.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday 1 December 2013

உலகின் நீளமான பைக் சேல்ஸுற்க்காக இநதியா வருகிறது!

 

உலகின் மிக நீளமான ‘பைக்’ வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு, விற்பனைக்காக விரைவில் இந்தியா வர உள்ளது. இந்த பைக்கில் பயணம் செய்வது என்பது காற்றில் கலந்து போகும் உணர்வை தர வல்லது. அத்துடன் கவர்ச்சிகரமான விசாலமான தோற்றத்துடன் உள்ள இந்த பைக்கை ஜெர்மனியில் உள்ள ஒரு நிறுவனம் தயாரித்துள்ளது.

பார்ப்போரை அசர வைக்கும் இந்த பைக் 11 அடி நீளமுள்ளது; அதிலும் சாதாரண பைக்கை விட ஐந்து மடங்கு அதிகமாக கிட்டத்தட்ட 650 கிலோ எடையைக் கொண்டுள்ளது; இதை ஓட்டுவதற்காக சிறப்புப் பயிற்சியுடன் விசேஷ லைசென்ஸ் பெற வேண்டும்.

அதிலும் இதுவரை எந்த பைக் தயாரிப்பு நிறுவனமும் பயன்படுத்தாத மிகப் பெரிய 6,728 சி.சி., திறன் கொண்ட ‘தம்தார்’ இன்ஜின் இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் மூன்று டிரான்ஸ்மிஷன் கருவிகளும், மூன்று கியர்களும் உள்ள .இந்த பைக்கின் முன் சக்கரத்தில் 38 அங்குல டயரும், பின் சக்கரத்தில் 42 அங்குல டயரும் பொருத்தப்பட்டுள்ளன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இந்த பைக்கைதான் விரைவில் விற்பனைக்காக இந்தியாவிற்கு கொண்டு வர உள்ளதாக அதன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பேஸ்புக், ட்விட்டர் மூலம் சதி + வதந்தீ = ஐடி கம்பெனிகளின் தில்லு முல்லு அம்பலம்!

 

குறிப்பிட்ட அரசியல் தலைவருக்கு அமோக ஆதரவு இருப்பதாக காட்ட வேண்டுமா? அதற்கு ஒரு விலை.

*எதிராக உள்ள தலைவரின் செல்வாக்கை ஒன்றுமில்லாமல் செய்ய வேண்டுமா? இதற்கு இரு மடங்கு விலை.

*குறிப்பிட்ட தொகுதியில் யாருக்கும் ஓட்டு விழக்கூடாது என்று தடுக்க வேண்டுமா? சில லட்சம் ஆகும்.

*தேவைப்பட்டால் வாக்காளர்களை பீதியடைய செய்ய வதந்திகளை கிளப்ப வேண்டுமா? இதற்கு செலவு கோடியை எட்டும்.
nov 30 edit obra_post
 *உயர் அதிகாரி மீது குற்றச்சாட்டுக்களை எழுப்பி அவரை பதவியில் இருந்து தூக்க வேண்டுமா? சில லட்சம் ஆகும். இப்படி எதை வேண்டுமானாலும் செய்ய பேஸ்புக், ட்விட்டர் மற்றும் யுடியூப் வலைதளங்களை பயன்படுத்தி போலியாக செயற்கையாக மோசடித்தனமாக கருத்துக்களை பரப்புவது, வீடியோக்களை வெளியிடுவது என்பது ஒரு பிசினசாகவே நடக்கிறது. இப்படி அவதூறுகளை, வதந்திகளை பரப்பியும், ‘லைக்’ மற்றும் எதிரான கருத்துக்களை லட்சக்கணக்கில் வெளியிட்டும் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தவே சில ஐடி கம்பெனிகள் உள்ளன. இவர்களால் போலியாக லட்சக்கணக்கில் வெறும் ‘லைக்’ போடுவது மட்டுமல்ல, எதிரான கருத்துகளை வெளியிடுவது மட்டுமல்ல, குறிப்பிட்ட பகுதிகளில் பதற்றம் ஏற்படுத்தவும், குறிப்பிட்ட அரசியல் கட்சி, தலைவருக்கு செல்வாக்கை அழிக்கவும் முடியும். இதை ஒரு பிசினசாகவே இந்தியாவில் செய்வது யார் தெரியுமா? ஏதோ தாதாக்கள், மாபியாக்கள் என்று எண்ணி விட வேண்டாம். சில ஐடி கம்பெனிகள் தான். இந்த பெரும் சதி பிசினசை கோப்ரா போஸ்ட் என்ற புலனாய்வு வெப்சைட் அம்பலப்படுத்தியுள்ளது.

