.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday 3 December 2013

வேகமான சிந்தனை - குட்டிக்கதைகள்!


ஓய்வுக்காக காட்டுக்குச் சென்றபோது தனது செல்ல நாயையும் அழைத்துப் போனார் ஒரு அரசர். அவர் வேட்டையில் மும்முரமாக இருக்க, அங்குமிங்குமாக பாய்ந்துபாய்ந்து காட்டின் வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்திக் கொண்டிருந்தது நாய். பல நிமிடங்களுக்குப் பிறகுதான் தான் வழியைத் தவறவிட்டுவிட்டதை உணர்ந்தது.


அப்போது சற்று தூரத்தில் புலி ஒன்று வருவதைக் கண்டது நாய். அது தன்னை வேட்டையாடத்தான் வருகிறது என்பதையும் உணர்ந்தது. தப்பிப்பது எப்படி என்று எண்ணியபோது எதிரில் சில எலும்புத் துண்டுகளைக் கண்டது. சட்டென ஒரு காரியம் செய்தது அந்த நாய் . புலிக்கு முதுகு காட்டியவண்ணம் எலும்புத் துண்டுகளின் முன் அமர்ந்தது.


புலி அருகில் வந்தவுடன் "ஆஹா...புலியின் மாமிசம் எவ்வளவு சுவை! இன்னும் ஒரு புலி கிடைத்தால் நன்றாக இருக்குமே" என்றது நாக்கைச் சுழற்றியபடியே


அதனைக் கேட்ட புலிக்குக் கிலி பிடித்து, 'நல்ல வேளை இந்த மிருகத்திடமிருந்து தப்பினோம்' என்றெண்ணி மெதுவாகப் பதுங்கிப் பின்வாங்கியது.


இந்த சம்பவத்தை மரத்தின் மேலமர்ந்து கவனித்துக் கொண்டிருந்த குரங்கு ஒன்று, நாயைக் காட்டிக் கொடுப்பதன் மூலம் புலியிடமிருந்து தனக்குப் பாதுகாப்பு தேடிக் கொள்ளலாம் என்றெண்ணி, புலி சென்ற திசையை நோக்கி விரைந்தது. அதனைப் பார்த்த நாய் ஏதோ விவகாரம் எனப் புரிந்து கொண்டதோடு இனி புலியிடமிருந்து ஓடித் தப்பமுடியாது என்பதையும் உணர்ந்து கொண்டது.


குரங்கு புலியிடம் நாயின் தந்திரத்தைக் கூறியதும் கோபம் கொண்ட புலி, "என்னுடன் வந்து அந்த நாய் என்ன பாடு படுகிறது என்பதைப் பார்" என்று உறுமிவிட்டு குரங்கினைத் தன் முதுகில் ஏற்றிக் கொண்டு நாய் இருந்த இடம் நோக்கி விரைந்தது.


குரங்கும் புலியும் சேர்ந்து வருவதைக் கண்ட நாய், பழைய இடத்தில் அமர்ந்த படியே அவற்றைப் பார்க்காதது போல பாசாங்கு செய்து "இன்னொரு புலியைக் கொண்டு வருவதாகச் சொன்ன குரங்கை இன்னும் காணோமே!" என்றது சத்தமாக...


பின் என்ன நடந்திருக்கும் என்று சொல்லத் தேவை இல்லையே...


- வேகமான சிந்தனை வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம் என்பதனை விளக்கும் '

கையால் மலம் அள்ளுவது சரியா..?


இது ஒரு "மனிதத் தன்மையற்ற செயல்" என்று ஐ.நா. சபை கூட அறிவித்துள்ளது. இந்திய அரசாலும் இப்படிப்பட்ட உலர் கழிவறைகளை (கையால் மலம் அல்லும் கழிவறை) 1993ல் தடை செய்யப்பட்டது. ஆனால் நடந்தது என்ன..?

இந்தியாவில் இன்னமும் 7 லட்சம் உலர் கழிவறைகள் இருக்கிறது. ஏன் தமிழ்நாட்டில் மட்டும் 53,000 கழிவறைகள் இருக்கிறது.

