.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday 7 December 2013

பெர்முடா முக்கோணம் - "மர்மங்கள்"




நிலவுல போய் பிளாட் வாங்கறேன்னு கிளம்பற அளவுக்கு இப்போ டெக்னாலஜி முன்னேறி இருந்தாலும்..சில விசயங்கள் இன்னும் புரியாத புதிராகவே இருக்கு.. அதுல பெர்முடா முக்கோணமும் ஒன்னு..


வட அட்லாண்டிக் கடலோட மேற்குப் பகுதியில் இருக்கற ஒரு குறிப்பிட்ட பரப்பை பெர்முடா முக்கோணம்னு சொல்றாங்க.. பஹாமாஸ், புளோரிடா நீரிணைப்பு மற்றும் கரீபியன் தீவுகள் முழுவதுமே இந்தப் பரப்புக்குள்ள அடங்குது.. அப்புறம் இன்னும் சில பகுதிகளும் இந்தப் முக்கோணத்துக்குள்ள வரும்னு சொல்றாங்க..


இந்தப் பகுதியில நிறைய கப்பல்களும் விமானங்களும் காணமப் போயிட்டதாக சொல்லப்படுது.. இந்த மர்மத்தை பற்றி முதன்முதலாக 1950 ஆண்டு ஒரு ஆர்டிகல் வெளியாகியிருக்கு.. அப்புறம் இரண்டு வருசம் கழிச்சு இந்த விசயம் பற்றி இரண்டாவது ஆர்டிகல் வெளியாச்சு.. பிளைட் 19 ரக விமானங்கள் ஐந்து.. அந்தப் பகுதியில பயிற்சி எடுத்துட்டு இருந்தப்போ காணாமப் போயிட்டதாகவும்.. அந்த விமானங்கள்ல இருந்த ஒரு கேப்டன்.. "நாங்க இப்போ வெள்ளைக் கலர்ல இருக்கற தண்ணிக்குள்ள போயிட்டிருக்கோம்.. இல்ல... இல்ல.. இந்தத் தண்ணி பச்சையா இருக்கு.. அப்படின்னு சொன்னதா ரெக்கார்ட் ஆயிருக்குன்னு சொல்றாங்க.. அந்த விமானங்களோட திசைகாட்டியும் தாறுமாறா அப்போ வேலை செய்திருக்கு.. அவங்களைத் தேடிக்கிட்டு ஒரு குரூப் இன்னோரு விமானத்துல போக அந்த விமானத்தையும் காணோம்.. இந்த விசயத்தை விசாரணை பண்ணின அதிகாரிகள்.. விமானங்கள் எல்லாம் செவ்வாய் கிரகத்துக்கு பறந்து போயிடுச்சு சொன்னதாகவும் கூறப்பட்டிருக்கு..


அப்புறமென்ன.. இந்த இடத்தைப் பற்றி ஆவி, புதம், பேய், ஏலியன்ஸ்ன்னு நிறையக் கட்டுக்கதைகள்..


உண்மையில.. கடல் பகுதியில ஏற்பட்ட பல விபத்துகள்.. பெர்முடா பகுதியில நடந்ததாக திரிச்சு சொல்லியிருக்காங்கன்னும் அதுக்கான நிறைய விளக்கங்களையும் பல ஆராய்ச்சியாளர்கள் சொல்லியிருக்காங்க.. பல விசயங்கள் நடக்காமயே நடந்ததாகவும் கதை கட்டியிருக்காங்க.. உதாரணத்துக்கு.. 1937 ஆம் ஆண்டு புளோரிடா கடற்கரைப் பகுதியில் ஒரு பிளைட் விபத்துக்குள்ளானதை நிறையப் பேரு பார்த்ததாக சொல்லப்படுது.. ஆனால் லோக்கல் நியூஸ் பேப்பர்ல அந்த விபத்து பற்றின எந்த நியூஸுமே வெளியாகல..


