.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday 27 November 2013

நாகரிகம், அநாகரிகம் ஆநாகரிகம்!

 

"நம் திரைப் படங்களிலும் தொலைக்காட்சியிலும், நகைச்சுவை என்ற பெயரில் பின்பக்கத்தில் உதைப்பது, கஷ்கத்தைச் சொறிவது, ஒருவர்மேல் ஒருவர் துப்பிக் கொள்வது போன்ற அநாகரிகமான காட்சிகள் இப்போது மலிந்து வருகின்றன. எமிலிபோஸ்ட் மாதிரி பொதுவாழ்வில் நாகரிக நடைமுறைக்கு வழிகாட்டிகள் தேவைப்படுகின்றன
பொது வாழ்வில் நடத்தையை நாகரிகம், அநாகரிகம், ஆநாகரிகம் என மூன்று வகையாகப் பிரித்துக் குறிப்பிட்டிருக்கிறார்


உதாரணம்: 1.பொது இடத்தில் மூக்கை, காதை, பல்லை நோண்டாமல் இருப்பது நாகரிகம். நோண்டுவது அநாகரிகம். நோண்டுவது மட்டுமின்றி, விளைவை உருட்டி ஆராய்வது ஆநாகரிகம்!

2.புருவம், காது, மூக்கு உரோமங்களைச் சீராக வெட்டி வைத்திருப்பது நாகரிகம். வெட்டாமல், காடாக வளர்ப்பது அநாகரிகம். அவற்றை நீளமாக வளர்த்து, சீப்புப் போட்டு வாரிப் பின்னுவது ஆநாகரிகம்.

3.என்னதான் ஜலதோஷமாக இருந்தா லும், பொது இடங்களில் தும்மாமல், சிந்தாமல் கைக்குட்டையில் Ôஸ்க்Õகுவது நாகரிகம். மூக்கில் புல்லாக்கு போல் தொங்கவிடுவது அநாகரிகம். ‘ஹளார்Õ என்று 120 டெஸிபலில் தும்மி, ஜெட் வேகத்தில் பக்கத்தில் இருப்பவர் சட்டையில் சொல்லாமல் துடைத்து விடுவது ஆநாகரிகம்.

4.ஹெர்னியா போன்ற ஆபரேஷன் பற்றிப் பேசாமல் இருப்பது நாகரிகம். ஆபரேஷன் தழும்பைக் காட்டுவது அநாகரிகம். ஆபரேஷனில் நீக்கிய பாகத்தை ஜாடியில் வைத்திருந்து காட்டுவது ஆநாகரிகம்.

5.சுத்தமான சட்டை அணிவது நாகரிகம். கைக்குக் கீழ் வியர்வைக் கறை தெரிய, சட்டை அணிவது அநாகரிகம். அந்த வியர்வையை மற்றவர் எதிரில் பிழிவது ஆநாகரிகம்.

6.ஆபீஸில்... தூங்காமல் இருப்பது நாகரிகம். குறட்டைவிட்டுத் தூங்குவது அநாகரிகம். குறட்டையுடன் ஜொள்ளு விடுவது ஆநாகரிகம்.

7.அடக்கி வைத் திருந்து, வீட்டுக்குப் போய் சிறுநீர் கழிப்பது நாகரிகம். தெருவில் சுவர்மேல் சிறுநீர் கழிப்பது அநாகரிகம். அதில் டிசைன் போடுவது ஆநாகரிகம்.


8.விருந்தில், சாப்பாட்டில் தலைமுடி இருந்தால், பார்க்காமல் நீக்குவது நாகரிகம். எல்லோரும் பார்க்க, அதை எடுத்துப் போடுவது அநாகரிகம். அந்த ரோமம் யாருடையது என்று பெண்களிடம் விசாரிப்பது ஆநாகரிகம்.

9.அடிபட்ட புண் தெரியாமல் உடை அணிவது நாகரிகம். அடிபட்ட புண்ணைக் காட்டுவது அநாகரிகம். அதை வரக் வரக்கென்று சொரிவது ஆநாகரிகம்.

10.சாப்பிடும்போது பேசாமல் இருப்பது நாகரிகம். வாய் நிறைய போண்டா சாப்பிட்டுக்கொண்டே பேசுவது அநாகரிகம். பாதி சாப்பிட்ட போண்டாவை எடுத்து, சற்று நேரம் கையில் வைத்துக்கொண்டு பேசுவது ஆநாகரிகம்.

இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருப்பது நாகரிகம். சுட்டிக்காட்டுவது அநாகரிகம். படம் போட்டுக் காட்டுவது ஆநாகரிகம்!

சொத்து ஆவணங்களில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளும், அவற்றின் விளக்கங்களும்!

 

சொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இருநபர்களுக்கு இடையிலா ன கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சி யின் முக்கிய  அளவுகோலாக பார்க்கப்படு ம் வகையில் முக்கியத்துவம் பெற்று விட்டது.
.
எனவேதான், இத்தகைய பரிமாற்றங் களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடு த்து வருகிறது. மன்னராட்சி காலத் தில் இருந்தே சொத்து  பரிமாற்றங்க ளை ஆவணத்படுத்துவது தொடர்பான பணிகள் நடை பெற்றுள்ளன.
.
கல்வெட்டுகள், செப்பு பட்டயங்கள், ஓலைச் சுவடிகள், காகிதங் கள் என, இதற்கு பயன்படுத்தப்பட்ட பொருள்களை போலவே இதற்கான மொழி வழக்குகளும் காலந்தோறும்  மாறிவந்துள்ளன. தொடர்ந்து மாறியும் வருகின்றன. இதற்கான சட்ட பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக 1864ம் ஆண் டு பதிவுத் துறை  ஏற்படுத்தப்பட்டது . 1899 ம் ஆண்டு இந்திய ஸ்டாம்ப் சட்டம் நிறை வேற்றப்பட்டது. இத னை  தொடர்ந்து பதிவு சட்டம் 1908ம் ஆண்டு நிறைவேற்ற ப்பட்டது. 
.
இதில் உள்ள குறைபடுகளை சரி செய்யும் வகையில், அடுத்த டுத்து பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு பத்திரப்பதிவு தொடர்பான பணிகள் முறைபடுத்தப் பட்டு வருகின்றன.
.
தமிழகம் முழுவதும் உள்ள 574 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு ஆண் டுக்கு சராசரியாக 1.5 கோடி பேர் வந்து செல்கின்றனர். இதன் மூலம் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 30 லட்சம்  ஆவணங்கள் பதிவுசெய்யபடுகின்றன. இவ்வாறு பதிவு செய்வதற்கு, ஆவண ங்களை எழுதுவது என்பதே ஒரு முக்கிய கட்டமாக உள்ளது. 30 ஆண்டு கள் முன்பு அனைத்து பிரிவு மக்களும் குறிப்பிட்ட சில பிரிவினரையே  சார்ந் திருந்தனர். அரசு அங்கீகாரம் பெற்ற ஆவண எழுத்தர்கள் வரவை அடுத்து, இதில் பல  மாற்றங்கள் ஏற்பட்டன. இதனால், ஆவணங் கள் எழுதும் முறையில் பல் வேறு மாற்றங்கள்  ஏற்பட் டுள்ளன.
.
பொதுவாக வீடு, மனை, வாங்கும் பலரும், அது தொடர்பான ஆவண ங்களை பிறரிடம் அளித்தே சரி பார்க்கின்றனர். ஆனால் இந்த ஆவணங்களை வாங்குபவரும்  விற்பவரும்  முழுமையாக படிக்க வேண்டும் என்பதே வல்லுனர் களின் ஆலோசனையாக உள்ளது. இத்தகைய ஆவணங்களை எழுதுவோர் வழக்கமாக பயன்படுத்தி வரும் வாசகங்களில்
.
இடம்பெறும் குறிப்பிட்ட சில வார்த் தைகள் இன்னமும் புரியாதவையாக வே உள் ளன.
.
இதில், ஆவணங்கள் அடிக்கடி பயன் படுத்தப்படும் பட்டா, சிட்டா, அடங்கல், கிராம நத்தம், கிராம தானம், தேவ தானம், இனா ம்தார், விஸ்தீரணம், ஷரத்து, இலாகா, கிரையம், வில்லங்க சான்று, புல எண், இறங்குரிமை, வாரிசுரிமை, தாய் பத்திரம், ஏற்றது ஆற்றுதல், அனு பவ பாத்தியதை, சுவாதீனம் ஒப்படைப்பு, ஜமாபந்தி, நன் செய் நிலம், புன்செய்நிலம், மற்றும் குத்தகை போன்ற வார்த்தைக ளும், அவற்றின் விளக்கங்களும் கீழே கொடுக்க‍ப்பட்டுள்ள‍து அவற்றை படித்து தெரிந்து தெளிந்து கொள்ளுங்கள்
.
பட்டா:

ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில்  வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ்.
 .
சிட்டா:

குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டு பாட்டில்  உள்ளது என்பது தொடர்பா ன விவரங்கள் அடங்கிய வருவாய் த்துறை ஆவணம்.