கோப்ரா போஸ்ட் என்ற புலனாய்வு வெப்சைட் ஏற்கனவே பல மோசடிகள், தவறுகளை அம்பலப்படுத்தியுள்ளது இது. டெல்லியில் ஆரம்பித்து பெங்களூர் வரை 24 ஐடி கம்பெனிகளை கண்டுபிடித்து அவர்களின் இந்த கேவலமான ‘சதி’ பிசினசை இந்த வெப்சைட் அம்பலப்படுத்தியுள்ளது. இதற்காக கோப்ரா போஸ்ட் வெப்சைட்டின் இணை ஆசிரியர் சையது மஸ்ரூர் அசன் என்பவர் தான் இந்த மோசடி ஐடி கம்பெனிகளை அணுகி பேசியுள்ளார்.

‘என் பாஸ் நேதாஜி வரும் சட்டசபை தேர்தலில் நிற்க வேண்டும். அதற்கு அதிக ‘லைக்’ போட வேண்டும். அவர் வெற்றி பெற்றபின் லோக்சபா தேர்தலில் நிற்க வேண்டும். அதன் பின் அமைச்சராக வேண்டும். இதற்கு என்ன செலவானாலும் பரவாயில்லை. பேஸ்புக், ட்விட்டர், யுடியூப் என்று அனைத்திலும் கருத்துக்களை பரப்ப வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார். இதை எல்லா கம்பெனிகளும் நம்பி பேரம் பேசியுள்ளன. இந்த கம்பெனிகளின் பெயர்களுடன் அவர்களுடன் நடத்திய பேரத்தை வெப்சைட் அம்பலப்படுத்தியுள்ளது.

இதையடுத்து கோப்ரா போஸ்ட் வெளியிட்ட தகவல்கள் குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே, ஐடி நிறுவனங்கள் இப்படி நடந்து கொள்வது பற்றி வெப்சைட் வெளியிட்ட தகவல்கள் உண்மை தான் என்பது போல குறிப்பிட்டார். ‘சமீபத்தில் உளவுத்துறை கூட்டத்தில் கூட நான் இதுபற்றி குறிப்பிட்டேன். எனது கவலை இப்போது நிரூபணமாகி விட்டது. இன்னும் தகவல்கள் முழுமையாக வரட்டும். உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்ரு தெரிவித்தார்.

சைனா Vs ஜப்பான் : பெரியண்ணன் அமெரிக்காவின் அத்து மீறல்.!

 

நாமெல்லாம் அடிக்கடி சொல்வோமே?- ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் அதை நினைவூட்டும் வகையில் நெடு நாள் பிரச்சினையான கிழக்கு சைனா ஸீயில் உள்ள ஒரு தீவு. இதை சைனா “டையாயூ” எனவும் ஜப்பான் “செனாக்கூ என பெயரிட்டு அழைத்து வருகிறது.இதற்கிடையில் பல நாளாக இது யாருக்கு சொந்தம் என்ற வகையில் போட்டி இருந்தது.

