் மற்றும் மகள்களுக்கு சம பங்குகளாக கிடைக்கும். இதில் அனைவருக்கும் சமஉரிமை உண்டு. இந்த சட்டத்தின்படி இருக்கும் பெண்களுக்கான உரிமைகள் இதோ:


முன்பு பெண்கள் தனது தந்தை வசித்து வந்த சொந்த வீட்டில் பங்கு கேட்கும் உரிமை இல்லாமல் இருந்தது. ஆனால், 2005-ல் வந்த சட்டத் திருத்தத்தின்படி பெண்கள் தனது தந்தையின் வீட்டில் அவர் காலத்திற்குப் பிறகு பங்கு கேட்கும் உரிமை வழங்கப்பட்டது.


ஒரு பெண் இறக்கும்போது அவள் பெயரில் இருக்கும் அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துகளில் அவளின் கணவர் மற்றும் பிள்ளைகளுக்கு சமபங்கு உண்டு. ஒருவேளை அவளது கணவனும் இறந்துவிட்டால் அந்த பெண்ணுக்கு எத்தனை மகனும் மகளும் இருக்கிறார்களோ, அத்தனை பேருக்கும் சொத்தில் சமபங்கு உண்டு.


ஒரு பெண்ணுக்கு கணவனும் இல்லை, குழந்தைகளும் இல்லை எனில் அவளின் சொத்துக்கள் அனைத்தும் அவளின் பெற்றோருக்குச் செல்லும். ஒருவேளை அவளுக்கு பெற்றோரும் இல்லையெனில் அவளின் அப்பாவின் வாரிசுகளுக்கு அந்த சொத்துகள் போகும். அவர்களும் இல்லையெனில் அம்மாவின் வாரிசுகளுக்கு சொத்து செல்லும்.


கணவரோ, குழந்தையோ இல்லாத பெண்ணுக்கு அவளின் தாய் மற்றும் தந்தை மூலம் (அவர்கள் உயில் எழுதாதபட்சத்தில்) பரம்பரை சொத்து கிடைத்தால் அவளின் தந்தையின் வாரிசுகளுக்கு அந்த சொத்து கிடைக்கும்.


அதேபோல் கணவரோ அல்லது குழந்தையோ இல்லாத பெண்ணுக்கு, கணவர் மற்றும் மாமனார் மூலமாக சொத்து கிடைத்தால் (உயில் எழுதாதபட்சத்தில்) அது அவளின் காலத்திற்குப் பிறகு கணவரின் வாரிசுகளுக்குச் செல்லும்.


பெண்ணுக்கு சீதனமாக வரும் எந்த சொத்தும் அது அவளின் தனிப்பட்ட சொத்தாகவே பார்க்கப்படும். சீதனமாக நகைகளோ, பாத்திரங்களோ, நிலமோ, வீடோ என அசையும் மற்றும் அசையா சொத்து எதுவாக இருந்தாலும் அது அவளின் தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். சீதனமாக கொண்டு வந்த சொத்து அந்த பெண் கூட்டுக்குடும்பத்தில் இருந்தால்கூட அது அவளது தனிப்பட்ட சொத்துதான். அந்த சொத்தை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கும் உரிமை அந்த பெண்ணுக்கு உண்டு.


பெண்களுக்கு உயில் மூலமாக கிடைக்கும் சொத்தும் தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். அதனை அவள் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.


2005 இந்து வாரிசு திருத்த சட்டத்தின்படி, 25.3.1989 ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட ஒரு இந்து பெண் பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை கோர முடியாது. அதற்குபிறகு திருமணம் செய்துகொண்ட பெண்கள் தனது தந்தையின் பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை கோரலாம். ஆனால், 25.3.1989 தேதிக்கு முன்பு சொத்து பாகப்பிரிவினை செய்யப்பட்டிருந்தால் பாகப்பிரிவினை கோரமுடியாது. ஒருவேளை சொத்து விற்கப்படாமலோ அல்லது பாகப் பிரிவினை செய்யப்படாமல் இருந்தாலோ உரிமை கோரலாம்.


ஒரு ஆண் இறந்துவிட்டால் உயில் இல்லாத பட்சத்தில் அவரது தனிப்பட்ட சொத்திற்கு அவரது மனைவி, ஆண்/பெண் பிள்ளைகளுக்கு அந்த சொத்தில் தனி உரிமை உண்டு.