அடங்கல்:

நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத் தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில்  உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.
 
கிராம நத்தம்:


ஒவ்வொரு கிராமத்திலும் குடியி ருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப் பட்டுள்ள  நிலம்.
 .
கிராம தானம்:


கிராமத்தின் பொது பயன்பாட்டுக் காக நிலத்தை ஒதுக்குவது.
.
தேவதானம்:

கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக அளித் தல்.
 .

இனாம்தார்:


பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க பயன் படுத்தும் சொல்.
 .
விஸ்தீரணம்:

நிலத்தின் பரப்பளவு. எல்லைகளை குறிப்பது.
 .
ஷரத்து:

பிரிவு.
 .
இலாகா:

துறை.
 .
கிரையம்:

நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவண படுத்துதல்.
 .
வில்லங்க சான்று:

ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனைசெய்த அதன் உரிமையா ளர்,  அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்ப னை செய்வது மோசடி. இந்த விவரத்தை அறிந்து கொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.
.
புல எண்:

நில அளவை எண்.
 .
இறங்குரிமை:

வாரிசுரிமை.
 .

தாய்பத்திரம்:


ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதை ய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.

ஏற்றது ஆற்றுதல்:


குறித்தவகை பொறுப்பை நிறைவற்றுவதற்கு உறுதி அளித்தல்.
 .

அனுபவ பாத்தியதை:


நிலத்தை பயன்படுதிகொள்ளும் உரிமை.
 .
சுவாதீனம் ஒப்படைப்பு:

நிலத்தின் மீதான உரிமையை ஒப்ப டைத்தல்.
.
ஜமாபந்தி:

வருவாய் தீர்வாயம்.
 .

நன்செய்நிலம்:

அதிக பாசன வசதி கொண்டநிலம்.

புன்செய்நிலம்:


பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.
 .
 
குத்தகை:


ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது.
.
இந்த வார்த்தைகளின் பயன்பாடு இருந்து வருகிறது.

ஒரு சிகரெட் உங்களிடம் பேசுகிறது!

 

புகையிலைக்கு குட்பை ……

ஒரு சிகரெட் பேசுகிறது

வெளுத்த என் உடல் பார்க்க அழகுதான்,

ஆனால் என் உடல் முழுதும் விஷம்,

வெளியில் தெரியாத விஷ்ம்.

அணுஅணுவாக அழிப்பேன் உங்களை,

அதில் எனக்குத்தான் எத்தனை மகிழ்ச்சி,

நானும் ஒல்லி

என்னை நாடுபவனும் ஒல்லியாவான்,

என் நட்பைப் பெற.

நான் முதலில் இன்பத்தைக் கொடுத்து

ஏமாற்றுவேன்,

என் வசமாவான் அவன்.

நானில்லாமல் அவனில்லை

என்ற நிலை வந்ததும்

அவனை வதைக்க ஆரம்பிப்பேன்.

விட்டில் பூச்சி விளக்கில் விழுவதுபோல்

என்னிடம் மாட்டுவார்கள்.

பின் தொலைந்தார்கள்,

புகை புகையாக வெளியே ஆனால்

உள்ளே புதைகிறார்கள் புகைக்குள்,

ஆனால் என்னிடம் ஒரு நல்லகுணம்.

முதலிலேயே.... என்னை நாடாதீர்கள்.

அபாயம்! என்று எச்சரிக்கை

விடுக்கிறேன்.

நல்லவனைக் காப்பாற்ற.

நுரையீரலைக் காப்பாற்ற,

அவனை சாவிலிருந்து காப்பாற்ற,

ஏன் எனக்கும் மனமுண்டே,

ஆனாலும் என் மேல் எல்லோருக்கும்

எத்தனை பாசம்

நூற்றி முப்பது கோடிகள்

என்னுடைய நண்பர்கள்.

ஒல்லியானாலும் எனக்கு எத்தனை வலிமை,

மனிதனே! உன் மன வலிமை விட

என் வலிமை பெரிதல்ல

விடுங்கள் என் நட்பை

பெறுங்கள் ஆரோக்கியத்தை.

ஏன் வீட்டிற்கு ஸ்ப்ரே பெயிண்ட் அடிக்காதன்னு சொல்றாங்க தெரியுமா?