இந்தப் பகுதிக்குள்ள நுழையற எந்த பொருளுமே காணமப்போகல.. அங்கேயே வேற வடிவத்துல இருக்குன்னும்.. எல்லாப் பொருட்களுமே ஒரு அணுவாக மாறி காற்றோட கலந்துடுதுன்னும் ஏகப்பட்ட கெஸ்ஸிங்..


விஞ்ஞான ரீதியாகவும் இந்த விசயத்துக்கு பல விளக்கங்களைக் கொடுத்திருக்காங்க..


மீத்தேன் ஹைட்ராய்டு அப்படிங்கற ஒரு இயற்கை எரிவாயு.. நீரோட அடர்த்தியைக் கம்மி பண்ணி.. கப்பல் தண்ணியில மிதக்க முடியாம மூழ்கடிக்கும்னு ஆஸ்திரேலியாவுல நடத்தப்பட்ட சோதனைகள்ல சொல்லியிருக்காங்க.. ஆனால் பெர்முடா பகுதியில மீத்தேன் ஹைட்ராய்டோட எந்த தாக்கமும் எப்போதும் இருந்திருக்கல..


கடல்ல உண்டாகற பயங்கர சூறாவளிகள் காரணமாக இருந்திருக்காலாம்னு சொல்லப்படுது..


சுனாமி அலைகள் மாதிரி இராட்சச அலைகள் உருவாகி.. கப்பல்களையும், விமானங்களையும் மூழ்கடிச்சிருக்கலாம்னும் சொல்றாங்க..


பெர்முடாப் பகுதியோட ஏதாவது மையப்பகுதியில.. ஈர்ப்புவிசை ரொம்ப அதிகமாக இருந்து.. எல்லாப் பொருட்களையும் உள்ளே ஈர்த்துக்குன்னும் ஒரு கெஸ்ஸிங்..


கடற்கொள்ளையர்கள் மேலயும் டவுட்டு இருந்திருக்கு.. ஆனால் அவங்க எப்படி விமானத்தைக் கொள்ளையடிப்பாங்க..


பெர்முடா முக்கோணத்தின் குறிப்பிடத்தக்க சம்பவங்கள்னு சொல்லனும்னா..


1. பிளைட் 19 காணாமப்போனதும்.. அந்த விமானங்களைத் தேடி மீட்பு பணிக்காகப் போன 13 பேர் கொண்ட குழுவும் காணாமல் போனது.. இந்த விசயத்துக்காக கொடுக்கப்பட்ட விளக்கங்கள் துல்லியமான உண்மைகளாகத் தெரியல..


2. மேரி செலஸ்டின்னு ஒரு கப்பல் 1872 ஆம் ஆண்டு மர்மமான முறையில் துலைஞ்சு போயிருக்கு.. பெர்முடா முக்கோணம்தான் இதுக்கு காரணம்னு சொல்லப்பட்டிருக்கு.. இதே பேர்ல இருந்த ஒரு கப்பல் 1860கள்ல மூழ்கிப் போனதை இந்தக் கப்பலோட இணைச்சு குழம்பியிருக்கலாம்னும் சொல்றாங்க..


3. 1881 ஆம் ஆண்டு எலன் ஆஸ்டின்னு ஒருத்தர்.. ஒரு கப்பல் கடல்ல அநாதையாக வர்றதைப் பார்த்திருக்கார்.. மீட்புப் பணியாட்களை அனுப்பி.. அந்தக் கப்பலையும் சேர்த்து நியூயார்க் ஓட்டிட்டு வந்துடலாம்னு அவர் எண்ணம்.. ஆனால்.. அந்தக் கப்பல் மீண்டும் பணியாட்களோட காணாமப் போனதாக சொல்லப்படுது..


இப்படி ஒரு பெரிய லிஸ்டே இருக்கு.. இது போதும்.. ..



பெர்முடா முக்கோணம் பற்றின தேடுதல்ல.. இன்னொரு விசயமும் தெரிஞ்சுக்க முடிஞ்சது.. ஜப்பான் பக்கத்துல ட்ராகன் ட்ரையாங்கில்னு இன்னொரு இடமும்.. சேம் பீஸ்தானாம்.. அந்தப் பகுதிகுள்ள நுழையற எந்த ஆப்ஜெக்டும் திரும்பறதில்லையாம்..