நவம்பர் 23 ஆம் தேதி சைனா இந்த பிரதேசத்தையும் சேர்த்து தன்னுடைய வான் எல்லை சைனா ஏர் டிஃபன்ஸ் ஐடென்ட்டிஃபிக்கேஷன் ஜோன் என்று அறிவித்த போது தான் பிரச்சினை எழுந்தது ஜப்பானுக்கு. அது மட்டுமல்ல பெட்ரோலுக்கு சைனா போர் விமானங்களை பறக்க செய்ய நேற்று ஆள் இல்லாத அமெரிக்க பி 52 பாம்பர் விமானங்களும் 10 ஜப்பான் ஏர் ஃபோர்ஸ் விமானங்களும் அங்கு பறந்து அமெரிக்கா நான் ஜப்பான் நண்பனாக்கும் என பறைசாற்ற கொஞ்சம் நேரத்தில் சைனா அத்தனை விமானங்களையும் விமான தடங்களையும் ஸ்கிராம்பிள் செய்து விட்டது. இதையொட்டி மெல்ல பற்றி கொண்டது ஒரு பதட்டம்.

“Air Defense Identification Zone” – ADIZ என்றால் என்ன? – தன் நாட்டை விட்டு அதன் அருகாமையில் உள்ள ஒரு இடத்தை கிளேய்ம் செய்யும் நாடுகள் – அமெரிக்கா ஜப்பான் போன்றவை ஏடிஸ் வைத்துள்ளன். இந்த வான் பறப்பில் பறக்கும் விமானங்கள் தங்களை ஏர் ஜோனுக்கு செல்லும் முன் – பறக்கும் போதும் தன்னை அடையாளப்படுத்தி கொள்ள வேண்டும் என்பது ஏடிஸின் விதிமுறை.

இந்த வகையில் ஜப்பான் செனாக்கூ தீவை ஏடிஸ் என அடையாளம் காட்ட வெகு நாள் பிரச்சினையாக கொண்ட இந்த தீவை சைனாவும் தன் பங்குக்கு இது சைனீஸ் ஏடிஸ் என அறிவிக்க இரண்டு நாட்டினரும் கிழக்கு சைனா ஸீயில் தன் புஜத்தை உயர்த்தி காட்டிய சமயத்தில்தான் அமெரிக்கா தன் பங்கிற்கு ஜப்பானுக்கு ஆதரவாக 4 விமானங்களை அனுப்ப சைனா இதை ஸ்கிராம்பிள் செய்ததுதான பெரும் பரபரப்புக்குண்டான விஷயம்.

அதே சமயம் சைனா கொஞ்சம் நாளைக்கும் முன்புதான் Yellow Sea எனப்படும் மஞ்சள் கடலில் கொரியாவுடன் உரன்டையை இழுத்த விவகாரம் உங்களும் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. அதாவது சவூத் கொரியாவில் இருந்து 149 கிலோமீட்டரில் மற்றூம் சைனாவில் இருந்து 287 கிலோமீட்டரில் உள்ள ஒரு ரீஃபின் பெயர் “லீடோ”. கொரியர்கள் ஏற்கனவே அங்கு கடலின ஆராய்ச்சி செய்து வருவது அனைவருக்கு தெரிந்த ஒன்று, அங்கும் சைனா திடீரென்று இதை ஏடிஸ் வட்டத்துக்குள் கொண்ட வந்த போதும் அப்ஸெட்டானது சௌத் கொரியா மட்டுமல்ல – அமெரிக்காவும் தான்.

இத்தனைக்கும் உலகின் முக்கியமாக ஏசியாவின் அதிக பண வளம் கொண்ட ஜப்பான் / சைனா / தாய்வான் / சவுத் கொரியா – மற்றூம் சைனாவின் தலை நகரமான பெய்ஜிங் இதன் அருகாமயில் இருப்பதால் சைனா கொஞ்சம் ஓவராய் உணர்ச்சிவசப்படுகிறது.

மேலும சைனா இதை 1440 முதல் தனக்கு சொந்தம் என சில டாக்குமென்ட்களை வைக்க ஜப்பானோ 1885 ஆம் ஆன்டு சர்வே செய்த போது இதில் இருந்தவர்கள் வெறும் ஜப்பானியரே. அதனால் ஜப்பான் 1895 ஆம் ஆண்டு இதை அங்கு வாழும் மக்களுகென இதை விற்று இதை ஜப்பானின் ஒரு பகுதியாக அறிவிக்கபட்டது. 1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் சரண் அடைந்த போது இந்த தீவு அமெரிக்கா கைவசம் வந்தது. 1972 ஆம் ஆண்டு அமெரிக்கா ஜப்பானின் அத்தனை இடத்தையும் ஜப்பானிடமே ஒப்படைத்த போது இந்த தீவும் ஜப்பானுக்கே சொந்தமானது.