இந்து திருமணச் சட்டத்தின்படி முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது ஒரு இந்து ஆண் இரண்டாவது திருமணம் செய்து கொண்டால், அந்த திருமணம் சட்டப்படி செல்லாது. ஆனால், அதே சட்டத்தின் பிரிவு 16-ன்படி இரண்டாவது திருமணத்தின் மூலம் குழந்தை பிறந்திருந்தால் அந்த குழந்தைக்கு அதன் தந்தையின் தனிப்பட்ட சொத்தில் பங்கு உண்டு. ஆனால், பூர்வீகச் சொத்தில் எந்த பங்கையும் உரிமை கோர முடியாது. எனினும், இந்த விஷயம் உச்சநீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது.


இரண்டாவது மனைவியின் குழந்தைகளுக்கு பூர்வீகச் சொத்தில் பங்கு கிடையாது என உச்சநீதிமன்றத்தில் ஒரு பெஞ்ச் சொல்லியுள்ளது. ஆனால், இன்னொரு பெஞ்ச் இதற்கு மறுக்கவே, தற்போது லார்ஜ் பெஞ்சிற்கு அனுப்பப்பட்டு பரிசீலனையில் உள்ளது.


இந்து கூட்டு குடும்பத்தில் எப்படி ஒரு ஆண் பிறந்ததும் அவனுக்கு அந்த குடும்பத்தின் சொத்தில் உரிமை உள்ளதோ, அதேபோல் அந்த வீட்டுப் பெண்ணுக்கும் பிறக்கும்போதே சொத்தில் உரிமை உள்ளது.


இந்து பெண்களுக்கு சொத்தில் இருக்கும் உரிமைகள் மட்டுமே இது. கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் மதங்களைச் சேர்ந்த பெண்களுக்கு இந்த சட்டங்கள் பொருந்தாது.

பறவையா? பூவா? அதிசயம்!



தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு வகை பூ, கிளியின் உருவத்தை ஒத்தது. தூர இருந்து பார்த்தால் கிளியென்று ஏமாந்து விடுவர்.


இந்த வகை பூக்கள் தாய்லாந்தில் மட்டுமே காணப்படுகின்றன.



இந்த கிளிப் பூ மரத்தை தாய்லாந்துக்கு வெளியில் எடுத்துச் செல்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.



இதனால் இந்த அரிதான பூ இனத்தை தாய்லாந்து நாட்டுக்கு சென்றால் மட்டுமே பார்க்க முடியும்.





இ‌ப்படியு‌ம் ‌சில ம‌னித‌ர்க‌ள் !!

உன‌க்காக உ‌யிரையே‌க் கொடு‌ப்பே‌ன் எ‌ன்று காத‌ல் வசன‌ம் பே‌சி, காத‌லி‌த்து, க‌ல்யாண‌ம் செ‌ய்து கொ‌ண்டு ‌பிறகு ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் அடிதடி ரகளை நட‌ப்பது இய‌ல்பான ‌விஷய‌ம். ஒரு வேளை, காத‌லி‌த்து க‌னி‌ந்துரு‌கி, இறு‌தி‌யி‌‌ல் ‌ஏதேனு‌ம் காரண‌த்தா‌ல் ஒ‌ன்று சேர முடியாம‌ல் போனா‌ல், காதலனோ, காத‌லியோ செ‌ய்யு‌ம் ‌விப‌ரீத செய‌ல்களை இ‌ங்கு ‌நினைவூ‌ட்ட ‌விரு‌ம்பு‌கிறோ‌ம்.


தான் கற்ற க‌ல்‌வியையு‌ம், பெற்ற அனுபவ‌த்தையு‌ம், பயன்படுத்தி, மற்றவர்களுக்கு நல்லது செய்வது‌ம் உ‌ண்டு, ‌சில‌ர் அதனை‌ப் பய‌ன்படு‌த்‌தி ‌தீமை செ‌ய்வது‌ம், பழிவா‌ங்குவது‌ம் உ‌ண்டு.


இ‌தி‌ல் இர‌ண்டா‌ம் ரக‌ம் ம‌னித‌ர்க‌ளிட‌ம் நா‌ம் எ‌ச்ச‌ரி‌க்கையாக இரு‌க்க வே‌ண்டியத‌ன் அவ‌சிய‌த்தை வ‌லியுறு‌த்துவது தா‌ன் இ‌ந்த க‌ட்டுரை‌யி‌ன் நோ‌க்க‌ம்.