அக்காலத்தில் எல்லாம் வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க வேண்டுமானால், பெயிண்ட் பிரஷ் தான் பயன்படுத்துவோம். ஆனால் தற்போது மிகவும் எளிமையான முறையில் வீட்டில் பெயிண்ட் அடிக்க ஸ்ப்ரே போன்ற ஒரு கருவி வந்துள்ளது. இப்படி வீட்டிற்கு ஸ்ப்ரே பெயிண்ட் அடித்தால் நல்லதல்ல என்று பலர் சொல்வதை கேட்டிருப்பீர்கள். ஏன் என்று தெரியுமா?

அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று வீட்டின் சுவற்றிற்கு ஸ்ப்ரே பெயிண்ட் அடித்தால், அது சீக்கிரம் போவதோடு, உடலுக்கு தீங்கையும் விளைவிக்கும். இங்கு அந்த ஸ்ப்ரே பெயிண்ட்டை எதற்கு பயன்படுத்த வேண்டாம் என்று சொல்கிறார்கள் என்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் ஸ்ப்ரே பெயிண்ட் அடிப்பதை தவிர்த்திடுங்கள்.

ஏன் வீட்டிற்கு ஸ்ப்ரே பெயிண்ட் அடிக்காதன்னு சொல்றாங்க தெரியுமா?


* வீட்டிற்கு ஸ்ப்ரே பெயிண்ட் அடித்தால், அதிலிருக்கும் கெமிக்கல்களின் நாற்றம் அவ்வளவு எளிதில் நீங்காமல் இருப்பதோடு, அந்த கெமிக்கல்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு சுவாசக் கோளாறை ஏற்படுத்திவிடும்.

* ஸ்ப்ரே பெயிண்ட்டானது, சாதாரண பெயிண்ட்டை விட எளிதில் போகக்கூடியது.

* மேலும் இந்த ஸ்ப்ரே பெயிண்ட் மிகவும் விலை அதிகமானது. அதுமட்டுமின்றி, நம் மக்களின் மனதில் விலை அதிகமான பொருட்கள் நல்ல தரமாக இருக்கும் என்று கண்மூடித்தனமாக நம்புகின்றனர். அதனால் தான் பலர் இதனைப் பற்றிய உண்மையை சொன்னாலும் கேட்க மறுக்கின்றனர்.

* ஸ்ப்ரே பெயிண்ட் தண்ணீரை அதிகம் உறிஞ்சக்கூடியவை. அதிலும் மழைக்காலங்களாக இருந்தால், இந்த பெயிண்ட் தண்ணீரை உறிஞ்சி வீட்டின் உள்ளே ஆங்காங்கு ஈரப்பதமாக வைத்திருக்கும். அதுமட்டுமின்றி, அந்த ஈரப்பதம் உலர்ந்துவிட்டால், அங்கு திட்டுகளாக காணப்படும்.

* குறிப்பாக ஸ்ப்ரே பெயிண்ட் நுரையீரலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. எனவே தான் ஸ்ப்ரே பெயிண்ட்டை பயன்படுத்த வேண்டாம் என்று பலர் சொல்கின்றனர்.

அனைத்து கணவன் மனைவிக்கு சமர்ப்பணம்...கவிதை!

அனைத்து கணவன் மனைவிக்கு சமர்ப்பணம்...

சொந்தம் இன்றி தொலைவில் நின்றாள்..

சொந்தம் கொண்டு தோளில் சாய்ந்தாள்.

பந்தம் தந்து, பாசம் தந்து, நேசமாக மனதில் நின்றாள்.

எந்தன் நெஞ்சை வென்று சென்றாள் - பின்

எதற்கும் இல்லை ஈடு என்றாள்..

என்னை விட்டு நீங்கி செல்லா, பிள்ளை தந்து

 எனக்கும் ஒரு தந்தை என்ற பெயரை தந்தாள்..

எந்தன் உயிர் போகும் வரை
 
 உந்தன் உயிர் நான் தான் என்றாள்.




எந்தன் தாயை நானும் கண்டேன் உந்தன் வடிவில்..

ஏனோ நானும், உந்தன்  தந்தை போல, மாறிவந்தேன்.

 மங்கை உன்னை கண்டபின்பு மாந்தனாக  மாறிவந்தேன்

மண்ணாக மாறிவிட்டேன்..

உன் கண்ணாக ஆகி விட்டேன்...

மாறாத காதல் கொண்டு,

தீராத ஆசைக்கொண்டு மணவாளன் ஆகி விட்டேன்,

பின் உன் உயிராக மாறிவிட்டேன்...

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top