அப்போது சைனா இதில் எங்களுக்கு பங்குண்டு என கேட்க 1978 ஒரு ஒப்பந்தம் சைனாவும் ஜப்பானும் இதை அப்புறம் பார்த்து கொள்ளலாம் இதை வைத்து நாம் சண்டை செய்ய வேண்டாம் என கையெழுத்திட்ட பிறகு அமைதியாக இருந்த சைனா போன வருடம் ஜப்பான் அதன் அருகே இருக்கும் தீவுகளை வாங்கி அரசுடமைபடுத்திகிறது என்ற விஷயம் கசிய அதில் செனாக்கூவும் உண்டு என தகவல் பரவ சைனாவில் கலவரம் வெடித்து அரசு இந்த ஜோனை ஏடிஸ் ஆக்கியது தான் ஆதியும் அந்தமும்.

இதில் கச்சா எண்ணெய் / தாது பொருட்கள் மற்றும் மீன் பிடிப்புக்காக தான் இந்த சண்டை மற்றும் நேர் தாக்குதல் சைனாவின் பெய்ஜிங்கிற்க்கு உண்டு..என்பதை தனியாக சொல்ல வேண்டுமா என்ன?

அது சரி!ஜெட் ஸ்க்ராம்பிளீங் என்றால் என்ன? – அதாவது ஒரு நாட்டின் வான் எல்லைக்குள் வரும் விமாங்கள் இரண்டு வகைப்படும். கமர்ஷியல் விமானங்கள் – இது மனிதர்கள் பயணிக்கின்ற விமானங்கள்…இவ்வகை விமானங்கள் அனுமதி பெற்ற வான் எல்லைக்குள் தான் பறக்கும். இதன்படி மலேஷிய விமானங்கள் , ஈரான் விமாங்கள் இஸ்ரேல் எல்லையில் பறக்காது அந்த மாதிரி நிறைய விமானகள் நிறைய நாடுகளை அவாய்ட் செய்யும்.

மற்றது விமானப்படையை சேர்ந்தது. இது கூட்டு பயிற்ச்சி படை மற்று அறிவிக்க்பட்ட எல்லை கடந்து போகும் விஷயத்தை முன் கூட்டியே அறிவித்தால் அந்த் அந்த நாடு அதற்கு அனுமதி அளித்தி ரேடாரில் தென்படும்போது ஒன்றும் செய்யாது. அறிவிக்கபடாத விமாங்கள் அது கமர்ஷியல் அல்லது ராணுவ அல்லது ஆளில்லா விமானங்கள் வந்தால் உடனே ரேடார் உஷார் படுத்தும்.உடனே அந்த நாட்டு போர் விமானங்கள் ங்கள் விமானத்தை ரவுன்ட் செய்து உங்களை வலுகட்டாயமாக அவர்களின் வான் எல்லையில் இருந்து தள்ளும் அல்லது பாம் செய்து விடுவார்கள், இப்படி ஸ்கிராம்பிளிங் செய்திருந்தால் 9/11 அமெரிக்க இரட்டை கோபுரம் தப்பியிருக்கும் – உலகில் அதிகம் ஸ்கிராம்பிளிங் செய்யபடும் ஜோன் அலாஸ்காவில் அடிக்கடி ரஷிய விமானங்கள் நுழைய அதை அமெரிக்கா விரட்டியடிக்கும் ரெகுலர் ஒன்று

அரசு மருத்துவமனைகளில் இயற்கை வழி சிகிச்சை மையம்!