காதல‌ர்களாக இரு‌ந்தாலு‌ம் ச‌ரி, ந‌ண்ப‌ர்களாக இரு‌ந்தாலு‌ம் ச‌ரி, ஒரு ‌சில ‌விஷய‌ங்களை த‌வி‌ர்‌ப்பது ‌மிகவு‌ம் அவ‌சிய‌ம். இது எ‌தி‌ர்மறையான ‌சி‌ந்தனையாக இரு‌ந்தாலு‌ம், நே‌ர்மறையாக ம‌ட்டுமே எ‌ல்லாமு‌ம், எ‌ல்லாரு‌ம் நட‌ப்ப‌தி‌ல்லை எ‌ன்பதை அடி‌ப்படையாக‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.


எ‌ந்த அ‌த்து‌மீற‌ல்களு‌‌ம் நட‌க்காம‌ல் பா‌ர்‌த்து‌க் கொ‌ள்வது‌ம், யா‌ரிடமு‌ம் சொ‌ல்ல‌க் கூடாத ‌சில ரக‌சிய‌ங்களை எ‌ப்போது‌ம் யா‌ரிடமு‌ம் சொ‌ல்லாம‌ல் இரு‌ப்பது‌ம்தா‌ன் முத‌ல் எ‌ச்ச‌ரி‌க்கையாகு‌ம்.



அதாவது காதல‌ர்களாக இரு‌க்கு‌ம்ப‌ட்ச‌த்‌தி‌ல், ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌ள்வது எ‌ன்று இருவரு‌ம் மன‌ப்பூ‌ர்வமாக ஒ‌ப்பு‌க் கொ‌ண்டாலு‌ம், எ‌ந்த‌த் தவறான கா‌ரிய‌த்‌திலு‌ம் ஈடுபடாம‌ல் இரு‌ப்பது இருவரது வா‌ழ்‌க்கை‌க்கு‌ம் ந‌ல்லது.


ஏதோ ஒரு காரண‌த்தா‌ல் ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌ள்ள இயலாம‌ல் போகு‌ம் போது, பெ‌ண்ணை, ஆ‌ண் ‌மிர‌ட்டுவது‌ம், ஆ‌ண் கெ‌ட்டவ‌ன் எ‌ன்று தெ‌ரி‌ந்தாலு‌ம், தவறு செ‌ய்து ‌வி‌ட்ட ஒரே காரண‌த்‌தி‌ற்காக அவனை‌க் க‌ல்யாண‌ம் செ‌ய்து கொ‌ள்ள வே‌ண்டிய ‌சூ‌ழ்‌நிலையு‌ம் ஏ‌ற்படலா‌ம். இ‌தே‌க் காரண‌த்தை‌க் கொ‌ண்டு ஒரு ஆணை பெ‌ண் ‌பிர‌ச்‌சினை‌க்கு‌ள்ளா‌க்குவத‌ற்கு‌ம் வா‌ய்‌ப்புக‌ள் உ‌ண்டு.


ந‌ண்ப‌ர்களாக இரு‌ப்‌பினு‌ம், காதல‌ர்களாக இரு‌ப்‌பினு‌ம், த‌ன்னை‌ப் ப‌ற்‌றிய ஒரு ரக‌சிய‌த்தை, யா‌ரிடமு‌ம் சொ‌ல்ல‌க் கூடாத ஒரு ரக‌சிய‌த்தை தயவு செ‌ய்து சொ‌ல்ல வே‌ண்டா‌ம். உ‌ங்களு‌க்கு ம‌ட்டுமே‌த் தெ‌ரி‌ந்தா‌ல் தா‌ன் அது ரக‌சிய‌ம். இ‌ன்னு‌ம் ஒருவரு‌க்கு அது தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டாலு‌ம் அது செ‌ய்‌திதா‌ன். எனவே, ‌நீ‌ங்க‌ள் ரக‌சியமாக வை‌த்‌திரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌விரு‌ம்பு‌ம் ஒரு ‌விஷ‌ய‌த்தை முத‌லி‌ல் ‌நீ‌ங்க‌ள் ர‌க‌சியமாக வை‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டியது உ‌ங்க‌ள் கடமையா‌கிறது.