தினமும் தயிர் சாப்பிடுவது நல்லதா? யாரெல்லாம் சேர்த்துக்கொள்ளக் கூடாது?



புரதம், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி 12, ரிபோஃப்ளோவின் எனப்படும் வைட்டமின் பி2, கொழுப்புச் சத்து எனப் பல சத்துகள் தயிரில் உண்டு. 100 மி.லி தயிரில் 60 கலோரி கிடைக்கிறது.


ஒல்லியாக இருப்பவர்கள், நுரையீரலில் பிரச்னை உள்ளவர்கள் நிச்சயம் தயிர் சாப்பிட வேண்டும். மசாலா அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகள் செரிமானமாக நேரம் எடுத்துக்கொள்ளும் உணவுகள், பிரியாணி போன்ற உணவைச் சாப்பிடும்போது தயிர் அல்லது மோர் சாப்பிட்டால் நல்லது. ஏனெனில், இவை உணவு செரிக்கத் தேவையான பாக்ட்டீரியாக்களை உருவாக்குகின்றன.


அதனால்தான் தமிழர்கள் தங்கள் உணவில் கடைசியாக தயிர் அல்லது மோர் சேர்த்துக் கொள்கின்றனர். எடை அதிகரிக்க விரும்புபவர்கள், தயிரில் சர்க்கரை கலந்து லஸ்ஸி போல் சாப்பிடலாம்.


ஆனால், இரவில் தயிர் சேர்த்துக்கொண்டால், உடனடியாகத் தூங்க செல்லாமல், 10 நிமிடம் நடைப் பயிற்சி செய்தபின்னர்தான் படுக்கைக்குச் செல்லவேண்டும். உடல் பருமன் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் அதிக அளவு தயிர் சேர்த்துக்கொள்ளக் கூடாது

நகைச்சுவை!

ஒரு பெண் தொலைபேசியில் : “சார்… என் குழந்தைகளில் ஒருவனுக்கு 

நீங்கள் தந்தை என்பதால் நான் உங்களைச் சந்தித்துப் பேச 

விரும்புகிறேன்…”



இவன் : “ஓ மை காட்! .. ரம்யா ?”


அவள் : “இல்லை”


இவன் : “கீதா ?”


அவள் : “இல்லை”


இவன் : “உமா ?”


அவள் (குழம்பிப் போய்): “இல்லை… சார்.. நான் உங்கள் பையனின் வகுப்பு 

ஆசிரியை...!!!

இதைப் படித்தால் பென்ஸ், BMW கார்களை நெனச்சிகூட பார்க்கமாட்டீங்க!



ஜெர்மன் நாட்டில் பெர்லின் நகரில் வசிக்கும் நண்பர் ஒருவர், சமீபத்தில் சென்னை வந்து இருந்தார். பெங்களூரு அவரது சொந்த ஊர். ஜெர்மனியில் குடியேறி 20 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. அங்கு, “பென்ஸ்’ மோட்டார் தொழிற்சாலையில், “பிட்டர்’ ஆக வேலை செய்கிறார். உடைந்த தமிழில் பேசுவார்.


பிட்டராக இருந்தாலும் விபவரமானவர்; பல சப்ஜெக்ட்களிலும் ஞானம் உள்ளவர். அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது, பல அரிய தகவல்கள் கிடைத்தன. அது: தம்பி… இப்போது இந்தியாவுலே பென்ஸ் கார் 45 லட்ச ரூபாய்க்கு கூட கிடைக்குது… ஆஹா ஜெர்மன் நாட்டு கார்ன்னு பணக்காரங்களும், பெரிய தொழில் அதிபர்களும் போட்டி போட்டுக்கிட்டு வாங்கறாங்க. இந்தக் கார்ல இருக்கிற பல முக்கியமான பாகங்கள், கியர் பாக்ஸ் உட்பட, இந்தியாவுலே, “டாட்டா’ கம்பெனியிலே செஞ்சு, ஜெர்மனிக்கு வருது… நாங்க, அதை அங்கே பூட்டி, பல நாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கிறோம்! இதுக்கு காரணம் என்ன தெரியுமா?