 


தற்போதைய அவசர உலகில் மன அழுத்தத்தின் காரணமாகவே பல்வேறு விதமான நோய்கள் வருகின்றன. இந்த மன அழுத்தத்தை போக்கவும், மன அழுத்தம் வராமல் தடுக்கவும் யோகா கலை உள்ளிட்ட இயற்கை சார்ந்த வாழ்க்கைத் தர சிகிச்சை மையம் தேவைப்படுகிறது.இதை உணர்ந்த முதல்வர் ஜெயலலிதா அண்மையில் தமிழ்நாடு சட்டசபை விதி 110ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில் ரூ.9 கோடியே 60 லட்சம் செலவில் அனைத்து மருத்துவக்கல்லூரிகளிலும், அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் யோகா மற்றும் இயற்கை சார்ந்த வாழ்க்கைத்தர சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

அதன்படி 18 மருத்துவ கல்லூரிகளிலும் ஒரு உதவி மருத்துவர் உள்ளிட்ட 4 பதவிகள் உருவாக்கப்பட்டு்ள்ளன. இந்த மையத்தில் நோயாளிகள் அறை, யோகா அறை அமைக்கப்படும். இங்கு நீர்வழிசிகிச்சை, மண் வழிசிகிச்சை, காந்த சிகிச்சை, கலர் சிகிச்சை அக்குபஞ்சர் உள்ளிட்ட பல சிகிச்சைகள் வழங்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு அதிகாரி ஒருவர்,”’’காந்தியடிகள் ஆங்கில மருத்துவத்தைவிட இயற்கையின் அடிப்படையிலே நமக்கு நாமே வைத்தியராக நம்முடைய நோய்களை குணமாக்க முடியும் என்பதைக் கடைப்பிடித்தார்.அந்த அடிப்படையில் தமிழகத்தில் அமைக்கபட்ம் இந்த மையங்களில் ஒவ்வொரு நோய்களுக்கும் பலவீனத்திற்கும் ஏற்ப உணவுமுறை ஆலோசனை,நீராவி குளியல்,முதுகு தண்டுவட குளியல்,மூலிகை மண்சிகிச்சை, எண்ணெய் மசாஜ், யோகா, அக்குபிரஷர் போன்ற சிகிச்சைகள் அளிக்கபடும்.

அத்துடன் உடல் பருமன், மூட்டுவலி, முதுகுவலி நீரழிவு, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், ஆஸ்துமா, ரத்தக்கொதிப்பு, மற்றும் மாதவிடாய் கோளாறுகள் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் மன அழுத்தம், தூக்கமின்மை, மனச்சோர்வு ஆகியவற்றால் பாதிக்கப்படுவோருக்கு தேவையான மசாஜ், நீராவி குளியல், முதுகு தண்டுவடக்குளியல், மற்றும் தோல் ஆரோக்கியமாக – பளபளப்பாக இருக்க நீராவி குளியல், முகத்தில் மசாஜ் மற்றும் மண்சி கிச்சை அளிக்கப்படுகிறது. பாதங்களுக்கும் பாதுகாப்பான சிகிச்சை முறைப்படி அளிக்கப்படுகிறது.” என்று தெரிவித்தார்.

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கெட்ட ரத்தத்தைக் குடிக்க அட்டைப் பூச்சி!


என் வயது 35. கடந்த பத்து வருடங்களாக முழங்கால் வலியால் அவதிப்படுகிறேன். எவ்வளவோ சிகிச்சைகள் எடுத்தும் பயன் இல்லை. உள்ளங்காலில் எரிச்சலும், குடைச்சலும் வேறு இருக்கிறது. இதனால் நான் மனதளவில் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறேன். தூக்கமின்மையாலும் தவிக்கிறேன். இதற்கு ஆயுர்வேத மருத்துவம் உள்ளதா?