இதில் இன்னொரு கவலைப்பட வேண்டிய விஷயம் என்றால், இதை வைத்தே நம் நாட்டில் இந்த சாதியைச் சேர்ந்தவன் இந்த தொழிலைத்தான் செய்ய வேண்டும் என்ற கொடுமை, இன்றைய தினங்களில் கூட எந்த அளவிற்கு ஊடுருவி இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்.

என்னவென்றால், ஐ.எல்.ஓ அமைப்பின் ஆய்வு ஒன்று கூறுகிறது : கையால் மலம் அள்ளும் பெண் தொழிலாளிகளில் 96 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்கள்.

இப்படிப்பட்ட 7 லட்சம் உலர் கழிவறைகளில் எத்தனை பேர் வேலை செய்கிறார்கள் தெரியுமா..? இப்படிப்பட்ட மனித தன்மையற்ற தொழிலில் யார் வேலை செய்வார்.? என்று எண்ணிவிட வேண்டாம்.

இந்திய அளவில் 1,18,474 பேர் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் 11,896 பேர்.

கொடுமையிலும் கொடுமை என்னவென்றால், 7 லட்சம் கழிவறைகளில் 1.18 லட்சம் வேலை செய்கிறார்கள் என்றால், ஒவ்வொரு தொழிலாளியும் தலா 5 முதல் 8 கழிவறைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்பது தானே உண்மை.

இப்படிப்பட்ட தொழிலார்களுள் பலர் நோய் தாக்கியோ அல்லது நச்சு வாயு தாக்கும் விபத்திலோ இறந்து விடுகிறார்கள்.

அப்படி மலம் அள்ளி வேலை செய்துதான் பிழைக்க வேண்டுமா.? என்று அவர்கள் இருந்துவிட முடியாது.

ஏனென்றால் அவர்களைப், பற்றி இருப்பது வறுமை என்னும் கொடிய நோய். நம் நாட்டை முதலாளி வர்க்கத்திற்கு தாரை வார்த்ததின் விளைவு, வறுமை அவர்களை துடிக்க துடிக்க கொன்றுவிடுகிறது.

இதைப் பற்றி எந்த ஊடகங்களோ பெரிதாக இவர்கள் படும் கஷ்டங்களை வெளியிடவில்லை என்பது வருத்தமாக உள்ளது.

காவல்துறையினரிடம் ஆவணம் இன்றி சிக்கினால் இனி ஒரு எஸ்எம்எஸ் போதும்!

காவல்துறையினரிடம் ஆவணம் இன்றி சிக்கும்போது எஸ்எம்எஸ் மூலம் இனி இன்சூரன்ஸ் பற்றிய முழு தகவலையும் பெறலாம்.


எல்லா வாகனங்களுக்கும் இன்சூரன்ஸ் மிக அவசியம். சில சமயங்களில் சர்வீஸ் விடும்போது, வண்டியை கழுவும்போது, ஜெராக்ஸ் எடுக்க மறந்துவிடும்போது வாகனங்களில் இன்சூரன்ஸ் பேப்பரை மீண்டும் எடுத்து வைக்க மறந்துவிடுகிறோம். இதுபோன்ற சமயங்களில் சாலைகளில் போக்குவரத்து காவல்துறையினரிடம் சிக்கினால், தர்மசங்கடமான நிலை ஏற்படும்.


இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம் (ஐஆர்டிஏ) அதிரடி திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதுகுறித்து அதன் வாகனங்கள் காப்பீடு பிரிவு உறுப்பினர் ராம்பிரசாத் கூறியதாவது:-


வாகனத்துக்கு காப்பீடு செய்துள்ளவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய ஆரம்பித்துள்ளோம். இதன் மூலம், வாகன எண்ணுடன் எங்களின் குறிப்பிட்ட எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினால், அதன் காப்பீடு பற்றிய விவரம் முழுமையாக அனுப்பி வைக்கப்படும். இது சட்டப்பூர்வமானது என்பதால், காவல்துறையினரிடம் அதை காண்பிக்க முடியும்.