ஜெர்மனியிலே அந்த பாகங்களை உற்பத்தி செய்ய ஆகும் செலவில் கால்வாசி செலவு தான் ஆகிறது இந்தியாவில். நாங்கள், எங்களுக்குத் தேவையான டிசைன் மற்றும் மூலப் பொருட்களைக் கொடுத்து விடுகிறோம்… இங்கே லேபர், “சீப்!’ அது ஜெர்மானியர்களுக்கு பெரிய, “அட்வான்டேஜ்’ ஆகிப் போகிறது. இந்தியாவில் லேபர் எவ்வளவு, “சீப்’ என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன் கேட்டுக்க தம்பி…’ என்றவர், தம் சட்டைப் பையில் இருந்து, ஒரு காகிதத்தை எடுத்துப் படித்துக் காட்டினார்.


ஒரு ஜெர்மன் தொழிலாளிக்கு குடுக்கற சம்பளத்திலே இரண்டு அமெரிக்க தொழிலாளியை வேலைக்கு அமர்த்தலாம்… இல்லே, தைவான் நாட்டுத் தொழிலாளி ஐந்து பேரையோ, பிரேசில் நாட்டு தொழிலாளி எட்டுப் பேரையோ வேலைக்கு வைத்துக் கொள்ள முடியும்… ஆனா, இந்தியாவின் கதையோ அபாரம்… ஒரு ஜெர்மன் தொழிலாளியின் சம்பளத்தில் 128 இந்திய தொழிலாளிகளை வேலைக்கு வைத்துக் கொள்ளலாம்ன்னா பாரேன்…


இந்திய தொழிலாளியின் குறைந்தபட்ச சம்பளம் மணிக்கு 25 ரூபாய்ன்னா, ஜெர்மன் தொழிலாளியின் சம்பளம் மணிக்கு 1,150 ரூபாய்! அப்புறம் ஏன் ஜெர்மன் தொழில் அதிபர்கள், புதிய பொருளாதாரக் கொள்கை வந்த பின்னே இங்கே மூலதனத்தைக் கொட்டத் தயங்கப் போறாங்க! கடந்த, 20 ஆண்டுகளில், இந்தியாவில் பல தொழில்களில் முதலீடுகளை செய்துள்ளனர் ஜெர்மானியர்கள்…


ஆனால், இதில் சோகமான விஷயம் என்னவென்றால், சுற்றுப்புறச் சூழ்நிலைக்கும், உடல் நலத்திற்கும் கேடு விளைவிக்கக் கூடிய பாதுகாப்பு அம்சங்கள் குறைந்த, ஜெர்மன் சட்டப்படி அங்கு தடை செய்யப்பட்ட தொழில்கள் தான் இங்கு வந்துள்ளன,’ என்றார் அந்த நண்பர்.


புதிய பொருளாதாரக் கொள்கையின் மூலம் வெளிநாட்டு மூலதனத்தை இங்கே குவிப்பதை மட்டுமே அரசு கருத்தில் கொள்ளாமல், நம்நாடு குப்பைத் தொட்டிகளின் சங்கமமாகாமல் பார்த்துக் கொள்வதும் மிக, மிக அவசியம்.

திருமணப் பொருத்தங்கள்!

1) தினம்: பெண் நட்சத்திரம் முதல் பிள்ளை நட்சத்திரம் வரை எண்ணி அதை 9 ஆல் வகுத்து மிச்சம் 2, 4, 6, 8, 9 என வந்தால் தினப்பொருத்தம் உண்டு. மற்றவை வந்தால் பொருத்தம் இல்லை.


2) கணம்: ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் என்ன கணம் என பஞ்சாங்கத்தில் அறியலாம். ஆண், பெண் இருவருக்கும் ஒரே கணம் ஆனாலும், தேவ கணம், மனுஷ கணமானாலும் கணப் பொருத்தம் உண்டு. பெண் மனுஷ கணமும் பிள்ளை ராட்சஷ கணமானாலும் பொருத்தம் உண்டு.