உள்ளங்கால் எரிச்சல் என்பது சூடு எனும் குணத்தைக் கொண்ட பித்த தோஷத்தின் சீற்றம், ரத்தத்தில் கலப்பதால் ஏற்படக் கூடும். இந்தக் கலப்பினால் ரத்தம் கெட்டுவிடக் கூடும். அவரைக்காய், நீர் வாழ் பிராணிகளின் மாமிசம், கொள்ளு, புளிப்பான மதுபானம், மோர், தயிர், உணவில் அதிக காரம், புளி, உப்பு ஆகியவற்றின் சேர்க்கை, சாப்பாட்டிற்குப் பிறகு பகலில் படுத்து உறங்குவது, குடையும் காலில் செருப்பில்லாமலும் கடும் வெயிலில் அலைந்து திரிவது போன்ற செய்கைகளாலும், அவ்வாறு அலைந்துவிட்டு உடனே குளிர்பானங்களைக் குடிப்பது ஆகியவற்றால் ரத்தத்தில் பித்த சீற்றம் கூடி எரிச்சலை உண்டாக்குகிறது.

பேருந்தில் நின்று கொண்டே பயணம் செய்வது, இரு சக்கர வாகனத்தில் குண்டும் குழியுமாக உள்ள பாதைகளில் பயணம் செய்வது, குளிர்ச்சியான நீரில் நீந்துவது, குளிப்பது, கால்களால் அதிகம் மிதித்து தையல் மிஷினில் வேலை செய்வது போன்றவற்றால் இடுப்பிற்குக் கீழே வாயுவின் சஞ்சார விசேஷம் கூடுகிறது.

ஆனால், தமனிகளில் சஞ்சரிக்கும் கேடுற்ற ரத்தத்தினால் வாயுவின் ஓட்டத்திற்குத் தடை ஏற்படுகிறது. அதன் கதி முடக்கம், மூட்டுகளில் வலியும், உள்ளங்கால் எரிச்சலுக்கும் காரணமாகின்றன.

இதற்கு வாத ரத்தம் என்று ஆயுர்வேதம் பெயரிட்டுள்ளது. முதலில் சருமம், மாம்ஸம் ஆகிய தாதுக்களில் தங்கி உண்டாகும் வாத ரத்தம், உத்தானம் அதாவது வெளிப்படையானது எனப்படும். பிறகு எல்லாத் தாதுக்களிலும் பரவும். இந்த நிலைக்குக் கம்பீரம் அதாவது ஆழ்ந்தது எனப் பெயர்.

இந்நோயில் கெட்டுள்ள ரத்தத்தை வெளியேற்ற வேண்டும். காலில் பெருவிரல் பகுதிக்கும் அதற்கு அடுத்துள்ள விரலுக்கும் நடுவே உள்ள பகுதிக்கு க்ஷிப்ர மர்மம் என்று பெயர். அதிலிருந்து 2 அங்குலம் மேலே அட்டைப் பூச்சியை வைத்து கடிக்கச் செய்தால், கெட்ட ரத்தத்தைக் குடித்துவிடும். உடலில் நெய்ப்புத் தரும் நெய் மஜ்ஜை முதலியவற்றைக் கொடுத்து எண்ணெய்ப் பசையை உருவாக்கிய பிறகு, மேற்குறிப்பிட்ட அட்டைப் பூச்சி வைத்தியம் சிறந்தது. கெட்ட ரத்தத்தை வெளியேற்றிய பிறகு, ஆயுர்வேத கஷாய மருந்துகளாகிய பலாகுடூதசச்யாதி, கோகிலாக்ஷம், ப்ருகத்யாதி, தசமூலம் போன்றவற்றில் உங்களுக்கு எது உகந்ததோ அதை ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடலாம்.

பிண்ட தைலம், மஞ்ஜிஷ்டாதி தைலம் போன்றவை மேல் பூச்சாக உபயோகிப்பது, ஆஸன வாய் வழியாக மலப்பையில் சேர்க்கப்படும் எண்ணெய் வஸ்தி, குடல் கழிவுகளை அகற்றும் கஷாய வஸ்தி, முட்டி வலியைப் போக்கும் ஜடாமயாதி, கொட்டம் சுக்காதி போன்ற மேல்பூச்சு பற்று மருந்துகள், மூலிகைத் தைலத்தைத் தாரையாக முட்டி மற்றும் பாதங்களில் ஊற்றுவது போன்ற சிறப்பான மருத்துவ முறைகளால் நீங்கள் விரைவில் குணம் பெறலாம்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top