காத‌லி‌க்க‌த் துவ‌ங்‌கிய ‌சில கால‌த்‌திலேயே ‌சில‌ர் புகை‌ப்பட‌ம் எடு‌த்து‌க் கொ‌ள்வது, காத‌ல் கடித‌ம் கொடு‌ப்பது போ‌ன்றவ‌ற்றை‌த் த‌வி‌ர்‌க்க வே‌ண்டு‌ம். ந‌ண்ப‌ர்களாக இரு‌ப்‌பி‌ன் ந‌ண்ப‌‌ர்க‌ளி‌ன் கூ‌ட்ட‌த்‌துட‌ன் புகை‌ப்பட‌ம் எடு‌க்கலா‌ம், ஒரு ஆணு‌ம், பெ‌‌ண்ணு‌ம் த‌னியாக புகை‌ப்பட‌ம் எடு‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டா‌ம், காதல‌ர்களாக இரு‌ப்‌பினு‌ம் இதனை‌த் த‌வி‌ர்‌ப்பது எ‌தி‌ர்கால‌த்‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பிர‌‌ச்‌சினையை‌த் த‌வி‌ர்‌க்கு‌ம்.


காத‌ல் வசன‌ங்க‌ள் அட‌ங்‌கிய வா‌ழ்‌த்து அ‌ட்டைகளாக இரு‌‌ப்‌பி‌ன் வெறு‌ம் இ‌னிஷ‌ிய‌ல்களை ம‌ட்டு‌ம் போ‌ட்டு‌க் கொடு‌க்கலா‌ம். காத‌ல் கடித‌ங்க‌ள் த‌வி‌ர்‌க்க‌ப்படலா‌ம். அ‌ன்பை வெ‌ளி‌க்கா‌ட்ட ஆதார‌மி‌ல்லாத பல ப‌ரிசு‌ப் பொரு‌ட்க‌ள் உ‌ள்ளன. அவ‌ற்றை வா‌ங்‌கி அ‌ளி‌க்கலா‌ம்.


தா‌ங்க‌ள் பய‌ன்படு‌த்து‌ம் ‌மி‌ன்ன‌ஞ்ச‌ல் முகவ‌ரி‌யி‌ன் கடவு‌ச் சொ‌ல்லை (பா‌ஸ்வே‌ர்‌ட்) ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்வது‌ம், வ‌ங்‌கி ஏடிஎ‌ம் கா‌ர்டி‌ன் கடவு எ‌ண்ணை ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்வது‌ம் கூட ‌பிர‌ச்‌சினை‌யி‌ல் முடிய‌க் கூடு‌ம்.


எனவே, காத‌லி‌க்க‌த் துவ‌ங்‌கியது‌ம் இருவரு‌ம் ஒரு எ‌ல்லை‌க்கு‌ள் இரு‌ப்பது இருவரு‌க்குமே ந‌ல்லது. அது ஆணாக இரு‌ந்தாலு‌ம் ச‌ரி, பெ‌ண்ணாக இரு‌ந்தாலு‌ம் ச‌ரி. ஒருவரை ஒருவ‌ர் ந‌ன்கு பு‌ரி‌ந்து கொ‌ண்ட ‌பி‌ன்ன‌ர்தா‌ன் காதல‌ர்களு‌க்கான அ‌ங்‌கீகார‌த்தை‌ வழ‌ங்க வே‌ண்டு‌ம் எ‌ன்ப‌தி‌ல் தெ‌ளிவாக இரு‌ங்க‌ள்.


நா‌ம் எ‌த்தனையோ செ‌ய்‌திகளை ‌தினமு‌ம் நா‌ளித‌ழ்க‌ளிலு‌ம், இணைய தள‌ங்க‌ள் மூலமாகவு‌ம் படி‌க்‌கி‌ன்றோ‌ம். கே‌ட்‌கி‌ன்றோ‌ம். அதுபோ‌ன்ற அச‌ம்பா‌வித‌ங்க‌ள் ந‌ம் வா‌ழ்‌க்கை‌யிலு‌ம் நட‌க்காம‌ல் இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பத‌ற்காக‌த்தா‌ன் இ‌‌ந்த எ‌ச்ச‌ரி‌க்கை ப‌ட்டிய‌ல்.

மனைவியின் மனதை கவர்வது எப்படி...?

டிப்ஸ் -1:

மனைவி தான் பேசும் போது கணவன் அதை முழுமனதோடு கவனிக்க வேண்டும் என எதிர் பார்க்கிறாள். அதனால் பேப்பர் அல்லது புக் படித்துக்கொண்டோ, டி.வி பார்த்துகொண்டோ உங்களிடம் பேசிக்கொண்டிருக்கும் மனைவிக்கு வெறும் ' உம் ' 'உம் ' என்று வேண்டாவெறுப்பாக பதிலளிக்காமல்,அவள் பேசுவது ' உப்பு சப்பில்லாத டப்பா ' மேட்டராக இருந்தாலும் அவள் முகம் பார்த்து கவனியுங்கள். 'உம்' கொட்டுவதோடு மட்டும் அல்லாமல், " ஓ! அப்படியா", " ஆஹா! இப்படியா?" என்று உரையாடலில் பங்கு பெறுங்கள். உங்களின்


இந்த ஈடுபாடு உங்கள் மனைவியை உற்சாகமடைய செய்யும். உங்கள் மனைவின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள், மனைவி பெரிதும் எதிர்பார்க்கும் அங்கீகாரம் இது.