3) மகேந்திரம்: பெண் நட்சத்திரம் முதல் பிள்ளை நட்சத்திரம் வரை எண்ணும்பொழுது 4, 7, 10, 13, 14, 19, 22, 25 என வந்தால் மகேந்திரப் பொருத்தம் உண்டு.


4) ஸ்திரீ தீர்க்கம்: பெண் நட்சத்திலிருந்து பிள்ளை நட்சத்திரம் 7க்கு மேல் இருந்தால் ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் உண்டு.


5) யோனி: நட்சத்திரங்களுக்குரிய விலங்குகள் பஞ்சாங்கத்தில் உள்ளன. பகை விலங்குகளின் விளக்கம் கீழே உள்ளது.


குதிரை - எருமை, யானை - சிங்கம், ஆடு - குரங்கு, பாம்பு - எலி, பசு - புலி, எலி - பூனை, கீரி - பாம்பு, மான் - நாய், ஆண் - பெண் நட்சத்திரங்களின் விலங்குகள் பகையாக இல்லாமல் இருந்தால் யோனிப் பொருத்தம் உண்டு.


6) ராசி: பெண் பிள்ளை இருவருக்கும் ஒரே ராசியாக இருந்தாலும் பெண்ணிற்கு பிள்ளை ராசி 7, 9, 10, 11. 12 இருந்தாலும் ராசிப் பொருத்தம் உண்டு.


7) ராசி அதிபதி: பெண் ராசிக்கு அதிபதி பிள்ளை ராசி அதிபதிக்கு நட்பு அல்லது சமமாக இருந்தால் ராசி அதிபதி பொருத்தம் உண்டு.


8) வசியம்: பெண் ராசிக்கு பிள்ளை ராசி வசியமாக இருந்தால் வசியப் பொருத்தம் உண்டு. வசிய ராசிகளில் விளக்கம் பஞ்சாங்கத்தில் காணலாம்.


9) ரஜ்ஜு (மாங்கல்யம்): நட்சத்திரங்களுக்கு உண்டான ரஜ்ஜுக்கள் பஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. பெண் ரஜ்ஜுவும் பிள்ளை ரஜ்ஜுவும் ஒன்றாக இல்லாமல் இருந்தால் ரஜ்ஜு அல்லது மாங்கல்யப் பொருத்தமுண்டு.


10) நாடி: 27 நட்சத்திரங்களும் மூன்று பிரிவுகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன.


|) அஸ்வினி, திருவாதிரை புனர்பூசம், உத்திரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி.


||) பரணி, மிருகசிரிடம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி.


|||) கிர்த்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி.


பெண், ஆண் நட்சத்திரங்கள் ஒரே பிரிவில் இல்லாமல் வெவ்வேறு பிரிவில் இருந்தால் நாடிப் பொருத்தம் உண்டு.


எனவே மொத்தம் 10 பொருத்தங்களில் 6-க்கு மேல் இருந்தால் திருமணப் பொருத்தம் உண்டு. எனினும் கீழே கொடுத்துள்ள பொது விதிகளையும் கவனிக்க வேண்டும்.


1) ரஜ்ஜு அல்லது மாங்கல்யப் பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யக்கூடாது.


2) தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜு - இந்த ஐந்தும் முக்கியமானப் பொருத்தங்கள்.


3) பெண், பிள்ளை இருவரும் ஒரே ராசியாக இருந்தால் 10 பொருத்தங்களும் உண்டு.


4) பெண், பிள்ளை இருவருக்கும் ஒரே நட்சத்திரமாக இருந்து பரணி, ஆயில்யம், சுவாதி, கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், பூரட்டாதி ஆக இல்லாமல் இருந்தால் 10 பொருத்தங்களும் உண்டு.


இவற்றுடன் செவ்வாய் தோஷம் சமமாக இருப்பின் திருமணம் செய்யலாம்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top