மேலும், விபத்து சமயங்களில் சம்பந்தப்பட்ட வண்டியின் எண் மட்டும் தெரிந்திருந்தால் போதும், அதன் மூலம் அதன் உரிமையாளர் பெயர், விவரம் ஆகியவற்றை இதே எஸ்எம்எஸ் மூலம் தெரியவரும்.


காவல்துறையினருக்கும் இத்திட்டம் மிக உதவியாக இருக்கும். விரைவில் இத்திட்டம் அமலுக்கு வர உள்ளது என்றார்.

யார் புத்திசாலி! ! ! !


ஒரு நாள் கார் டிரைவர் தன் வண்டியை எடுத்து கொண்டு வேலைக்கு கிளம்பினார். சிறிது தூரம் சென்றதும் அவர் கார் டயர் பஞ்சர் ஆகிவிட்டது.

அவர் வண்டி பஞ்சர் ஆன இடம் ஒரு மனநல மருத்துவமனை அருகில்,சுற்றும் முற்றும் ஏதாவது மெக்கானிக் கடை இருக்கிறதா என்று பார்த்தார்.எதுவும் இல்லாததால் அவரே கழட்டி ஸ்டெப்னி மாத்தலாம் என்று முடிவெடுத்து போல்ட்டை கழட்ட ஆரம்பித்தார்.

4 போல்ட்டையும் கழட்டி வைத்துவிட்டு ஸ்டெப்னி எடுத்து வர சென்றார்.ஸ்டெப்னி எடுத்து வரும்போது அவர் கால் இடறி 4 போல்ட்டில் பட்டதால் அருகில் இருந்த கால்வாயில் விழுந்துவிட்டது .

எப்படி எடுக்கலாம் என்று யோசித்து கொண்டு இருந்தார்.அப்போது ஏதாவது பிரச்சனையா டிரைவர் என்று ஒருவர் கேட்டார்.அவரை பார்த்த டிரைவர் மனநல மருத்துவமனியின் நோயாளி இவர்,எப்படியாவது இவரை சாக்கடையில் இறக்கி போல்ட்டை எடுத்துவிடவேண்டும் என்று முடிவெடுத்து நடந்த கதையை அவரிடம் கூறினார்.

உடனே அந்த நபர் மற்ற மூன்று சக்கரங்களில் இருந்து தலா ஒரு போல்ட் கழட்டி இந்த சக்கரத்தை மாட்டி, அருகில் உள்ள மெக்கானிக்கடையில் 4 போல்ட்டுகள் வாங்கி எல்லா சக்கரத்திலும் மாட்டி கொள் என்று சொன்னார்.
இவ்வளவு தெளிவா இருக்கறீங்க நீங்க எப்படி இந்த மருத்துவமையில் என்று கேட்டார்.

இந்த மருத்துவமனையில் இருக்கிற எல்லாரும் முட்டாளும் இல்லை வெளியில் சுத்தற எல்லாரும் புத்திசாலியும் இல்லை என்றார்.

எப்பவுமே ஒருவன் தோற்றத்தை வைத்து எதையும் முடிவு செய்யாதீர்கள்...

பொருட்களை டெலிவரி செய்ய அமேசான் தளத்தின் புதிய தொழில்நுட்பம்!

 


ஒன்லைன் மூலமாக பல்வேறு பொருட்களை விற்பனை செய்துவரும்


பிரபலமான  நிறுவனங்களில் ஒன்றான அமேசான் ஆனது தற்போது புதிய



யுக்தி ஒன்றினை கையாள  முற்பட்டுள்ளது.


இதன்படி கொள்வனவு செய்யப்படும் பொருட்களை குறித்த
 

வாடிக்கையாளருக்கு டெலிவரி  செய்வதற்காக ஒக்டோ கொப்பர் (Octocopter)


எனும் சாதனத்தினை பயன்படுத்தவுள்ளது.



இச்சாதனமானது 8 விசிறிகளைக் கொண்டுள்ளதுடன்


 60 நிமிடங்களிற்கு தொடர்ச்சியாக பறக்கக்கூடியது.


இதனால் இந்த பறப்பு எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்களிலேயே அமேசான்


தனது புதிய  சேவையை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top