டிப்ஸ் -2:

தமிழ் சினிமாவில் காண்பிப்பது போல் ' அல்வாவும், ஒரு முழம் பூவும்' வாங்கி கொடுத்தால் மனைவி நாய் குட்டியாக உங்களை வலம் வருவாள் என
எதிர்பார்க்காதிருங்கள். பெண்களுக்கு 'பூ' பிடிக்கும்தான், அதை வாங்கி
கொடுப்பது உங்கள் கடமை. பூ கொடுத்து 'ஐஸ்' வைக்கும் காலம் மலையேறி விட்டது.


மனைவிக்கு அவர்கள் விரும்பும் பொருளை [உதாரனம்-: புடவை, நகை, அலங்கார பொருட்கள்......] கணவன் தன் மனைவிக்கு எந்த முன்னறிவிப்பும் இன்றி ' சர்பரைஸ்' ஆக கொடுத்தால் பூரித்து போவார்கள். மனைவியின் மனதை கொள்ளையடிக்க இது ஒரு முக்கியமான யுக்தி!!!


கணவன் தன்னை சர்பரைஸ் டின்னருக்கு ரெஸ்டாரன்ட் அழைத்துச் செல்வதை
வீட்டிலிருக்கும் மனைவி பெரிதும் எதிர்பார்க்கிறாள்.வேலைக்கு செல்லும்
மனைவி தன் வீட்டு வேலைகளில் சிறு சிறு உதவிகளை கணவன் செய்யும் போது அவன்
மீது இன்னும் அதிக ஈர்ப்பும் அன்பும் கொள்கிறாள்.


டிப்ஸ் -3:

பெண்களுக்கு புகழ்ச்சி , பாராட்டு இரண்டும் மிகவும் பிடிக்கும். அதிலும் முக்கியமாக அவர்கள் உடை அலங்காரம், அழகு போன்றவற்றை ரசித்து கணவன் பாராட்டினால் திக்கு
முக்காடி மெய்மறந்து போய் விடுவார்கள்.[ செயற்கைதனமாக , மற்றும் ஒப்புக்காக வர்னிப்பது, பாராட்டுவது போன்றவற்றை மனைவி விரும்புவதில்லை, அதை எளிதில் கண்டும் பிடித்து விடுவார்கள்........ஜாக்கிரதை]அதனால் மனைவியை மனதார பாராட்டுங்கள், ரசித்து வர்னியுங்கள்.

ஒரு டயமண்ட் நெக்லஸ் தர முடியாத சந்தோஷத்தையும் நிறைவையும் உங்கள் அன்பான வார்த்தைகள் உங்கள் மனைவிக்கு கொடுத்துவிடும்!!


டிப்ஸ் -4:

 மனைவியை குறை கூறுவதை நிறுத்துங்கள், முக்கியமாக குழந்தைகள் முன், மற்ற குடும்பத்தினர் முன்,நண்பர்கள் முன் குறை கூறுவதை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள். குறை கூறுதல் ஒரு மனைவியின் மன நிலையை பெரிதும் பாதிக்கும். உங்கள் மீதுள்ள
நேசம் குறைந்து கடமைக்காக சேவை செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.அதற்காக மனைவியை எப்போழுதும் புகழ்ந்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்று அர்த்தம் அல்ல.உதாரனமாக, உங்கள் மனைவியின் சமையலில் காரம் அதிகம், உப்பு இல்லை என்றால், முதலில் " சாப்பாடு ரொம்ப
நல்லாயிருக்குதுமா, ஆனா உப்பு கொஞ்சம் போட்டா இன்னும் டேஸ்டா இருக்கும்" என நாசூக்காக கூறுங்கள், கப்பென்று புரிந்து கொள்வார்கள், தன் தவறையும் திருத்தி கொண்டு இன்னும் அதிக சுவையுடன் சமைக்க முனைவார்கள்.உங்களுக்காக பார்த்து பார்த்து சமைக்கும் மனைவியின் மனம் நோகாமல் குறைகளை எடுத்துச்சொல்வது ஒன்றும் பெரிய விஷயமில்லையே!!!


டிப்ஸ் -5:

பெண்களுக்கு பொதுவாக தன் பிறந்த வீட்டின் மேல் பிடிப்பு ஜாஸ்த்தியாக இருக்கும். அதனால் உங்கள் மனைவியிடம் அவர்கள் பிறந்த வீட்டினரை பற்றி குறை கூறாதிருங்கள்.தன் பிறந்த வீட்டினரை தன் கணவன் நக்கல் செய்வது, அவமானபடுத்துவது போன்றவை ஒரு பெண்ணின் உணர்வுகளை காயபடுத்தி உங்கள் மணவாழ்க்கையில் விரிசலை உண்டுபண்ணும். உங்கள் மீது உங்கள் மனைவிக்கு இருக்கும் மரியாதை குறையவும், பழிவாங்கும் உணர்ச்சியாக உங்கள் பெற்றோர் மீது வெறுப்படையவும் செய்யும்.


டிப்ஸ் -6:

உங்கள் மணநாள், மனைவியின் பிறந்த நாள் போன்ற முக்கியமான தினங்களை ஞாபத்தில் வைத்துக்கொள்ள முயற்ச்சியுங்கள். மனைவியின் பிறந்த நாளன்று அவர் விரும்பும் இடத்திற்கு அழைத்துக் செல்லலாம், பரிசு பொருட்களை வாங்கி கொடுக்கலாம். அது ஒரு
விலையுர்ந்த பரிசாக தான் இருக்க வேண்டுமென்பதில்லை.மனைவியை கடைக்கு அழைத்துச் சென்று,"எனக்கு கார்ட்[வாழ்த்து அட்டை] செலக்ட் பண்ண தெரியாது, பரிசு வாங்க தெரியாது
,அதனால உனக்கு பிடித்ததை வாங்கிக்கோ, நான் உனக்கு பரிசாக கொடுத்ததாக நினைச்சுக்கோ"ன்னு கடமைக்காக பரிசு கொடுக்கிறேன் பேர்விழி என்று டுபாக்கூர் வேலையெல்லாம் செய்ய கூடாது.

காலத்தை வென்று பிரகாசியுங்கள்!

                                          காலத்தை வென்று பிரகாசியுங்கள்

ஒரு துறையில் நீங்கள் சில ஆராய்ச்சிகள் செய்கிறீர்கள். உங்கள் நீண்ட கால ஆராய்ச்சிக்குப் பின் சில விஷயங்களைக் கண்டுபிடிக்கிறீர்கள். அதை உலகுக்கு அறிவிக்க நினைக்கிறீர்கள். அந்த அறிவிப்பு விழாவுக்குஅந்தத் துறையில் உச்சாணிக் கொம்பில் உள்ள அறிஞரை அழைக்கிறீர்கள். அவர் உங்களுடைய ஆதர்ச புருஷரும் கூட. நீங்கள் மிகுந்த சிரத்தையுடன் உங்கள் கண்டுபிடிப்புகளைப் பற்றிச் சொல்கிறீர்கள். சொல்லி முடித்த பின் உங்கள் ஆதர்ச புருஷரின் கருத்துக்காகக் காத்திருக்கிறீர்கள். உங்கள் கண்டுபிடிப்புகளை உலகப்புகழ் பெற்ற அவர் "வடிகட்டிய முட்டாள்தனம்" என்று வர்ணிக்கிறார். பத்திரிக்கையாளர் கூட்டத்தில் முட்டாள்தனம் என்று தான் சொன்னதற்கான காரணங்களைப் புட்டு புட்டு வைக்கிறார்.


உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? உங்கள் தன்னம்பிக்கை எந்த அளவில் நிற்கும்? அந்தத் துறையில் தொடந்து இருப்பீர்களா இல்லை அதற்கு முழுக்குப் போட்டு விடுவீர்களா?


இப்படி ஒருவர் வாழ்வில் உண்மையாகவே நடந்தது. அவர் சந்திரசேகர் என்ற வானியல் விஞ்ஞானி. அவர் உலகப்புகழ் பெற்ற வானியல் அறிஞர் ஆர்தர் எட்டிங்டன் என்பவரின் எழுத்துக்களால் உந்தப்பட்டு நட்சத்திரங்களை ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தார். தன் 24ம் வயதிற்கு முன்பே (1935ல்) நீண்ட ஆராய்ச்சிக்கு பின் தன் கண்டுபிடிப்புகளை வெளியிட முடிவு செய்தார். அவர் ஆர்தர் எட்டிங்டனுக்கும், மற்ற வானியல் அறிஞர்களுக்கும், அறிவியல் பத்திரிக்கைகளுக்கும் அழைப்பு விடுத்து அவர்கள் முன்னிலையில் தன் கண்டுபிடிப்புகளை மிகுந்த ஆர்வத்தோடு வெளியிட்டார்.


ஆனால் யாருடைய எழுத்துக்களால் கவரப்பட்டு அவர் அந்தத்துறையில் ஆராய்ச்சி நடத்தினாரோ, அந்த எட்டிங்டனே இவருடைய நட்சத்திர ஆராய்ச்சியின் முடிவுகளை முட்டாள்தனம் என்று வர்ணித்தார். இவர் கூறியது போல நட்சத்திரங்கள் இயங்குவதில்லை என்று கூறிய அவர் அதற்கான விளக்கங்களையும் அளித்தார். அந்தத்துறையில் ஒரு மேதையான அவரே அப்படிக் கூறியதால், சந்திரசேகர் கருத்துக்களில் உடன்பாடு இருந்த மற்ற அறிஞர்கள் வாயையே திறக்கவில்லை.


சந்திரசேகர் பின்னாளில் அந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்த போது கூறினார். "அவர் என்னை அந்தக் கூட்டத்தில் முட்டாளாக்கி விட்டார். எனக்கு அது ஒரு பெரிய தலைகுனிவாக இருந்தது. அந்தத்துறையில் ஆராய்ச்சிகளை முற்றிலுமாகக் கைவிட்டு விடுவது பற்றி கூட யோசித்தேன்."


தோல்வியும் மனத்தளர்வும் எல்லோருக்கும் சகஜம் என்றாலும் வெற்றியாளர்களுடைய சோர்வும், மனத்தளர்வும் மிகக்குறுகிய காலமே அவர்களிடம் காணப்படுகின்றன. அவர்கள் மிக வேகமாக அதிலிருந்து மீண்டு விடுகிறார்கள். இந்த விஷயத்தில் தான் தோல்வியாளர்கள் முக்கியமாக வித்தியாசப்படுகிறார்கள். இவர்கள் அந்த நிராகரிப்பை ஏற்றுக் கொண்டு பின் வாங்கி விடுகிறார்கள். பின் அந்தப்பக்கம் தலை வைத்தும் படுப்பதில்லை.


அமெரிக்க இந்தியரான சந்திரசேகரும் அந்த கசப்பான அனுபவத்திலிருந்து விரைவாகவே மீண்டு தன் ஆராய்ச்சிகளை அந்தத் துறையில் தொடர்ந்தார். சந்திரசேகருடைய எந்தக் கண்டுபிடிப்புகளை எட்டிங்டன் முட்டாள்தனம் என்று வர்ணித்தாரோ அதற்கு 48 வருடங்கள் கழித்து 1983ல் நோபல் பரிசு கிடைத்தது. வானியல் துறையில் ஒரு வரையறைக்கு "Chandrasekhar's Limit" என்ற பெயர் சூட்டப்பட்டது.


அவர் ஒரு வேளை பின் வாங்கியிருந்தால், தன் கண்டுபிடிப்புகளை தீயிலிட்டுக் கொளுத்தி விரக்தியுடன் அந்தத் துறையிலிருந்து விலகியிருந்தால் என்னவாயிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். எத்தனை பெரிய அறிஞரானாலும் சரி அவருடைய கருத்து எல்லா சமயங்களிலும் சரியாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. இதை ஒவ்வொருவரும் மனதில் வைத்துக் கொள்வது நல்லது.


சந்திரசேகருக்குத் தூண்டுகோலாய் இருந்தது அந்தத் துறையில் இருந்த இயல்பாகவே இருந்த அதீத ஆர்வம் தான். வெற்றி தோல்விகளைப் பொருட்படுத்தாது ஒன்றில் தொடர்ந்து சாதிக்க வேண்டுமானால் அந்த ஆர்வம் உண்மையானதாக இருக்க வேண்டும். அப்படி இருந்து, போராட்டங்களுக்குப் பிறகு வெற்றியைப் பெற்ற நல்ல உள்ளங்கள் என்றும் அந்தத் துறையில் வளர்ந்து வரும் இளைய சமுதாயத்திற்கு வழிகாட்டியாகவும், அக்கறையுடன் உதவுபவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதற்கு சந்திரசேகர் ஒரு நல்ல உதாரணம்.


அவர் விஸ்கான்சின் நகரில் உள்ள யெர்க்ஸ் வானிலை ஆராய்ச்சிக் கூடத்தில் பணியாற்றி வந்தார். அப்போது சிகாகோ பல்கலைக்கழகத்தில் வானியல் துறையைக் கற்பிக்கும் பகுதி நேரப் பேராசிரியராகவும் பணி புரிந்தார். வாரம் இரண்டு நாள் வகுப்பு. விஸ்கான்சினிலிருந்து 80 கி.மீ தனது காரில் பயணம் செய்து பாடம் நடத்தினார். கடும் குளிர்காலத்தில் சாலைகளில் எல்லாம் பனிக்கட்டிகள் உறைந்திருக்கும் என்பதால் காரை ஓட்டிச் செல்ல மிகுந்த சிரமப்பட்டார் அவர். ஆனாலும் விடாமல் உற்சாகமாகச் சென்று அவர் பாடம் நடத்தியது எத்தனை பேருக்குத் தெரியுமா? வகுப்பறையில் இருந்த இரண்டே பேருக்குத் தான்.


அவருடைய சிரமத்தைப் புரிந்து கொண்ட சிகாகோ பல்கலைக்கழக நிர்வாகிகள் "இரு மாணவர்களுக்காக இந்தக் கடும்பனியில் 160 கி.மீ பயணம் செய்து நீங்கள் வரவேண்டியதில்லை. எங்கள் பல்கலைகழக விதிகளின் படி ஏதாவது பாடத்தில் நான்கு மாணவர்களுக்குக் குறைவாக இருந்தால் அந்தப் பேராசிரியர் வகுப்பு எடுக்க வேண்டியதில்லை" என்று சொன்னார்கள்.


ஆனால் அதற்கு சந்திரசேகர், "ஆர்வத்தோடு படிக்க வரும் இந்த இரு மாணவர்களை ஏமாற்ற விரும்பவில்லை" என்று கூறி தொடர்ந்து ஒரு வகுப்பு கூட தவறாமல் அந்தக் கோர்ஸின் காலமான ஆறு மாதங்களும் பாடம் எடுத்தார். அவருடைய முயற்சியின் பல என்ன தெரியுமா? Chen Ning Yang, Tsaung-Dao Lee என்ற அந்த இரு மாணவர்களும் கூட பின்னாளில் நோபல் பரிசு பெற்று அவருடைய முயற்சிக்குப் பெருமை சேர்த்தார்கள்.


சந்திரசேகரை அந்தக் கடும்பனிப் பாதை பெரியதாகப் பாதிக்கவில்லை என்பதற்குக் காரணமே அவர் அதை விடக் கடுமையான வாழ்க்கைப் பாதைகளைக் கடந்து வந்திருக்கிறார் என்பதே. இளம் வயதில் எட்டிங்டன் கருத்தால் தன்னுடைய ஆர்வத்தை இழந்து விடாமல் காத்துக் கொண்ட அந்த மேதை அதே ஆர்வம் கொண்ட அந்த மாணவர்களுக்கும் அது குறைந்து விடக்கூடாது என்று கொட்டும் பனியில், உறைபனிப் பாதையில் சென்று பாடம் நடத்தினாரே அது இன்னும் பெருமைக்குரிய காரியம் அல்லவா?


உண்மையில் ஒரு துறையில் பேரார்வம் உங்களுக்கு இருக்குமானால் நீங்கள் அதில் ஏதோ சாதித்துப் பிரகாசிக்க முடியும் என்று அர்த்தம். மற்றவர்கள் உங்கள் ஒளியை மறைத்து விட முடியாது. உங்கள் பேரார்வமும், அது தூண்டும் உழைப்புமாகச் சேர்ந்து உங்களைத் தீபமாகப் பிரகாசிக்க வைக்கும். அப்படித் தீபமாகப் பிரகாசிப்பது பெருமைக்கும், பாராட்டுக்கும் உரிய விஷயம் தான். ஆனால் நீங்கள் அணையும் முன் பல தீபங்கள் ஏற்ற உதவியாக இருந்தால் உங்கள் ஜோதி நீங்கள் அணைந்த பின்னும் பல தீபங்களாக ஒளிவீசிக் கொண்டேயிருக்கும். நீங்கள் காலத்தை வென்று பிரகாசித்துக் கொண்டிருக்க முடியும்.


பிரகாசிப்பீர்களா?

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top